ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டுப் பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
ஸ்ருதி சாகரம் -கடைந்து– வேத வியாசர் -கிருஷ்ண த்வைபாயனர் —
மதி மந்தானாம் -அறிவே மத்து -மஹா பாரத சந்த்ரமா -சந்திரன் போலே –
புராணம்-ரத்னம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -வேதம் -புருஷ ஸூ க்தம் – தர்ம சாஸ்திரம் மனு –
மகா பாரதம் -சாரம் கீதை -125000-ஸ்லோகங்களில் இந்த -700-
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் -கண்ணனை பற்றி — ஸ்ரீ கீதை கண்ணனே சொன்னது –
வேதங்களில் புருஷ ஸூ க்தம் — தர்ம ஸாஸ்த்ரங்களில் மனு ஸ்ம்ருதி -புராணங்களில் விஷ்ணு புராணம் –
மஹா பாரதத்தில் -பகவத் கீதை– நான்கையும் ஸ்ரேஷ்டம்
கீதா ஸூகீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை
சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம் –
ஸ்ரீ கிருஷ்ணன்-ஸ்ரீ கீதை -60 திரு நக்ஷத்ரம் / 38—வருஷம் கழித்து மாண்டு போக காந்தாரி சாபம் –
100-வருஷம் இருந்து தன்னுடை சோதி -எழுந்து அருளினான் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதிகளை அவதாரிகையில் விவரித்து அருளி
ச பகவான் புருஷோத்தம -அந்த–கீழே சொன்ன பெருமைகள் எல்லாம் -ச -ஒரே எழுத்தால்
பகவான் – கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான –
புருஷோத்தமன் -வைலக்ஷண்யம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அபுருஷன் அசித் -புருஷன் உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் -ஐந்து விரல்களும் காட்டுமே
சர்வேஸ்வரேஸ்வர- ராமானுஜர் இப்படி தான் அவனை எங்கும் அருளிச் செய்வார்-
பாண்டு தனய-வ்யாஜேந -பரம புருஷார்த்த மோக்ஷ சாதனதயா பக்தி யோகம் –ஞான கர்மயோகம் அங்கமாகக் கொண்டது
ஞான கர்ம அநுக்ரஹீதமான பக்தி யோகம் –வித்யாஞ்ச அவித்யாஞ்ச -இரண்டாலும் பரிஷ்காரம் பண்ணிய உள்ளத்துடன் –
அவித்யா என்று ஞானம் விட வேறு பட்ட கர்மயோகம் –
ஸூ விஷயம் -தன்னிடம் பக்தி -மறந்தும் புறம் தொழா மாந்தர் -அநந்யார்ஹத்வம்-ஆனை துரத்தினாலும் ஆனைக்கால் நுழையாதவர்
ப்ரபந்ந பாரிஜாதம் போல் கீதாச்சார்யன் ஞான முத்திரை உடன்
கீதாம்ருதம் கறந்து கொடுத்த இடையனுக்கு நமஸ்காரங்கள்
—————————————
த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷
த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி
யுயுத்ஸவ: = யுத்தம் செய்ய வந்திருக்கும்
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள்
த்ருதராஷ்ட்ரன் வாக்யத்துடன் தொடங்கி சஞ்சயன் வாக்யத்துடன் முடியும் -ஸ்ரீ கீதை –
என் பிள்ளைகள் –பாண்டு பிள்ளைகள் –கிம் அர்குவத -என்ன பண்ண -யார் வெல்ல போகிறார் -மனசில் வைத்து கேட்கிறான்-
அதார்மிகர்-தம் பிள்ளைகள் -க்ஷேத்ர சம்பந்தம் -நல்ல புத்தி வந்ததோ -ஆசை இருக்கலாமோ -க்ஷேத்ர மகிமையால்
தர்ம புத்திரர்கள் காண்டீபம் போட்டு விட்டு சண்டை போட்டு பெரும் ராஜ்யம் வேண்டாம் என்று போய் விட்டார்களோ –
கிம் அகுர்வத -எனக்கு வேண்டியதாக என்ன பண்ணுகிறார்கள் -என்றபடி –
(பரஸ்மை பதம் பஸதி
பஸதே -ஆத்மநே பதம் -தனக்கு நன்மை
அகுர்வத )
மாமர -மமகாராம் தோற்ற பேசி -பாண்டவர் ஒதுக்கி வைத்து பேசி
———–
ஸஞ்ஜய உவாச–
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ் ததா.—
ஆசார்யமுப ஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்—-৷৷1.2৷৷
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ததா³ = அப்போது
துர்யோதந = துர்யோதனன்;
வ்யூடம் = வியூகித்து நின்ற
பாண்ட³வாநீகம் = பாண்டவர் படையை;
த்³ருஷ்ட்வா = பார்த்து விட்டு
ஆசார்யம் உபஸங்க³ம்ய = ஆச்சாரியனான துரோணரிடம் சென்று
வசனம் = வசனம்
அப்ரவீத் = சொல்லத் தொடங்கினான்;
அரசனான துரியோதனன் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் சேனையைப் பார்த்து பின்பு
துரோணாச்சார்யரை அணுகிப் பின் வரும் சொற்களைக் கூறினான்
ஆச்சார்யர் என்று இங்கு துரோணாராச்சார்யரையே குறிக்கும்
து-அணி வகுப்பை பார்த்ததுமே அஞ்சி பிதற்றத் தொடங்கினான் என்பதால்
வார்த்தை பேசினான் -வசனம் என்று காட்டி –
வார்த்தைகள் பல -பொருள்கள் இல்லாமல் –
———–
பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்.—
வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா—৷৷1.3৷৷
பஸ்ய = பார்
ஏதம் = இந்த
பாண்டு = பாண்டவர்களின்
புத்ராணாம் = புத்திரர்களின்
ஆச்சார்ய = ஆச்சாரியரே
மஹதம் = பெரிய, வலிமை மிக்க
சமூம் = படை
வியூடாம் = வியூகம், அணி வகுத்து நிற்கும்
த்³ருபத³புத்ரேண = துருபதனின் புத்திரனான (த்ரிஷ்டத்துய்மனன்)
தவ = உங்களுடைய
ஸி²ஷ்யேண = சீடனான
தீ⁴மதா = நன்றாக, புத்திசாலித்தனமாக
உம்முடைய சீடனும் அறிவாளியும் துருபதனின் மகனுமான திருஷ்டத்யும்னனால்
அணி வகுக்கப் பெற்றதாய் மிகப் பெரியதான இந்த பாண்டு புத்திரர்களின் சேனையைப் பாரும்
திருஷ்டத்யும்னன் -பாண்டவர் சேனாபதி -உம் சிஷ்யன் -குத்தி பேசி -பாண்டு புத்ரர்களுக்கு நீர் ஆச்சார்யர்
குத்தலாக பேசுவதும் பயந்து பேசுவதும் தெரியும் இந்த ஸ்லோகங்களில் –
கிரியா பதம் முதலில் -பஸ்ய-வந்தாலே பயம் -வீடு மின் முற்றவும் போலே –
பாண்டவர் பஷ பாதி நீர்
இது முதல் 11 ஸ்லோகம் வரை துரியோதனன் வார்த்தைகளை சஞ்சயன் சொல்வதாக
ஏழு அஷவ்கணி அவர்களது இவனது 11 -இருந்தாலும் மஹத் என்கிறான்
பஸ்ய -வினைச் சொல் முதலில் -பயம் பதற்றம் தெரியுமே
த்³ருபத³புத்ரேண = துருபதனின் புத்திரனான (த்ரிஷ்டத்துய்மனன்)
தவ = உங்களுடைய
ஸி²ஷ்யேண = சீடனான
தீ⁴மதா = நன்றாக, புத்திசாலித்தனமாக
மூன்று விசேஷணங்கள்
துருபதனுக்கும் த்ரோணருக்கும் பகைமை உண்டே –
பாஞ்சாலி தேச புத்ரி பாஞ்சாலி
துருபதன் பெண் திரௌபதி
த்ரோணரைக் கொல்லவே யாகம் செய்து பெற்ற பிள்ளையும் பெண்ணும் இவர்கள்
———–
அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுந ஸமா யுதி—
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத—-৷৷1.4৷৷
அத்ர = இங்கே , நமது படையில்
ஸூ²ரா = சூரர்கள்
மஹேஷ்வாஸா = பெரிய வில்லாளிகள்
பீ⁴மார்ஜுநஸமா = பீமா + அர்ஜுன சமா = பீமனுக்கும்யு அர்ஜுனனுக்கும்தி சமமான
யுயுதா = நன்றாக நின்று போர் செய்யும் சாமர்த்தியம் உள்ள -யுயுதானன்-சாத்யகியும்
விராடஸ்²ச = விராடன்
த்ருபத³ஸ்²ச = பாஞ்சாலி தேச அரசனான -துருபதன்-திரௌபதிக்கு தந்தை –
மஹாரத = போன்ற மஹாரதர்கள்
இந்தப் பாண்டவ சேனையிலே பெரிய வில்லாளிகளும் போரில் பீமார்ஜுனர்களுக்கு இணையானவர்களும்
ஸூரர்களுமான யுயுதானனும் –சாத்யகியும் -விராட அரசனும் பெரும் தேராளியான துருபதனும் உள்ளனர்
இது முதல் மூன்று ஸ்லோகங்களால் —
அவர்கள் படையில் -19-வீரர்களையும்
தமது படையில் -7-பேரையும் சொல்லி பயத்தை காட்டுகிறான்
மஹா ரதர் -11000 வீரர்கள் உடன் போர் வல்லவன் -போர் சாஸ்திரங்களில் வல்லவர்
அதி ரதன் -பலருடன் போர் வல்லவன்
அர்த்த ரதர் -ஒருவருடன் போர் வல்லவன்
————–
த்ருஷ்டகேதுஷ் சேகிதாந காஸிராஜஷ்ச வீர்யவாந்—
புருஜித் குந்திபோஜஸ் ச ஷைப்யஸ்ச நரபுங்கவ—-৷৷1.5৷৷
த்⁴ருஷ்டகேது = திருஷ்டகேது
ஸ்²சேகிதாந: = சேகிநாதன்
காஸி²ராஜஸ்²ச = காசி ராஜன்
வீர்யவாந் = வீரியமான
புருஜித் = புருஜித்
குந்திபோ⁴ஜஸ்²ச = குந்தி போஜன்
ஸை²ப்³யஸ்²ச = சைப்பியன்-சிபி வம்சத்து அரசனும்-
நரபுங்க³வ: = மனித ஏறு போன்ற
த்ருஷ்ட கேதுவும் சேகி நாதனும் வீர்யமுடைய காசி ராஜனும் புருஜித்தும்
குந்தி போஜனும் மனிதருள் சிறந்த சிபி வம்சத்து அரசனும் உள்ளனர்
————-
யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்.—
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷
யுதா⁴மந்யுஸ்²ச = யுதாமன்யு
விக்ராந்த: = வலிமை யுள்ள
உத்த மௌஜாஸ்²ச =உத்த மௌஜா
வீர்யவாந் = வீரியமுள்ள
ஸௌப⁴த்³ரோ = சுபத்ரையின் மகன்-அபிமன்யவும்
கௌந்தேயன் குந்தி பிள்ளை அர்ஜுனன் போல்
த்³ரௌபதே³யா ஸ்²ச = திரௌபதி மக்கள்-ஐந்து பிள்ளைகளை பெற்றாள் -உப பாண்டவர்கள்
ஸர்வ ஏவ = எல்லோரும்
மஹாரதா²: = மஹாரதர்கள்
யுதா மன்யுவும் வீர்யமுடைய யுத்த மவ்ஜனும் சுபத்ரையின் மகனான அபிமன்யவும்
திரௌபதியின் பிள்ளைகளான இளம் பாண்டவர்களும் எல்லாரும் பெரிய தேராளிகளாக உள்ளனர்
4 ஸ்லோகத்தில் உள்ள பீமன் அர்ஜுனன் -இருவரையும் சேர்த்து 19 பேர்களை சொன்னவாறு
—————
அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம.-
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந் ப்ரவீமி தே—৷৷1.7৷৷
அஸ்மாகம் = நமது
து = ஆனால்
விஸி²ஷ்டா =விசேஷமான
யே = யார்
தாந் = அவர்கள்
நிபோத = சொல்லப்பட்டது
த்³விஜோத்தம = துவிஜ + உத்தம = இருமுறை உயர்ந்தவர்
நாயகா = நாயகனே , படை தளபதியே
மம = நமது-எனது மமகாராம் தோன்ற
ஸைந்யஸ்ய = படைகள்
ஸஞ்ஜ்ஞார்த²ம் = நிலை-நன்கு அறிவதற்காக
தாந் = அவர்கள்
ப் ³ரவீமி = சொல்கிறேன்
தே = உனக்கு
அந்தணர் தலைவரே நம்மிடையோ என்னில் என்னுடைய சேனையின் தலைவர்களாக
எவர்கள் உள்ளனரோ அவர்களை உமக்கு நன்கு அறிவதற்காகக் கூறுகிறேன் -கேட்பீராக
த்விஜோத்தம-இரு பிறவி அந்தணர் -ப்ராஹ்மணராக இருந்தும் யுத்த பூமியில்
அஸ்மாகம் து விஸிஷ்டா-இதே போலே அவர்களுக்குள் உயர்ந்தவர் என்ற விசேஷணம் அங்கு இல்லை –
இவர்கள் நமக்குள் மட்டுமே உயர்ந்தவர்
எதிர் அணிக்குள் உள்ளார் உடன் ஒப்பிட்டுச் சொல்லாமல் நமக்குள் வீரர்கள்
மம-சைன்யம் உன்னைப் போலே உன் பிள்ளையும் மிருத்யு க்ஷமமான மமகாரத்துடன் -கந்தல் கழிய வேண்டுமே –
மேல் இரண்டு ஸ்லோகன்களால் இவர்கள் பட்டியல்
இவர் அறிவார் -இருந்தாலும் சொல்லுகிறேன் கேளும் -என்றதே -அவர்களது உண்மையான நிலை மர்மம் சொல்கிறேன்
சம்யக் ஞான அர்த்தம் -நன்கு அறிய -நான் கூறுகிறேன்
சம்ய-பெயரால் குறிப்பிட்டு -பெயர் அளவிலே தான் வீரர்கள் -உண்மையில் அல்லர்-
———-
பவாந் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய–
அஷ்வத்தாத்மா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ் ததைவ ச—-৷৷1.8৷৷
ப⁴வாந் = நீ-துரோணாச்சார்யரான தேவரீரும்
பீ ⁴ஷ்ம = பீஷ்மர்
ச = மேலும்
கர்ணஸ்²ச = கர்ணன்
க்ருபஸ்²ச = கிருபன்-குல குரு –
ஸமிதிஞ்ஜய: = போரில் வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் உடைய
அஸ்²வத்தா²மா = அஸ்வத்தாமன்
விகர்ணஸ் = விகர்ணன் மேலும்
ச =மேலும்
ஸௌமத³த்திஸ்ததை = சோம தத்தன் மகன்-பூரி ஸ்ரவஸ் இயல் பெயர்
எவ = அது அன்றி
ச = மேலும்
துரோணராகிய நீரும் பீஷ்மரும் கருணனும் போரில் வெற்றியடைய கிருபரும்
அஸ்வத்தாமாவும் விகர்ணனும் சோமதத்ததின் மகனும்
முதலில் நீர் -துரோணாச்சார்யரை சொல்லி –
பவான் -முதலில் சொல்லி -ஒவ் ஒருவருக்கும் குறை -உண்டே –
அஸ்வத்தாமா இடம் வரம் வாங்கி அர்ஜுனனுக்கு மேல் வரக் கூடாது
தம்பி விகர்ணன் -இந்தளத்தில் தாமரை போலே
இங்கு மஹா ரதி விசேஷணம் யாருக்கும் இல்லையே –
இதில் ஏழு பேரைச் சொல்லி
ஒவ்வொருவருக்கும் குறை உண்டு இங்கு
அர்ஜுனன் இடம் பாசம் மிக்க துரோணர்
பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என்றவர்
பரசுராமர் சாபம் கர்ணன்
கிருபாச்சார்யர் பாண்டவர் பக்ஷ பாதி
விகர்ணன் -திரௌபதி -பரிபவம் போது எதிர்த்துப் பேசின தம்பி -இத்தால் உனக்கு மரணம் உண்டாகும் என்றான்
பூரி ஸ்ரவஸ் -சாந்தனு பீஷ்மர் தந்தைக்கு பாலிகன் அண்ணன் பிள்ளை சோமதத்தன் –
இவனுக்கும் வசுதேவருக்கும் போர் மூண்ட
தேவகியை மணம்
நண்பர் சிமி வென்று வசுதேவர் மணம் புரிந்தார் –
சாத்யகி சிமி பேரன்
இவனுக்கு சிவன் சாபம் உண்டாம்
——–
அந்யே ச பஹவம் ஷூரா மதர்தே த்யக்த ஜீவிதா–
நாநா ஸஸ்த்ர ப்ரஹரணா ஸர்வே யுத்தவிஷாரதா—৷৷1.9৷৷
அந்யே = இது அன்றி
ச = மேலும்
ப³ஹவ: = பல
ஸூ²ரா: = சூரர்கள்
மத³ர்தே² = எனக்காக
த்யக்த ஜீவிதா: = தங்கள் வாழ்வை தியாகம் செய்தவர்கள் -த்யக்த பதம் வாயில் வந்ததே
நாநா ஸ²ஸ்த்ர ப்ரஹரணா: = நாநா விதமான யுத்த சாத்திரங்களை அறிந்தவர்கள்
ஸர்வே = அனைவரும்
யுத்³த⁴ = போர்
விஸா²ரதா³: = திறமையானவர்கள்
சந்தி -உள்ளார்கள் வினைச்சொல் தருவித்துக் கொள்ள வேண்டும்
மற்றும் சூரர்கள் பலரும் உள்ளனர் -அவர்கள் எனக்காக உயிரையே விட்டு இருப்பவர்கள் –
பல அஸ்த்ரங்களையும் ஆயுதங்களையும் உடையவர்கள் -எல்லாரும் போரில் வல்லவர்கள்
யுத்த நீதி அறிந்தவர்கள் -எனக்காக உயிர் விட்டவர்கள் -வரப் போவதையும் சொல்கிறான் –
விதி வாய் வார்த்தை யாகிறது –
ஒரு காண்டீபத்துக்கு நாநா வித சஸ்திரங்கள் வேண்டுமே
நான்காம் வேற்றுமை உருபு -மோதிரத்துக்காக தங்கம் போல் அல்லவே
கொசுவுக்கான புகை -கொசுவைப் போக்க
அதே போல் இங்கு மதார்த்தம் -என்னை அழிக்கவே -உயிரை விட்டவர்கள்
——–
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்–
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்—৷৷1.10৷৷
அபர்யாப்தம் = பெரிய, அளவில்லாத-அவர்களை வெற்றி கொள்ளப் போதாதது
தத = அது, அந்த
அஸ்மாகம் = நமது
ப³லம் = பலம்
பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மரால் ரட்சிக்கப்பட்ட , காவல் செய்யப்பட்ட
பர்யாப்தம் = குறைந்த-நம்மை வெற்றி கொள்ளப் போதுமானது
து = ஆனால்
இதம் = இந்த
எதேஷம் = அவர்களின்
பலம் = பலம்
பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = பீமனால் ரக்ஷிக்கப்பட்ட
ஆகையால் பீஷ்மரால் காக்கப்படும் நமது பீடை அவர்களை வெல்லப் போகாது –
இந்தப் பாண்டவர்களின் படையோ எனில் நம்மை வெல்லப் போதுமானது –
நம்முடைய சேனை அளவில் அடங்காத –பீஷ்மரால் -அங்கு சின்னது பீமனால் –அச்சம் தோன்ற பேசுகிறான் –
த்ருஷ்டத்யுமனால் காக்கக்ப்படும் என்று சொல்லாமல் -இங்கும் இவனது அச்சம் தெரியுமே
மேலே அச்சம் போக்க சங்க நாதம் பீஷ்மர் வருவதால் -பீஷ்மர் -பீமன் ப்ரதிஞ்ஜை அறிவான்-
அபரியாப்தம் -போதாது –அவர்கள் சைன்யம் போதும் என்றவாறு
இப்படி ஆறு ஸ்லோகங்களால் மறைத்தும் இங்கு வெளிப்படையாகவும்
தனது அச்சத்தை சொல்லிக் கொள்கிறான்
தனக்கு என்ன அச்சம் என்று அடுத்த ஸ்லோகம்
———
அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா–
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த ஸர்வ ஏவ ஹி—৷৷1.11৷৷
அயநேஷு = அனைத்து முக்கியமான இடங்களிலும்
ச = மேலும்
ஸர்வேஷு = அனைத்து
யதா²பா⁴கம் = உங்களுடைய இடங்களில் இருந்து
அவஸ்தி²தா: = நிலையில்
பீ⁴ஷ்மம் = பீஷ்மரை
யேவ =மட்டும்
அபி⁴ரக்ஷந்து =சூழ்ந்து இருந்து காத்து நில்லுங்கள்
ப⁴வந்த: = நீங்கள்
ஸர்வ =அனைத்து
ஏவ ஹி = அதையும் செய்யுங்கள்
நீங்கள் அனைவருமே வ்யூஹத்தினில் நுழையும் எல்லா வழிகளிலும் உங்கள் பகுதிகளைக்
கை விடாமல் நிற்பவர்களாய் பீஷ்மரையே சூழ்ந்து நின்று காப்பாற்றுங்கள்-என்று துரியோதனன் கூறினான்
பீஷ்மரை ரஷித்தால் நாம் வாழலாம் -என்கிறான் –
திருவடி இருந்தால் நாம் வாழலாம் ஜடாயு கேட்டது போலே –
———-
தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ–
ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷
தஸ்ய = அவன்
ஸஞ்ஜநயந் = நிகழும்
ஹர்ஷம் = மகிழ்ச்சி
குருவ்ருத்³த⁴: = வயதான குரு வம்சத்தவன்
பிதாமஹ:| = தாத்தா
ஸிம்ஹநாத³ம் = சிம்ஹ நாதம் = சிம்ம நாதம்
விநத்ய = சப்தம் உண்டாக்கி
உச்சை: = மிக சப்தமாக
ஸ²ங்க²ம் = சங்கு
த³த்⁴மௌ = முழங்கினான்
ப்ரதாபவாந் = பெருமை மிக்கவன்
பெரு வீரம் உள்ளவரும் குரு வம்சவத்தர்களில் சிறந்தவரும் பாட்டனாருமான பீஷ்மர் அந்த துரியோதனனுக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும் பொருட்டு பலமாக ஸிம்ஹ நாதம் செய்து சங்கை ஊதினார்
—————
தத ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா–
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோபவத்—৷৷1.13৷৷
தத: =அதன் பின்
ஸ²ங்கா²ஸ்² = சங்குகள்
ச = மேலும்
பே⁴ர்யஸ்² = பேரிகைகள்-
ச= மேலும்
பணவாநக = முரசுகள்
அவொ ³முகா²:| = துந்துபிகள்
ஸஹஸ = திடீரென்று
எவ = அதுவும்
அப்⁴யஹந்யந்த = பிளிறின
ஸ = மேலும்
ஸ²ப்³த = சப்தம்
துமுலோ = திமிலோகப் பட்டது
ப⁴வத் = அங்கு, அப்போது
பிறகு சங்கங்கள் பேரிகைகள் பணவங்கள் ஆநகங்கள் சம்பட்டம் -தாளம் போட cymbaal
கோ முகங்கள் முதலிய பல வாத்தியங்களும்
உடனேயே முழங்கப்பட்டன -அந்த ஒலியானது ஆகாசம் வரை மிகப் பெரியதாக ஆயிற்று
———-
தத ஸ்வேதைர்ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ—
மாதவம் பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது—-৷৷1.14৷৷
தத: = பின்
ஸ்²வேதை ஹயைர் யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய
மஹதி ஸ்யந்த³நே = பெரிய தேரில்-அக்னி பகவானால் கொடுக்கப்பட்ட தேர் –
ஸ்தி²தௌ| = நின்ற
மாத⁴வ: = மாதவனும்
பாண்ட³வ = பாண்டவனான அர்ஜுனனும்
தி³வ்யௌ ஸ²ங்கௌ²=அப்ராக்ருதமான திவ்யமான சங்குகளை
ப்ரத³த்⁴மது: = ஊதினார்கள்
பின்பு திருமகள் மணவாளான ஸ்ரீ கண்ணனும் பாண்டுவின் புதல்வனான அர்ஜுனனும்
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் இருப்பவர்களாய் திவ்யமான தங்கள் சங்குகளை ஊதினார்கள்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்க்காய் -அன்று பாரதப் போர் முடியப் -பரி நெடும் தேர் விடும் கோன் –இராமா -51-
த்வி வசனம் -சம பிரதானம் -பிரணவம் போலே -உபதேசம் ஜீவாத்மாவுக்கு -அகாரம் முன்னாக –
ராஸக்ரீடை போலவும் இங்கு தேர்-ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் போல –
மஹதி -பெரும் தேர் -நடந்து வந்தாலே தோற்போம் இவர்கள் பெரும் தேரில் –
தேரோட்டியாக இருந்தாலும் முதலில் இவனைச் சொல்லி
பெரிய பிராட்டியார் கேள்வன் -கடாக்ஷம் பலன் இவர்களுக்கே –
மா கிடையாத– தவ -தலைவன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் என்றுமாம் -ஸர்வேஸ்வரன் -ஸர்வ நியந்தா
————–
பாஞ்ச ஜந்யம் ஹரிஷீகேஷோ தேவதத்தம் தனஞ்சய —
பௌண்ட்ரம் தத்மௌ மஹா ஸங்கம் பீமகர்மா வ்ருகோதர—৷৷1.15৷৷
பாஞ்சஜந்யம் = பாஞ்சஜன்யம்
ஹ்ருஷீகேஸோ² = ரிஷிகேசன் என்ற கண்ணன்
தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:| = அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை
பௌண்ட்³ரம் = பவுண்டரம்-ஹ்ருதயம் வெட்டும் படி ஒலிக்கும் சங்கம்
த³த்⁴மௌ = என்ற
மஹாஸ²ங்க²ம் = பெரிய சங்கை
பீ⁴மகர்மா = பெரிய கோரமான செயல்களை செய்யக் கூடிய பீமன்
வ்ருகோத³ர: = ஓநாய் போன்ற பெரிய வயிறு உடைய
வ்ருகம் அக்னியை உதரத்தில் கொண்டவன் -எவ்வளவு உண்டாலும் வயிறு நிறையாது என்றுமாம் –
ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் பாஞ்ச ஜன்யம் என்னும் பெரும் சங்கை ஊதினான்
தனஞ்சய-அர்ஜுனன் தேவதத்தன் என்னும் சங்கை ஊதினான்
பயங்கரமான செயல்களை யுடைய வ்ருகோதர-பீமன் பௌண்ட்ரம் என்னும் பெரும் சங்கை ஊதினான்
கண்ணன் பலராமன் உத்தவர் குசலவர் சாந்தீபன் இடம் -பிள்ளையை மீட்க –
பஞ்ச ஜனன் -கடலுக்குள் இருக்க -அவன் வயிற்றில் இருந்த சங்கம் –
தேர் அக்னி பகவான் கொடுக்க
வில் இந்திரன் கொடுக்க
சங்கம் வருண பகவான் கொடுக்க -தேவ தத்தன் –
————–
அநந்த விஜயம் ராஜா குந்தீ புத்ரோ யுதிஷ்டிர—
நகுல ஸஹ தேவஸ்ச ஸுகோஷ மணி புஷ்பகௌ—৷৷1.16৷৷
அநந்த விஜயம் = அநந்த விஜயம் என்ற சங்கை
ராஜா = இராஜா
குந்தீ புத்ரோ = குந்தியின் மகனான
யுதி⁴ஷ்டி²ர = யுதிஷ்டிரன்
நகுல: ஸஹ தே³வஸ்²ச =நகுல சகாதேவர்கள்
ஸுகோ⁴ஷமணி புஷ்பகௌ = சுகோஷம் மற்றும் மணி புஷ்பம் என்ற சங்குகளை ஊதினார்கள்
குந்தியின் பிள்ளையும் அரசனுமான தர்ம புத்ரன் அனந்த விஜயம் எனும் சங்கையும்
நகுலனும் சகதேவனும் முறையே ஸூ கோஷம் மணி புஷ்பகம் எனும் சங்கை ஊதினார்கள்
யுதிஷ்டிரன்-யுத்தத்தில் நிலையாக இருப்பவன் பயம் இல்லாதவன்
—————
காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ ஷிகண்டீ ச மஹாரத–
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ் சாபராஜித—৷৷1.17৷৷
காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: = பெரிய வில்லாளியான காசி இராஜன்
ஸி²க²ண்டீ³ ச மஹாரத²: | = மஹாரதனான சிகண்டியும்
த்⁴ருஷ்டத்³யும்நோ = திருஷ்டத்துய்மனனும்
விராடஸ்²ச = விராடனும்
ஸாத்யகிஸ்²சாபராஜித: = வெல்ல முடியாத சாத்யகியும் (அபராஜித = வெல்ல முடியாத)
சிறந்த வில்லாளியான காசி ராஜனும் மஹா ரதனான சிகண்டியும்
த்ருஷ்டத்யும்னனும் விராடனனும் போரில் தோல்வி அடையாத சாத்யகியும்
துருபதனின் பெண் -ஆணாக மாறி
அம்பா -காசிராஜன் பெண் -தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை காதலனும் ஏற்றுக்கொள்ள வில்லை
பீஷ்மரும் மறுத்தார்
இதுக்கு பழி வாங்க -சிகண்டி அர்ஜுனன் தேரில் ஏறி –பீஷ்மரை முடிக்க –
பீஷ்மர் அறிவார் பெண் உடன் யுத்தம் செய்ய மாட்டாமல்
அம்பு படுக்கையில் பத்தாம் நாள் இருந்தார் –
———–
த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வதஸ் ப்ருதிவீபதே.—
ஸௌபத்ரஸ்ச மஹா பாஹு ஸங்காந்தத்மு ப்ருதக் ப்ருதக்—৷৷1.18৷৷
த்ருபதோ = துருபதன்
த்ரௌபதே யாஸ்ச = திரௌபதியின் பிள்ளைகளும்-ஐவரும் –
ஸர்வஸ = அனைவரும்
ப்ருதிவீபதே = உலகத்தின் தலைவனே (திருதராஷ்டிரனே , சஞ்சயன் சொல்வது)
ஸௌபத்ரஸ்ச = சுபத்திரையின் பிள்ளையும்-அபிமன்யுவும்
மஹா பா³ஹு = அகண்ட தோள்களை உடையவனும்
ஸங்காந்தத்மு: = சங்க நாதம் செய்தனர்
ப்ருதக் ப்ருதக் = தனித் தனியாக
துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் நீண்ட கையை யுடைய அபிமன்யுவும்
எல்லாப் பக்கங்களிலும் தனித்தனியாக தம் தம் சங்குகளை ஊதினார்கள்
இங்கு தனித்தனியாக
அங்கு அனைவரும் சேர்ந்து
இத்தால் ஒவ்வொருவருக்கும் பெருமை இங்கு -மஹா ரதர்கள்
———
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்.–
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷
ஸ = அந்த
கோஷோ = கோஷம், போர் ஆராவாரம்
த்ர்தராஷ்ட்ராணாம் = திருதராஷ்டிர கூட்டத்தினரின்
ஹ்ருத³யாநி = இதயங்களை
வ்யதா³ரயத் = பிளந்தது
நபஸ்ச = விண்ணையும்
ப்ருதிவீம்ச = மண்ணையும்
சைவ = அது நிச்சயமாக
துமுலோ = பேரொலி
அவ்யநுநாத³யந் = இடி போன்ற
ஆகாசம் பூமி முழுவதும் எதிரொலிக்கச் செய்ததான ஓன்று சேர்ந்த அந்த சங்கு நாதம்
திருதராஷ்டரனின் புதல்வர்களுடைய ஹ்ருதயங்களைப் பிளந்தது
நம்முடைய சேனை இந்த சப்தத்தால் தோல்வி அடைந்ததை உணர்ந்து
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –
இதே ஒலி பாண்டவர்களுக்கு கேட்டு மகிழ்ச்சி கொடுத்தது ஸூசகம்
—————
அத வ்யவஸ்திதாந் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ–
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ர ஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ—৷৷1.20৷৷
அத = அதன் பின்
வ்யவஸ்திதாந் = அணி வகுத்து நின்ற
த்ருஷ்ட்வா = பார்த்து
த்ர்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர (சேனைகளை )
கபித்⁴வஜ = குரங்கு கொடியுடைய
ப்ரவ்ருத்தே = ஆரம்பிக்கப் போகின்ற
ஸஸ்த்ர = போர் கருவிகளை
ஸம்பாதே = உபயோகப் படுத்தப் போகின்ற
தநு = காண்டீபம் வில்லை
உத்³யம்ய = எடுத்துக் கொண்டு
பாண்டவ : = பாண்டவனாகிய அர்ஜுனன்
——–
அர்ஜுந உவாச–
ஹரிஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே—
ஸேநயோருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத—৷৷1.21৷৷
அர்ஜுன உவாச = அர்ஜுனன் சொல்கிறான்
ஹ்ருஷீகேஸ²ம் = ஸ்ரீ கிருஷ்ணா
ததா³ = அப்போது
வாக்யம் = வாக்கியம்
இதம் = இந்த
அஹ = சொன்னான்
மஹீபதே = அரசன்
ஸேந = சேனைகளின்
உபயோஹ் = இரண்டின்
மத்திய = மத்தியில், நடுவில்
ரதம் = இரதத்தை
ஸ்தாபய = நிறுத்து
மே = என்
அச்யுத = அச்சுதனே, குற்றம் இல்லாதவனே-நழுவாதவனே
திருதராஷ்டரனே -பிறகு ஹனுமக் கொடியோனான அர்ஜுனன் போர் தொடங்கிய அளவில்
முன் அணியில் நிற்கும் திருதராஷ்ட்ர புத்திரர்களை நோக்கி வில்லை எடுத்துக் கொண்டு
அப்போது ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணனை நோக்கி பின் வரும் வார்த்தையைச் சொன்னான்
அச்சுதனே இரண்டு சேனைகளும் நடுவில் என்னுடைய தேரை நிறுத்துவாயாக
ராஜாவே -அடியார் -தோள் கண்டார் தோளே காணும் படி -பும்ஸாம் சித்த திருஷ்ட்டி அபகாரம் –
இரண்டாவது பதில் இதில் –
கண்ணன் இவன் சொல்வதை செய்கிறான் -யார் ஜெயிப்பார் சொல்லவும் வேண்டுமோ
இந்திரியங்கள் வசப்படுத்தும் ஹ்ருஷீகேசன் கீழே
இங்கு அஹிர்புதியை சம்ஹிதை -உலகு படைத்து க்ரீடயா லீலையாக -இன்புறும் விளையாட்டால் மகிழ்கிறான்
வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன்
ஈசன் -ஆணை செலுத்துபவன் -நியமிக்கிறவன்
விளையாட்டாக படைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளான் -தேவத்வம் –
அதே அஹிர்புத்யை சம்ஹிதை மேலும் சொல்லும்
விகாரம் இல்லாமல் -அவிகாராய இத்யாதி -வீர்யம் இதுவே
சங்கல்ப லேசத்தாலே செய்பவன் -அன்றோ –
ஞானாதி ஆறு குணங்கள் கொண்ட பகவான் –
ஆகவே ஹ்ருஷீகேன் –
ஈசன் -ஸ்வா தந்தர்ய யோகத்துடன் நித்தியமாக -நிரங்குச ஸ்வா தந்தர்யம் கொண்டவன்
ஐஸ்வர்யம் வீர்யம் இரண்டும் உள்ளவன் என்றவாறு
——–
யாவதேதாந் நிரீக்ஷேஹம் யோத்து காமாநவஸ்திதாந்.—
கைர் மயா ஸஹ யோத்தவ்ய மஸ்மிந் ரண ஸமுத்யமே—-৷৷1.22৷৷
யாவதே = அனைவரும்
ஏதன் = இந்த
நிரீக்ஷே= பார்க்க
அஹம் = நான்
யோத்துகாமாந் = யுத்தம் செய்ய
அவஸ்தி²தாந்|= அணி வகுத்து நிற்கும்
கைய்யா = அவர்களுடன்
மயா = என்னுடன்
ஸஹ = கூடவே
யோத்தவ்யம் = உறுதியாக யுத்தம் செய்ய
அஸ்மிந் = இந்த
ரணஸமுத்யமே = இரண களத்தில்
இந்தப் போர் முயற்சியில் என்னால் எவர் ஒருவருடன் போர் புரிய நேருமோ யுத்தம் செய்யும் ஆசையுடன்
அணி வகுத்து நிற்கும் இந்த எதிரிப்படை வீரர்களை நான் எது வரையில் காண்கிறேனோ —
அது வரை தேரை நிறுத்துவாயாக
அனுஷங்கம் -கீழ் உள்ள சொல்லை கொண்டு கூட்டிக் கொண்டு
அத்யாஹாரம் -சொல்லை தருவித்து
எங்கு இருந்து அனைவரையும் பார்க்கும் இடத்தில் தேரை நிறுத்த ஆணை இடுகிறான் –
விண்ணப்பம் செய்ய வில்லை
ரிஷிகேசனை -ஈசன் ஸ்வதந்த்ரன் -ஐஸ்வர்யம் வீர்யம் மிக்கு உள்ளவனை சம்சாரி சேதனன்
அச்யுதன் -ஆஸ்ரித வாத்சல்யன் பாரதந்த்ரன் -ஏவிப்பணி கொள்ளும் படி தன்னை ஆக்கிக் கொள்பவன் –
யாவது -முழுவதுமாக என்றும் -எதுவரை காண்பேனோ என்றுமாம் –
————–
யோத்ஸ்யமாநா நவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா–
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரிய சிகீர்ஷவ —৷৷1.23৷৷
யோத்ஸ்யமாநாந் = போர் செய்ய வந்து இருப்பவர்கள்
அவேக்ஷே அஹம் = நான் காண விரும்புகிறேன்
ய = யார் எல்லாம்
ஏதே = அவர்கள்-எந்த துரோணர் பீஷ்மர் முதலானோர்
அத்ர = இங்கே
ஸமாக³தா = கூடி இருக்கிறார்களோ
திர்தராஷ்ட்ரஸ்ய = திருதராஷ்டிரனின்
துர்புத்தேர் = துர் புத்தி, கெட்ட எண்ணத்தோடு
யுத்தே = போர் செய்ய
ப்ரிய சிகீர்ஷவ = ஆர்வம் கொண்டு, அல்லது அவனை மகிழ்ச்சி படுத்த
கர்த்தும் இச்சா -சிகீர்ஷா -சிகர்ஷூ செய்ய ஆசைப்படுபவன் -சிகீர்ஷவ-பன்மைகள்
முமுஷு மோக்ஷத்தில் இச்சை கொண்டவர் போல்
தீய அறிவை யுடைய துரியோதனனுக்குப் போரிலே இனியதைச் செய்ய விரும்பியவர்களாய் எவர்கள்
இப்போர் களத்தில் வந்து கூடி இருக்கிறார்களோ
போர் புரிய போகின்ற அவர்களை நான் காண்பேன் -என்று அர்ஜுனன் கூறினான்
துர் புத்தி உள்ளவர்கள் -தர்ம க்ஷேத்ரம் இங்கு அன்றோ நிற்கிறார்கள்
தான் யார் உடன் போர் இட கீழ்
இதில் தன்னுடன் போர் செய்ய
இது ஒரு வித சமாதானம் –
இத்தை விட
என்னுடன் சேர்ந்து யார் போர் -பாண்டவரையும் சொல்ல லாமே
கீழே ஸஹ -தனது கோஷ்ட்டியில் காண விரும்புவதையும்
இதில் அந்த அணியில் உள்ளாரை காண விரும்புவதையும்
———–
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹரிஷீகேஷோ குடாகேஷேந பாரத.—
ஸேநயோருபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் —৷৷1.24৷৷
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான் (திருதராஷ்டிரனிடம்)
ஏவம் = அவ்வாறு
உக்தோ = கூறிய பின் (அர்ஜுனன் கண்ணனிடம் தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்து என்று கூறிய பின்)
ஹ்ருஷீகேஸோ = இந்திரியங்களுக்கு ஈசனான ஸ்ரீ கிருஷ்ணன்
அ-குடாகேஸேந = குடாகேசன் என்று சொல்லப்பட்ட -தூக்கத்தை ஜெயித்த -அர்ஜுனன்
பாரத = பாரத வம்சத்தில் தோன்றியவனே (திருதராஷ்டிரனே )
ஸேநயோ = படைகளின்
உருபயோ = இரண்டின்
மத்யே = மத்தியில்
ஸ்தாபயித்வா = நிறுத்தி
ரதோத்தமம் = உயர்ந்த தேரை (இரத + உத்தமம்)
குடா கேசன் -சுருட்டையான தலைமுடி
குடாகா ஈசன் -தூக்கத்தை வென்றவர்
அர்ஜுனன் ஆணை இட இவன் செய்கிறானே
நிரங்குச ஸ்வா தந்த்ரன் -தானே ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித-பக்த – பாரதந்தர்யம் -வாத்சல்ய அதிசய-குணம்
அநந்யா தீனன் -பராதீனனாக ப்ரணயதங்களுக்கு -கட்டளை இடலாம் படி -விற்கவும் செய்வார்களே
ஹனுமான் வசனத்தால் சுக்ரீவன் இடம் தோழமை
இவன் சொல்ல வாலிவதம் செய்து காட்டினான்
விஜிதாத்மா -மனசைக்கட்டுப்படுத்து
விதேயாத்மா -விதேயனாக -பட்டர் -பக்தர்களால் வெல்லப்பட்ட மனம்
அவிதே யாத்மா -சங்கரர் -யாருக்கும் கட்டுப்படாதவன்
புருவம் நெரித்த இடத்தில் தேரை நடத்தினான் –
——-
பீஷ்மத்ரோண ப்ரமுகத ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்.—
உவாச பார்த பஸ்யைதாந் ஸமவேதாந் குரூநிதி—৷৷1.25৷৷
பீஷ்ம = பீஷ்மர்
த்ரோண = துரோணர்
ப்ரமுகத: = முன், அருகில்
ஸர்வேஷாம் = அனைவரும்
ச = மேலும்
மஹீக்ஷிதாம் = ஏனைய அரசர்கள்
உவாச = கூறினான்
பார்த = பார்த்தா (அர்ஜுனா)-குந்தி புத்திரனே
பஸ்யை = பார்
எதன் = இவர்களை
ஸமவேதாந் = போர் செய்யக் கூடி இருக்கும்
குரூ = குரு வம்சத்தில் உதித்தவனே
இதி = இதை
சஞ்சயன் கூறினான்
பாரத குலத்தில் உதித்த திருதராஷ்ட்ரனனே –ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் தூக்கத்தை வென்ற
அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்டவனாய்
இரண்டு சேனைகளுக்கும் நடுவில் பீஷ்ம த்ரோணர்களுக்கும் எல்லா அரசர்களுக்கும் முன்னிலையில் சிறந்த தேரை நிறுத்தி
குடாகேசன்-அர்ஜுனா இங்குக் குழுமி உள்ள குரு வம்சத்து உதித்தவர்களைப் பார் என்று கூறினான் –
ஆஸ்ரித வாத்சல்ய விவஸ்திதம் -தேரோட்டியாக அமைத்து -கூடாரை வெல்லும் சீர் –
கூடுவாருக்கு தோற்பான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன்
பீஷ்மர் த்ரோணாராதி முன்னால் வேன்டும் என்னும் என்று நிறுத்துகிறான் —
இவர்கள் இருக்க -அநாதரித்து பொருள் படுத்தாமல் தேரை நிறுத்தினான்
முன்னிலையிலும் தேரை நிறுத்தினான் என்றுமாம்
கலங்கின இவனை மேலே கலக்கினால் தானே கீதா சாஸ்திரம் வெளியிட முடியும்
கைகேயி மனம் கலங்கியதாலேயே ராமாயணம் பெறப்பெற்றோம்
பலஹீனர்களாக பயந்து அவர் கல்
நமது விஜய ஸ்ரீ பார் என்கிறான்
சஞ்சயன் சொல்வதாகவும் கொள்ளலாம்
நேராக உனது பிள்ளைகள் தோற்பார்கள் என்று சொல்லாமல் மறைத்து
ஸர்வேஸ்வரனே சொன்னத்தைச் செய்ய உனது தோல்வி திண்ணம்
———
தத்ரா பஸ்யத் ஸ்திதாந் பார்த்த பித்ரூநத பிதாமஹாந்.–
ஆசார்யாந் மாதுலாந் ப்ராத்ரூந் புத்ராந் பௌத்ராந் ஸகீஂ ஸ்ததா—৷৷1.26৷৷
தத்ர = அங்கே
அபஸ்யத்ஸ்த் = பார்த்தான்
ஸ்திதாந் = இருந்த
பார்த = அர்ஜுனன்
பித்ரூநத = சித்தப்பா, பெரியப்பா போன்றோரையும்
பிதாமஹாந் = பீஷ்மர் முதலான தாத்தாக்களையும்
ஆசார்யாந் = துரோணர் முதலான ஆசிரியர்களையும்
மாதுலாந் = மாமன்மார்கள் போன்ற தாய்வழி சொந்தங்களையும்
ப்⁴ராத்ரூந் = சகோதரர்களையும்
புத்ராந் = பிள்ளைகளையும்
பௌத்ராந் = பேரப் பிள்ளைகளையும்
ஸகீந் = நண்பர்களையும்
ததா = மேலும்
பிறகு அங்கு அர்ஜுனன் இரண்டு சேனையிலும் இருக்கும் பெரிய சிறிய தந்தையர் பீஷ்மர் முதலிய
பாட்டன்மார் துரோணர் முதலிய ஆச்சார்யர்கள் மாமன்மார் அண்ணன் தம்பிகள் பிள்ளைகள் பேரன்கள்
நண்பர்கள் மாமனார் நன்மை செய்தவர்கள் ஆகியோரைப் பார்த்தான்
இரண்டு பக்கத்தில் உள்ளவர்களையும் நன்றாக பார்த்தான்
நம்முடைய நலன் விரும்புவார் இரண்டு வகைகள் உண்டே –
ஸஹ -சமமான வயசில் இருந்து நலன் விரும்புவார்
ஸூஹ்ருத் -வயசில் மூத்தோர் -நலன் விரும்புவார்
——–
ஸ்வ ஸூராந் ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி.–
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய–ஸர்வாந் பந்தூந வஸ்திதாந்–৷
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நித மப்ரவீத்.৷1.27৷৷
ஸ்²வஸு²ராந் = மாமன்களும்
ஸுஹ்ருத = நலன் விரும்புபவர்களும்
ச = மேலும்
எவ = அதாவது
ஸேநயோ = சேனையில்
அபி = மேலும்
தாந் = அவர்களை
ஸமீக்ஷ்ய = பார்த்து
ஸ = அவர்கள்
கௌந்தேய: = குந்தியின் பிள்ளையான அர்ஜுனன்
ஸர்வாந் = அனைவரும்
பந்தூ⁴ = உறவினர்கள்
அவஸ்தி ²தாந் = உணர்ச்சி மேலிட்டு
க்ருபையா = அன்பு மேலிட
பராய = மிகுந்த
அவிஷ்டோ = (உணர்ச்சிகளால்) நிறைந்து
விஷிதன் = ஆழந்த சோகத்துடன்
இதம் = இதை
அப்ராவித் = கூறினான்
குந்தியின் மகனான அந்த அர்ஜுனன் போர் முனையில் நிற்கும் உறவினர்கள் அனைவரையும் நன்கு பார்த்து
மிகக் கருணையினால் நிறைந்தவனாய்த் துன்புற்று பின்வரும் வார்த்தைகளை ஸ்ரீ கண்ணன் இடம் கூறினான்
அந்த அர்ஜுனன்-வேறு யாருக்கும் இப்படிப்பட்ட கவலை இல்லையே
பர துக்க துக்கித்தவம் -அஸஹிஷ்ணுத்வம் இவன் ஒருவனுக்கே
வாலிவதம் ஆனபின்பு சுக்ரீவன் அழ பெருமாளும் துக்கம் பட்டார்
ஏகம் துக்கம் ஸூகம் -தோழமை -இதுவே பரமமான கிருபை
விஷீத-இதனாலே இந்த அத்யாயம் அர்ஜுனன் விஷாத யோகம்
——–
அர்ஜுந உவாச-
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்—৷৷1.28৷৷
அர்ஜுன உவாச = அர்ஜுனன் கூறுகிறான்
த்ருஷ்ட்வ = (இவர்களை ) காணும் போது
ஏமம் = இவர்களை
ஸ்வஜநம் = நெருங்கியவர்களை
க்ருஷ்ண = கிருஷ்ணா
யுயுத்ஸும் = போர் செய்ய ஆவலாக இருக்கும்
ஸமுபஸ்தி²தம் = இங்கு முன்னே நிற்கும்
க்ருஷ்ண-க்ருஷிர் பூ வாஸ ஸப்தம்
பூமி -ந -ஆனந்தம் கொடுப்பவன்
க்ருஷீ -பக்தி உழவன் என்றுமாம் ‘
மண்ணின் பாரம் நீக்கவே வடமதுரை பிறந்தான்
தனது வருத்தம் போக்கவே இந்த ஸப்த பிரயோகம்
கீழே ஹ்ருஷீகேசன் -தன்னுடைய ஆணையை நிறைவேற்றினாலும் -என்பதைக் காட்டவே –
————
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸூஷ்யதி.–
வேபதுஸ்ச ஸரீரே மே ரோம ஹர்ஷஸ்ச ஜாயதே—৷৷1.29৷৷
ஸீதந்தி = நடுங்குகிறது-மெலிகின்றன
மம = என்
அத்ராணி = கை கால்கள்
முகம் = வாய்
ச = மேலும்
பரிஸு²ஷ்யதி = உலர்கிறது
வேபது = துடிக்கிறது-நடுக்கமும் உண்டாகிறது
ச = மேலும்
ஸரீரே = உடல்
மே = என்
ரோம ஹர்ஷஸ்²ச = மயிர் சிலிர்க்கிறது
ஜா = உடன்
ஜயதே = நிகழ்கிறது
அர்ஜுனன் கூறினான்
கண்ணா போர் புரிய விரும்பியவராய் முன்னே நிற்கும் இந்த உறவினரைப் பார்த்து
என்னுடைய கை கால் முதலிய அவயவங்கள் மெலிகின்றன-முகம் வாடுகிறது -என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது –
மயிர்க் கூச்சம் உண்டாகிறது -கருணையால் பீடிக்கப் பட்டு கண்ண நீர் –
பூமிக்கு ஆனந்தம் செல்வம் கொடுப்பவன் கிருஷ்ண -சப்த பிரயோகம் இங்கு-
—–
காண்டீவம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே—
ந ச ஷக்நோம்ய வஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந—৷৷1.30৷৷
காண்டீவம் = காண்டீவம் (என்ற என் வில்)
ஸ்ரம்ஸதே = நழுவுகிறது
ஹஸ்தாத் = கையில் இருந்து
த்வக் = உடல் (தோல்)
ச = மேலும்
எவ = நிச்சயமாக
பரித³ஹ்யதே = எரிச்சல் அடைகிறது
ந = இல்லை
ச = மேலும்
ஸக்நோமி = முடிதல்
அவஸ்தாதும் = நிற்க
ப்ரமதீவ = அலைதல்-சுழல்தல்- –
ச = மேலும்
மே = என்
மந : = மனம்
என் கையில் இருந்து காண்டீபம் எனும் என் வில் நழுவுகிறது -என் தோல் முழுவதும் எரிகிறது –
நிலையாக நிற்பதற்கும் வல்லமை அற்றவனாக இருக்கிறேன் -என் மனமும் கலங்கி சுழல்வது போல் உள்ளது –
ஷத்ரிய வீரன் -இந்திரியங்களை வசத்தில் வைத்து இருப்பவனுக்கு
இந்த அவஸ்தை பரம கருணையால் உண்டானதே
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -ஆழ்வாராதிகளுக்கு அவனது பண்பைக் கேட்டேயும்
நொந்து ஆராத காதல் நோய் —
ஆசையால் வேவுவார்கள் -விரஹ தாபம் –
காற்றும் கழியும் கட்டி அழுவாரே
பத்திமைக்கு நூல் வரம்பு இல்லை
இங்கு அன்பையும் கருணையும் தவறான இடத்தில் அர்ஜுனன் –
—–
நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ.—
ந ச ஸ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே —৷৷1.31৷৷
நிமித்தாநி = நிமித்தங்கள், சகுனங்கள்
ச = மேலும்
பஸ்யாமி = நான் காண்பவை
விபரீதாநி = விபரீதமாக இருக்கிறது
கேஸவ = கேசவா
ந = இல்லை
ச = மேலும்
ஸ்ரேயோ = உயர்ந்த, சிறந்த இன்பங்களை
அ நுபஸ்யாமி = நான் காண்கிறேன் அல்லேன்
ஹத்வா = கொன்ற பின்
ஸ்வ ஜநம் = சொந்த ஜனங்களை, உறவினர்களை
அஹவே = போரில்
கேசவனே தீமையைக் குறிக்கும் கெட்ட சகுனங்களையும் நான் பார்க்கிறேன் –
போரில் உறவினரைக் கொன்று நற்பயனை நான் காண்கின்றிலேன்
துர் நிமித்தங்கள்- கேசவ சப்தம் இங்கு -ப்ரஹ்மாதிகளுக்கும் நியாந்தா —
இது போல் தசரதர் துர் நிமித்தம் கண்டார்
பின்பு பரசுராமர் வந்தார்
சகுனங்கள் காட்டிக் கொடுக்கும் பின் வரும் நன்மைகளையும் தீமைகளையும்
கேசவ -அழகிய கேச பாசம் -கேசி ஹந்தா -ப்ரஹ்மாதிகளுக்கு ஈசன் –
உடலில் இருந்து தோற்றியவர் -அங்கே சம்பூவ –
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் –
————–
ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷
ந = இல்லை
காங்க்ஷே= ஆசை
விஜயம் = வெற்றியில்
க்ருஷ்ண = கிருஷ்ணா
ந =இல்லை
ச = மேலும்
ராஜ்யம் = இராஜ்யத்தின் மேலும்
ஸுகா²நி = அது தரும் சுகத்திலும்
ச = மேலும்
கிம் = எதற்கு
நோ = நமக்கு
ராஜ்யேந = இராஜ்யம்
கோவிந்த = கோவிந்தா
கிம் = எதற்கு
போகை³ = ஆடம்பரங்கள்-ஆபரணம் போன்ற போகங்களினால்
ஜீவிதேந = வாழ்க்கை
வா = அதுவும்
கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –
போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்
கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ
விஜயம் என்ற பெயர் போகுமே -அரசும் கிடைக்காது -அதனால் வரும் போகங்களிலும் ஆசை இல்லை –
இத்தை செய்வதை விட உயிர் இழந்தாலும் பரவாயில்லை
முதல் வரியில் உத்தம புருஷன் -தான் ஆசைப்பட வில்லை
பின்பு அஸ்மாகம் -எங்கள் அனைவருக்கும் வேண்டாம் என்று வலியுறுத்தி சொல்கிறான்
நஹி மே ஜீவித்தேனே அர்த்த –ந வஸ்திர பூஷண -பெருமாளை விட்டுப்பிரிந்து ராக்ஷஸிகள் மதியத்தில் இருப்புக்கு சீதாபிராட்டி
அவன் ஆதரிக்காது தானும் தன்னுடைமையும் வேண்டாமே –
மாறா ளன் கவராத மாமை—மட நெஞ்சு -அறிவு -குறைவில்லாமே -உயிர் என்ன பலன் -நம்மாழ்வார்
இவை வகுத்த விஷயங்களில் –
கைங்கர்யம் கொண்டு அருளினால் தானே இவை உத்தேச்யம்
கைகேயி புத்ரன் -பரதன் இல்லாமல் ஸ்நானம் இல்லை பெருமாள் –
பக்தாநாம் -என்றே அவனது ரூபம் -ஆயுதாநி -ஆஸ்பதம் கோயில்களும் – வடிவம் ஆபரணம் ஆயுதம் -அனைத்தும் –
கோ பூமி -மாடு -அனைத்தையும் ரக்ஷிக்கவே பூமியைப் பெற
நாங்கள் -கொலை செயல் செய்து -கொன்றா பூமியை அடைய வேண்டுமா
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் -கோவர்த்தனம் எடுத்து ஏழு நாள் தங்கி -உறவினர்களை ரக்ஷித்தாய் அன்றோ –
கோ -மனஸ் ஸூ -உள்ளூவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன் –
நீ என்னுடைய எண்ணம் அறிவாய் என்று காட்டுகிறான் –
உலகோர் உலகியல் பொருள்கள் மேல் கொண்ட அன்பு உன் மீது இருக்கும் படி அருள வேண்டும் –
என்றானே பிரகலாதன் பிரார்த்தனை –
அர்ஜுனன் கண்ணன் மீது மிகுந்த அன்பு இருந்தாலும்
தகாதவர்கள் இடமும் அன்பு வைத்தான் –
———-
யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநி ச–
த இமேவஸ்திதா யுத்தே ப்ராணாம் ஸ்த்யக்த்வா தநாநி ச—৷৷1.33৷৷
யேஷாம் = யாருக்காக-எந்த ஆச்சார்யர்கள் முதலானோர் பொருட்டு
அர்தே = அவர்களுக்காக
காங்க்ஷிதம் = விரும்பினோமோ
நோ = நம்
ராஜ்யம் = இராஜ்யம்
போகா : = ஆடம்பரங்கள்
ஸுகாநி = சுகங்கள்
ச = மேலும்
த = அவர்கள்
இமே = இவர்கள்
அவஸ்திதா = அணி வகுத்து
யுத்தே = யுத்தம் செய்ய
ப்ராணாம்ஸ் = உயிரை
த்யக்த்வா = தியாகம் செய்யவும்
தநாநி = செல்வங்களை செல்வங்களை
ச = மேலும்
எவர்கள் பொருட்டு எங்களுக்கு அரசும் போகங்களும் சுகங்களும் விரும்பப் படுகின்றனவோ
அவர்கள் இப்போரில் உயிர்களையும் செல்வங்களையும் விடுவதற்குத் தயாராக நிற்கிறார்கள்
கைங்கர்யம் பண்ண வேண்டியவர்கள் அங்கே இருக்க –
சரீரம் வஸூ விஞ்ஞானம் வாஸம் கர்மா குணங்கள் அஸூன் பிராணன் குரு அர்த்தம் -ஸாஸ்த்ரம் –
த்ரோணராதிகள் இடம் அர்ஜுனனுக்கு குரு பக்தி உண்டே
அவரே எதிர் அணியில் உள்ளாரே
விசித்ரா தேஹ ஸம்பத்தி –ஈஸ்வராய நிவேதிதும் -தொண்டு செய்யவே உடல்
போகம் சந்தனம் மாலை ராஜ்ஜியம் போல்வன- சுகம் கொடுப்பவை –
தர்மம் அர்த்தம் காமம் ராஜ்ஜியம் ஏற்றுக்கொண்டது இச்சாமி பாவத்தால் உங்களுக்காகவே -பெருமாள் அயோத்யா வாசிகள் இடம் –
திரிகூட மலை மேல் இருந்த ராவணன் -கண்டு சுக்ரீவன் -பத்து க்ரீடங்களைப் பறித்து -பெருமாள் திருவடிகளில் இட்டு வெட்கப்பட்டு இருக்க
கிம் கார்யம் சீதயா மம -என்றார் அன்றோ –
த்வயி கிஞ்சித் -உனக்கு ஒரு அவமானம் வந்தால் –
பரதன் போல் தம்பி -என்னைப்போல் மகன் -உன்னைப்போல் ஸூ ஹ்ருத் தோழன் கிடைக்காதே
உயிரை வைத்து எனக்கு என்ன பயன் -உனக்கு ஒரு சின்ன அவமானம் நேர்ந்து இருந்தால் -என்றாரே –
———
ஆசார்யாஸ் பிதரஸ் புத்ராஸ் ததைவ ச பிதாமஹா–
மாதுலாஸ் ஸ்வ ஸூராஸ் பௌத்ராஸ் ஸ்யாலா ஸம்பந்தி நஸ்ததா—৷৷1.34৷৷
ஆசார்யா : = குரு மார்கள்
பிதர : = பெரிய தந்தை, சிறிய தந்தை
புத்ரா = பிள்ளைகள்
ததா = இவ்வாறு
எவ = நிச்சயமாக
ச = மேலும்
பிதாமஹா = தாத்தாக்கள்
மாதுலா : = தாய்வழி மாமன்கள்
ஸ்²வஸு²ரா : = மாமனார்கள்
பௌத்ரா : = பேர பிள்ளைகள்
ஸ்²யாலா : = மச்சினன்கள்
ஸம்பந்திநஸ் = மற்ற உறவினர்கள்
ததா² = இவ்வாறு, இங்கே
ஆச்சார்யர்கள் தந்தையர் பிள்ளைகள் பாட்டன்மார்கள் மாமன்மார்கள் மாமனார்கள் பேரர்கள்
மைத்துனர்கள் சம்பந்திகள் அனைவரும் இங்கு எதிரில் நிற்கின்றனர்
ஒன்பது பேரை விவரித்து அருளுகிறார் இதில்
———-
ஏதாந் ந ஹந்துமிச்சாமி க்நதோபி மதுஸூதந.–
அபி த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோஸ் கிம் நு மஹீக்ருதே–৷৷1.35৷৷
ஏதாந் = அவர்கள்
ந = இல்லை
ஹந்தும் = கொல்ல
இச்சா²மி = இச்சை இல்லை, ஆசை இல்லை
க்நதோ = கொல்வதற்கு தயாராக உள்ள
அபி = இப்போது
மதுஸூதந| = மதுசூதனா
அபி = அது அன்றியில்
த்ரைலோக்ய = மூன்று உலகும்
ராஜ்யஸ்ய = உள்ள அரசும்
ஹேதோ : = கிடைத்தாலும்
கிம் = ஏன்
நு = இருந்தும்
மஹீக்ருதே = இந்த உலகை ஆள
மது ஸூதனனே எம்மைக் கொல்லுகிறவர்களாயினும் மூ உலக அரசுக்காகவும் இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை
பூ வுலகுக்காக இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ
கொல்வதற்கு ஆசை இல்லை -இவர்கள் கொல்ல வந்தாலும் –
மது ஸூதன சப்தம் இங்கு -மூன்று உலகும் கொடுத்தாலும் வேண்டாம் –
மூன்று உலக அரசும் வேண்டாம் உன்னைப் பிரிந்து என்று லஷ்மணன் பெருமாள் இடம் –
யது ஸூதனன் பேர் வாங்காமல் மது -எதிரியைக் கொன்று பேர் பெற்று உள்ளாய் நீ
நான் இவர்களைக் கொண்டு விஜயன் என்ற பெயர் வாங்க வேண்டுமா
——-
அஸ்தான ஸ்நேஹ காருண்யம் வைத்தான் -இரண்டையும் கீழே பார்த்தோம் -இனி
அதே போல் தர்ம அதர்ம தீ ஆகுலம் -பீடிக்கப்பட்டானே
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந கா ப்ரீதி ஸ்யாஜ்ஜநார்தந–
பாபமே வாஸ்ரயே தஸ்மாந் ஹத்வை தாநாததாயிந—৷৷1.36৷৷
நிஹத்ய = கொன்ற பின்
தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கும்பலை
ந : = நமக்கு
கா = என்ன
ப்ரீதி : = இன்பம்
ஸ்யாஜ் = கிடைக்கும்?
ஜநார்த³ந| = ஜனார்தனா
பாபம் = பாவம்
எவ = நிச்சயம்
அஸ்²ரயேத் = நம்மைச் சாரும்
அஸ்மாந் = நம்மை
ஹத்வ = கொன்ற பின்
எதன் = இந்த
வைதாநாததாயிந : = பாவிகளை, அக்கிரமக்காரர்களை
ஜனார்த்தனனே திருதராஷ்டர புத்திரர்களைக் கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி உண்டாகப் போகின்றது
இந்தப் படு பாவிகளைக் கொன்றால் நம்மைப் பாவம் தான் வந்தடையும்
ஜனார்த்தன -நல்லதே செய்பவன் அன்றோ –
ஜனார்தன் – ஆஸ்ரித விரோத மக்களைக் கொல்பவர் –
ரஷா ப்ரதிபஷான் -நிரபேஷா -துணை இல்லாமல் -கொல்லும் சக்தன்
செய் குந்தா உன் அடியார்க்கு வரும் தீமை தெவ்ர்த்து அசுரர்களுக்கு தீமை செய்குந்தா
கஞ்சன் வயிற்றிலே நெருப்பு என்று நின்ற நெடுமாலே -அவன் நினைவை -ஆஸ்ரித பய அக்னியையே அங்கு வைத்தான்
என்னை மட்டும் அனைவரையும் -பந்துக்களை கொல்லச் செய்வது எதனால்
ஆததாயி -நெருப்பு தஹ விஷம் தஹ ஸாஸ்த்ர பாணி தஹ தனம் க்ஷேத்ரம் தாரம் ஹரிப்பவர் –
ஆறு குற்றங்களில் ஒன்றாவது செய்பவன்
லாஷா க்ருஹம் -நெருப்பால் -சிறு பிராயத்தாலே விஷம் கொடுத்தான்
இப்பொழுது ஸஸ்த்ர பாணி
இவர்கள் இந்த்ரப்ரஸ்தம் கொண்டவன்
திரௌபதி பரிபவம்
ஆறு வகைக் குற்றங்களையும் செய்தவன் அன்றோ
இங்கு தான் மருட்சி அடைகிறான் அர்ஜுனன்
தர்ம ஸாஸ்த்ரம் -ஆயதாயி வந்தால் -விசாரம் செய்யாமல் கொல்லவே வேண்டும்
கொலைக்காக எந்தப் பாவமும் வராது –தற்காப்பு வகை தானே இது –
பரம தார்மிகன் -ஸூஷ்மம் அறிந்தவன் அர்ஜுனன் –
படையில் பீஷ்மர் துரோணர் க்ருபாச்சார்யர் போல்வார்களும் உண்டே
இவர்கள் ஆயதாயி வகையில் இல்லையே
இவர்களைக் கொன்ற பின்பே அவர்களைக் கொல்ல முடியும்
ஆச்சார்யர்கள் அன்றோ இவர்கள் -ஆகவே பாபமே வரும் என்கிறான் -ஆழமாக யோசித்து சொல்கிறான்
புண்யம் -வேதம் சொல்லும் செயலைச் செய்வது -தர்மம் இதுவே -செய்தால் புண்யம் வரும் –
சத்யம் வத தர்மம் சர -யாகாதிகள் செய்வது -அஹிம்சை போல்வன
விபரீதமாக செய்வது -அதர்மம் -செய்வதால் பாபம் வரும்
பொய் பேசுதல் ஹிம்சை செயல்கள் –
க்ருத- அக்ருத -தர்மம் -அதர்மம் -பாபம் -புண்யம்
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை –
ஆச்சார்யரைக் கொல்லக் கூடாது -அக்ருத்ய க்ருதம் செய்வது பாபம் -தானே –
———-
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் -தார்தராஷ்ட்ராந் ஸ்வ பாந்தவாந்.–
ஸ்வ ஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ—৷৷1.37৷৷
தஸ்மாந் = அதனால்
ந = இல்லை
அர்ஹா = உடமை உள்ளவன்
வயம் = நாம்
ஹந்தும் = கொல்வதால்
தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கூட்டத்தினரை
ஸ்வபா³ந்த⁴வாந் = உறவினர்களோடு இருப்பவர்
ஸ்வ ஜநம் = சுற்றத்தார்
ஹி = நம்மால்
கத²ம் = எப்படி, எவ்வாறு
ஹத்வா = கொன்ற பின்
ஸுகி²ந : = சுகமாக
ஸ்யாம = நம்மால்
மாத⁴வ = மாதவா
மாதவா ஆகவே நாங்கள் நம் உறவினரான திருதராஷ்ட்ர புத்திரர்களைக் கொல்ல வல்லவர்கள் அல்லோம்
உறவினரைக் கொன்று எப்படி சுகமுடையவர்களாக ஆவோம்
மாதவ -ஸ்ரீ யபதியாய் இருந்து வைத்து -அமங்களம் செய்யத் தூண்டுவதோ –
கருணை வந்தால் -வெறுப்பு வராதே
கொல்வதால் பலன் இல்லையே
பந்துக்கள் உடன் கூடி அன்றோ இவர்கள் உள்ளார்கள் -ஆகவே கொல்வதற்கு அர்ஹர் அல்லர் –
ஸ்வ ஜனம் -இப்பொழுது -ஒரே குலம் தானே குரு வம்சம்
சாந்தனு -மூலம் –
இவர்களைக் கொன்ற பின்பு எப்படி ஆனந்தம் வரும்
பெருமாள் -லஷ்மணன் -பரதன் சத்ருக்கனன் -இவர்களை -விட்டுப் பிரிந்து
சுகம் வந்தால் அத்தை நெருப்பு எரிக்கட்டும்
————–
யத்யப்யேதே ந பஸ்யந்தி லோபோ பஹத சேதஸ–
குலக்ஷய க்ருதம் தோஷம் மித்ர த்ரோஹே ச பாதகம்—-৷৷1.38৷৷
யதி = இதனால்
அபி = மேலும்
ஏதத் = இவர்கள்
ந = இல்லை
பஸ்²யந்தி = அவர்கள் காணவில்லை
லோபோ = பேராசையில்
பஹதசேதஸ : = அகப்பட்டு
குலக்ஷய க்ருதம் = குடும்பத்தை அழித்து
தோ³ஷம் = குற்றம்
மித்ர = நண்பர்கள், உறவினர்கள்
த்³ரோஹே = துரோகம் செய்து
ச = மேலும்
பாதகம் = பாவச் செயல்களை செய்து
லோபம் பேராசை -உபஹத -இதனால் -மற்றவர ராஜ்யத்தில் ஆசை கொண்டு -பீடிக்கப்பட்டு
சரியானவை சரி அல்லாதவை-கார்ய அகார்ய பகுத்து அறியும் – -விவேக ஞானம் இழந்து –
குலம் அழியும்-தோஷம் – பாபம்
நண்பர்களுக்கு தீங்கு இழைக்கும் தோஷம் – பாதகம்
பாபத்துக்கு மேல் கோரமான பாவம் -துஷ்கிரியா -நரகத்திலே தள்ளும்
மஹா பாதகம் -அதி பாதகம் போன்ற பல வகைகள் உண்டே –
இரண்டையும் பார்க்காமல்
காணவில்லை என்றாலும் -சேஷம் அடுத்த ஸ்லோகத்தில் –
மித்ர- nural-ஸப்தம் -அனைத்து வித துணை –
மித்ரக -ஆண் பால் சூர்யன் சொல்லும் –
மித்ர த்ரோஹம் – பாதகம்
உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதாம் நட்ப்பு –
ஏகம் ஸூகம் துக்கம் -சுக்ரீவன் பெருமாள் அக்னி சாட்சியாக -சொன்னார்
த்ரோஹம் -அதர்மம் பக்கம் -தவறான வழியில் நண்பனை அழைத்துச் செல்வதும் -த்ரோஹம் -ஏமாற்று வேலை தானே
எதிர் அணியில் உள்ள நண்பர்
குகன் வாயால் கம்பர்
பரதன் அயோத்யா ஜனங்களுடன் சித்ர கூடம் வர -கங்கையைக் கடக்க-தென் கரையில் இருந்து வட கரை -பார்த்ததும்
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ —த்ரோஹம் இவனை போக அனுமதித்தாலேயே –
———————
கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி பாபாதஸ்மாந் நிவர்திதும்–
குலக்ஷயகரிதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜநார்தந—৷৷1.39৷৷
கதம் = எப்படி
ந = இல்லை
ஜ்ஞேயம் = அறிவுள்ளவர்கள்
அஸ்மாபி⁴ = நாம்
பாபாத் = பாவத்தில் இருந்து
அஸ்மாந் = இதில் இருந்து
நிவர்திதும் = நிறுத்தாமல், திரும்பி போகாமல், நிவர்த்தி செய்யாமல்
குலக்ஷய க்ரிதம் = குடும்பத்தை அழிக்கக் கூடிய
தோ³ஷம் = பாவத்தை
ப்ரபஸ்²யத்³பி⁴ர் = தெரிந்தவர்கள்-நன்றாக காண்கின்ற எங்களால் –
ஜநார்த³ந = ஜனார்தனா
ஜனார்த்தனனே ராஜ்யத்தில் பேராசையினால் மதி இழந்த இந்த துரியோதனாதியார் குலத்தின் அழிவினால்
உண்டாகும் பாவத்தையும் நண்பர்களுக்குத் தீங்கு இழைப்பதினால் உண்டாகும் பாவத்தையும் காண வில்லை யானாலும்
குலத்தின் அழிவினால் உண்டாகும் தீங்கை நன்கு காண்கின்றவர்களான எங்களால்
இப் பாவங்களில் நின்றும் மீள்வதற்கு எப்படி அறியாமல் இருக்க முடியும் –
குலம் அழியும் -தோஷம் கிட்டும் -மித்ர துரோகம் -அவர்கள் பார்க்க வில்லை -லோபம் பேராசையால் –
குல நாசம் நாங்கள் செய்ய மாட்டோம் -பாபம் போக்கத் தானே கார்யம் செய்ய வேன்டும்-
——–
குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா ஸநாதநா–
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம தர்மோபிபவத்யுத—৷৷1.40৷৷
குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா : ஸநாதநா 😐
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம் அத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||
குலக்ஷயே = குலம் அழிவதால்
ப்ரணஸ்²யந்தி = அது அழிகிறது (எது?)
குலதர்மா : = குல தர்மம்
ஸநாதநா 😐 = பண்டைய, புராதான , தொன்று தொட்டு வரும்
த⁴ர்மே = தர்மம்
நஷ்டே = சிதைந்தால்
குலம் = குலம்-இங்கு குலத்தை என்றவாறு
க்ருத்ஸ்நம் = முழுவதும்
அத⁴ர்மோ = அதர்மம்
அபிபவத் = பரவும்-சூழ்ந்து வெற்றி கொள்ளுமே
யுத = அதனால், மேலும்,
குல நாசத்தினால் பழைமையான குல தர்மங்கள் சனாதன தர்மம் மாண்டு போகும்
தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்து குலத்தை வெல்கிறது –
மெல்லிய நூல் நெசவாளர் காற்று போல் மெலிதாக பாரதத்தில் இருந்ததாம்
அழிந்ததே இப்பொழுது -இது போல் குலம் அழிந்தால் அந்த செயல்களும் அழியும்
தர்ம கார்யங்கள் -அன்னதானம் -யாத்திரிகர் நிவாஸ் -மரம் நடுதல் -குளம் கட்டுதல் –
கோயில் கைங்கர்யம் போன்ற சமுதாய நல்வினைகள் -தர்ம காரியங்களும் அழிந்து போகும்
இது குல தர்மத்தின் மேல் நிலை –
ப்ரபந்ந குலம் -கைங்கர்யமே கர்தவ்யம் -குலம் தரும் செல்வம் தந்திடும் –நலம் தரும் சொல்லை
நான் கண்டு கொண்டேன் -நாராயணா என்னும் நாமம் –
தொண்டைக் குலத்தில் உள்ளீர் -அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ –
வழி வழியாக -ஏழு குடி குடி வந்து ஆள் -கோயில் சீய்த்து -இதுவும் குல தர்மமே –
தர்மம் ரஷீதி ரக்ஷிதா -நாம் தர்மம் விடாமல் இருந்தால் அது நம்மை ரக்ஷிக்கும் –
இல்லை என்றால் அதர்மம் நம்மை சூழ்ந்து கொள்ளும்
தர்ம கார்யம் செய்யச் செய்ய அநாதி காலமாக செய்த பாபங்கள் அழிந்து போகும் –
பாபம் ரஜோ தமோ குணங்களை வளர்க்குமே –
அதர்மம் வெற்றி கொள்ளும் என்பது -குலத்தில் மீதி உள்ளார் மனசை பாழ் படுத்தி –
மேலும் பாபச் செயல்களில் மூட்டும்
———
அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய–
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர—৷৷1.41৷৷
அத⁴ர்மாபிபவாத் = அதர்மம் தலை தூக்கும் போது
க்ருஷ்ண = கிருஷ்ணா
ப்ரது³ஷ்யந்தி = அவர்கள் கெடுக்கிறார்கள்
குலஸ்த்ரிய 😐 = குலப் பெண்கள்
ஸ்த்ரீஷு = எப்போது பெண்கள்
து³ஷ்டாஸு = கெடுகிறார்களோ
வார்ஷ்ணேய = விருஷினி குல தோன்றலே
ஜாயதே = பிறக்கிறது
வர்ணஸங்கர : = வர்ண குழப்பங்கள் உண்டாகின்றன
வ்ருஷ்ணீ குலத்தில் உதித்த கண்ணனே –
அதர்மம் சூழ்ந்து கொள்வதால் குலப் பெண்கள் மிகவும் கெடுகின்றனர்
குலப் பெண்கள் கெட்டுப் போன அளவில் நான்கு வர்ணக் கலப்பு உண்டாகும்
ஸ்த்ரீகள் -கெட்டால் -வர்ணாஸ்ரமம் தர்மம் போகும் –
ஸஹ தர்ம சாரிணி -தர்ம பத்னி -மனைவி அன்றோ -தர்மங்களில் அதிக பங்கு உண்டே -பொறுப்பும் அவளதே —
மநு -யதா தத்ர வர்த்த -அதே போல் வாழ வேண்டும் -வயசான பாட்டிமார் இடம் சந்தேகம் தீர்த்துக் கொள்ள வேண்டும்
மண்டோதரி -மஹா யோகி பரமாத்மா –தாரை -அறிந்தாள் –பிரகலாதன் பெற்று எடுத்தவள்
பத்னி -யாகம் திருவாராதனம் -துணையாக இருப்பதாலே பத்னி -என்று பெயர் -சஹா யஜ்ஜ கார்யா –
வால்மீகி சீதாப் பிராட்டியைப் பற்றி -தேவ கார்யம் -க்ருத்வா க்ருதஜ்ஜா-த்ருஷ்ணா சேதனா
அபிஹ்ஞ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் பிரதீஷதே -பெருமாள் வரவை எதிர் பார்த்து இருந்தாள்
————
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச.–
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த பிண்டோதக க்ரியா—৷৷1.42৷৷
ஸங்கரோ = வர்ண கலப்பால் -குழப்பத்தால்
நரகாயை = நரகமே
எவ = நிச்சயமாக
குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களுக்கும்
குலஸ்ய = குலத்தில் உள்ளவர்களுக்கும்
ச= மேலும்
பதந்தி = வாழ்கிறார்கள்
பிதரோ = முன்னோர்கள்
ஹி = அதனால்
யேஷாம் = இதன்படி
லுப்தா = விட்டுப் போகிறது
பிண்டோ³த³க = பிண்டம் அளிக்கும்
க்ரியா = காரியம்
பிண்ட கிரியை உதக கிரியை -ஸ்ரார்த்தம் தர்ப்பணம் -ஆகியவற்றை இழந்தவர்களாகி
வர்ணக் கலப்பு குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்திற்கும் நரக வாசம் ஏற்படவே காரணம் ஆகிறது
இவர்களுடைய பித்ருக்களும் பிண்டக் கிரியை உதக கிரியை –சிரார்த்தம் -தர்ப்பணம் -ஆகியவற்றை
இழந்து கீழ் உலகில் வீழ்கின்றனர்
நரகம் நிச்சயம் -பித்ருக்கள் -பிண்ட பிரதானம் செய்ய முடியாமல் தலை குப்புற விழும் படி ஆகும்
போக்தா -உண்பவனும் அனுமந்தா சம்ஸ்கர்த்தா க்ரயீ விக்ரயீ ஹிம்சாகாகா உபகர்த்தா -தூண்டுபவன் –
ஆகிய அஷ்ட பேர்களுக்கும் பாபம் வரும்
பித்ருக்களுக்கு ஏற்றதாக இது போய் சேரும் -ஸாஸ்த்ரம் சொல்கிறது
ஆகவே கிரியைகள் முக்கியம்
ஜீவதோ -சொன்னபடி -செய்ய வேண்டும் -வருஷம் தோறும் ஸ்ரார்த்தம் கயா பிண்ட பிரதானம் –
மூன்றும் செய்தால் தான் புத்ரன் ஆகிறான் –
————–
தோஷைரேதை குலக்நாநாம் வர்ண ஸங்கர காரகை-
உத்ஸாத்யந்தே ஜாதி தர்மா குலதர்மாஸ்ச ஸாஸ்வதா—৷৷1.43৷৷
தோஷை = குற்றத்தால், பாவத்தால்
இதை : = இந்த
குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களும்
வர்ண ஸங்கரகாரகை 😐 = வர்ண குழப்பங்களும்
உத்ஸாத்யந்தே = குறைக்கும்
ஜாதி தர்மா : = ஜாதி தர்மத்தையும்
குல தர்மாஸ் = குல தர்மத்தையும்
ச = மேலும்
ஸாஸ்வதா : = நிரந்தரமான
குல நாசம் செய்தவர்களின் இந்த வர்ணக் கலப்பு ஏற்படுகின்ற குற்றங்களினால்
நிலையானவைகளான ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும்-சனாதன தர்மங்களும் அழிகின்றன
—————-
உத்ஸந்ந குல தர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந-
நரகே நியதம் வாஸோ பவதீத் யநு ஸூஸ்ரும—৷৷1.44৷৷
உத்ஸந்ந = குறைகிறதோ, அழிக்கப் படுகிறதோ
குலத⁴ர்மாணாம் = குல தர்மம் ஆனது
மநுஷ்யாணாம் = மக்களின்
ஜநார்த³ந = ஜனார்தனா
நரகே = நரகம்
நியதம் = நிச்சயம்
வாஸோ = வாசம்
ப⁴வத் = அது
இது = அவ்வாறு
அநு ஸு²ஸ்²ரும = மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்
ஜனார்த்தனனே குல தர்மம் அடியோடு அழியப் பெற்ற மனிதர்களுக்கு நரகங்களில்
எப்போதும் வாசம் ஏற்படுகிறது என்று கேள்விப் படுகின்றோம் -நரக வாஸம் நிச்சயம் –
வேதம் தர்ம சாஸ்திரங்கள் ஸ்பஷ்டமாக சொல்லுகின்றனவே
பாபம் நிரந்தமாக செய்து-அதுக்கு வருந்தாமல் -ப்ராயச்சித்தமும் செய்யாமல் இருந்தால் நரகம் நிச்சயம்
பிராயச் சித்தம் செய்யும் பொழுது இனி செய்ய மாட்டேன் என்று உறுதி யுடன் செய்ய வேண்டும்
பயம் அனுதாபம் லஜ்ஜை மூன்றும் வர வேண்டுமே -இவை வந்தால் தானே மேலே செய்யாமல் இருப்பான் –
————-
அஹோ பத மஹத் பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்–
யத் ராஜ்ய ஸுக லோபேந ஹந்தும் ஸ்வ ஜந முத்யதா—৷৷1.45৷৷
அஹோ ப³த = அந்தோ-ஆச்சர்யம் -கஷ்டம்
மஹத் = பெரிய
பாபம் = பாவம்
கர்தும் = செய்கிறோம்
வ்யவஸிதா = உறுதி கொண்டோம்
வயம் யத்³= (அதை அடைய ) அதற்காக
ராஜ்ய ஸுக² லோபே⁴ந = அரச சுகங்களுக்காக-பேராசையினாலே-
ஹந்தும் = கொலை செய்து
ஸ் வஜநம் = உறவினர்களை
யுத்³யதா : = கொல்ல முயன்றோம் -கொல்லத் தயாராக இருக்கிறோம்
இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ
குலம் அழிந்தால் குல தர்மம் அழியும் -முன்னோர் செய்த தர்மம் படி மேலும் நடக்க வேண்டும் —
இதனால் நரகம் புக வேண்டும் –
தேவ கடன் ரிஷி கடன் பித்ரு கடன் பூமி கடன் -இவற்றைத் தீர்க்க வேண்டுமே –
அந்தோ பாவம் நாம் பெரும் பாவம் செய்ய முனைந்து விட்டோம் -ஏன் என்னில்
ராஜ்ய சுகத்துக்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களையே கொல்லத் துணிந்து விட்டோம் –
அநியாயம் -பெரிய பாபம் செய்ய அன்றோ -ராஜ்யம் சுகம் பேராசையால் வந்தோம் –
வயம் -நாம் என்று
தர்மமே வடிவான நீயும் =எங்கள் உடன் இருக்க –
அந்தோ – நாம் நீயும் நாங்களும் சேர்ந்து அதர்மம் செய்யவோ -அந்தோ
இது எல்லாம் முன்னமே எண்ண வேண்டி இருக்க
யுத்தம் தொடங்கி சங்குகளூதி இப்பொழுது சங்கை படுவாயோ என்று கேட்க
அதுக்குப் பதில் இது
மஹத் பாபம் இப்பொழுது
முன்பு பல பாபங்கள்
சூதாடி -அவளையும் பணையம் வைத்து -சிறிய பாபங்கள்
கோவிந்த புண்டரீகாஷா சரணம் -அவனது பக்தை என்று பார்த்து ரக்ஷித்து இருக்க வேண்டுமே
சாதாரண தர்மம் பார்த்து இருக்கக் கூடாதே
இப்பொழுது மஹத் பாபம்
ராஜ்ஜியம் -சுகப்படக் கருவி தானே -இது கொண்டு போகம்
பேராசை காரணமாக -துணிந்து ஸ்வ ஜனங்களை வதம் செய்ய துணிந்தோமோ
உரிமையான ராஜ்ஜியம் கேட்பதே கருணையால் -இதுவே பேராசை என்கிறான் –
இல்லாத குற்றத்தை ஏறிட்டுக் கொள்கிறான்
பெருமாள் -இளைய பெருமாள் பரதாழ்வான் மேல் அதிசங்கை பண்ண -ராஜ்யஸ்த ஹேது
உனக்கு அரசாள ஆசை இருந்தால் சொல்லு -நான் சொன்னதும் பரதன் உனக்குத் தருவான் -என்று
சுருக்கு என்று கேட்க எண் ஜாண் உடம்பு சுருங்கி வெட்கப்பட்டானே –
—————–
யதி மாம ப்ரதீகாரம ஸஸ்த்ரம் ஸஸ்த்ர பாணய–
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ் தந்மே க்ஷேம தரம் பவேத்–৷৷1.46৷৷
யதி= எனவே
மாம் = என்னை
அப்ரதீகாரம் = எதிர்த்து போர் புரியாமல் இருக்கும்
அஸ²ஸ்த்ரம் = ஆயுதம் இல்லாமல்
ஸ²ஸ்த்ர பாணய = ஆயுதம் இருக்கும் அவர்கள்
தா⁴ர்தராஷ்ட்ரா = திருதராஷ்ட்ர புத்திரர்கள்
ரணே = யுத்த களத்தில்
ஹந்யுஸ் = கொன்றாலும்
தத் = அது
மே = எனக்கு
க்ஷேம தரம் = பெரிய நன்மையே
ப⁴வேத் = அது
போரில் பழி வாங்காதவனாய் ஆயுதம் அற்றவனான என்னை ஆயுதத்தைக் கையில் ஏந்திய
திருத்ராத்ட்ர புத்திரர்கள் கொல்வார்கள் ஆகில் அதுவே எனக்கு மிகவும் நன்மையாகும்
என்று அர்ஜுனன் கூறினான்
நான் சண்டை போடாமல் -ஓடினாலும் -என்னைக் கொன்றாலும் நல்லதே
கீழே 28 ஸ்லோகத்தில் இவ்வாறு சொல்லாத தொடங்கினான் பார்த்தோம்
இத்துடன் அர்ஜுனன் சொன்னவை முடிந்தது
—————
ஸஞ்ஜய உவாச–
ஏவமுக்த்வார்ஜுந ஸம்க்யே ரதோபஸ்த உபாவிஸத்–
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஷோக ஸம் விக்ந மாநஸ—৷৷1.47৷৷
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவம் = இவ்வாறு
உக்த்வ = கூறிய பின்-
அர்ஜுன = அர்ஜுனன்
ஸங்க்²யே = போர்க்களத்தில்
ரதோ²பஸ்த² = இரதத்தின் தட்டில்-தேரின் நடுவிலே
உபாவிஸ²த்| = அமர்ந்து விட்டான்
விஸ்ருஜ்ய = தூர வைத்த பின்
ஸஸ²ரம் = அம்புகளோடு கூடிய
சாபம் = வில்லை
ஸோ²க = சோகம்
ஸம்விக்³நம் = சஞ்சலப்பட்டு
மாநஸ : = மனத்துடன்
சஞ்சயன் கூறினான்
இவ்வாறு கூறி அம்புடன் கூடிய வில்லைக் கை விட்டு துன்பத்தால் துவளும் மனமுடையவனாய்
போரில் தேரின் மேல் அர்ஜுனன் அமர்ந்து விட்டான் -என்று சஞ்சயன் கூறினான்
ரதம் நடுவில் அமர்ந்து அழ -வில் கீழே விழ -சோகம் பீடித்து -நீர் தளும்ப -சோகம் பட்டு நிற்கிறான் –
உபஸ்தம் நடுவில்
கீழே சாரதி நிற்க
மேலே உயர்ந்த இடம் ரதி இருக்க வேண்டிய இடத்தை விட்டு இறக்கி
நடுவில்-உபாவிஸ²த்– உட்கார்ந்தான் நிற்கக் கூட வில்லை
மரணம் வரை அமர்வது போல் -அமர்ந்த இடத்திலும் காண்டீபம் நழுவிற்றே
சோகத்தால் மனஸ்ஸூ அலைக்கப்பட்டதே –
அர்ஜுனன் விசாத யோகம்
துரியோதனனும் துக்கப்பட்டான் -முதலில் –
ஸிம்ஹ ஒலி போல் -பீமா நீ கர்ஜிக்க வாயு புத்திரனான அத்தை எல்லா பரவச செய்து
நானும் ஒலி எழுப்புவேன் -திருவடி வார்த்தை
அர்ஜுனனுக்கு கருணையால் வந்த சோகம்
இவ்வளவும் கண்ணன் இடம் கொட்டியதே அர்ஜுனன் இடம் உள்ள நன்மை
கிருஷ்ணாஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ண நாதா -என்று இருந்தானே –
———
இந்த ப்ரகரணம் இத்துடன் முடியவில்லை
அடுத்த அத்யாயம் பத்து ஸ்லோகங்களில் அர்ஜுனன் கண்ணன் சம்வாதம்
இவற்றுடன் சேர்த்தே அர்ஜுன விஷாத யோகம்
———
பாத்ம புராணம் கீதா மனஹாத்ம்யம் சொல்லும்
பார்வதி கீதா மஹாத்ம்யம் ருத்ரனார் இடம் கேட்க
பக்தி வளர இது அறிய வேண்டுமே
சாலப்பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்
நானே கீதை
முதல் 5 அத்தியாயங்கள் -தலைப் பாகம்
அடுத்த 10 அத்தியாயங்கள் –6-15-கைகள் பாகம்
அடுத்த அத்யாயம் -16-வயிறு பாகம்
அடுத்த 2 அத்தியாயங்கள் -17-18-திருவடி பாகம்
இப்படி 18 அத்யாயம் -கண்ணனே உரு எடுத்தால் போல் ஸ்ரீ கீதை
இனி அவதரிக்க வேண்டாம்
நிம்மிதியாக சயனித்து உள்ளேன்
ஒவ்வொறு அத்யாய மஹிமையும் உண்டு
சூ ஷர்மா அந்தணர் -நடத்தை நன்றாக இல்லாமல் இருக்க
அடுத்த பிறவியில் எருதாக பிறக்க
பூம் பூம் மாட்டுக்காரன்
கீழே விழுந்து
கால் முறிந்து கிடக்க
வழி போக்கர் தங்கள் புண்யம் கொடுக்க
நன்மை ஒன்றும் நடக்கவில்லை
விலை மாது -ஏதாவது புண்யம் இருந்தால் கொடுக்கிறேன்
நேராக நரகம் போனது இந்த எருது
உனக்கு அனைத்து பாபங்கள் போனது மீண்டும் பூமியில் பிறப்பாய்-யமன் சொல்ல –
முன் ஜென்ம நினைவுடன் பிறக்க
அந்த விலை மாது இடம் சென்று எந்த புண்யம் என்று கேட்க
கிளி சொல்ல கேட்டேன்
கிளி சொல்லிற்று
முன் ஜென்மத்தில் மனிதனாக இருந்தேன்
பணம் ஆசை -பேராசை கொண்டு இருந்தேன்
அந்த பாபத்தால் கிளி
ரிஷிகள் கீதை படிக்கக் கேட்டு சொல்லிக் கொண்டு இருக்கிறேன்
அத்தைக் கேட்டு விலை மாது பெற்ற புண்யம் இவளுக்கு
உயிர் பிரியாமல் இருந்த மாட்டுக்கு உதவிற்று
யார் படிக்கிறானோ கேட்க்கிறானோ -மனப்பாடம் செய்கிறானோ
ஸம்ஸாரக்கடல் கட்டுப்படுத்தாது –
சம்சார சாகரம் தாண்டுகிறான் –
இவ்வாறு ருத்ரன் பார்வதிக்கு உரைக்கிறார் –
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply