ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -5-

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரய அர்த்த நிஷ்டாம் –
மம அத்ர விதர அத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே-
ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –5-

யதீந்திர-யதிகளில் ஸ்ரேஷ்டரே
நாத-ஸ்ரீ வைஷ்ணவ பிரபன்ன குலத்திற்கு ஸ்வாமியே
யதீந்திர நாத-யதி ஸ்ரேஷ்டர் களுக்குள் தலைவரே
அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரய அர்த்த நிஷ்டாம் -எட்டு எழுத்து என்கிற பெயரை உடைய
ஸ்ரேஷ்ட மந்திரத்தில் உள்ள மூன்று பதங்களின் பொருள்களில் வழுவாத நிஷ்டையை
மம அத்ர விதர அத்ய -எனக்கு -இங்கேயே -இப்பொழுதே -தானம் செய்து அருள வேண்டும்
ஆத்ய -என்று பதம் பிரித்தால் -ப்ராஸீம் பதவீம் யதிராஜ த்ருஷ்டாம் -என்றபடி
இந்த ப்ராஸீனமான தர்சனத்தை மஹரிஷியாக ஸாஷாத் கரித்த முதல்வரே -என்றும்
நாத உபஞ்ஞன மான இந்த தர்சனத்தை -த்ராதம் சம்யக் யதீந்த்ரை -என்று அகில தம தர்சனம் ஆகும் படி
நன்கு பரி ரக்ஷணம் செய்து அருளினை ப்ரதானரே -என்று கொள்ள வேண்டும்
அஸ்ய மம புத்தி -இந்த -சிஷ்டாக்ர கண்யர் அல்லாத என்னுடைய புத்தி
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே—சிஷ்டர்களில் உயர்ந்தவராக மதிக்கப் படுபவரால் நெருங்கி
சேவிக்கத் தக்க உம்முடைய தாமரை திருவடி இணையை
ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய புத்தி –எக்காலமும் அநுபவித்து அநுபவித்து ஓயாமல்
மகிழ்ச்சியோடு இருக்க அருள வேணும் –

அஷ்டாஷராக்ய மநுராஜ
அஷ்டாக்ஷரம் என்கிற ஆக்யை-பெயர் உடைய மூல மந்த்ரம் –
மந்த்ர ராஜம் என்பது நரஸிம்ஹ விஷயமான மந்த்ர ஸ்லோகத்துக்கு ரூடமான பெயர்
இங்கு மந்த்ர ராஜம் என்ற பத பிரயோகம் இருந்தால் அத்தையே குறிக்கும்
மந்த்ரம் பொருளில் -மநு சப்தம் -பிரயோகித்து மநு ராஜ -அஷ்டாக்ஷரம் -மந்திரங்களில் ஸ்ரேஷ்டம் புஷ்கலம் –
என்பதை காட்டவே மநு ராஜ ஸப்த பிரயோகம்

வைவஸ்தோ மனுர் நாம மான நீயோ மநீஷிணாம் ஆஸீன் மஹீ ப்ருதாம் ஆத்ய
பிரணவ சந்தஸா மிவ -ரகுவம்ச முதல் ஸ்லோகம்
விவஸ்வான் ஸூர்ய குமாரர்களில் மனு ராஜாக்களுக்குள் முதல்வர் மூல பூதர் -பிரணவம் வேதங்களுக்கு மூலமான
ஆதி போல் மனு சிஷ்டர்களான மநீஷி களுக்கு மான நீயரான சிஷ்டாக்ர கண்யர் –
மேலும் அவர் சிஷ்டாக்ர கண்யர் களான மனீஷிகளால் ஸேவ்யர் -காளி தாசர் வாக்கியமும் ஸ்வாமி நெஞ்சில் உள்ளது –
இந்த மநுராஜம் மநு ராஜ்யரைப் போல் ஆத்யமான மூல மந்த்ரம் –

மநு ராஜருடைய ஸ்ம்ருதி தொடக்கத்தில் மஹரிஷிகள் கூடி அவரை சேவித்து பரி ப்ரஸ்னம் புண்ணியத்தில் அவர்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -ஆபோவை நர ஸூநவ தாய தஸ்யா யநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதா -என்றும்
ஸோபித்யாய சரீராத் ஸ்வாத் ஸுஸ்ருஷுர் விவிதா ப்ரஜா -அப ஏவ சசர்ஜா தவ் தாஸூ வீர்ய மவாஸ்ருஜத்-என்ற
ஸ்லோகங்களால் நாராயண சப்தத்தின் உத்பத்தியையும்
ஆதி காரணமான நாராயணன் அநேக விதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்ப மாத்ரத்தால்
முதலிலே தன் சரீரத்தில் இருந்து அப்புக்களை ஸ்ருஷ்டித்தார் -என்று
நாராயணன் தன் சரீரத்தில் இருந்து சித் அசித்துக்களை ஸ்ருஷ்டிக்கிறார் என்ற சித்தாந்தத்தையும் கூறினார் –
இவ்வாறு மநு ஸ்பஷ்டமாகக் கூறியதை ஸூத்ர காரரும் பிரகிருதி அதிகரணத்தில் -முதல் அத்யாய முடிவில் –
அபித்யோ பதே சாச்சா -என்கிற ஸூ த்ரத்தில் பராமர்ச்சித்து ஹேதுவாக அமைத்தார் –
மற்ற ஸ்ருஷ்டி வாக்கியங்களில் ஐஷத –அகாமயத -போன்ற கிரியா பதங்களால் ஸங்கல்பத்தைப் பேசியுள்ளது –
ஸூத்ரகாரர் படித்த அபித்யா சப்தம் இந்த மநு ஸ்லோகத்தில் உள்ளது –

இது ஸூ த்ரகாரர் ஹ்ருதயத்தில் அபித்யா ஸூத்ரத்தில் இருப்பது ஸ்வ ரஸம்
ராம சந்திரருடைய மநு ஸ்ம்ருதி வியாக்யானத்தில் -அப்புக்கள் என்கிற நர ஸூ நுக்களான நாரங்கள்
நரனாகிய பரமாத்மாவினிடம் இருந்து உண்டாகும் ஜீவ ஸமூஹங்கள் -என்று கூறி உள்ளார் –
ரஹஸ்ய கிரந்தங்களில் நாராயண பத உத்பத்தி பரமான மநு ஸ்ம்ருதி ஸ்லோகம் முக்ய பிரமாணமாக
பூர்வர்கள் காட்டி அருளி உள்ளார்கள் –

ஆம்னாய யுக்தம் பதம் அவ்யதாம் ஸார்த்தம் ஆச்சார்ய தத்தம் -என்கிறபடி ஆச்சார்ய உபதேஸத்தாலே
பதங்களின் ஞானம் பெற்று அவற்றுக்குத் தக்க அனுஷ்டானமும் பெற வேண்டும் என்று பிரார்திக்கிறார்
இங்கு பதம் என்பதற்கு வாக்கியம் என்றும் அபிப்பிரேதம்
ஒவ்வொரு பதமும் ஒவ்வொரு வாக்யமாகக் கொண்டு மூன்று வாக்கியங்களையும் ஏக வாக்யமாகக் கொண்டு
மஹா வாக்யமாகவும் யோஜனை உண்டு –

வாக்ய ஏக வாக்கியமாக பொருள் காட்டியதில் கண்டா வாக்கியங்களில் ஒவ்வொன்றையும் ஓர் பதம்
என்று மீமாம்ஸகர் வியவஹரிப்பர்
மீமாம்ஸையில் ஐந்தாவது அத்யாயம் க்ரம அத்யாயம் என்று பெயர்
சுருதி அர்த்தம் பாடம் முதலிய ஆறு க்ரம விஷயமான பிரமாணங்கள் அங்கெ கூறப்பட்டுள்ளதில்
இங்கு -பத த்ரய அர்த்த-என்னும் இடத்தில் பதம் -என்று பதபாடம் பொருளில் மூன்று பாதங்களின் பாத க்ரமத்தையும்
அர்த்த -என்பதால் அர்த்த க்ரமத்தையும்
ஆக்யை-என்பதால் ஸ்ருதியாலேயே தம் கண்டத்தினில் ஸ்பஷ்டமாக க்ரமத்தை ஆக்யானம் செய்யும்
ஸ்ருதி க்ரமத்தையும் ஸூசிக்கிறார் –
திரு மந்த்ர மூன்று பாதங்களின் பொருள் வர்ணனத்தில் பத பாட க்ரமத்தை அநுசரிப்பதும் உண்டு –
அத்தை மாற்றி அர்த்த க்ரமத்தை அனுசரித்தும் உண்டு

இந்த ஸ்லோகத்தில் முன் பாதியில் நாராயண நிஷ்டையை திரு மந்திர அர்த்தத்தின் நித்ய அனுசந்தான
மூலமாக அளிக்க வேணும் என்று
எம்பெருமானாரை ஆச்சார்யராக வரித்து பிரார்த்தித்து விட்டு பிறகு ஆச்சார்யரான எம்பெருமானார்
திருவடித் தாமரைகளில் ஹர்ஷத்தோடே அனுபவத்தை பிரார்த்திக்கிறார்
பரீஷ்ய லோகான் கர்மஸிதான் – -என்கிற முண்டக சுருதியில்
ஸமித் பாணியாய் ப்ரஹ்ம நிஷ்டரான ஸ்ரோத்ரியரான குருவையே அபி கமனம் பண்ணி
அவரிடம் தாத்விகமாக ப்ரஹ்ம வித்யையை ஸ்ரவணம் செய்து நன்கு பெற வேணும்
என்று கூறியுள்ள க்ரமத்தில் ஆச்சார்ய உபாஸனம் முந்தியும் அவரிடம் இருந்து ப்ரஹ்ம வித்யா நிஷ்டை பெறுவது
பின்புமாகும் என்னும் கிரமத்தை முன் பின்னாக மாற்றி உள்ளது போல் காண்கிறது

நன்கு பராமர்சித்தால் இங்கு அப்படி இல்லை என்று தெளியலாம்
திரு மந்த்ரார்த்தத்தைத் தெளியச் செய்து ப்ரஹ்ம வித்யை யாகிய அதில் எனக்கு ஸந்ததமும் நிஷ்டையை
தேவரீர் விதிப்படி கொடுக்க வேண்டும் என்று சாதிப்பதாலேயே முன்பே குருவை அபி கமநம் செய்து
வித்யா தான பிரார்த்தநம் செய்ததாகத் தெளிவாகிறது –
அஷ்டாக்ஷர பத த்ரயார்த்தம் ப்ரஹ்ம வித்யையே ஆகும்
சாரீரகம் நான்கு அத்தியாயங்களும் இம்மந்திரத்தினுடையவும் அதிலும் நாராயண பதத்தினுடையவும் பொருளில்
அடங்கி உள்ளது என்று ரகஸ்ய கிரந்தங்களில் –
காரணத்வம் -அபாத்யத்வம் -உபாயத்வம் -உபேயதா -இதி சாரீரக ப்ரோக்தம் இஹ சாபி வியவஸ்திதம்
என்று விளக்கப் பட்டுள்ளது –
மநுராஜர் தம் ஸ்ம்ருதி தொடக்கத்திலேயே நாராயணனே தன் சரீர விசிஷ்டனாய் ஜகத்துக்குக் காரணம்
ஆகிறான் – என்பதைக் காட்டினார் என்பதை இங்கே மநுராஜ ஸூஸித்தத்தை முன்பே பார்த்தோம் –

நாராயண நிஷ்டை சித்திக்கையில் அவருக்குச் செய்யும் கைங்கர்ய ஆனந்தம் தத் அபிமத பர்யந்தம் ஆக்கி
பாகவத கைங்கர்யத்தில் அதிலும் பகவானைப் போல்
முக்தியிலும் நித்ய சேஷித்வத்தை யுடைய ஆச்சார்யன் இடத்தில் புருஷார்த்த காஷ்டையாக-எல்லையற்ற ஹர்ஷமாக –
பலத்தில் ஸித்திப்பதை இங்கே இரண்டாம் பாதியில் காட்டப் பட்டுள்ளது –
முன் பாதியில் பகவத் நிஷ்டையைப் பிரார்த்தித்து -பின் பாதியில் ஆச்சார்யர் இடம் நித்ய நிஷ்டையை பிரார்த்திப்பதில்
நித்யமும் உம்முடைய திருவடித் தாமரைகளை அனுபவித்து அனுபவித்து என்னுடைய புத்தி மிகவும்
ஹர்ஷத்தோடு கூடி இருக்க வேணும் -என்று
பிரார்த்திப்பதால் ஆனந்தம் என்னும் புருஷார்த்தத்தின் அதிகப் பெருக்கை விளக்குகிறார் –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் -ஸ்தோத்ர ரத்னம் போல் –
ஈஸ்வர தேவனைப் போல் ஆச்சார்ய தேவனையும் உபாஸிக்க வேண்டும் என்று இருவருக்கும் உள்ள
சத்ருசமான அத்புத மஹிமைகளை
அஞ்ஞான த்வந்த ரோதாத் அக பரி ஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத் -ஜன்ம ப்ரத்வம்ஸி ஜன்ம பிரத கரி மதயா
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத் நிஷ ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யாத் நியதர சதயா நித்ய சேஷித்வ யோகாத் ஆசார்ய
சத் ப்ரப்ரத்யு பகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோகம்
ஸ்வாமியின் வியாக்யானங்களில் உதாஹரிக்கப் பட்டுள்ளது –

எம்பெருமானார் இடத்தில் இவர் சாஷாத்தாக ஆஸ்ரயிக்கா விடிலும் –
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ வஸ்து தாம் உபயா தோஹம் யாமுநேயம் நமாமி தம் -என்கிற
ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோக வியாக்யானத்தில் அவதாரிகையில் துரோணாச்சார்யார் இடம் ஏகலவ்யன் போல்
ஸ்ரீ பாஷ்யகாரர் ஆளவந்தார் திருவடிகளை த்யானம் செய்து கொண்டே அவருக்கு சிஷ்யராகி வஸ்து ஆனதாக
அனுசந்தித்தாக காட்டியது போல் எம்பெருமானார் விஷயத்தில் இவருக்கு சிஷ்யத்வ அபிமானம் –

பத்யு ஸம் யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீ ரயோ சம்பந்தேன சமித்யமான
விபவான் தன்யாம் ஸ்தான்யான் குரூன் -நியாய பரிசுத்தி மங்கள ஸ்லோகத்தில்
எம்பெருமானார் திருமுபை சம்பந்தத்தால் முன்னோர்களும் திருவடி சம்பந்தத்தால் பின்புள்ளோரும் தன்யரானார் என்றும்
இவரே நடு நாயகமாய் எக்காலத்திலும் திகழ்கிறார் என்றும்
அமுநா தப நாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம்
ஹ்ருத யங்க மா விபாதி -யதிராஜா சப்தாதி ஸ்லோகம்
இவருடைய திவ்ய ஆஜ்ஜை அங்கும் இங்கும் செல்லும் என்பர் –
இவர் விஷயத்தில் எத்தனை பூஜித்தாலும் புகழ்ந்தாலும் மிகை யாகாதே

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே-ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –என்ற இடத்தில்
அஸ்ய மம என்பதால்
தாம் சிஷ்டர் அல்லர் என்றும்
அதிலும்-அக்ர கண்யர் அல்லர் என்றும்
நைச்ய அனுசந்தானம் வியஞ்ஜிதம்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading