ஸ்ரீ வைஷ்ணவத்வம் -ஆச்சார்ய அபிமானம் -கிளியும் குயிலும் —

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)

பதவுரை:
அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர்;
என்போர்-என்று சொல்லப்படுபவர்;
அறவோர்-அறநெஞ்சம் கொண்டோர்;
மற்று-(அசைநிலை – மற்ற-ஏனைய;
எவ்வுயிர்க்கும்-எந்த உயிர்க்கும்;
செந்தண்மை-செவ்விய தண்ணளி, அருள் தன்மை;
பூண்டு-மேற்கொண்டு;
ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.
மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார்.
இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
(பூணுதல் விரதமாகக் கோடல். ‘அந்தணர்’ என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின்,
அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து.
அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.)

எல்லா வுயிர்க்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் ஆவர்.
அந்தணர் என்ற சொல்லுக்கு அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்பது நேர்பொருள்.
அந்தணர் என்பது அம்+தண்மையர் என விரியும். அழகிய குளிர்ச்சி உடையவர்கள் அல்லது நல்லருளுடையார் என்பது பொருள்.

அந்தணன் – அகத்தே தண்மை கொண்டவன் என்றும்
‘அந்தத்தை அணவுவார் (ஆராய்வார்) அந்தணர்’ என்றும்
‘வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்’ என்றும் இச் சொல்லை விளக்குவர்.

இச் சொல் மூன்று குறட்பாக்களில் ஆளப்பட்டுள்ளது.
முதலில், அறஆழி அந்தணன்.. (குறள் 8) என்று அது இறைவனைச் சுட்டுகிறது.
இரண்டாவதாக இப் பாடலில் (30) அந்தணர் என்போர் அறவோர்.. எனக் கூறப்பட்டு
அந்தணர் என்பது தந்நலம் நீத்த அறவோரைக் குறிப்பதாகச் சொல் விளக்கமும் தரப்படுகிறது.
இறை நூல் செய்வோர் என்னும் பொருளில் அந்தணர் நூற்கும் அறத்திற்கும்.. (குறள் 543) என்று கூறுவது மூன்றாவது பாடல்.

அந்தணர் -தண்மை -குளிர்ச்சி -செந்தண்மை பூண்டு ஒழுகுதல் வைஷ்ணவத்வம் வள்ளுவர்
மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டும் –
ஸ்ரீ கீதை -12 அத்யாயம் வைஷ்ணவ லக்ஷணம்
பரஸ்பர நீச பாவம் -தண்டம் வத் வணங்கி -மத்யே மாதவன் புகுவானே –
பிறர் துக்கம் சஹியாமை
விஷ்ணு -வைஷ்ணவம் –
தொல் காப்பியம் -நூல் பூணூல் சாஸ்திரம் -கரகம் சொம்பு கொண்டு -முக்கோல் -வைஷ்ணவ சந்நியாசிக்கு -மணை -வைஷ்ணவர்களுக்கு –
முக்கோல் பகவரை வினவுதல் அகத்துறையில் உண்டே –
துளசி மாலை தாமரை மாலை -விரதம் -ஐயப்பன் இன்றும் பார்க்கிறோம் -சாமி என்று கூப்பிடுகிறோம்

குற்றம் செய்தவர்கள் பக்கல் -பொறையும் -கிருபையும் -சிரிப்பும் –உகப்பும் -உபகார ஸ்ம்ருதி –ஐந்து விஷயங்கள் –

இடுக்கண் வரும் கால் நகுக -தேகத்துக்குத் தானே
தேசிகன் -ரஹஸ்ய த்ரய சாரம் இதே அர்த்தம் –

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நற்கருமத்து நின்றுஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

பிறவிப் பிணியை ஒழிக்கும் தொழில் செய்பவர் அந்தணர்.
அவர்கள் அக்கினி காரியங்களைத் தவறாமல் செய்பவர்கள்;
மூன்று வேளைகளிலும் தமக்கு விதிக்கப்பட்ட வற்றைத் நாள் தவறாமல் செய்து வருபவர்கள் அந்தணர்கள்.
சந்தி கால நியமங்களையும் தவறாமல் செய்து வருபவர்கள்.

https://tidley.com/2019/09/25/–ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடலில் -. திருக்குறளில் -சில பாடல்கள்–-

நரசிம்ம மேதா வைஷ்ணவ ஜனதோ தேனே -இதே கருத்து
பிறர் துயர் தீர்த்து -தனக்கு அனைவரும் உறவு -பற்று அற்று சம தர்சனம் -அந்நிய மாத்தறை தாயாக எண்ணி
ஸ்ரீ ராம நாமம் கேட்டு கண்ணீர் பெறுக அதுவே பவன புனிதம் ஆகும் –

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் -நரசிம்ஹ மேதா(கிபி. 1500)
எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும்

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ

சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ

சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ

மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மன் மன் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தன் மன் ரெ

வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

————-

சக்ரவர்த்தி திருமகன் வான் இளவரசு வைகுந்தக்குத்தான்
நந்த கோபன் குமரன்
யதிராஜ சம்பத் குமாரர்

அபஹத –அர்த்த காம -நிகிலா ஜன ஸூஹ்ருத் -எரும்பி அப்பா

மிளகு ஆழ்வான் -வைஷ்ணவன் என்ன கொண்டாடிய விருத்தாந்தம்

———-

ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை… இது எல்லாம் புறச் சின்னம்.
வேஷ பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. சில இலட்சணங்கள் இருக்கிறது.
அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும்.

கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
நல்ல வெயில், பசி. ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்று தேடும்போது
ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்பட ,
அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாத கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.

ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து
இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது.
உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ?
அவர் பகவத் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி
நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு

“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.

———

மா தவம் -சிறந்த தபஸ்ஸூ
1-மாயோனின் தவம்
2-மன்னனின் தவம்
3-மகரிஷிகளின் தவம்
4-மகனின் தவம்
5-மாறனின் தவம்
6-மஹான்களின் தவம்

1-மாயோனின் தவம்
மாயை -பொய் -ஆச்சர்யம் -விசித்திரம் –ப்ரக்ருதி -செலுத்தும் மகேஸ்வரன்
நின்று நின்று பலகால் உயிர்கள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்றாகிலும்
ஜன்மம் கழிப்பான் என்று ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் உத்ஸாகம் குறையாமல் – சோம்பாது தபம்
தான் வித்து ஓர் வித்தாய் தனி வித்து -மா மாயன் வைகுந்தன் -கண் வளரும் மா மாயன் –

2-மன்னனின் தவம்
ஜனகன் தொண்டைமான் ஆகாச ராஜன் -நமக்காக தபஸ் செய்து பிரார்த்தித்து திவ்ய தேசங்கள்
த்ரவ்ய தான த்ரவ்ய ஸ்வாத்யாய யாகங்கள் -கர்ம யோகங்களின் பாகங்கள் -‘சொற்கள் கர்ம யோகம் -பொருள்கள் ஞான யோகம்
பூரகம் கும்பகம் ரேதகம் -இவையும் கர்ம யோகம் -13 வகைகள் கீதையில் உண்டே –

3-மகரிஷிகளின் தவம்
ஞான யோக நிலைகள்
யஜமான ஸம்ஹிதை – – உபாதேய -ஆமை போல் இந்திரியங்களை அடக்கி –
வ்யதிரேக ஸம்ஹிதை –த்யாஜ்ய விஷய –
பீத ராக பய க்ரோத -மனஸு கட்டுப்படுத்துவது மூன்றாம் நிலை ஏக இந்திரிய ஸம்ஹிதை –
சங்கம்-காமம் -ஆசை -அபி ஸ்நேஹம் –
விசுவாமித்திரர் -முதல் நிலை -ஆதி ஜட பரதர் மூன்றாம் நிலை -ஏக இந்திரிய ஸம்ஹிதை
வஸீகார சம்ஹிதை பிரகலாதன் நிலை நான்காவது
ஸ்ரவணம் -மனனம் -கேள்வி ஞானம் -நினைத்தல் -ஆத்ம அவலோகனம் -சாஷாத்காரம் -யோகம் -சம தர்சனம் நிலை அடைந்து –
பகவத் சம்பந்தம் அறிந்து -மேல் நிலை -தியானத்தால் அடைய முடியும் –
யோகத்தில் இருந்து எழுந்த பின்பும் தொடர்வது மூன்றாம் நிலை -சுகம் துக்கம் சமமாக பார்க்கும் நிலை அடுத்து
முக்தியை ஆசை வரவர இவை தானாகவே வரும் -ராகம் அடியாகவே வர வேண்டும் –

4-மகனின் தவம்
பக்தியின் 9 நிலைகளாக முறையே சிரவணம் ,கீர்த்தனம், விஷ்ணோஹோ ஸ்மரணம் ,பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம் மற்றும் ஆத்ம நிவேதனம் அதன் அர்த்த விஷேஷங்கள்
கிருதயுகத்தில் த்யானம் த்ரேதா யுகத்தில் யாகம் துவாபர யுகத்தில் அர்ச்சனை
பெருமானை அடைவதை விட கலியுகத்தில் நாமசங்கீர்த்தனத்தால் பெருமானை அடைவதே எளிய வழி

5-மாறனின் தவம்
ந்யாஸம் பிரபத்தி சரணாகதி அவனையே குறிக்கும்
ஒரு சரணாகதன் சரணாகதி அனுஷ்டிக்க கடந்து வரவேண்டிய படிக்கட்டுக்களாய் முறையை
ஈஸ்வர சௌஹார்த்தம் ,எதிருச்சயா ஸுக்ருதம் அத்வேஷம் ஆபிமுக்யம் சாது சமாகமம் பகவத் பிராப்தி
தவம் உபாயம் பொருளில் -கீழ் எல்லாம்
இதில் பாக்யம் என்ற பொருளிலே

6-மஹான்களின் தவம்
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் -சரணாகதர் உடலை ரக்ஷிக்க ஆழி எழ பதிகம் சொல்லி -ப்ரஸ்னங்கள்
பஞ்சம உபாயம் -சரம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
சடகோபர் ராமானுஜர் மா முனிகள் திருவடிகளே சரணம் –
பசு பொது சொல் மிருக மானையே சொல்லும் -நாம் மாற்றி வைத்துக் கொண்டு உள்ளோம்
பசுர் மனுஷ்யஸ்ய பகஷீ வா வைஷ்ணவ ஸம்ஸ்ரியா
தேன நவேத பிராயஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -சாண்டில்ய ஸ்ம்ருதி

கர்ம யோகம் 13 வகை
ஞான 4 வகை ஸம்ஹிதை
ஆத்ம சாம்யம் நாலு வகை
பக்தி -நாலு வகை
பிரபத்தி இரண்டு வகை ஆர்த்த திருப்த -ஸ்வ கத பர கத
இதிலும் இரண்டு வகை ஸ்வ கத பர கத -உண்டு

ஆறு மா தவங்களுக்கும் மா பெரிய பிராட்டியார் தவம் வேண்டுமே
அனைத்துக்கும் ஆதாரம் ஸ்ரேஷ்டம் இதுவே –

————-

நானே தான் ஆயிடுக
பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது

இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால் இல்லை செய்யாதே இசைகை இறே வைஷ்ணவ லக்ஷணம் –

மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று
பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக
ராம பக்தன் -விரல் விட ஒருவனே ப்ராதா என்பதால் அல்ல பரதன் என்பதால் -பாதுகா சஹஸ்ரம் )

ஸ்வ குண அபதானத்துக்காக கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணலாகாது என்றும் வேதார்த்தம் பிரகாசிக்கிறது –

—————

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ருத புஜமுச்யதே வேதாசாஸ்தரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசாவாத் பரம்

——–

ஆச்சார்ய ஹிருதயம்-ஸூரணை -153-

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே
அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப் படாதே அகவலைப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை இருந்து
தயிர் நெய்யமர் பாலமுதுண்டு
ஒரு மிடறாய்ப் போற்றி
ஒரு வண்ணத்து இருந்த
நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே
நல் வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து
சொல் எடுத்து சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்
கை கூப்பி வணங்கப் பாடி
ஆலியா அழையா பர அபிமாநத்திலே
ஒதுங்கின நம்பிக்கு அன்பர்
தலை மீது அடிப் பொடி உடையவர் உடையார்
போல்வாரைக் கிளி பூவை குயில் மயில் என்னும்-

அதாவது –
1-கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று
ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

2-வளர்த்து எடுப்பார் கை இருந்த –
(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞான மூட்டிய ஆச்சார்யர் அதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி )
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,
எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு –
இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கைவசமாய்

3-தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்-
சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே ( ஞானி தத்வ தர்சனி -)
உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து-

4-ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

5-போற்றி ஒரு வண்ணம் திருந்த –
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் –
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் –
திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும்
கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

6-நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் –
நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று
என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் –
ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் –
இன்னானதான தசையிலும்-

7-துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று
அநாராதித்த தசையிலும் –
( ஆக-ஆதரித்த -இன்னாதான – அநாதரித்த – மூன்று தசைகளிலும் )

சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்-
வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் –
என்னும் நினைவாலே உகந்து —

8-சொல்லெடுத்து சோர்ந்தவாறே
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13-
என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்-
அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —

9-கற்பியா வைத்த மாற்றம்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே ,
முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –

10-கை கூப்பி வணங்கப் பாடி-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று
கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

11-ஆலியா அழையா —
ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–
(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே
இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )

12-பர அபிமானத்தில் ஒதுங்கின –
தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –
ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –
(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே
அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்று
ஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே
அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல
பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான
ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –

கிளி பூவை குயில் மயில் -என்னும் –
குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் –
குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி —

பூவையாவது -நாகண வாய்ப்புள் –
மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

————————————————-

நீளா தேவி நம்மைப் போல் இருவரையும் பற்றும் திரு -ததீய சேஷத்வ பர்யந்தம் -பூமா தேவிக்கும் கைங்கர்யம்
சிக்குத்தாடை -பூவை சுத்தி
வெங்கடாத்ரி கொண்டை
மகர கண்டிகை
robert clive கண்டிகை
தங்க கிளி -நம்மாழ்வார் உத்சவம் உடையவர் உத்சவம்
கடை வெள்ளிக்கிழமை உத்சவம் தாயாருக்கு
நீராட்டு உத்சவம் ஆண்டாளுக்கு சாத்தி
கோதாக்ரஜார் -தேவப்பெருமாள் மைத்துனர் உறவு
திரு ஆடிப்பூரம் போகி திருக்கல்யாணம் -தோள் மாலை -ஆண்டு முழுவதும் மாற்றிக் கொள்வார்
பிரதிநிதியாக கிளி
தானே கிளி போல் தமையனைக் கடாக்ஷிக்க –
குயிலை ஒத்து இருப்பர் பஞ்சம ராகத்தால் பாடி வசந்த காலத்தில் மக்களைக் கொள்ளை கொள்ளும்
சித்திரை வந்து உதித்தார் -சம்சார தாபம் போக்கி இன்ப வெள்ளத்தில் மூழ்க வைக்கிறார் –
ஆர்த்தரா நனைத்தல் ஈரம் –
பஞ்சமர் -தாழ்ந்தவர் இடத்திலும் ராகத்தாலே கூவி அழைத்து வாழ்வித்தார் -ஹரி தாஸர் ஆக்கி அருளி –
ஆண்டாள் இடப்புறம் -பாலமுதூட்ட பாங்காக
உலகு அளந்தானை வரக்கூவினால் தோழமை கொள்ளும் படி செய்வேன்
அதற்காகவே இங்கு கிளி

நாயனார் -கிளி பூவை குயில் மயில் என்னும் பராபிமான பூதர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் பராங்குச பாத பக்தம்
குயில் அடுத்தவரால் பரிபாலனம் செய்யப்பட்டு இருக்குமே –
மாதரார் கண் வலையில் அகப்படாமல் –தாமரைக்கண்களின் வலையில் அகவலைப்பட்டு

திசைகளில் ஒளிரும் கமலச் செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும்…
இசைவுடன் அதிலே இணைந்து அமைந்து இனிமை கூட்டிடும் இடது கழலும்…
இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற்கழலும்…
திடமென அழகை எல்லாம் சேர்த்த திவ்யமான கணுக்கால் எழிலும்…
அதிசய ஒளிமுகம் சுருளாய் இறங்கும் அழகைப் போல் இரு முழந்தாள்களும்…
உதிரென அமையும் திருத்தொடைகளும், பொன்னரைஞாணைப் பூண்ட அழகும்…
அந்தி நிறத்தில் அமையும் ஆடையும், அஞ்சலி செய்யும் தடக்கைகளும்…
உந்தி மலரும் உயரிய கரமும், உடன் இணைந்திடும் கணுக்கைகளும்…
தங்க வளையலைத் தாங்கிய அழகும், தானாய் மடிந்த முழங்கைகளும்,
அங்கம் விரிந்து நீண்டு அமைந்த, அழகிய புஜங்கள் ஆடும் அழகும்,
பளபளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும்,
தளமாய்ப் பிரிந்த முந்நூல் அழகும், வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்…
வலம்புரிச் சங்கின் சுழிபோல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும்…
உலகை மயக்கும் மந்திர முகமும், உரையை வழங்கும் திருப்பவளமும்…
மந்தகாஸமும், ஸ்படிகமயத்தில் மண்டலம் போற்றிடும் கபோலங்களும்…
செங்கநகத்தில் செழித்து வளர்ந்து செவிமேல் அமைந்த கர்ணபாசமும்…
குடிமூக்கழகும், கோலத்தாமரை குடிகொண்டாடும் இரு நயனங்களும்…
வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்…
சந்திரகிரணம் ஒன்று கலந்து, சரியும் அழகாய்த் தாமரை நாமமும்…
இந்திரை மலராய்த் திருவடிபோலே, இலங்கி வளரும் ஸ்ரீசூர்ணமும்…
உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும்,
நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும்,
பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும்,
கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்,
காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!
வளர்த்து எடுப்பார் கை இருந்து –இஷ்டமாக வளர்த்து எடுத்துக் போகும் ஆச்சார்யருக்கு விதேயராய் –
அர்த்த விசேஷங்கள் அடிசில் பால் அமுது –

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

பர ப்ருத -குயில்

ஸ்ரீஎம்பார் -ஸ்ரீஎம்பெருமானார் ஆஸ்ரயித்து கொண்ட ஏற்றம் உண்டே -ஸ்ரீஉடையவர் உடையார் இவரே –
74 சிம்ஹாசனபதிகளே ஒரு உருவாக தங்கக்கிளி

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading