ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –23-வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை
பாபிஷ்டனான நான் ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் –
இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட –
அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை
அதி பாபிஷ்டனான என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-
மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரை
மிக்க பாவியான நான் குற்றம் உள்ள நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் –
இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ -என்கிறார்

தான் சேம வைப்பாக கொண்ட ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் போல்வார்கள் —
தங்கள் நெஞ்சில் குறைவுறாத நிதியாக வைத்து பேணுவது கண்டு -நல்லன்பர்கள் பேணும் சீர்மை வாய்ந்த இந்த நிதியை
போலி அன்பனாகிய இவ் ஒப்பற்ற பாவியேன் நெஞ்சில் வைத்து ஏத்துவதனால் அந்நிதியின் சீர்மை
சிதைந்து விடலாகாதே என்று வருந்துகிறார் ஸ்ரீ அமுதனார் –
இங்கனம் தங்களை தாழ்ந்தவர்களாக நினைப்பதும் கூறுவதும் -நைச்ய அனுசந்தானம் –பெரியோர்கள் மரபு –
அன்பு நிலையில் மேல் விழுந்து -துய்த்து இன்புற்றுப் பேசுவதும்
அறிவு நிலையில் தன் தாழ்வு தோன்றி இகழ்வாய தொண்டனேனாகிய என்னால் குறை நேர்ந்து விடலாகாதே என்று
பிற்காலிப்பதும் தவிர்க்க ஒண்ணாதவை என்க-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

பத உரை –
வைப்பு ஆய -ஆபத்துக்கு உதவும் பொருட்டு வைக்கப் பட்டதான
வான் பொருள் என்று -சிறந்த செல்வம் என்று
நல் அன்பர் -நல்லவர்களான பக்தர்கள்
மனத்தகத்தே -நெஞ்சுக்கு உள்ளே –
எப்போதும் -எல்லாக் காலத்திலும்
வைக்கும் -வைத்துக் கொண்டு இருக்கிற
இராமானுசனை -எம்பெருமானாரை
இரு நிலத்தில்-பெரிய பூமியில்
ஒப்பார் இலாத -ஒத்தவர்கள் இல்லாத
உறு வினையேன் -பெரும் பாவியான நான்
வஞ்ச நெஞ்சில் -ஏமாற்றுகிற நெஞ்சகத்திலே –
வைத்து -வைத்து கொண்டு –
முப்போதும் -மூன்று வேளைகளிலும்
வாழ்த்துவன் -வாழ்த்துகின்றேன்
இது அவன் மொய் புகழுக்கு -இது அவருடைய சீரிய கீர்த்திக்கு
என் ஆம்-என்ன ஆகுமோ –

வைத்த மா நிதி -திருவாய் மொழி – 5-8 11- – – என்னுமா போலே ஆபத் ரஷகமாக வைக்கப்பட்ட அஷயமான தனம் என்று –
நிர்தோஷராய் பிரேம யுக்தராய் இருக்கும் அவர்கள் -சீரிய நிதிகளை செப்புக்குள்ளே வைப்பாரைப் போலே –
மனச்சுக்குள்ளே -திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் -வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை –
மகா ப்ருதிவியில் பாபம் பண்ணினவர்களில் இவனைப் போல் ஒரு பாபிகள் இல்லை என்னும்படி பாபிஷ்டனாய் இருக்கிற நான்
நிச்ச்நேஹனாய் இருக்க ச்நேஹிகளைப் போலே பாவித்து –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் – திருவாய் மொழி -5 1-9 – – என்கிறபடியே
சர்வஞ்ஞனையும் மருட்ட வற்றான க்ருத்ரிம யுக்தமான மனசிலே வைத்து -த்ரி சந்த்யமும் ஏத்தா நின்றேன் –
இது அவருடைய ச்லாக்யமான புகழுக்கு என்னாய் விளையுமோ –
வான்-பெருமை
நல்லன்பர் -என்கிற இடத்தில் –
நன்மை அன்புக்கு விசேஷணமாய்-அநந்ய பிரயோஜநதையா விலஷண-பத்தி என்னவுமாம் –மொய்-அழகு–

எனக்கு எய்ப்பினில் வைப்பு அன்றோ நீ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஓ ஓ என்று கதற –
மாசூணாது என்று பதில் வந்ததாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு -அது போலே ஸ்ரீ அமுதனாருக்கும் –

வைப்பாய வான் பொருள் என்று
சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று –
விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பதே கமல யுகம் பாதிரம் யம் ததீயம் -என்று
சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று அருளிச் செய்கையாலே –
அப்படி பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே –
இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற

வைப்பாய –இராமானுசனை –
ஸ்ரீ மது சூதனையே ஸ்ரீ ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் ஸ்ரீ எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
கைம்முதல் இல்லாத காலத்து நிதி பயன்பட்டு காப்பது போலே -தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாதனம் எதுவும் இல்லாத நிலையில் –
தம்மை காப்பாற்றும் ஸ்ரீ எம்பெருமானாரே -சித்த சாதனமாய் பயன்படுதலின் -அவரையே
வைப்பாய பொருளாக கொள்கின்றனர் –நல்லன்பர் -என்று உணர்க –
வைப்பாய பொருள் –பயன் பட பயன் பட -குறைந்து கொண்டே போம் –
ஸ்ரீ எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது – என்பார் -வான் பொருள்-என்றார் –

நல்லன்பர் –
ஜ்ஞாநாதிகராய்-அவர் திருவடிகளில் ப்ரீதி யுக்தர் ஆனவர்கள் –
நல்லன்பர் என்கிற
இடத்தில் –நன்மை அன்புக்கு விசேஷணமாய் – அநந்ய பிரயோஜந தயா -விலஷணையான பக்தியை உடையவர் என்னவுமாம் –
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலானவர்கள் –

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை-

மனத்தகத்தே -வான்பொருள் என்று –
வான் என்று விபு வாசகமாய் –
குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம் என்று கொண்டு -அத்தை வெளிச் செறிப்பாக
வைத்தால் சாதகமாய் இருக்கும் என்று அறியாதபடி நிரவயவமான மனச்சினுள்ளே –
நல்லன்பர் மனத்தகத்தே –
ஸ்தோத்ர ரத்னம் இயம் நியச்தம் ஆசார்யஸ்து திசம்புடே -என்று-
அநர்கமான ரத்னம் கிடைத்தால் செப்பிலே வைத்துக் கொண்டு இருப்பாரைப் போலே –
இந்த லோக விலஷணமான மகா தனத்தை தங்களுடைய நெஞ்சின் உள்ளே-

எப்போதும் வைக்கும் –
பூத பவிஷ்யத் வர்த்தமான காலத்திலும் வைக்கும் —
பூத காலத்தில் -ஸ்ரீ நம் ஆழ்வார்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக -என்று இவரை மங்களா சாசனம் பண்ணி நிற்கையாலும் –
ஸ்ரீ ஆள வந்தார் இவருடைய பிரபாவத்தை கேட்டருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி –
ஸ்ரீ கரிய மணிக்கப் பெருமாள் சன்னதியில் இருந்து இவரை மங்களா சாசனம் பண்ணினார் ஆகையாலும் –
ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆழ்வார் சம்ப்ராயத்தாலே இவருடைய விக்ரகத்தைப் பெற்று -சர்வ காலமும் ஆராதித்துப் போந்தார் ஆகையாலும்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் -என்னத் தட்டில்லை இறே-

வைக்கும் –
சேர்த்து வைக்கும் -ஜங்கம ஸ்ரீ விமான நிஹ்ர்தயானி மநீஷிணாம்-என்ன கடவது இறே .
கிரணங்களால் தப்தனாய்க் கொண்டு -ரவி மண்டலத்திலே வர்த்தித்தும் -காடும் மேடுமான பர்வதாக்ரத்திலே
ஜடாதாரணம் பண்ணி நின்றும் -ஜல தத்வத்திலே சர்வதா வசித்தும் -இப்படி சாதனா அனுஷ்டானம் பண்ணி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஞானிகளுடைய ஹ்ரதய கமல வாசம் சாத்தியம் என்று பிரசித்தமாக சொல்லுகையாலே
இது ஸ்ரீ பகவத் பரமானாலும் –
யஸ்ய தேவ பராபக்திர் யதா தேவ ததா குரவ் -என்றும் –தேவ மிவாசார்ய முபாசீத -என்றும் –
தேவ வத்ச்யா பரஸ்ய -என்றும் -சொல்லுகையாலே இருவரும் ஒக்கும் இறே –

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க
எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் ஸ்ரீ எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

இரு நிலத்தில் –
அதி விஸ்தைர்யான இந்த பூமியிலே-

ஒப்பார் இல்லாத –
என்னைப் போல் பாபிஷ்டன் ஆகிலும் கிடைப்பானோ என்று ஆராய்ந்தால் -எனக்கு துல்யமான பாபிஷ்டர்
இந்த லோகத்தில் கிடையாமையாலே –சத்ர்சர் இல்லாத –
ஒப்பார் -சதர்சர் –

அரு வினையேன் –
பிராய சித்தாதிகளால் நிவர்திப்பிக்க அரியதாய் –
அவசியம் அனுபோக்தவ்யம் கிர்தம் கர்மசுபாசுபம் -என்கிறபடி
அனுபவ ஏகைக நாச்யமான பாபத்தைப் பண்ணின நான் –
நத்விராணி க்ர்தான்ய நேன நிரையர் நாலம்புன கல்பிதை பாபா நாமிதி மத்க்ர்தே தததிகான் கர்த்தும் ப்ரவர்த்தேத்
வி தேப்யோப் யப்யதிகாரி தான்ய ஹமபி சூத்திர கரோமி ஷனாத் -என்றும் -அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
துரிதம் சகலச்ய ஜந்தோ தாவச் சதத் தத்தி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் -பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனுசம்ஹித
மார்ய வர்யைர் மாமேவ வீஷ்ய மகாதாம் நாதாதச்த் தேஷாம் –நைசயம் த்விதம் சடரிபோம மசத்ய மேவமத்தம்
பரோநம லி நோய தா ஆவிரச்தி -என்றும் சொல்லுகிறபடியே
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய –

வஞ்ச நெஞ்சில் வைத்து –
நான் அப்படி யானாலும் என் மனசு நிர்மூலமோ – என்னோட்டை சம்பந்தம் பெற்றதாகையாலோ
எனக்கு முன்னே பாப கர்மங்களிலே பிரவர்த்திக்கும் ஆய்த்து-
பந்தாயா விஷயாசங்கி -என்னும் படியாய்
பாஹ்ய விஷய ப்ரவணமாய் -எல்லாரையும் மோஷம் போகக் கடவதாய் -சர்வஞ்ஞாரான தேவரீரும் கூட
நல்லவன் என்று திரு உள்ளத்திலே கொண்டாடும்படியான -வஞ்சனத்தை உடைய மனசிலே வைத்து
வர்த்யாபசுர்நாவபுஸ் த்வஹா மீத்ர்சொபி சுத்யாதி சித்த நிகிலாத்மா குணாஸ் ரயோயம்
இத்யாதரேன க்ர்திநோபி மிதப்ரவக்து மத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே – என்று ஸ்ரீ ஜீயரும் அனுசந்தித்தார் இறே

இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் –
இப்பூமி பரப்பு அடங்கலும் தேடினும் எனக்கு இணையான பாபியை காண இயலாது –
அத்தகைய மகா பாபி நான் என்றபடி –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -ஸ்ரீ எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
நல்லதும் தீயதும் பகுத்தறியும் பண்பு வாய்ந்த பேர் அறிவாளராய் இருந்தாலும் –
அவ் எம்பெருமானாரையே ஏமாற்றுக்கு உட்படும்படி பகட்டுவது என் நெஞ்சு –
உண்மையிலே அன்பு அற்று இருந்தும் அது அன்பார்ந்தது போலே தன்னைக் காட்டும் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -– என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கை இங்கு நினைவு கூறுக –
தூய மனத்தகத்தே -எப்போதும் வைக்கும் பொருளை -வஞ்ச நெஞ்சில் வைத்து மாசு படுத்தி விட்டேனே -என்று இரங்குகிறார் –
எப்போதும் அவர்கள் த்யானம் பண்ணுகிறார்கள்-
நானோ காலை-மத்யானம் மாலை மூன்று வேளைகளிலும் த்யானம் செய்பவன் போலே நடிக்கின்றேன் –
அவர்கள் பிறர் அறியாது அடக்கமாக த்யானம் செய்வார்கள்-
நானோ மூன்று வேளைகளிலும் வாழ்த்துவதன் மூலம்
அதனை டம்பமாய் வெளிப்படுத்தி கொள்கிறேன் –

முப்போதும் வாழ்த்துவன் –
சர்வ காலத்திலும் –
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே -அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே -என்றும்
எதிராசன் வாழி எதிராசன் வாழி -என்று கொண்டு மங்களா சாசனம் பண்ணினாரே ஸ்ரீ ஜீயரும் –
சக்ருத் ப்ர்ஷ்டனுக்கு பிராயச் சித்தம் லகுவாய் இருக்கும் -அப்படி இன்றிக்கே
இதுவே யாத்ரையாக இந்த அக்ர்த்யத்தை பண்ணா நின்றேன் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் போல்வார்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு நிதி-
இங்கோ வஞ்ச நெஞ்சு –வஸ்துவோ வான் பொருள்..

அன்பும் ஞானமும் மாறாடுகிறது-மாறி மாறி வருமே ஸ்ரீ ஆழ்வாருக்கும் – ஸ்ரீ அமுதனாருக்கு அது போல்
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் போல் .எல்லாம் கலந்து ஒழிந்தோம் என்பர் ..அனுபவம் பிரேம தசையில்
வள ஏழ் உலகின் முதலாய -..அருவினையேன் ..எந்தாய் என்பேன் –நினைந்து நைந்தே –உன் பெருமை மா சூணாதோ -என்பர்
வைகுந்தா மணி வண்ணா -நைச்சயம் பாவித்து விலகுவாரோ என்று கலங்கிய அவனுக்கு
உன்னை சிக்கென பிடித்து கொண்டேன் -மாஸூசா என்பர் ஸ்ரீ ஆழ்வாரும்
பக்தர் பேசவும் பித்தர் பேசவும் பேதையர் பேசவும் -ஸ்ரீ கம்பர்
மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி…
பாவனத்வம் இல்லை ..தயை இல்லை ..விநயம் இல்லை ..வெட்கமும் இல்லை –
இருந்தும் பெரியோர் கேட்ட உன் திருவடி தாமரையை கேட்டேன்–
நல்லது ஒன்றும் இல்லை யோக்யதை இல்லை நைச்ய அனுசந்தான பாசுரம்-

என்னாம் இது அவன் மொய் புகழக்கே–
அவன் -அநந்தம் ப்ரதமம் ரூபம் –
த்வதீயம் லஷ்மணஸ்ததா -பலபத்ரஸ் த்ரீயஸ்து-கலவ் ராமானுஜ ஸ்ம்ர்தா-என்று ப்ரஹ்ம நாரதீயத்திலும் –
சேஷாவா சைன்யநாதோ வா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை -விதர்க்யாய மகா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் – என்று அபியுக்தராலும் –
பிரதிபாதிக்கப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய –
மொய் புகழ்க்கு –
அதி ஸ்லாக்யமான ப்ரபாபத்துக்கு –மொய் -அழகு –
அன்றிக்கே அசங்க்யேயமான ப்ரபாவத்துக்கு என்னுதல் –

அவன் மொய் புகழ்–
ஆதி சேஷன் லஷ்மணன் நம்பி மூத்த பிரான் -முன்பு யுகங்களில் -கலியில் ஸ்வாமி
பூதூரில் வந்து உதிர்த்த புண்யனோ
ஆழ்வாரோ
தூது நடந்த நெடுமாலோ-
ஆய் சுவாமிகள் திரு நாராயண புரத்தில் மா முனி பார்த்து கேட்டது போலே
யாதவ குலத்தை தூக்க கீழ் குலம் புகுந்த வராஹா கோபாலர் போலே –
ராமனுஜன்-பலராமன் தம்பி/ராமானுஜரோ பாஹ்ய குத்ருஷிகள் பர மதங்களை வீழ்த்தி –
அபி யுக்தராலும் நிகர் சொல்ல பட முடியாத பெருமை -அந்த ஸ்ரீ பார்த்த சாரதி போல

இது என்னாம் –
இது என்னாய் விடுமோ
இப்படிப் பட்ட மங்களாசாசனம் பண்ணுகிற இது -அவருடைய வைபவத்துக்கு என்னாய் தலைக் கட்டுமோ -என்றபடி –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் –
புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
நினைந்த எல்லாப் பொருள் கட்கும் வித்தாய் முதலில்
சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றால் போலே தலைக் கட்டுகையாலே
எத்தனை சாகாசம் பண்ணுகிறேன் என்று அநு தபிக்கிறார் –
திகசுசிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம் பரம புருஷயோ ஹம்யோகிவர்யா க்ரகண்யை –
விதிசிவச நாகாத்யைர் த்த்யாது மத்யந்த தூரம் தவ பரிஜன பாவம் காமயே காமவ்ர்த்தா –
என்று ஸ்ரீ ஆள வந்தாரும் இப்படியே அனுசந்தித்து அருளினார் இறே –

என்னாம் இது அவன் மொய்ப் புகழக்கே –
என் இழி தகைமை எல்லோருக்கும் தெரியும் ஆதலின் -நல்லன்பர் போலே நானும் நெஞ்சில் வைத்துக் கொள்ளின்
இழிவுடையார்ர் இடத்தும் இருப்பவர் தனா ஸ்ரீ எம்பெருமானார் என்கிற எண்ணம் ஏற்படும் ஆதலின்
அவருடைய-அழகிய புகழுக்கு இழுக்கு உண்டாகி விடுமோ -என்று அஞ்சுகிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading