நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-
ஆறாயிரப்படி
சேதன அசேதனாத்மக ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பரம புருஷ சங்கல்ப அதீனம் என்று சொல்லுகிறது –
ஒன்பதினாயிரப்படி–
சேதன அசேதனாத்மக சமஸ்த வஸ்துக்களுடைய சமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பகவத் சங்கல்ப அதீநம் -என்கிறது –
பன்னீராயிரப்படி-
அநந்தரம் சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் அதீநைகள் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –
இருபத்து நாலாயிரப்படி-
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –
ஈடு —
லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் கீழ் –
அதினுடைய பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் இதில்
ஆகிருதி வாசக சப்தம் வ்யக்தியிலே பர்யவசித்து நிற்குமா போலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான சப்தமும்
அபர்யவசா நவ்ருத்த்யா -அவன் அளவிலே சென்று அல்லது நில்லாது –
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply