ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –14- கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னைப் பிரியாமையாலே –
புருஷார்த்த லாபத்துக்கு துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் – விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான –
ஸ்ரீ குலசேகர பெருமாள் -சூத்ரே மணி கதா இவ -என்னும்படி முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே –
சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து – தம்முடைய திவ்ய சூக்திகளாலே நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும்
பெரியோர்களுடைய திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட மாட்டார் –
ஆன பின்பு புருஷார்த்த லாபத்துக்காக – துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் .-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை கை விட மாட்டார் –
ஆகையாலே இனி பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை இல்லாதவன் ஆயினேன் -என்கிறார் –

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே -14 –

பத உரை –
கொல்லி காவலன் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
கலைச் சொல் -சாஸ்திர சொற்களை
பதிக்கும் -பதிய வைத்து இருக்கும்
கவி -கவிகளை
பாடும் -பாடுகிற
பெரியவர் -பெருமை உடையவர் களுடைய
பாதங்களே -திருவடிகளையே
துதிக்கும் -ஸ்தோத்திரம் செய்யும்
பரமன் -தன்னிலும் மேற்பட்டவர் வேறு எவரும் இல்லாத
இராமானுசன் -எம்பெருமானார்
என்னை சோர்விலன் -என்னைக் கை விட்டு விட மாட்டார்
கதிக்கு -ஆகையால்-பேற்றுக்கு
பதறி -ஆத்திரப்பட்டு
வெம் கானமும் -வெம்மை வாய்ந்த காட்டிலும்
கல்லும் -மலைகளிலும்
கடலும் -சமுத்ரத்திலும்
எல்லாம் -எல்லா இடமும்
கொதிக்க -கொதிக்கும் படியாக
தவம் செய்யும் -தவம் புரியும்
கொள்கை ஆற்றேன் -கொள்கை இல்லாதவனாயினேன் –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் ரத்னங்களைப் பதித்தால் போல் சாஸ்திர சொற்களை பதித்த கவிகளை –
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள வைபவத்தை உடையவர்களுடைய திருவடிகளையே யேத்துமவராய் –
பாகவத விஷய பிரேமத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லாத படி இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட்டு நீங்கு கிறிலர்-
ஆதலால் ப்ராப்ய லாபத்தை பற்ற த்வரித்து-

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- என்கிறபடியே
அத்யுஷ்ணமான காட்டோடு மலையோடு கடலோடு வாசி யற-எல்லா இடத்திலும் –
சர்வ அவயவங்களும் ஒக்க நின்று -கொதிக்கும் படியாக தபச்சுக்களைப் பண்ணும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் –
அன்றிக்கே –
வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் செய்யும் கொள்கை -என்றதுக்கு
இவனுடைய தப க்ரௌர்யத்தைக் கண்டு -அவை தானும் நின்று பரிதபிக்க -அவ்வவ ஸ்தலங்களிலே
தபசு பண்ணா நிற்கும் ஸ்வபாவம் என்றும் சொல்லுவார்கள் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி –என்றதற்கு –
ஸ்ரீ குலசேகர பெருமாள் அனுபவ பரீவாஹா ரூபமான ச்வோக்திகளை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போலே நிறைத்து வைத்ததாய்-
சாஸ்திர ரூபமாய் இருந்துள்ள கவிகள் என்னவுமாம் –
கொள்கை -ஸ்வபாவம் / சோர்வு -பிரிவு /சோர்விலன் -என்றது பிரிவு இலன் என்றபடி –
(சோர்வை இல்லமாக கொண்டவன் என்று கொள்ளக் கூடாதே என்று இத்தையும் பரம காருண்யத்தால் காட்டி அருளுகிறார் )

மாஸூசா -போகும் இடம் பெருமையும் பார்த்து பார்த்தும் -நாம் செய்த பாபங்களை பார்த்தும் –
நம் இயலாமை கண்டும் தவிப்போமே -அந்தக துக்கம் போக்க –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -சோர்விலன் –
இவையும் கொதிக்கும் கடும் தவத்தால் -தவம் செய்தவர்களும் கொதிக்க –
பாடும் பெரியவர் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ பிள்ளான் போல்வார் – என்றுமாம் –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

தேட்டரும் திறல் –அடியார் ஈட்டங்கள் -அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர்களே பாடும் பெரியவர்-
உபாயத்தில் கண் வைக்காமல் -உபேயம் புத்தி பண்ணி கைங்கர்ய நிஷ்டராகவே இருக்க சரம தசையில்
உபதேசித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார்-
அநந்யார்ஹம் திடமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் அன்றோ –நம் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி
கொல்லி நகர் என்று சொல்லப் படுகிற-திரு வஞ்சிக் களத்துக்கு ரஷகரான -ஸ்ரீ குலசேகர பெருமாள் -சாஸ்திர சொல்லுக்களினுடைய
தாத்பர்ய விஷய பூதங்களாய் இருக்கிற பகவத் ஸ்வரூப-ரூப குண விபூதிகளையும் -தத்வ ஹித புருஷார்த்தங்களையும்
முத்துக்களையும் ரத்னங்களையும்-முகம் அறிந்து கோக்கும் விரகரைப் போலே -விசதமாக தத் தத் ஸ்தானங்களிலே சேர்த்து

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1 என்று தொடங்கி–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11– என்னும் அளவாக -திவ்ய பிரபந்த ரூபேண அருளிச் செய்த -போக்யமான கவிகளை –

காவலன்-
ரஷகன் –

கொல்லி காவலன்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்று அவரே கூறிக் கொள்வது காண்க –
கூடல் என்னும் பாண்டிய நாட்டு தலை நகர் ஆகிய மதுரையும் –
கோழி என்னும் சோழ நாட்டு தலை நகராகிய உறையூரும் –
வென்றி கைப்பற்றியவையே யாதலின் சொந்தத் தலை நகராகிய கொல்லி நகரை-மட்டுமே கூறினார் அமுதனார்
கொல்லி என்பது -கொல்லி மலை சூழ்ந்த நாடு என்பர் சிலர்
இங்கே கூடல் கோழி என்னும் நகரங்களோடு ஒரு கோவையாக கூறலின்-கொல்லி -என்பது நகரமே என்று உணர்க –
கொல்லிக் கண்ணன் -என்று புலவர் ஒருவர் பேர் பெற்று உள்ளார் –ஆதலின் அது நகரமே -என்க-

கோழியும் கூடலும்– ஒரு வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் –

நம் சம்பிரதாயத்தில் பெருமாள்–ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
பெரிய பெருமாள்– ஸ்ரீ ரெங்கத்தில் மூலவர்
நம் பெருமாள் -உத்சவர்
இதனால் இவரும் பெருமாள் -பெயரை பெற்றார் .-அதனால் பெருமாள் திரு மொழி .
தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு –

சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே-
கலை -சாஸ்திரம்
கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
ஸ்ரீ திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்துவனவாய் இருத்தலின் –கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஸ்ரீ ஆழ்வார் –
அங்கனமே ஸ்ரீ குலசேகர பெருமாள்
திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –
ஏக தேச உருவகம் ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-––என்பது பெருமாள் திருமொழி
சொல்லின் இன் தமிழ் மாலை-இதனால் சொற்களின் சேர்க்கை அழகு கருதப் படுகிறது –
பதங்கள் -சொற்களின் இணைப்பை சய்யை-என்பர் வட நூலார் –

இனி கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி – இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும்
தன் சொற்களை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போன்று அழகு பட இணையக் கோத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –

சூத்திர மணி கணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை–
நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத நூல் போல இருக்கிறான்..
மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி கணாம்
ஏகமேவ -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -நாராயணனே
நமக்கே -நாமோ பலர் –
அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி-
தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம்
சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை ஸ்ரீ அரங்கன் இடம் ஆரம்பித்து ஸ்ரீ நாரணன் இடம் முடித்தார்
இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள் தெளிகின்றோம் அருளி செயல்களால்-ஸ்ரீ வேதாந்த தேசிகன்
பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..
இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்

பாடும் பெரியவர் பாதங்களே –
தம் தாமுடைய ப்ரீதிக்கு போக்குவீடாய்-பாடா நின்றுள்ள வைபவத்தை உடையரான –
நம் ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆள வந்தார் -ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி -ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் – முதலான ஞானாதிகருடைய திருவடிகளையே-

பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின்
இன்பமும் -சேர்ந்து பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –

துதிக்கும் பரமன்
குரு பாதம் புஜாம் த்யாயேத்-குரோர் நாம சதா ஜபேத் -குரோர் வ்ர்த்தாஸ் சகதயேத் குரோர் அந்ய நபாலயேத்-அர்ச்சநீயஸ்
சவந்த்யஸ் கீரத்த நீயஸ் ச சர்வதா -என்கிறபடியே சதா ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு -போந்து –
அந்த பாகவத நிஷ்டைக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி உத்க்ருஷ்டரான –
யவரேலும் என்னை யாளும் பரமர் -என்றும் –
நம்மை அளிக்கும் பிராக்கள் -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அப்படியே அருளிச் செய்தார் இறே –

பாதங்களே துதிக்கும் பரமன்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –

பொன்னி திரைகையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்-1-1-

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

அம்மான் தன் அடி இணைக்கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ வணுகு நாளே –1-3-

மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே-2-4-

அங்கை யாழி அரங்கனடியிணை தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் -3-9-

வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி -4-11-

தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகரத் துயின்றவனே -8-10-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்தென் காகுத்தன் தன்னடி மேல் தாலேலோ வென்றுரைத்த தமிழ் மாலை -8-11-

அம்மானை யிராமன் தன்னை ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே-10-6-

தில்லை நகரத் திருச் சித்ரா கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான்
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும் அவர் கண்டீர் எங்கள் ஆளும் பரமரே -ஸ்ரீ ஆழ்வார் போலே
மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஸ்ரீ ஆழ்வானை இட்டு ஸ்ரீ அமுதனாரை கொண்டாரே

அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
ஸ்ரீ எம்பெருமானாரோ அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை எய்தினமையின்
ஸ்ரீ எம்பெருமானாரை பரமன் -என்கிறார் –
பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்
என்னைச் சோர்விலன் –
என்னை -தானே அபிமானித்து ஏற்ற என்னை
நானாகப் பற்றினால் அன்றோ விட்டுப் பிரிய இடம் உண்டாகும் என்பது கருத்து –
சோர்வு -பிரிவு

இராமானுசன் என்னை சோர்விலனே –
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை -பரகத ச்வீகாரமாக அங்கீ கரிக்க பட்ட –
சோர்விலன்-இனி விட மாட்டார் –
சோர்வு -பிரிவு சோர்விலன் -என்றது பிரிகிறிலன்-என்றபடி –
ஆன பின்பு -பிராப்யத்திலே த்வரித்து – ப்ராபகாந்தரங்களிலே கண் வைக்கும் ஸ்வபாவத்தை தவிர்ந்தேன் -என்கிறார் .-
பிராபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று –ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –
ப்ராபகாந்தரம் அஞ்ஞருக்கு உபாயம் – ஞானிகளுக்கு அபயம் -என்னக் கடவது இறே-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை பாராது காப்பிடும் பான்மையினன் தாள் பேராத வுள்ளத்து
ஸ்வாமியை அண்டை கொண்ட பலத்தால் என்னை -என்று சாத்விக அஹங்காரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

கதிக்கு பதறி –
பரம புருஷார்த்தத்துக்கு த்வரித்து –

வெம் கானமும் கல்லும் கடலும்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- -என்றும் –

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
தமதா இமையோர் உலகாள கிற்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—பெரிய திருமொழி-3-2-1- -என்றும் –
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்துதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–பெரிய திருமொழி-3-2-2- -என்றும்
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –திரு விருத்தம்-66-என்றும்-
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –அமலனாதி பிரான் -என்றும்-
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால் அக்காவே தீ வினைகள் ஆய்ந்து- என்றும்–மூன்றாம் திருவந்தாதி – 76–சொல்லுகிறபடியே –
அதி க்ரூரமான காடுகளிலே இருந்தும் பர்வதாக்ரங்களிலே வசித்தும்
சீதளமான தீர்த்தங்களிலே அவகாஹித்தும் –
பஞ்சாக்னி மத்யத்தில் நின்றும்
எல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் -எல்லா அவயவங்களும் ஒக்க பரிதபித்து-க்லேசிக்கும்படியாக தபச்சுக்களை பண்ணும் –

கொள்கை அற்றேன்
ஸ்வபாவம் போகப்-பெற்றேன் –கொள்கை -ஸ்வபாவம் –
அன்றிக்கே –
வெம் கானமும் –கொள்கை அற்றேன் -என்றது –
எதாத்த்ரிஷ்டி மவஷ்டப்ய நஷ்டாத்மா நோல்ப புத்திய ப்ரபவத்வுக்ர கர்மணா
ஷயாய ஜகதோ ஹீத காமமாஸ்ரித்யு துஷ்ப்பூரம் டம்பமா நம தான் வித மோஹாந்தர்
ஹீத்வா சத்க்ரஹான் ப்ரவர்த்தந்தே சூசிவ்ரதா-என்று கீதையிலும் –

பஹூபிகாரணை ர்த்தேவோ விச்வாமித்ரோ மகா முனி -லோபிதக்கோபி தச்சைத
பசாசாபிவர்த்ததே– நஹ்யச்திவ்ரஜி ந கிஞ்சித் தர்ச்யதே சூஷ்ம மப்யதா -நதீயதே
யதித்வச்ய மனசோய தபீப்சிதம் -விநாசயே தத்ரை லோக்ய தபஸா ச சராசரம் –
வ்யாகுலஸ் சதிசஸ் சர்வ நாசா கிஞ்சித் பிரகாசதே –சாகர ஷூபிதாஸ் சர்வே விசீர்யந்தேச சர்வத –
பிரகம்பதேச பிரத்வீ வாயுர்வாதி ப்ர்சாகுலா — பாஸ்கரோ நிஷ்ப்ரபஸ் சைவ மகர்ஷேஸ் தஸ்ய தேஜஸா –என்று ஸ்ரீ ராமாயணத்திலும் –

தஸ்ய தூமஸ் சமுத்பன்ன தூமோக்நிசத போமய-திர்ய கூர்த்தவ மதோலோகோ நதபத் விஷ்வ கீரித –
திவிச்த்தாது -நசக்துவன் –என்று பாகவதத்திலும் -சொல்லுகிறபடியே –
இப்படி ப்ராப்யாந்தரங்களுக்காக தபச்சுக்களை பண்ணி –லோகத்துக்கு எல்லாம் ஷோபத்தை பண்ணும் ஸ்வபாவம்
போகப் பெற்றேன் -என்கிறார் -என்னவுமாம் –

கதிக்கு பதறி கொள்கை ஆற்றேன் –
பேற்றை எவ் வழி யினாலாவது பெற்று விட வேண்டும் -என்று ஆத்திரப்பட்டு –
மிகக் கொடிய தவம் செய்ய எக்ல்காலத்திலும் நான் முயல மாட்டேன் -என்றபடி –
தவம் செய்யுமவர்கள் -கானகத்திலும் -மலைகளிலும் -கடல்களிலும் இருந்து –
வரும் துயரத்தை பொருள் படுத்தாமல் -தவத்தில் நிலை நிற்பர்கள்-

வெம் கானம் -வெம்மையான கானம் -பண்புத் தொகை
கல்-மலை
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–-பெரிய திருவந்தாதி – 68-
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் -திரு நெடும் தாண்டகம் – 13– என்று
முறையே ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அருளி உள்ளமை காண்க –

ஸ்ரீ நைமிசாரண்யம் முதலிய கானகங்களிலும்
ஸ்ரீ திருமலை முதலிய பர்வதங்களிலும்
கடலிலும் பலர் தவம் புரிந்து உள்ளமை புராணங்களில் காணலாம் –

ப்ராசீன பர்ஹீஷ் -என்பவருடைய புதல்வர்களாகிய ப்ரசெதசர் -பதின்மர் பதினாயிரம் ஆண்டுகள்
கடலுக்குள் இருந்து தவம் புரிந்து கடவுளைக் கண்டதாக ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம் – 4- அத்யாயம் – 30 –கூறுகிறது –

கடல் என்பது உப லஷணமாய் நீர் நிலைகளையும் குறிக்கும் –
ஸௌபரி நீருக்குள் நெடும் காலம் தவம் புரிந்ததாக புராணம் கூறுகிறது –

எல்லாம் கொதிக்க –
தவம் புரிவோர் உடலில் உறுப்புக்கள் அனைத்தும் கொதிக்கும்படியாக -என்றபடி
இனி –வெம் கானமும் கல்லும் கடலும் -இவை அனைத்தும் தவம் தணலின் வெம்மை தாங்காது
கொதிக்கும்படியாக -என்று உரைப்பதும் உண்டு –
ஹிரண்ய கசிபு தவம் செய்யும் போது –
தஸ்ய மூர்த்த்ன ச்சமுபந்த ச்தூமோக்நிச்த போமய திர்யக் ஊர்த்த்வ மதோலோகான்
அதபத் விஷ்வகீரித க ஷூபுர்நத்யுதன்வந்த சத்வீபாத் ரிச்ச்சால பூ நிபேதுஸ் சக்ர ஹாச்தாரா
ஜஜ்வளுச்ச திசோதச -பாகவதம் – 7-9 49-என்று
அந்த ஹிரண்ய கசிபுவினுடைய தலையிலிருந்து தவத்தின் வடிவமான புகையோடு நெருப்பு உண்டாயிற்று –
அது இடையிலும் மேலும் கீழும் உள்ள உலகங்களை நாலு புறங்களிலும் பரவித் தபிக்கும்படி செய்தது –
ஆறுகளும் கடல்களும் கலங்கின -தீவுகள் மலைகளுடன் கூடிய பூமி நடுங்கியது –
கிரகங்களுடன் கூடிய நஷத்ரங்கள் விழுந்தன -திசைகள் பத்தும் தீப் பற்றியவைகளாய் ஜ்வலித்தன – என்றபடி
உலகம் நிலை கொள்ளாது தவித்தமை காண்க –

கொள்கை -ஸ்வபாவம் என்பது ஸ்ரீ ஜீயர் உரை

ஆசார்யர் அபிமானமே உத்தாரகம் -ஆசார்யர் கைங்கர்யமே காலஷேபம் என்று இருக்க வேண்டும்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading