அமுதினில் வரும் பெண்ணமுது க்ருத யுகம்
வையம் தகளி -அனபே தகளி -தீப வரிசைகளும் உண்டே
ராவண வதம் -த்ரேதா யுகம்
நரகாசுர வதம் -த்வாபர யுகம்
திவ்ய தேசங்களிலும் உத்சவங்களும் உண்டே
—————-
ஸ்ரீ திருவரங்கத்தில் ‘சாளி உற்சவம்’
திருவரங்கத்தில் அரங்கநாதன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார்.
கோயிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும்.
அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.
அதன்பின், கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம்
எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார்.
அவ்வாறே ரங்கநாயகித் தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும்.
அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
அதன்பின், ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு,
கருவறைக்கு முன்னிருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரிலுள்ள கிளி மண்டபத்துக்கு வந்து
நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
காலை பத்து மணியளவில் சந்நிதியில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார்.
அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார்.
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கமல்லவா?
அந்த வகையில், சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளை அமுதனாம் அரங்கனுக்கே மணம் முடித்துத் தந்து,
அரங்கனுக்கு மாமனார் ஆனவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார்.
குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு.
அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து,
அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சி சந்தனு மண்டபத்தில் நடைபெறும்.
பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள்.
வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும்.
நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர்.
நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், ‘சாளி உற்சவம்’ என்று
அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் ‘ஜாலி உற்சவம்’ என்றாகிவிட்டது.
தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி,
மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் அரங்கன் வலம் வருவார்.
மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும்
ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள்
உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார்.
தீபாவளி என்றாலே மாப்பிள்ளை களுக்குக் கொண்டாட்டம் தான்.அதுவும் புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம்.
அப்படியிருக்க ஒருவர் என்றும் அழகான,இளமையான,புது மாப்பிள்ளையாக இருந்தால்
கொள்ளை இன்பம்.அதுவும் இந்த மாப்பிள்ளை மற்ற மாப்பிள்ளைகளைப் போலன்றி தாம் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
ஆனால் அனைவருக்கும் வேண்டியதைக் கொடுப்பவர்.யார் இவர்?
இவர் பெயரே அழகிய மணவாளன் (மாப்பிள்ளை).பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கத்தில்,
எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கநாதர்/அழகிய மணவாளன்/நம்பெருமாள்.இவர் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை.
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது.
தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள்.
மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.
தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளுக்கு
நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள்,விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு
திருமஞ்சனம் நடைபெறும்.அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.
அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு,
பெரியபெருமாள் மூலஸ்தானத்துக்குக்கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை (பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை,ஆண்டாளை மணம் புரிந்ததால்)
ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில்
மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.
அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.
இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும்.
அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும்.
இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.
ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி,
பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில்
வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மீண்டும் சந்தனு மண்டபம் திரும்பி,
மாலை ஆறு மணி முதல்எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.
அதன்பின், கிளி மண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவரும் ஒவ்வொருவராக
பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள்.
அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்துக் கௌரவிப்பார்.
பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு, தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.
இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.
(நேரில் செல்ல இயலாதவர்கள் அவரை நினைத்து,
மனக்கண்ணில் தரிசித்து அவரை ஸ்தோத்திரம் செய்யலாம்)
“குடதிசை முடியை வைத்துக்,குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்,தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தைஅரவணைத் துயிலுமா கண்டு,
உடல் எனக்கு உருகுமாலோ? என்செய்கேன்?உலகத்தீரே!!!”
————————————
**ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :
திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில்
கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர்
கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது
———–
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும்,
தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் மேலும் பல பெருமைகளும் இருக்கின்றன.
திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம்.
ராமாவதாரம், திருமாலின் 7-வது அவதாரம் என்பது சிறப்பு.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில், ஏழு பிரகாரங்கள், ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் ஆலயம்.
அதேபோல் தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தின் 30 நாட்கள் மட்டும்,
யானை மீது வைத்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்படும்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் மேலும் பல ‘ஏழு’ சிறப்புகள் இருக்கின்றன.
ஸ்ரீரங்கம் ~ ஏழின் சிறப்பு…!!!
01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன்.,
ஏழு மதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
02. ஏழு பெரிய பெருமை உடைய….
1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,
இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்….
03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்….
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….
04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்….
1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்.,
ஆகியவை….
05. ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள்
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….
06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு
ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….
07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று
ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்)
தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் ஏழாவது அவதாரமாகும்.
10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்.,
7) பங்குனி உத்திரம்….
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்.,
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்….
13. இராப்பத்து ஏழாம் திருநாள் நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும்
ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்….
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடால் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் – I.,
6) தெற்கு கட்டை கோபுரம் – II.,
7) ராஜகோபுரம்….
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ (தெரிந்தவர்கள் கூறுங்கள்)
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்….
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டு களிக்கும் சேவைகளாகும்….
1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.,
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்….
17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்….
1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்….
18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.
20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது….
1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை….
21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும்., கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக
ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்….
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்., (3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள் ~ தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்….
22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்….
1) யானை வாஹனம் ~ சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை ~ சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் – சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை., தை., மாசி….
23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள்
ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.
24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்., ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும்
யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~
ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.
25. மற்ற கோவில்களில் காண முடியாதவை….
1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி….
கொடுக்கப்பட்டுள்ள 25ல் ~ இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு (2 + 5 = 7)
—————-
ஸ்ரார்த்த உத்சவம் -பக்த வத்சலன் -லஷ்மீ நாராயணன் -அந்திம சம்ஸ்காரம் -சிறுவன் ரூபத்தில்
பூணலை மாத்தி சேவை அர்ச்சகருக்கு -பித்ரு கார்யம்
மனித கார்யம் -மாலையாக சாத்தி -மேலே சட்டை
ராஜ கோபுர கைங்கர்யம் செய்தவர்
ராஜ கோபுர ஹஸ்யம் -உண்டே
லட்சுமி நாராயண ஸ்வாமி என்னும் பக்தர் சார்ங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார்.
இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தை இல்லை.
ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.
ஸ்ரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால் நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால்
தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோவிலை திறந்து பார்த்த போது பெருமாள் ஈரவேட்டியுடன் மாற்றிய பூணூலுடன்
தர்ப்பைகளுடன் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சி அளித்தார்.
அதாவது
பெருமாளே தன்பக்தனுக்காக ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக் கடலாக விளங்கினார்.
தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.
ஆனால் பக்தர்கள் பார்க்க முடியாது.
————–
தொட்டித் திருமஞ்சனம் -அழகர் திரு மஞ்சனம் -திருமாலை ஆண்டான் திருநாடு எழுந்து அருளின திதி ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி
மாசி அம்மாவாசை நம்பிள்ளைக்காக நம்பெருமாள் திரு மஞ்சனம் கண்டு அருளுகிறார்
திருக்கச்சி நம்பி திரு நாடு எழுந்து அருளிய திதி கார்த்திகை சுக்ல பக்ஷம் சதுர்த்தசி தேவப்பெருமாள் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார் –
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply