ஸ்ரீ இராமாயண சுருக்கம் / ஸ்ரீ திருவடியே மஹாத்மா –நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவத்தை (61 வரிகள்) மந்திரம் போல் படித்தால்
முழுமையான ஸ்ரீ ராமாயண காவியத்தைப் படித்த பலன் உண்டாகும் –
‘தபோவனம்’ திருத்தலத்தில் இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவம் மந்திரமாகத் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது.
இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண காவியத்தைத் தினமும் படித்தால் ஸ்ரீஇராமபிரானின் அருளும்
ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் அருளும் ஒருங்கே கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

1. க்ரெளஞ்ச பட்சி மோட்சம்

2. வால்மீகி பிரவேசம்

3. நாரதர் விஜயம்

4. ஸ்ரீசீதா காவ்யம்

5.ஸ்ரீராம கதா ஆரம்பம்

6. லவகுச கீர்த்தனம்

7. தசரத புத்ர சோகம்

8. குலகுரு வசிஷ்டர் அனுக்கிரஹம்

9. அஸ்வமேத யாகம்

10. ஸ்ரீராம லெஷ்மண சத்ருக்ண ஜனனம்

11.விஸ்வாமித்ர விஜயம்

12.அகல்யா சாபவிமோசனம்

13.வேள்வி காத்தல்

14. தாடகை மரணம்

15. மிதுலாபுரி விஜயம்

16. சீதா சுயம்வரம்

17. சிவதனுசு காவ்யம்

18. ஸ்ரீராமவீரம்

19. ஸ்ரீசீதாராம கல்யாணம்

20. பரசுராம விஜயம்

21. விஷ்ணு தனுசு ப்ரயோகம்

22. அயோத்தி விஜயம்

23. ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஆரம்பம்

24. கைகேயி வரம்

25. சீதா ராம வனவாசம்

26. குகன் பரிச்சியம்

27. சூர்ப்பனகை வதம்

28. மாரீசன் மரணம்

29. சித்ர கூட விஜயம்

30. இராவண விஜயம்

31.சீதா தேவியைத் தேடும் படலம்

32. ஜடாயு மோட்சம்

33. கந்தமா பர்வத விஜயம்

34. மாருதி விஜயம்

35. சுக்ரீவனுக்கு அபயம்

36. மராமரம் துளைத்தல்

37. வாலி மரணம்

38. சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம்

39. சேது பயணம்

40. தர்பசயனம்

41. சமுத்ர ராஜன் சரணாகதி

42. சேதுபாலம்

43. மாருதி இலங்கை பயணம்

44. விபீஷணன் சந்திப்பு

45. சீதா தரிசனம்

46. கணையாழி காவ்யம்

47. லங்கா தகனம்

48. விபீஷண பட்டாபிஷேகம்

49. சேதுபால பயணம்

50. இந்திரஜித் லெஷ்மண யுத்தம்

51. இந்திரஜித் மரணம்

52. ஸ்ரீராம ராவண யுத்தம்

53. சீதா அக்னி பிரவேசம்

54. புஷ்பக விமானம்

55. பரத்வாஜ ஆஸ்ரம விஜயம்

56. பரத மாருதி ஆலிங்கனம்

57. சீதாராம அயோத்தி விஜயம்

58. குலகுரு வசிஷ்டர் ஸப்தரிஷிகள்

59. பல முனிவர்கள் ஆசியுடன்

60. குலமாதர்கள் ஆசியுடன்

61. சீதாராம பட்டாபிஷேகம்

—————

ஸ்ரீ திருவடியே மஹாத்மா -நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
மஹாத்மா அனுமான்

அஞ்சிலே ஓன்று பெற்று பஞ்ச சம்ஸ்காரம் -திருமந்திரத்தில் பிறந்து
அஞ்சிலே ஒன்றைத் தாவி அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
அஞ்சிலே ஓன்று ஆறாக -ஸித்த உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்
ஆர் உயிருக்குக்கா
அஞ்சிலே -பஞ்ச பிரகாரம் விண்ணின் மேல் இருப்பாய் –அர்ச்சாவதார -ஒன்றை -பக்தி ஏற்படுத்து
அயலார் ஊரான சம்சாரம்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பரம புருஷார்த்தம் -மற்ற நான்கையும் விட்டு
நம்மை அளித்து காக்கும் ஆச்சார்யன்
ஐம் பூதங்கள்
பஞ்ச சம்ஸ்காரம்
தீயில் பொலியும் வெண் சுடர் ஆழி
வானம் -திருமண
மந்த்ரம் -காற்று
தாஸ்ய -நிலத்தில் விழுந்து சேவித்து
திருவாராதனம் -தீர்த்தம்
இப்படி ஐந்துமே வருமே இதற்குள்

———–

ஸ்ரீ ராமர் போற்றிய மஹாத்மா!

கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன் யபி ஸாதயேத் I
பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்து மர்ஹதி II

கார்யே – செய்து முடிக்க வேண்டிய
கர்மணி – ஒரு காரியத்தில்
நிர்திஷ்டே ஏவப்பட்டபோது
ய: – எவனொருவன்
பூர்வகார்யாவிரோதேன – முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி
பஹூனி அபி – அனேகங்களையும்
ஸாதயேத் – சாதிக்கின்றானோ
ஸ – அவன்
கார்யம் – காரியத்தை
கர்தும் – செய்து முடிக்க
அர்ஹதி – திறமை உடையவனாகிறான்

——

அனுமனை ராமர் போற்றிக் கூறும் இடம் ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
முதல் ஸர்க்கத்தில் 7,8,9 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் ஸ்ரீ ராமர் கூறுவதைப் பார்ப்போம்:

யோ ஹி ப்ருத்யோ நியுக்த: ஸன்பர்த்ரா கர்மணி துஷ்கரே I
குர்யாத் த்தனுராகேன தமாஹு: புருஷோத்தமம் II
(ப்ருத்ய: – வேலைக்காரன்; பர்த்ரா – தலைவன்/ எஜமானன்)

எந்த ஒரு வேலைக்காரன் தலைவனால் கஷ்டமான ஒரு காரியத்தில் ஏவப்பட்டு அதைக் குறையின்றி செய்வதோடு
அநுகூலமான வேறு பல காரியங்களையும் செய்து முடிக்கிறானோ அவனை
உத்தம வேலைக்காரனாகச் சொல்வர்.

—-

நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான்ந்ருபதே: ப்ரியம் I
ப்ருக்தோ யுக்த: சமர்த்தஸ்ச தமாஹுர்மத்யமம் நரம் II

(யுக்த – அனுபவசாலி; சமர்த்த- சாமர்த்தியசாலி;ப்ரியம் –நன்மை விளைவிக்கத் தக்கது)

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்கு மேலான மேலும் பல காரியங்களைச் செய்யவில்லையோ அவனை
நடுத்தரமான வேலைக்காரன் என்று சொல்வார்கள்.

நியுக்தோ ந்ருபதே: கார்யம் ந குர்யாத்ய: ஸமாஹித:
ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச தமாஹு: புருஷாதமம்

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்குக் குறைந்தபட்ச காரியத்தைக் கூடச் சரியாகச் செய்யவில்லையோ அவனை
அதம வேலைக்காரனாகச் சொல்வார்கள்

இப்படி வேலை செய்பவர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சுட்டிக் காட்டும் ராமர்
அனுமனால் ‘பரி ரக்ஷிதா:’ (பேருதவிசெய்யப்பெற்றோம்) என்று மனம் குளிரக் கூறுகிறார்.

இந்த பேருதவியைச் செய்த ஸ்ரீ அனுமானை மஹாத்மன: (மஹாத்மா) என்று அவர் புகழ்கிறார்.
ஸ்ரீ ராமராலேயே மஹாத்மா என்று புகழப்பட்டார் என்றால் ஸ்ரீ அனுமனின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ!

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading