ஸ்ரீ கீதா பாஷ்ய அம்ருதம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

“யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவேதரோ ஜனா:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகாஸ் தத் அநு வர்த்ததே “ || 3-21

ஸ்ரீ சங்கரர் ,
“ஸ: ச்ரேஷ்டா: யத் ப்ரமாணம் குருதே – லௌகிகம் வைதிகம் வா, லோக: தத் அநு வர்த்ததே –
ததேவப்ராமாணிக ரோதி இதி அர்த்த:” . என்றார்.
லௌகிக, வைதிக விஷயங்கள் இரண்டிலுமே
ஸாமான்யர் பெருமக்களால் எது ப்ரமாணமாகக் கொள்ளப் படுகிறதோ அதையே பின்பற்றுகிறார்கள் என்றபடி.

ஸ்ரீ ஆனந்த தீர்த்தர் இதை,
“யத் வாக்யாதிகம் ப்ரமாணீ குருதே – யதுக்த ப்ரகாரேண திஷ்யதி இதி அர்த்த:” என விளக்கினார்.
இவ்விரண்டு விளக்கங்களிலுமே “யத்-ப்ரமாணம்” என்னும் பகுதி “யத்” என்றும் “ப்ரமாணம்” என்றும் பிரிக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்வாமி இராமாநுசர்
தம் பாஷ்யத்தில் இதற்குத் தனியொரு ஏற்றமிகு விளக்கம் அருளிச் செய்கிறார்.
அவர் “யத் ப்ரமாணம்” என்பதை ஒரே பன்மைக் கூட்டுச் சொல்லாகக் (பஹு வ்ரீஹி சப்தம்) கருதி விளக்குகிறார்.
இந்த விவரங்களைக் காணுமுன் இச்லோகத்துக்கு ஸ்ரீ ஸ்வாமியின் உரையைக் காண்போம்:

ச்ரேஷ்ட: – க்ருத்ஸ்ந சாஸ்த்ரஜ்ஞாத்ருதயா அநுஷ்டாத்ருதயா ச ப்ரதித:

பெருமக்கள் என்போர் சாஸ்த்ரங்களைத் தெளிவாகக் கற்றுணர்ந்து, அதற்குத் தக்க மாசற்ற ஒழுக்கம் உடையோர்.

யத்யத் ஆசரதி தத்ததேவ அக்ருத்ஸ்ந விஞ்ஞான அபி ஆசரதி

சாஸ்த்ரங்களை நன்கு அறியாத ஸாமாந்யர் இப்பெருமக்களின் வழியையே பின்பற்றுவர்

அனுஷ்டீயமானம் அபி கர்ம ச்ரேஷ்டோ, யத் ப்ரமாணம் யத்-அங்கயுக்தம் அநுதிஷ்டதி
தத் அங்கயுக்தம் ஏவ அக்ருத்ஸ்ந வில்லோகோநுதிஷ்டதி

இவ்வாறு செய்யப்படும் கர்மங்களில் ஸாமாந்யர் பெருமக்களால் செய்யப்படும் கர்ம பாகங்களை மட்டுமே அனுசரிக்கிறார்கள்.

ஸ்ரீ திருப்பாவை இருபத்தாறாம் பாசுரத்தில் ஸ்ரீ ஆண்டாள்,
”மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்கிறாள்.
“வேண்டுவன” எனும் சொல்லே இங்கு “யத் ப்ரமாணம்” என்பதற்கு ஸ்ரீ ஸ்வாமியின் விளக்கமாய்ப் பொருந்துகிறது.

————————————

நான்கு நல்லோர்கள் காட்டப்படுகிறார்கள் – (1) ஆர்த்தா: (2) ஜிஜ்ஞாஸு: (3) அர்த்தார்த்தி (4) ஞாநி

எம்பெருமான் தன்னிடம் சரணம் புகுவோர் நான்கு வகைப் பட்ட அடியார்கள் என்கிறான்.
சரணம் புகுந்தோர் “ப்ரபத்யந்தே” என்றவன், இப்போது “பஜந்தே” என்கிறான்.
பஜந்தே என்பதை ஸ்ரீ சங்கரர், “சேவந்தே” = பணிபுரிவோர் என்று விளக்கினார்.
பக்தி, சரணம் புகுவது இரண்டின் உள்நோக்கம் பணிபுரிவது.
இந் நான்கு வகை நல்லோர்களுமே கிருஷ்ணனின் அடியார்களே.

இதற்கு விளக்கம் தருகையில், ஸ்ரீ சங்கரர், “ஆர்த்தா: = தஸ்கர வ்யாக்ர ரோகாதினா அபிபூதா:
ஆபன்ன: ; ஜிஞ்ஞாசு = பகவத் தத்த்வம் ஞாதுமிச்சதி ய: ; அர்த்தார்த்தி = தனகாம: ;
ஞானி = விஷ்ணோ ஸ்தத்வவித்“ என்றெழுதினார்.

ஸ்வாமி இவ்வாறு பக்தர்கள் நால்வகைப் படுவதன் காரணம் வேதாந்தத்தில்
மூன்று தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என்றிருப்பதே என நிறுவுகிறார்.

ஆத்மா, தாமே ஈச்வர ஸ்வரூபமான அசித்தை விரும்பித் தேடுகிறது,
இதிலேயே ஈச்வரனடியார்களின் வேறுபாடு தொடங்குகிறது. ஐச்வர்யத்தை தேடுவதில் இருவகைகளுண்டு –
ஒன்று முன்பு இருந்து தற்போது இழக்கப்பட்டுள்ளது (ப்ரஷ்டைச்வர்யம்),
மற்றது முற்றிலும் புதிய ஐச்வர்யம் (அபூர்வைச்வர்யம்). இப்பகுப்பு தனக்கும், ஈச்வரனுக்கும் பொருந்தாது.
ஏனெனில் கைவல்ய ப்ராப்தியோ பகவத்ப்ராப்தி மோக்ஷமோ நிரந்தரமானது,
அதை மீண்டும் பெறவோ இழக்கவோ முடியாது. அதைப் புதிதாகக் கேட்டுபெறலாம்.
ஆகவே இந்நான்கு பகவத் அடியார்களும் ப்ரஷ்டைச்வர்ய காமர், அபூர்வைச்வர்யகாமர், கைவல்யகாமர், பகவத்காமர் என்றாகிறார்கள்.

ஸ்வாமிக்கு இந்தத் தனிப்பெரும் விளக்கம் எங்ஙனம் பெற முடிந்தது?

திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் பக்தர்களை நால்வகையாகப் பகுத்ததிலிருந்து ஸ்வாமிக்கு இச்செம்பொருள் கிட்டியது.
முதல் இரு பாசுரங்களுக்குப்பின் மும்மூன்று பாசுரங்களில் இப்பொருள் வெளிப்படுகிறது.
ஒவ்வொரு மூன்று பாசுரமும் ஒருவகை பக்தரை விவரிக்கிறது.

பெரியாழ்வாரின் திருமுகத்தாமரையை உகப்பித்து மலர்த்தும் சூர்யன் “ஸ்ரீ பட்டநாத முகாப்ஜ மித்ரர்

———

உக்த் லக்ஷண-தர்ம சீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரண போஷநாதி கமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”–ஸாது

————————————————-

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ –
மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்ய ஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே
ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே
உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே
அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய வாத்ஸல்யஜலதௌ
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ

—————————

பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம் சொல்கிறது:

“மத் சித்தா மத்கதப் ப்ராணா போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “

ஸ்ரீ சங்கரர், “துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி, ரமந்தி-ரதிம் ச ப்ராப்னுவந்தி ப்ரிய ஸங்கத்யா இவ”
(துஷ்யந்தி என்பது ஸந்தோஷத்தை அடைவது, ரமந்தி என்பது விரும்பிய பொருளை அடைவது)

இதற்கு ஸ்வாமியின் வ்யாக்யானமாவது
“வக்தார: தத்வசநேந அநந்யப்ரயோஜநேந துஷ்யந்தி | ச்ரோதாரச்ச தச்ச்ரவணேந அநவதிகாதிசயப்ரியேண ரமந்தே |”.
ஸ்வாமி இச்லோகத்துக்கு அருளிய விரிவுரை தன்னிகரற்றது

இவ்விளக்கம் மிகச் சீரியது. ஏனெனில் இது ச்லோகத்திலுள்ள இரு சொற்களையும் விளக்குகிறது.
க்ருஷ்ணன் “போதயந்த: பரஸ்பரம்” என்றான். அவர்கள் பரஸ்பரம் என்னைப் பற்றியே எழுகிறார்கள்.
அவன் மேலும் , “மாம் நித்யம் கதயந்தி” என்கிறான். அவர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள்.
இந்தப் பரஸ்பர பேச்சுப் பற்றிய விவரணத்தில், ஒருவர் பேசுகிறார், மற்றவர் கேட்கிறார்.
ஒருவர் வக்தா, மற்றவர் ச்ரோதா. இருவரும் தத்தம் நிலையை மாற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
ஆகவே, இருவருமே பேசும் ஆனந்தமும் அடைகிறார்கள், கேட்கும் ஆனந்தமும் அடைகிறார்கள்.

வேதாந்த தேசிகர் தம் தாத்பர்ய சந்திரிகையில் “கதாயா ச்ரவணயோ ஏகச்மின்னேவ கால பேதேன ஸம்பாவிதவத்” –
இருவரும் பேசுவதும் கேட்பதும் வெவ்வேறு காலங்களில் நடப்பன என்கிறார்.

நான்முகன் திருவந்தாதியில்,
“தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் …..போக்கினேன் போது” என்று அருளினார்.
தெரிக்கை என்பது தெரிவிக்கை அல்லது பேசுதல் எனப் பொருள் படும்-
துஷ்யந்தி – கேட்டும் எனில் காதால் கேட்டும். ரமந்தி: – போக்கினேன் போது என்பது இதுவே
அவர் தம் நித்ய வியாபாரமாய் இருந்தது எனக் காட்டுகிறது. மாம் நித்யம் கதயந்தா.
அதே பாசுரத்தில் ஆழ்வார், “தரித்திருந்தேனாகவே” – இதைச் செய்தே நான் உயிர் தரித்தேன் என்கிறார்.
“மச்சித்தா மத்கதிப் ப்ராணா என்பதை ஸ்வாமி
மயா விநா ஆத்மா தாரணம் அலாபமானா: – நானின்றி தரித்து உயிர் வாழ மாட்டாதவர்கள் என்றார். .

——————-

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading