ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி ரூபமாய் இருந்துள்ள –
ஸ்ரீ திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திறத்திலே -அதி ப்ரவணராய் இருக்குமவர்களுடைய –
கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீமன் நாதமுனிகளை –
தம்முடைய மனசாலே அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் அடியேனுக்கு மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
இதுகாறும் ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –
இனி ஸ்ரீ ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –
யோக முறையில் நேரே சாஷாத்காரம் பண்ணின ஸ்ரீ மாறன் இடம் இருந்து –
செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு இனியவர்களின் குணங்களில்
பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் ஸ்ரீ நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால்
அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் -என்கிறார் –
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –
ஆரப் பொழில் -சந்தனச் சோலைகள் உடைய
தென் குருகைப் பிரான் -அழகிய திரு நகரிக்குத் தலைவரான நம் ஆழ்வார் உடைய
அமுதம்-மிக்க இனிய
திருவாய்-திரு வாயில் இருந்து வெளி வந்த
ஈரத் தமிழின் -நனைந்து குளிர்ந்து உள்ள திருவாய் மொழி யினுடைய
இசை-இசையை
உணர்ந்தோர்கட்கு -அறிந்தவர்களுக்கு
இனியவர் தம் -பிடித்தவர்கள் உடைய
சீரை -குணங்களை
பயின்று -பழகி
உய்யும் -உஜ்ஜீவிக்கும்
சீலம் கொள் -வைபவம் உடையவரான
நாத முனியை -நாத முனிகளை
நெஞ்சால்-மனத்தால்
வாரி-ஆர்வத்துடன் அள்ளி
பருகும் -அனுபவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார்
என் தன் மா நிதி -எனது பெரும் புதையல் ஆவார் –
சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய பரம போக்யமான திருப் பவளத்தில
பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய
குணங்களிலே செறிந்து – தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீ நாத முனிகளை பெரு விடாயர் மடுவிலே புகுந்து
வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–
ஸ்ரீ நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் ஸ்ரீ நாதமுனி
நெஞ்சால் வாரிப் பருகும் ஸ்ரீ ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –இது அன்றோ நமது ஸ்ரீ அமுதனாருக்கு பஞ்சாம்ருதம் –
வியாசம் -வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் -சுகர் -ஐந்து பேர் அங்கும் -அது நிதி இதுவோ மா நிதி அன்றோ –
247 பாசுரம் -தமிழ் கடவுள் அன்றோ ஸ்ரீ அரங்கன் -ஈரத்தமிழ் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -முதல் நாலாயிரம் அத்யாபகர் அன்றோ –
திரு அத்யயன உத்சவம் -ஏற்பாடு –
நெஞ்சால் வாரிப் பருகும் -மானஸ அனுபவம் விஞ்சி -கால தத்வம் உடைந்து பெரு நீராக ஆச்சார்யர் கிருபை –
பகீரதன் கொணர்ந்த -கங்கை போலே -கண்ணி நுண் திருத் தாம்பு தொடக்கம் மேல் கோட்டையில் –
மற்ற தேசங்களில் திருப் பல்லாண்டு போலே -என் தன் மா நிதி -அமுதூறும் என் நாவுக்கே -போலே –
மதிர் மம-நான் கண்ட நல்லது -அர்த்த பரத்வ -தோள் மாறாமல் மா நிதி
ஆரப் பொழில் தென் குருகை –
திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்
நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு தர்சநீயமான திருக் குருகூருக்கு -ஆரம்-சந்தனம்
பிரான் –
சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் –
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
குருகைப் பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும் திருவாய் மொழி முகத்தாலும் –
நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி –
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் –
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -என்றபடி சோலைகள் சூழ்ந்த திரு நகரி குளிர்ந்த ஊர் –
அதன் கண் உள்ள ஸ் ஆழ்வாரும் தாபம் தீர்ந்து குளிர்ந்தவர் –
தம்மைப் போலே ஊரும் நாடும் உலகமும் குளிரும்படி செய்யும் பரம உபகாரகர் அவர் –
பிரான்-உபகரிப்பவர்-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்––3-2-11-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்––3-3-11-
கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன–3-4-11-
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் –4-5-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–5-4-11-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்–5-7-11-
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்–6-6-11-
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன–6-7-11-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன–6-8-11-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்–7-2-11-
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–
அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே
பரம போக்யமாய் கொண்டு –திருப் பவளத்திலே பிறந்ததே –
ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய் –
த்ரமிட பாஷா ரூபமான திருவாய் மொழி யினுடைய –
இசை -கானம் ராகாதி லக்ஷணங்களோடு கூடி –
உணர்ந்தோர்கட்கு -அப்யசித்து
பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –
இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை
உபதேசித்து அருளின –ஸ்ரீ பராங்குச நம்பி –
அமுதத் திருவாய் ஈரத் தமிழ்
அமுதம் போல் இனித்து அன்பினால் நனைந்து ஈரமான தமிழ் -திருவாய் மொழி -என்க
வாய் மொழி என்பதை –வாய் தமிழ் -என்கிறார் –
மனத்தால் நினைந்து -பேசாது வாயினால் மட்டும் பேசிய மொழி யாதலின் -வாய் மொழி -எனப்படுகிறது –
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில் ஈட்டில் –
அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –
என்று வியாக்யானம் செய்யப்பட்டு இருப்பது இங்கு அனுசந்திக்க தக்கது –
ஈரத் தமிழ் –
ப்ரேமார்த்ரா விஹ்வல கிற புருஷா புராணா த்வாம் துஷ்டுவுர் மத்ரிபோ மதுரைர் வசோபி -என்று
ஸ்ரீ மது சூதனனே -பிரேமத்தினால் நனைந்து நிலை குலைந்த வாக்கு படைத்தவர்களான பண்டைய
ஸ்ரீ ஆழ்வார்கள் இனிய மொழிகளாலே உன்னை துதித்தார்கள்-என்று ஸ்ரீ ஆழ்வான் அருளி செய்ததை அடி ஒற்றி –
அமுதத் திருவாய் ஈரத் தமிழ் -என்றார் –
சம்சார தாபத்தை தணித்தலின் ஈரத் தமிழ் ஆகவுமாம்–
புது கணிப்பு இன்றும் குறையாமல் இருக்கிறது-
பாலோடு அமுது அன்ன ஆயிரத்துப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே -8-6-11-
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து–9-7-11-
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
இனியவர் தம் சீரைப் பயின்று –
அவர்களுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை
விஸ்மரியாதே -க்ர்த்ஞராய்க் கொண்டு –
பயிலுதல் –
அனுசந்திக்கை –
உய்யும் –
அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை –
அந்த மதுரகவி ஆழ்வார் உடைய சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் –
அவர் பக்கலிலே க்ர்த்ஞராய் போந்த பின்பு -காணும் இவர் உஜ்ஜீவித்தது
இசை உணர்ந்தோர் –
பாவின் இன் இசை பாடித் திரிவனே -என்று தம்மைக் கூறிக் கொண்ட ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வர்
இசை உணர்ந்தவர்கள் என்க –
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -நின்று ஆலும் பொழில்–அசேதனமும் திரு வாய் மொழி பாடுகிறது–
சாகா சம்பந்தம் இருப்பதால் பாதித்து சாகா -கிளை / சாம வேதம்
வண்டினம் ஆலும் சோலை மயில் ஆடினதை பாடினது போல்–இவர் மதுர கவி ஆதலால் மதுர வாக்கியம் கொண்டாடுகிறார் ..
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சங்கப் பலகையில்-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே .ஏற்றி-
சங்கப் பலகை காட்டி கொடுத்தது–
சேமம் குருகையோ.. பெருமான் உனக்கு..நாமம் பராந்குசமோ நாரணமோ
ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ பெருமாள் ..ஒரு சொல் போருமோ உலகில் கவியே.
கலி 42 நாள் திரு அவதாரம்.
முதல் சங்கம் இடை சங்கம் நூல் இன்றும் இல்லை இலக்கணம் அப்புறம் தான் தொல் காப்பியம் அப்புறம் தான்
ஆதி காவ்யம் இல்லை இருப்பதில் இது பழசு அதனால் தொன்மை
கடைச் சங்கம் கி மு 9000 ஆண்டு முதல் சங்கம்/5450 -1750 வரை இடைச் சங்கம் / ஸ்ரீ ஆழ்வார் காலம் 3102 கி மு
திரு வள்ளுவர் –
குரு முனிவர் முத் தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழி சேய் என்கிறார்..
இரண்டாவது சங்கத்தில் தான் சங்கை பலகை–
கோ செங்கணான் கலி பிறந்து -500-வருஷம் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் காலத்துடன் ஒத்து போகும்
ஒவையாரும் –
ஐம் பொருளும் நாற் பொருளின் முப் பொருளும் அமைத்து பெய்த செம்பொருள்
வூரும் நாடும் உலகமும் தன்னை போல அவன் பெயரையும் தாள்களும் பிதற்ற அருளினார்
இனியவர் –பருகும் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான ஸ்ரீ பராங்குச நம்பி–
அவர் சீர் –
அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –
சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர் பரம்பரையினரான ஸ்ரீ பராங்குச நம்பி இசையோடு
ஸ்ரீ கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –
கற்றாரை கற்றாரே காமுறுவர் -என்றபடி -இசை வல்லுனரான ஸ்ரீ நாத முனிகள்-அவ்விசையிலும் ஈடுபட்டு
இனியவர் சீரைப் பயிலா நின்றார் என்க –
ஸ்ரீ குருகை வைபவம்- ஸ்ரீ பராங்குச நம்பி அங்கேயே இருந்து -3500 வருஷம் ஒரு பரம்பரை இருந்து வந்து இருக்கிறது-
செய்நன்றி உடன் அதனையே மீண்டும் மீண்டும் பயின்று உய்வு பெறுகிறாராம் ஸ்ரீ மன் நாத முனிகள்-
ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசத்தாலே அன்றோ
ஸ்ரீ நம் ஆழ்வாரை சாஷாத் கரித்து அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ மன் நாதமுனிகள் உஜ்ஜீவித்தது –
இந்நன்றி யறிவு ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு ஸ்வபாவமாய் அமைந்தது என்று –சீலம் கொள் நாதமுனி –என்பதனால் உணர்த்துகின்றார் –
சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து –
ஆழ்வார் தமக்கு உபதேசித்த அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –
சத்யா பாமா -என்பதை பாமா -என்று வழங்குவது போலே ரங்கநாத முனி என்பதை ஸ்ரீ மன் நாத முனி –
என்று அருளிச் செய்கிறார் -நாமைகதேசம் –
உபதேச பிரதானர் ஆச்சார்யர் சொட்டை குலம்
ஸ்ரீ ரெங்க நாத முனி-காட்டு மன்னார் கோவில்–அவதார ஸ்தலம் –823 -ஸ்ரீ மன் நாத முனிகள் –-93-திரு நக்ஷத்ரம் இருந்தவர் –
ஸ்ரீ ஆளவந்தார் –30-வயசுக்குள் ஆக்கி ஆழ்வான்-ஸ்ரீ கீதை உபதேசம் –66-திரு நக்ஷத்ரம் இருந்தார் ஸ்ரீ ஆளவந்தார் 976-1042-
ஸ்ரீ குருகை காவல் அப்பன் -200-வருஷங்கள் இருந்து இருக்க வேண்டும் –25-வயசில் ஸ்ரீ பாஷ்யகாரர் -1017-அவதாரம் என்பதால் –
ஸ்ரீ பெருமாள் –12 -திருக் கல்யாணம் –25 -பட்டாபிஷேகம் குறித்தது போலே –
இடைப்பட்ட -3100-காலம் இருண்ட காலம் —1600-வருஷம் ஸ்ரீ முதல் ஆழ்வார் முதல் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வரை
அருளிச் செயல்கள் வந்த தேஜஸ் மறைந்து –இதனாலே ஆச்சார்யர்களை பிறப்பித்து அருளினான் –
450 வருஷம் இடை வெளி ஸ்ரீ மன் நாத முனிகளுக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கும்
இன்பம் மிகு ஆறாயிரம் தொடங்கி-திரு குருகைப் பிரான் பிள்ளான் மூலம் -ஐந்து -எஞ்சாமை எதற்கும் இல்லை ..
பெருக்கி கொடுத்தவர் சுவாமி ஸ்ரீ ராமானுஜர் .
நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத் தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –
அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு
பிரி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு கூட அனுபவிக்கை –
பருகுகை –
அனுபவிக்கை –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
ஸ்ரீ எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -ஸ்ரீ மன் நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -ஸ்ரீ மன் நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ மன் நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -எனபது கருத்து –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
என் தன் மா நிதியே –
லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் ஸ்ரீ அமுதனாருடைய அத்யாவசாயம் –
தமக்கேயாக அவதரித்தார் என்று காணும் –
என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –
நவநிதியான தனங்களும் பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில் விலஷணமாய்
அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம் என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஆள வந்தாரும்
வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ!
ஊனம் இல் செல்வம் என்கோ! ஊனம் இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி வண்ணனையே!–3-4-7-
என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரிப் பருகும் மா நிதி–
ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின்–இதுவே -திவ்ய தேச நினைவே -உஜ்ஜீவிக்க வழி .
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply