தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-
பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது
அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில்
அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –
————————————————–
சித்ர கூடத்துறை செங்கண் மாலுக்கு –பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி ஆழ்வாரைப் பெறுவர்-
——————————————
சித்திர கூடம் அமர்ந்த– ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-
அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-
———————————————————
காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-
சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-
————————————————–
தென்னாலி யிருந்த மாயனை–வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–
———————————-
வயலாலி கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-
அவனைப் பிரிந்து நோவு பட்டு தூது விடுகைக்கு ஹேதுவான பாபங்கள் கிட்டாது –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று –
———————————————————-
புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-
இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –
தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா -ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-
—————————————–
நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு –தமிழ் மாலை வல்லார் கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ்
உலகுக்கு ஒரு காவலராய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து- பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய்-ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்- நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து- அபிஷேகம் பண்ண அமையும் பாகவத சேஷம் ஆகலாம்
ஆகில் என்று காணும்- திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-
——————————————-
வைகுந்த விண்ணகர் மேல் — இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-
உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-
——————————————–
நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை–கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-
இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே
என்னும்படி அவர்களுக்கு தலைவராய் பின்னை உம்பரும் ஆவார்கள்
திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-
—————————————-
திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-
நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே திருவடி திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய்
நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –
——————————————–
வண் புருடோத்தமத்துள் பாடல் இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய் அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்-
———————————————-
செம் பொன் செய் கோயிலினுள்ளே ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-
பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்
———————————————
திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-
கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்-
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து பரம பதத்தில் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்-
—————————————————-
நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-
கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து-அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்- விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-
————————————————
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-
பூமியிலே அரசராகி-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-
—————————————————-
நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-
தங்களுக்கு போய்த்தில்லை யாகிலும் -விசதமாக வாராதே போனாலும் -பிறர் போம் என்னும்படியாக
வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-
—————————————————
நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை தமிழ் பத்தும் வல்லார் ஏர் கொள்
நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-
ஒருத்தி வாய் வெருவ ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-
——————————————————–
இந்தளூரில் எந்தை பெருமானைக் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10–
இவற்றை அப்யசித்து அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே
அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே-ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான -நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்
————————————————–
திருவெள்ளியங்குடியானை– கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர் இக் குரை கடல் உலகே—4-10-10-
இவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே
இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே
இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே- அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார் –
—————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply