ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது -என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது -என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் -தான் ஒட்டு வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து –
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யா ஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ -என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் -பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப்பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆச்ரயண வேளையில் -யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸ்ர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது –
விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய -என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கர || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த தி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரந்நஸ்ய மே தே வர்ததாம ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த
காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading