ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -11-

பதினோராவது அத்யாயம் -தந்த்ர அத்யாயம்
தந்திரம் என்பது ஒரு கர்மத்தை ஒரே தடவை அனுஷ்டிப்பதால் இரண்டு காரியங்களுக்கு
உபயோகப்படுத்துவத்தைச் சொல்லும்
தந்திரம் -ஸக்ருத் க்ருதம் என்ற பொருள்
ப்ரஹ்ம நிஷ்டர் நித்ய கர்மங்களை அனுஷ்டிப்பது அவர்கள் பக்தி நிஷ்டைக்கும் அங்கம் ஆகும் –
பக்தி யோகத்துக்காக ஒரு முறை அனுஷ்டிப்பது வர்ணாஸ்ரம தர்மத்துக்காக
ஒரு முறை அனுஷ்டிப்பது என்பது இல்லை
ஸர்வதாபி த ஏவ உபய லிங்காத -என்னும் ப்ரஹ்ம ஸூ திறத்தால் இது காட்டப்பட்டது
ஒரே தடவை செய்வது தந்திரம் -பல தடவை செய்வது ஆவ்ருத்தி
ஏழு முதல் பத்து அத்தியாயங்கள் வரை விக்ருதிகளில் ப்ரக்ருதிகளில் இருந்து
தர்மங்களை வாங்கிக் கொள்வதைப் பற்றின விசாரம்
தந்திரமா ஆவ்ருத்தியா என்ற விசாரம் ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டு கர்மங்களுக்கும் பொது

தானியத்தை உலக்கையால் உரலில் குத்தி உமியை எடுக்க வேணும் என்பது இரண்டிலும் உண்டு –
ஒரு தடவையா பல தடவையா என்ற விசாரம் இரண்டுக்கும் பொது
ஒரு தடவை குத்தினால் உமி போவது இல்லை -உமியைப் போக்கி மாவாக்கி புரோடாசத்தைத் தட்ட வேணும்
இந்த மாவாக்கும் த்ருஷ்ட ப்ரயோஜனத்துக்கு உலக்கை குத்துக்களை திரும்ப திரும்ப
மாவாக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்ய வேணும்
ப்ரயாஜன்கள் என்னும் அத்ருஷ்ட பிரயோஜனமாக அங்கங்களை ஒரு தடவை செய்தால் போதும் –
அது அத்ருஷ்டத்திற்காக
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -அத்ருஷ்ட ப்ரயோஜனத்துக்காக சாஸ்திரம் செய்ய விதிப்பதை
ஒரு தடவை செய்தால் போதும் என்பது சாமான்ய நியாயம்
கார்ய கர்மங்களை பல தடவை செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -பிரபத்தி என்னும் சாஸ்த்ரார்த்துக்கு ஒரு அனுஷ்டானம்
ஆவிருத்திர் அஸக்ருத் -என்று பக்தி ஸ்மரணத்துக்கு யாவதாயுஷம்
ஆவ்ருத்திக்க வேண்டும் என்று ஸூத்ரம் –

நான் பாபம் செய்தாலும் தந்திரமாக ஒரு தடவை செய்து விட்டு விடுகிறேனோ –
திரும்பவும் திரும்பவும் ஆவ்ருத்தி செய்கிறேனே என்று
தந்திரம் ஆவ்ருத்தி என்ற பத்தாவது அத்யாய விஷயத்தை இங்கே ஸூசிப்பது ஸ்பஷ்டம் என்பது
ரசிகர் ரசிக்கத் தக்க விஷயம்
புன புன கரணம் என்பது தந்த்ரத்துக்கு எதிர்த்தட்டான ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தமான அத்ருஷ்டத்துக்கு
அனுஷ்டிப்பது அல்லவோ ஒரே தடவை என்னும் ஸக்ருத் மரியாதை
ருசியினால் ஸ்வ இச்சையினால் அதிக சற்று இன்பத்துக்காக பாபம் செய்கையில் அதில்
ஆவ்ருத்தியே போக்யமாய் இருக்கும் என்று பாபத்தை புன புன கரணத்தைக் கூறுகிறார்
பதினோராம் அத்யாயம் நான்காம் பாதத்தில்
தஸ்ய புன பிரயோகாத் மந்த்ரஸ்ய ச தத் ஸ்மரண்த்வாத் புன பிரயோக என்று
வேத மந்த்ரங்களை -ப்ரோக்தங்களை –
மந்த்ர அப்பியாச கர்மண புன பிரயோகாத் -என்றது முதலான ஸூ த்ரங்கள் விசதம் ஆக்குகின்றன –

பாபே க்ருதே யதி பவந்தி பய அனுதாப –
லஜ்ஜா புன கரணம் அஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதி இஹ பயாதிலேச-
தஸ்மாத் புன புன அகம் யதிராஜ குர்வே–11-

யதிராஜ-யதிராஜனே
பாபே க்ருதே -பாபம் செய்யப் பட்ட அளவிலே
பய அனுதாப -லஜ்ஜா-என்ன தீங்கு விளையும் என்கிற பயம் -தீமை செய்து விட்டோமே
என்கிற பச்சாதாபம் -வருத்தம் – வெட்கம் ஆகிய இவை
யதி பவந்தி -உண்டாகுமே யானால் -இருக்குமே யாகில்
அஸ்ய -இவ்விதமான செய்கையை
புன கரணம் -திரும்பவும் செய்வது என்பது
கதம் கடேத-எப்படிக் கூடும்
மோஹேந –மோஹத்தால் -மதி மயக்கத்தால்
மே -எனக்கு
இஹ-இந்த விஷயத்தில் –பாபம் செய்தலில் –
பயாதிலேச-பயம் முதலியவைகள் ஈஷத்தேனும்
ந பவதி -உண்டாகிறதே இல்லை –
தஸ்மாத் -அதனால்
அஹம் புன புன அகம் குர்வே-நான் திரும்பவும் திரும்பவும் தீங்கையே செய்கிறேன்

பாபே க்ருதே
க்ருதே பாபே அநு தாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ் யைகம்
ஹரி ஸம் ஸ்மரணம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6 ஸ்லோகத்தை ஸ்மரித்து
அதே பதங்களுடன் தொடங்குகிறார் –
ஆனால் ருஷி பேசிய கிரமப்படி பாவியேனும் பேசலாமோ என்று நினைத்து க்ரமத்தை மாற்றுகிறார்
அநு தாபம் உள்ளவனுக்குத் தான் ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் -ஹரி ஸ்மரணம் ப்ராயச்சித்தமே –
ஆனாலும் அனுதாபம் இருந்து தீர வேணும் -என்று ஸ்ரீ விஷ்ணு சித்தர் வியாக்யானம் –

க்ருதே என்றால் ஒரு தடவை செய்யப்பட அளவில் என்று ஆகலாம் –
ஒரு தடவை செய்தால் மறு தடவை செய்ய வேண்டியது இல்லை என்கிற நியாயம் தர்ம அனுஷ்டான விஷயம்
பாப்பம் செய்வது சாஸ்த்ரார்த்தம் அல்ல -பாபத்தை ஒரு தடவை கூட செய்யக் கூடாது சாஸ்திரத்தை மீறி
ஸ்வதந்த்ரனாகச் செய்யத் துணிந்த போது கூட ஸக்ருத் என்கிற சாஸ்த்ர நியதி உண்டோ என்பது இதில் ரஸம்

பய அநு தாப லஜ்ஜா
சிஷை வருமோ என்கிற பயம்
பாப்பம் செய்கிறோமே என்கிற பச்சாதாபம்
பாபியான பான் எங்கனே ஜனங்கள் முகத்தில் விழிப்பது -தலை காட்டுவது என்கிற வெட்கம்
திக சுசி மவி நீதம் நிர்த்தயம் -நிர்ப்பயம் -மாமலஜ்ஜம் –என்கிறபடி
பாப்பம் செய்தும் பயமும் அனுதாபமும் லஜ்ஜையும் இல்லாது இருப்பது தீமை
பாபம் செய்ததும் லஜ்ஜையும் அனுதாபமும் பின்னொரு தடவை பாபம் செய்கிறது இல்லை
என்கிற உப ரதியும் நிறுத்தலும் -வேண்டும் –

அநுதாபாது பரமாத் பிராயச்சித்த உன் முகத்வத -என்பர்
இவை பாபத்தை லகு படுத்திக் கழிக்க உபாயங்கள்

யதி பவந்தி
உண்டாகுமே யானால்

அஸ்ய
இந்தப் பாபத்தை
பாபத்தை இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூட நா எழும்ப வில்லை
பொதுவான பேச்சே இங்கு -இன்னது என்று குறிப்பிட்டு பேசக் கூடாதலால்
இது -என்று பொதுவான பேச்சு 0பேதை பாலகன் அது ஆகும் போல்
இது என்பதால் செய்த பாபம் எதிரே நிற்கிறது என்றும் பொருள் கிடைக்குமே –

புன கரணம்
இரண்டாவது தடவை செய்தால் ஆவிருத்தி -நினைப்பதோடு நிற்காமல் செய்து தீருவது இங்கே புன கரணம்
நான்காவது பாதத்தில் புன புன அகம் யதிராஜ குர்வே-என்கிறார்

கதம் கடேத
எப்படிக் கூடும்
பயம் அனுதாபம் லஜ்ஜை இவைகள் ஒருந்தால் அதை திரும்பவும் செய்வாரோ
மறுபடியும் மறுபடியும் செய்வதால் நிறுத்துவதற்குக் காரணமான இவற்றின் லேசமும் இல்லை என்று தீர்மானம்
விருத்த கார்ய ஸத்வாத் காரணா பாவ –வ்யாபக விருத்தோ பலப்தி
பாபத்தின் உப ரதி -நிறுத்துதல் -என்றகார்யம் இல்லாததால் நிறுத்துவதற்குக் காரணங்களான
இவைகளின் லேசமும் இல்லை என்பது திண்ணம் –

மோஹேந
மோஹத்தால்
பாப ருசி வெறி மயக்கத்தால் விவேகம் இருள் மூடிப்போய்
புகையால் அக்னி போலும்
அழுக்கால் கண்ணாடி போலும்
கர்ப்பப்பையினால் கர்ப்பம் போலும்
ஞானம் மூடித் தலை எடுக்க மாளாமல் அழுந்திப் போய் விட்டது
பாப அனுதாப லஜ்ஜைகள் ஏன் உண்டாக வில்லை என்று கேட்பீரோ
அவை உண்டாகாமல் செய்யும் காரணம் மோஹம் என்னும் இருள் சூழ்ந்து இருப்பதே –
பாபா ருசி என்னும் விகாரம் வெறி மோகம் மண்டிப் போய்விட்டது –

மே
எனக்கு

பயாதிலேச
மூன்றும் உண்டாக வேண்டாம்
ஒன்றில் துளியாவது உண்டாக வில்லையே

ந பவதி இஹ –
இந்த தர்ம க்ஷேத்ரமான கோயிலிலும்
ஸந்யாசியான எனக்கும்
ஸத்யம் தலை எடுக்காமல் மோகம் மூடுகிறதே
பீட் யந்தே க்ருஹீண கதம் நு -சம்சாரிகள் என்ன பாடு படுவரோ –

தஸ்மாத் புன
அதனாலே அல்லவோ
இம்மூன்றின் லேசமும் இல்லாத காரணத்தில் அல்லவோ என்று அன்வயம்
புன –
காரணம் சம்வபிக்குமோ என்று முதலில் கேட்டதுக்கு
புன
கரணம் மட்டும் அல்ல
புன புன
கரணமும் சம்பவிக்கலாம் என்பதை ஸ்தாபிப்பதாகும்

புன புன
திரும்பவும் திரும்பவும் -இத்தனை தடவை என்று கணக்கு இல்லை
சப்தத்தால் இரண்டு தடவை வீப்ஸை செய்ததற்கு எண்ணற்ற அநேகம் தடவைகள் என்று பொருள்

அகம் குர்வே
பாபத்தைச் செய்கிறேன்
என் சந்தோஷத்துக்கே செய்கிறேன்
செய்து சந்தோஷிக்கிறேன்
ஆத்மநே பத பிரயோகம் அழகு –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading