1-ப்ரத்யஷே குரவ ஸ்துத்யா –பாரதம் -ஆற -188-94
ஆச்சார்யர்கள் நேரிலேயே ஸ்துதிக்கத் தகுந்தவர்கள்
2-குரு பாதாம்புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத்
குரு ஸேவாம் ஸதா குர்யாத் ஸோ அம்ருதத்வாய கல்பதே -பிரபஞ்ச ஸாரம்
ஆச்சார்யனின் திருவடித்தாமரையை எப்போதும் தியானிக்க வேண்டும்
திருநாமத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்
கைங்கர்யத்தையே எப்போதும் செய்ய வேண்டும்
இப்படிச் செய்பவன் மோக்ஷத்திற்குத் தகுந்தவன் ஆகிறான்
3- மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-
என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்
4-ப்ராகேவ து மஹா பாக ஸுமித்ரிர் மித்ரா நந்தன
பூர்வ ஜஸ்யாநு யாத்ரார்த்தே த்ரும சீ ரைர லங்க்ருத –ஸூந்தர –33-28-
மஹா பாக்யவானாய் அனுகூலங்களை உகப்பாய்வானுமாய் இளைய பெருமாள்
தமயனுக்கு பின் செல்ல பூர்வமேவேயே மரவுரிகளாலே அலங்கரித்துக் கொண்டான்
5-தீப்த மக்நி மரண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி
ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தவம் பூர்வமாவதாரய –அயோத்யா –21-17-
அம்மா கொழுந்து விட்டு எறியும் அக்னியில் உள்ளாவது காட்டில் உள்ளாவது பெருமாள் நுழைவார் ஆகில்
நான் முன்னமேயே அதனுள் நுழைந்து இருப்பேன் என்று அறிவாயாக
6-பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநு ஷு ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே –அயோத்யா -31-25
நீர் பிராட்டியுடன் மலைத்தாழ்வாரைகளிலே விளையாடுவார்
அடியேன் நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும்
எல்லா அடிமைகளையும் செய்வேன்
7-ஸ்ருஷ்டஸ் தவம் வன வாஸாய ஸ்வ நுரக்தஸ் ஸூஹ் ருஜ்ஐநே
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்ர பிராத்தரி கச்சதி –அயோத்யா –40-5–
கைங்கர்யத்துக்காகவே பிறந்துள்ளாய்
பெருமாள் நடக்கும் பொழுது அந்த அழகிலே ஈடுபட்டு அவனுக்குத் தீங்கு செய்வோரை
கவனிக்காமல் இருக்கும் தவற்றைச் செய்யாமல் இரு
8-யதி தவம் பிரஸ்திதோ துர்க்கம் வனமத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதி குச கண்டகாந் -அயோத்யா –27-6-
நீர் செல்ல அரிதான வனத்திற்கு இன்றே புறப்பட்டாலும் தர்ப்பைகளையும் முட்களையும் மிதித்து
அழித்துக் கொண்டு நானும் உமக்கு முன்னால் செல்வேன்
9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் ச நேதி –தைத்ரியம் -ஆனந்தவல்லி –9-1-
எந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட அறியாமல் திரும்புகின்றனவோ
அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதன் இடமும் பயப்பட மாட்டான்
10-கோ சத்ருஸோ கவய -கவய சத்ருஸோ கவ்
காவியம் என்னும் மிருகம் மாட்டைப்போல் உள்ளது
மாடு கவயம் என்னும் மிருகத்தைப் போல் உள்ளது
11–தத்வே ந யஸ்ய மஹி மார்ண வஸீ கராணு
சக்யோ ந மாது மபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத் ரபாய –ஸ்தோத்ர ரத்னம் -7-
எந்த எம்பிரானுடைய மஹிமைக்கடலில் ஒரு திவலையில் அணு அளவும் கூட சிவன் பிரமன்
முதலியவர்களாலும் உள்ளபடி அளவிட முடியாததோ
அப்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்துதியைச் செய்ய ஆரம்பித்து இருப்பவனும் வெட்கம் அற்றவனும்
கவி என்ற பெயர் கொண்டவனுமான எனக்கே நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்
12-மன பூர்வ வாக் உத்தர -தைத்த சம்ஹிதை -7-5-3-
முதலில் மனஸ்ஸூம் அடுத்த படியாக வாக்கும் பிரவர்த்திக்கின்றன –
13-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –சாந்தோக்யம் –1-6-7-
ஸூர்ய மண்டலத்தின் நடுவிலுள்ள அப்புருஷனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள –
14-கர்மண்யே வாதி காரஸ்தே மா பலேஷு கதாசன –கீதை -2-47-
முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்மங்களை செய்வதற்கே அதிகாரம்
ஒரு பொதுமணகர்ம பழத்தில் அதிகாரம் இல்லை
15-மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ் யஸி ஸத்யம் தே பிரதி ஜாநே ப்ரியா அஸி மே –கீதை –18-65-
என்னிடத்திலேயே மனத்தை வைத்தவனாகவும்
என்னுடைய பக்தனாகவும்
என்னை ஆராதிப்பவனாகவும் ஆவாயாக
என்னை நமஸ்கரிப்பாயாக என்னையே அடைவாய் இது சத்யம்
உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
எனக்குப் பிரியவன் அன்றோ நீ
16-அசன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹமேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ வித்து –தைத்த-ஆனந்த -6-
17- சரீரம் ஏவ மாதா பிதாரவ் ஜனயத ஸ ஹி வித்யா தஸ்
தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆபத் ஸூ –1-1-6-
18-ஏஷ பந்தா விதர்ப்பா நாம் ஏஷ யாதி ஹி கோசலான்
இது விதர்ப்ப தேசத்துக்குவேஜ் செல்லும் வழி
இது கோசல தேசத்துக்குச் செல்லும் வலி
19-நாயமாத்மா ப்ரவச நே ந லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதே ந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே த நூம் ஸ்வாம் –கட –1-2-23 –
இந்தப் பரமாத்மா பக்தி அற்ற ஸ்ரவணத்தினாலும் -மனத்தினாலும் தியானத்தினாலும் -அடையத் தக்கவன் அல்லன்
இப்பரம புருஷன் எவனை வரிக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் –
அவனுக்கு இப்பரமாத்மா தன் திரு மேனியைக் காட்டுகிறான்
20-அவிவேகக நாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவ துர்த்திநே பத ஸ்கலிதம் மாம வ லோக யாச் யுத –ஸ்தோத்ர ரத –49-
ஞான சக்த்யாதி குணங்கள் நிறைந்தவன் -அடியாரைக் கை விடாதவனே –
விவேகம் இன்மையாகிற மேகங்களால் இருள் அடைந்த திசைகளை யுடையதும் பலவிதமாக இடைவிடாமல்
துன்பங்களைப் பொழிகின்றனது மான ஸம்ஸாரமாகிய மழை கால இருளிலே
நல் வழியில் இருந்து தவறிய அடியேனைக் கடாக்ஷித்து அருள்வாயாக
21- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச –கீதை –18-66
மோக்ஷ சாதனமான எல்லா தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னை ஒருவனையே உபாயமாக அடை
நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் துக்கிக்காதே
22-ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –யுத்த –18-28
எதிரிகளுக்கும் சரணம் அடைந்த சத்ருவானவன் -வர்த்தத்தாலே சரணம் அடைந்த ஆர்த்தனாயினும்
அரை மனதாகச் சரணம் அடைந்த திருப்தனாகிலும் பண் பட்ட மனத்தையுடைய புருஷனாலே
தன் பிராணனை விட்டு ரக்ஷிக்கத் தக்கவன்
23-ஈர்ஷ்யோ ரோஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோ தகம்
நய மாம் வீர விஸ்ரப்த பாப்பம் மயி ந வித்யதே –அயோத்யா –27-8-
வீரனே அஸூயை கோபம் இவ்விரண்டையும் குடித்து மிகுந்த ஜலத்தைப் போலே தள்ளிவிட்டு
என் வார்த்தையை நம்பி என்னை அழைத்துச் செல்வீராக
உம்மைப் பிரிந்து இருக்கைக்கு காரணமான பாப்பம் எனக்கு இல்லை
24-யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை சோகாபி கர்சிதை
ஸம்ஸ் ப்ருசேயம் சாகமாஹம் ததா குரு தயாம் மயி –ஸூந்தர –40-2-
பெருமாள் இடம் பேர் அன்பு மிகுந்த யான் புருஷ ச்ரேஷ்டரான அவரை துக்கத்தால் இழைத்த
இந்த என் அவயவங்களாலேயே தொடத்தக்கவளாம் படி என்னிடத்தில் நீ கருணை புரிவாயாக
25- மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா
ராஜ்ஞா தசரதே நாஸி லப்தோ அம்ருத மிவா மரை –ஆரண்ய –66-3-
பெருமாளே தேவர்கள் அம்ருதத்தைப் பெற்றால் போல் பெரும் தவத்தாலும் பெரும் கார்யங்களாலும்
தசரத மஹாராஜரால் நீர் அடையப் பெற்று இருக்கிறீர்
26-ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன –கீதை -4-9-
அர்ஜுனா என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும் சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ
அவன் தேகத்தை விட்டு மறு ஜென்மம் அடையாமல் என்னையே அடைகிறான்
27-அஜாய மாநோ பஹு தா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் –புருஷ ஸூக்தம்
பிறப்பு அற்றவனாய் இருந்தும் பலபடியாகப் பிறக்கிறான்
அவனுடைய அவதார ரஹஸ்யத்தை புத்திமான்களே நன்றாக அறிகிறார்கள்
28-ஏஷ தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ப்ருஹதாரண்யம் –5-7-
ஸர்வ அந்தர்யாமியான இப்பரம புருஷனே இயற்கையான அம்ருதத்தை யுடையவனாய்
உனக்கு ஆத்மாவாக விளங்குபவன் –
29-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ
அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாத மவிஜாநதாம் –கேந –2-3-
எவனுக்கு ப்ரஹ்மம் அளவிட்டு அறியப்பட வில்லையோ அவனுக்கில்லை அது அறியப்பட்ட தாகிறது
எவனுக்கு ப்ரஹ்மம் அறியப்பட்டதாகிறதோ அவன் அதை அறிய வில்லை
அளவிட்டு அறிந்தவர்களுக்கு அறியப்படாததாயும்
அளவிட்டு அறியாதவர்களுக்கு அறியப்பட்டதாகவும் ஆகிறது பெற ப்ரஹ்மம்
தேஷாம் ஞானீ நித்ய யுக்த ஏக பக்திர் வி ஸிஷ்யதே
ப்ரியா ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –கீதை –7-17-
என்னுடன் எப்போதுமே சேர்ந்து இருப்பவனும் என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞானி
அந்த நால்வருக்கும் மேலானவன்
நான் ஞானிக்கு மிகவும் பிரியம் அன்றோ -அப்படியே அவனும் எனக்குப் பிரியமானவன்
31- பரதஸ்ய வச குர்வன் யாஸமா நஸ்ய ராகவா
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா ஸத்ய தர்ம பராக்ரம –அயோத்யா –111-7
ராகவன் சாத்தியமான தர்மத்தையும் பராக்ரமத்தையும் உடையவனே
யாசிக்கும் பரதனுடைய வார்த்தைப்படி செய்வதன் மூலம் உன்னுடைய ஸ்வரூபமான
ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாமல் இருப்பாயாக –
32-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தன
ஹார்ஸ் த்ரை லோக்ய நாதஸ்ய கிந்து தஸ்ய ந நிர்ஜிதம் -பாரதம் -ஆற –49-20
மூ உலகங்களுக்கும் நாத்தனாய் ஜனார்த்தனன் என்றும் ஹரி என்றும் சொல்லப்படுமவனான அந்த பகவான்
எந்த தர்ம புத்திரனுக்கு மாதிரியாகவும் ரக்ஷகனாயும் ஸ்நே ஹிதனாயும் இருக்கிறானோ
அந்த தர்மபுத்ரனால் ஜெயிக்கப் படாதது யாது
33-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ
பந்தாய விஷயங் சங்கி முக்த்யை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-28-
மனிதர்களுக்கு சம்சாரத்துக்கும் மோக்ஷத்திற்கும் மனது தான் காரணம்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட மனம் ஸம்ஸார ஹேதுவாகிறது
விஷயங்களில் பற்று அற்ற மனம் முக்தி ஹேதுவாகிறது
34-யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ -அயோத்யா –30-18-
பிரானே உம்முடன் இருப்பதுவே எனக்கு சுவர்க்கம் -உம்மை விட்டுப் பிரிந்து இருப்பதுவே எனக்கு நரகம்
என்னுடைய மேலான அன்பை இம்மாதிரி அறிந்து என்னுடன் கூட வனத்துக்குச் செல்வீராக
35-பூமவ் ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ
ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தாநவா –யுத்த –103-5-
பூமியில் இருக்கும் ராமனுக்கும் ரத்தத்தில் இருக்கும் ராக்ஷஸனுக்கும் யுத்தம் சமமானது அல்ல என்று
தேவர்களும் கந்தர்வர்களும் அஸூரர்களும் சொன்னார்கள்
36-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலா நிதி சாந்த உபாஸீத –சாந்தோக்யம்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உபண்டானதாலும் -ப்ரஹ்மத்திலேயே லயிப்பதாலும்
ப்ரஹ்மத்தாலேயே உயிர் வாழ்வதாலும்
இவை எல்லாம் ப்ரஹ்மமே யாகும் என்று நினைத்துக் கொண்டு சாந்தனாக உபாஸிக்கக் கடவன்
37-யதாவத் கதிதோ தேவைர் ப்ரஹ்மா ப்ராஹ தத ஸூரான்
பராவரேஸம் சரணம் வ்ரஜத்வம ஸூ ரார்த்த தனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-35-
தேவர்களால் தங்கள் துன்பங்களை நன்கு அறிவிக்கப்பட்ட பிரமன் மேலானவர்களோடே கீழானவர்களோடே
வாசியற எல்லாருக்கும்
ஈஸ்வரனாய் இருப்பவனும் அஸூர ஸத்ருவானவனுமான பகவானை சரணம் அடையுங்கோள் –
என்று தேவர்களிடம் சொன்னான்
38-சத்த்வாத் சஞ்சாயதே ஞானம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோதவ் தமஸோ பவதோ அஞ்ஞான மேவ ச –கீதை –14-7-
சத்வ குணத்தில் இருந்து ஞானம் உண்டாகிறது
ரஜோ குணத்தில் இருந்து ஸ்வர்க்கம் முதலிய பலன்களில் ஆசை உண்டாகிறது
தமோ குணத்தில் இருந்து கவனமின்மையினாலே ஏற்படும் அசத் கர்ம ப்ரவ்ருத்தியும்
விபரீத ஞானமும்ந அஞ்ஞானமும் ஏற்படுகின்றன
39-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-
விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது -காமத்தினால் கோபம் ஏற்படுகிறது
40-கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர வாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாந் நாப சர்ப்பதே –பார -உத்யோக –47-22-
‘திரௌபதியானவள் வெகு தூரத்தில் இருந்த என்னைக்குறித்து கோவிந்தா என்று கூக்குரல் இட்டது
வட்டியினால் வ்ருத்தி யடைந்த கடனைப் போலே என் ஹ்ருதயத்தில் இருந்து அகலுகிறது இல்லை
41-ப்ரஹ்ம தாண்ட ப்ரகாசா நாம் வித்யுத் ஸத்ருச வார்ச்சஸாம்
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர –யுத்த –60-3-
ப்ரஹ்ம தண்டத்தைப் போன்ற ஒளி யுள்ளவையும் மின்னலைப் போன்ற தேஜஸ்ஸைப் பெற்றவையுமான
ராம பாணங்களை நினைத்து ராக்ஷஸாதி பதியான ராவணன் மிக வருந்தினான்
42-தாதூ நாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான் –கிஷ்கிந்தா –15-21-
ஒரு சிறந்த மலை தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் உள்ளது போலே
ஸ்ரீ ராமபிரானும் குணங்களுக்கு எல்லாம் பெரியதோர் இருப்பிடமாவார்
43-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் –தைத்ரியம்
உலகங்களுக்கு எல்லாம் பாதியாகவும் தனக்குத் தானே ஈஸ்வரனாகவும் நித்யனாகவும்
மங்கள கரனாகவும் அடியார்களை நழுவ விடாதவனாகவும் இருப்பவனே நாராயணன் –
44-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-
தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை
45–ஸ்ருஷ்ட்டி ஸ்திதித் எந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்
ஸ ஸம் ஜ்ஞாம் யாதி பகவாநேந ஏவ ஜனார்தன –அதர்வசிகை –2-15-
படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களை செய்யும் பிரமன் விஷ்ணு சிவன்
என்னும் பெயர்களை ஜனார்த்தனன் எனப்படும் அந்த பகவானே அடைகிறான்
46-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே
பிரமன் விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகிய இவர்கள் எல்லாரும் பிறக்கிறார்கள்
47-மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார
தத் சாம்யத ஸ்த கயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வபி ஸூநைரிஹ ரங்க தாமன்
ஸத்வ ப்ரவர்த்தன க்ருபா பரிபால நாத்யை –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –2-51-
ஸ்ரீ ரெங்க நாதரே பிரம ருத்ராதிகளின் நடுவிலே உமக்கு ஏற்பட்ட முதல் அவதாரம்
அவ்விருவருடன் ஒன்றாய் இருப்பதைக் காட்டி உம்முடைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காக வாகில்
ஸத்வ குணத்தை நிர்வஹிப்பது கிருபையால் பிரமன் ருத்ரன் முதலியவர்களை ரக்ஷிப்பது முதலான
மேன்மையைக் காட்டும் காரியங்களால் உமக்கு என்ன பிரயோஜனம்
48-யத் தூரே மனஸோ யதேவ தமஸ பாரே யதத் யத்புதம்
யத் காலா தப சேளி மம் ஸூர புரீ யத் கச்சதோ துர்க்கதி
ஸாயுஜ் யஸ்ய யதேவ ஸூதி ரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதே மாத சமாம் நா ஸி ஷு –ஸ்ரீ குணரத்ன கோசம் –21-
தாயே எவருடைய மனத்திற்கும் எட்டாததாய் -பிரக்ருதிக்கு அப்பால் பட்டதாய் மிக அத்புதமாய் காலத்தால் மாறுபடாததாய்
தன்னை அடைய விரும்புமவர்களை தேவ லோகத்தையும் துர்க்கைதியாக நினைக்கச் செய்வதாய்
ஸாயுஜ்யத்தை அளிப்பதாய் என்னுடைய வாக்குக்கு எட்டாததாய் விஷ்ணுவினுடைய யாதொரு பரமபதம் உள்ளதோ
அது உனக்காகவே விளங்குகிறது என்று வேதங்கள் விளம்புகின்றன
49–ந தேவ லோகா க்ரமணம் நாம ரத் வமஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வா அபி லோகா நாம் காமயே ந த்வயா விநா –அயோத்யா –3-5-
நித்ய ஸூரிகள் வாழும் உலகான ஸ்ரீ வைகுண்டத்தில் வாழ்ச்சியையும் கைவல்யத்தையும்
உலகங்களின் ஐஸ்வர்யத்தையும் உன்னைப் பிரிந்த நான் விரும்ப மாட்டேன்
50-வாஸூ தேவே மநோ யஸ்ய ஜப ஹோமார்ச்சநா திஷு
தஸ்ய அந்தராயோ மைத்ரேய தேவேந்திரத் வாதிகம் பதம் =பலம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-6-41-
மைத்ரேயனே ஜபம் ஹோமம் அர்ச்சனம் முதலியவைகளில் எவனுடைய மனம் வாஸூ தேவனிடம் லயித்து
இருக்கிறதோ அவனுக்கு தேவேந்திரனாய் இருக்கை முதலிய பலங்கள் இடையூறாகவே ஆகின்றன
51-மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-
என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்
52-ஸம் ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம்
ஸந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஜ்ஞாநம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-87-
எந்த அறிவினால் தோஷம் ஏற்றதும் சுத்தமானதும் மிகவும் மலம் ஏற்றதும் ஒருபடிப்பட்டதுமான
அப் பர வஸ்து அறியப்படுகிறதோ காணப்படுகிறதோ அடையப்படுகிறதோ அதுவே ஞானம்
அதைக்காட்டிலும் வேறானது அஞ்ஞானம்
53-தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயா பரம் கர்ம வித்யாந்யா சில்பநை புணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-19-41
எந்தக் கர்மம் பந்தத்திற்குக் காரணம் அல்லவோ அதுவே கர்மம்
எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை
மற்ற கர்மம் சிரமத்திற்கே
மற்ற வித்யை சில்ப பாண்டித்யம் போன்றதே —
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply