கம்ஸோ அத நாரத கிரா வ்ரஜ வாஸி நம் த்வாமா
கர்ண்ய தீர்ண ஹ்ருதய ஸ ஹி காந்தி நேயம்
ஆஸூய கார் முக மகச்ச லதோ பவந்த
மா நேது மேந மஹி நோத ஹி நாத ஸாயின் –1–
பாம்பணை மேல். பள்ளி கொண்ட குருவாயூரப்பா! தாங்கள் கோகுலத்தில் வசித்து வருவதாக
ஸ்ரீநாரதர் கூறக் கேட்ட கம்ஸன் (தனது முயற்சி வீணானது கண்டு) மனம் நொந்து தனுர்யாகம்’ என்னும்
ஒரு காரணத்தைக் காட்டித் தங்களை அழைத்து வர எண்ணி,
காந்தினி என்பவரின் மகனான அக்ரூரை அனுப்பினான்.
அக்ரூர ஏஷ பவதம் க்ரி பரஸ் சிராய
த்வத் தர்சநா ஷ மமநா ஷிதி பால பீத்யா
தஸ்யாஜ்ஞ யைவ புன ரீஷிதுமுத்ய தஸ்த்வா
மா நந்த பார மதி பூரி தரம் ப பார –2-
அந்த அக்ரூரர் தங்கள் திருவடிகளையே சரணமாகப் பற்றி வெகுகாலமாகவே தங்களைக் காண
வேண்டுமென்ற விருப்பமுடையவராயினும், அரசனான கம்ஸனிடம் கொண்ட பயத்தினால்
தங்களைக் காணலாம் என்று மனதிலும் நினைக்க முடியாது தவித்தவர். அத்தகைய அவர்
இப்பொழுது அதே அரசனுடைய கட்டளையால் தங்களை தரிசனம் செய்ய ஆவல் கொண்டு
மனதில் ஆனந்தத்தின் பூரிப்பை அடைந்தார்.
ஸோ அயம் ரதேந ஸூ க்ருதீ பவதோ நிவாஸம்
கச்சன் மநோ ரத கணாம் ஸ் த்வயி தார்ய மாணான்
ஆஸ்வாத யன் முஹுரா பாய பயே ந தைவம்
ஸம் ப்ராரதயன் பதி ந கிஞ்சிதபி வ்யஜா நாத் –3-
பெரும் பேறு படைத்த அந்த அக்ரூரர் தேரில் ஏறிக் கொண்டு தங்கள் இருப்பிடமான – கோகுலத்தை
நோக்கிச் செல்கையில், தங்களைப் பற்றியே பற்பல சிந்தனைகளில் மூழ்கி அவற்றை சுவைத்துக் கொண்டே
(வழியில் கம்ஸனால் அதற்கு ஏதாவது) தடங்கல் — வந்துவிடுமோ என்று பயந்து இஷ்ட தெய்வங்களை
வேண்டிக் கொண்டு (செல்கையில்) வழியில் – எங்கு என்ன நடக்கிறது என்று எதையுமே உணராது சென்றார்-
த்ரஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம் ஸம்
ஸ்ப்ரஷ்யாமி கிம்ஸ் விதபி நாம பரிஷ் வஜேயம்
கிம் வஹ்யதே ச கலு மாம் க்வ நு வீக்ஷித ஸ்யா
தித்தம் நி நாய ச பவ ன் மயமேவ மார்கம் –4-
“அடைய வேண்டிய பரமபுருஷன் ஸ்ரீபகவானே என்று வேதங்களால் நூற்றுக்கணக்கான இடங்களில்
கொண்டாடப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ணனை நான் காண்பேனா? நான் தொடுவேனா? –
இறுகத் தழுவிக் கொள்வேனா? அவர் என்னிடம் அக்ரூரரே’ என்றழைத்துப் பேசுவாரா?
எங்கு சென்றால் அவரைக் காணலாம்?” என்றிவ்வாறு பலபடியாக நினைத்து,
தங்கள் நினைவாகவே அக்ரூரர் வழியைக் கடந்தார்.
பூய க்ரமாத பிவி சந் பவதம் கிரி பூதம்
வ்ருந்தா வனம் ஹர விரிஞ்ச ஸூ ராபி வந்த்யம்
ஆனந்த மக் ந இவ லக் ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தர மவாப ந பங்கஜா ஷை –5-
தங்கள் திருவடிகள் படிந்ததால் மிகப் புனிதமானதும், பரமசிவன், பிரம்மா மற்றும் தேவர்களால்
வணங்கத் தக்கதுமான பிருந்தாவனத்தில் புகுந்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினாற் போலும்
மோகத்தில் ஆழ்ந்தாற் போலும் வர்ணிக்க முடியாதவாறு என்னென்ன நிலையைத்தான் அடைந்தாரோ?
பஸ்யன் நவந்தத பவத் விஹ்ருதிஸ் தலா நி
பாம் ஸூஷ் வ வேஷ்டத பவச் சரணாங்கி தே ஷு
கிம் ப்ரூ மஹே பஹு ஜ நா ஹி ததாபி ஜாதா
ஏவம் து பக்தி தரலா விரலா பரமாத்ம ன் –6-
பரமாத்மா, ஸ்ரீ குருவாயூரப்பா! தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டதும் வீழ்ந்து வணங்கினார்.
தங்கள் திருவடி இலச்சினை பட்டுள்ள புழுதிகளில் விழுந்து புரண்டார். நாங்கள் என்னதான் சொல்வோம்?
தாங்கள் திரு வவதாரம் செய்திருந்த அச்சமயத்தில் எத்தனையோ பல பெரியோர்கள் தோன்றி யிருந்தும்,
(அக்ரூரரைப் போல) இப்படி பக்தியின் பரவசத்தில் மூழ்கியவர்கள் மிகமிகக் குறைவே.
சாயம் ச கோப பவ நா நி பவச் சரித்ர
கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸயா நாநி
பஸ்யன் ப்ரமோத சரிதேவ கிலோஹ்ய மாநோ
கச்சன் பவத் பவ ந ஸந்நிதி மன்வயா ஸீத் –7-
தங்களது திருவிளையாடல்களை விளக்கும் பாடல்களை கோபர்கள் தங்கள் இல்லங்களில் பாட,
அது அக்ரூரருக்கு அமுதினும் இனிமையாகக் காதுகளில் பரவி நிற்க, அவ்வமுதம் தவழ்ந்து வரும்
கோபர்களின் வீடுகளைக் கண்டு கொண்டே, அச்செவி யமுதப் பெருக்கினால் உந்தித் தள்ளப் பட்டாற்
போன்று மெதுவாக நடந்து மாலையில் தங்களது திருமாளிகை முன் வந்தடைந்தார். –
தாவத் ததர்ச பஸூதோஹ விலோக லோலம்
பக்தோத்த மாகதி மிவ ப்ரதி பால யந்தம்
பூமன் பவந்த மய மக்ர ஜவந்த மந்தர்
ப்ரஹ்ம அநு பூதி ரஸ ஸிந்து மிவோத்வ மந்தம் –8-
எங்கும் நிறைந்து விளங்கும் குருவாயூரப்பா! பசுக்கள் பால் கறத்தலைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
கொண்டவராகவும், ஓர் உத்தம பக்தனின் வருகையை எதிர் நோக்கி நிற்பவர் போன்றும்
அண்ணனான பலராமனோடு கூட நின்று கொண்டிருப்பவரும், உள்ளம் நிறைந்து அனுபவிக்கப்
பெறும் பிரும்மானந்த அமுதக் கடலை (பக்தனுக்காக) வெளியிலே மடை திறந்து விடுபவர் போன்றும்
உள்ள தங்களை. இந்த அக்ரூரர் கண்டார்.
சா யந்த நா ப்லவ விசேஷ விவிக்த காத் ரவ்
த்வவ் பீத நீல ருசிராம் பர லோப நீ யவ்
நாதி ப்ரபஞ்ச த்ருதி பூஷண சாரு வேஷவ்
மந்த ஸ்மிதார்த்ர வதனவ் ச யுவாம் ததர்ச -9-
மாலையில் நீராடித் தூய்மையான திருமேனியுடன் கண் கவரும் அழகிய மஞ்சள் பட்டும், நீலப்பட்டும்
உடுத்திக் கவர்ச்சியாக, உலகியல் போன்று அதிகமான அணி கலன்கள் அணியாத அதனால்
மிக அழகாக விளங்கும் வேடத்துடன் குளிர்ந்த புன்முறுவல் பூத்த முகத்துடன்
உள்ள உங்களிருவரையும் அவர் தரிசித்தார்.
தூராத் ரதாத் சம வருஹ்ய நமந்த மேந
முக்தாப்ய பக்த குல மௌலி மதோப கூஹன்
ஹர்ஷான் மிதாக்ஷர கிரா குசலாநு யோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய சபலோ அத க்ருஹம் நினேத –10-
தொலைவிலிருந்தே (தங்களைக் கண்டதும்) தேரைவிட்டு இறங்கி வணங்கிக் கொண்டே வருகிற
பக்த சிரேஷ்டரான அக்ரூரரை, வாரி எடுத்துத் தழுவிக் கொண்டு. மகிழ்ச்சிப் பெருக்கினால்
பேசத் திறனற்று தழுதழுத்த குரலுடன் ‘க்ஷேமம்’ விசாரித்துவிட்டு, பலராமனோடு கூட
அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள்.
நந்தேந சாக மமிதாத ரமர்ச யித்வா
தம் யாதவம் தது திதாம் நிசமய்ய வார்தாம்
கோபே ஷு பூ பதி நிதேச கதாம் நிவேத்ய
நாநா கதாபிரிஹ தேந நிஸாம நை ஷீ –11-
அங்கு ஸ்ரீநந்தகோபருடன் சேர்ந்து யதுகுலத் தோன்றலான அக்ரூரரை முறைப்படி – வரவேற்று உபசரித்து,
அவர் கூறிய செய்தி கேட்டு, அந்த அரச கட்டளையை கோபர்கள் அனைவருக்கும் தெரிவித்தீர்கள்.
பின் அவரோடு பற்பல கதைகளைப் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தீர்கள்.
சந்த்ரா க்ருஹே கிமுத சந்த்ர பகா க்ருஹே நு
ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ர விந்தே
தூர்தோ விலம்பத இதி ப்ரமதா பிருச்சை
ரசாங்கிதோ நிசி மருத் புர நாத பாயா –12-
இன்று ஸ்ரீ கிருஷ்ணன் சந்திரை சந்த்ர பாகை ராதை அல்லது மித்ரா விந்தையின் வீட்டில்
தங்கி இருக்கிறான் என்று கோபிகள் தங்களை சந்தேகித்தார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply