ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–12- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்தால் பாப கரணத்துக்கு இடமில்லை காணும் என்ன
அதுவும் அனுசந்திக்கைக்கு யோக்யதை இல்லாதபடி காம பரவச அந்தக் கரணனாய் இருக்கிறேன் என்கிறார்-

(கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே)

(நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..)

(மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-)

(இந்திரியங்களை பட்டி மேய்க்க விட்டு இருக்கும் அடியேன் யதிராஜரே இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்தியவர்களில் ஸ்ரேஷ்டர் முன்பு நிற்கவே கூசுகிறேன்)

புன புனரகம் யதிராஜ குர்வே -என்று விண்ணப்பம் செய்தவாறே
நீர் நம் மேல் பழி ஒதுக்கிறது என் -சர்வ வஸ்துக்களிலும் -அந்தர்யாமியாய்
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு கடவனாய் –
கண்டார் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ அர்ச்சா ரூபேண ஸூலபனாய் -சர்வ நியந்தாவான ஸ்ரீ எம்பெருமானைக் கண்டு(எங்கும் வியாபிப்பனை அறிய யோக்யதை இல்லாதவரும் -சகல மனுஷ நயன விஷயதாங்கனாக -நின்ற ஆதிப்பிரான் நிற்க -அர்ச்சையிலும் பரத்வம் )
உம்முடைய இந்த்ரிய வஸ்யதையை தவிரும் என்ன

அவன் சர்வ ஸூலபனாய் சர்வ கதனாய் இருந்தானே யாகிலும் -அடியேன் அவனைக் காணாமல் காம பரவசனாகா நின்றேன்(காமம் -லவ்கிக விஷயாந்தர ப்ராவண்யம் )
இனி தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார் ––அந்தர்ப்ப ஹிஸ் சகல–இத்யாதியால் –

அந்தர்ப் பஹிஸ் சகல வஸ்துஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண 
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி
ஹந்த த்வ தக்ர கமனஸ்ய யதீந்திர ந அர்ஹ–12 —

எல்லா பொருள்களிலும் உள்ளேயும் வெளியிலும் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரனை, குருடன் எதிரே நிற்பவனை பார்க்காதவன் போல ,
நான் பார்க்காமல் எப்பொழுதும் மன்மதனுக்கு வசப்பட்டவன் போல் இருக்கிறேன்..
மனத்தை அடக்கிய யதிகளில் சிறந்தவரே உம் எதிரில் செல்ல யோக்க்யன் அல்லன்-

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும்,

அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து,(வியாபகத்வம் நியந்த்ருத்வம் இரண்டுமே மூன்றாம் நான்காம் பத்தில் )

ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை,

புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை,

அந்த: இவ – குருடன் போல்,

அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு,

(அதனால்) கந்தர்ப் பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தை யுடையவனாக,

ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன்.

(ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு

(அஹம்) ந அர்ஹ: – தத்வ ஞான சூன்யனான -அடியேன் தகுந்தவனாக இல்லை,

ஹந்த – ஐயோ கஷ்டம்.

————-

அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்–அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
ஸ்வ பர விபாகம் அற சகல வஸ்துக்களிலும் உள்ளொடு புறம்போடு வாசி அற வியாபித்து இருக்குமவனாய்
வியாப்ய வஸ்துக்களை ஸ்வ அதீனமாக நியமித்துக் கொண்டு போருமவனை-

உள்ளே இருக்கிற படியை அறிந்தால் -நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சில் இருக்கிறவன்
என் நினைந்து இருக்கும் என்று வெருவி நெஞ்சால் பாப சிந்தை பண்ணப் போகாது

புறம்பு இருக்கிறபடியை அனுசந்தித்தால் உள்ளே அன்றோ அவன் புறம்பு இல்லை என்று
பாஹ்ய கரணங்கள் கொண்டு பாபம் செய்யப் போகாது

உள்ளும் புறமும் உள்ளவனாய் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய (உசித)தண்டம் பண்ணி நியமிக்கைக்கு
சக்தன் அல்லவனாகில் பாபம் செய்யலுமாம் –

அங்கனும் இன்றிக்கே அபராத அநு ஸ்மரணம் உண்டிகைக்கு உரிய நிரங்குச ஸ்வ தந்திரனுமாய் இருந்தால்
எங்கனே பாபம் செய்யலாவது –

அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண–
ஜாதி அந்த்யன் தன்னுடைய முன்னே நிற்கிறவனைக் காண மாட்டாதாப் போலே தத்வ ஞான ஸூந்யனான நான்
ஸர்வத்ர சன்னிஹிதனான சர்வ நியாந்தாவானவனைக் காண மாட்டுகிறிலேன்
ஆச்சார்ய உபதேசாதி (ஆதி ஸாஸ்த்ர ஜன்ய -யோக ஜன்ய )லப்ய ஞானம் உண்டாய் இருக்கக் காண மாட்டாமைக்கு ஹேது என் என்ன அருளிச் செய்கிறார் –

கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் –
அவனைக் காண்கைக்கு சாதனமான நெஞ்சு காம பாரவசயத்தாலே கலங்கின பின்பு காண விரகு உண்டோ –
விஷய ப்ரவணமான நெஞ்சில் ஆச்சார்ய உபதேச லப்யமான ஞானத்தை ப்ரதிஷ்டிப்பிக்கை அரிது இறே

சததம் பவாமி
மனஸ்ஸூக்கு காம பாரவஸ்யம் காதாசித்கமம் ஆய்த்தாகில் அல்லாத காலங்களிலே யாகிலும் பகவத் அநு சந்தானம் பண்ணலாம் –
சர்வ காலங்களிலும் சித்தம் காம கலுஷமானால் எங்கனம் அநுஸந்திக்கும் படி –

பவாமி
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே (எப்பொழுதும் ஒரு நொடி விடாமல் -)காலகலை ஏக லேசமும் காம பாரவஸ்யம் தவிர்ந்து இல்லை என்கிறது –

ஹந்த
க்ஷணம் காலமாகிலும் வாஸூ தேவ (ஸர்வத்ர வசதி -ஈஸ்வரன் வாஸூதேவன்)சிந்தனத்துக்கு யோக்யமாகாதபடி பாழே போவதே -என்கிற விஷாதத்தாலே
ஹந்த என்கிறார்-

இத்தால் பெற்ற அம்சம் ஏது என்ன –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்-
அடியேன் மனஸ்ஸூ காம பரவசமாய்த்து என்கிறார் -அதாவது பிரயோஜ நாந்தரங்களை விரும்புகை-

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–
சாஷாத்க்ருத பகவத் தத்வராய் நிரஸ்த ஸமஸ்த காமரானவர்கள் கிட்டி சேவிக்கும் படியான வைபவத்தை யுடைய தேவரீர் திரு முன்பே வருகைக்கு
இப்படி இருக்கிற நான் அர்ஹனோ என்று தம்மையே தாம் நிந்தித்துக் கொண்டு அருளுகிறார் –

தாத்பர்யம்
எங்கும் உள்ளும் வெளியிலும் வியாபித்து சர்வரையும் நியமிக்கும் -சர்வேஸ்வரனை
பிறவிக்குருடன் தன முன்னே உள்ளாரைக் காணா மாட்டாத படி
விஷய ப்ராவண்யத்தால் கலங்கி காணும் அந்தக் கரணம் கலங்கி
காமத்துக்கு வசப்பட்டு திரியா நின்றேன்
காமம் அதிஷ்டானம் மனஸ் புத்தி இந்திரியங்கள் மூன்றையும் தனது வசப்படுத்தும்
க்ஷணம் காலமும் வாசுதேவனை சிந்திக்காமல்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்
நெருப்புக் கூண்டுக்குள் இருப்பதே தேவலை -பெருமாள் பற்றி நினைக்காதவர்கள் உடன் இருப்பதை விட என்பர்
அற்ற பற்றர் ஸேவிக்கும் -மொழியைக் கடக்கும் கூரத்தாழ்வான் போல்வார் அருகில் இருக்கும் தேவரீரை அணுக நினைக்கவும் அர்ஹம் அல்லன்

———

அந்தர்ப் பஹிஸ் சகல வஸ்துஷூ சந்தமீசம்

அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா –யஜூர் -ஆற -3-10-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா –ஸூ பால உபநிஷத் -7-என்றும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ர்ய நாராயண -என்றும்
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்துள்ளான் -8-8-2- என்றும் சொல்லுகிறபடியே
சகல வஸ்துக்களிலும் அந்தர் பஹிர் வ்யாப்தனாய் –
இப்படி வியாபிக்கிறது தான் எதுக்கு எனில் –

சகல வஸ்துஷூ —
சகல பதார்த்தங்களுக்கும் வஸ்துத் வாதிகளை உண்டாக்குகைக்காக –(பூ சத்தாயாம் -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் -இல்லாத ஒன்றுமே இல்லையே )
தத் அநு பிரவிச்ய சச் சத்யச் சாபவத் -தை ஆனா -என்றும்
அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாக்ரவாணி -சாந்தோ -6-3-2–என்றும் சொல்லக் கடவது இறே-

சந்தம் –
இவற்றுக்கு வஸ்துத் வாதிகளை உண்டாக்கி தான் சத்தை பெற்றானாய் இருக்கை-

புரஸ் ஸ்திதம் –
அந்த பிரவிச்ய சத்தா தாரகனாய் நியமித்துப் போருகை மாத்ரம் அன்றிக்கே இவன் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸ்ரீ அர்ச்சா ரூபேண முன் நிற்குமவனாய்-பின்னானார் வணங்கும் சோதி இறே

(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-)

ஈசம் –
இவற்றினுடைய கார்யம் எல்லாம் தனக்கு புருஷார்த்தம் ஆக்குகைக்கு ஈடாக –
ஈ சேசிதவ்ய சம்பந்தாத் -அநிதம் பிரதமாதபி –ஸ்ரீ லஷ்மி தந்த்ரம் -17-71-என்கிறபடியே ஸ்ரீ ஸ்வாமி யானவன் –

ஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி
ரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-

சகல வஸ்து ஷூ சந்தம் –
பிரஜையினுடைய சர்வாங்க ஸ்பர்சம் தாயானவளுக்கு தாரகமாம் போலே காணும் இவனுக்கும் இவற்றினுடைய ஸ்பர்சம்

சகல வஸ்து ஷூ
சிறியார் பெரியார் என்பது இல்லை -சங்கல்ப ரூப ஜ்ஞானத்தால் அன்றிக்கே ஸ்வரூபேண வர்த்திக்கிறவனாய்-

ஈசம்
இப்படி செய்கை சிறியாய் பெரியார் அன்றிக்கே இவற்றினுடைய ஸ்பர்சம் தனக்கு தாரகம் ஆகைக்கு ஈடான பிராப்தியை உடையவனாய்

புரஸ் ஸ்திதம்
பிராப்தனாய் துர்லபனாய் இருக்கை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனானவனாய்

அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்த மீசம் –
ஸூ சீலனாய் -ஸூ லபனாய் -தோஷ போக்யனாய்-ஸ்ரீ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாளை(நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையனாய் என்னை ஆள்வானே திருவேங்கடத்தானே நான்கும் )

அந்த மிவ-
கண்ணில் வைசத்யம் இல்லாதவன் போல் –
அந்தன் பதார்த்த தர்சனம் பண்ணாது ஒழிகிறது-பதார்த்தத்தின் குறை யன்றே -அது போலே
ஸ்ரீ சர்வேஸ்வரன் வாத்சல்யாதி குண விசிஷ்டனாய் -ஸ்ரீ அர்ச்சா ரூபேண முன் நிற்க –கண்டு அனுபவியாமை இவன் குறை இறே –
அதாவது சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக காணாமை -இப்படி காணாமைக்கு ஹேது என்ன என்ன –

அஹம்
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேன் -என்னுதல்-
மித்யா சராமி -இத்யாதியில் சொல்லுகிறபடியே பாபம் செய்கையே போந்து இருக்கிற அடியேன் என்னுதல் –
இத்தால் அவன் காணாமைக்கு ஹேது தேஹாத்மா அபிமானமும் தந் மூலமான பாபமும் என்றதாயிற்று –

அவீஷ மாண-
அவன் அடியேன் தன்னைக் காண்கைக்கு ஈடாக கிருஷி பண்ணுமாபோலே யாய்த்து
அடியேன் அவனைக் காணாமைக்கு கிருஷி பண்ணும்படியும் என்கிறார் –

இது தான் எத்தனை காலம் என்ன
சததம் பவாமி
சததம்
இதுக்கு ஒரு கால நியதி இல்லை -சர்வ காலமும் -என்கிறார்
பவாமி –
இது தான் வந்தேறி யன்றிக்கே சத்தையாய் விட்டது என்கிறார் –

ஈசம் அவீஷ மாண் கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ் வநர்த்தம் உண்டாய்த்து -என்கிறார்

ஹந்த –
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-
அப்ராப்த விஷயத்தை இடைவிடாமல் நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்

அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்-

த்வதக்ர கமனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஸ்ரீ ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல் –
தேன மைத்ரீ பவது தே -ஸூந்தர – 21-20–என்னும் ஸ்ரீ பிராட்டியைப் போலே ஸ்வ உபதேசாதிகளாலே
பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-

த்வதக்ர கமனஸ்ய நார்ஹ-என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –(ஞானம் த்ரஸ்ட்டும் பிரவேஷ்டும் அறிகை காண்கை அடைகை-யோக்யதையே இல்லாத பொது இவை உண்டாக பிரசக்கதையே இல்லையே )

த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
தேவரீர் இந்த்ரிய நியமன சக்தரில் தலைவர் ஆனமையை அடியேன் உஜ்ஜீவிக்கைக்கு உடல் என்று இருந்தேன் –
அது விபரீதமானதே என்கிறார்

ஈசம் அவீஷ மாண கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ்வநர்த்தம் உண்டாய்த்து -என்கிறார்

ஹந்த
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-அப்ராப்த விஷயத்தை இடை விடாமல்
நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்

அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஸ்ரீ ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல்
தேன மைத்ரீ பவது தே -ஸூந்தர – 21-20–என்னும் ஸ்ரீ பிராட்டியைப் போலே
ஸ்வ உபதேசாதிகளாலே பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே
வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-

த்வதக்ரக மனஸ்ய நார்ஹ– என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –

ஈசம் அவீஷமாண ஸ்வ த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
ஸ்ரீ பகவத் ப்ராப்யத்வ ஜ்ஞானம் இறே -ஆசார்ய சமாஸ்ரயணத்துக்கு மூலம் -அது இல்லாமையாலே அடியேன்
தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார்

கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
காம பரவசனான அடியேன் ஜிதேந்த்ரியரில் தலைவனான தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை தான் உண்டோ என்கிறார் –

ஈசம் அவீஷமாண கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ர கமனஸ்ய நார்ஹ –
அடியேனைப் பார்த்தாலும் -தேவரீரைப் பார்த்தாலும் -அடியேன் தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை இல்லை என்கிறார்

அடியேன் –
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா தவனாய் –41-
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே மருள்–39- கொண்டவன் –

(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-)

(பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39–)

தேவரீர்
அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தமக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமர் –57-

(மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57)

ஹந்த நார்ஹ
யோக்யதையும் போயிற்றுக் கிடீர் என்று கிலேசிக்கிறார் –

ஈசம் அவீஷமாண ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
முதல் தன்னிலே சாமான்யத்திலே கண் வையாதவன் விசேஷத்தைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –(பிரதம பர்வத்துக்கே ஆளாகாதவன் சரம பர்வ நிஷ்டனாகாதவன் என்று சொல்லவும் வேண்டுமோ )

————

ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார்.

‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி.

யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும்.

காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படி வந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

புத்தி மனசைக் கட்டுப்படுத்த வேண்டும்
நான் ஆத்மா வேறே
இந்திரியங்கள் மனஸ் புத்தி ஆத்மா பரமாத்மா -மேல் மேல் உயர்ந்த விஷயம்

எம்பார் -இருளே இல்லையே -இல்லறத்தில் ஆசை இல்லை -பிரகாசமாக அவன் உள்ளே பிரகாசிக்க –
காம ப்ராவண்யம் உண்டாகாதே
அதுக்கு நேரே எதிர் இங்கு
எப்பொழுதும் காம ப்ராவண்யம் -அப்ராப்ய விஷயத்தில் ஈடுபட்ட ஒருவன் உடையவர் முன்னே நிற்க அது போகுமே
நானே எப்போதுமே ஈடுபட்டுள்ளேன்
விப்ர நாராயணர் போல் மாறாமல் உள்ளேன்
காம தேவனுக்கு ஆட்ப்பட்டது விலங்கு போல் தானே –
ஹிரண்ய நிதி -உள்ளே இருக்க மேலே நடந்து புறங்கால் வீங்க -அறியாமல் உழன்று இருப்பான் போல் -உழல்கிறேன்

அந்தர் பஹிஸ் வியாப்யம் -நியந்தா ஈசன் –நாராயணனை -புரஸ்திதம் -அருகில் சந்நிஹிதனாய் -இருந்து
எதனாலும் மறைக்கப்படாத -ஸ்வயம் ப்ரகாசகனாய் இருந்தும்
அபஸ்யன்–கண் இல்லாதவன் போல் -மன்மதனுக்கு வசப்பட்டு இருக்க -தேவரீர் முன்னே வர யோக்யதை கூட இல்லாமல் இருக்க –
அக்ர கமநம் -முன்னே வந்து நிற்க இங்கு
பதாஸ்ரித-திருவடி ஆஸ்ரயிக்க முதலில் சொன்னது போல் –
யோக்யதை இல்லாமல் இருக்கிறேனே -கஷ்டம்

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading