சௌரே: ஸஞ்சார காலேஷு புஷ்ப வ்ருஷ்டி: திவஸ் ஸ்யுதா
பர்ய வஸ்யதி யத்ர ஏவ ப்ரபத்யே தாம் பதாவநீம்—-321-
திருவரங்கன் ஸஞ்சாரம் செய்யு ம்போது அவன் மீது பூமாரி பொழிந்தபடி உள்ளது. இத்தகைய மலர்கள்
அவனது திருவடிகளில் உள்ள பாதுகையைச் சென்று அடைகின்றன. அத்தகைய பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.
எம்பெருமான் அசூர நிரசனத்துக்காக புறப்படுகிறார் -அவருடைய வெற்றியைக் கொண்டாட தேவர்கள் புஷ்ப விருஷ்டி செய்கிறார்கள்
அவை கடைசியில் ஸ்ரீ பாதுகையிலே தானே தங்குகின்றன -அந்த ஸ்ரீ பாதுகையையே நான் உபாயமாக எண்ணுகிறேன் –
———————————————————————-
தைவதம் மம ஜக த்ரய அர்ச்சிதா
திவ்ய தம்பதி விஹார பாதுகா
பாணி பாத கமல அர்ப்பணாத் தயோ:
யா பஜத் யநு தினம் ஸபாஜனம்—-322-
மூன்று உலகங்களாலும் வணங்கப்படுகிற ஸ்ரீரங்கநாச்சியாரும் ஸ்ரீரங்கநாதனும் தங்கள் திருக்கரங்கள் மற்றும்
திருவடிகள் என்ற தாமரை மலர்கள் கொண்டு பாதுகையை அன்றாடம் பூஜித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட பாதுகை எனக்கு மட்டும் இன்றி அனைவராலும் வணங்கத் தகுந்தது ஆகும்.
ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தன் திருவடித் தாமரைகளையும்
பிராட்டி தன் திருக் கைத் தாமரைகளையும் உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்
அப்படிப்பட்ட திருப் பாதுகையை ஆராதித்து நான் சகல பலன்களையும் அடைய வேண்டும் –
———————————————————————
தவ ரங்கராஜ மணி பாது நதோ
விஹிதார்ஹண: ஸுர ஸரித் பயஸா
அவ தம்ஸ சந்த்ர கலயா கிரிசோ
நவ கேத கீதளம் இவ அர்ப்பயதி—-323–
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள
கங்கை நீரைக் கொண்டு உனக்கு அர்க்யம் அளிக்கிறார். தனது தலையில் உள்ள பிறைச் சந்திரன் மூலம்
அழகாக அமைந்துள்ள தாழம் பூவை உனக்கு அளிக்கின்றார்.
ஸ்ரீ பாதுகையே பரம சிவன் உன்னை வந்து சேவித்து தன சிரஸ்ஸில் உள்ள கங்கையை உனக்கு அர்க்க்யமாகவும்
சந்த்ர கலையைத் தாழம் பூ இதழாகவும் சமர்ப்பிக்கிறார் –
———————————————————————-
குஸுமேஷு ஸமர்ப்பிதேஷு பக்தை:
த்வயி ரங்கேச பதாவநி ப்ரதீம:
சடகோப முநே: த்வத் ஏக நாம்ந:
ஸுபகம் யத் ஸுரபி த்வம் அஸ்ய நித்யம்—-324-
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் பக்தர்கள் மலர்களைச் சாற்றியபடி உள்ளனர்.
உன்னுடைய திருநாமத்தைக் கொண்ட நம்மாழ்வாருக்கு எத்தகைய நறுமணம் (மகிழம்பூ நறுமணம்) உள்ளதோ,
அதனை உன்னிடம் இப்போது காண்கிறோம்.
ஸ்ரீ பாதுகையே சடகோபன் என்ற உன் திருநாமம் கொண்ட ஆழ்வார் பகவானுடைய பரத்வத்தை அறுதி இட்டு அருளிச் செய்தார் –
அவருக்கு பக்தர்கள் என்றும் மணம் கமழ் மகிழ் மாலையிட்டுக் கொண்டாடுகிறார்கள்
உனக்கு புஷ்பத்தை சமர்ப்பிப்பது இதில் இருந்து இது நன்றாகத் தெரிகிறது –
—————————————————————————–
பதே பரஸ்மிந் புவநே விதாது:
புண்யை: ப்ரஸூநை: புளிநே ஸரய்வா:
மத்யே ச பாதாவநி ஸஹ்ய ஸிந்தோ
ஆஸீத் சதுஸ் ஸ்தாநமிவ அர்ச்சநம் தே—325-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குப் பரமபதம், ப்ரம்மனின் ஸத்ய லோகம், ஸரயு நதியின் கரையில் உள்ள
அயோத்தி மற்றும் காவேரியின் நடுவில் உள்ள திருவரங்கம் ஆகிய நான்கு இடங்களிலும் மலர்கள் கொண்டு அர்ச்சனம் நடைபெறுகிறது.
இது எம்பெருமானுக்கு நான்கு இடங்களில் (கும்பம், அக்னி, ஸ்தண்டிலம், பிம்பம்) நடைபெறும் அர்ச்சனம் போன்றுள்ளது
ஸ்ரீ பாதுகையே -உனக்குப் பரம பதம் சத்ய லோகம் திருவவயோத்தி ஸ்ரீ ரங்கம் ஆகிய நான்கு இடங்களில்
பவித்ரமான புஷ்பங்களால் அர்ச்சனை யுடன் திருவாராதனம் நடந்தது –
இது ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தில் கூறப்பட்ட கடம் அக்னி ஸ்தண்டிலம் பெருமாள் உடைய மூர்த்தி
இந்த நான்கு விதமான ஸ்தானங்களில் திருவாராதனம் செய்வது போல் இருக்கிறது –
—————————————————————————–
தவைவ ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஸௌபாக்யம் அவ்யாஹதம் ஆப்துகாமா:
ஸுரத்ருமாணாம் ப்ரஸவை: ஸுஜாதை:
அப்யர்ச்ச யந்தி அப்ஸரஸோ முஹுஸ் த்வாம்—326-
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
எந்தக் காலத்திலும் குறைவு என்பதே இல்லாத உன்னைப் போன்ற நிலை,
தங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று அப்ஸரஸ் பெண்கள் நினைக்கிறார்கள்.
இதனால் அவர்கள் கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு உன்னை அர்ச்சித்தபடி உள்ளனர்.
ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையே உன்னைப் போலவே தடையற்ற சம்பத்தைப் பெற
அப்சரஸ் ஸ்திரீகள் கல்பக விருஷத்தின் புஷ்பங்களால் உன்னைப் பூஜிக்கிறார்கள் –
————————————————————————–
நிவேசிதாம் ரங்கபதே: பதாப்ஜே
மந்யே ஸபர்யாம் மணி பாத ரக்ஷே
த்வத் அர்ப்பணாத் ஆபதிதாம் அபஸ்யத்
காண்டீவ தந்வா கிரி சோத்த மாங்கே—-327-
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! காண்டீபம் என்ற வில்லை உடைய அர்ஜுனன்,
ஸ்ரீரங்கநாதனாகிய க்ருஷ்ணனின் தாமரை போன்ற திருவடிகளில் மலர்களை இட்டான்.
இவை சிவன் தலையில் உள்ளதைக் கண்டான். இதன் மூலம் நான் நினைப்பது என்னவென்றால் –
உன்னைச் சிவன் தனது தலையில் சூட்டிக் கொண்ட போது, அந்த மலர்கள் அங்கு வந்திருக்க வேண்டும் – என்பதாகும்.
ஸ்ரீ பாதுகையே பாசுபதாஸ்த்ரத்தைப் பெற அர்ஜுனன் சிவனைப் பூஜிக்க மலர்களை ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியில் சமர்ப்பித்தான் –
மறு நாள் அந்த புஷ்பங்கள் சிவனின் தலையில் இருந்தன -அர்ஜுனன் அதைக் கண்டான் –
சிவன் உன்னைத் தினமும் தன் சிரஸில் சாதித்துக் கொள்வதால் இது நிகழ்ந்தது போலும் –
—————————————————————————
பத்ராணி ரங்க ந்ருபதேர் மணி பாத ரக்ஷே
த்வத்ராண்யபி த்வயி ஸமர்ப்ய விபூதி காமா:
பர்யாய லப்த புருஹூதபதா: சசீநாம்
பத்ராங்குராணி விலிகந்தி பயோதரேஷு—-328-
இரத்தினக்கற்களால் பதிக்கப் பெற்ற பாதுகையே! உயர்ந்த ஐச்வர்யம் விரும்புவர்கள் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை
உன்னிடம் சமர்ப்பித்து விட்டால் போதுமானது. அவர்கள் வரிசையாக நின்று அடைய வேண்டிய இந்திர பதவியை
நேரடியாகவே அடைந்து விடுகின்றனர். இந்த்ராணிகளின் ஸ்தனங்களில் ஓவியம் தீட்டும் நிலையை அடைகின்றனர்.
ஸ்ரீ பாதுகையே -உயர்ந்த சம்பத்தைப் பெற ஆசை கொண்டு யாராவது ஏதோ இரண்டு மூன்று இதழ்களை
உனக்கு சமர்ப்பித்தால் அவர் இந்திரப் பட்டத்தை முறைப்படிப் பெறுகிறார்கள் –
—————————————————————-
நிவர்ர்த்த யந்தி தவ யே நிசிதாநி புஷ்பை:
வைஹாரி காணி உப வநாநி வஸுந்தராயாம்
காலேந தே கமல லோசந பாத ரக்ஷே
க்ரீடந்தி நந்த நவநே க்ருதிந: புமாம்ஸ:—-329-
தாமரை போன்ற அழகான கண்கள் கொண்ட க்ருஷ்ணனின் பாதுகையே! நீ நடந்து செல்வதற்காக, உனது விளையாட்டிற்காக,
இந்த உலகில் ஒரு சிலர் மலர்கள் நிறைந்த தோட்டங்களை உருவாக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள் நாளடைவில்
இந்திரனின் தேவலோக நந்த வனத்தில் விளையாடி மகிழ்கின்றனர் (அதாவது அவர்கள் இந்த்ர பட்டம் அடைகின்றனர்).
ஸ்ரீ பாதுகையே எந்த புண்ணிய சீலர்கள் உனக்கு புஷ்பங்கள் நிறைந்த தோட்டங்களை யமைத்து உன்னை
ஆராதிக்கின்றனரோ -அவர்கள் இந்திர பட்டத்தைப் பெற்று நந்த வனத்தில் விளையாடுகிறார்கள் –
——————————————————————————
அர்ச்சந்தி யே மது பிதோ மணி பாத ரக்ஷே
பாவாத்ம கைரபி பரம் பவதீம் ப்ரஸூநை:
மந்தார தாம ஸுபகை: மகுடை: அஜஸ்ரம்
ப்ருந்தாரகா: ஸுரபயந்தி பதம் ததீயம்—-330-
மது என்ற அரக்கனை அழித்த க்ருஷ்ணனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
தங்களுடைய மனதின் மூலம் நினைக்கப்பட்ட மலர்கள் மட்டுமே கொண்டு ஒரு சிலர் உன்னை அர்ச்சிக்கக் கூடும்.
இப்படிப் பட்டவர்களின் திருவடிகளைத் தேவர்கள் தங்கள் தலைகளில் ஏற்கின்றனர். இதன் மூலம் தங்கள் தலைகளில் சூடி யுள்ளதும்,
மந்தார மலர்கள் நிறைந்ததும் ஆகிய க்ரீடங்கள் கொண்டு நறு மணம் வீசும்படிச் செய்கின்றனர்.
ஸ்ரீ பாதுகையே எவர்கள் உன்னை அஹிம்சை புலன் அடக்கம் முதலான எட்டு வகைப்பட்டதான புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சிக்கின்றனரோ
அவர்கள் தங்கள் திருவடிகளில் தேவர்களே மந்தார மாலை யணிந்த தங்கள் கிரீடங்களால் வணங்கும் பெருமை பெறுவார்கள் –
——————————————————————————–
அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-
ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்த விதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக் கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.
உன்னிடத்தில் சமர்ப்பிக்கப் பட்ட புஷ்பங்கள் எவ்வித குற்றமும் அற்று எளியனவனான
நால் வகை புருஷார்த்தங்களையும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பலங்களாக தருகின்றன -என்ன ஆச்சர்யம்
செடியைப் விட்டுப் பிரிந்த புஷ்பங்கள் பழங்கள் ஆகின்றன எனபது ஆச்சர்யம் அன்றோ –
————————————————————————
வந்தாரூபி: ஸுர கணை: த்வயி ஸம் ப்ரயுக்தா
மாலா விபாதி மது ஸூதன பாத ரக்ஷே
விக்ரந்த விஷ்ணு பத ஸம்ஸ்ரய பத்த ஸக்யா
பகீரதீவ பரிரம்பண காங்க்ஷிணீ தே—-332-
மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை வணங்கிப் போற்றியபடி உள்ள தேவர்களின் கூட்டங்கள்,
உன் மீது மலர் மாலைகளைச் சமர்ப்பணம் செய்கின்றனர். அந்த மாலையைப் பார்க்கும் போது,
ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக உயர்ந்த போது, அவனது திருவடிகளின் தொடர்பு ஏற்பட வேண்டும்
என்ற ஆவல் கொண்டு உன்னை கட்டித் தழுவிய கங்கை போன்று உள்ளது.
ஸ்ரீ பாதுகையே -தேவர்கள் உனக்கு ஜாதிப் புஷ்ப மாலையை சமர்ப்பிக்கிறார்கள் -அதைப் பார்க்கும் போது த்ரிவிக்ரம திருவவதார
காலத்தில் பெருமாள் திருவடி சம்பந்தம் பெற்ற கங்கை உன்னுடன் ச்நேஹம் செய்து உன்னை அணைக்க வந்தது போல் உள்ளது –
————————————————————————————-
யே நாம ரங்க ந்ருபதேர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந்தி கமலை: அதி கர்த்து காமா:
ஆரோபயதீ அவஹிதா நியதி: க்ரமாத் தாந்
கல்பாந்தரீய கமலாஸந பத்ரி காஸு—-333-
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உயர்ந்த பதவி பெற விரும்பும்
எண்ணம் உள்ளவர்கள் உன்னைத் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் போதுமானது.
அந்தப் புண்ணியமானது மிகவும் எச்சரிக்கையுடன் அவர்களின் பெயர்களை ப்ரம்ம பட்டத்திற்கான பட்டியலில் சேர்த்து விடுகிறது.
(அதாவது, அவர்கள் ஏதோ ஒரு கால கட்டத்தில் ப்ரம்ம பதவியை அடைவர்)
ஸ்ரீ பாதுகையே -ஒருவர் தனக்கு பிரம்மா பட்டம் வேண்டும் என்று உனக்கு தாமரை மலரை சமர்ப்பிக்கிறார் –
அந்த புண்ணியத்தால் அவருக்கு தெய்வம் முறைப்படி பிரம்மா பட்டத்திற்கான சாசனத்தில் அவர் பெயரைக் கவனத்துடன் எழுதி விடுகிறது
சதாசார்யா கடாஷம் பெற்றவன் ப்ரம்மாதிகளும் வணங்கத் தகுந்தவன் ஆகிறான் –
————————————————————————
த்வயி அர்ப்பிதாநி மநுஜைர் மணி பாத ரக்ஷே
தூர்வாங்குராணி ஸுலபாநி அதவா துளஸ்ய:
ஸாராதிகா: ஸபதி ரங்க நரேந்த்ர சக்த்யா
ஸம்ஸார நாக தமந ஔஷதயோ பவந்தி—-334-
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மனிதர்கள் உன் மீது மிகவும் எளிதாகக் கிடைக்க வல்ல
அருகம் புல்லையோ அல்லது துளசி இலைகளையோ சாற்றக்கூடும். இவை விஷத்தை முறிக்கவல்ல வைத்தியனாகிய
ஸ்ரீரங்கநாதனின் சக்தியால் மிகவும் வீர்யம் அடைந்து, ஸம்ஸாரம் என்ற பாம்புகளையும் அடக்கி விடுகின்றன.
ஸ்ரீ பாதுகையே மனிதர்கள் எளிதில் கிடைக்கும் அருகம்புல் துளசி இவற்றைக் கொண்டு உன்னை அர்ச்சிக்கிறார்கள் –
அவை அனைத்தும் ஸ்ரீ ரங்க நாதன் என்ற விசத் வைத்தியனுடைய மகிமையால் சம்சாரம் என்னும்
சர்ப்பத்தின் விஷத்தைப் போக்கும் ஔ ஷதிகளாக மாறுகின்றன –
———————————————————————–
ஆராத்ய நூநம் அஸுரார்த்தந பாதுகே த்வாம்
ஆமுஷ்மிகாய விபவாய ஸஹஸ்ர பத்ரை:
மந்வந்தரேஷு பரிவர்த்திஷு தேவி மர்த்யா:
பர்யாயத: பரிணமந்தி ஸஹஸ்ர நேத்ரா:—-335-
அசுரர்களை அழிக்கும் எம்பெருமானின் பாதுகையே! ஸ்வர்க்கம் முதலான உயர்ந்த செல்வங்களை அனுபவிக்க வேண்டும்
என்ற எண்ணம் கொண்டு, ஒரு சிலர் உனக்கு ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யக் கூடும்.
அவர்கள் தகுந்த கால கட்டங்களில் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திர பதவியை அடைவது உறுதியே ஆகும்.
ஸ்ரீ பாதுகையே ஸ்வர்க்க போகத்தை அடையும் கருத்துடன் ஆயிரம் இதழ்த் தாமரையால் உன்னை அர்ச்சிப்பவர்
இந்திர பட்டத்தை கொஞ்ச காலத்திலேயே அடைகின்றனர் –
————————————————————————–
தந்யைஸ் த்வயி த்ரிதச ரக்ஷக பாத ரக்ஷே
புஷ்பாணி காஞ்சந மயாநி ஸமர்ப்பிதாநி
விஷ்ரம்ஸிநா விநமதோ கிரிச உத்தமாங்காத்
ஆரக் வதேந மிலிதாநி அப்ருதக் பவந்தி—-336-
தேவர்களைக் காப்பாற்றும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! புண்ணியம் செய்தவர்கள் உன் மீது தங்கத்தால் செய்யப்பட்ட
மலர்களை இட்டு வழிபடுகின்றனர். அதே நேரம் உன் மீது சிவனின் தலையில் உள்ள
கொன்றை மலர்களும் விழுந்து, இரண்டும் ஒன்றாகின்றன.
ஸ்ரீ பாதுகையே மகா ராஜாக்கள் தங்கத்தாலான புஷ்பத்தால் உனக்கு அர்ச்சிக்கிறார்கள்
பரம சிவன் உன்னை வணங்கி தன் சிரஸில் உள்ள கொன்றைப் பூவை உனக்கு சமர்ப்பிக்கிறார்
இவை இரண்டிற்கும் வேற்றுமை விளங்காமல் இருக்கிறது –
—————————————————————————————–
விச்வ உப ஸர்க சமநம் த்வயி மந்யமாநை:
வைமாநிகை: ப்ரணி ஹிதம் மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய பத பத்ம நக அர்ச்சிஷு: தே
புஷ்ப உபாஹார விபவம் புநருக்த யந்தி—-337-
இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப் பட்ட பாதுகையே! இந்த உலகிற்கு ஏற்படும் அனைத்து உபத்திரவங்களும்
உன்னால் மட்டுமே நீங்கும் என்று தேவர்கள் எண்ணுகின்றனர். ஆகவே அவர்கள் உன்னிடம் மலர்களைச் சமர்ப்பிக்கின்றனர்.
இந்த மலர்களின் வரிசைகள் அனைத்தும், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின்
திருவடி விரல் நகங்களின் ஒளியால் மேலும் ஒளி பெறுகின்றன.
ஸ்ரீ பாதுகையே தேவதைகள் சகல லோகங்களும் எந்த தொந்தரவும் இல்லாமல் சுகித்து இருக்க உன்னிடம் பல புஷ்பங்களை
சமர்ப்பிக்கிறார்கள் -பெருமாள் திருவடி நகங்களின் வெண்மையான காந்தி அவைகளை இரு மடங்காகப் பண்ணுகிறது –
————————————————————–
நாகௌகஸாம் சமயிதும் பரிபந்தி வர்காந்
நாதே பதம் த்வயி நிவேச யிதும் ப்ரவ்ருத்தே
த்வத் ஸம்ஸ்ரிதாம் விஜஹத: துளஸீம் வமந்தி
ப்ரஸ்தாந காஹள ரவாந் ப்ரதமம் த்விரேபா:—338-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை
உன் மீது மெதுவாக வைக்கின்றான். அப்போது உன் மீது சாற்றப்பட்ட துளசி மாலைகளில் உள்ள வண்டுகள்
ரீங்காரம் செய்யத் தொடங்குகின்றன. இதனைக் கேட்கும் போது, ஸ்ரீரங்கநாதன் புறப்படுகையில்
ஒலிக்கப்படுகின்ற காஹளம் என்ற எக்காளம் போன்று உள்ளது.
ஸ்ரீ பாதுகையே உன் மேல் சாத்தி இருக்கும் துளசி தளங்களில் வண்டுகள் மொய்க்கின்றன –
எம்பெருமான் அ ஸூரர்களை சம்ஹரிக்கப் புறப்படும் போது உன்னைச் சாத்திக் கொள்ள வந்ததும் அந்த வண்டுகள்
உயரக் கிளம்பி ரீங்காரம் செய்வது அவருடைய புறப்பாட்டுக்கு எக்காளம் வாசிப்பது போல் இருக்கிறது –
——————————————————–
ரங்கேச பாத பரி போக ஸுஜாத கந்தாம்
ஸம் ப்ராப்ய தேவி பவதீம் ஸஹ திவ்ய புஷ்பை:
நித்யம் உப தர்சித ரஸம் ந கில ஆத்ரி யந்தே
நாபீ ஸரோஜம் அபி நந்தன சஞ்சரீகா:—-339-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தே வலோகத்தில் உள்ள வண்டுகள், தேவர்கள் திருவரங்கனின் திருவடிகளில்
பொழிகின்ற மலர்களுடன் இணைந்தபடி திருவரங்கம் வந்து சேர்ந்து விடுகின்றன.
அவை நறு மணம் வீசும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் எப்போதும் தேன் பெருகும்
ஸ்ரீரங்கநாதனின் நாபிக் கமலத்தைக் கூட அடைய முனைவது இல்லை.
ஸ்ரீ பாதுகையே தேவதைகள் இந்த்ரனுடைய நந்தன வனத்தில் இருந்து உயர்ந்த புஷ்பங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்
வண்டுகள் பொதுவாக தேன் நிரம்பிய கமலத்தில் மொய்ப்பது வழக்கம்
பெருமாள் திருவடி சம்பந்தம் பெற்ற உன்னை வாசனை மிக்கதாகக் கருதி தற்போது உன்னையே மொய்க்கின்றன –
—————————————————————-
ப்ராகேவ காஞ்சந பதாவநி புஷ்ப வர்ஷாத்
ஸம் வர்த்திதே சமித தைத்ய பயை: ஸுரேந்த்ரை:
பத்மேக்ஷணஸ்ய பத பத்ம நிவேச லாபே
புஷ்ப அபிஷேகம் உசிதம் ப்ரதிபத்யஸே த்வம்—340-
தங்கம் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் மூலமாக அசுரர்கள் குறித்த பயம் நீங்கப் பெற்ற தேவர்கள்,
உன்னால் அல்லவோ ஸ்ரீரங்கநாதன் தனது பெரிய கோயிலை விட்டு வெளிக் கிளம்பி, அசுரர்களை அழித்தான் என்று என்று எண்ணுகின்றனர்.
அதனால் அவர்கள் உனக்கு மலர்களைத் தூவி வருகின்றனர். ஆயினும் அதற்கு முன்பாகவே திருவரங்கனின்
தாமரை போன்ற திருவடிகள் உன் மீது சாற்றப்பட்டு, உனக்கு ஏற்ற அபிஷேகம் நிறைவேறி விட்டது அல்லவோ
(மற்றொரு விதமான பொருள் கூறலாம்) –
அசுர பயம் நீங்கிய தேவர்கள், உனக்கு மலர் தூவி தங்கள் தலைகளில் உன்னைத் தாங்கியபடி திருவரங்கனின்
முன்பாக எழுந்தருளச் செய்கின்றனர். இப்படியாக அவன் திருவடிகளுக்கு முன்னரே
உனக்கு மலர் தூவி அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது – என்றும் கூறலாம்).
ஸ்ரீ பாதுகையே அஸூரர்களை வென்ற எம்பெருமானின் வெற்றியைக் கொண்டாடத் தேவர்கள் புஷ்பங்களை வர்ஷிக்கின்றார்கள் –
அதற்கு முன்னமேயே எம்பெருமானின் திருவடித் தாமரை உனக்கு அகப்பட்டு விட்டது –
————————————————————————————
திஸி திஸி முநி பத்ந்யோ தண்டகாரண்ய பாகே
ந ஜஹதி பஹுமாநாத் நூநம் அத்யாபி மூலம்
ரகுபதி பத ரக்ஷே த்வத் பரிஷ்கார ஹேதோ:
அபசித குஸுமாநாம் ஆஸ்ரமாநோகஹாநாம்—-341-
ரகுவம்சத்தின் பதியாக உள்ள இராமனின் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்தில் இருந்த போது,
அங்கு இருந்த ரிஷி பத்னிகள், உனக்கு ஏற்ற அலங்காரம் செய்யும் பொருட்டு,
அங்கு இருந்த மலர்களில் இருந்து மலர்கள் பறித்து, உனக்குச் சாற்றினர்.
அந்த மரங்கள் உனக்காக மலர்கள் அளித்தன என்று மரியாதையை மனதில் இன்னமும் நினைத்தபடியே,
இன்றளவும் அந்த மரங்களின் அடியில் அமர்ந்துள்ளனர்.
ஸ்ரீ பாதுகையே ரிஷி பத்னிகள் தண்ட காரண்யத்தில் இருந்து புஷ்பங்களைக் கொணர்ந்து உனக்கு சமர்ப்பித்தார்கள் .
அந்த புஷ்பங்களைத் தந்த ஆசிரம மரத்தடிகளை விட்டு அகலாமல் இன்றும் அவர்கள் மரியாதையாகப் போற்றி வருகிறார்கள் –
———————————————————————
கடயஸி பரிபூர்ணாந் க்ருஷ்ணமேக ப்ரசாரே
க்ருதிபி: உபஹ்ருதை: த்வம் கேதகீ கர்ப்ப பத்ரை:
வரதநு பரிணாமாத் வாமத: ஸ்யாமளாநாம்
ப்ரணதி ஸமய லக்நாந் பாதுகே மௌளி சந்த்ராந்—-342-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீர் கொண்ட மேகம் போன்ற திருமேனி உடைய ஸ்ரீரங்கநாதன்
ஸஞ்சாரம் செய்யப் புறப்படும் போது, புண்ணியம் நிறைந்தவர்களால் வெண்மையான தாழை மடல்கள் உன் மீது சாற்றப்படுகிறது.
அப்போது இடது பக்கத்தில் கறுத்த நிறமுள்ள பார்வதியைக் கொண்ட அர்த்தநாரீச்வரன்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றான். அவன் தலையில் உள்ள பிறைச் சந்திரன்
உன் மீது பட்டதால், அந்த தாழை மடல்களின் ஒளியால் முழுச் சந்திரனாகி விடுகிறான்.
ஸ்ரீ பாதுகையே -எம்பெருமானுடைய சஞ்சார காலத்தில் பக்தர்கள் தாழம்பூ மடலை உனக்கு சமர்ப்பிக்கிறார்க –
அவை உன்னை வந்து சேவிக்கும் பதினோரு ருத்ரர்களின் சிரஸ்ஸூக்களில் உள்ள
அர்த்த சந்திரங்களைப் பூர்ண சந்திரங்களாகச் செய்கின்றன –
—————————————————————-
பரிசரண நியுக்தை: பாதுகே ரங்க பர்த்து:
பவந தநய முக்யை: அர்ப்பிதாம் த்வத் ஸமீபே
விநத விதி முகேப்ய: நிர் விசேஷாம் த்விரேபா:
கதம் அபி விபஜந்தே காஞ்சநீம் பத்ம பங்க்திம்—-343-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஸூக்ரீவனால் ஏவப்பட்ட
அனுமன் முதலானோர், உன் மீது தங்க மயமான மலர்களை இடுகின்றனர்.
அதே நேரம் அங்கு வந்த ப்ரம்மன், தனது தாமரை போன்று ஒளி வீசும் முகங்களைத் தாழ்த்தி வணங்குகின்றான்.
அந்த நேரத்தில் அங்கு வரும் வண்டுகள் ப்ரம்மனின் முகங்கள் எது, தாமரை மலர்கள் எது என்று
அறியாமல் வெகு நேரம் சிரமப்பட்டு , பின்னர் கண்டு பிடித்து அறிகின்றன.
ஸ்ரீ பாதுகையே –ஸூக்ரீவனால் நியமிக்கப்பட்டு ஸ்ரீ ஹனுமான் முதலியவர்கள் உனக்குத் -(ஸ்ரீ ராம சந்த்ர)
தங்கத்தாலான புஷ்பங்களை சமர்ப்பிக்கிறார்கள் -பிரம்மாதி தேவர்களும் உன்னைத் தலைகளால்
வணங்குகிறார்கள் -வண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு முகங்களுக்கும் புஷ்பத்திற்கும் பேதத்தை அறிகின்றன –
—————————————————————–
விதி சிவ புருஹூத ஸ்பர்சிதைர் திவ்ய புஷ்பை:
த்வயி ஸஹ நிபதந்த: தத்ததுத்யாந ப்ருங்கா:
மதுரிபு பத ரக்ஷே மஞ்ஜுபி: ஸ்வைர் நிநாதை:
அவிதித பரமார்த்தாந் நூநம் அத்யாபயந்தி—-344-
மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! ப்ரம்மன், சிவன், இந்திரன் முதலானவர்கள்
தேவலோக மலர்கள் பலவற்றையும் கொணர்ந்து உனக்குச் சமர்ப்பணம் செய்கின்றனர்.
அவரவர்களின் பூந்தோட்டங்களில் இருந்த வண்டுகளும், அந்த மலர்களுடன் வந்து விடுகின்றன.
அவை ரீங்காரம் செய்தபடி உள்ளன. இதனைக் காணும்போது, அவை உன்னுடைய பெருமையை
அறியாதவர்களுக்கு அதனைப் பறை சாற்றி, உண்மையை அறிவிப்பது போல் உள்ளது.
ஸ்ரீ பாதுகையே -பிரம்மா சிவன் இந்திரன் முதலானவர்கள் தங்கள் தோட்டத்தில் இருந்து உயர்ந்த புஷ்பங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்-
அங்குள்ள வண்டுகளும் கூடவே வந்து இங்குள்ள ஜனங்களுக்கு உன் உண்மையான செய்தியை -பரதத்வத்தை -தெரிவிக்கின்றன –
உலகில் உள்ள சாரமான விஷயம் ஆழ்வார் என்பதை மஹான்கள் எடுத்துக் கூறுகின்றனர் –
———————————————————————
ப்ரசமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்க பர்த்து:
பரிஸர சலிதாநாம் பாதுகே சாமராணாம்
அநு தினம் உபயாதை: உத்திதம் திவ்ய புஷ்பை:
நிகம பரிமளம் தே நிர்விசந் கந்தவாஹ:—-345-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அன்றாடம் தேவ லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் உன் மீது பரவப்படுவதால்,
உன்னிடம் வேத வாசனை எப்போதும் சூழ்ந்துள்ளது. ஸ்ரீரங்கநாதனுக்கு வீசப்படும் சாமரங்களில் இருந்து எழும் காற்றானது,
இந்த வேத வாசனையை எடுத்து வந்து, இங்கு உள்ள மக்களின் ஸம்ஸார துன்பத்தை நீக்கி விடுகிறது .
ஸ்ரீ பாதுகையே தேவர்கள் சமர்ப்பிக்கும் புஷ்பங்களால் அறியப்படும் உன்னுடைய வேத மணத்தை-அதாவது-
வேதம் கூறும் உன் மகிமையை அனுபவிக்கும் ஸ்ரீ ரங்க நாதனுடைய சாமரக் காற்று ஜனங்களின் சம்சார தாபத்தைப் போக்குகின்றது –
——————————————————————–
அகில புவந ரக்ஷா நாடிகாம் தர்சயிஷ்யந்
அநிமிஷ தரு புஷ்பை: அர்ச்சிதே ரங்க மத்யே
அபிநயம் அநுரூபம் சிக்ஷயதி ஆத்மநா த்வாம்
ப்ரதம விஹித லாஸ்ய: பாதுகே ரங்கநாத:—-346-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு ஸ்ரீரங்கம் என்ற நாடகமேடை
(ரங்கம் என்றால் நாடகம் நடத்தும் மேடை என்பதாகும்) அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அந்த மேடையில் நாயகனாக ஸ்ரீரங்கநாதன் (நாடக எஜமான்), இந்த உலகத்தினைக் காப்பாற்றுதல் என்ற
ஒரு சிறிய நாடகத்தை அரங்கேற்றுகிறான். அதற்காக, தான் ஒரு நாட்டியம் ஆடி, அதற்கான அபிநயம் பிடிக்கும்போது,
அவனுக்கு நீ எவ்விதம் செயல்பட வேண்டும் என்று கற்றுத் தருகிறாய் போலும்.
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உலகங்களையும் காப்பாற்ற எண்ணம் கொண்டு கற்பக மலர்களால் பூஜிக்கப் பட்ட
ஸ்ரீ ரங்க விமானத்தின் நடுவில் உன் மீது ஏறிக் கூத்தாடுகிறார் –
—————————————————————————
அகளித நிஜ ராகாம் தேவி விஷ்ணோ: பதம் தத்
த்ரிபுவந மஹநீயாம் ப்ராப்ய ஸந்த்யாம் இவ த்வாம்
பவதி விபுத முக்தை: ஸ்பஷ்ட தாரா அநுஷங்கம்
பரிஸர பதிதைஸ் தே பாரிஜாதப் ப்ரஸூநை:—-347-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மிகவும் அன்புடன் உள்ளன.
அவனது திருவடிகள் சிவந்த வானம் போன்றுள்ளன. மூன்று உலகில் உள்ளவர்களாலும் வணங்கப்படுகின்றன.
நீ ஸந்த்யா காலம் போன்று உள்ளாய். ஆக அவனது திருவடிகள் உன்னை வந்து அடைகின்றன.
ஸந்த்யா காலம் அனைவராலும் தொழத்தக்கது என்பது முறை; அது போன்று உன்னை அனைவரும் தொழுகின்றனர்.
அந்த இரவுப் பொழுதில் தோன்றும் நட்சத்திரங்கள் போன்று தேவர்கள் உன் மீது சேர்த்த கற்பக மரத்தின் மலர்கள் உள்ளன.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி யாவரிடமும் ஆசை கொண்டது -அது உன்னை அடைந்த போது
உன் மீது தூவப்பட்ட பாரிஜாத புஷ்பங்களைச் சேர்த்துக் கொண்டு நஷத்ரங்ககளால் பிரகாசிக்கும் ஆகாயம் போலே விளங்குகிறது –
——————————————————————————-
வ்யஞ்ஜந்தி ஏதே விபவம் அநகம் ரஞ்ஜயந்த: ஸ்ருதீர்ந:
ப்ராத்வம் ரங்க க்ஷிதிபதி பதம் பாதுகே தாரயந்த்யா:
நாதைர் அந்தர் நிஹித நிகமை: நந்ததோத்யாந ப்ருங்கா:
திவ்யை: புஷ்பை: ஸ்நபித வபுஷோ தேவி ஸௌஸ்நாதிகாஸ் தே—-348-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைத் தரித்துக் கொண்டும், தேவலோகத்து மலர்களால்
ஸ்நானம் செய்விக்கப்பட்டும் நீ உள்ளாய். அந்த மலர்களில் உள்ள வண்டுகள் செய்யும் ரீங்காரம் உன்னிடம் அவை,
“ஸ்நானம் நல்லபடியாக ஆனதா?”, என்று கேட்பது போன்று உள்ளது. இப்படிப்பட்ட நந்தனம் என்ற வண்டுகளின்
வேத ஒலிகள் போன்ற நாதம் எங்கள் காதுகளை மகிழவித்தபடி உள்ளது.
இவை தோஷம் இல்லாத உனது பெருமையை மேன்மேலும் ப்ரகாசப்படுத்துகின்றன.
ஸ்ரீ பாதுகையே உன்னைப் பெருமாள் சாத்திக் கொள்கிற போது தேவர்கள் நந்த வனத்தில் இருந்து
அதிகமாகப் புஷ்பங்களை வர்ஷிக்கிறார்கள் –வண்டுகளும் கூட வந்து சப்தித்து அபிஷேகம் நன்கு ஆயிற்றா என
உன்னைக் கேட்டு உன் பெருமையை எங்களுக்கு விளங்க வைப்பது போல் இருக்கிறது –
——————————————————–
கிம் புஷ்பைஸ் துளஸீ தளை: அபி க்ருதம் தூர்வாபி தூரே ஸ்திதா
த்வத் பூஜாஸு முகுந்த பாது க்ருபயா த்வம் காமதேநு: ஸதாம்
ப்ரத்ய க்ராஹ்ருத தர்ப்பல்லவ தல க்ராஸ அபிலாஷ உந்முகீ
தேநுஸ் திஷ்டது ஸா வஸிஷ்ட பவந த்வார உபகண்ட ஸ்தலே—-349-
முகுந்தனின் பாதுகையே! உனக்காகச் செய்யப்படும் ஆராதனங்களில் மலர்கள் கொண்டு ஆவது என்ன?
துளசி தளங்கள் கூட வேண்டியதில்லை. அருகம் புல் கூட தூரத்தில் வைக்கப்படலாம்.
இவ்விதம் உன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்களிடம் எதனையும் எதிர்பாராமல், அவர்களுக்கு உனது கருணை
காரணமாக அனைத்தையும் அளிப்பவளாக நீ உள்ளாய். வசிஷ்டரின் காமதேனுப் பசுவும் கூட, புதிதாகக் கொண்டு வரப்பட்ட
தளிர் இலைகளுக்காகத் தனது முகத்தை நீட்டியபடி அல்லவா உள்ளது? எதனையும் எதிர்பராமல் உள்ள காமதேனு போன்று
நீ உள்ள போது வசிஷ்டரின் அந்தப் பசுவானது, அவரது வீட்டு வாசலிலேயே இருக்கட்டும் (நீ எங்களுக்கு இருந்தால் போதும்).
ஸ்ரீ பாதுகையே வசிஷ்டர் இடம் இருந்தும் காம தேனு ஒரு பிடி அருகம் புல்லை தினமும் அவரிடம் எதிர்பார்த்து
அதைப் பெற்று சகல பலன்களையும் தருவதாம்
நீயோ என்றால் எந்த சிறு பிரயோஜனத்தையும் எதிர் பாராது ஒரு புஷ்பம் கூட சமர்ப்பிக்காத
எளியவனுக்கும் சகல புருஷார்த்தங்களையும் அளிக்கிறாய்
——————————————————-
ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபி ஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்றை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.
ஸ்ரீ பாதுகையே பரமசிவன் தன சிரஸில் உள்ள கொன்றைப் பூவின் தூளியால் ஸூர்ணாபிஷேகம் செய்து
பிறகு கங்கை ஜலத்தால் உனக்கு அபிஷேகம் செய்கிறார் –
உத்சவ காலத்தில் ஸ்ரீ ரங்க நாதனுக்கு மஞ்சள் பொடியில் அபிஷேகம் பண்ணிப் பிறகு திரு மஞ்சனம் பண்ணுவது வழக்கம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply