ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அம்ருதம்– -முதல் பத்து –

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூர்ணிகை –219–

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண –

(உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10– )

அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ( ஐயம் திரிபு மறதி) ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –
அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –

அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –

(த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும்
மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

தத் த்யாக பிரகாரத்தையும்
நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

தத் பஜன பிரகாரத்தையும்
பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-
அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

பஜன ஆலம்பமான மந்தரத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10–உபதேசித்து –
அங்கு இருப்பது நாமம் -மட்டுமே
மா முனிகள் மந்த்ரம் -அதே பலன் கிட்டும் என்பதால் -)

பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் –ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –

(சௌலப்யம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -எளியவனைச் சொல்லி –
சரணம் -பஜனீயத்வம் -பின்பு அஹம் -கேட்ட ஒருவனும் மறந்தான் அங்கு
இங்கு பரத்வம் சொல்லி-பஜனீயத்வம்- பின்பு ஸுவ்லப்யம் –

அபராத சஹத்வம் –
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

சீலவத்தை –
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

ஸ்வ ஆராததை –
பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

ஆஸ்ரயண ரஸ்யத்தை –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆர்ஜவம் –
ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

சாத்ம்ய போக பரதத்வம் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
என் அருகலிலானே–1-9-2-ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
என் ஓக்கலையானே –1-9-4-
என் நெஞ்சி னுளானே–1-9-5-எனது உச்சி யுளானே–1-9-10-

பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-
மார்க்கங்களுக்குள் சாம்யம் இங்கு -அதிகாரிகளுக்குள் சாம்யம் த்வார த்ரயத்தால் –

ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு -)

அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
(சகல பலப்ரதன் விஷ்ணு- வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் )

ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று (வணக்குடை தவ நெறி நின்று )
தேவதாந்த்ரங்கள் பக்கல் பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்தி கணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,
ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -1-7-2-என்றும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -1-7-2–என்றும் ,
அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-
(கார்க்கி -அக்ஷரம் -ஆத்மா பொதுவாக அநேக இடங்களில் -இல்லது உள்ளதும் அல்லது அவன் உரு –
மாறும் பிரகிருதி போலவும் மாறாத ஆத்மா போல அல்லவே அவனது
பிரதானம் பிரகிருதி ஷரம்–லயம் இறுதியில் பிரக்ருதியில் லயம் -அழியாததால் அதையும் அக்ஷரம் இங்கு-
ப்ருஹதாரண்யம் அக்ஷராத் பர-அத்தைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா –
அக்ஷராத் பரதகா பர -அதிலும் உயர்ந்த பரமாத்மா -பரதா பரன்-இத்தையே பரபரன் ஆழ்வார் -அவை முழுதுண்ட பரபரன் –
ஷர பக்த ஜீவன் என்றும் சில இடங்களில் -அக்ஷர முக்த நித்ய ஜீவன் -த்வாவிமவ் புருஷ லோக கீதையில் -இந்த அர்த்தம் )

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –
உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன்

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று
ஸ்வ கேவல கிருபையாலே –
ஞான அனுதய – அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை
இவருக்கு வாசனையோடு போக்கி-
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –
இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –
பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய் காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 –மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் ,
நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்றும்-
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –
எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையர் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –

நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –
என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய ( கருமங்கள் )நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –
(அஹம் த்வா -என்று அவனைப் போல் இல்லாமல் நீயும் நானும் ஆழ்வார் )
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள்
ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி
திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –

திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும்
ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் –
அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும்
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும்
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
(த்யாஜ்ய – தோஷ – பரித்யாக க்ரமத்தை
உபாதேய – குண – சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து )
அதாவது
வீடு மின் முற்றத்திலே –1-2-
வீடு மின் முற்றவும் -1-2-1-என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் 1-2-2–என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து 1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்

வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறை பற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 –எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்

பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
( குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் ஞால நாதன் )

புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஓர் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலவானாய்

அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1-என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்

அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-9-11-என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து-
(ஆழியால் இரவியை மறைத்து ஜயத்ரதனை கொல்வித்ததும் -போல்வன -அவன் நேர்மை ஆர்ஜவம் செவ்வியனாக
-அவன் தலை அங்கே போய் விழ மர்மத்தையும் சொல்லிக் கொடுத்து -தன்னை அமைத்துக் கொள்வதும் உதாரணம் -)

போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1-என்று தொடங்கி –
உச்சி உளானே -1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து
(திரு முடி சேவையும் ஆழ்வார் திரு நகரியிலே இன்றும் சேவை உண்டே )

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் –1-10-2- என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

சேவைக்கு எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்

உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –
(கழித்து தொழுமின் -அவனைத் தொழுதால் -துர்லபம் என்பதால் மீண்டும் -பஜனத்தால்-
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே
தரும் அவ்வரும் பயனாய திரு மகளார் கேள்வன் –
உத்யோகத்தே–அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே போலே )

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று
அதாவது
பிணக்கற 1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா –-ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,
மனனக மல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

——————————————————

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

1-1
இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே
இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –
தாம் தொழாமல் நெஞ்சை கூப்பிடுவது பரீத் யதிசயத்தால் -உசாவ ஆள் தேட
இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே யாரும் கிடைக்காமல் திரு உள்ளத்தை கூப்பிடுகிறார்
நிற்க முடியாது -விழுந்திடு என்கிறார் –
ஸூஷ்மம்-அலை வரும் பொழுது குனிந்து நீர் வஞ்சிக் கொடி-குனிந்து பிழைத்ததை கண்டார் –
தொழுதால் எல்லாம் – தொழா விடில் விழுவோம் -குண வெள்ளம் -ஸ்வா தந்திர வெள்ளம் –

வாக்ய பேத நிர்வாஹம் -உயர்வற உயர்நலம் உடையவன் யாரோ அவன் -துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –
உயர்வு -வருத்தம் -எல்லாருக்கும் உயர்த்தி உண்டாம் போது வருத்தம் உண்டு -அப்படி வருந்த வேணுமோ -என்றால் உயர்வற உயரா நிற்கும்-
யுவ கோடி சகஸ்ராணி விஷ்ணும் ஆராத்யாம் பத்ம பூ –
இத்தைப் பற்ற விறே ஆளவந்தார் -ஸ்வா பாவிக –வருத்தம் கலசாத –என்று அருளிச் செய்த சந்தை –

நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நிலம் போலே எங்கும் ஒக்க உபாதேயமாய் இருக்கும்

நலம் -என்று
1–ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லுதல் -என்னுதல்
2–குண சமூஹத்தை சொல்லுகிறது -என்னுதல்
3–ஆனந்தாவஹமான விபூதியைச் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் –

உயர்வற உயர் விபூதி உடையவன் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்

உயர் குணம் என்னாமல் உயர் நலம் –
அது நல்ல குணம் துர்குணம் இரண்டு வகை –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக தானன் –
கல்யாண குணங்களுக்கு மட்டுமே இருப்பிடம் -இவனே இருப்புடன் -நலம் என்பதை கல்யாண குணத்தால் –

யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன்)
பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால்
1–குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் -எவன் உயர்வற உயர் நலம் உடையவன் –
2–குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் –
குண சாபேஷ பஷத்தில்-உயர் நலம் உடையவன் உடையவன் எவன் -அடைவே அந்வயம் –

மயர்வற —
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை ச வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி காணும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி -அர்த்தாத் சித்தம்

என் ஆனந்ததுக்காக நான் கைங்கர்யம் பண்ணி அனுபவிக்கிறேன் -இரண்டு குற்றங்கள் –
பரதந்த்ரனாய் பர போக்யமாகக் கொள்ள வேண்டும்
அருளினன் –
1–நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
2–எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது –
பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே –
அருளினன் –
3–இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
4–இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –

உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே –விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே –அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூத்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது –

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –
முன் பாசுரம் -என் மனனே -சேதன சமாதியால் –இங்கு மனம் அசேதனம் -காட்டி அருளுகிறார்
மனன் -மனம் என்ற படி –
மனனகம் -மனனில் என்றபடி -மனசில் என்றபடி –
நிரவவயமாய் இருக்கிற இதுக்கு உள்வாய் புறவாய் இல்லாமையாலே –
அங்கன் இன்றிக்கே
இம் மனஸ்ஸூ பரகார்த்த விஷயமாகவும் பிரத்யகர்த்த விஷயமாகவும் போருகையாலே
பிரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்று சொல்லிற்று ஆகவுமாம் –

உணர் முழு நலம் –
உணர்வு -என்று ஜ்ஞானம் –நலம் என்று ஆனந்தம் -முழு -என்று இரண்டு இடத்திலும்
கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
எனன் உயிர் -எனன் உயிர் -என் உயிர் என்றவாறு
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யச்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இறே

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்

அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

முதல் பாட்டிலே –
பிரதான்யேன கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வைலஷண்யத்தையும் அனுபவித்து –
அவனைப் பேச பெற்ற நாக்கு என்று ஆழ்வார் அபிப்ராயத்தால் இவற்றைப் பிரதானம் என்கிறார் –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –

அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இறே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இறே முக்தனுக்கு
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால் ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்

ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து
ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

நலனுடை -முதல் பாட்டின் சங்க்ரஹம்
ஒருவனை -இரண்டாம் பாட்டின் சங்க்ரஹம்
லீலா விபூதி யோகம் சொல்லிற்று –
ஐஸ்வர் யத்தையும் விபூதியையும் -ஸ்ரீ கீதை -10 அத்யாயம் -நியமன சாமர்த்தியம் ஐஸ்வர்யம் -அனைத்தும் இவன் அதீனம் —
நியமனதுக்காகவும் -ஸ்திதிக்காகவும்-அனுபிரவேசம் -வஸ்துத்வம்-அந்தபிரவிஷ்டா -சாஸ்தா -ஜனானாம் -சர்வாத்மா
சாஸ்தா ஜீவன் சாஸ்தா பரமாத்மா –அந்தராத்மா -சரீரி சரீர பாவம் –அந்தர்யாமி நியந்த்ரு -நியாமய பாவம்
நாமே –இவ்வனுபவத்துக்கு புறம்பான -பகவத் கந்த ரஹிதரான நாம் -நாமே-இது பொய்யோ

இனி ஒரு மூன்று பாட்டாலே -4/5/6-
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று

அவரவர்
சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது
தமதமது
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை
மார்க்க பேதங்களாலே

நாமவன்-4-என்கிற பாட்டில் ஸ்வரூபம் சொல்லுகையாலே
நின்றனர் இருந்தனர்-6- பிரவ்ருத்தி நிவ்ருத்தி மாத்ரத்தையே நினைக்கிறது

ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று -7-
குத்ருஷ்டிகளை நிரசித்து -8-
சூன்ய வாதியை நிரசித்து -9-
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி -10-
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் -11-

ஆகையாலே -தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார்
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் -1-
அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்

இதம் சர்வம் கலு ப்ரஹ்ம-தஜ் ஜலான் இதி சாந்த உபாசீதே
தஜ்ஜா -தது ஜ -படைத்து -தல்ல -அவன் இடம் லயித்து -தத்தனு –
கலு -அதுவோ என்னில் -சர்வ -கார்ய ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -கார்யா அவஸ்தை
தயோகோ -இருவருக்கும் உள்ளே ஜகம் ப்ரஹ்மம் -சாமா நாதி கரணியத்தால் -வந்த ஐக்யம்
தத்வமசி -தத் த்வம் அஸி-சேதனமும் ப்ரஹ்மமும் ஓன்று

பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு தாத்பர்யத்தால் வாசகமான இச் சப்தம் -அவற்றுக்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி
அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழிய -ப்ருதக் ஸ்திதி யாதல் -உபலம்பமாதல் -இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது

பிரவ்ருத்தி அவன் அதீனை யாகிறது வேணுமாகில் -நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ -என்று எம்பாரைக் கேட்க
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே —
அப்படியே நிவ்ருத்திக்கு அவன் வேணும் காண்-என்று அருளிச் செய்தார்

இவை யுண்ட சுரனே —
இவற்றை சம்ஹரித்த தேவன் முன்பே சிருஷ்டி ஸ்திதிகள்-அவன் அதீநம் என்று சொல்லிற்று –
சம்சாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில் -இது தன்னது அல்லாமையால் வரும் ஐஸ்வர்யம் குறையும் இறே
அதுக்காக சம்ஹாரம் அவன் இட்ட வழக்கு -என்கிறார் -அத்தா -நிர்த்தேசம் போலே உண்டான் என்கிறார் –
இத்தால் சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் -என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார் –
திட விசும்பு -லோகாயாதிகர் நிரசனம் –
உடல் மிசை ஸ்வரூபனே ஐக்யம் -தாதாம்யம் -சொல்லும் மாயாவாதிகள் நிரசனம் –
சுடர் மிகு சுருதியுள் -என்கையாலே நாராயண அனுவாகாதிகளில் சொல்லுகிற -பரத்வம் லஷ்மீ சம்பந்தம் -இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார் –

ஒழிவிலன் பரந்தே –
நான் உளன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தேன்
நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தாய்
ஆக இருவருமே உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனாகில் உளனாம் போலே ச விபூதிகனாகவே உளனாகவே அமையாதோ -என்கிறார்
பாவ தர்மம் -சத்பாவம் -அஸ்தித்வம் -ஸ்தூல –
அபாவ தர்மம் -அசத்பாவம் -நாச்தித்வம் -சூஷ்ம –
ச யதா பவதி -விபூதியும் அப்படியே –
அஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -விபூதியும் அப்படியே

இவை யுண்ட கரனே
சிறிய வடிவைக் கொண்டு பெரியவற்றை எல்லாம் தன வயிற்றிலே வைத்தால் -ஓர் பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டானே-
தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் -பெரிய திரு -11-5-3–என்கிறபடி
பின்னையும் அவ்வயிறு இறே இடம் உடைத்தாம் படி இருக்க வல்ல சர்வ சக்தி -சிறிய வற்றில் குறைவற இருக்க மாட்டானோ என்கிறார் –
சிறிது நெய்யூண் மருந்தோ மாயோனே-கரனே -இப்படி ஸூ த்ருட பிரமான சித்தன்
இவை யுண்ட கரன் -பரந்த தண் பரவையுள் -நீர் தொறும் பரந்த வண்டமிதென பரந்துளன் -நில விசும்பு ஒழிவற பரந்துளன்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -கரந்து எங்கும் பரந்துளன் -என்று அந்வயம்

இவை பத்தும் -பரன் அடி மேல் வீடே
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சமர்பிக்கப் பட்டவை
மோஷ ப்ரதம் என்னவுமாம்
இச்செய்யடைய நெல் என்னுமா போலே -மோஷம் என்றது -மோஷ ப்ரதம் என்றபடி-

—————————————————————

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப் பத்தே –1-2-11-

1-2-

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்வத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்தது –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து பிறருக்கு உபதேசிக்கிறபடி எங்கனே தான் –
தான் அனுபவித்த விஷயத்தை எல்லை கண்டோ –
அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ -என்னில்

விஷயமோ வென்றால் –
தனக்கும் தன தன்மை அறிவறியான்–8-4-6-என்கிறபடி அபரிச்சின்ன விஷயம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -4-7-2-இ றே
இனி தம் அபி நிவேசமோ வென்றால் -காதல் கடலின் மிகப் பெரிதால் -7-3-2–என்றும் –
மண் திணி ஜ்ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8–என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -10-10-10–என்னும்படி பெருகி இருந்தது
ஆகிலும் ஒரு கால் அபி நிவேசம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயம் தானே காலாந்தரத்தில் விரக்தி பிறக்கக் காணா நின்றோம் –

அப்படியே சில காலம் அனுபவித்து பின்பு விரக்தி பிறந்ததோ வென்னில் -அங்கனம் சொல்ல ஒண்ணாது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொரும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதம் -2-5-4-என்னும்படி
நித்ய அபூர்வமாய் இருக்கும்
இனி ஆசார்ய பதம் நிர்வஹிக்கைக்காக அன்று -நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்பவர் இறே
க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -என்று உபதேசிப்பவர் இறே –
ஓத வல்ல பிராக்கள் -என்று அவர்களையும் தமது யஜமானராக எண்ணுபவர் இறே
ப்ரப்ரூயாத் -முண்டக -1-2-13-என்ற ஒரு விதி பரதந்த்ரராய் அன்று –
குருகுல வாசம் செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாது என்று இருப்பவரும் அன்றே

ஆனால் இது பின்னை எத்தாலே யாவது என்னில் -ஸ்வ அனுபவ பிரகர்ஷம் இருக்கிற படி -தான் அனுபவித்த விஷயம்
தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது
சர்வேஸ்வரன் உடைய நன்மையையும் இவர்கள் பற்றின விஷயங்கள் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை
பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் –
பற்றுவாருக்கு அனுசந்திக்கப் படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் –
வண் புகழ் நாரணன்
அவனுடைய பஜ நீயதயையும் -இறை சேர்மின் -அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயிங்கோள் –
புல்கு பற்று அற்றே -என்று பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

வீடுமின் -என்கிற பன்மையால் சொல்லுகிறது என் என்னில்
ஒருவன் தந்தனாய் வந்து நிற்க -அவனுக்கு உபதேசிக்கிறார் அன்றே
சம்சார வெக்காயம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே-
ஒருவர் அல்லா ஒருவர்க்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லாருக்கும் உபதேசிக்கிறார்

வீடுமின் முற்றவும் -என்றார் ஆகில்
திரிய வீடு செய்து -என்கிற இதுக்கு கருத்து என் என்னில்
மேல் ஒரு பேறு பெறுவதிலும் -இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாகப் போருகையாலே –
விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி –

ராஜ புத்திரன் அழுகு சிறையிலே கிடந்தால் முடி சூடி ராஜ்யம் பண்ணுவதிலும்
சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இறே –
உம்முயிர் வீடுடை யானிடை-
இதுக்குப் பல படியாக அருளிச் செய்வர் -நஞ்சீயர்

1–யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிறபடியே உம் உயிரையும் அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்-
2-உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்
3-உம் உயிரை விடும் இடத்தில் -சமர்ப்பிக்கும் இடத்தில் -உடையான் பக்கலிலே என்னுதல் –
வீடுடையான் –
4–பரமபத நிலையன் பக்கலிலே -என்னுதல்

மன்னுயிர் ஆக்கைகள்
உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்
நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-

இறை உன்னுமின் நீரே
இதில் அல்பத்தை ஆராயுங்கோள்-நீரே –
இது தனக்கு ஒரு பிரமாண அபேஷையும் இலை –
சதாசார்ய உபதேசமும் வேண்டா –

இறை சேர்மின் –
அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த சேஷி யானவனை சேரப் பாருங்கோள்-
சேர்மின் -என்கிறார் காணும் -பற்றுமின் -சொல்லாமல் சேர்மின்-
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கையாலே -சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம் –
மரக்கலம் ஆலம்பனம் -காற்று அடிக்க கப்பல் நகர -கரைக்கு வருகிறோம் விஷ்ணு போதம் கிருபாவான் -கிருபை காற்று
அதனால் சேர்மின் -வேலை நமக்கு இல்லையே –

உயிர்க்கு நேர் -இத்தோடு ஒக்க சீரியது இல்லை -என்னுதல்-
நேர் -என்று ஒப்பாய் -நிறை என்று மிகுதியாய் -உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை -என்றுமாம்
பிரதமத்தில் -ஔஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் ஹிதமுமாய் -உதர்க்கத்தில் பிரியமுமாய் இருக்கும்
நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் -இத்யாதி
விஷ்ணு போதம் இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு நடத்தும் ஓடம் –
சம்சார அர்ணவம் மக்னானான் விஷயாக்ராந்த -விஷ்ணு போதம் -நகராத ஓடம் -நாம் தான் நகரணும் –
பிரமம் விபு -நகர முடியாதே -ஏஷ சேது -இக்கரையும் அக்கரையும் இங்கேயே

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு -எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-
உரு -இங்கே ஸ்வரூபத்தை குறிக்கும் -அந்நலம் -உயர்வற உயர் நலம் –
பன்மையாக கீழே மூன்று பாசுரங்களிலும் -இங்கு புல்கு ஒருமை -த்யாஜ்யங்கள் -பல உண்டே –
அதிகாரிகள் பலரும் -புத்தி பேதங்கள் குணா பேதங்கள் -இங்கே பற்ற வேண்டிய விஷயமும் ஓன்று
புருஷார்த்த ஐக்கியம் –புத்தி ஐக்கியமும் உண்டே – அதிகாரி ஐக்கியம் -ஜாதி ஏக வசனம் -முமுஷு பிரபன்னன் ஒரு ஜாதி தானே

எல்லையில் அந்நலம் –
ஆனந்த மய -என்றும் –
உணர் முழு நலம் -1-1-2-என்றும் –
ஓடியாவின்பப் பெருமையொன் -8-8-2–என்றும்
சுடர் ஜ்ஞான இன்பம் -10-10-10-என்றும் –
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றும் சொல்லலாம் படி இருக்கும்
சமஸ்த கல்யாணத்வம் என்பதே குணமாக -தன்மையாக கொண்டவன் -என்றுமாம் –

ஏவ காரம் -அற்றே புல்கு -இரு கரையன் ஆகை அன்றிக்கே புறம்பு உள்ள பற்று அற்றே புல்கு
பற்றிலார் பற்ற நின்றான்-7-2-7- இறே
அவன் -சாதனாந்தரங்களில் பற்று இல்லாத வர்கள் பற்றும் படி திருவரங்கன் –
ஆகையால் பற்று அற்றே புல்க வேணும்-

அற்றிறை பற்றே —
இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

அற்றிறை பற்றே –
ஆச்ரயண காலத்தில் அவனுக்கு என்று அத்யவசித்து –சேஷியான அவனைப் பற்றப் பாருங்கோள்
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி இத்தை அறப் பார் என்னுதல்
இறையைப் பற்றி இத்தை அறப் பார் -அறுத்து இறையைப் பற்று -முதலி யாண்டான் கூரத் ஆழ்வான் சம்வாதம் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14–என்னுமா போலே –

பற்றிலன் –
பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;
இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;
அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –

அவன் முற்றில் அடங்கே
அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு –
அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று
மாதா மிதா ப்ராதா —
வா ஸூ தேவஸ் சர்வம் –
உண்ணும் சோறு பருகும் நீர்
சேலேய் கண்ணியர்-
ஏகைக பல லாபாய –
இது பட்டர் நிர்வாஹம் –

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-
ஆஸ்ரயணத்வேன சமனாய் நிற்கும் சர்வேஸ்வரன் பக்கல் சங்கத்தை உடையனாய் அவனுடைய
எல்லாக் கைங்கர்யங்களிலும் அந்வயிக்கப் பார் என்று பிரதம அர்த்தம்
ஸ்ரீ பட்டர் யோஜனையில் சர்வேஸ்வரன் இன்று ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே தாரகதவாதிகள் எல்லாமாக நின்றான் –
நீயும் சாம்சாரிக சங்கத்தை விட்டுவனாய் அவனுடைய தாரகதவாதி ஸமஸ்த பாவத்திலும் அந்தர்ப்பவிக்கப் பார் -என்று த்விதீயார்த்தம் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி,
‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில்
ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.
அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

————–

தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -தான் இருப்பது–
அனுபவ பரம் முதலில் உபதேச பரம் இதில் –
அதில் தத்வ பாரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியில் –
ஹிதம்–உபாசன பாரமாகச் சொல்ல வேண்டும் அவற்றுக்கு எல்லாம் சங்க்ரஹமாய் இருக்கிறது இத் திருவாய் மொழி –
இத் திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக நிர்வஹித்திக் கொண்டு போந்து
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு
பக்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போருவர் – பின்பு எம்பாரும் அப்படியே அருளிச் செய்தார் –

———-

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

1-3-
சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத்திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார்.

‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.

இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக்கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்;

சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே
ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க
அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு
சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம்
ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

—-

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து
கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –

‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்;
இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி-

அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்;
இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான்
அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை.
‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.
இவர் தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –
‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

வணக்குடைத் தவநெறி வழி நின்று-
வனக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி,
பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது -அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்
‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது

நம் திருவுடை அடிகள் தம்-
திருமகள் கேள்வனான ஸ்வாமியினுடைய– இதனால், நித்திய யோகத்தை அருளிச் செய்கிறார்.
‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி,
‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.
அவள் முன்னாக பற்றுவாருடைய குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகள்-

‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
அவன் காட்டக் கண்ட நாம் அனுபவிப்போம் என்று அதிலே பாரிக்கிறார்-ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும்
இத் திருவாய் மொழியிலே கலவியும் –

விதியினம்
புண்ணியத்தை யுடையோம்.
‘களை கண் மற்று இலேன்’ என்றும்,
‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும்,
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,
‘நெறிவாசல் தானேயாய் நின்றானை’ என்றும்,
‘விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்’ என்றும்,
‘வாழுஞ் சோம்பர்’ என்றும்
இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி?

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-

வானோர் இறையை -என்றதுக்கு முதல் திருவாய் மொழயில் நோக்கு
கள்வா -என்றதுக்கு பத்துடை அடியவரிலே நோக்கு
ஏறு ஏழும் தழுவிய எந்தாய் -அஞ்சிறைய மட நாரையில் நோக்கு

முதல் திருவாய் மொழியில் நித்ய ஸூ ரிகளுக்கு அனுபாவ்யமான மேன்மையை தூஷித்தேன்
பத்துடை அடியவரில் யசோதைப் பிராட்டிக்கு அனுபாவ்யமான நீர்மையை தூஷித்தேன்
அஞ்சிறைய மட நாரையில் பிராட்டிமார் பாசுரத்தைச் சொன்னேன்

தானோர் உருவே தனி வித்தாய்
‘தான்’ என்கிற இதனால், உபாதானாந்தரம் -முதற்காரணம் வேறு இல்லை என்கை.
‘ஓர்’ என்கிற இதனால் சஹகார்யாந்தரம் -துணைக் காரணம் வேறு இல்லை என்கை.
‘தனி’ என்கிற இதனால், -நிமித்தாந்தரம் -நிமித்த காரணம் வேறு இல்லை என்கை.
உரு – அழகு, ஆக, ‘அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

‘சதேவ,’ ‘ஏகமேவ,’ ‘அத்விதீயம்’- இவை முறையே, துணைக்காரணம், முதற்காரணம், நிமித்த காரணம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

பால் ஏய் தமிழர் –பால் போலே இனிய தமிழை யுடையவர்கள்.
இசைகாரர் –இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீ மதுர கவிகளையும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்.
பத்தர் – பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்’ என்று இருக்குமவர்கள்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை
‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை;
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார்.

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-1-6-11-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன் பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த,
ஏதம் இல் ஆயிரம்’ என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’-1-7-2- என்னும் இவ் விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.
எங்கள் ஆயர் கொழுந்தே-1-7-2-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,
‘எங்கள் ஆயர்’ என்கிறார்.

அவரால் புடை உண்ணும்-‘-1-7-3-
திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார்,
அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச் செய்கிறார்.
‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

என் சொல்லி யான் விடுவேன் – ஈடு முப்பத்தாறாயிரம்-
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை
எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

என் சொல்லி யான் விடுவேனோ-இருபத்து நாலாயிரப்படி
1-என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
2-அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –
3-அஸந்நிஹிதன் என்று விடவோ –
4-அந்நிய பரன் என்று விடவோ –
5-நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ –
6-பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ –
7-மேன்மை போராது என்று விடவோ –
8-இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ –
எத்தைச் சொல்லி விடுவது –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில்-(1-8) ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை.
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை.
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை.

ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–1-8-3-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)
விண்ணோர் வெற்பன்-
‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.
கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து,
‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்
நித்ய விபூதியின் மேன்மையையும் திருமலையில் நிற்கிற நீர்மையையும் ஒரு போகியாக அனுபவித்துக் கொண்டு
விடாதே படுகாடு கிடக்கையாலே-விண்ணோர் வெற்பன் -என்கிறார்

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து எண் தான் ஆனானே–1-8-7-
என் எண் தான் ஆனானே –
நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

திருவின் மணாளன் –1-9-1-
இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று
இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.
ரசிகத்வத்துக்கு-சிரமம் செய்த இடம் என்னுதல் –ரசிகத்வத்துக்கு விஷயம் அவள் என்னுதல் –
சுவையன் திருவின் மணாளன் -என் அமுதம் திருவின் மணாளன்-இரண்டாலும்
வாக்யத்வ யுக்தமான புருஷகாரத்வ உபேயத்வங்களைச் சொன்னபடி –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என்று இவர் மூவர் -1-9-4-
உடன் அமர் காதல் மகளிர்–
உடனே அமர வேண்டும்படியான காதலையுடைய ஸ்ரீ பிராட்டிமார் –
அகலகில்லேன் இறையும் என்று ஆயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் யார் என்னில்

திருமகள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்

மண் மகள்
முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி

ஆயர் மட மகள்
அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே
குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி

திருமகள் அவன் ஐஸ்வர்யம்
மண் மகள் அது விளையும் பூமி
ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –

என்று இவர் மூவர்
மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்–1-9-7-

ஸ்ரீ ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஸ்ரீ இறைவனும் ஸ்ரீ ஆழ்வார் விரும்பிய வாறே
திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’,
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அபிமத விஷயத்தை அணைவார் புழுகு நெய் ஒட்டிக் கொண்டு போமா போலே தாம் உகந்த படியே
திருத் துழாயாலே திருமேனியை எல்லாம் அலங்கரித்து வந்தபடி –

தோளிணை மேலும் –
ஸூ காடம் பரிஷஸ் வஜே -என்கிறபடியே
‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்’ என்கிறபடியே,
அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,

நன் மார்பின் மேலும்-
அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்
அவன் அப்படி அணைக்கைக்கு பற்றாசான பிராட்டி இருக்கிற திரு மார்பிலும்

சுடர் முடி மேலும் –
அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.
இவ்வணைக்கை தான் வகுத்த விஷயம் ஆகில் இ றே புருஷார்த்தம் ஆவது –
அந்த சேஷித்வ பிரகாசகமான சர்வாதிகத்வ லக்ஷணமான திரு அபிஷேகத்திலும் –

தாளிணை மேலும்-
தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.
அந்த சேஷித்வத்துக்கு தோற்று விழும் திருவடிகளிலும்

புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான் –
சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன் -இது தான் சர்வாதிக லக்ஷணம் இறே

இனி, இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;
அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;
அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?
ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;
ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ?
‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின்,
நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும்
அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

———-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
ண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

1-10-

இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான்
ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை –
அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

அத்வேஷம் என்ன பரிகணைனை என்ன பரம சக்தி என்ன
இவ்வளவுகளை நிர்ஹேதுக கிருபையாலே தமக்கு பிறப்பித்து தம்மோடு கலந்த படியைக் கண்டு
அத்வேஷாதிகள் உடையாரோடும் தம்மோடு கலந்தால் போலே கலக்கும் ஸ்வ பாவன் என்றும் அவர்களுக்கு
அவ்வளவுகளைப் பிறப்பிப்பான் அவனே -என்றும் அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் –
முன்புள்ளார் -கீழ் பெற்ற பேற்றை அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் -என்னும் அளவே யாயிற்று நிர்வஹிப்பது
பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று,
இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’-1-10-2- என்கிறார்.
இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.
சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –

தாம் ஒருகால் தேடி விடா நிற்க, த்விவா ராத்திரி விபாகமற எனக்கு ஸ்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன்
அபூர்ணனான என்னை ஸ்வீ கரித்து என்னை விட ஷமன் ஆகிறான் அல்லன்
இறைவன் இடைவிடாதே விரும்புகிறான் ஆதலின், ‘இடைவீடின்றி’ என்கிறார்.
இனி, ‘என்னை விடான் நம்பி நம்பியே’-1-10-8- என்பதற்கு,
‘என்னை –
அபூர்ணனான என்னை,
நம்பி –
பெருமதிப்பனாக -நினைத்து,
விடான் –
விடுகின்றிலன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே
உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.

என் சொல்லி மறப்பனோ –1-10-9-
எத்தைச் சொல்லி மறப்பேன்?
1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?
எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

என் சொல்லி மறப்பேனோ-
1-குண ஹீனன் என்று மறக்கவோ
2-அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
3-வடிவில் பசை இல்லை என்று மறக்கவோ
4-மதிப்பன் அல்லன் என்று மறக்கவோ
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை –1-10-11-
மணியை –
முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.
‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.
வானவர் கண்ணனை –
இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.
தன்னதோர் அணியை-
இதனால் ‘அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார்.
இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

————

1-1-

முதல் பாட்டிலே — கல்யாண குணயோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரக வைலஷண்யத்தையும் -என்றும்
இரண்டாம் பாட்டிலே -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலக்ஷணம் என்றும்
மூன்றாம் பாட்டில் -நித்ய விபூதியோபாதி ததீயத்வ ஆகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாய்த் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டிலே அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் ஆதீனம்-என்றார் –
ஐந்தாம் பாட்டிலே அதனுடைய ஸ்திதியும் அவன் ஆதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் ஆதீனம் என்றார்
ஏழாம் பாட்டிலே சரீர சரீரிகளுக்கு உண்டான லக்ஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார் சரீர சரீரி
எட்டாம் பாட்டிலே குதிர்ஷ்டிகளை மிராசுதார்
ஒன்பதாம் பாட்டிலே சூன்ய வாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டிலே வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்
இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

————————

1-2-

முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

—————

1-3-

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச்செய்தார்.

———-

1-4-

முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்;
இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்;
மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்;
நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்;
ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே
எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத் தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத் தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய
குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியா நின்றேன்;
நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால்,
அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்;
பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீஅவனை விடாதேகொள்,’ என்று போக விட்டாள்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினாள்.

முதற்பாட்டில், ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை -வைபவத்தை -அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில்,மதுர பாஷியாய் – இனிமையாகப் பேசுகின்றவனாக இருப்பான் என்றார்;
மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்-சாரசார விவேகாஞ்ஞன் – என்றார்;
நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை-விக்ரஹ ஸுந்தர்யத்தை- அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’-சுத்த ஸ்வபாவன் என்றார்.
ஆறாம் பாட்டில், ‘பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் -பகவத் ஏக போகனாய் -ரூபாவானாய் அழகனுமாய்ப்-
கிருபாவானுமாய் -கம்பீர ஸ்வ பாவனாயும் -பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தான்-சர்வஞ்ஞன் – முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச் செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே-சத்தா – இருப்புக்குத் தாரகம்; இதர ஸ்பர்சம் சத்தா பாதகம்
பத்தாம் பாட்டில்- -இப்படி ஞானவானுமாய் மதுரபாஷியுமாய் சாரசார விகேகஞ்ஞனுமாய் -தர்ச நீயனுமாய் -சுத்த ஸ்வபாவனாய் –
கிருபா கம்பீரயாதிகளை யுடையவனாய் சிரோபாதிஸ சத்வருத்த ஸேவ்யனாய்-
ஸச் சிஷ்யனாகையாலே ஏவம்பூதனான ஆச்சார்யனுடைய தேஹ யாத்திரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய் –
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமாய் -இப்படி சதாச்சார்ய சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்தில் பிரவணமாய் –
நின்னடையேன் அல்லேன்-என்று நீங்கி ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்ப
நாண் மலர்ப்பாதம் அடைந்தது தம் திரு உள்ளம் என்று தலைக் கட்டினார் –

ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்’ என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில் நோக்கு;
இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக் கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல் நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனியின் பேரழகினை’ என்றது –‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி.
‘நினைத்தது கிட்டுமளவும் சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பேரருள் வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது –
முறையே ‘வண்டு என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின், வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம் என்ற பெயரின் பொருளையும் நோக்குக
‘தான் முற்றறிவினனாகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளி ச்செய்யான்’ என்றது, ‘இளங்கிளியே’ என்றதனை நோக்கி.
‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்றதனை நோக்கி.
ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம், மற்றையோருடைய உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் ஸ்பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப் பொருளில் ஆசாரிய சம்பந்தமே தாரகம் என்பது போதரும்.

இத் திருப்பதிகத்தில் ஏழாம் பாசுரம் முடிய, சதாசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் ஸச் சிஷ்யனுடைய மாணாக்கனுடைய இலக்கணம்.

—————

1-5-

முதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;
மூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;
நான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்?’ என்றான்;
பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———————

1-6
முதற்பாட்டில், ‘இறைவனைப் பற்றுகின்றவர்கட்குப்-ஆஸ்ரயிக்கிறவனுக்கு த்ரவ்ய பொருள் நியதி இன்று,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அதிகாரி நியதி இல்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில் தம்முடைய முக் கரணங்களும்-கரண த்ரயமும் – பகவானிடத்தில்-ப்ரவணமான – அன்பு கொண்ட-படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், ‘நித்திய சூரிகளைப் போன்று அதுவே யாத்திரை ஆயிற்று,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘தன்னையே பிரயோஜனமாக – பலமாகப் பற்றினார்க்கு அவன்-நிரதிசய போக்யன் – எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி-போக்கிய பூதனானவை – இனியன் ஆனவனை விட்டு வேறு பிரயோஜனத்தை –
பலத்தைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரை- தேவர்களை நிந்தித்தார்;
ஏழாம் பாட்டில், ‘இறைவனையே பலமாகப் பற்றினார்க்குக் காலத்தைப் போக்குதல்-கால ஷேபம்- இன்ன வகை’ என்றார்;
எட்டாம் பாட்டில்,-பிராப்தி விரோதிகளையும் – ‘இறைவனைப் பற்றுதற்குத் தடையாக உள்ளனவற்றையும் அவன் தானே போக்குவான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இது கூடுமோ!’ என்று ஐயம் உண்டாக, ‘வெறும் அவன் படியையோ பார்ப்பது?
அருகு இருப்பார் படியையும் பார்க்க வேண்டாவோ?’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘இவர்கள் விரோதிகளைப் போக்குவது எத்துணைக் காலத்தில்?’ என்ன, க்ஷண நேரத்திலே’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்கவே-அப்யஸிக்கவே பிறக்க வேண்டா,’ என்றார்-

————-

1-7
முதற்பாட்டில், கேவலரை நிந்தித்தார்;
இரண்டாம் பாட்டில்-அநந்ய பிரயோஜனர் – வேறு பயனைக் கருதாத அடியார்களிடத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘இவ்விரண்டு கோடியிலும் நீவிர் யாவிர்?’ என்ன,
‘உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘என்னை இவ்வளவாகப் புகுர நிறுத்தினவனை என்ன காரணத்தால் விடுவேன்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ, நான் அவனை விடுவேன்?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘அவன் தான் விடிலோ?’ என்ன, ‘அவன் போக்கை இசையேன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நீர்தாம் விடிலோ?’ என்ன, ‘அவன் என்னைப்போக ஒட்டான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘இந்நாள் வரை போக விட்டிலனோ?’ என்ன, ‘நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை
இனி அவனாலும் விடப்போகாது, என்றார்;
ஒன்பதாம் பாட்டில், இப்பிரசங்கம் – -‘இவ்வார்த்தைகள் தாம் எற்றிற்கு?
ஒரு நீராகக் கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது,’ என்றார்;
பத்தாம் பாட்டில். ‘அவனுடைய கல்யாண குணங்களை எல்லாக் காலத்தும் அனுபவித்து வருத்தமுடையேன் அல்லேன்,’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———–

1-8-
முதற்பாட்டில், நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில், லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், இரண்டு உலகத்திலும் உள்ளார்க்கு முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கிற படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், அவ்வார்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நான் அவன் குணங்களை விரும்புமாறு போன்று, அவனும் என் தேகத்தை விரும்புகின்றான்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘என் தேகத்தின் அளவு அன்றிக்கே என் ஆத்துமாவையுங் கைக் கொண்டான்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவே அன்று; நித்திய விபூதியில் செய்யும் ஆசையை என் பக்கலில் செலுத்துகிறான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘என்னைக் குறித்து அவன் பிறந்த பிறவிகளுக்கு முடிவு இல்லை,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இப்படிப் பிறந்த பிறவிகள் தோறும் தன் இறைமைத் தன்மையோடே வந்து அவதரித்தான்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘அவனுடைய ஆர்ஜவ குணத்தைப் பேசும் போது வேதமே பேச வேண்டும்,’ என்றார்;
முடிவில், ‘இத் திருவாய்மொழி சம்சாரிகளுக்கு எப்போதும் ஒக்க அநுசந்திக்கத் தக்கது,’ என்றார்.

———————-

1-9-
முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் என்றார்
இரண்டாம் பாட்டிலே அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் தம்முடன் கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஓக்கலையிலே வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டிலே தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணுள்ளே வந்து நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திருமுடியில் நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடன் சாத்மிக்கும்படி கலக்கையாலே அவனை சிரஸா வகித்தார் –
பலம் சொல்லித் தலைக் கட்டினார்

———
1-10-
இத் திருவாய் மொழியில், மேல் பரக்க அருளிச் செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில் ‘பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி; நீயும் உன் ஸ்வரூபத்துக்குத் தக்கபடி நிற்கப் பாராய்,’ என்றார்;
நான்காம் பாட்டில் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்;
ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்ற படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும் வாராது,’ என்றார்;
ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில் திரு நாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச் சொன்னார்;
ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ?’ என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்.

முதற்பதிகத்தால்,-சர்வ ஸ்மாத் பரன் -‘எல்லாரினும் அறப் பெரியன் இறைவன்’ என்றார்;
இரண்டாம் பதிகத்தால்,பஜனீயன் ‘வணங்கத் தக்கவன்’ என்றார்;
மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் -ஸூலபன் எளியவன்,’ என்றார்;
நான்காம் பதிகத்தால்,ஸூலபனானவன் அபராத சஹன் ‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்;
ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’ என்றார்;
ஆறாம் பதிகத்தால்,ஸ்வாராதன் ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்;
ஏழாம் பதிகத்தால்,நிரதிசய போக்யன் – ‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
ஒன்பதாம் பதிகத்தால்,-சாத்ம்ய போகப்பிரதன் – பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்;
பத்தாம் பதிகத்தால், ஏவம்பூதனானவன் -‘இத் தன்மைகளை யுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், நிர்ஹேதுகமாக
ஒருவிதக் காரணமும் இன்றியே -விஷயீ கரிப்பவன் -உயிர்களை அங்கீகரிப்பவன்,’ என்றார்;
ஆகையாலே,
‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே’ என்று
தம் திரு வுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார்.

ஆக, ‘அடி தொழுது எழு’ என்று தொடங்கி,
‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால்,
ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க உயர்வு அற உயர்ந்த
உறுதிப்பொருள் செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை
முதல் நூறு திருப் பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச் செய்தார் ஆயிற்று.

———

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார்
இரண்டாம் பத்தால் அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்
பத்தாம் பத்தில் ஸ்ரீ ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -ஸ்ரீ திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

———————

திருவாய்மொழி நூற்றந்தாதி

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வு ஏதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு –திருவாய்மொழி நூற்றந்தாதி -1-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து.-2-

பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்;
முத்தி தரும் மா நிலத்தீர்! மூண்டு அவன் பால்-பத்தி செயும்’
என்று ரைத்த மாறன் றன் இன் சொல்லாற் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ் சிறை–3–

அஞ்சிறைய புட்கள் தமை ‘ஆழியா னுக்கு நீர்
எஞ் செயலைச் சொல்லும்’ என இரந்து – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்– -4-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கு ஊடு உருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறன் மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடன் சேர்ந்தான் பரிந்து – -5-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி,
அரி யன் அலன் ஆராதானைக்கு என்று உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு––6-

பிறவி அற்று நீள் விசும்பில் பேர் இன்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அற வினியன்
பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு – -7-

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை -நாடு அறிய
சார்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் யென
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை – -8-

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் வந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொன் தாள் நம் சென்னி பொரும் – -9-

பொரும் ஆழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது வறத் தன்னை -திரமாகப்
பார்த்து உரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய் – -10-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading