ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
———————————–
ஸ்ரீ அம்ருதா ஸ்வாதிநீ -ரஹஸ்யங்களில் நான்காவது-ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி –
ஸ்ரீ ரெங்கத்தில் -அருளிச் செய்யப்பட்டவை
மூன்றாவதான ஸ்ரீ தத்வ சிகாமணி லுப்தம்
இதில் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய ஸ்ரீ நியாய தத்வ க்ரந்தத்தின் மங்கள ஸ்லோகம் பிரமாணமாக உதாஹரிக்கப் பட்டுள்ளது
மங்களா சரணம் -அவதாரிகை -சாத்விக புராண உபாதேய தமத்வம் -வராஹ புராண ஏற்றம் -வக்த்ரு வை லக்ஷண்யம் –
வராஹ அவதாரத்தின் உத்கர்ஷம் -ஸ்ரோத்ரு வை லக்ஷண்யம் -சரணாகதி பிரகரணத்தின் உத்கர்ஷம் –
வராஹ சரம ஸ்லோகத்தின் பெருமை -ஸ்லோக த்வயத்தின் சமுச்சிதார்த்தம்–
ஸ்த்திதே மநசே விவரணம் -ஸூஸ்வஸ்தே சரீரே விவரணம் -தாது சாம்யே ஸ்த்திதே விவரணம் -சதி சப்தார்த்தம் –
ய சப்தார்த்தம்-நர சப்தார்த்தம்-ஸ்மர்த்தா சப்தார்த்தம்-விஸ்வரூப சப்தார்த்தம்-மாம் சப்தார்த்தம்-அஜம் சப்தார்த்தம்-
உத்தர ஸ்லோகஸ்ய சரண்ய க்ருத்ய பரத்வம் -தத சப்தார்த்தம்-தம் சப்தார்த்தம்-மத் பக்த சப்தார்த்தம்-
ம்ரியமாண சப்தார்த்தம்-து சப்தார்த்தம்-காஷ்ட்ட பாஷாண சந்நிப சப்தார்த்தம்-அஹம் ஸ்மராமி விவரணம் –
நயாமி சப்தார்த்தம்-பரமாம் கதிம் விவரணம் -ஸ்லோக த்வய சமுச்சித அர்த்தம்
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் -வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம் –
மங்களா சரணம்
ஸ்த்திர சர ஜெகன் மாது ஷோண்யா க்வசித் சதுர அர்ணவீ விபூதி சபதி க்ரோட க்ரீடாம் விபாவயத ப்ரபோ
ஸ்ருதி பரிபண ஸ்லோக த்வந்த் வாத்மநா பரி பக்த்ரிமோ ரமயது மநஸ் சத்துவ அவஸ்தா நாம் ரஹஸ்ய சிகா மணி
க்வாபி கல்பாந்த வே சந்தே குரதக்நே சம் உத்த்ருதாம்
வஹதே மேதிநீம் முஸ்தாம் மஹதே போத்ரிணே நம
க்வாபி -ஒரு
கல்பாந்த வே சந்தே -பிரளய கால கடலாகிய குட்டையில்
குரதக்நே -கால் குளம்பே அளவாய் உள்ள
சம் உத்த்ருதாம் -கிடந்தது எடுக்கப் பட்ட
வஹதே மேதிநீம் -தரித்துக் கொண்டு இருக்கிற பூமியாகிய
முஸ்தாம் -கோரைக்கிழங்கை
மஹதே போத்ரிணே நம -மிகப்பெரிய ஸ்ரீ மஹா வராஹ நாயனாருக்கு நமஸ்காரம் –
——–
அவதாரிகை
திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு
வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண் மகளார்
கருத்து ஒன்ற ஆதி வராஹம் உரைத்த கதி அறிவார்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –
——–
சாத்விக புராண உபாதேய தமத்வம் –
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேத மா மயம் பிரதரிஷ்யிதி–ஆதி -1-293-என்கிறபடியே வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக
ப்ரவர்த்தங்களான புராணங்களில் சங்கீர்ண ராஜஸ தாமச புராணங்களுக்குக்
காரண தோஷமும் -பாதக ப்ரத்யயமும் உண்டான படியால் இவற்றை ஆதரிக்குமவர்கள்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மலிந்து வாது செய்வீர்களும்-என்று வேத பாஹ்ய கோடியிலே கோப்புண்டார்கள்-
சாத்த்விக புராணங்களுக்குக் காரண தோஷமும் பாதக ப்ரத்யயமும் இல்லாத படியாலும்
வைதிக பரிக்ரஹ பிராஸுர்யத்தாலும் இவையே உப ப்ரும்ஹணங்களிலே உபாதேய தமங்கள்
—-
வராஹ புராண ஏற்றம் –
இவை தம்மில் ஸ்ரீ வராஹ புராணம்
பாசி தூர்த்துக் கிடந்த பார் மாடிக்கு பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே –என்றபடியே
ஒன்றாலும் சலிக்க ஒண்ணாத படி -தத்துவ ஹித புருஷார்த்தங்களில் ஸூ ப்ரதிஷ்டிதமாய் இருக்கும்
—————-
வக்த்ரு வை லக்ஷண்யம் –
இதற்கு வக்த்ரு வை லக்ஷண்யத்தாலும் ஸ்ரோத்ரு வை லக்ஷண்யத்தாலும் அதிசயம் உண்டு –
வக்த்ரு வை லக்ஷண்யம் ஏது என்னில்– இதற்கு வக்தாவான ஸ்ரீ ஞானப் பிரான்
பரம விப்ரலம்ப பிரமாத சக்தி சம்பாவனை உடைய ஷேத்ரஞ்ஞரைப் போல் அன்றிக்கே
ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையால் இவனுக்கு ப்ரமமும் ப்ரமாதமும் கூடாது –
ப்ரத் யுபகாராதி நிரபேஷ பரம காருணிகன் ஆகையால் ஆஸ்ரிதர் திறத்தில் இவனுக்கு விப்ரலம்ப கத்வம் கடியாது
சர்வஞ்ஞ சர்வத்ருக் சர்வ சக்தி ஞான பலர்த்தி மாந் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-47-இத்யாதிகளில் படியே
சர்வ சக்தி யாகையாலே இவனுக்கு அசக்தி பிரசங்கமும் இல்லை
—————————-
வராஹ அவதாரத்தின் உத்கர்ஷம் –
இவ்வவதாரத்திற்கு இவன் தன்னுடைய அவஸ்தாந்தரங்களில் காட்டில் ஏற்றம் உண்டு -எங்கனே என்னில்
இவ்வவதாரம் ஒரு வழியாலே கரை ஏறினவர்களைக் கூட்டிக் கொண்டு இருக்கிற அளவேயான பர ரூபம் போல்
அன்றிக்கே அழுந்தினவர்களைக் கரையாத படி எடுத்துக் கரை ஏற விடும்படியாய் இருக்கும் –
வ்யூஹங்களைப் போலே பத்தரானவர்களை ஆஸ்ரயிக்க மேலான நிலத்தில் இருக்கை அன்றிக்கே
பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே ஆஸ்ரிதர் பக்கல் தன் பக்தி தோன்ற
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் என்கிறபடியே அவர்கள் இருந்த கீழ் நிலத்திலும் சென்று
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் -என்னும்படியாய் இருக்கும் –
ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் போலே தான் பெற்ற பிரஜைகள் உலாவித் திரியும் அளவில் ஈஷண மாத்திரத்தாலே ரஷிக்கும்
அளவன்றிக்கே -இங்கே பிரஜைகள் நினைக்கவும் மாட்டாதே காஷ்ட்ட பாஷாண ஸந்நிபராய் விழுந்து கிடக்கிற அளவிலே
அவர்களுக்கு அடைத்த நினைவைத் தான் அனுஷ்ட்டித்து ரஷிக்கிறான் என்னும் படிக்குத் தன் பாசுரம் யுண்டு
ஸ்ரீ கூர்ம அவதாரம் போலே ஒரு பூதரம் பிரமிக்கைக்கு அதிஷ்டானமாய் நிற்கை அன்றிக்கே –
இது தான் பூதரமாய் -பூமியும் பூ தரங்களும் கலங்காதே
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் –நான்றில ஏழ் மண்ணும்— தானத்தவே –என்கிறபடி
நிலை நிற்கப் பண்ணுமதாய் இருந்தது
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் போலே தட்டுப் பட்டது ஒன்றையும் பிளக்குமது அன்றிக்கே
இது பூமி எல்லாம் தட்டுப் படாதபடி -அத்ரும்ஹத் -என்கிறபடியே இறுகப் பண்ணுமதாயத்து
ஸ்ரீ வாமன அவதாரம் போல் -பொல்லாக் குறள் உறவாய் பொற்கையிலே நீர் ஏற்றுத் தன்னுடைய பூமியைப்
பிறருக்குக் கொடுக்க கொள்ளுகை அன்றிக்கே இது மஹா பலசாலியான அசுரனை நிராகரித்துத்
தன் பூமியைத் தானே கைக்கொண்ட அவதாரமாய் இருக்கும்
விரோதி நிராகரணத்துக்கு மழு எந்த வேண்டும் ஸ்ரீ பரசுராம அவதாரத்தைப் போல் அன்றிக்கே
இவ்வவதாரத்தில் விரோதி நிராகரணத்திற்கு பூமி தானே சாக்ஷியாம் படி இருந்தது
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனார் அவதாரம் போல் பூமியில் உள்ள சராசரங்களைத் தன் பதத்தில் ஏற்றும் அளவே
அன்றிக்கே -இது பூமி தன்னைத் தோளிலே ஏற்றும் அவதாரமாய் இருந்தது –
ஸ்ரீ பலபத்ர அவதாரம் போலே பூமிக்கு ஷதியைப் பண்ணுவதோர் வந்தேறியான உபகரணத்தைக் கையிலே கொண்டு
இருக்கை அன்றிக்கே இது பூமிக்கு ஷதி வாராத படி எடுக்கும் சகஜமான முக்க்ய உபகரணத்தை உடைத்தாய் இருக்கும்
சிஷ்யஸ்தே யஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் –ஸ்ரீ கீதை -2-7-என்றவனுக்கு உபதேசிக்கத் தொடங்கி-
கர்ம யோகாதிகளிலே அதிகரித்துக் கடையாய் இருபத்தொரு ஸ்லோகத்திலே பரம ஹிதத்தைக் காட்டின
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போல் அன்றிக்கே இது அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்தா ச த்வயி மாதவ -ஸ்ரீ வராஹ புராணம் –
என்றார்க்கு ஆரம்பத்திலே முழுகி மண் -மண்ணம்-கொண்டு உபதேசிக்கும்படியாய் இருந்தது
கற்கியாம் இன்னம் -என்னும்படி பாவ் யுபகாரமான கல்கி அவதாரம் போல் அன்றிக்கே
இது பூத உபகாரம் உண்டான அவதாரமாய் இருந்தது
ஆகையால் இப்புராண ப்ரவர்த்தகமான இவ்வவதாரத்துக்கு மானம் இல்லாதாப் போலே உபமானமும் இல்லையே
இவ்வவதாரத்தை மந் வதி பரம ஆப்த பரி கணநையில் தர்ம ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர்கள் தாங்களே சேர்த்தார்கள் –
இப்படி வக்த்ரு வை லக்ஷண்யத்தால் இப்புராணம் உத்க்ருஷ்டம்
——————
ஸ்ரோத்ரு வை லக்ஷண்யம் –
ஸ்ரோத்ரு வை லக்ஷண்யத்தாலும் இது சர்வ உத்க்ருஷ்டம் -எங்கனே என்னில்
ஸ்ரீ பூமிப்பிராட்டியை -ஜகத்துக்கு ஈஸாநா -என்று ஸ்ருதி சொல்லுகையாலே
சேதன அசேதன ரூபமான ஜகத்தில் காட்டில் இவளுடைய உத்கர்ஷம் பிரசித்தம்
க்ருதாகசஸ் ஷாம்யதி கேசவ ஸ் ரிதாந் அகிஞ்சநாந் தாந் கமலா கடாக்ஷயேத்
ந ச ப்ரஸஜ்ய பிரதி ஷேத ஸீதி யத் ஷமா த்வமே வோர்வி ஸஹஸ்வ மாம் அபி –என்கிறபடி
சர்வ சஹையான இவளுக்கு ஸ்ரீ சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் காட்டிலும்
ஷமாதி குண பூயஸ்த்தை உண்டாய் இருந்தது –
அப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகள் தாங்களே அறிவார்கள் –
ஆகையால் கர்ம வஸ்யரானவர்கள் ஸ்வ கார்யார்த்தமாகக் கேட்க உறவில்லாத ஷேத்ரஞ்ஞர் உபதேசிக்க –
ப்ரவர்த்தங்களான புராணாந்தரங்கள் போல் அன்றிக்கே சர்வ லோக ஜனனியான இவள் ஜகத் ஹிதார்த்தமாகக் கேட்க
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய –கீதை -11-43-என்கிறபடியே சர்வ லோக பிதாவானவன் அருளிச் செய்ய
ப்ரவ்ருத்தமான புராணம் ஆகையால் இது எல்லாவற்றிலும் அதிகம்
——————-
சரணாகதி பிரகரணத்தின் உத்கர்ஷம் –
ஸர்வேஷாம் இவ தர்மாணம் உத்தம வைஷ்ணவோ விதி -என்று ஸ்ரீ மஹா பாரதத்தில் சொன்ன
விசேஷ தர்ம பிராஸுர்யத்தாலும் இது சர்வ உத்க்ருஷ்டம்
இதில் முமுஷுக்களுக்கு சாஷாத் வா பரம்பரயா வா மோக்ஷ உபாயமாக விஹிதங்களான
சம்மார்ஜன உபலேபந சூர்ண சித்ர மாலாகரண தீபாரோபண ஹவிர் நிவேதன நந்த நவன கரண விமான நிர்மாண
ப்ரதக்ஷிண ப்ரணாம கதா ஸ்ரவண ஸ்துதி சங்கீர்தன குணகதன கீதந்ருத்த தாரண த்யானாதி-விசேஷ தர்மங்கள் தம்மில்
சர்வாதிகாரமுமாய் ஸூ கரமுமாய் ஸ்வாது தமமுமான உபாய விசேஷத்தைப் ப்ரதிபாதிக்கிற இப்பிரகரணம் உப ஜீவ்ய தமம்-
இவ் உபாய விசேஷம் -சா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் சர்வ காம பலப்ரதா –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -என்றும்
தாவதார்த்திஸ் ததா வாஞ்ஜா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதிகளில் படியே
யாதாதிகாரம் மோக்ஷ தத் உபாயாதிகளை சாதிக்க நற்றாய் இருக்கும் –
——————
வராஹ சரம ஸ்லோகத்தின் பெருமை –
இத்தை ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்வா பாவிக சார்வஞ்யத்தாலே அறிந்து இருக்கச் செய்தேயும்-
பிரஜா ஹிதார்த்தமாக -மாதா கேட்க -சர்வ பூத ஸூஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை -என்று
பிரசித்தமாக வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி -அஞ்ஞருமாய் அசக்தருமான அதிகாரிகளுக்கு
குரு உபாயத்தை விதித்தால் அது குருவியின் கழுத்தில் கட்டின பனங்காய் போலேயாம்
இவர்களுக்கு விஹிதமான அந்திம ப்ரத்யமும் மரண அவஸ்தையில் மனஸ் ஸூ ப்ராப்த விஷயத்தில்
ப்ரதிஷ்டித்தமாக மாட்டாமையாலே ஸ்வ யத்னத்தால் சாதிக்கப் போகாது
ஆன பின்பு ஸ்வரூப பரிகராதிகளால் சுமை அற்ற தொரு லகு உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும்
என்று விண்ணப்பம் செய்ய
சித்த உபாய பூதராய் சர்வஞ்ஞருமான ஸ்ரீ வராஹ நாயனார் தம்முடைய வசீகரண அர்த்தமாக சாத்தியமான
ஞான யஜ்ஜ சாரத்தையும் இவ்வளவிலே பிரசன்னராய்
ஜன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித்
தன் தாளிணைக் கீழ் கொள்ளும் படியையும்
ஸ்த்திதே மனசி -என்று தொடங்கி இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
இவ்வடைவே ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களையும் ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களையும்
ச ப்ராதுஸ் சரணவ் காடம்–அயோத்யா –31-2-
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா–அயோத்யா –31-25-என்ற இரண்டு ஸ்லோகங்களையும்
அகலகில்லேன் முதலான இரண்டு பாட்டுக்களையும் அன்யோன்ய உபகாரங்களாக அனுசந்திப்பது
—————
ஸ்லோக த்வயத்தின் சமுச்சிதார்த்தம்–
இவை இரண்டில்
பூர்வ ஸ்லோகம் –
மத் க்ருதே சர்வ பூதா நாம் லகு உபாயம் வத ப்ரபோ –என்று கேட்ட உபாய விசேஷத்தை
கால அதிகார பிரகார விஷய விசேஷங்களோடே கூடக் காட்டுகிறது
உத்தர ஸ்லோகம்
உபாசனத்துக்குப் போலே அந்திம ப்ரத்யயமும் உபாய கோடியிலே சொருகி ஸ்வ யத்ன சாத்தியம் ஆக வேண்டாத படி
சர்வ பர ஸ்வீ காரம் பண்ணின சரண்யனுடைய வியாபார விசேஷத்தாலே தேச காலாதி பரிச்சேத ரஹித
கைங்கர்ய பர்யந்த பரம புருஷார்த்த லாபத்தைக் காட்டுகிறது
——————
ஸ்த்திதே மநசே விவரணம் -சப்தார்த்தம் –
ஸ்த்திதே மநசி ஸூஸ் வஸ்த்த்தே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்த்த்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மா மஜம்
இங்கே -ஸ்த்திதே மநசி -என்ன வேண்டுமோ -சர்வ ஸ்ம்ருதிகளுக்கும் மனஸ்ஸினுடைய ஸ்த்தி
வேண்டி அன்றோ இருப்பது என்னில்
சஞ்சலம் ஹி மந கிருஷ்ண –ஸ்ரீ கீதை -6-34-என்றும்
அசம்சயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் ஸலம் –ஸ்ரீ கீதை -6-35-என்றும் சொல்லுகிறபடியே
வானரம் போலே கட்டி வைத்தாலும் காபேயம் விடாத மனஸ்ஸூ ஒரு ஸூஹ்ரு தம் விசேஷம் அடியாக உண்டான
சத்வ உன்மேஷ வசத்தால் சதாச்சார்ய உபதிஷ்டமான பரதத்வ பரம ஹித பரம புருஷார்த்தங்களிலே
தெளிவும் துணிவும் த்வரையும் பிறக்கும்படி ப்ரதிஷ்டித்தமான அளவு ஒழிய
இங்கு சொல்லுகிற ஸ்மரண விசேஷத்துக்குக் கர்மாந்தரங்களில் போலே ஒரு தேச கால விசேஷ நியமமில்லை –
புண்ய அபுண்ய தேச கால விசேஷங்களால் வருவதொரு பல உத்கர்ஷ அபகர்ஷமும் இல்லை என்கைக்காக
இங்கு மநஸ்ஸூ ஸ்த்திமாய் உள்ள இடத்தில் -என்கிறது –
——————–
ஸூஸ்வஸ்தே சரீரே விவரணம் -சப்தார்த்தம்
ஆனால் சரீர ஸ்வாஸ்த்த்யம் இல்லாத போது மநஸ்ஸூ னுடைய ஸ்த்த்தி கூடுமோ –
அப்போது இவன் பிரமாத நித்ராதிகளால் அபேக்ஷித ஸ்மரணத்தைப் பண்ண மாட்டாது ஒழியானோ –
ஆகையால் -ஸூஸ்வஸ்தே சரீரே-என்ன வேண்டுமோ என்னில்
சில கர்மங்களுக்கு சரீர அவஸ்தா ரூபமான வயோ விசேஷமும் -ஸூத்யாதிகளும் -பிராங்முக ஆஸீ நத்வாதிகளும் –
அபேக்ஷிதங்களாய் இருக்கும் -இதற்கு அப்படி அன்று –
சாஸ்த்ரார்த்த ப்ரதிஸந்தானத்திற்கு அநு குணமான சரீரத்தினுடைய ஸூஸ்வஸ்த்த தசையே வேண்டுவது
மற்றும் யோக உப யுக்த மநோ நியமத்துக்குச் சொன்ன அப்யாசா திகளும் வேண்டாம் என்கைக்காக
சரீர -ஸூஸ்வஸ்த மான அளவிலே -என்கிறது
இங்கு ஸூஸ்வஸ்தம் ஆகையாவது அபேக்ஷித விஸ்மரண உன்மாத நித்ராதி ஹேதுவான தசை கழிகை-
ஸூஸ்வஸ்தம் ஆகையாவது சத்வ உன்மேஷ விசேஷத்தாலே பரம புருஷார்த்த ருசி பிறக்கைக்கு அனுகுணமாகை
———————
தாது சாம்யே ஸ்த்திதே விவரணம் -சப்தார்த்தம்
இந்த சரீர ஸ்வாஸ்த்த்யம் தான் ஆயுர்வேத யுக்தமான தாது சாம்யத்தை ஒழிய வருமோ -ஆனால் –
தாது சாம்யே ஸ்த்த்திதே -என்றது என் என்னில் -இவ்விடத்தில் சர்வருக்கு சம்பாவிதமான தாது ஸாம்யத்தாலே வரும்
சரீர ஸ்வஸ்த்த்தை ஒழிய சமாதி பரர்களுக்குப் போலே ஆசன பிராணாயாமாதி களாலே ஒரு அபூர்வ
சரீர ஸ்வாஸ்த்த்யம் தேட வேண்டாம் என்றபடி
இங்கு பிரபத்திக்கு வேண்டும் அளவு மநஸ் ஸ்த்த்தித் யாதிகளைச் சொல்லுகிறது ஆகையால்
ஆதி வ்யாதிமான்களுக்கு பிரபத்தி சொல்லுவது விருத்தம் அன்று –
——————–
சதி சப்தார்த்தம் –
இப்படிகளாலே
பிரபத்தே க்வசித் அபி ஏவம் பராபேஷா ந வித்யதே -ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -என்று சொன்ன
நைரபேஷ்யம் பிரகாசிதம் ஆயிற்று –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் –
மஹதா புண்ய பண்யேந க்ரீதேயம் காயநவ்ஸ் த்வயா
ப்ராப்தும் துக்கோததே பாரம் த்வர யாவந் ந பித்யதே –ஸ்ரீ வராஹ புராணம்
சரீரமான படகு உன் புண்யத்தால் வாங்கப்பட்டது -சம்சார கடலின் அக்கரையை படகு அடைவதற்குள் அடைவாய் -விரைவாயாக –
கிளர் ஓளி இளமை கெடுவதன் முன்னம் -என்னும் அர்த்தம் தோற்ற
சதி -என்கிறது –
இது மூன்றிலும் அந்வயிக்கிறது –
———————–
ய சப்தார்த்தம்-நர சப்தார்த்தம்-
சாஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் -என்கிறபடியே பிரபத்தியினுடைய சர்வாதிகாரத்வம் தோற்ற -யோ நர-என்கிறது
இங்கு வர்ணாஸ்ரமாதி நியமம் இல்லை -சத்ய வசனாதிகளைப் போலே சாமான்ய தர்மம் ஆகையால்
சரண்ய சரணாகதி தத் பல ஞானமுடையார் எல்லாருக்கும் ருசி பிறந்த போது
சர்வ யோக்யம் அநாயாசம் -என்றும்
சர்வ லோக சரண்யாய —என்கிற விஷயத்தைப் பற்றக் குறையில்லை என்று தாத்பர்யம்
ஆனாலும் ய-என்கிற அளவே அமையாதோ -நர -என்றது மிகுதி அன்றோ – -இது தான் –
சித்த கந்தர்வ யஷாஸ் தத த்வாம் சரணம் கதா –பாலா -15-24-என்றும்
ததுபர்யபி பாதராயண சம்பவாத்–ஸ்ரீ சாரீர ஸூத்ரம் -1-3-25–என்றும்
தேவாதிகளுக்கும் பரம புருஷ ஸமாச்ரயண அதிகாரம் சொன்ன இடங்களோடே விரோதியாதோ என்னில்
துர்லபோ மானுஷோ தேஹ –
மானுஷ்யம் ப்ராப்ய லோகே அஸ்மிந் -இத்யாதிகளில் படியே ஸ்த்தாவராதி தசை கழிந்த மஹா லாபத்தையும்
விசித்ரா தேஹ சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்–இத்யாதிகளில் சொன்ன வழி தப்பினால் உள்ள அநர்த்தத்தையும்
நினைப்பிக்கையாலே -நர -சப்தம் ச பிரயோஜனம் -இது தேவாதிகளுக்கு வ்யச்சேதகம் அன்று –
கர்மபூமி கதரான உசித அதிகாரிகளை முன்னிட்டுத் தேவாதிகளையும் உப லஷிக்கிறது
இங்கு நர சப்தம் யோகத்தால் ஆத்ம வாசியாய் விதி ஸ்வ பாவத்தால் ஸாஸ்த்ர வஸ்யர் எல்லாரையும் காட்டுகிறதாகவுமாம்
———————-
ஸ்மர்த்தா சப்தார்த்தம்-
யாவனொரு நரன் -என்கிற இத்தால் எல்லாருக்கும் நினைவு கூடாது -இவ்வதிகாரி துர்லபன்-என்கிற அர்த்தம் தோற்றுகிறது-
இப்படி காலத்தையும் அதிகாரத்தையும் சோதித்து -அகிஞ்சன தமனான இவ்வதிகாரியினுடைய
க்ருத்ய விசேஷத்தை அருளிச் செய்கிறான் ஸ்மர்த்தா –
உபாசனம் போலே பிரபதனமும் ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்து அளவன்றிக்கே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடி
விதேயமாய் இருபத்தொரு ஸ்ம்ருதி விசேஷம் ஆகையால் இங்கே அவிதேய ஞானவாதிகளுக்கு அவகாசம் இல்லை –
இந்த ஸ்ம்ருதியில் ஆவ்ருத்திக்கு ஞாபகம் இல்லாமையாலும் –
ப்ரகாரணாந்தரங்களிலே-ஸக்ருத் -சப்தாதிகளாலே -அநா வ்ருத்தி காண்கையாலும்-
இங்கு சர்வ காலத்திலும் சர்வருக்குமாம் என்கையாலும் –
பிராரப்த சரீர அவசானத்தில் மோக்ஷம் என்று தோற்றுகிற ஸ்வா ரஸ்யத்திற்கு பாதகம் இல்லாமையாலும்
ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நிரபேஷதை சொல்லுகையாலும்
தத -என்கிற சப்தம் ஆவ்ருத்திக்கு விலக்காகத் தோற்றுகையாலும்
இது உபாஸனாதி சாஸ்திரங்களில் சொல்லுகிற ஸ்ம்ருதி அன்று
இங்கும் ஸக்ருத் ஏவ ப்ரபந்நாயா -என்கிற அர்த்தம் தோற்றுகிறது
இது பிராரத்தநா பூர்வ பர ந்யாஸம் -என்னும் இடமும்
இதற்கு மஹா விஸ்வாசாதிகள் அங்கங்கள் என்னும் இடமும்
வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் இதற்கு அங்கங்கள் அன்றிக்கே ஸ்வ தந்த்ரர் ஆஜ்ஜையாலே வருகின்றன என்னும் இடமும்
பிரகாரணாந்தரங்களிலே கண்டு கொள்வது
—————————
விஸ்வரூப சப்தார்த்தம்-மாம் சப்தார்த்தம்-அஜம் சப்தார்த்தம்-
இது பூர்வ பிரகரணத்தாலும் உத்தர ஸ்லோகத்தாலும் -மோஷார்த்த பிரபத்தி யாகையாலே தன்னை ஒழிந்தார்
முமுஷுக்களுக்கு ஆஸ்ரயணீயர் அல்லர் என்கைக்காகவும்-
தன்னை ஆஸ்ரயித்தே மோக்ஷம் பெற வேண்டும் என்கைக்காகவும்
இப்பிரபத்திக்கு இலக்கான தன் படிகளை -பரத்வ ஸுலப்ய ப்ரதிஷ்டாபகமாகப் பத த்ரயத்தாலே அருளிச் செய்கிறான்
விஸ்வரூப சப்தார்த்தம்
இதில் விஸ்வரூபம் என்கிற பதம் -நாரங்களை அயனமாக உடையவன் என்கிறால் போலே –
விஸ்வத்தையும் தனக்கு சரீரமாக உடையவன் என்கிறது –
இத்தால் சர்வத்துக்கும் ஆராதமுமாய்-நியாந்தாவுமாய் -சேஷியுமாய் -இவை தம்மால் இவற்றினுடைய
சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தாதிகள் தான் இட்ட வழக்காய்-கைங்கர்ய உத்தேஸ்யனுமாய் –
ஸ்வார்த்தமாக சாது பரித்ராணாதிகளும் ப்ரவர்த்திக்கிறான் என்றும் –
ஆஸ்ரயணீயன் சர்வ வ்யாப்தனாகையாலே ஆஸ்ரயிப்பார்க்கு நித்ய ஸந்நிஹிதன் என்றும் தோற்றுகிறது
மாம் சப்தார்த்தம்
ஸ்வரூப சந்நிதி ஸூரிகளுக்கும் -முக்தருக்கும் -யோகிகளுக்கும் -காணலாம் அத்தனை அன்றோ –
விக்ரஹ விசிஷ்டனானாலும் பர வ்யூஹங்கள் இங்குள்ளார்க்கு இலக்காக வற்றோ என்னில் –
இந்த விபூதியில் எல்லாரும் ஆஸ்ரயிக்கலாம் படி விபவ ரூபத்தால் வந்து நிற்கிற நிலையும்
இதற்கு மூலமாய் ஆஸ்ரயணீயதைக்கு உறுப்பான கிருபாதிகளும் தோற்ற மாம் என்கிறான் –
சமுத்திதோ நீல அசல இவ மஹான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26–
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப —-கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்கிறபடியே
போக்கற்று விழுந்தாரை எடுக்கைக்கு அநு குணமான ஸூபாஸ்ரய விக்ரஹ விசேஷத்தோடே தோற்றின என்னை நினைக்குமவனுக்கு
ஆயாச ஸ்மரணே கோ அஸ்ய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்கிறபடியே
இந்த பகவானை த்யானம் செய்வதில் அருமை இல்லையே என்று தாத்பர்யம் –
விஸ்வரூபம் -மாம் -என்கிற பதங்களால்-
ஜகத் ஹித அவதாரத்வ -சரண்யத்வ -ப்ராப்த்த்ய உபயுக்த சர்வ கல்யாண குணாகரத்வமும் சித்திக்கிறது –
இது அனுக்த சமுச்சய அர்த்தகமான ச காரத்தாலே யாகவுமாம் –
அஜம் சப்தார்த்தம்-
ஆனால் விஸ்வரூபம் என்கிற பதத்தில் சொன்ன -சர்வ சரீரத்வத்தாலும் -மாம் -என்கிற பதத்தில் பலிதங்களான
சர்வ உபாதாநத்வ-நிமித்வத்வங்களாலும் -சேதன அசேதன தோஷங்கள் எல்லாம் சங்கிக்கலாம் படி அன்றோ இருப்பது –
பிறக்கின்றவன் தனக்கும் மற்றும் பிறப்பாருடைய பிரகாரங்கள் உண்டாக வேண்டாவோ –
அவதாரங்களில் சோக மோஹாதிகள் சொல்லவும் காண்கிலமோ -இப்படியானால் –
ஸ்வ ரஷனே அபி அசக்தஸ்ய கோ ஹேதூ பர ரஷனே –சாந்தி பர்வம் -294-19-என்கிற சோத்யம் வாராதோ என்ன
அஜம் -என்று
புருஷாந்தர சஜாதீய ஜென்ம நிஷேதத்தாலே தன்னுடைய ஹேய பிரதிபடத்வத்தைக் காட்டுகிறான் –
இங்கே ஜனனத்தை நிஷேதித்தது மற்றும் உள்ள பாவ விகாரங்கள் -ஷடூர்மிகள்-என்றால் போலே சொன்ன
சேதன அசேதன தோஷங்கள் எல்லாத்தையும் நிஷேதிக்குமதுக்கு உப லக்ஷணம் ஆகையால்
அசக்தி ரூபமான தோஷம் கழிந்து ஹேயபிரதிபடத்வமும் சித்திக்கிறது –
அவதாரங்களில் சோகாதிகள் சொன்ன இடத்துக்கு அபிநயத்திலே தாத்பர்யம் –
இவ்வர்த்தத்தை வெளியிடுகிற-மனுஷ்ய தேஹி நாம் சேஷ்டாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18–
ஈஸந் நபி மஹா யோகீ–உத்யோக பர்வம் -67-1-
தேந வஞ்சயதே லோகாந் –உத்யோக -67-15-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது –
—————————-
உத்தர ஸ்லோகஸ்ய சரண்ய க்ருத்ய பரத்வம் –
இப்படி கீழ் பூர்வ ஸ்லோகத்தால் சித்த உபாய பூதனான சரண்யனையும் -இவனுடைய வசீகரண அர்த்தமாக
சாத்தியமான அதிகாரி க்ருத்ய விசேஷத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் பிரசித்தி தோற்ற அனுவாத ரூபமான வாக்யத்தாலே காட்டி
பர ஸ்வீகாரம் பண்ணின தன்னுடைய க்ருத்யமாக
ஜன்ம சன்மாந்தரம் காத்து –இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ அநிஷ்ட நிவர்த்தநத்தையும்
பரம புருஷார்த்த ப்ராபணத்தையும் ப்ரபன்னன் திறத்தில் வாசி தோற்ற உத்தர ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறான்
தத தம் ம்ரியமாணம் து காஷ்ட்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதாம்
———————
தத சப்தார்த்தம்-
தத -என்கிற பதத்தால்-ஸ்மரணம் ஹேதுவாக -என்று பொருளானால் இதற்கு ஒரு பிரயோஜனம் இல்லை –
தம் -என்கிற அளவாலும் இது தோற்றும் –
இப்படியே ஸ்மரணத்திற்கு பின்பு -என்று தாத்பர்யம் கொண்டாலும் மிகுதியாம்-ஆகில் என் என்னில் –
ஆர்த்தி விசேஷாதிகளால் ப்ரபத்திக்கு அனந்தர க்ஷணத்தில் சரீர பாதம் பிரஸ்த்துதம் ஆனாலும்
இந்த ஸ்மரணத்து அளவே வ்யாஜமாக சரீராந்தரத்தில் பிரவேசியாதபடி அப்போதே ரஷிப்பான்-
இவனுக்குப் பர ந்யாஸம் பண்ணின விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை என்று தோற்றுகைக்காக-
தத -என்கிறது –
——————
தம் சப்தார்த்தம்-
தம் -என்றது க்ருதக்ருத்யனாய் -சாதக விருத்தியான தனக்கு வரும் மரணத்தை
பிரியாதிதியைப் போலே பார்த்து இருக்குமவனை என்றபடி
——————–
மத் பக்த சப்தார்த்தம்-
மத்பக்தம் -என்றது -நம்மையே நிரதிசய போக்யமாக உகந்து பற்றினவனை என்கிறது –
தம் -மத் பக்தம் -என்கிற இரண்டு பதத்தாலுமாக -அநந்ய உபாயனுமாய் -அநந்ய ப்ரயோஜனமுமானவனை –
இத்தால் ஐஸ்வர்ய கைவல்ய அர்த்த ப்ரபன்னரையும் -மோஷார்த்த உபாசக்கரையும் வியவச்சேதிக்கிறது –
காருணிகனான ஈஸ்வரன் எல்லாருக்கும் மோக்ஷம் கொடுக்க ப்ராப்தனே யாகிலும் அநாதி கர்ம ப்ரவாஹ விஷமிதரான
அதிகாரிகளுக்கு நிர் வ்யாஜமாக மோக்ஷம் கொடுத்தால் -கர்மாநுரூப பல ப்ரதாயித்வ நியமம் குலையும் –
அது குலையாமைக்காக இப்பதத்தில் சொன்ன ஆகாரம் உடையோருக்கு மோக்ஷம் என்கிறது –
காருண்யம் ஒன்றையும் பிரதானம் ஆக்கி ஸாஸ்த்ர சித்த ஸ்வ தந்த்ர வ்யவஸ்த்தையைக் குலைக்கப் பார்த்தால்
ஸத்ய சங்கல்ப்யத்தை இல்லாமையால் இஸ் ஸ்வா தந்தர்யமும் அழிந்து நிரீஸ்வர வாதமும் பிரசங்கிக்கும் –
இப்படியே சர்வரும் ஈஸ்வர கிருபையால் நித்ய முக்தராகத் தட்டு என் என்கிற சோத்யமும் பரிஹ்ருதம்
ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிகள் இல்லாத போது ஒருவனை விசேஷித்து
ஈஸ்வரன் என்கைக்கு பிரமாணம் இல்லை இறே
இங்கே மத் பக்தம் -என்கிற பதம் –
பக்தி யோக நிஷ்டனைச் சொல்லுகை லகு உபாய உபதேச பிரகரணத்திற்கும் –
தத் அநு குணங்களான பூர்வ ஸ்லோகத்தில் பதங்களுக்கும்
இஸ் ஸ்லோகத்தில் அந்திம தசையில் -காஷ்ட்ட பாஷாண சந்நிபம் -என்கிறதுக்கும் அநு குணமாகாது –
பஸ்ஸாத் பாவியாய்க் கத்யந்தரம் உண்டான ஒரு பதத்தைக் கொண்டு பூர்வ பாவியான பிரகரணத்தையும்
ஸ்வ வாக்கியத்தில் அநேக பத ஸ்வாரஸ்யத்தையும் பாதிக்கை நியாய விருத்தம்
————————
ம்ரியமாண து சப்தார்த்தம்-
இவனுக்கு இனி ஜன்மாந்தரங்கள் இல்லை -மரணமானால் -என்கிறபடியே பிராரப்த சரீரம் விடும் அளவே ப்ராப்திக்கு வேண்டுவது என்று தோற்றுகைக்காக
ம்ரியமாணம் -என்கிறான்
மரித்தவனை -என்னாதே–ம்ரியமாணனை
நயிப்பிப்பேன் -என்கிற இத்தால் தான் விண்ணுலகம் தர வரைகின்ற படியைத் தோற்றுவிக்கிறான்
து காஷ்ட்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதாம்
து-என்கிற இது
அல்லாதார் மரணம் போலே இங்கு உள்ளார்க்கும் லோகாந்தரத்தில் உள்ளார்க்கும் இவன் சோஸ்யனாம் படி அன்றிக்கே –
ஸ்ரீ வைகுண்ட நாதனும் ஸூரி களும் முக்தரும் நல் விருந்து வருகிறது என்று வீடு திருத்தும் படியாய்
இங்கும் க்ருதக்ருத்யரான ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும் நாமும் இது பெற்றிலோமே என்று நாக்கு நீளும்படியான
நல்லதோர் அவப்ருதம் இது என்று இம்மரணத்தினுடைய மஹா உத்சவத்தையும்
இதற்கு பிரசஸ்த தேச கால நிமித்தங்கள் நிரூபிக்க வேண்டா –
ஆயுர் அவசானத்து அளவிலே இவனுக்கு பல சித்தி என்னும் இடத்தைத் தோற்றுவிக்கிறது
——————-
காஷ்ட்ட பாஷாண சந்நிப சப்தார்த்தம்-
காஷ்ட்ட பாஷாண சந்நிபம் -என்கிறது -முன்புற்ற கார்ப்பண்யம் போலே உபாயத்துக்கு உறுப்பாகிறது அன்று –
பின்புற்ற அர்ச்சிராதி கதி போல் பல கோடி கடிதமாய் வருகிறதும் அன்று
இவனுக்கு ஸ்ரீ த்வய அனுசந்தாதிகளைப் போலே இன்குற்ற புருஷார்த்த விசேஷமாய் இருப்பதும் ஓன்று அன்று
இப்படி இருக்க இவனுடைய அசித் கல்பதையைச் சொல்லுகிற இது பூர்வ உத்தரங்களுக்கு அநுப யுக்தமாய் –
இவ்வளவும் அன்றிக்கே பிரபன்னனுக்கு நிந்தையும் ஆகாதோ என்னில் -இது
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிறபடியே
உபாயத்தினுடைய ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நைர பேஷ்யத்தையும்
சந்தாம் -தைத்ரீயம் -இத்யாதிகளில் படியே ஜுகுப்ஸா விஷய தசையில் சரண்யனுடைய வாத்சல்ய விசேஷத்தையும்
ஒரு பிரகாசமும் அற்றுக் கிடக்கிற இவனை பிரதீ பவத் ஆவேச -சாரீரிகம் -4-4-5-என்கிறபடியே
ஒரு காலே சர்வஞ்ஞன் ஆக்குகின்ற ஆச்சர்ய சக்தி யோகத்தையும்
ப்ரபன்னன் இப்படி தீர்க்க நித்திரை பண்ணும் போது சர்வவித பந்துவான அந்தர்யாமியை ஒழிய மற்று ஒருவரும்
தட்டி எழுப்ப மாட்டார்கள் -என்னும் அர்த்தத்தையும் விஸ்தரித்து
காலும் கையும் விது விதிர்த்து ஏறி கண் உறக்கமாவதன் முன் –வேலை வண்ணனை –மேவ வேண்டும் என்று
முமுஷுக்களுக்கு சரண்ய வசீகரணத்தில் விரைதல் பிறப்பிக்கைக்காகவும் இப்பதம் பிரயுக்தம் ஆகிறது ஆகையால்
இது உப யுக்தமாய் உபாயாதிகளுடைய ஸ்துதியுமாகிறது –
ஆனாலும் ஒரு த்ருஷ்டாந்தமே அமையாதா என்னில் சாதர்ம்யத்தில் அதிசயம் தோற்றுகைக்காகப்
பல த்ருஷ்டாந்தம் சொல்லக் கடவது என்று ஆலங்காரிகர் சொன்னார்கள் –
இவன் சைதன்ய ஆஸ்ரயமான அஹம் அர்த்தமாய் இருந்தானே யாகிலும் அப்போதையில் அஞ்ஞானத்தை
நிரூபித்துப் பார்த்தால் காஷ்ட்ட பாஷாணங்களினுடைய அந்யோன்ய வைஷம்யத்து அளவும் போரும் இதனை
அவற்றுக்கும் இவனுக்கும் உள்ள வைஷம்யம் என்று கருத்து ஆகவுமாம்–இப்படியானால்
ததா ப்ரலீநஸ்தமஸீ மூட யோநிஷு ஜாயதே -ஸ்ரீ கீதை –14-15-என்றும்
யம் யம் வாபி ஸ்மரந் பாவம் -8-6- என்றும் சொல்லுகிற பிரமாணங்கள் சேரும்படி என் என்னில் –
அவை சாமான்ய விசேஷம் -இது விசேஷ விசேஷம்
நஷ்ட ஸ்ம்ருதிரபி பரித்யஜந் தேஹம்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதும் அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் –இத்யாதிகளுக்கும் இதுவே நிர்வாகம்
சரீர பாத ஸமயே து கேவலம் மதிய யைவ தயயா அதி பிரபுத்த –ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்று
பிரபன்னர் தங்களிலே சிலரைப் பற்ற என்று சிலர் நிர்வஹிப்பார்கள்-
அங்கன் அன்றிக்கே
காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம்
நஷ்ட ஸ்ம்ருதிரபி பரித்யஜந் தேஹம்–இத்யாதிகளை ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நிவ்ருத்தியிலே தாத்பர்யம்
மதிய யைவ தயயா அதி பிரபுத்த-இத்யாதி வாக்கியம்
ஸ்வ யத்னம் இன்றிக்கே இருக்க பகவத் கிருபா மாத்திரத்தில் அந்திம பிரத்யய விசேஷம் ப்ரபன்னர் எல்லாருக்கும்
வருகிற படியைக் காட்டுகிறது என்றும் சிலர் நிர்வஹிப்பார்கள்
—————-
அஹம் ஸ்மராமி விவரணம் -சப்தார்த்தம்-
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா சர்வ –ஸ்ரீ நியாய தத்வம் -என்னும்படியாய் இருக்கிற ஈஸ்வரன்
ஷேத்ரஞ்ஞரைப் போலே மறப்பது ஒரு காலமும் நினைப்பது ஒரு காலமும் இன்றிக்கே இருக்க
இப்போது -அஹம் ஸ்மராமி -என்பான் என்னில்
பிரபன்னனுக்கு அப்போது ஸ்வ யத்னத்தால் ஸ்மரணம் இல்லையே யானாலும் இந்த ஸ்மரணம் முதலாயாதல்
இதற்கு மேலேயாதலால் உள்ள பலம் எல்லாம் பர ஸ்வீ காரம் பண்ணி ஸ்வீ க்ருத நிர்வஹண ஷமனுமான
தன்னாலே சித்திக்கும் என்று தோற்றுகைக்காகத் தன்னுடைய ச அனுக்ரஹ புத்தி விசேஷத்தை ஸ்மரண சப்தத்தால் உபசரிக்கிறான்
இங்குற்ற வர்த்தமான வ்யபதேசத்தாலே
இவ்வநுக்ரஹத்துக்கு பின்பு ஒரு நிக்ரஹம் வாராது என்னும் இடம் தோற்றுகிறது
இதில் உத்தமனே அமைந்து இருக்க சரம ஸ்லோகத்தில் போலே மிகுதியான -அஹம் -என்கிற பதத்தாலே
ஸ்வா தந்தர்யம் அடியாக சர்வ ஷேத்ரஞ்ஞர் நிறத்திலும் விபரீத கர்மாநுரூபமான நிக்ரஹத்தில் பிரவ்ருத்தனாய்
லீலா ரசத்தை அனுபவித்துப் போந்த தான் காருண்யம் அடியாக வ்யாஜ விசேஷ அனுக்ரஹ ப்ரவ்ருத்தனாய்
ஆஸ்ரித ரக்ஷண ரசத்தை அனுபவிக்க நினைத்த போதே மோக்ஷம் கொடுக்க வல்ல படியையும் –
அப்போது விலக்க வல்லார் இல்லாத படியையும் தான் கட்டின காலாதிகளை ஒழியத் தனக்கு வேறு ஒரு
சஹகாரி வேண்டாத படியையும் தோற்றுவிக்கிறான்
காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம் –அஹம் ஸ்மராமி -என்கிற இரண்டாலும்
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர ததோ மே தத் கதம் மந –சாந்தி பர்வம் -46-11-என்கிற பிரகாரத்தைக் கழிக்கிறான் –
இதில் புருஷ வ்யாக்ரரான பீஷ்மர் நினைக்க இவன் திரு உள்ளம் அங்கே சென்றத்தை அருளிச் செய்கிறான்
மத் பக்தம் -அஹம் ஸ்மராமி -என்கிற இத்தால் நித்ய அனுபவம் பெறுகைக்கு ஒரு நினைவு பண்ணினவனைப் பற்ற
நாமும் நித்ய அனுபவம் கொடுக்கைக்கு ஒரு நினைவைப் பண்ணுவுதோம் என்றதாயிற்று –
———————-
நயாமி சப்தார்த்தம்-பரமாம் கதிம் விவரணம் -சப்தார்த்தம்-
இப்படி -தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைத்து
அருள் செய்யும் அப்பன் –பெரிய திருமொழி -7-3-2-
என்னும்படியான தன் நினைவு பரம புருஷார்த்த பர்யந்தமாகிற படியைப் பற்ற -நயாமி பரமாம் கதிம் -என்கிறான் –
நயாமி -என்கிறதிற்குச் சேற்றிலே விழுந்த சிறு பசல்களை எடுக்க விழுந்த பிதாவைப் போலே
இவனுடைய தேகத்துக்கு உள்ளே ஹார்த்தனாய் நிற்கிற நான் தானே அப்ராக்ருத பர்யங்க ஆரோஹண பர்யந்தமாக நடத்துவன்
நடுவு வரும் அர்ச்சிராதிகளும் இவனை எதிர் கொண்டு சத்கரித்து தரம் பெறுகைக்கு நாம் அடைத்த நிலைப் பேறு என்று தாத்பர்யம் –
கீழ்ச் சொன்ன பிரபத்தி சகல பல சாதனமாக வற்றாய் இருந்ததே யாகிலும் அநந்ய ப்ரயோஜனனான இவனுக்கு
ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுத்தல்
மது வித்யாதிகளில் போலே ஐஸ்வர்ய ஆத்ம ரூப ஷூத்ர பல வ்யவஹிதமாக மோக்ஷம் கொடுப்புதல் செய்யேன் –
அவ்யஹிதமாகப் பரம புருஷார்த்தத்தை அடைவிப்பேன் என்கிற விசேஷம் தோற்ற -பரமாம் கதிம் -என்கிறான்
இங்கு கதிம் -என்கிறது -ப்ராப்யத்தை -என்றபடி –
பரமாம் கதி -என்கிறது முக்தா நாம் பரமாம் கதி -சஹஸ்ர நாமம் -என்கிறபடியே
பரம ப்ராப்யனான தன்னை யாதல் -தன் விஷயத்தில் பரி பூர்ண அனுபவத்தை யாதல் –
அவ்வனுபவ பரி வாஹமான கைங்கர்ய விசேஷத்தை யாதல் சொல்லுகிறது –
இவற்றில் ஒன்றைச் சொன்னாலும் மாற்று உள்ளவையும் சொல்லிற்றாய் விடும்
இதில் நயாமி -என்கிற இத்தால் தன்னுடைய ப்ராபகத்வமும்
பரமாம் கதிம் -என்கிற இத்தால் தன்னுடைய ப்ராப்யத்வமும் சொல்லிற்றாகை உசித தமம்
பரமையான கதி -என்று அர்ச்சிராதி கதியை யாதல் -பரம பதத்தை யாதல் -சொல்லுவார்க்கு
முடிவில் அவனுடைய ப்ராப்தியிலே தாத்பர்யம் –
—————————
ஸ்லோக த்வய சமுச்சித அர்த்தம்
இப்படி இரண்டு ஸ்லோகத்தாலும்
இச்சேதனன் முமுஷுவாயும் முக்தனாயும் இரண்டு விபூதியிலும் பெரும் பேறு சொல்லிற்று ஆயிற்று
நயாமி -என்கிற இதில் -பரஸ்மை பதத்தாலே ஸ்வதஸ் சர்வ சேஷியான தன்னுடைய ஆஸ்ரித பிரயோஜன பிரதான
அபிசந்தியைத் தோற்றுவிக்கிறான் –
அசித்தின் உடையவும் அசித் பிராயருடையவும் வியாபாரம் ஸ்வ ப்ரயோஜன பர ப்ரயோஜனங்கள் இரண்டையும்
உத்தேசியாதே பர ப்ரயோஜன அர்த்தமாக இருக்கும் –
ஞாதாவான அவஸ்தையில் ப்ரயோஜநாந்தர பரன் பர ப்ரயோஜன அர்த்தமாக ப்ரவர்த்திக்கும் போது
ஸ்வ ப்ரயோஜனத்தை உத்தேச்யமாகக் கொண்டு நடக்கும் –
அநந்ய ப்ரயோஜனான ஞாதா ஸ்வ ப்ரயோஜனத்திலும் பர ப்ரயோஜன உத்தேசேந ப்ரவர்த்திக்கும்
நிருபாதிக சர்வ சேஷியான சர்வேஸ்வரன் -ஸ்வம் உத்திஸ்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-87-என்கிறபடியே
பர ப்ரயோஜனத்திலும் ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக ப்ரவ்ருத்தித்தாலும்
இவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்ய பிரகாரத்தைச் சொல்லப் பார்த்தால்
வரத சகல மேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-என்கிறபடியே–
ஸ்வ ப்ரயோஜனத்திலும் பர ப்ரயோஜன அர்த்தமாகப் ப்ரவர்த்திக்கும் என்னலாம் –
இவ்வர்த்தங்களை
காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம்
ஸ்மர்த்தா
மத் பக்தம்
அஹம் ஸ்மராமி
நயாமி -இத்யாதிகளிலே அனுசந்திப்பது
——————-
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –
இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே
இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே
மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே
——————-
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்
ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –
——————————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply