ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –18-எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் குணங்களை சகல
ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு ஆன துணை -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
ஸ்ரீ திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக அவதரித்து அருளின ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு – அனந்யார்ஹரான
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய கல்யாண குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரித்து அருளின
ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தம் திரு உள்ளத்திலே வைத்து கொள்வதற்கு ஏற்புடைய பெருமை வாய்ந்தவரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
உடைய குணங்களை எல்லா ஆன்மாக்களும் உஜ்ஜீவிப்பதற்க்காக உபகரித்து அருளும்
ஸ்ரீ எம்பெருமானாரே எங்களுக்கு நல்ல துணை என்கிறார் –

இதில் நடு நாயகமான -சித்தரை சித்தரை -ஆழ்வார் திருவடி -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடி சம்பந்த சீர்மையை அருளுகிறார் –
நம அர்த்தம்-ததீய சேஷத்வம் கூற அவதரித்தார்.
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றியும் ஸ்ரீ திரு வாய் மொழியைப் பற்றியும் எங்கும் சென்று பாடித் திரிந்தவர்
ஸ்ரீ மாறன் அடி பணிந்த ஸ்ரீ சுவாமியையும் அடியார்களையும் அருளுகிறார்-என்றுமாம் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

எய்தற்கு -அடைவதற்கு
அரிய -எளிதில் இயலாத
மறைகளை -வேதங்களை
ஆயிரம்-ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் உள்ள
இன்-இனிய
தமிழால்-தமிழ்க் கவிதைகளால்
செய்தற்கு-பாடுவதற்கு
உலகில்-உலகத்தில்
வரும்-அவதாரம் செய்து அருளும்
சடகோபனை– நம் ஆழ்வாரை
சிந்தை உள்ளே -மனத்திற்குள்ளே
பெய்தற்கு-வைத்துக் கொள்வதற்கு
இசையும் -பொருத்தமான
பெரியவர்-பெருமை வாய்ந்த ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய
சீரை-நற்குணங்களை
உயிர்கள் எல்லாம் – அனைத்து ஜீவாத்மாக்களும்
உய்தற்கு-உஜ்ஜீவிப்பதற்க்காக
உதவும் -உபகரித்து அருளும்
இராமானுசன் -எம்பெருமானார்
எம் உறு துணை -எமக்கு உற்ற துணை வராவார்-

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்
அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து
அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –
ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை -தம் திரு உள்ளத்திலே வைக்கைக் குதகுதியாய் இருந்துள்ள –
பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன
அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -ஸ்ரீ எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
ஸ்ரீ சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று
ஸ்ரீ ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

சரம பர்வ நிலையில் உள்ளவர் என்பதால் சரம பாசுரம் இந்த பிரகரணத்தில் –
ஸ்ரீ கேசவ பக்தி- ஸ்ரீ பாகவத பக்தி -சிறப்பை அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜர் –

எய்தற்கு அரிய மறைகளை
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய
ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –

எய்தற்கு அரிய மறைகளை –
எய்தல்-அடைதல்
வேதங்கள் அளவில் அடங்காதவைகள் ஆதலின் முழுதும் அவற்றை பெற்றவர் எவரும் இலர் –
அதனால் எவராலும் எய்தற்கு அரியன வாயின வேதங்கள்-
இனி
அந்தணர் -அரசர்-வணிகர் என்னும் மூ வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு ஓதும் உரிமை இன்மையால்
அவர்கட்கு –எய்தற்கு அரியன-என்னவுமாம் –
இனி –
கத்யர்த்தா புத்த்யர்த்தா -அடைதல் அறிதற் பொருளது -என்றபடி – அடைதல் அறிதலாய் -பேர் அறிவாளற்கும்
தர்ம சாஸ்திரம் இதிஹாச புராணங்கள்-மீமாம்ஸா நியாயங்கள் என்னும் இவற்றின் உதவி இன்றி எளிதில் பொருள் காண
ஒண்ணாமை பற்றி –எய்தற்கு அரிய மறைகளை –என்றதாகவும் கொள்ளலாம் –
தன் பொருள்களை மறைத்துக் கொண்டு இருக்கும் அருமை தோன்ற -மறை-என்றார் வேதத்தை –

ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே –
ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் –
சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் –
தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் –
தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –
ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே –
ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

செய்தற்கு –
அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி-

ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு –
மறையினது அருமைக்கு நேர் எதிரான எளிமைத் தன்மையை காட்டுகிறது இச் சொல் தொடர் –
வேதம் அளவற்றது -இன் தமிழ் ஆயிரம் என்னும் அளவு பட்டது –
வேதத்தின் பொருளைத் தன்னுள் கொண்ட பிரணவம் மூன்றே எழுத்துக்களைக் கொண்டது ஆதலின் மிக சிறியது –
இது அங்கனம் அன்றிக்கே -ஆயிரம் கவியாய் -விரிந்து -தெள்ளத் தெளிய வேதப் பொருளை உணர்த்துவது –
வேதத்தின் பொருளைக் காண்பதற்கு இதிஹாச புராணங்கள் -மீமாம்ச நியாயங்களின்
உதவியை நாட வேண்டி இருக்கிற படியால் இடர்ப் பட நேரிடுகிறது –
இது தமிழ் ஆகையாலும் அளவு பட்டமையாலும் இனிது பொருள் படும்படியாய் இருக்கிறது –
தெரிய சொன்ன ஆயிரம் -என்றது காண்க –

ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இவை பத்தும் 4-7-11–
சீர் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இவை பத்தும் -5-1-11-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் -6-9-11-
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் -7-5-11-
அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் -7-8-11-

வேதம் ஓதுவதற்கு மாதர்க்கும் மூ வர்ணத்தார் அல்லாதாருக்கும் உரிமை இல்லாமையின் எய்தற்கு அரியதாய் ஆயிற்று –
இதுவோ இன்னார் இனியார் என்று இராமல் எல்லோருக்கும் உரியதாய் -தமிழாய் இருத்தலின்-எய்தற்கு எளியதாய் இருக்கிறது –
தமிழ் –
தமிழினால் ஆகியபாட்டுக்கு ஆகு பெயர்
இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளிச் செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி –

பகவான் பெருமை -உயர்வற உயர் நலம் உடையவன் -தொடங்கி 1000 கல்யாண குணங்களை பட்டியல் போடுகிறார்
உயர்வற உயர் நலம் உடையவன் தொடங்கி –பிறந்தான் உயர்ந்தே .முடித்தார்
திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் உடன் -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி காரணமாக வாய் வழியே வழிந்த திருவாய் மொழி-

பொறி உணர் அவை இலன்..இலன் இலன் மிகு நிறை இலன்.-என்று பரத்வம் பேசி
மின் நின் நிலையில சரீரம் வீடு முன் முற்றவும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து என்று உபதேசித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் –சௌலப்யம் பேசி
அதில் மேல் மேல் நிலை சௌசீல்யம் –ஆர்ஜவம் -போன்றவை -காட்டி
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்று
ஆழ்வார் உடலை வெண்ணெய் போலே விரும்பி யதை அருளி –
தமக்கு -ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என்று பிராட்டிமார் – நித்யர்
அனைவருடன் பரிமாறுவதை ஆழ்வார் இடமே காட்டி அருளியதை பாடி –
ஈறில வண் புகழ் என்றும் -பல பல கல்யாண குணங்களை காட்டி அருளினார் ஆழ்வார் –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-என்று சேஷத்வம் காட்டி
தன் பேறாகக் கலந்து -ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகள் அளவும் ப்ரீதி மிகுந்து -எதிர் சூழல் புக்கு பெறாப் பேறாக பெற்று
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே-என்று அவனே உபாயம் என்று அருளி
பூவில் நான் முகனை படைத்தான் -அவனே பராத்பரன் –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன் என்று உபதேசித்து
அர்த்த பஞ்சக ஞானம் ஊட்டி –

சூழ்ந்து அகன்று -பதிகம் மூலம் அர்ச்சிராதி கதியையும் விவரித்து அருளி அவா பெற்று வீடு பெற்ற சட கோபன்
ஸ்பஷ்டமாயும்-வேதம் போல் அங்க்யேயமாய் இன்றி ஆயிரம் இன் தமிழால் பாடி அருளினார் அருளினார்-

அத்யந்த சுலபமாய் தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்.
பக்தாம்ருதம–நடை விளங்கு திராவிட வேத சாகரம்.இது எல்லாருக்கும் சரண்–அது அசரண்யன் பெருமாளுக்கு மட்டும்
குருகூர் சடகோபன் வார்த்தை பதிகம் தோறும் வைத்து -இங்கு எல்லாரும் கை கூப்புவார்கள்
இப்படி அருளியதனால் தானே -ஸ்ரீ நாத முநிகள் –குருகூர் என்றும் –ஆயிரம் உண்டு என்றும் அறிந்து
பெரிய ஆதாரத்துடன் குருகூர் சென்று –நாதனுக்கு நாலாயிரமும் பெற்றான் வாழியே –என்று சொல்லும்படி –
பெற்று நமக்கு வழங்கினார் அருளிச் செயலை.-
இன்று நமக்கு அதுவும் முடிய வில்லை கண் நுண் சிறு தாம்பு அதற்கே
ஸ்ரீ ராமாயண சுருதி சாகரம்–24000 -ஸ்ரீ ரகு குல திலகன் சரிதம் சொல்லும்
இந்த பக்த அம்ருத சாகரம் ஸ்ரீ கண்ணன் சேஷ்டிதம் சொல்ல வந்தது–வானின் மீது ஏற்றும் இது–

உலகில் வரும் சடகோபனை –
ஏனையோர் தாம் செய்த வினைகளின் பயனை நுகர்வதற்காக பிறக்கும் இடம் இவ் உலகம் –
ஸ்ரீ சடகோபனோ -அத்தகைய இவ் உலகத்திலே உயிர் இனங்கள் மீண்டும் மீண்டும் பிறந்து உழலா வண்ணம்
காக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு ஈண்டு வாரா
வழிக் கண் தலைப் படுமாறு அருமறை கூறும் மெய்ப் பொருளை ஆயிரம் இன் தமிழால் காட்டுவதற்காகவே
அவதரித்து அருளினார் -என்கிறார் –
ஸ்ரீ சடகோபனுடைய அவதாரம் -ஸ்ரீ திருவாய் மொழி பாடுவதற்காகவே -எனபது கருத்து–

மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஸ்ரீ ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி ஸ்ரீ கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் ஸ்ரீ கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் ஸ்ரீ எம்பெருமான் என்பர் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 56- என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .

வரவாறு ஓன்று இல்லையால்–இன்ன வழியாக வந்தது என்று தெரியாது
வாழ்வு இனிதால் எல்லே–பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்
ஒருவாறு ஒருவன்–எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்
புகாவாறு–பிரவேசிக்க வேண்டாதபடி
உருமாறும்–தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -தானே
தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –
அன்றிக்கே
உருமாறும்-பரஞ்சோதி உருவை விட்டிட்டு அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்
ஆயவர் தாம்-ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்
சேயவர் தாம் –ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும் துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர்தாம் – என்கிறது அடுத்து
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்
மாயவர் தாம்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது
காட்டும் வழி-காட்டுகிற உபாயம்-

தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -ஸ்ரீ கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான் எனபது இதன் கருத்து –
இதனை அடி இடறி ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ தயா சதகத்தில் –
பூமி பாரத்தை குறைப்பது பேச்சளவிலே தான் –
அறியாமைக்கு உள்ளான அகல் ஞாலத்தவர் அறிய மறைமுடி உயர் மாடத்தில் ஒளிரும் கீதை என்னும்
விளக்கின் ஒளியால் அறியாமை இருளை ஒழிப்பது தான் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு நோக்கம் என்னும்
பொருள் படும் ஸ்லோகம் -89 – அருளி செய்து இருப்பதும் காண்க –

உபநிடதக் கருத்துக்களை ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் திரட்டிக் கொடுத்தது வட மொழியிலே தான் –
அதுவும் நன்கு விளங்க வல்லதாய் அமைந்திலது -அதனால் உபநிடதங்கள் தெளிவி படாததாய் ஆயிற்று –
வ்யாமிச்ரேனை வவாக்யேன புத்திம் மோஹயசீவமே -என்று –
கலந்து கட்டியான வாக்யத்தாலே என் புத்தியை மோஹிப்பிக்கிறாய் போலும் -என்று நேரே ஸ்ரீ கண்ணன் இடம் அர்ஜுனன் கூறுவது காண்க –
இதனால் அவரவர் தம் தமக்கு தோன்றியவாறு பொருள் கூறித் தம் தம் கூற்றினையே ஏற்றுக் கொண்டு உள்ளது
ஸ்ரீ கீதை என்று அதனைப் போற்றுவார் ஆயினார் –
ஸ்ரீ கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -ஸ்ரீ நம் ஆழ்வார்
ஆயிரம் இன் தமிழான திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தார் –
ஸ்ரீ கண்ணன் வட மொழியிலே ஸ்ரீ கீதை தந்தான் –
ஸ்ரீ நம் ஆழ்வார் இன் தமிழிலே ஸ்ரீ திருவாய்மொழி தந்தார் –
ஸ்ரீ கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
ஸ்ரீ திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்

உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும் –
இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும்
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே –

வரும் சடகோபனை
வரும் என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –
அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும் சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –
நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் –
அவருடைய திவ்ய சூக்திகள் இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும்
நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது-

சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து –
ஒரு நாயகத்திலும் –
நண்ணாதார் முறுவலிலும் –
பருஷம் பண்ணினவனை -பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-
இப்படிப்-பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை –

வரும் சடகோபனை –
வருதல்-அவதரித்தல்-
வெளிப்பட புலனாகாது மறைத்துத் தீங்கு இழைப்பவர்கள் சடர்கள் –
கூடவிப்ரிய க்ருச்சட -எனபது காண்க –
அஹிம்சாவாதிகளாய் அறநெறி செல்வாரைப் போலே பேச்சிலும் நடையிலும் தங்களை வெளியிலே காட்டிக் கொண்டு தூய அற நெறி
கூறும் மறையினையே பிரமாணமாக மதிக்காத பாஹ்யர்களாகிய பௌத்தரும் சமணரும் சடர்கள் ஆகிறார்கள் –
இங்கனமே வேதத்தை பிரமாணமாக மதிக்கும் வைதிகர்கள் போன்று தங்களை பேச்சிலும் நடையிலும் வெளியிலே
காட்டிக் கொண்டு மறை கூறும் உண்மை பொருளை பொய்ப் பொருளாக ஆக்குதலின் குத்ருஷ்டிகளும் சடர்கள் ஆகிறார்கள் –
அவர்களை சினந்து வெல்பவர் ஆதலின் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ சடகோபன் -என்று பேர் பெற்றார் –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி -4 10-5 – -என்று குத்ருஷ்டிகளையும் –சமணரும் சாக்கியரும் -என்று
பாஹ்யர்களையும் சேர விளித்து -அவர்களை வென்று சர்வ அந்தர் ஆத்மாவாக
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானை -ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் கோயில் கொண்டு உள்ள ஸ்ரீ எம்பெருமானை –
ஒப்புக் கொண்டு போற்றும்படி செய்வது காண்க –
இனி சம்சாரிகளான ஜனங்களுடைய சடத் தன்மையை -ஒளித்து தீங்கு இழைக்கும் மனப் பான்மையை –
ஸ்ரீ திருவாய் மொழி போக்குதலின் -ஸ்ரீ சடகோபன் என்று பேர் பெற்றார் என்று கொள்ளலுமாம் –
உற்றார் உறவினர் என்று பாராது அவர்களையும் ஏமாற்றி பணம் ஈட்டும் நாட்டம் கொண்டவனை
சடமதி -ஏமாற்றும் எண்ணம் கொண்டவன் -என்று குறிப்பிட்டு -அது பக்தர் அல்லாதாருடைய லஷணம்-என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் –
பரம சூஹ்ருதி பாந்தவே களத்ரே
சூதத நயா பித்ரு மாத்ரு ப்ருத்யவர்க்கே
சடமதி ருபயாதி யோரத்த த்ருஷ்ணாம்
தம தம சேஷ்ட மவேஹி நாச்ய பக்தம்- -3 7-10 ஸ்லோகம் – – -என்று
நெருங்கிய நண்பன் இடத்திலும் -உறவு உடையான் இடத்திலும் மனைவியின் இடத்திலும் மகன் இடத்திலும் மகள் இடத்திலும்
தகப்பன் இடத்திலும் தாயினிடத்திலும் பணி ஆட்கள் இடத்திலும் -ஏமாற்றும் எண்ணம் படைத்தவனாய் –
எவன் பணத்தில் ஆசை கொள்கிறானோ –அந்த கீழ் பட்ட செயலை உடையவனை ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லாதவனாக அறிக –
அத்தகைய சடமதியை –
ஒரு நாயகமாய் – என்னும் திருவாய் மொழியிலே பக்தன் ஆக்கும் ஸ்ரீ நம் ஆழ்வாரை
ஸ்ரீ சடகோபனை எனபது மிகவும் ஏற்கும் அன்றோ –
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம் -சடர்களுடைய புத்தியை -ஏமாற்றும் எண்ணத்தை
கெடுப்பவரான ஸ்ரீ சடகோப முனிவனை வந்திக்கின்றேன் -என்றது காண்க –

சிந்தை உள்ளே
தம்முடைய திரு உள்ளத்திலே –பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய் ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு –

இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும் –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –

பெரியவர் –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே-
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய

சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்றும்
இப்படி ச்லாக்கிக்கப்பட்ட கல்யாண குணங்களை –

சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
ஸ்ரீ சடகோபனை சிந்தை யுள்ளே வைப்பது இசைந்து -பொருந்தி இருக்கிறது -ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருக்கு
அதற்க்கு காரணம் -அவர் பெரியவராய் இருத்தல்-
ஸ்ரீ நம் ஆழ்வார் பெரியன் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பெரியார் –
பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

புவியும்-இவ்வுலகமும்
இருவிசும்பும்-விசாலமான மேல் உலகமும்
நின்னகத்த-உன்னிடத்தே உள்ளன
நீ-உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ
என் செவியின் வழி புகுந்து-எனது காதின் வழியே புகுந்து
என்னுள்ளே –என் பக்கல் இரா நின்றாய்
அவிவின்றி-அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்
ஆன பின்பு
யான் பெரியன்—நானே பெரியவன்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்-நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ
ஊன் பருகு நேமியாய்–அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை
திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே
உள்ளு–இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் -அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய
பெரியரானார் ஸ்ரீ நம் ஆழ்வார் -அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –

இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது -ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –
ஆசார்யனை தம் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து உள்ளது இவரது இறுதி நிலை வாய்ந்த பெருமை என்பது
தோன்ற –பெரியவர் –என்றார் ஆகவுமாம்-
இறுதி நிலை வாய்ந்த ஸ்ரீ அமுதனார் அதனாலாய பெருமையை குறிப்பிடுவது பொருத்தம் உடையது அன்றோ –
இனி பெரியவர் என்று
பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-
ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்யா நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்

உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகலசம்சாரிகள் உடையவும் –

உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக –
இது ஒழிந்த உபாயங்கள் எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –

உதவும்
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்
ஸ்ரீ எம்பெருமானார் உபதேசிப்பது-

உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க-

உயிர்கள் எல்லாம் -என்கையாலே –
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரி நியமம் இல்லை -என்பது தெரிகிறது –
தேக சம்பந்தமான துறையாயின் அதிகாரி நியமம் இருப்பதற்கு இடம் உண்டு –
இது ஆத்ம சம்பந்தமான துறை யாதலின் அது இருப்பதற்கு இடம் இல்லையே
ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே – குரு பரம்பரா சாரம் -என்று
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய ஆசார்ய நிஷ்டையே அநாதி யான நல் வழி என்று துணிவதும் –
ஸ்ரீ மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -ஸ்ரீ எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –

ஸ்ரீ இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் –உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே –
பெரியவர் என்ற பதத்துக்கு –
ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் –
என்று பொருள் ஆகவுமாம்-

எம் உறு துணை –
ஸ்ரீ பெரிய ஜீயர் உரையில் -எனக்கு என்று உரை காண்கையாலே-
என் உறு துணையே -என்று-பாடம் இருக்கலாம் என்று தோற்றுகிறது –
உறு துணை-சீரிய துணை –
ஆக்கம்-செல்வம் -உண்டேல் துணையாவார் போல்வர் சுற்றத்தவர் –
ஆக்கத்தில் பங்கு பெரும் நோக்கம் அவர்களது –
ஸ்ரீ எம்பெருமானாரோ -தனக்கு என்று ஒரு பயன் இன்றி உயிர் உய்வதற்கு உதபுவர் ஆதலின் – உறு துணையானார் -என்க –
நாமும் முயன்றால் பிறரும் அதற்கு உதவும் துணை யாவார் –
அங்கன் அன்றி தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் -ஸ்ரீ எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் –
உறுகின்ற துணை உறு துணை –

எம் உறு துணையே
சகல ஆத்மாக்களும் தம் தம் ஆசார்யர் பற்ற அதன் மூலம் இராமானுசன் அடியார்களாகி -மோஷம் பெறலாம்
மோர் காரி – வூமை அடைந்தது அறிவோமே
ஸ்ரீ ஆழ்வார் எஞ்சான்று கண்டு கொள்வது . என்று .அருள — இவரோ கண்டு கொண்டேன் .அவன் பொன் அடி
காடு மேடு அடங்கலும் மேவிய பொன் அடி- வித்யுத் மக்களின் மேல் இருக்கும் அடி
பொன் பிராப்யம் பிராபகம் இரண்டும் தீட்டு கிடையாது .
த்வத் பாதாரவிந்தம் வைக்க பிரார்த்திப்பார்கள் அவனை –
மேவினேன் அடியை தேவு மற்று அறியேன் இரண்டும் உண்மை
பாவின் இன் இசை பாடி திரிவனே
இடை வெளி இல்லை.
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானுக்கும் இடம் இல்லாத படி…
என் நெஞ்சுள் நிறுத்தினான்-

மிக்க வேதியர் ஆழ்ந்து உள் பொருள் ததீய சேஷத்வம்.
நிற்கப் பாடி நெஞ்சுள் நிறுத்தினான்-நெஞ்சில் இல்லை –நெஞ்சுள் -உள்ளேயே ஸ்தாவர பிரத்திஷ்டை ஆகும் படி
எதுவும் நில்லாத நெஞ்சுள் நிறுத்தினான்.
பாடி நிறுத்தினான்.
ஸ்ரீ ஆழ்வார் பாட பாட கிருபையால் நெஞ்சுள் நிறுத்தினான்
என் -தாழ்ந்த . நெஞ்சுள் உள் பகுதியில் பகவான் ஜகத்தை நிறுத்தினால் போல.

கூப்பிடு கேட்க்கும் இடமும் பாட்டு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் -எல்லாம் /வகுத்த இடமே என்று இருக்கும் நிலையே வேண்டும்
தேனார் கமல கொழுநன்தானே வைகுந்தம் தரும் —
பெரியவர் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பற்றி உள்ள எல்லோரும் உஜ்ஜீவிப்பது உறுதிதானே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading