ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -3-

முதல் ஸ்லோகத்தில் ஸ்ரீ மாதவர்கள் திருவடிகள் சடகோபர் திருவடிகள்
எம்பெருமானார் திருவடிகள் ப்ரஸ்த்துதம்
இரண்டாம் ஸ்லோகத்தில் கோதை பட்டர் பிரான் பரகாலர் முதலிய ஆழ்வார்கள்
திருவடிகளும் ஸ்ரீ கூர நாதனுடைய சென்னியும் சேர்ந்தன
இங்கு கூர நாதன் பிள்ளான் முதலிய சிறு மா மானிடராய் ஆச்சார்யர்கள் திருவடிகள்
நிரந்தரம் பஜநம் பிரார்த்திக்கப் படுகிறது –
எம்பெருமானார் திருவடிகளைப் பணிந்த ஆச்சார்யர்களின் திரு வடிகளைப் பஜிப்பது
எம்பெருமானார் தியான பாரமான விம்சதி என்னும் பாவனையில் ஏக ரஸமாகச் சேருகிறது

மீமாம்ஸை மூன்றாம் அத்தியாயத்தில் சேஷ சேஷி பாவ விசாரணை –
சேஷ சேஷி பாவம் தானே நம் சித்தாந்தம் -ததீய சேஷத்வம் தத் சேஷத்துவத்துக்கு அங்கம் –
சேஷி பரம்பரை தாழத் தாழ கீழ்ப் பர்வத்தில் சேஷத்வம் ஸ்வரூபத்துக்கு மிகவும் ஏற்கும்
ஸ்ருதி லிங்கம் வாக்கியம் முதலிய பிரமாணங்கள் கர்ம மீமாம்ஸையில் சேஷ சேஷி பாவ நிர்ணாயகம்
வாசா என்பது நிரபேஷ கண்டாவரமான சப்தம் என்னும் ஸ்ருதி பிரமாணத்தை ஸூ சிக்கும்
ஸ்ருதியினால் சேஷித்வம்
வாக்கினால் -வாக்யத்தால் சேஷத்வம்
லிங்க ப்ரமாணத்துக்கு ஐ ந்தர்யா கார்ஹ பத்யம் உப திஷ்டதே என்னும் பிராமண வாக்கியத்தையும்
நேந்த்ர சச்ச ஸதா சஷே -என்கிற இந்த மந்திரத்தையும் உதா ஹரிப்பர் –

வச நாத்து அயதார்த்தம் ஐந்த்ரீ ஸ்யாத் -என்ற இரண்டாம் பாதம் இரண்டாம் அதிகரணத்தில் –
வசனம் -என்னும் ஸ்ருதியாலே இந்திரனை ஸ்துதிப்பது போல் உள்ள
மந்த்ரத்தைச் சொல்லி கார்ஹ பத்யம் என்னும் அக்னியை உபஸ்தானம் பண்ண வேண்டும் –
மந்திரத்தில் உள்ள இந்த்ர பதத்துக்கு அமுக்யமாக அக்னி பரமாகப் பொருள் கொள்ள வேண்டும்
என்று சித்தாந்தித்தார்கள் –
அக்னவ் வசன சாமர்த்யாத் விநியோக பிரதீயதே நாத்யந்தம சமர்த்தத்வம் கௌண சாமர்த்ய சம்பவாத் –
என்று அங்கே வார்திகம்

இந்த ஸ்லோகத்தில் -யதீந்த்ர -என்று இந்த்ர சப்தத்தை -கௌண மாக -அமுக்யமாக -பிரயோகிப்பதாலும்
ஸ்ருதி லிங்க பலாபலாதி கரணத்தை ஸூசிக்கிறார் –
அங்கங்கள் கரணங்கள் சாதனங்கள் -இங்கே மூன்று கரணங்களாலும் கூரநாதர் பிள்ளான் முதலான பிரதான குருக்கள்
யதிராஜர் திருவடித் தாமரை நிரந்தரம் முடி சூடி உபாசித்தார்கள் -என்கிறார் –

அங்க அத்யாயமான மூன்றாம் அத்தியாயத்தை அனு சரிக்கும் மூன்றாம் ஸ்லோகத்தில்
மூன்று கரணங்களாலும் ஏக ரீதியாக ச ரூபமாக பரம ஆர்ஜவத்தோடு ஆச்சார்ய உபாசனம் செய்தார்கள் என்கிறார் –

உபாசனத்துக்கு கரண த்ரயங்களும் அவற்றின் ஸாரூப்யமும் அங்கம் ஆகும் –
எம்பெருமான் திருவடிகளை உபாஸித்த ஆச்சார்யரின் திருவடிகளை உபாஸிப்பது
எம்பெருமான் திருவடிகளை உபாஸிப்பதுக்கு அங்கம் –
அங்கங்கள் பிரதானத்துக்கு அனுக்ராஹம் என்பர் மீமாம்ஸகர் -இந்தக் கிரமத்தில் எம்பெருமானார்
அடி பணிந்து உய்ந்த ஆச்சார்யர் பாத சேவை எம்பெருமான் பாத சேவைக்கு அனுக்ராஹம் ஆகும் –
அமானித்வம் என்று தொடங்கிப் படித்த 20 சாதனங்களில் ஆச்சார்ய உபாசனம் ஓன்று
முண்டக உபநிஷத்தில் -தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹி அர்ச்சயேத் -என்று ப்ரஹ்ம நிஷ்டரை பூஜிப்பதை விதித்து
உடனே அடுத்த மந்திரத்தில்
ச வேத ஏதத் பரமம் ப்ரஹ்ம தாம -என்று அப்படிப் பூஜிப்பவன் பர ப்ரஹ்மத்தை அறிவான் என்று கூறப்பட்டது –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம்
பாதா நு சிந்தன பர சததம் பவேயம் –3-

யதீந்திர -யதித் தலைவனே
வாசா -வாக்கினாலும்
மநஸா -மனத்தினாலும்
வபுஷா ச -காயத்தினாலும் கூட
யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் -உம் திருவடித் தாமரைகளை
பஜதாம் -இடைவிடாமல் உபாசிக்கும்
குருணாம்-ஆச்சார்யர்களான
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் -கூரத்தாழ்வான் திருக்குருகைப் பிரான் பிள்ளான்
முதலிய ஆதி புருஷர்களின்
பாதா நு சிந்தன பர –திருவடிகளை அனுஸ்யூதமாக ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு
சததம் பவேயம் – சர்வ காலமும் இருப்பேனாக

வாசா
வாங்கினாலும்
மநோ வாக் காயங்கள்
மனஸா வாஸா ஹஸ்தாப்யாம்
காயேந மனஸா வாசா
இங்கு வாஸா -என்று முதலில் வைத்ததுக்கு மூன்று காரணங்கள் –
1- ஸ்ருதி லிங்க வாக்யாதி ப்ரமாணங்களில் சப்தம் ஸ்ருதி என்பதை முதலிலேயே காட்ட வாஸா என்று தொடங்குகிறார்
வாஸா என்பது வாக்யத்தையும் சொல்லுமானதால் மூன்றாவது பிராமணமான வாக்யமும் ஸூசகம்
2-குரூம் ப்ரகாசயேத்தீ மான் -என்று குரு பிதா முதலானவர்களைப் புகழ வேண்டும் –
மனத்தில் வைத்து இருந்தால் போதாது – உலகம் அறிய உரக்க ஸ்துதிக்க வேண்டும்
ஆகையால் இது விஷயத்தில் வாக்கு பிரதானம் –
3-இப்போது பிரக்ருதத்தில் அபேக்ஷிப்பது ஸ்துதி தலைக்கட்ட வேண்டும் என்பதே –
எம்பெருமானாரை உபாசித்த ஆழ்வான் போல்வார் ஸ்துதி வாக்குகளை முதலில் நினைக்க வேண்டும் -பேச வேண்டும்
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணி த்வந்த்வ சமர்ச்சய -என்ற
முகுந்த மாலை கிரமத்தையும் நினைக்கிறார் –

யதீந்த்ர
இங்கு தான் முதன் முதலில் நேரில் ஆஹ்வானம் பண்ணுகிறார் –
இந்த்ர ஆயாஹி வீதயே –ஹவிஷ்க்ருத் ஏஹி -என்பது போல் கூப்பிடுகிறார்
தேவரீர் திருவடிகளில் உபாசகர் திருவடிகளில் நிறைந்த பக்தியை அருள வேண்டும் என்று
இங்கு யதீந்த்ரரைப் பிரார்த்திக்கிறார்
இந்த்ராதிகளை இப்படிப் பிரார்த்தித்தால் கோபம் வருமே
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் என்று வர்ணிக்கப் பட்ட பர ப்ரஹ்மம் போல்
மம சாதர்ம் யம் ஆகதா -என்றபடி ப்ரஹ்ம சாதரம்யம் உள்ள எம்பெருமானாருக்கும் அதே சீலம்
இங்கே யதீந்த்ர என்று கூப்பிடத் தொடங்கி -நித்யம் யதீந்திர-4- / யதீந்திர நாத-5-/யதீந்திர-7-/யதீந்திர-12 /
யதீந்திர-15-/யதீந்திர-16 /யதீந்திர -18 /ஸ்ரீ மன் யதீந்திர-19–என்று கூப்பிட்டு முடிக்கிறார் –
யதித்தலை நாதன் -யதீ நாம் இந்திரன் –

மனஸா
ஓர் பிரகரணம் முழுவதும் ஏக புத்யா ரூடமாக -ஒரே வாக்யமாக மனதில் க்ரோ டீகரிக்க வேண்டும்
இதில் பிரகரணம் என்று மூன்றாம் பிரமாணத்தை ஸூ சிக்கிறார் -அந்தர் இந்த்ரியம்

வபுஷா ச
அங்கு என ஆடும் என் அங்கம் -என்றது போல் எம்பெருமானார் விஷயத்தில்
அங்கங்கள் எல்லாம் பரவசமாகப் பஜித்துக் கூத்தாடும் –

யுஷ்மத் –பாதாரவிந்த யுகளம் பஜதாம்
நிரந்தரமாக -அவிச்சின்னமாக பஜிக்கும் தேவரீர் திருவடிகளைப் பஜிப்பவர் திருவடிகளை
அடியேன் பஜ்ஜிக்க அனுக்ரஹிக்க வேண்டும்

குருணாம்-
உம்முடைய திருவடிகளைப் பஜித்து உம் சிஷ்யர்கள் ஜகத் குருக்கள் ஆனார்கள்
உம்மைப் பஜிப்பவர்க்கும் உம் சாம்யத்தை நீர் அருளினீர்
ஆத்ம சாம்யா வஹத்வாத் பத்யு ஸம் யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீ ரயோ –
சம்பந்தேன ஸமித்யமான விபவான் தான்யம்ஸ்த தான்யான் குரூன் -முதலியவற்றை நினைக்க வேண்டும் –

கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் –
கூரப்பிரான் -கூரேசர் –குருகைப்பிரான் குருகேசர் -முதலிய பகவத் குணங்களில் ஆழ்ந்து
முழுகும் குருகை நகர் முனிவர் போன்றவர்கள் – கூரேச குருசேகர்கள் –
ப்ரேமார்த்த விஹ் வல கிர -புருஷா -புராணா -என்பதைக் கணிசித்து ஆத்ய புமான்கள் என்கிறார் –

ஆத்ய புமான்கள் –
புராண புருஷர்கள்
தாசாரதி -முதலியாண்டான் முதலிய பெரியோரும் ஆதி ஸப்த க்ராஹ்யர்

பாதா நு சிந்தன பர
பக்தி என்பது த்ருவ அநு ஸ்ம்ருதி
அநு ஸ்ம்ருதி என்பது உபாஸனம் என்று ஸ்ருதி பிரகாசிகை -தொடர்ந்து ப்ரீதி நினைப்பு
அநு -பின் தொடர்ச்சியாக என்றும் பொருள் உண்டே
உன் திருவடி த்வந்வத்தை முடியில் வஹிப்பவர்கள் திருவடிகளில் பக்தி -உம் திருவடியை மேலும் அத்தை ஒட்டி

சததம்
இந்த ஸ்துதியில் நெடுகிலும் -ஒழி வில் காலம் எல்லாம் -எல்லையற்றதாக
முடிவில்லா அன்புடன் அடிமைத்தன்மை கோரப்படுகிறது –
நித்ய சேவா பிரேம ஆவில ஆசய -முதல் ஸ்லோகம்
நித்யம் சக்தம் பவது-4 th ஸ்லோகம்
நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –-6th ஸ்லோகம்
அந்வஹம் ஏததே-நாள் தொறும் வளர்ந்து வருகிறது-7th ஸ்லோகம்
அநிசம் -8th ஸ்லோகம்
நித்யம் -9th ஸ்லோகம்
சததம் சராமி -10th ஸ்லோகம்
புன புன–11th ஸ்லோகம்
சததம் பவாமி–12th ஸ்லோகம்
ஏக ரசதா–16th ஸ்லோகம்
சதா பவதி தே–16th ஸ்லோகம்
கால த்ரயேபி–17th ஸ்லோகம்
அந்வஹம் மம விவர்த்தய–18th ஸ்லோகம்
ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-19- என்று ஒத்துகிறபடி யதிராஜா பாத ஸேவையே
இங்கே கோறும் பலன்
ஆழ்வான் பிள்ளான் திருவடிகளிலே நிரதிசயமான ப்ரீதி வந்தால் தானே அவர்கள்
தைவமான யதிராஜன் திருவடிகளின் பக்தி கூடவே வரும் –

பவேயம் –
இங்கே எல்லாம் அஸ்து -பவேயம்-பவது-என்றே ஓடுகிறது –
இதுவே சத்தா ஹேது
இல்லையேல் அஸன்நேவ பவதி –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading