ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தையும்
அதில் விஸ்தரிக்கப்பட்ட பஞ்ச கால பாராயணத்வம் அர்ச்சாதி திவ்ய மங்கள அர்ச்சனாதிகள்
வேதங்களை ஓன்று படுத்தி ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்தை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை –
முதலிய உபகாரங்களைக் கொண்டு அல்லவோ எம்பெருமானார் ஸ்துதி இருக்க வேண்டும்
ஸ்ரீ மாதவன் என்றால் எந்த திவ்ய தேச எம்பெருமான்
பராங்குச பாத பக்தர் என்றதால் நாதோப்ஜ் ஞமான விசிஷ்டாத்வைத தர்சனம் என்பதில்
நாதனுக்கு நாதனான வரும் முனி நாதன் ஆக்கி நாலாயிரம் வழங்கி அருளிய சேனை நாதன் என்னும் சடகோபர் ஸ்மரணம் உண்டே
லஷ்மீ நாத ஸமாரம்பாம் -திவ்ய தம்பதிகள் சமரணம் ஸ்ரீ மாதவாங்க்ரி கிடைத்தது
வந்தே கமலா க்ருஹமேதிம்-போல் லஷ்மீ நாத ஸமாரம்பமாகும் இஸ் ஸ்லோகமும்
பாஞ்ச ராத்ர ப்ரதிபாத்யமான எந்த திவ்ய தேசத்தில் ஸூ காஸீனராக பகவத் நியமனத்தால்
எம்பெருமானார் தம் சிஷ்ய பரிகாரங்களோடே ஆ பிரயாணம் எழுந்து அருளி இருந்தார்
எந்த திவ்ய தேசத்தில் சிரகாலம் ப்ருங்கமாக -மதுகரமாக -மாதுகர வ்ருத்தியாலே திரு வீதிகளில்
பிஷாடன் உத்ஸவங்கள் செய்தது
யதிகள் ஞான கர்மங்கள் பக்ஷங்களால் ஹம்ஸங்களாய் விளையாடி ரமிக்க வேணுமே
ஸ்ரீ ரங்க ராஜனே வேதாதியில் விளங்கும் பரம் பொருள் -உபய வேதாந்த சர்வ ஸாகா ப்ரத்யயமான பொருள்
யதிராஜ ஹம்ஸ பக்ஷியை ராமானுஜ திவாகரர் என்பர் -எந்தக் கமலங்களை மலரச் செய்து மகிழ்விப்பவர் இவர்
குரு சிஷ்யர்களை சேர்ந்தே அனுசந்திப்பது வியாஸ சம்ப்ரதாயம்
இவர் சிஷ்யர்களில் உத்தமர் யார்
இந்தக் கேள்விகளுக்கு உத்தரம் அளிக்கிறார் இதில்
பூர்வ மீமாம்சையின் இரண்டாவது அத்யாயம் சப்தாந்தரம் -அப்யாசம் முதலியவைகளால்
கர்ம பேதத்தைச் சொல்லி சாகாந்தர அதிகரணம் என்ற சர்வ சாகா ப்ரத்யய ஐக்ய அதிகரணத்தோடே முடிந்தது
ஆச்சார்ய தேவோ பவ
தேவ மிவ ஆசார்யம் உபாஸீத
தஸ்மாத் ஆத்மஞ்ஞம் ஹயர்ச்சயேத் பூதி காம் -இப்படி பல இடங்களில்
பண்டை நான் மறையில் ஆச்சார்ய உபாஸனம் விதிக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைகளில் -32-யிலும் ஆச்சார்ய உபாஸனம் தனியான வித்யை இல்லை
அது சர்வ வித்யை அநு யாயி
ஆச்சார்யார்க்கு அடிமை -அடியார்க்கு அடிமை -நெடுமாற்கு அடிமை -இவற்றை உபாய கோடியிலும் பல கோடியிலும்
சேர்த்து சாகாந்த்ர அதிகரணம் ஸூசகம் இங்கு
சடஜித் த்ருஷ்ட ஸர்வீய ஸாகா காதா -ரத்னாவளியில் மாறன் மறை சர்வாதிகாரமாக சர்வ சாகா என்கிறார்
சர்வருக்கு பொதுவான சாம சாகை சர்வ சாகை –
ஸர்வ ஸாகா ப்ரத்யயர் -சர்வ வேதாந்த ப்ரத்யயர் -பதின்மர் பாடும் பெரிய பெருமாளே அந்த மூர்த்தி –
முதலில் பேசப்படுபவனும் -பிரணவத்தில் விளங்கும் பரம் பொருளும் -ஸ்ரீ ரெங்க ராஜனே –
ப்ரஹ்மண பிரணவம் குர்யாத் ஆதவ் அந்தேச -எந்த வேதத்தைப் பேசினாலும் முதலில் பிரணவம் உண்டே
செழு மறையின் முதல் எழுத்துச் சேரும் கோயில்
ப்ரணவாகார விமானத்துக்குள் ப்ரணவ வாஸ்யமான ரெங்கராஜன் -சர்வ வேத வாத்யன் -சர்வ வேத ப்ரத்யயன் –
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –
ஸ்ரீ ரெங்கராஜருடைய திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்ஸமாயும் –
ஹம்ஸ ஸ்ரேஷ்டராயும்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஸ்ரீ பராங்குசர் திருவடித் தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் பாடி வட்டமிடும்
ஸ்ரேஷ்டமான வண்டை ஒத்தவராயும்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் -ஸ்ரீ பட்டர் பிரான் ஆகிய பெரியாழ்வார் பரகாலர் இவர்களுடைய
முகங்களாகிய தாமரைகளுக்கு மகிழ்ச்சி தரும் ஸூர்யனாகவும் மித்ரராகவும்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -கூரத்தாழ்வானுக்கு அடைக்கலமாயும் உள்ள
யதிராஜ மீடே –ஸ்ரீ எதிராஜரை ஸ்துதிக்கிறேன் –
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூ கமாஸ்வ -என்று ஸ்ரீ ரெங்க ராஜ நியமனம்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்
மொய்ம் பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்று பிள்ளான் அருளியபடி
இரண்டு தாய்களையும் கீழே அனுசந்தித்தார்
திருவாய் மொழி ரெங்க ராஜன் புகழ் விஷயம்
பத்து சதக விஷயங்களும் கங்குலும் பகலும் பதிகத்தில் உண்டே
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –127- ஸ்லோகங்களுக்கு நடுவில் -63- ஸ்லோகத்தில்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ் மே சீத மிவ ஹ்ரதம் -போல் மானஸ சரஸூ போன்ற சீதளமான
தாமரைத் தடாகம் ஸ்ரீ ரெங்கராஜர் திவ்ய மங்கள விக்ரஹ நிரூபணம்
திருவடிகளை அத் தடாகத்தில் தாமரைகளாய் மிதப்பன –
அவற்றின் போக்யதையை ரஸித்துக் கொண்டு -திரு மேனி யாகிய மானஸ ஸரஸ்ஸூ போன்ற
பங்கஜ தடாகத்தில் விஹரிக்கும் ராஜ ஹம்ஸம் ஆவார்
ஸ்ரீ ராமானுஜ பரம ஹம்ஸர் -ராஜ ஹம்ஸர் -பரம ஹம்ஸர் -ஹம்ஸா நாம் ராஜா என்பதும்
பரமரான ஹம்ஸர் என்பதும் ஒன்றே –
அரங்கத்தம்மான் திருக் கமல பாதத்தில் அலை எறிகிற மது ப்ரவாஹத்தில் சிறகு அடித்துக் கொண்டு
வர்த்திக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டர் -பிள்ளை லோகம் ஜீயர்
ரதிம் கத -ஸ்ரீ ரெங்கத்தில் அரங்கனுக்கு ரதி
அரங்கன் தாமரை அடிகளில் ராமானுஜ ராஜ ஹம்சருக்கு ரதி –
ந பத் நாதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்த்த மாம்பஸி -என்பர் ரமந்தி ஹம்ஸா உசி கஷயா -என்று ஸூ கர் –
இரண்டாம் அத்யாயம் மூன்றாம் பாதம் -அவேஷ்ட் யதிகரண விஷயம் திரு உள்ளத்தில் ஓடி இந்த இரண்டாம் ஸ்லோகம்
ராஜா சப்தம் க்ஷத்ரியர் என்றே பொருள் -குமாரில பட்டர் வார்த்திகம்
ரெங்க ராஜன் -என்ற இடத்தில் ராம கிருஷ்ண அவதார தசையைக் கொண்டு ஒருவாறு ஷத்ரியத்வத்தை நினைக்கலாம்
அரங்கமேய அந்தணன் –
அரங்கம் ஆளி -அந்தண அரசனாகவும் கொள்ளலாம்
ரங்கத்தை ரஞ்ஜீப்பிக்கும் ராஜாதி ராஜன்
இந்த ஸ்லோகத்தில் நான்கு ராஜ -சப்தங்கள்
ஷத்ரிய ராஜா அந்தணர் ராஜா முதலில்
இரண்டாவது மூன்றாவது மனுஷ்யர் அல்லாத கேவல பிராணியைச் சொல்லுவதால் ஜாதி ப்ரஸக்தி இல்லை –
ஸ்ரேஷ்டர் என்னும் பொருளிலே உபயோகம்
யதிராஜர் என்னும் இடத்திலும் ஸ்ரேஷ்டர் பொருளிலிலே தான் -ஷத்ரிய பொருளில் இல்லை –
ரெங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸ –சப்தாதி ஸ்லோகம் –
பக்தர்கள் மானஸ ஸரஸ்ஸில் விஹரிக்கும் மானஸ ஹம்ஸம்
ராஜன் திருவடித் தாமரைகளில் விஹரிப்பது ஹம்ஸ ராஜர் என்று ஆநு ரூப்யம்
ரெங்க ராஜரும் ஆதியில் ஹம்ஸ அவதாரம் செய்து ஹம்ஸர்
வேறே எந்த ராஜனை இந்த ராஜ ஹம்சர் அடி பணியக் கூடும்
ஹம்சங்களுக்கு ராஜா பரம ஹம்ஸர் -பரம ஹம்ஸர் வணங்க ஏற்பவர் –
ரெங்க ராஜர் வராத ராஜர் வேங்கடேஸ்வரர் முதலிய ஆதி ஹம்ஸரான ஸர்வேஸ்வரர்களே –
பல ராஜ பத அப்யாசம் செய்வதால் -இரண்டாம் அத்யாயம் அப்யாஸ விசாரமும் ராஜ சப்த விசாரமும் ஸூ சகம் –
எம்பெருமான் சரண ஸரோஜ ஹம்ஸ குலபதி யதிராஜர்
இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே என்பதையும்
சிற்று எயிற்று முற்றல் மூங்கில் முன்று தண்டர் ஒன்றின் அற்ற பத்தர் சுற்றி வாழும்
அந்தணீர் அரங்கமே -என்பதையும் நினைக்கிறார் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
பெருமாள் திருவடிகளோடு பாதுகையான ஸ்ரீ சடகோபனுடைய திருவடிகளும் கூடவே நெஞ்சில் வசித்து இன்பம் பயக்கின்றன –
ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –என்று ஆழ்வார் திருவடிகளைச் சென்னி மேல் கொள்ளவே
யன் மூர்த்தி மே -என்று உடனே பெருமாள் திருவடிகளும் சிரஸ்ஸிலே விளங்கின –
இங்கே யதிராஜன் திருவடிகளைச் சென்னி மேல் கொண்டதும் கூடவே
அவர் சென்னி மேல் உள்ள நம்மாழ்வார் திருவடிகளும்
அவருக்கு அவயவமான ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பட்டர் பிரான் பரகாலன் திருவடிகளும்
யதிராஜருக்கு அவயவமான ஸ்ரீ கூர நாதரும் புத்திஸ்த்தர் ஆகிறார் –
விஷ்ணோ பதே மத்வ உத்ஸ-வேதம்
தவாம்ருத ஸ்யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்ய திச்சதி –
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷு ரகம் ஹி வீக்ஷதே -என்று
பெருமாள் திருவடிகளில் பெருகும் தேனைச் சுவைத்து அதில் நீங்காத இன்பமுறும்
மதுகரமாகத் தன்னை ஆளவந்தார் நிரூபித்தார்
யதிராஜரை ஆழ்வார் திருவடிகளில் அதே போல் ரசிக்கும் ப்ருங்க ராஜர் என்கிறார்
அணி குருகை நகர் நம்பி நாவுக்கு இசைந்த ஸூகர் கோதிய பழம் –
ஸூக முகத் அம்ருத த்ரவ ஸம்யுதம்-ஆழ்வார் நாவுக்குச் சுவைத்த திருவடித் தாமரைகள்
யதி ராஜர் பிருங்க ராஜர்
மதுகர வ்ருத்தி பரம ஹம்சர் வ்ருத்தி
என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் தென்னா தெனா என்று
வண்டு முரல் திரு வேங்கடத்து என் ஆனை என் அப்பன் எம்பெருமான் உளனாகவே -என்றபடி
திருவேங்கடவன் திருவடிகளில் செந்தேனை அருந்தி மத்தமாகி அங்கே மதுரமாகப் பாடும்
வண்டே போல் தான் இன் கவி பாடுவதாக அனுசந்தித்தார் –
ஸ்திதோ அரவிந்தே என்கிற அனுபவம் அத்தை அநுசரித்தது –
பராங்குச பிரமரத்தின் ஷட் சரணங்கள் ஆகிற தாமரைகளில் தேன் அருந்தி ஆடிப்பாடும் ஷட் சரணர்-
ப்ருங்கத்தின் திருவடியில் ஓர் தலைமையான ஆண் வண்டு பராங்குச நாயகி ராணி வண்டு
அதைப் பணியும் மற்ற வண்டுகளின் தலைவர் யதிராஜர் –
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-
ஸ்ரீ ரெங்க ராஜன் சுடர் அடி தொழுது எழுபவர் சடகோபர்
அவர் அடி பணிந்து உய்ந்தவர் ராமானுஜர்
சடகோபருக்கு அவயவமான மற்ற ஆழ்வார்களின் திருவடித் தாமரைகளை எம்பெருமானார் தொழுது எழுவாராயினும்
தாமரை ஸமூஹங்களை வர்ணிக்கும் இவ்விடத்தில் அவர்கள் திரு முகங்கள் ஆகிற தாமரைகளைப் பேசுவது ரஸம்
அந்தத் தாமரைகளை மலரச் செய்யும் ஸூ ர்யன் ராமானுஜ திவாகரன் –
அந்த ஸூ ர்யன் விஷயமான அந்தாதியும் காயத்ரி யாயிற்று
பட்ட நாத ஸ்ரீ என்னும் தனியனில் ஆண்டாள் பட்டர் பிரான் என்று பொருள் பணிப்பர்
அரங்கன் பிரஸ்தாவத்தில் ஆண்டாளை மறக்கலாகாதே
ஸ்ரீ பட்ட நாத -என்று இங்கே மாற்றி வைத்து இருப்பதில் ஆழ்வார்களின் பிரபந்த பிரஸ்தாவத்தில்
ஸ்ரீ என்று ஸ்ரீ அம்சமான ஆண்டாளை முதலில் கொள்ளலாம் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம்-
ஸ்ரீ ரெங்க ராஜன் ப்ரஸ்தாவத்திலும் -ஆழ்வார்கள் பிரஸ்தாவத்திலும் –
ஸ்ரீ ரெங்கேச புரோஹிதரான ஆழ்வானை மறக்கலாகாது –
யதிராஜர் ப்ரஸ்தாவத்திலும் ஆழ்வானை மறக்கலாகாது
ஸ்ரீ ஸூ ந்தர பாஹுவை விஸ்தாரமாக ஸ்துதித்து ஸ்ரீ அரங்கத்தில்
ஸ்ரீ ராமானுஜர் திருவடி வாரத்தில் வாஸம் அருள பிரார்த்தித்தார்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–129-
அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு
ப்ரத்யக்ஷம் ஸூ நிரஸ்த மேவ விததத் ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் –130-
தென் திருவரங்கம் கோயில் செல்வத்தை
நாள் தோறும் அபி வ்ருத்தமாக்கி தேவரீருடைய பக்தர்களுக்கே போக்யமாம்படி செய்து அருள வேணும் –
தத் போக்யாம் நிசம் குருஷவ பகவந் ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–131-
திருவரங்கம் பெரிய கோயில் செல்வம் எந்நாளும்
சத்புருஷர்களுக்கே போக்யமாம் படி செய்து அருள வேணும்
இதில் காட்டிலும் வேறே ப்ரார்த்த நீயம் இல்லை என்றதாயிற்று
இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண–132-
இது தன்னையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பி விண்ணப்பம் செய்யா நின்றேன்
இதி -இந்த விஞ்ஞாபநத்தையே மீண்டும் மீண்டும் செய்கிறேன் என்ற காரணத்தினாலேயே
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் த்யக் அஸ்மீ –குற்றவாளனாகிறேன்-துஷ்ட ஸ்வ பாவமுடையவன் ஆகிறேன்-
கலங்கின புத்தி உடையவன் ஆகிறேன்-
ஸ்ரேய கிரந்து கிரணாச் சரணாரவிந்த
நிஷ்யந்தமான மகரந்த ரஸவ்க சேஸ்யா
தஜ்ஜா ஸ்ருதேர் மதுந உத்ஸ இதி ப்ரதீதா
மாங்கல்ய ரங்க நிலயஸ்ய பரஸ்ய தாம்ந –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -2-
அனைவருக்கும் ஷேமங்கரமான ஸ்ரீ ரெங்க விமானத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையவனாய்
பரஞ்சோதி என்று பிரசித்தமான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் நின்றும் பெருகா நின்ற
மகரந்த ரஸ ப்ரவாஹம் என்னலாம் படியாய் மதுவின் ப்ரவாஹம் என்று-வேதத்தினால் பிரதிபன்னனாய்
அந்த திருவருள் நின்றும் கிரணங்கள் நன்மையை விருத்தி பண்ணட்டும் –
அநாரத ததுத்தி தாரக யோகம்
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜம் உந்நயாம –3-
அந்த அநு ராக ரஸ சமஞ்சனத்தால் உண்டான ராக சம்பந்தம் மாறாமல் இறுக்கப் பெற்ற
ஸ்ரீ ரெங்க நாதனுடைய திருவடித்தாமரையை சிரஸா தரிக்கிறோம் –
வஜ்ர த்வஜ அங்குச ஸூதா கலச ஆதபாத்ர
பங்கேருஹ அங்க பரிகர்ம பரீதம் அந்த
ஆபாத பங்கஜ விச்ருங்கல தீப்ர மௌலே
ஸ்ரீ ரெங்கிண சரணயோர் யுகம் ஆஸ்ரயாம–4-
திருவடித்தாமரை அளவும் நிரர்கனமாக ஜ்வலித்துக் கொண்டு இருக்கிற திரு அபிஷேகத்தை யுடையனான
அந்த ஸ்ரீ ரெங்கநாதனின் திருவடியின் உடபுறத்தில் வஜ்ரம் -த்வஜம் மாவட்டி -அம்ருத கலசம் -குடை -தாமரைப்பூ –
இந்த சின்னங்கள் ஆகிற அலங்காரத்தாலே வ்யாப்தமாய் இருக்கிற திருவடியை ஆஸ்ரயிக்கிறோம் –
ஸ்ரீ ரெங்க ராஜ சரணவ் ப்ரணுமோ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-5-
ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணுகிறோம்
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-
தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–90-
எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ச்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்-
இவற்றைத் திரு உள்ளம் பற்றியே இங்கு முதல் இரண்டு ஸ்லோகங்கள் –
யதிராஜ மீடே –
இங்கு ராஜ சப்தத்துக்கு ஷத்ரிய வர்ண பொருள் பாதிதம் ஆகும்
ஸந்யாஸ ஆஸ்ரமம் ஷத்ரியர்களுக்கு இல்லை
திவாகரனாக வர்ணித்த யதிராஜரை சந்திரனாக வர்ணிப்பது அழகு
ஸகல குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய-நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்த்ர -சப்ததி ஸ்லோகம் –
இங்கு ராஜ சப்தத்துக்கு சந்திரன் பொருள் கொண்டு யதி சந்திரர் என்று சந்த்ரத்வ வர்ணனும் திரு உள்ளம் –
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply