ஸ்ரீ தைத்ரிய உபநிஷத் —

ஸ்ரீ ரெங்க ராமானுஜ முநி வியாக்யானம் -விசிஷ்டாத்வைத பரமாக -எல்லா உபநிஷத்துக்களுக்கும் -அனுக்ரஹித்துள்ளார்
ஸ்ரீ கீதா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் இரண்டும் ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் அருளிச் செய்துள்ளார்
வைசம்பாயனர் ஆச்சார்யர் -யாஜ்ஜ்வல்க்யர் -சிஷ்யர் –/ வசிஷ்டர் கூப்பிட போக முடியாமல் பிராயச்சித்ததுக்கு வேதம் உருப்போட சொல்ல
அகங்காரத்துடன் சிஷ்யர் பேச -கோபித்து -கற்றுக் கொடுத்ததை கக்கி போகச் சொல்ல -அது தான் கிருஷ்ண யஜுர் வேதம்
வேதத்தை வீணாக்கக் கூடாது -என்று பக்ஷிகள் -ரூபத்தில் சிஷ்யர்கள் -த்த்ரி -பெயர் காரணம்
வாஜசநேயம் சுக்ல யஜுர் வேதம் —
நான்கு பாகம் -சிஷா வல்லி- /ஆனந்த வல்லி-ப்ரஹ்ம வல்லி என்றும் சொல்வர்-ப்ரஹ்மம் ஆனந்த ஸ்வரூபம் /-
பிருகு வல்லி காரணத்வம் சொல்லி -த்யானம் -சத்யம் ஞானம் அநந்தம் ஆனந்தம் ப்ரஹ்மம்-
ஆரம்பம் பிருகு -சுக்ரன் பிள்ளை -வருணன் பிள்ளை -பிருகு /
நாராயண வல்லி-
சாமஹிஹி உபநிஷத் -சிஷா வல்லி -/ தேவதா தர்ப்பயாமி ஆவணி அவிட்டம் சொல்லுவோம் இந்த பெயர்களை /
வாருணி உபநிஷத் -ஆனந்த வல்லி -பிருகு வல்லி
யாஜ்ஜி உபநிஷத் -நாராயண வல்லி –
சிஷா வல்லி -கற்கும் வழிமுறை சொல்லும் –வித்யை தங்கும் வழி-எழுத்து சப்தம் சேர்க்கை சிஷா –
வர்ண மாலை -33-எழுத்துக்கள் -வேதத்தில் -சுரம் அறிந்து சொல்லவும்
அனுஷ்டான முறைகளும் -ஆத்மகுணம் வளர்க்கவும் –
சிஷ்ய கத ஞானம் தானே வித்யை -ஆச்சார்யர் இடம் மட்டும் இருந்தால் வித்யை ஆகாதே –

—————————–

தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இது யஜூர் வேதத்தின் ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது.
முழு வேதமானது மந்திரம், பிராமனம், ஆரண்யம், உபநிஷத் என்று நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றது.
முதன் மூன்று பாகங்கள் கர்ம காண்டம் என்றும், நான்காவது பாகம் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றது.
உபநிஷத் இந்த நான்கு பாகங்களிலும் இருக்கும். இந்த உபநிஷத் ஆரண்ய பாகத்தின் இறுதியில் அமைந்திருக்கின்றது.
இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது. முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது.
இதற்கு சீக்‌ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்‌ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இரண்டவது பகுதிக்கு பிரஹ்ம வல்லி என்று பெயர். இது பிரஹ்ம வித்யாவை உபதேசிக்கின்றது.
இதில். ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கபடுகின்றது.
இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.
மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர்.
இதில் சில தியானங்கள், பண்புகள் விளக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கபடுகின்றது;

———–

ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம் (ஸத்யம் வதிஷ்யாமி இதி பஞ்ச ச)-৷৷1.1.1৷৷

ஷந்நோ மித்ர ஷம்வருண -சம்-ஸூ கம் கொடுக்கட்டும் -மித்ரன் -பகல் இரவு மாறவும் பிராண வாயு கொடுப்பவன் ப்ரஹ்ம ஆனந்தம் கொடுக்கட்டும்
ஷந்நோ பவத்வர்யமா -அர்யமா தேவதை -குறைவான தேவர்களை வைத்து ப்ரஹ்ம ஞானம் பெற முயல வேணும் –
காற்று அடைக்க jack உபயோகித்து செல்லும் இடத்துக்கு போக வேண்டுமே -ஞானம் பெற அரியமா தேவன்
ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி -பலம் பெற இந்திரன்
ஷந்நோ விஷ்ணுருருக்ரம–வாக்கு பெற ப்ருஹஸ்பதி
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ -வாயு பகவான் அக்ஷரங்கள் கூட்டி வேதம் –
த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி -நீ தானே ப்ரத்யக்ஷம் வாயு ஸ்பர்சிக்கலாமே –
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி –நீயே ரிதம்–நீயே சத்யம் –
இரண்டும் உண்மை -எப்படி இருக்க வேண்டுமோ அது ரிதம் -உலகம் பயன்படுத்தப்படும் உண்மை சத்யம் -கொஞ்சம் வாசி –
வியவகார உண்மை என்றபடி -பொய்மையும் வாய்மை இடத்து ஆகும் -பசு மாட்டை அடிக்க -வந்தவன் இடம் இல்லை -சொல்வது ரஷிக்க-
தந்மாமவது தத்வக்தாரமவது -என்னை ரஷி ஏன் ஆச்சார்யரை ரஷி
அவது மாம் அவது வக்தாரம் (ஸத்யம் வதிஷ்யாமி இதி பஞ்ச ச)-

த்வமேவ ப்ரதியக்‌ஷம் பிரஹ்ம அஸி – நீங்களே நேரிடையாக அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள்.
த்வமேவ பிரத்யக்‌ஷ பிரஹ்மன் வதிஷ்யாமி – நீங்களே நேரிடையாக தெரிகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள் என்று அழைக்கின்றோம்.
ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி – சரியான ஞானத்தை கொடுக்க கூடியவர் என்றும், ஸத்யமாக இருப்பவர் என்றும் உங்களை அழைக்கின்றேன்.
ரிதம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொள்ளும் திறமை என்று பொருள்.
சத்யம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொண்டதை வாக்கில் சொல்வது என்று பொருள்.
தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர்.
இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும்,
சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,.
அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.

குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும்.
மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.
வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.
இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும்.
கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அக்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும்.
இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர்,
ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர்,
விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம். எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள்.
பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும்,
நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள். கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.

——————————–

ஷீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம வர்ண ஸ்வர மாத்ரா பலம் ஸாம ஸம்தாந இத்யுக்த ஷீக்ஷாத்யாய ৷৷1.2.1৷৷(ஷீக்ஷாம் பஞ்ச)

வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற சீக்‌ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
வர்ண – எழுத்து – சரியாக உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரம் – மூன்று விதமாக எழுத்தை உச்சரித்தல், உயர்த்தி படித்தல் (உதாத), கீழே இறக்கிப் படித்தல் (அனுதாத்த), சமமாக படித்தல் (சொரிதஹ)
மாத்ர – மாத்திரை – உச்சரிக்கும் கால அளவு (குறில், நெடில், ப்லுதம்)
பலம் – அழுத்தம், ஸாம – படிக்கும் வேகம்; ஸந்தானம் – இடைவெளி
இதி உக்த – ஆகியவை கூறப்பட்டுள்ளது.
சீக்‌ஷா அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எழுத்துக்கள் மாத்திரைகள் சுரம் அறிந்து கொள்ள வேண்டுமே -பிரமாதம் கவனக் குறைவு கூடாதே –
ஆறு அங்கங்கள் -வேதத்துக்கு -வர்ணம் -ஸ்வரம் -மாத்ரா -பலம் -சாம -சந்தானம் –
சிஷா -வியாகரணம் -சந்தஸ் -ந்ருத்தம்-உள்ளுறை பொருள்-உக்த்தத்துக்குள் என்றவாறு -ஜோதிஷம் –கல்பம் -பிரயோகம் சொல்லும் –
வர்ணம் அகராதிகள்–63 -64-வகைகள் என்பர் / ஸ்வர -உதாத்தம் -அநுதாத்தம் -உயர்த்தி மெதுவாக நடுவாக
மாத்ரா -தீர்க்கம் இரண்டு மாத்திரை -நீட்டி குறுக்கி கால அளவு
பலம் பிரயத்தன விசேஷம் அழுத்தி சொல்வது
சாமம் -சமமாக- ஒழுங்காக சொல்வது —
சந்தானம் சம்ஹிதா சேர வேண்டிய முறை
வேத ஸ்வரூபன் தானே -பழுது இல்லாமல் சொல்ல வேண்டும்

————————

ஸஹ நௌ யஷ ஸஹ நௌ ப்ரஹ்மவர்சஸம் அதாத ஸ் ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம பஞ்சஸ்வதிகரணேஷு
அதிலோக மதிஜ்யௌதிஷமதி வித்யமதி ப்ரஜமத்யாத்மம் தாமஹாஸ் ஹிதா இத்யாசக்ஷதே–৷৷1.3.1৷৷

ஸஹ நௌ யஷ -சேர்ந்து யசஸ் கிட்டட்டும்
ஸஹ நௌ ப்ரஹ்மவர்சஸம் -ப்ரஹ்ம தேஜஸ் ஞானம் வரட்டும்
அதாத ஸ் ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம பஞ்சஸ்வதிகரணேஷு-ஆகையால் அதற்க்கு பின்பு
உலகம் -ஜோதி ஞானம் பிரஜை -சரீரம் பற்றி மேலே ஐந்து அதிகரணங்கள் –
பூர்வ ரூபம் உத்தர ரூபம் சாந்தி சந்தானம் நான்கையும் ஐந்திலும் வைக்க வேண்டும் -ஆக -20-விஷயம்

இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது. இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர்.
முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது

இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ “ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த் ” – உத்தர ரூபம்
இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும்.
இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.

அத4 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத – ஆகவே 1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.

ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம்.
முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

———–

அதாதிலோகம் பரிதிவீ பூர்வரூபம் த்யௌருத்தரரூபம் ஆகாஷ ஸந்தி வாயு ஸந்தாநம் இத்யதிலோகம் –৷৷13.2৷৷

லோகத்தில் -பூர்வம் பிருத்வி -மேலே அந்தரிக்ஷம் உத்தர ரூபம் -சந்திக்கும் இடம் -ஆகாசத்தில் /
சந்தானம் வாயு தானே சந்திக்கப் பண்ணும் -லோக லக்ஷணம் இது

இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும். இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க வேண்டும்.
இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,

—————-

அதாதிஜ்யௌதிஷம் அக்நி பூர்வரூபம் ஆதித்ய உத்தரரூபம் ஆப ஸந்தி வைத்யுத ஸந்தாநம் இத்யதிஜ்யௌதிஷம்–৷৷1.3.3৷৷

ஜோதி -அக்னி பூர்வ ரூபம் –ஆதித்யன் உத்தர ரூபம் -தொடர்பு சந்தி தண்ணீர் –
பாடபாக்கினி-சமுத்திரத்தில் குதிரை முகத்தில் –வயிற்றில் ஜாடராகினி –
மின்னல் தானே சேர்த்து வைக்கும் –

இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நெருப்பை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

————-

அதாதிவித்யம் ஆசார்ய பூர்வரூபம் அந்தேவாஸ்யுத்தரரூபம் வித்யா ஸந்தி ப்ரவசந் ஸந்தாநம் இத்யதிவித்யம்–৷৷1.3.4৷৷

படிப்பு -வித்யை ஞானம் -ஆச்சார்யர் பூர்வம் -தொடங்க வேண்டும் -சிஷ்யன் உத்தர -விடாமல் சொன்னதை கேட்டு இருக்க வேண்டும் –
தொடர்பு வித்யை -சிஷ்ய கத ஞானம் -சேர்த்து வைப்பது உபதேசம் தானே பிரவசனம் தானே
நம்மாழ்வார் மதுரகவி போலே

இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் குருவை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

—————–

அதாதிப்ரஜம் மாதா பூர்வரூபம் பிதோத்தரரூபம் ப்ரஜா ஸந்தி ப்ரஜநந் ஸந்தாநம் இத்யதிப்ரஜம்–৷৷1.3.5৷৷

பிரஜைகள் -மாதா பூர்வ ரூபம் -பிதா உத்தர ரூபம் -குழந்தைகள் – கர்ப்ப உத்பாதம் சேர்த்து -தலை முறை –

இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் தாயையும் தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் தந்தையையும் தியானிக்க வேண்டும். இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

——————-

அதாத்யாத்மம் அதரா ஹநு பூர்வரூபம் உத்தரா ஹநுருத்தரரூபம் வாக் ஸந்தி ஜிஹ்வா ஸந்தாநம் இத்யத்யாத்மம் இதீமா மஹாஸ ஹிதா–৷৷1.3.6৷৷

வாய்க்கு கீழே அதரா ஹனு -மேல் தாடை உத்தர ரூபம் -வாக்கு தானே சேரும் இடம் -நாக்கு சேர்த்து வைக்கும் -வாக்கும் நாக்கும் –

இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும். இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

————–

ய ஏவமேதா மஹாஸ் ஹிதா வ்யாக்யாதா வேத ஸம் தீயதே ப்ரஜயா பஷுபி ப்ரஹ்மவர்சஸேநாந்நாத்யேந ஸுவர்க்யேண லோகேந
(ஸம் திராசார்ய பூர்வரூபமித்யதிப்ரஜம் லோகேந-)৷৷1.3.7৷৷

இந்த சேர்க்கை வேதம் -அறிந்தவன் -மக்கள் செல்வம் -பசு செல்வம் -ப்ரஹ்ம ஞானம் -ஸ்வர்க்கம் பெறுகிறான்

இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன் மேலே விளக்கிய முறைப்படி
இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும், ஒளிபொருந்திய தேகத்தையும்,
வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து சுகித்து இருப்பான்.

——————————————–

யஷ்சந்த ஸாமரிஷபோ விஷ்வரூப சந்தோப்யோத்ய மரிதாத்ஸம்பபூவ ஸ மேந்த்ரோ மேதயா ஸ்பரிணோது அமரிதஸ்ய தேவதாரணோ பூயாஸம்
ஷரீரம் மே விசர்ஷணம் ஜிஹ்வா மே மதுமத்தமா கர்ணாப்யாம் பூரி விஷ்ருவம் ப்ரஹ்மண கோஷோஸி மேதயா பிஹித ஷ்ருதம் மே கோபாய -৷৷1.4.1৷৷

பிரணவ உபாசனம் பற்றி சொல்லும் மந்த்ரங்கள் –
யஷ்சந்த ஸாமரிஷபோ விஷ்வரூப –சந்தஸ் ஸூ க்களுக்கு தலைமை -ரிஷபம் -விஸ்வத்தை உருவமாக
சந்தோப்யோத்ய மரிதாத்ஸம்பபூவ –அமிர்தம் பகவான் இடம் அவதாரம்
ஸ மேந்த்ரோ மேதயா ஸ்பரிணோது -எனக்கு மேதையை ஞானத்தை கொடுக்கட்டும் –ஏகாக்ர சித்த ஞானம் வேண்டும்
வேத அத்யயனம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் அறிந்து உபாசனம்
அமரிதஸ்ய தேவதாரணோ பூயாஸம்–தரிக்க வேண்டும் -வந்த ஞானம் -யோக க்ஷேமம் வஹாம் யஹம் போலே –
ப்ரஹ்மத்திலே நிலை நின்ற ஞானம் வேண்டும் -மற்று ஒன்றினைக் காணாவே –இதுவே பூமா —
பிரார்த்திக்கிறோம் பிரணவத்தின் இடமே இந்த நிஷ்டையை
ஷரீரம் மே விசர்ஷணம் -ஆரோக்யம் பலம் வேண்டுமே –சரீரம் தர்ம சாதனம் தானே –
ஜிஹ்வா மே மதுமத்தமா -நாக்கு இனிமையாக பேச வேண்டும் -மதுரகவி போலே -இந்த கவி பாடும் பரம கவிகள் போலே -நாலு கவி பெருமாள் போலே –
நாவினால் நவிற்று இன்பம் எய்த வேண்டுமே -பாவின் இன் இசை மேவி திரிய வேண்டுமே -நாவில் தேன் ஒழுகட்டும்
கர்ணாப்யாம் பூரி விஷ்ருவம் -காதுகள் ப்ரஹ்மம் பெருமையையே கேட்கட்டும் -கேளாச் செவிகள் செவி அல்லவே –
ப்ரஹ்மண கோஷோஸி மேதயா பிஹித -ப்ரஹ்மத்துக்கு கோசம் -சுருக்கு பை போலே அன்றோ பிரணவம் -வைரவம் அவன் –
கோபால ராம ரத்னம் -திரு மந்த்ரம் சுருக்கு பை -ஆச்சார்யர் இத்துடன் அருளுகிறார் -யாருக்கும் தெரியாத ரஹஸ்யம் –
பெருமை கௌரவம் -ஆழ்ந்த கருத்துக்கள் உண்டே திரு மந்திரத்தில் -ப்ரஹ்மமே அடக்கம் அன்றோ -இதற்குள் –
ஷ்ருதம் மே கோபாய -உபதேசம் பெற்ற அர்த்தங்கள் தங்கும் படி அருள வேண்டும் –

இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது.
வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை.
இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற உபாஸனை.
ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது,
வேதத்திற்கே ஆதாரமாக இருக்கின்றது. பதார்த்தமில்லாமல் பதங்கள் கிடையாது.
எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது.
ஓம் = அ + உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.

1. ஓங்காரம் வேத மந்திரங்களில் சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
2. இதை ஆலம்பனமாக கொண்டு தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுவதன் மூலம்
வலிமைப்படுத்து, காப்பாற்று. கற்றதை நினைவில் வைக்கும் சக்தி, ஞாபக சக்தியை கொடு.
3. ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவா, மரணமில்ல பெருவாழ்வு தரும் பிரஹ்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக.
என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரஹ்ம ஞான முயற்சிக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
4. என்னுடைய நாவிலிருந்து வெளி வரும் வாக்கானது இனிமையாக, மிருதுவாக இருக்கட்டும்.
நாம் நம்மை யறியாமல் மற்றவர்களை சொல்லால் துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள் யாரையும்
துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும் அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
5. என்னுடைய இரண்டு செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை, சரியான அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
6. பிரம்மத்திற்கு உறையாக இருக்கும் ஒங்காரமே! நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை
நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு.
ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
7. குருமுகமாக நான் பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.

இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்.
இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும்.
இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.

————

ஆவஹந்தீ விதந்வாநா குர்வாணா சீரமாத்மந வாஸா் ஸி மம காவஷ்ச அந்நபாநே ச ஸர்வதா ததோ மே ஷ்ரியமாவஹ
லோமஷாம் பஷுபி ஸஹ ஸ்வாஹா ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா விமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா ப்ரமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா
தமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா யஷோ ஜநேஸாநி ஸ்வாஹா ஷ்ரேயாந் வஸ்யஸோஸாநி ஸ்வாஹா
தம் த்வா பக ப்ரவிஷாநி ஸ்வாஹா ஸ மா பக ப்ரவிஷ ஸ்வாஹா தஸ்மிந் ஸஹஸ்ரஷாகே நிபகாஹம் த்வயி மரிஜே ஸ்வாஹா
யதாப ப்ரவதா யாந்தி. யதா மாஸ அஹர்ஜரம் ஏவம் மாம் ப்ரஹ்மசாரிண தாதராயந்து ஸர்வத ஸ்வாஹா ப்ரதிவேஷோஸி
ப்ர மா பாஹி ப்ர மா பத்யஸ்வ விதந்வாநா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா. (தாதராயந்து ஸர்வத ஸ்வாஹைகே ச)-৷৷1.4.2৷৷

இனி ஸ்ரீ மஹா லஷ்மீ தேவியிடம் பிரார்த்தனை இதில் –
ஆவஹந்தீ விதந்வாநா -செல்வத்துக்கு அபிமானி தேவியே -ஞானம் -அனுஷ்டானம் -செல்வம் வேண்டுமே –
யாகம் தபஸ் கர்மம் செய்ய வேண்டிய செல்வம் அருள வேண்டும் -பணம் வகுத்து ஆனந்தம் பெருக்க வேண்டும் –
பணம் மட்டும் பெருக்கி ஆனந்தம் குறைய கூடாதே -குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் செய்யும் ப்ரபன்னர் குலம் –
குர்வாணா சீரமாத்மந -வஸ்திரம் பிரார்த்தனை –
வாஸா் ஸி மம காவஷ்ச -பசு செல்வம்
அந்நபாநே ச ஸர்வதா -அன்னம் பானம் பிரார்த்தனை -மோக்ஷம் பெரும் வரை இருக்கும் காலத்துக்கு இவை வேண்டுமே –
ததோ மே ஷ்ரியமாவஹ-செல்வம் அருளுவாய்
லோமஷாம் பஷுபி ஸஹ ஸ்வாஹா -ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா– விமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா
ப்ரமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா-தமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா -ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா –
எல்லா திக்குகளில் இருந்தும் -சிஷ்யர்கள் என்னை அடைய வேண்டும் -வித்யா உபாசனம் சிஷும் கத ஞானத்துக்கு தானே பெயர் -போதயந்த பரஸ்பரம் –
யஷோ ஜநேஸாநி ஸ்வாஹா –யஜஸ் -கீர்த்தி -வரட்டும் -உபாசனம் -வித்யை -பரப்புவதால் வரும் புகழ் –
தர்ம ரீதியால் வாழ்வதால் வரும் புகழ் -நின் கீர்த்தி கனி –கீர்த்திமை பாடிப் போய் —
ஷ்ரேயாந் வஸ்யஸோஸாநி ஸ்வாஹா-செழிப்பாக உள்ளவர்களுள் சிறப்பாக இருக்க வேண்டும்
தம் த்வா பக ப்ரவிஷாநி ஸ்வாஹா -பக தேவனே நீ என்னை அடைய வேண்டும்
ஸ மா பக ப்ரவிஷ ஸ்வாஹா -நாம் விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்
தஸ்மிந் ஸஹஸ்ரஷாகே நிபகாஹம் த்வயி மரிஜே ஸ்வாஹா–ஆயிரம் சாகைகள் கொண்ட பிரணவமே
ஓங்கார பிரபவ வேதா -ஆலமர் வித்தை யாரும் குறளானான்-
யதாப ப்ரவதா யாந்தி. யதா மாஸ அஹர்ஜரம் ஏவம் மாம் ப்ரஹ்மசாரிண -அறிந்தவை எல்லாம் சிஷ்யருக்கு கொடுக்க வேண்டும் –
மேல் தண்ணீர் கீழே கொட்டுமா போலே – பிரயத்தனம் இல்லாமல் ஆவலோடு சிஷ்யர்கள் வர வேண்டும்
முதுமை தானே வருவது போலே -இன்னும் ஒரு த்ருஷ்டாந்தம்
தாதராயந்து ஸர்வத ஸ்வாஹா ப்ரதிவேஷோஸி ப்ர மா பாஹி ப்ர மா பத்யஸ்வ –
விதந்வாநா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா. (தாதராயந்து ஸர்வத ஸ்வாஹைகே ச)-
அருகில் உள்ள ஓங்காராமே என்னை சரணாகதன் ஆக்கி அருளுவாய்

இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு சொல்லப்பட்ட பிரார்த்தனையின் பலனை அடைந்த பிறகு, நற்பண்புகளை அடைந்தபிறகு எனக்கு நிறைய செல்வங்களையும்,
செழிப்பையும் அடைய அருள் புரிவாயாக. ஜீவனின் உண்மையான லட்சியத்தை அறிந்த பிறகு ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு
இந்த செல்வங்கள் அலங்காரமாக இருக்கும். ஆத்ம ஞானத்தை அடையாமல் வரும் செல்வங்கள் அவனை அழித்து விடும்.
எல்லா காலங்களிலும் எனக்கு ஆடைகளையும், பசுக்களையும், செல்வங்களையும், உணவையும், நீரையும்,
ரோமங்களுடன் கூடிய ஆடுமாடுகளையும் என்னிடம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்,
அதிக காலம் இருக்க வேண்டும் அதுவும் உடனே கிடைத்திட வேண்டும்.

எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?
கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய போகத்திற்கு பயன்படுத்த கூடாது.
உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம். தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும் தேவை கிடையாது.
ஆனால் யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது.
சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான் தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம் செய்ய வேண்டும்.
இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
கர்மம் எதற்கு செய்ய வேண்டும்?
மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும்,
இவைகளுக்காக செல்வம் தேவை.
பணமிருந்தும் தானம் செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி நீரில் போட வேண்டும்.
மனத்தூய்மை எதற்காக பயன்படும்?
இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை. குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும்.

———————————————-

பூர்புவ ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹரிதய தாஸாமுஹ ஸ்மைதாம் சதுர்தீம் மஹாசமஸ்ய ப்ரவேதயதே
மஹ இதி தத்ப்ரஹ்ம ஸஹ ஆத்மா அங்காந்யந்யா தேவதா பூரிதி வா அயம் லோக புவ இத்யந்தரிக்ஷம் ஸுவரித்யஸௌ லோக மஹ இத்யாதித்ய
ஆதித்யேந வாவ ஸர்வே லோகா மஹீயந்தே பூரிதி வா அக்நி புவ இதி வாயு ஸுவரித்யாதித்ய மஹ இதி சந்த்ரமா சந்த்ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீ்
ஷி மஹீயந்தே பூரிதி வா றச புவ இதி ஸாமாநி ஸுவரிதி யஜூ் ஷி மஹ இதி ப்ரஹ்ம ப்ரஹ்மணா வாவ ஸர்வே வேதா மஹீயந்தே பூரிதி வை ப்ராண
புவ இத்யபாந ஸுவரிதி வ்யாந மஹ இத்யந்நம் அந்நேந வாவா ஸர்வே ப்ராணா மஹீயந்தே தா வா ஏதாஷ்சதஸ்ரஷ்சதுர்தா
சதஸ்ரஷ்சதஸ்ரோ வ்யாஹரிதய தா யோ வேத ஸ வேத ப்ரஹ்ம ஸர்வேஸ்மை தேவா பலிமாவாஹந்தி–৷৷1.5.1 – 1.5.3৷৷
(அஸௌ லோகோ யஜூ் ஷி வேத த்வே ச)৷৷

வியாக்ருதி உபாசனம் இதில் -பூ புவ சுவ மகா நான்கும் -தயிர் தாழி கடைந்து வெண்ணெய் போலே -ரிக் சாம யஜுர் வேதம் அகாரம் உகாரம் மகாரம்
முன்பு பூ புவ சுவ மூன்றும் -இவற்றுள் இருந்து மூன்று அக்ஷரங்கள் –
பூர்புவ ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹரிதய தாஸாமுஹ ஸ்மைதாம் சதுர்தீம் -நாலாவது கலந்து பிரதானம்
மஹாசமஸ்ய ப்ரவேதயதே–மகாசமாய ரிஷி
மஹ இதி தத்ப்ரஹ்ம ஸஹ ஆத்மா -அந்தராத்மா இதுவே
அங்காந்யந்யா தேவதா -மற்றவை எல்லாம் அங்கங்கள்
ஒன்றும் தேவும் இத்யாதி -பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை
பூரிதி வா அயம் லோக –கண்ணால் பார்க்கும் லோகமே பூ
புவ இத்யந்தரிக்ஷம் –நடு லோகம் -ஆகாச வெளி
ஸுவரித்யஸௌ லோக –மேல் உலகம்
மஹ இத்யாதித்ய-நாலாவது ஆதித்யன் என்று நினைத்து த்யானம் முதல் நிலை -மஹா ப்ரஹ்மம் அறிய இப்படி படிப் படியாக வேதம் கூட்டிச் செல்லும்
இப்படி உபாசனம் பண்ண பண்ண –
ஆதித்யேந வாவ ஸர்வே லோகா மஹீயந்தே -சர்வ லோகங்களும் சிறப்பு ஆதித்யனால் போலே ப்ரஹ்மத்தால்
ஸ்தூலா நியாயம் -தெரிந்த ஒன்றின் மூலம் -அருந்ததி காட்டுவது போலே
பூரிதி வா அக்நி -அடுத்த உபாசனம் -இரண்டாவது நிலை
புவ இதி வாயு
ஸுவரித்யாதித்ய –கீழே சொன்ன சூர்யன் ஒரு நிலை கீழே இங்கு -கொதிக்கும் அன்றோ -இரவில் கண்ணுக்கு இல்லையே -ப்ரஹ்மம் ஒப்புமைக்கு சந்திரன்
மஹ இதி சந்த்ரமா
சந்த்ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீ் ஷி மஹீயந்தே -எல்லா ஜ்யோதிஸ் ஸூ க்களும் குளிர்ச்சி சந்திரன் மூலம் தானே
பூரிதி வா றச -ருக்கு வேதம்
புவ இதி ஸாமாநி –சாம வேதம்
ஸுவரிதி யஜூ் ஷி -யஜுஸ் வேதம்
மஹ இதி ப்ரஹ்ம ப்ரஹ்மணா வாவ ஸர்வே வேதா மஹீயந்தே –ப்ரஹ்மத்தாலே தானே வேதம் சிறப்படையும் –
மூன்றாவது உபாசனம் இது -அடுத்து அறிந்த ஒன்றை மீண்டும் காட்டும்
பூரிதி வை ப்ராண-பிராணனை நினைத்து
புவ இத்யபாந –அபான வாயு
ஸுவரிதி வ்யாந -வ்யான வாயுவை
மஹ இத்யந்நம் அந்நேந வாவா ஸர்வே ப்ராணா மஹீயந்தே–அன்னம் தான் ப்ரஹ்மம் -புரிய வைக்க –
தா வா ஏதாஷ்சதஸ்ரஷ்சதுர்தா
சதஸ்ரஷ்சதஸ்ரோ வ்யாஹரிதய தா யோ வேத
ஸ வேத ப்ரஹ்ம ஸர்வேஸ்மை தேவா பலிமாவாஹந்தி–
(அஸௌ லோகோ யஜூ் ஷி வேத த்வே ச)৷৷
கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியாக சொல்லி -ஒப்புமை காட்ட முடியாத ப்ரஹ்மத்தின் உண்மை நிலை வேதாந்தம் அறிவிக்கும் –
ராமன் குணம் -ஒவ் ஒன்றுக்கும் ஒரு உதாரணம் இருக்கலாம் -அனைத்தும் ஒரே காலத்தில் பெருமாள் ஒருவர் இடம் தானே -அதே போலே இங்கும்
ஆதித்யன் -சந்திரன் -வேதம் -அன்னம் இவற்றுள் உள்ள நன்மைகள் எல்லாம் ப்ரஹ்மத்தின் இடம் உண்டே –
புத்தியை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து நிறுத்த வேண்டும் –
தஸ்ரஷ்சதுர்தா-இப்படி நான்கு நான்கு -16-அறிந்து உபாசித்தால் ப்ரஹ்மம் அறிவான் -தேவதைகள் உபகாரம் செய்வார்கள் –
அங்கங்கள் தானே ப்ரஹ்மத்துக்கு இவர்கள் நல்ல காற்று வீசும் -பிராணிகள் பயம் வேண்டாம் –
மூப்பு வராது தேக சக்தி கொடுப்பார்கள் -இவை தன்னடையே சித்திக்கும்

பூ, புவ, ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள்.
இவைகளுடன் நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார்.
”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது., ஆத்மாவை வியாபித்திருக்கின்றது,
மற்றவைகள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றது.

இது அதிலோக தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும்,
புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும்,
மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..

இது அதிதெய்வ தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும், புவ என்பதில் வாயுவையும்,
ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..

இது அதிவேத தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும், புவ என்பதில் சாம வேதத்தையும்,
ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..

இது அதிப்ராண தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று),
புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்),
ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று),
மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..

இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது.
இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள்.
இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் இது முழுமையடையும்.
இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள்.
ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஐக்கியமாகி விடுகின்றான்.
ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும் பொருட்களை கொடுப்பார்கள்.

———————————————————-

ஸ ய ஏஷோந்தர்ஹரிதய ஆகாஷ தஸ்மிந்நயம் புருஷோ மநோமய அமரிதோ ஹிரண்மய அந்தரேண தாலுகே
ய ஏஷ ஸ்தந இவாவலம்பதே ஸேந்த்ரயோநி ய த்ராஸௌ கேஷாந்தோ விவர்ததே வ்யபோஹ்ய ஷீர்ஷகபாலே பூரித்யக்நௌ ப்ரதிதிஷ்டதி
புவ இதி வாயௌ ஸுவரித்யாதித்யே மஹ இதி ப்ரஹ்மணி ஆப்நோதி ஸ்வாராஜ்யம் ஆப்நோதி மநஸஸ்பதிம் வாக்பதிஷ்சக்ஷுஷ்பதி
ஷ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி ஏதத்ததோ பவதி ஆகாஷ ஷரீரம் ப்ரஹ்ம ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்தம்
ஷாந்தி ஸமரித்தமமரிதம் இதி ப்ராசீந யோக்யோபாஸ்ஸ்வ–৷৷1.6.1 – 1.6.2৷৷
(வாயாவமரிதமேகம் ச)

ஸ ய ஏஷோந்தர்ஹரிதய ஆகாஷ -த்யானம் பண்ண ஆரம்பித்த பின்பு -ஹ்ருதய கமலம் -தஹாராகாசம் –
தஸ்மிந்நயம் புருஷோ மநோமய –மனத்தால் பிடிக்க முடியும்
அமரிதோ -அமிர்தம்
ஹிரண்மய -நிறைந்த சோதி வெள்ளம் பொன் மயம்
அந்தரேண தாலுகே–அனுக்ரஹித்து -பாப புண்யங்கள் தொலைத்து -தாலேலோ -பாடும் இடம் -நடுவில் ஜிஹ்வா நாக்கு
ய ஏஷ ஸ்தந இவாவலம்பதே -மாட்டு மடி போலே தொங்கும்
ஸேந்த்ரயோநி -அர்ச்சிராதி மார்க்கம் செல்லும் இடம் -இது தான் -கீழ் நாக்கு இதுக்கு மட்டுமே பயன் -பாதுகாப்பாக வைக்கப்பட்ட –
கீழே வந்து ஹிருதய கமலம் -101-நாடியைச் சொல்லுகிறது என்றுமாம் -ஸூ ஷூம்நா நாடி –
ய த்ராஸௌ கேஷாந்தோ விவர்ததே –பிரம்மன் ஈசன் தலைவன் பர ப்ரஹ்மம் அமர்ந்து -வெளிச்சம் காட்டும் வழித்துணை பெருமாள் –
வ்யபோஹ்ய ஷீர்ஷகபாலே -கபாலம் உடைத்து
பூரித்யக்நௌ ப்ரதிதிஷ்டதி-நான்கு தேவதைகள் உதவும் -பூ அக்னி லோகம்
புவ இதி வாயௌ ஸுவரித்யாதித்யே மஹ இதி ப்ரஹ்மணி –ப்ரஹ்ம லோகம் வரை –கூட்டிப் போகும் —
12-லோகங்கள் தாண்டுவோம்- அர்ச்சிராதி கதி சிந்தனம் நித்யம் வேண்டுமே /
ஆப்நோதி ஸ்வாராஜ்யம் –ஸ்வராட்-சம்சாரம் விடுதலை -கர்மா கட்டுக்கள் இல்லை
ஆப்நோதி மநஸஸ்பதிம் -தன் மனசுக்கு தான் பத்தி ஆவான் இப்பொழுது தான் ஆகிறான் –
வாக்பதிஷ்சக்ஷுஷ்பதி ஷ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி ஏதத்ததோ பவதி –வாக்குக்கும் பதி/
கண்ணுக்கும் -காதுக்கும் புத்திக்கும் பதி இப்பொழுது தான் ஆகிறான் -ஞானத்தால் இந்திரியங்கள் வசம்
ஆகாஷ ஷரீரம் ப்ரஹ்ம ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்தம்
ஷாந்தி ஸமரித்தமமரிதம் இதி ப்ராசீந யோக்யோபாஸ்ஸ்வ–
(வாயாவமரிதமேகம் ச)
ப்ரஹ்மம் -தெய்வீக ஒளி –ஸத்ய-நித்யர் -ஆத்மா -முக்தர் -பிராணா ஆராமம்-இருவருக்கும் பிராணன் போலே -ப்ரஹ்மம் –
பகவான் ஆகிற தோட்டத்தில் இவர்கள் அனுபவிப்பார்கள்
ஸத்யாத்ம ப்ராணாராமம்-முக்தாத்மாவை இப்படி சொல்கிறது
இத்தைப் போலே நினைத்து உபாசகியானம் பண்ணுவாய் என்று உபதேசம் –

இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது.
இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது.

நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும்.
அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும். இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார்.
அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும். இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர்,
மனதாலே அறியப்படுபவர், எல்லாய் ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர்.
அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர்.
அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர். பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார்.
இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார். இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும்.
தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது.
அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று
மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது. இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.

பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான்.
தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான். அனைத்துக்கும் அதிபதியாகின்றான்.
எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான். எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான்.
எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான்.
எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான். இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான்.
ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது.
ஆகாசத்தைப் போல சூக்‌ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான்.
இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது. எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது.
எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார். அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான்.
இருமைகளற்றவராகவும், செழிப்பை உடையவராகவும் இருக்கின்றான். மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.
நீண்ட காலம் இருப்பவர் – பிரளயம் வரும் வரை இருப்பவர். இவ்வாறு உபாஸனை செய்வீராக.

——————————————————–

பரிதிவ்யந்திரக்ஷம் த்யௌர்திஷோவாந்தரதிஷா அக்நிர்வாயு ராதித்யஷ்சந்த்ரமா நக்ஷத்ராணி ஆப ஓஷதயோ வநஸ்பதய ஆகாஷ ஆத்மா
இத்யதிபூதம் அதாத்யாத்மம் ப்ராணோ வ்யாநோபாந உதாந ஸமாந சக்ஷு ஷ்ரோத்ரம் மநோவாக் த்வக் சர்ம மா் ஸ் ஸ்நாவாஸ்திமஜ்ஜா
ஏதததி விதாய றஷிரவோசத் பாங்த்கம் வா இத் ஸர்வம் பாங்த்கேநைவ பாங்த்க் ஸ்பரிணோதீதி. (ஸர்வமேகம் ச)৷৷1.7.1৷৷

பாந்த உபாசனம் –30-ஐந்து ஐந்தாக -சரீர ஆத்ம

பரிதிவ்யந்திரக்ஷம் த்யௌர்திஷோவாந்தரதிஷா –கீழ் லோகம்- ஆகாசம் ஸ்வர்க்கம்- நான்கு திசை- நடுவில் உள்ள நான்கு திசைகள்
அக்நிர் வாயு ராதித்யஷ்சந்த்ரமா நக்ஷத்ராணி –அடுத்த ஐந்து
ஆப ஓஷதயோ வநஸ்பதய ஆகாஷ ஆத்மா–தண்ணீர் மூலிகை –இப்படி ஐந்தும்
இத்யதிபூதம் -இயற்க்கை -மூன்றாக பிரித்து -15-விஷயங்கள் -மேலே வேறே -15-
அதாத்யாத்மம் ப்ராணோ வ்யாநோபாந உதாந ஸமாந
சக்ஷு ஷ்ரோத்ரம் மநோவாக் த்வக் -இந்திரியங்கள்
சர்ம மா் ஸ் ஸ்நாவாஸ்திமஜ்ஜா-தோல் –எலும்பு மஜ்ஜை
ஏதததி விதாய றஷிரவோசத் பாங்த்கம் வா இத் ஸர்வம் பாங்த்கேநைவ பாங்த்க் ஸ்பரிணோதீதி. (ஸர்வமேகம் ச)৷৷
உபாசித்து -ப்ரஹ்மம் அங்கங்கள் இவை என்று உணர்ந்து –
இவற்றை நினைத்து பாது காத்து சுற்று சூழல் பாதிக்காமல் இருக்க வேண்டுமே

இது ஒரு பாங்க்தம் உபாஸனம்.
பாங்க்தம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை, யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு அவைகள் எஜமான்ன், பத்தினி, புத்திரன், மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்க்தம் – ஐந்து விதமான உலகங்கள்
தேவதா பாங்க்தம் – ஐந்து விதமான தேவதைகள்
பூதா பாங்க்தம் – ஐந்து விதமான பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது ப்ராங்க்தம் என்பவைகளும் உண்டு.

ஐந்து லோக பாங்க்தம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்க்தம் – அக்னி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம்
பூத பாங்க்தம் – தண்ணீர், தாவரங்கள், மரங்கள், ஆகாசம், விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்க்தம் – பிராணன், வியானன், அபானன், வியானன், உதானன்
இந்திரிய பாங்க்தம் – கண், காது, மனது, சொல், தோல்
சர்ம பாங்க்தம் – உள்தோல், சதை, தசைகள், எலும்பு, எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார்.
இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின் சேர்க்கையாக இருக்கின்றன.
வியஷ்டி பாங்க்தம் மூலம் சமஷ்டி பாங்க்தத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை வருகின்றது. பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.

——————————————

ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீத் ஸர்வம் ஓமித்யேத தநுகரிதிர்ஹ ஸ்ம வா அப்யோஷ்ரா வயேத்யாஷ்ராவயந்தி ஓமிதி ஸாமாநி காயந்தி
ஓ் ஷோமிதி ஷஸ்த்ராணி ஷ் ஸந்தி ஓமித்யத்வர்யு ப்ரதிகரம் ப்ரதிகரிணாதி ஓமிதி ப்ரஹ்ம ப்ரஸௌதி ஓமித்யக்நி ஹோத்ர மநுஜாநாதி
ஓமிதி ப்ராஹ்மண ப்ரவக்ஷ்யந்நாஹ ப்ரஹ்மோபாப்நவாநீதி ப்ரஹ்மைவோ பாப்நோதி–৷৷1.8.1৷৷

பிரணவத்தை கொண்டாடும் மந்த்ரம் -பிரணவமே ப்ரஹ்மம் -சாதனதயா -அடையாளம் என்பதாலும்
ஓமிதி ப்ரஹ்ம
ஓமிதீத் ஸர்வம் –
ஓமித்யேத தநுகரிதிர்ஹ ஸ்ம -அனுமதிக்கவும் ஓம்
வா அப்யோஷ்ரா வயேத்யாஷ்ராவயந்தி -ஆவாஹனம் -ருக்கை ஒத்துக் கொண்டு -அனுமதி –
ஓமிதி ஸாமாநி காயந்தி–சாமவேதம் உத்கீதா பிரணவம்
ஓ் ஷோமிதி -ஆனந்தப் பட்டால் போலே -மோதம் ஆமோதம்
ஷஸ்த்ராணி ஷ் ஸந்தி ஓமித்யத்வர்யு ப்ரதிகரம் ப்ரதிகரிணாதி ஓமிதி ப்ரஹ்ம ப்ரஸௌதி ஓமித்யக்நி ஹோத்ர மநுஜாநாதி
ஓமிதி ப்ராஹ்மண ப்ரவக்ஷ்யந்நாஹ ப்ரஹ்மோபாப்நவாநீதி ப்ரஹ்மைவோ பாப்நோதி
ருக்கு -எஜமான் -ப்ரம்மா ஸ்தானம் -ப்ருஹஸ்பதி தப்பு இல்லாமல் சொல்வதைப் பார்க்க –
படிக்க ஆரம்பிக்கும் பொழுதும் இத்தை சொல்லி ஆரம்பம் –

ஓங்கார உபாஸனை
ஓம் என்ற சொல்தான் முக்கியம். இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது.
ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான்.
மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது. ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார்.
எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது.
எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது.
இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.

இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.
· ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு அனுமதியை குறிக்கின்றது
· அபி ஓம் ஸ்ராவய – மேலும் ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
· ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேத்த்தை உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
· ஓம் சோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
· ஓம் இதி அதி3வாயு – யஜூர் வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
· அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
· அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்ப்பதையும் ஓம் என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
· வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான் தொடங்குகின்றான்.
வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன் வேத்த்த்தை உச்சரிக்கின்றான்.
அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.
· பிரம்மத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் ஓம் என்று சொல்லித்தான் அதை அடைய முயற்சிக்கின்றார்கள்.
அவன் பிரம்மத்தை அடைவான் என்று வேதம் உறுதி கூறுகின்றது.

————————————————————-

றதம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ஸத்யம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச தபஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச தமஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
ஷமஷ்ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச அக்நயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச அக்நிஹோத்ரம் ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச அதிதயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
மாநுஷம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜா ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜநஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜாதிஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
ஸத்யமிதி ஸத்யவசா ராதீதர தப இதி தபோநித்ய பௌருஷிஷ்டி ஸ்வாத்யாய ப்ரவசநே ஏவேதி நாகோ மௌத்கல்ய தத்தி தபஸ்தத்தி தப–৷৷1.9.1৷৷

றதம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச –கற்றல் கற்ப்பித்தல்-உண்மை
ஸத்யம் ச ஸ்வாத்யாயப்ரவசநே –சம தர்சனம் இங்கு -ருதம் சத்யம் கீழே வேறே பார்த்தோம் –
ச தபஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே -காய சோஷணம் பட்டினி -ஏகாதசி விரதம் –
ச தமஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச-இந்திரியங்கள் அடக்கி -இருந்தால் தான் கற்கவும் கற்ப்பிக்கவும் முடியும் -சமம் தமம்
ஷமஷ்ச ஸ்வாத்யாய-ப்ரவசநே –உள் வெளி இந்திரியங்கள்
ச அக்நயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே –அக்னி
ச அக்நிஹோத்ரம் ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச -நித்ய கர்மாக்கள் விடாமல்
அதிதயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச–விருந்து ஓம்பி
மாநுஷம் ச ஸ்வாத்யாயப்ரவசநே –பித்ருக்கள்
ச ப்ரஜா ச ஸ்வாத்யாயப்ரவசநே –குழந்தைகள்
ச ப்ரஜநஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே -உத்பத்தி
ச ப்ரஜாதிஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச–பேரன் பேத்திகள் -ப்ரஹ்மசர்ய விரதம் தொடங்கி-தாத்தா வானாலும் படிக்கவும் சொல்லிக் கொடுக்கவும் வேண்டுமே
ஸத்யமிதி ஸத்யவசா ராதீதர தப இதி -தாதீதரர் சொல்லும் வார்த்தை –சத்யம் முக்கியம்
தபோநித்ய பௌருஷிஷ்டி ஸ்வாத்யாய ப்ரவசநே -பௌருஷிசொல்லும் வார்த்தை –தபஸ் உயர்ந்தது
ஏவேதி நாகோ மௌத்கல்ய தத்தி தபஸ்தத்தி தப–நாகோ மௌத்கல்ய-கற்பித்தலும் கர்ப்பித்தலும் தான் பிரதானம்

இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலே கூறிய உபாஸனைகளனைத்தும்
நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல்,
தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவ்ல் கட்டுபாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும்.
அளவுடன் சாப்பிட வேண்டும். புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல்,
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்-படுகின்றது.
அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும்,
சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல்,
பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும்,
தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாகவும் கூறுவதாகவும் இங்கு சொல்லப்-பட்டிருக்கின்றது.
நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்படுகின்றது.

——————————————————

அஹம் வரிக்ஷஸ்ய ரேரிவா கீர்தி பரிஷ்டம் கிரேரிவ ஊர்த்வ பவித்ரோ வாஜிநீவ ஸ்வமரிதமஸ்மி த்ரவிண் ஸவர்சஸம்
ஸுமேதா அமரிதோக்ஷித இதி த்ரிஷங்கோர்வேதாநுவசநம்–৷৷1.10.1৷৷

அஹம் வரிக்ஷஸ்ய ரேரிவா –நான் மரத்தை வெட்டுபவன் -சம்சாரம் அஹங்காரம் போன்றவற்றை –
இத்தை அறிந்து -அஹங்காரம் மமகாராம் ஒழித்து –
கீர்தி பரிஷ்டம் கிரேரிவ -புகழ் மேரு சிகரம் போலே பெருகும்
ஊர்த்வ பவித்ரோ வாஜிநீவ ஸ்வமரிதமஸ்மி –பரமாத்வா ப்ரீதிக்கு பாத்திரம் ஆவேன் -மிக உயர்ந்த தூய்மை அடைந்து
த்ரவிண் ஸவர்சஸம் ஸுமேதா அமரிதோக்ஷித -தங்கம் போலே தேஜஸ் -ப்ரஹ்மத்துக்கு பரம போக்யம்-
இதி த்ரிஷங்கோர்வேதாநுவசந-
த்ரிசங்குவின் வேத வசனம்

ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும். த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும்.
நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும்.
பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும். இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேரலாம்.
இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

* நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன். நான் சம்சாரத்தை நாசம் செய்தவன்,
வைராக்கியம், ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
* என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது. தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது.
இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக் காட்டுகின்றது.
எவனொருவன் தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது.
உதாரணமாக கர்ணன் தான் க்‌ஷத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின்
மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போதும் அவன் வருந்தவில்லை.
* நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
* சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
* ஒளி பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக இருக்கின்றேன்.
* நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன். எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று இருக்கின்றேன்.
* மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
* நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.

—————————————————

வேதம் அநூச்யா ஆச்சார்யோந் தேவாஸினம் அநு சாஸ்தி
சத்யம் வத தர்மம் சர ஸ்வாத்யாயாந் மா ப்ரமத
ஆச்சார்யாய பிரியம் தனம் ஆஹ்ருத்யா பிரஜா தந்தும் மா வ்யவச்சேத் ஸீ
சத்யான்ன ப்ரமதி தவ்யம்-தர்மான்ன ப்ரமதி தவ்யம்-குசலான்ன ப்ரமதி தவ்யம்
பூத்யை ந ப்ரமதி தவ்யம்-ஸ்வாத்யாய ப்ரவச நாப்யாம் ந ப்ரமதி தவ்யம்
தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதி தவ்யம்-மாத்ரு தேவோ பவ-பித்ரு தேவோ பவ -ஆச்சார்ய தேவோ பவ-அதிதி தேவோ பவ –
யாந்ய நவத்யாநி கர்மாணி-தாநி சேவிதவ்யாநி -நோ இதராணி-யாந்யஸ்மாக ஸூ சரிதாநி -தாநி த்வயோ பாஸ்யாநி
நோ இதராணி யே கே சாஸ்மச்ச் ரேயா சோ ப்ராஹ்மணா -தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்
அஸ்ரத்தயா தேயம் -ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் –
அத யதி தே கர்ம விசிகித்சா வா வ்ருத்த விசிகித்சா வா ஸ்யாத்
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆயுக்தா -அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா -அதாப்யாக்யாதே ஷூ
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆ யுக்தா அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
ஏஷ ஆதேஷ ஏஷ உபதேச ஏஷ வேத உபநிஷத் ஏதத் அநு சாசனம் -ஏவம் உபாசி தவ்யம் -ஏவம் உசைதது பாஸ்யம்
ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி –

உபதேசம் ஆரம்பம் –
வேதம் அநூச்யா ஆச்சார்யோந் தேவாஸினம் அநு சாஸ்தி –வேதம் உச்சாரணம் அநுச்சாரணம் ஸ்ருதி ஸ்ரவண ஜனக ஜன்ய ஞானம்
அந்தேவாசி -கூடவே இருக்கும் சிஷ்யன் -கடைசி வரை உபதேசம் படி வாழ்பவன் -குரு ரேவ பரம் தெய்வம் தனம் பாராயணம்-மதுர கவி ஆழ்வார் நிஷ்டை
கால் வாசி -ஆச்சார்யர் மூலம் -சக சிஷ்யர்கள் இடம் இருந்து கால் வாசி -வாழ்க்கை மூலம் கற்று கால் வாசி -காலப்போக்கில் கடைசி கால் –
கடாக்ஷ மூலமே கற்க முடியும் கால ஷேபம்-பகவத் விஷயம் ஸ்ரீ பாஷ்யம் ரகசிய த்ரயம் -ஆ முதல்வன் -இவன் என்று –
சத்யம் வத -சத்யமே பேசு -முதல் உபதேசம் –மெய்யானை மெய்ய மலையானை -/ சத்தியம் -சத் தி யம் மூன்றும் ஜீவாத்மா அசேதனம் இரண்டையும் நியமனம்
தர்மம் சர -தர்ம மார்க்கம் -ஆதாரம் -வேத போதிதம் –இதம் குரு -கரோமி -செய்யாதே விலகவும் வேண்டும் -கிருத்ய கரணம் அக்ருத்ய அகரணம்
ஸ்வாத்யாயாந் மா ப்ரமத–கவனக்குறைவால் விட்டு விடாதே -வேத அத்யயனம்
ஆச்சார்யாய பிரியம் தனம் ஆஹ்ருத்யா -ஆச்சார்யருக்கு பிரியமானவற்றை கொடுக்க வேண்டும் –
மட நாராய் -என் காதல் என் துணைவருக்கு உரைத்தியாகில் -பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவேன் –
பிரஜா தந்தும் மா வ்யவச்சேத் ஸீ -நூல் -அறுக்காமல் -சந்ததி இருக்க தக்ஷிணை
சத்யான்ன ப்ரமதி தவ்யம்-தர்மான்ன ப்ரமதி தவ்யம்-குசலான்ன ப்ரமதி தவ்யம்–சத்தியத்தில் தர்மத்தில் இருந்து நழுவாமல் -உண்மை பிரியம் -பேச வேண்டுமே
தர்மத்தில் நிலை நிற்க வேண்டும் -காணாமல் கோணாமல் கண்டு சந்தியாவந்தனம் –
குசலம் மங்கள கார்யங்கள் விடாமல் கோலம் இடுதல் திரு விளக்கு -அக்னி கார்யம் விடாமல் -நித்ய திரு ஆராதனம் விடாமல்
பூத்யை ந ப்ரமதி தவ்யம்-சம்பாதிக்கும் கார்யம் விடாமல் யாகம் தர்மங் களைப் பண்ண பணம் வேண்டுமே –
ஸ்வாத்யாய ப்ரவச நாப்யாம் ந ப்ரமதி தவ்யம் –கற்று கொண்ட வேதத்தை கற்பித்து -இரண்டும் விடாமல்
தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதி தவ்யம்-தேவ கார்யங்கள் பித்ரு கார்யங்கள் நழுவாமல் –
தூ மலர் தூவி -தொழுது வாயினால் பாடி -மனத்தினால் சிந்திக்க வேண்டுமே –
மாத்ரு தேவோ பவ-பித்ரு தேவோ பவ -ஆச்சார்ய தேவோ பவ-அதிதி தேவோ பவ –
தெய்வத்துக்கு சமம் -மாதா பிதா குரு -பாகவதர்களை -முதல் நிலை -மேலே
எவ்வுயிர்க்கும் தாய்-சேலேய் கண்ணியரும் — -அவரே இனி ஆவார் -மாதா நாராயணா —
ஸ்ரீ ரெங்க நாச்சியார் மாதா -/ ஸ்ரீ ரெங்க நாதன் -சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த ஆச்சார்யரை /ததீயரை ஆராதனம் –
யாந்ய நவத்யாநி கர்மாணி-தாநி சேவிதவ்யாநி -நோ இதராணி–நாங்கள் செய்தவற்றுள் -குற்றம் இல்லாத கர்மங்களைப் பின் பற்றுவாய் –
உன்னால் முடிந்த ஒன்றையே செய்ய வேண்டும் -பாம்புக்கு ஓவ்ஷத சேவை செய்தவர் எல்லாம் செய்யக் கூடாதே –
யாந்யஸ்மாக ஸூ சரிதாநி -எங்களால் நல்லதாகச் செய்த வற்றை பின் பற்று
தாநி த்வயோ பாஸ்யாநி – நோ இதராணி -வேறே ஒன்றை செய்யாதே
யே கே சாஸ்மச்ச் ரேயா சோ ப்ராஹ்மணா -சமமான ஆசனத்தில் இருக்கக் கூடாதே –
குசேலரை மேல் அமர்த்தி கண்ணனே கீழே அமர்ந்து அருளினான்
தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்
அஸ்ரத்தயா தேயம் -சிரத்தை யுடன் கொடு -நம்மது இல்லை என்ற எண்ணத்துடன் கொடு
அஸ்ரத்தயா அதேயம்- சிரத்தை இல்லாமல் கொடுக்காதே -என்றுமாம் –
ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் -முகத்தில் சிரிப்பை வைத்து கொடு -வெட்கப்பட்டு கொடு –
பயத்துடன் கொடு -உறுதியுடன் கொடு -தானம் வாங்குபவரை இருக்கச் சொல்லி கௌரவ புத்தியால் வணங்கிக் கொடுக்க வேண்டுமே
சாத்விக தானமாக இருக்க வேண்டுமே -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
அத யதி தே கர்ம விசிகித்சா வா வ்ருத்த விசிகித்சா வா ஸ்யாத் -அனுஷ்டானங்கள் -வழக்கங்கள் -மேலையார் செய்வனகள் —
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆயுக்தா -அலூஷா தர்ம காமஸ்ஸ் யு யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
ஆராய்ந்து தீர்க்க முடிவு எடுப்பவர் -லௌகிக வேத விஷயம் அறிந்தவர் -அரூஷா-கோபம் இல்லாதவர் என்றபடி
அதாப்யாக்யாதே ஷூ -யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆ யுக்தா அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
வேறே சங்கை வந்தாலும் முன்னோர் -யஸ்ய தாசரதி சிரேஷ்டர் நடக்கும் படி வாக்கியம் பின் தொடர்ந்து செய்ய வேண்டும்
வேதம் பிரமாணம் -அறிந்து அனுஷ்ட்டிக்கும் அனுஷ்டானமும் பிரமாணம்
ஏஷ ஆதேஷ ஏஷ உபதேச -ஆணை உபதேசம் இதுவே
ஏஷ வேத உபநிஷத் ஏதத் அநு சாசனம் -ஏவம் உபாசி தவ்யம் -ஏவம் உசைதது பாஸ்யம்-இவற்றையே பின் பற்று

இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன். இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்
என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.

உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே.
வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே. சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே.
குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே. குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும்.
வம்சத்தொடரை அறுத்துவிடாதே. உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே. வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே.
உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே. வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு.
வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு. சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே.
தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.
தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு.
இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.

எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு.
1. வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
2. ரிஷிகளால் எழுதப்பட்ட ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்படட்து
3. இப்பொழுது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை
என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.

எந்தச் செயல்கள் குற்றமற்றதாக இருக்கின்றதோ, மேற்கூறிய மூன்று பிரமானங்களினாலும் நிந்திக்கபடாததாக அவைகளை பின்பற்ற வேண்டும்.
மற்றவற்றை பின்பற்ற கூடாது.
பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில் காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை பின்பற்ற கூடாது.
நம்மை காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள், பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை கொடுத்து,
அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.

இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.
சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து கொடுக்க வேண்டும்.
சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
அதிகமாக கொடுக்க வேண்டும்.
வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,

ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால்,
அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள்,
எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள்,
தர்மத்தில் நிலை பெற்றவர்கள், பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம்
அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள்.
உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம்,
நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி,
சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும்.
இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்). இதுவே ஸ்மிருதியின் உபதேசம்.
இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி). இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை.
இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

———

ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
விஷ்ணு நம்மை ரக்ஷிக்கட்டும்
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம்

நம்மையும் நம் ஆச்சார்யரையும் ரக்ஷிக்கட்டும் –
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

———————————————

ஆனந்த்த்தை விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை.
இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது

ஆனந்த வல்லி -அனுகூல ரூப ஞானம் -வேண்டியது பிடித்தது -ஆனந்தம் –
நமக்கே நாம் எப்பொழுதும் அனுகூலமாக இல்லையே –
லீலையாலும் போகத்தாலும் ப்ரஹ்மம் ஆனந்தம் -உயர்வற உயர் நலம் யுடையவன் –
மீமாம்ஸா பூஜ்ய விஷய விசாரம் என்றபடி-

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -சேர்ந்து சக்தியை சம்பாதிப்போம்
தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை –விரோதம் வராமல் -பரஸ்பர நீச பாவை –
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும்.
இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்,
குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும்,
அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாக.
இங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது,
குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்ட்து ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.
நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக. சிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்.
குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.

———

ப்ரஹ்மவிதாப்நோதி பரம் ததேஷாப்யுக்தா ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத ஆகாஷாத்வாயு வாயோரக்நி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய ஓஷதீப்யோந்நம் அந்நாத்புருஷ ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.1.1৷৷

ப்ரஹ்மம் ஸ்வரூபம் சொல்லும் மேலே -ஆசை உடன்
ப்ரஹ்மவிதாப்நோதி பரம் –நான்கு சொல் -ப்ரஹ்மம் -வேதனம் அறியும் முறை -உபாசனம் -அடைவது எது -அடைந்து அனுபவிக்கும் அனுபவம் எது –
ததேஷாப்யுக்தா -யார் அறிந்தவனோ -ப்ரஹ்மத்தை அறிந்தவன் -உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம -சத்யம் நித்யம் எப்பொழுதும் உண்டே ப்ரஹ்மம் -இதனால் ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணன் என்று -மற்றவற்றைக் கழித்து
knock out போலே -இவைகள் இல்லை -அறிந்த ஒன்றை வைத்து -அபூர்வ வாதி ஸத்ய வாதி வேதம் –
வேறே ஒன்றால் அறிய முடியாததை தானே வேதம் சொல்லும் –
குளி சாப்பிடு சொல்லாமல்-இவை தன்னடையே செய்வான் – குளித்து விட்டு தான் சாப்பிடு என்று சொல்லும் —
ப்ரஹ்மம் -நித்யம் என்றது -ஸ்வரூப ஸ்வபாவ மாறாமல் அசேதன சேதன வ்யாவ்ருத்தி -/
குணத்தாலும் ஸ்வரூபத்தாலும் நித்யம் -பத்த ஜீவன் போலே இல்லை –
ஞானம் -ஞான ஸ்வரூபம் ஞான குணகன் -முக்தாத்மா போலே இல்லை -/
அநந்தம் -அந்தம் இல்லாமல் -குணங்கள் -எல்லை இல்லாமல் -தேச கால வஸ்து மூன்றாலும் -த்ரிவித அபரிச்சேதன்
சர்வ வியாபகம் விபு தேசத்தால் அளவு இல்லை -முக்காலம் -காலத்தால் இல்லை -வஸ்து -அனைவராகவும் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -மணி மாடக் கோயில் -11-கருட சேவை உத்சவம் -நந்தா -நித்யம் -அணையாத –
விளக்கே -ஞானம் / அளத்தற்கு அரியாய் -அநந்தம் /-நித்ய சூரிகளுக்கும் விலக்ஷணன் இத்தால்
ஸ்வரூபம் சொல்லி மேலே வேதனம் சொல்லும் –
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்-ஸ்ரீ வைகுந்தம் பகல் ஓலக்கம் இருப்பவன் -அவன் இவன் -நெஞ்சினால் இருப்பவன் அவன் –
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி -அவன் முக்தி அடைகிறான் -விரும்பிய அனுபவம் ப்ரஹ்மத்துடன் அடைகிறான் –
ப்ரஹ்மத்தின் கல்யாண குணங்களை அனுபவிக்கிறான் -பாலோடு சேர்த்து அக்கார வடிசில் போலே குணங்களை ப்ரஹ்மத்துடன் அனுபவம் -சார்ந்தே இருக்கும்
தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத –ப்ரஹ்மம் சங்கல்பித்து ஆகாசம் முதலில் –
ஆகாஷாத்வாயு வாயோரக்நி–வாயு -அக்னி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய –தண்ணீர்-மூலிகை
ஓஷதீப்யோந்நம் -அன்னம்
அந்நாத்புருஷ -புருஷன் –
ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி
தலை பிரதானம் –கால்கள் வால் போலே -இப்படி கற்றவர்கள் கூறுகிறார்கள் -பஞ்ச கோசம் மேலே சொல்லும்
சிந்தித்து மேலே மேலே உணர இப்படி படிப்படியாக பஞ்ச கோஷங்கள் -இந்திரன் – விலோசனன் -கதை
உபாசனத்துக்கு அறிந்த ஒன்றை வைத்தே இங்கும் -அன்னமே –முதலில் –தியானிக்க -அறிந்து முடிவு இல்லை அறிந்து –
பிராணன் மயன் -அடுத்து –நினைவு -மநோ மயன்-மயம் -ப்ராசுராயாட்-மயம்
இது தானே சேதன விலக்ஷணம் –ஞானம் -விஞ்ஞானமே ஆத்மா -/ அநு கூல ஞானம் ஆனந்த மய ஆத்மா –இப்படி புரிய வைக்கிறார்
யோகம் -இயற்க்கை நிலையை அறிய வைப்பதே-கர்மாதீனமாக -செயற்கை நிலையை விலக்கி-பார்க்க அறிவதே –
சந்திரன் -மேகம் விலக்கியதும் நாம் பார்ப்பது எளிமை -ஆத்மாவை மறைத்து உள்ளதை ஆத்மாவே அறிய வேண்டுமே -ஞானக்கை வேண்டுமே –

பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் – பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”,
இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம். முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது
இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள் 1. விஷயம் – இது எதை குறித்து பேசுகின்றதோ,
2. சாதனம் – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி, 3. பலன் – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
1. விஷயம் – பிரம்மம் – பெரியது என்று பொருள், வரையறூக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்தி – எதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
2. சாதனம் – வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
3. பலன் -பரம் ஆப்னோதி – பிரம்மத்தை அடைகின்றான்

யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ
அவனுக்கு ஆசைப்படுகின்ற எல்ல பொருட்களையும் அடைந்தவனாகின்றான். இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து
உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாக இருக்கின்றான். பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால்,
எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்

————-

அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா அதோ அந்நேநைவ ஜீவந்தி அதைநதபி யந்த்யந்தத அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே ஜாதாந்யந்நேந வர்தந்தே அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ ஆகாஷ ஆத்மா பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.2.1৷৷

அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே-அன்னத்தால் பிரஜைகள்
யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா
அதோ அந்நேநைவ ஜீவந்தி
அதைநதபி யந்த்யந்தத
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்-மிக உயர்ந்தது
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே –மூலிகை
ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே -அன்னம் உபாஸிக்க அன்னம் பெறுகிறான் -பலனையும் சொல்லும்
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே
ஜாதாந்யந்நேந வர்தந்தே
அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி –அளவுக்கு உட்பட்டு சாப்பிட வேண்டும்-
மேலே உண்டால் அது நம்மை உண்டு விடும் – அன்னம் தாது அர்த்தம்
தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்–அன்ன ரசமயன் -சரீரம் அது புரிந்து கொண்ட அனந்தரம் –
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய -வேறு பட்டது -பிராண மாயன்
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய –புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
தலை இந்த உடலுக்கு -இங்கும் உருவகம் -பிராண வாயு தலை
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ -வ்யான பிராணனும் ஆவண பிராணனும் தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
ஆகாஷ ஆத்மா -நாடு இடம்
பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி-பூ மண்டலம் பிரதிஷ்டை

பிரம்மதினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியது.
மாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார்.
உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்,
ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்.
வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றது.
அக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது.
நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது.
நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது.
உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்.
தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

————

ப்ராணம் தேவா அநு ப்ராணந்தி மநுஷ்யா பஷவஷ்ச யே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே ஸர்வமேவ த ஆயுர்யந்தி
யே ப்ராணம் ப்ரஹ்மோபாஸதே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய
தஸ்மாத்வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் அந்யோந்தர ஆத்மா மநோமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய யஜுரேவ ஷிர றக் தக்ஷிண பக்ஷ ஸாமோத்தர பக்ஷ ஆதேஷ ஆத்மா அதர்வாங்கிரஸ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.3.1৷৷

ப்ராணம் தேவா அநு ப்ராணந்தி -ஜீவநதி அனைவரும்
மநுஷ்யா பஷவஷ்ச யே
ப்ராணோ ஹி பூதாநாமாயு -ஆயுசு ஸூ பிராணன் இருக்கும் வரை
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே
ஸர்வமேவ த ஆயுர்யந்தி-ஆயுள் இத்துடன் முடியும்
யே ப்ராணம் ப்ரஹ்மோபாஸதே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய
தஸ்மாத்வா ஏதஸ்மாத்ப்ராணமயாத்
அந்யோந்தர ஆத்மா மநோமய -அடுத்த கோசத்துக்கு -தாவும்
வேறு பட்டு -கீழ் இரண்டையும் உள்ளடக்கி –
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ
தஸ்ய புருஷவிததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய யஜுரேவ ஷிர -வேத மயம் யஜுர் வேதம் தலை
றக் தக்ஷிண பக்ஷ ஸாமோத்தர பக்ஷ -ருக்வேதமும் சாம வேதமும் தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
ஆதேஷ ஆத்மா –ஆதேஷம் ஆணை மத்யம
அதர்வாங்கிரஸ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி-

இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்.
அத்யரோபம் – காரணம் + நாமரூபம் = காரியம். சூக்‌ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்.
அபவாதம் = காரணம் = காரியம் – நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்‌ஷூம நிலைக்கு மாற்றுதல்.
ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடை.
ஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும்,
நூல் இருக்கின்றது—பஞ்சு இருக்கின்றது. அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி,
இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்.
காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்.
காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றது.
இப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்.
அதுபோல கிரம்மாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.
இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும்,
சூட்சும சரீரம் ப்ராண மய, மனோ மய, விக்ஞான மய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்த மய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது,
ஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது;
இந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.

ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?
பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்.
பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம்
செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இட்த்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான்
நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றது.
இவ்வாறு செய்யும்போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.
அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து
நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம்

அனுவாக விளக்கம்:
ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றது.
இந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல்,
அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பணை செய்யப்படுகின்றது.

ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமனமான இவனுக்கு தலையே தலைப்பாகம்,
வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம்,
இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது.
அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

—————–

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் ந பிபேதி கதாசநேதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய தஸ்மாத்வா ஏதஸ்மாந்மநோமயாத் அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷ விததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய ஷ்ரத்தைவ ஷிர றதம் தக்ஷிண பக்ஷ ஸத்யமுத்தர பக்ஷ யோக ஆத்மா மஹ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.4.1৷৷

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி கதாசநேதி
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய -முன்னாள் சொன்ன ம நோ மாயன்
தஸ்மாத்வா ஏதஸ்மாந்மநோமயாத் அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய -விஞ்ஞான மயன் ஜீவன் என்றபடி ஆத்மாவை இங்கு
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷ விததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய ஷ்ரத்தைவ ஷிர –ஸ்ரத்தை -நம்பிக்கை தான் தலை -வேதம் சாஸ்திரம் –
த்வேஷம் இல்லாமல் -தெரிந்து கொள்ள திறந்த மனஸ் வேண்டுமே
றதம் தக்ஷிண பக்ஷ ஸத்யமுத்தர பக்ஷ -ரிதம் -நேர்மையான -சத்யம் -உண்மை தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
யோக ஆத்மா மஹ புச்சம் ப்ரதிஷ்டா –ப்ரஹ்மம் இடம் ஆத்மாவை சமர்ப்பித்து -விரோதிகளை தொலைத்து யோகத்துக்கு வருவதே ஆதாரம்
ததப்யேஷ ஷ்லோகோ பவதி

————–

விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதேபி ச விஜ்ஞாநம் தேவா ஸர்வே ப்ரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே விஜ்ஞாநம் ப்ரஹ்ம சேத்வேத
தஸ்மாச்சேந்ந ப்ரமாத்யதி ஷரீரே பாப்மநோ ஹித்வா ஸர்வாந்காமாந்ஸமஷ்நுத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய தஸ்மாத்வா
ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத் அந்யோந்தர ஆத்மாநந்தமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய
ப்ரியமேவ ஷிர மோதோ தக்ஷிண பக்ஷ ப்ரமோத உத்தர பக்ஷ ஆநந்த ஆத்மா ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.5.1৷৷

விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே -அதுவே கர்மம் பண்ணும் -ஞாதா -ஞானம் உடையவன் –
ஞானத்தால் முழுக்க இருப்பதால் அதே பெயரால் சொல்லலாம்
ஞான ஸ்வரூபன் -ஞான குணகன் -ஞானமாகவும் ஞானம் யுடையவனாகவும் உண்டே
கர்மாணி தநுதேபி
ச விஜ்ஞாநம் தேவா ஸர்வே
ப்ரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே
விஜ்ஞாநம் ப்ரஹ்ம சேத்வேத
தஸ்மாச்சேந்ந ப்ரமாத்யதி –
ஷரீரே பாப்மநோ ஹித்வா ஸர்வாந்காமாந்ஸமஷ்நுத இதி -சரீர கத தோஷங்கள் தொலைத்து
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய -நான்கு படிகள் ஏறி -மேலே ஆனந்தமயன் ஈஸ்வரன் –
முதல் மூன்றும் சரீரம் -விஞ்ஞானம் ஆத்மாவை -தத்வத்ரயங்கள்
தஸ்மாத்வா
ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத் அந்யோந்தர ஆத்மாநந்தமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ
தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய
ப்ரியமேவ ஷிர -பிரியம் தலை -இஷ்ட வஸ்து தர்சன பிரியம்
தத் தர்சன ஜன்யம் – ஸூகம்
மோதோ தக்ஷிண பக்ஷ ப்ரமோத உத்தர பக்ஷ –மோதம்
தத் லாப ஜன்யம் ஸூகம் –
தத் அனுபவ ஜன்யம் ப்ரமோதம் தக்ஷிண உத்தர பக்ஷம் –
ஆநந்த ஆத்மா -அதுக்கு மேலே ஆனந்தம் -ஸூ கம் அதிசயித்து நிலைத்தால்-
ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–ப்ரஹ்மம் தான் கால் புச்சம் -ஆதாரம் –
ப்ரதிஷ்டாபனம் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தால் தானே மேலே வளர்ந்து நிலைக்கும் –

———-

அஸந்நேவ ஸ பவதி அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோ விதுரிதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய அதாதோநுப்ரஷ்நா உதாவித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்ச ந கச்சதீ ஆஹோ வித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்சித்ஸமஷ்நுதா
உ ஸோகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா இத் ஸர்வமஸரிஜத யதிதம் கிம் ச தத்ஸரிஷ்ட்ரா ததேவாநுப்ராவிஷத்
ததநுப்ரவிஷ்ய ஸச்ச த்யச்சாபவத் நிருக்தம் சாநிருக்தம் ச நிலயநம் சாநிலயநம் ச விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச ஸத்யம் சாநரிதம் ச ஸத்யமபவத்
யதிதம் கிம் ச யதிதம் கிம் ச தத்ஸத்யமித்யாசக்ஷதே ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.6.1৷৷

அஸந்நேவ ஸ பவதி அஸத்ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத வேத ஸந்தமேநம் ததோ விதுரிதி
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய அதாதோநுப்ரஷ்நா
உதாவித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்ச ந கச்சதீ -சரீரம் விட்டு எங்கே போகிறார் -எப்படி -சென்று என்ன -எது முக்தி
ஆஹோ வித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்சித்ஸமஷ்நுதா
உ ஸோகாமயத -தவம் சங்கல்பம் ப்ரஹ்மம்
பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -தானே உபாதானம் –
ஸ தபோதப்யத -மீண்டும் சங்கல்பம்
ஸ தபஸ்தப்தவா இத் ஸர்வமஸரிஜத
யதிதம் கிம் ச தத்ஸரிஷ்ட்ரா ததேவாநுப்ராவிஷத்-படைத்து மட்டும் நிற்காமல் உள்ளேயும் புகுந்து -புகுந்து தானே சத்தை –
பிரவேசம் -அநு பிரவேசம் -ஆத்மா புகுவது பிரதானம் இல்லையே -ஊசிக்குள் மருந்து போலே -நாம் ஊசி போலே ஊசியும் போவோம்
ததநுப்ரவிஷ்ய ஸச்ச த்யச்சாபவத் நிருக்தம் சாநிருக்தம்-நிருக்தம் அசேதனம்
ச நிலயநம் சாநிலயநம் -நிலயனம் சேதனங்கள்
ச விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் -அவிஞ்ஞானம் -அசேதனங்கள்
ச ஸத்யம் சாநரிதம் ச ஸத்யமபவத்-இரண்டாக பரிணாமம்
யதிதம் கிம் ச யதிதம் கிம் ச தத்ஸத்யமித்யாசக்ஷதே ததப்யேஷ ஷ்லோகோ பவதி-
கண்ணால் பார்ப்பது எல்லாம் சத்யம் -லோகம் உண்டாவதை அறிகிறோம்

————

அஸத்வா இதமக்ர ஆஸீத் ததோ வை ஸதஜாயத ததாத்மாந் ஸ்வயமகுருத தஸ்மாத்தத்ஸுகரிதம் முச்யத இதி யத்வைதத்ஸுகரிதம்
ரஸோ வை ஸ ரஸ் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதீ கோ ஹ்யேவாந்யாத்க ப்ராண்யாத் ததேஷ ஆகாஷ ஆநந்தோ ந ஸ்யாத்
ஏஷ ஹ்யேவாநந்தயாதி யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்ந தரிஷ்யே நாத்ம்யே நிருக்தே நிலயநேபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அத ஸோபயம் கதோ பவதி
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி தத்த்வேவ பயம் விதுஷோமந்வாநஸ்ய ததப்யேஷ ஷ்லோகோ பவதி –৷৷2.7.1৷৷

அஸத்வா இதமக்ர ஆஸீத்
ததோ வை ஸதஜாயத -நாம ரூப வாசி இல்லாமல் -அசத் -பிரகிருதி
ததாத்மாந் ஸ்வயமகுருத
தஸ்மாத்தத்ஸுகரிதம் முச்யத இதி -ஸூயமேவ ஸூஸ் வ கார்யம் -விசிஷ்ட ப்ரஹ்மம் -முன்பும் பின்பும் –
தானே தன்னை படைத்து கொண்டு -அவலீலையா அக்லிஷ்ட்டம்
யத்வைதத்ஸுகரிதம்-ஸூ கமான கார்யம்
ரஸோ வை ஸ –சர்வ ரசமும் ப்ரஹ்மம்-அச்சுவை கட்டி என்கோ-பால் என்கோ –அக்காரக் கனி -சக்கரை விதைத்து –
தேனை கொட்டி-செடியாகி – கரும்பு பழுத்து சக்கரை பழம்-
ரஸ் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதீ
கோ ஹ்யேவாந்யாத்க ப்ராண்யாத் -அறிந்தவனுக்கு ரசத்தை தானே கொடுக்கும் -ஆனந்தீ பவதி
ததேஷ ஆகாஷ ஆநந்தோ ந ஸ்யாத்
ஏஷ ஹ்யேவாநந்தயாதி -ப்ரஹ்ம உபாசனம் -விட்டால் பயம் வருமே -கிட்டே இருக்க இருக்க பயம் இருக்காதே –
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்ந தரிஷ்யே நாத்ம்யே நிருக்தே நிலயநேபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே –
அதரிஷ்யே– அநாத்ம்யே -அநிருக்தே -அநிலயநேபயம் – அசித் விலக்ஷணம் பக்த முக்த நித்ய விலக்ஷணன்
அத ஸோபயம் கதோ பவதி
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -இடையூறு வந்தால் பயம் வரும் –
கட்டில் வாசலில் இருந்து பயம் இல்லாமல் -மாடி ஏறி பயம் மிக்கு –
தத்த்வேவ பயம் விதுஷோமந்வாநஸ்ய ததப்யேஷ ஷ்லோகோ பவதி -ப்ரஹ்ம தியானத்தால் பயம் இல்லாமல் ப்ரஹ்ம ஆனந்தம் பெறுவோம்

————

பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூர்ய பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ஸ ஏகோ மாநுஷ ஆநந்த
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா ஸ ஏக பிதரிணாம்
சிரலோக லோகாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷.2.8.1৷৷

பீஷாஸ்மாத்வாத பவதே –காற்று பயந்தே வீசும்
பீஷோதேதி ஸூர்ய -உதய அஸ்தமனம் -பயந்தே
பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி -அக்னி இந்திரன் -மிருத்யு -பயந்தே செயல்பாடு -நாம நாமி பலன் -அறிவோம் –
பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி–ஆனந்த மீமாம்சை இது -ப்ரஹ்ம -விசாரம் தானே இது
தெரிந்த ஆனந்தம் கொண்டு ப்ரஹ்ம ஆனந்தம் காட்டும் மேலே
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக –இளமை -இளமையில் கல் -கற்க கற்க ஆனந்தம் -அறியும் அனுபவ ஆனந்தம் இரண்டும்
ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட –ஆசன சீலத்தவம் -ஜரிக்கும் வல்லமை -/சரீர மனம் பலம் மிக்கு /ஆசீர் வசனம் ஏற்று கொள்ளும் தகுதி –
தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்
ஸ ஏகோ மாநுஷ ஆநந்த–ஒரு மனுஷன் ஆனந்தம் –
இந்த பிருத்வீ மண்டலம் முழுவதும் ஒரு முழம் தங்கம் பரப்பி தானம் கொடுத்து -ஒரு மனுஷ்யன் ஒரு மடங்கு
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா –நூறு மடங்கு
ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த -மனுஷ்ய கந்தர்வர்களுக்கு இது தான் ஒரு மடங்கு -அணிமா இத்யாதி வல்லமை கொண்டவர்கள்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா-முக்த ஜீவன் விடாமல்
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா
ஸ ஏக பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்த –பித்ரு லோகம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த –
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா
ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த-கர்மா தேவர்கள் ஸ்ருதி விஹிதமான கர்மம் செய்தவர்கள்
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா–தேவர்கள் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த -இந்திரன் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா -பிரஜாபதி நான் முகன் வரை சென்று
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக -கிட்டவும் முடியாதே -ப்ரஹ்ம ஆனந்தம் -பரண் மேலே ஏறி நிலவைப் பிடிக்க முடியுமோ –
ஒரு குணம் ஆனந்தம் விசாரிக்க போய் முடியாமல் மீள வேண்டி அன்றோ உள்ளது
ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய-கிளம்பி
ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி-அன்னமயனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி
ததப்யேஷ ஷ்லோகோ பவதி
அடைந்து ஆனந்தத்தில் திளைக்கிறான்

———–

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே ய ஏவம் வேத இத்யுபநிஷத்–৷৷2.9.1৷৷

யதோ வாசோ நிவர்தந்தே
அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ
ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே
ய ஏவம் வேத இத்யுபநிஷத்
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாம் -கருத்தின் கண் பெரியான் கண்ணுள் நின்று ஆகலான்
பயமே இல்லாமல் -கலக்கம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் -விவேகி —

—————————————————

ப்ரஹ்மம் -சத் -ஆத்மா -சப்தங்கள் -ஏகோ ஹை நாராயண ஆஸீத் -ஜகத் காரணன் -தியானித்து உபாசித்து ப்ரஹ்ம ஆனந்தம் அடைவோம் –
பிருகு வல்லி -ஸ்ரீ வருண பகவான் பிள்ளை பிருகு –
கார்ய ப்ரஹ்மம் காரண ப்ரஹ்மம் -அன்னம் -பிராணம் -மனம் -ஜடம் சமஷ்டி / விஞ்ஞானம் -ஜீவா சமஷ்டி /ஆனந்தம் -சரீராத்மா பாவம் கீழே –
இதில் ப்ரஹ்மம் சொல்லி நாம் உருவானதை சொல்லும் –

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

சேர்ந்து அறிவோம் -ப்ரஹ்மம் ரக்ஷிக்கட்டும் -அனுபவிக்கட்டும் -சேர்ந்து கல்வி கற்போம் -வீர்யம் -கல்வி – –
தேஜஸ்வீ ஆவோம் -த்வேஷம் இல்லாமல் இருப்போம் –

———–

ப்ரிகுர்வை வாருணி வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி த் ஹோவாச யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.1.1৷৷
৷৷இதி ப்ரதமோநுவாக ৷৷

ப்ரி குர்வை வாருணி -வருணம் பிதரமுபஸஸார -கை கூப்பிப் போனான் -ப்ரஹ்மம் அறியும் ஆசை உடன் தந்தை இடம் –
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச -சொல்ல ஆரம்பித்தார் –
அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி –இவையே ப்ரஹ்மம் –
த் ஹோவாச -இவை இல்லையே -ஆனந்தம் வரை ப்ரஹ்மம் அறிந்தோமே பிள்ளை சொல்ல -மேலே சொல்லுவார் பிள்ளைக்கு உள்ள ஸ்ரத்தை அறிந்ததும் –
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –
தன்னுள் கரத்தல் தானே சம்ஹாரம் -ஸூஷ்ம ரூபத்தில் -ஏகமேவ -சதேவ -அத்விதீயம் –
விசேஷண லக்ஷணம் -உப லக்ஷணம் -இரண்டு வித அடையாளங்கள் -புண்டரீகாக்ஷன் -ஸ்ரீ யபதி-போல்வன இவை இரண்டும் –
ப்ரஹ்மம் இருக்கிறார் உணர்ந்த பின்பு தெளிவாக ஸ்வரூபம் அறிய இவை -அடையாளங்கள் –
அதிகாரி -கர்மா விசாரம் செய்த பின்பே அதாதோ -அதனாலே -ப்ரஹ்ம விசாரம் –
கர்மங்கள் போக்கி அழுக்கு போக்கி நிர்மல மனசால் அறிந்த பின்பே தெளிவாக அறிந்து கொள்ள -ஆச்சார்யர் மூலம் –
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி
ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–தபஸ் பண்ணி -சங்கல்பம் மூலம் ப்ரஹ்மம் அனைத்தையும் பண்ணுவதை அறிந்து கொள்கிறான் –
৷৷இதி ப்ரதமோநுவாக

———-

அந்நம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் அந்நாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே அந்நேந ஜாதாநி ஜீவந்தி அந்நம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.2.1৷৷

அந்நம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் –அன்னம் ப்ரஹ்மம் இப்படியாக த்யானம் பண்ணுவாய்
அந்நாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே –அன்னத்தில் இருந்து தான் ஜீவ ராசிகள் பிறக்கிறது
அந்நேந ஜாதாநி ஜீவந்தி -அன்னத்தால் தான் காக்கப்படுகிறது -கீழே சொன்ன விதி முறைகள் படியே –
அந்நம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி-அன்னத்தில் லயம் -முன்னிலை அடைவதே லயம் -பிருத்வி நீரில் கரைந்து -பிரளயம் பொழுது அப்பு –
அது அக்னியில் -அது வாயுவில் -அது ஆகாசத்தில் –இறுதியில் ப்ரஹ்மம் இடம் -சர்க்கம் பிரதி சர்க்கம் –
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார –மீண்டும் வந்து கேட்டான்
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–மேலே தபஸ் பண்ணி அறிந்து கொள்வாய் –
அப்புறம் அடுத்த கேள்வி கேட்கலாம் என்று அனுப்பினார் –

————–

ப்ராணோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் ப்ராணாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே ப்ராணேந ஜாதாநி ஜீவந்தி
ப்ராணம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா –৷৷3.3.1৷৷

ப்ராணோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் -அடுத்த பிராணமயமே ப்ரஹ்மம் -கீழே சொன்ன அதே ரீதியிலே
ப்ராணாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
ப்ராணேந ஜாதாநி ஜீவந்தி
ப்ராணம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி -லயமும் அதிலே -கர்மங்கள் பூத ஸூஷ்மங்கள் அழியாமல் -ஆத்மாவுடனே ப்ரஹ்மத்துடன் ஒட்டி இருக்குமே –
பிராகிருத பிரளயத்தில் பூத ஸூஷ்மங்களும் போகும் -கர்மங்கள் போகாதே –
முது எலும்பை மத்தாக வைத்து கடைய கடைய ஸூஷ் மங்கள் -மனசில் -அது பிராணனின் சேர்ந்து ஆத்மாவுடன் –
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா –
மீண்டும் தபஸ் பண்ணி அறிந்து கொள்வாய் –
அப்புறம் அடுத்த கேள்வி கேட்கலாம் என்று அனுப்பினார் –

——————

மநோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் மநஸா ஹ்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே மநஸா ஜாதாநி ஜீவந்தி மந ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா –৷৷3.4.1৷৷

மநோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் -சங்கல்பம் சிந்தனை -ப்ரஹ்மம்
மநஸா ஹ்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
மநஸா ஜாதாநி ஜீவந்தி
மந ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா-

——————

விஜ்ஞாநம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் விஜ்ஞாநாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே விஜ்ஞாநேந ஜாதாநி ஜீவந்தி
விஜ்ஞாநம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.5.1৷৷

விஜ்ஞாநம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் –தர்மி-ஸ்வரூபம் – தர்ம பூத ஞானம் -இரண்டும் உண்டே -ஆத்மாவுக்கு –
தனக்கும் தோற்றும் -ஞான ஸ்வரூபம் -விளக்குக்கு தான் என்று தோற்றாதே -நான் நான் உணர்த்தி -நான் ஆகிற ஞானம்
இது இன்னது அறிவது தர்ம பூத ஞானம் -வெளியில் உள்ளவற்றை காட்டுவது -ஆத்மாவுக்கு ஞானம் -இத்தைக் கொண்டே ப்ரஹ்மம் அறிய வேண்டும் –
தானே பிரகாசித்தல் -தனக்கு பிரகாசித்தல் -இரண்டும் –
ஜீவாத்மா -விஞ்ஞானம் சப்தத்தால் சொல்லும் -சிறப்பு அம்சத்தை கொண்டே -ஞானம் தானே ஞாதா விட ஸ்ரேஷ்டம்
காரேய் கருணை –தத் குண சாரத்வாத் தத் விபதேதாத்-
ஸ்ரீ க்ருஷ்ண த்ருஷ்ணா -நம்மாழ்வார் போலே
விஜ்ஞாநாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
விஜ்ஞாநேந ஜாதாநி ஜீவந்தி
விஜ்ஞாநம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி –சரீரம் என்று அறிந்து கொள்
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி-இன்னும் பிள்ளை ஒத்துக் கொள்ள வில்லை
கீழே அன்னம் பிராணம் மனம் மாறும் -அதனால் –
இங்கு ஆத்மா உசத்தி என்றாலும் குணம் மாறுமே -ஸ்வரூப விகாரம் இல்லை ஸ்வபாவ விகாரங்கள் உண்டே –
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா-

——————–

ஆநந்தோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் ஆநந்தாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே ஆநந்தேந ஜாதாநி ஜீவந்தி
ஆநந்தம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி ஸைஷா பார்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமந் ப்ரதிஷ்டிதா ஸ ய ஏவம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.6.1৷৷

ஆநந்தோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் –ஆனந்தமே ப்ரஹ்மம் –
ஆநந்தாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
ஆநந்தேந ஜாதாநி ஜீவந்தி
ஆநந்தம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
ஸைஷா பார்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமந் ப்ரதிஷ்டிதா –இது தான் வாருணீ வித்யா -ப்ரஹ்மத்தின் இடம் பிரதிஷ்டை
ஸ ய ஏவம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா-
நல்ல நிலை -அடைவான் இத்தை அறிந்தவன் -அன்னம் கிடைக்கும் -உண்டு ஆனந்தம் அடைவான் –
சாமர்த்தியம் உள்ளவன் – பிரஜைகளால் பசுக்களால் ப்ரஹ்ம தேஜஸால் -கீர்த்தி புகழ் அடைகிறான் –

——————-

அந்நம் ந நிந்த்யாத் தத்வ்ரதம் ப்ராணோ வா அந்நம் ஷரீரமந்நாதம் ப்ராணே ஷரீரம் ப்ரதிஷ்டிதம்
ஷரீரே ப்ராண ப்ரதிஷ்டித ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமநநே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.7.1৷৷

மேல் இந்த வித்யைக்கு அங்கங்களை காட்டி அருளுகிறது -நான்கு அங்கங்கள்
அந்நம் ந நிந்த்யாத் –அன்னத்தை-பிராணன் தான் அன்னம்
ஷரீரமந்நாதம் ப்ராணே ஷரீரம் ப்ரதிஷ்டிதம்-உண்பது சரீரம் -பிராணன் சரீரத்தில் பிரதிஷ்டை
ஷரீரே ப்ராண ப்ரதிஷ்டித
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம்
ஸ ய ஏததந்நமநநே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி-இப்படி ஒன்றில் ஓன்று பிரதிஷ்டம் என்று அறிய வேண்டுமே -அவனுக்கு நிலைப்பாடு கிட்டும்
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா
பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–அன்னம் உடையவன் ஆகிறான் -அனுபவிப்பான் -கீர்த்தி அடைவான்

———————-

அந்நம் ந பரிசக்ஷீத தத்வ்ரதம் ஆபோவா அந்நம் ஜ்யோதிரந்நாதம் அப்ஸு ஜ்யோதி ப்ரதிஷ்டிதம் ஜ்யோதிஷ்யாப ப்ரதிஷ்டிதா
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி அந்நவாநந்நாதோ பவதி
மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.8.1৷৷

அந்நம் ந பரிசக்ஷீத தத்வ்ரதம் -விகாரம் நாசம் அடைய வைக்காதே
ஆபோவா அந்நம் ஜ்யோதிரந்நாதம் அப்ஸு ஜ்யோதி ப்ரதிஷ்டிதம் ஜ்யோதிஷ்யாப ப்ரதிஷ்டிதா–பிரதிஷ்டிதம் ஒன்றில் ஓன்று இங்கும்
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி
மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா-

——————-

அன்னம் பஹு குர்வீத தத் விரதம் ப்ருதிவீ வா அன்னம் ஆகாச அந்நாத-ப்ருதிவ்யாம் ஆகாச ப்ரதிஷ்டித-
ஆகாசோ ப்ருத்வீ ப்ரதிஷ்டிதா-ததே தத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் -ச ஏதத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிஷ்டித
அன்னவான் அந்நாதோ பவதி -மஹான் பவதி -ப்ரஜயா பஹுபிர் ப்ரஹ்ம வர்ச நே-மஹான் கீர்த்தயா ৷৷3.9.1৷৷

அன்னம் பஹு குர்வீத -நிறைய விளைக்க வேண்டும் -பசுமை புரட்சி
தத் விரதம் ப்ருதிவீ வா அன்னம் ஆகாச அந்நாத-
ப்ருதிவ்யாம் ஆகாச ப்ரதிஷ்டித–பிருத்வியும் ஆகாசமும் சார்ந்து
ஆகாசோ ப்ருத்வீ ப்ரதிஷ்டிதா-ததே தத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் –
ச ஏதத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிஷ்டித
அன்னவான் அந்நாதோ பவதி -மஹான் பவதி -ப்ரஜயா பஹுபிர் ப்ரஹ்ம வர்ச நே-மஹான் கீர்த்தயா

————-

ந கஞ்சன வசதவ் பிரத்யா சஷீத தத் வ்ரதம் தஸ் மாத்யா -கயா ச விதாய பஹ்வன்னம் ப்ராப்நுயாத் அராத் யஸ்மா
அன்ன மித்யா சக்ஷதே ஏதத் வைமுகதோ அன்ன ராத்தம்
முகதோ ஸ்மா அன்ன ராத்யதே ஏதத் வை மத்யதோ அன்ன ராத்தம் மத்யதோ ஸ்மா அன்ன ராத்யதே
ஏதத்வா அன்ன தோ அன்ன ராத்தம் அந்ததோ ஸ்மா அன்ன ராத்யதே ய ஏவம் வேத ஷேம இதி வாசி
யோக ஷேம இதி பிராணா பாநயோ கர்மேதி ஹஸ்தயோ
கதிரிதி பாதயோ விமுக்திரிதி பாயவ் இதி
மாநுஷீ ஸ்சமாஜ்ஞா அததைவி த்ருப் திரிதி வ்ருஷ்டவ்
பலமிதி வித்யுதி யஸ இதி பஸூஷூ ஜ்யோதிரிதி நஷத்ரேஷூ பிரஜாதி ரம்ருதமா நந்த இத் யுபஸ்தே
ஸர்வமித்யாகாசே தத் ப்ரதிஷ்டேத்யுபா ஸீத ப்ரதிஷ்டாவான் பவதி
தன்மஹ இத்யுபாஸீத மாநவான் பவதி தந் நம இத்யுபாஸீத
நம் யந்தேஸ் மை காமா தத் ப்ரஹ மேத் யுபா ஸீத ப்ரஹ்ம வாந் பவதி
தத் ப்ரஹ்மண பரிமர இத்யுபாஸீத பர்யேணம் ம்ரி யந்தே த்விஷன் தஸ்ச பத்நா
பரியே ப்ரியே ப்ராத் ருவ்யா ச யஸ் சாயம் புருஷே யஸ் சா சா வாதித்யே
ச ஏக ச ய ஏவம் வித் அஸ்மால் லோகாத் ப்ரேத்ய
ஏத மன்னமய மாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
பிராண மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
மநோ மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
விஞ்ஞான மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
ஆனந்த மயமாத்மந முப ஸங்க்ரம்ய
இமாந் லோகாந் காமாந் நிகாம ரூப்ய அநு ஸஞ்சரன்
ஏதத் சாம காயாந் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ
அஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருத்
அஹமஸ்மி பிரதமஜா ருதாஸ்ய பூர்வம் தேவேப்யோ
அம்ருத் ஸஸ்ய நா பா இ யோமா ததாதி ச இதேவ
மா வா அஹம் அன்னம் அன்ன மதந்தமாத்மி
அஹம் விஸ்வம் புவந மப்யபவாம் ஸூவர்ந ஜ்யோதீ
ய ஏவம் வேத
இத் யுபநிஷத் ৷৷3.10.1৷৷

ந கஞ்சன வசதவ் பிரத்யா சஷீத –வீட்டை தேடி வந்த ஒருவனை -வெறும் வயிற்றுடன் அனுப்பாதே -அதீதி ஸத்காரம் –
ரஷ்ய பாரிப்பு -திரி விக்ரமன் -ஸ்ரீ மஹா வராஹம் –
தத் வ்ரதம் தஸ் மாத்யா -கயா ச விதாய பஹ்வன்னம் ப்ராப்நுயாத் -நிறைய அன்னம் சேகரித்து வை –
அராத் யஸ்மா
அன்ன மித்யா சக்ஷதே
ஏதத் வைமுகதோ அன்ன ராத்தம்
முகதோ ஸ்மா அன்ன ராத்யதே -த்ரிவித அன்னங்கள்-முன்னும் நடுவிலும் இறுதியிலும்
ஏதத் வை மத்யதோ அன்ன ராத்தம் மத்யதோ ஸ்மா அன்ன ராத்யதே -நடுவிலும் அன்னம் –தயாராக வைக்க வேண்டுமே –
ஏதத்வா அன்ன தோ அன்ன ராத்தம் -நன்றாக சாதிக்க வேண்டும் -தாராள மனஸ் வேண்டுமே –
அந்ததோ ஸ்மா அன்ன ராத்யதே
ய ஏவம் வேத ஷேம இதி வாசி -அறிந்து செய்தால் கீர்த்தி யஜஸ் அடைவோம் –
யோக ஷேம இதி -வாக்கை காக்கும் கருவி
பிராணா பாநயோ கர்மேதி ஹஸ்தயோ
கதிரிதி பாதயோ விமுக்திரிதி பாயவ்
இதி மாநுஷீ ஸ்சமாஜ்ஞா –மனுஷ விஷயம் மேலே தேவ விஷயம்
அததைவி த்ருப் திரிதி வ்ருஷ்டவ் பலமிதி வித்யுதி
யஸ இதி பஸூஷூ ஜ்யோதிரிதி நஷத்ரேஷூ பிரஜாதி ரம்ருதமா நந்த இத் யுபஸ்தே
ஸர்வமித்யாகாசே தத் ப்ரதிஷ்டேத்யுபா ஸீத
ப்ரதிஷ்டாவான் பவதி
தன்மஹ இத்யுபாஸீத
மாநவான் பவதி –மஹானாக ஆகிறாய்
தந் நம இத்யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா தத் ப்ரஹ மேத் யுபா ஸீத ப்ரஹ்ம வாந் பவதி –
தத் ப்ரஹ்மண பரிமர இத்யுபாஸீத
பர்யேணம் ம்ரி யந்தே த்விஷன் தஸ்ச பத்நா -விரோதிகள் விளக்குவார்
பரியே ப்ரியே ப்ராத் ருவ்யா ச யஸ் சாயம் புருஷே யஸ் சா சா வாதித்யே –ஆதித்ய மண்டலா வார்த்தையே ஹ்ருதய கமலத்தில்
ச ஏக ச ய ஏவம் வித் அஸ்மால் லோகாத் ப்ரேத்ய–லோகத்தில் இருந்து புறப்பட்டு
ஏத மன்னமய மாத்மந முப ஸங்க்ரம்ய –ப்ரஹ்மத்தை -அடைகிறான் -அன்னமய சரீரம் தானே ப்ரஹ்மத்துக்கு
ஏதம் பிராண மயமாத்மந முப ஸங்க்ரம்ய
ஏதம் மநோ மயமாத்மந முப ஸங்க்ரம்ய
ஏதம் விஞ்ஞான மயமாத்மந முப ஸங்க்ரம்ய -ஜீவனை சரீரமாக -அப்ருதக் ஸ்திதி
ஏதம் ஆனந்த மயமாத்மந முப ஸங்க்ரம்ய -இங்கு ப்ரஹ்மமே ஆனந்தமயம் -ஆனந்தமே ஸ்வரூபம் குணம் -ஸ்ரீ வைகுண்டம் அடைந்து –
கீழே ஆன் தர்மங்கள் -சின்ன சின்ன தர்ம காரியங்களே இவ்வளவு பெரிய ப்ரஹ்ம பிராப்தி -அடைவிக்கும் –
ஸஹ தர்ம சரிதவ-இருவரும் -சேர்ந்தே -/ ப்ரஹ்ம ஞானம் முன்பு ஆசை வளர்க்க வேண்டுமே –
பகவத் பாகவத கைங்கர்யம் செய்து அவன் ப்ரீதி வளர்த்து ப்ரஹ்ம பிராப்தி பெறுவோம் -திரு உள்ள ப்ரீதியே நமக்கு சக்தியை வளர்க்கும் –
இமாந் லோகாந் காமாந் நி காம ரூப்ய அநு ஸஞ்சரன்-எங்கும் சென்று -சூழ்ந்து இருந்து பல்லாண்டு பாடலாமே
ஏதத் சாம காயாந் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு–ஆனந்தம் போக்குவீட்டு -அனுபவ ப்ரீதி உந்த –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -ஜீவனே அன்னம் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ –ப்ரஹ்மம் சொல்வது -உன்னை அனுபவிப்பேன் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பது
அஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருத் -ஜகமே ரஷிக்கப் பட்டது
அஹமஸ்மி பிரதமஜா ருதாஸ்ய பூர்வம் தேவேப்யோ
அம்ருத் ஸஸ்ய நா பா இ –நாபி -சக்கரம் அச்சு போலே ப்ரஹ்மம்
யோமா ததாதி ச இதேவ
மா வா அஹம் அன்னம் அன்ன மதந்தமாத்மி–எங்கும் வியாபித்து -அன்னமாயும் ஜீவனாயும் -சரீரமாக கொண்ட ப்ரஹ்மம்
அஹம் விஸ்வம் புவந மப்யபவாம் ஸூவர்ந ஜ்யோதீ
ய ஏவம் வேத –ஜகம் தாண்டி -பரஞ்சோதி -நிறைந்த சோதி வெள்ளம் -இப்படி அறிந்து கொள்வதே -இந்த உபநிஷத் –
இத் யுபநிஷத்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading