ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதிமூன்றாவது திருமொழி —

அவதாரிகை –

இவள் தசையை அனுசந்தித்தார்க்கு -கால் நடந்து போகலாம் படி இராது இறே –
வருந்திப் போனார்களே யாகிலும்
இவளை ஒரு கட்டணத்திலே -strechcharil-கிடக்கலாம்படி பண்ணிக் கொடு போகவும் வேணுமே –
என் தசையை அறிந்து பரிஹரிக்கப் பார்த்திகோள் ஆகில்
அங்கே ஸ்பர்சம் உள்ளது ஒன்றைக் கொடு வந்து என்னை ஸ்பர்சிப்பித்து-
என் சத்தையை நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

நீ தான் மெய்யே நோவு பட்டாயோ-
இப்படி நோவு படக் கடவதோ –
உன் குடியை நோக்க வேண்டாவோ –
அவனுக்கு வரும் பழியை பரிஹரிக்க வேண்டாவோ -என்ன

நீங்கள் ஓர் பிரயோஜனத்துக்காகச் சொல்லும் வார்த்தை –
என் தசைக்குச் சேரும் வார்த்தை ஓன்று அல்ல-

என்னை உண்டாக்க வேணும் என்னும் நினைவு உங்களுக்கு உண்டாகில்
அவன் பக்கல் உள்ளதொன்றைக் கொடு வந்து
என்னை ஸ்பர்சிப்பித்து நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

————————————————————————–

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-

பதவுரை

கண்ணன் என்னும்–ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம்–கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி–காட்சியிலே
பழகி கிடப்பேனே–பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று–அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல–புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகு பேசாதே–பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில்–பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான
கண்ண பெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு–பீதாம்பரத்தைக் கொண்டு வந்து
வாட்டம் தணிய–(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே–என்மேல் வீசுங்கள்.

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கிருஷ்ணன் என்றால்
தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி
இப்போது அது தவிர்ந்து
மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது

கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் –
தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்-
பிரணயித்வம் போயிற்றே –

நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் –
முகம் தோற்றாமே நின்று-
வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்

கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து
ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்

கிருஷ்ணன் என்றால்
உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் –
முன்புத்தை  நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது

ஸ்வரூபம் மாறாடினால் –
ஆஸ்ரித பார தந்தர்யம்  -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ
இந் நிறம் எப்போதும் ஒக்க படு குலை அடிக்குமது தவிருகிறது இல்லை

கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது –
புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்

இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-
உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –
இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

காட்சிப் பழகிக் கிடப்பேனை-
முன்பு கண்ட காட்சியை ஸ்மரித்து-
அது கைம்முதலாக ஜீவித்துக் கிடப்போம் என்றால்
அதுவும் ஒண்ணாத படி அவ் வழி புல் எழுந்து போய்த்து-

கிடப்பேனை-
கிடந்த கிடையிலே பாடோடிக் கிடந்தாள் ஆகாதே —
புரள முடியாத படி
ஒரு பக்கமாகவே படுத்துக் கிடக்கும் என்னை –

என்று அகளங்க நாட்டாழ்வான் வார்த்தை -என்று அருளிச் செய்வர்

இப்போது அவனை அணைக்க வல்ல இவளுக்குத் தேட்டம் –
இடம் வலம் கொள்ளுகை யாய்த்து –

யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச-சோக பாரேண
சாக்ராந்தா சயனம் ந ஜஹூஸ்ததா
-அயோத்யா -41-20-என்று
சக்கரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் —
ஸ்ரீ கௌசல்யார் மங்களா சாசனம் பண்ணி விட்டார் –
அவ்வளவு இன்றிக்கே
பத்தொன்பதாம் பாஷையாய்த்து தோழன்மார் படி

ராமஸ்ய ஸூஹ்ருதஸ்-அந்தரங்கர் -நல்ல நெஞ்சுடையார் –
தாய் தமப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இறே-தோழன்மார் ஆகிறான்
தங்களைப் பேணாதே அவனுக்கு நன்மை எண்ணிப் போந்தவர்கள்

சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே

மூட சேதச –
ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில் –
அறிவு கலந்தால் செய்யுமத்தை
நெஞ்சில் வெளிச்சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே

அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என் –

சயனம் ந ஜஹூஸ்ததா-
படுக்கையை விட்டு எழுந்தார்கள் ஆகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ
தாம் தாமே படுக்கையில் கிடந்தது போந்தவர்கள் அன்றே

இவர்கள் வார்த்தையை ராமன் தட்ட மாட்டான் –
திரும்பிக் கொண்டு வந்தது போலே ஆகுமே –
அதனால் எழுந்து இருக்க வில்லை -என்றபடி
சோக வசத்தால் ஸ்வ ஸ்வ வசம் இல்லாதபடி கிடந்தார்கள் -என்றபடி –

புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே

புறம் நின்று
வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –
இதுவே அகம் –
-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே

அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி

இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –
மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை

பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –
காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-
அவனுக்கு நம்மை ஒழியச் செல்வதானாலும் நமக்கு அவனை ஒழியச் செல்லாதே –
நம் சத்தை அவன் அதீநம்
நம் சத்தை நோக்க வேணுமே –போகத்துக் காகில் இறே அவர் வேண்டுவது
சத்தை நோக்குகைக்கு அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஓன்று அமையுமே
அத்தைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பியுங்கோள்

அவன் தான் இத்தனை போது பசுக்களையும் விட்டுக் கொண்டு போகா நிற்குமே
பிறரை நலிகைக்காக தான் காட்டுக்குப் போகைக்கு உடைத்தோல் உடுத்து இறே போவது
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச் சறையினார் -திருவாய் -4-8-4-என்கிறபடியே
திருப் பீதாம்பரத்தை இட்டு வைத்துப் போம்
அந்த திருப் பீதாம்பரத்தைக் கொண்டு என் வாட்டம் தணிய வீசுங்கள் -என்கிறாள்

அரையில் பீதக வண்ண வாடை கொண்டு –
மேலிட்ட உத்தரியமானால் ஆகாதோ -என்று நஞ்சீயர் கேட்க —
ஸ்வேத கந்த லுப்தை -போலே காண்-
என்று அருளிச் செய்தாராம் –

என்னை வாட்டம் தணிய வீசீரே-
என்னையும் அவனையும் சேர்த்து போகத்தில் நிறுத்துங்கோள் என்றால் –
அது இப்போது உங்களால் செய்யப் போகாது இறே
ஆனாலும் வாட்டத்தை அகஞ்சுரிப்படுத்தலாமே -அத்தைச் செய்யப் பாருங்கோள் –

அவனுடைய திருப் பீதாம்பரத்தைக் கொடு வந்து என் மேலே பொகட்டு
என் சத்தையை நோக்கப் பாருங்கோள் –

————————————————————————-

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே--13-2-

பதவுரை

பால் ஆலிலையில்–பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட–கண் வளர்ந்தருளின
பரமன்–பெருமானுடைய
வலை–வலையிலே
பட்டிருந்தேனை–அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல்–வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே–உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய்–இடைப் பிள்ளையாய்
கோலால்–(இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து–பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த–திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி–குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு–பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென்–நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல்–என் கூந்தலிலே
சூட்டீர்–சூட்டுங்கள்

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
பாலாலிலையில் –
கதம் ந்வயம் ஸி ஸூ ஸ் ஸே தே லோகே நாசம் உபாகதே–
சாதாயாம் வடவ்ருஷச்ய பல்லவே
-பார -ஆர -188-94- என்கிற படியே-
பால் பாயும் பருவத்தை உடைத்தான இளம் தளிரிலே-
ஆலிலை மேலோர் இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் -பெரிய திரு -2-10-1-என்னக் கடவது இறே

துயில் கொண்ட –
யசோதை பிராட்டியுடைய தொட்டிலிலே ரஷகம் உண்டான இடத்திலே கண் வளர்ந்து அருளுமா போலே
கண் வளர்ந்து அருளினான் ஆய்த்து
சப்ரமாதமான ஸ்தலத்திலே -ஆலிலையிலே

பரமன் –
அகடிதகட நா சாமர்த்தியத்தில் வந்தால் -யசோதாஸ்தநந்யமும் ஒப்பன்று -வடதள சாயிக்கு –

பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -ஆலன்று வேலை நீருள்ளதோ
விண்ணதோ மண்ணதோ -முதல் திரு -69–திரு வவதரித்த போதே அனுகூலர் அஞ்சும் படி —
கண்ணனும் இவனது அகடிதகட நா சாமர்த்தியத்துக்கு ஒப்பல்லவே

வலைப்பட்டு இருந்தேனை –
பெரியாழ்வார் மகள் இறே –
பரிவர் இல்லாத இடத்தில் சாய்ந்தான் என்று அதிலே நெஞ்சை வைத்து இருக்கையாலே
கால் வாங்கிப் போக மாட்டாதே சிறைப் பட்டு இருந்தேனை –

வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
வேலைக் கொண்டு -உடலில் பாய்ந்த வேலின் மேலே என்றுமாம் –
ஸ்வ பிரயோஜன பரராய் இருப்பார்க்கு சொல்லுமா போலே சிலவற்றைச் சொல்லாதே
வேலால் துன்னம் பெய்தால் போல் -என்னுதல்
வேல் உள்ளே கிடக்க துன்னம் பெய்தால் போல் என்னுதல் –
புண்ணிலே புளியைப் பிரவேசிப்பித்தால் -எரியும் அத்தனை இறே –
இதாகிறது புண்ணைப் பெருப்பிக்கும் அத்தனை இறே –
எனக்கு ஓடுகிற தசை அறியாதே உங்களுக்கு பிரதிபந்தங்களைச் சொல்லாதே –

கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
அவனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சின எனக்கு
அவனுக்கு ரஷை உள்ள அளவும் சொல்லி பரிஹரிக்க வேண்டாவோ

அவன் தானே ரஷகனான செயலைச் சொல்லி அன்றோ என்னை பரிஹரிப்பது
ஷத்ரியனாய்ப் பிறந்து கையிலே வில்லைப் பிடித்து ரிஷிகளை நோக்கும் அவனைப் போல் அல்ல
கோலை கொண்டு பசுக்களையும் ரஷிக்கும் சுலபன் அன்றோ –

குடந்தைக் கிடந்த குடமாடி–
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே ஆரார் எனச் சொல்லி யாடும் -சிறிய திருமடல் -என்கிறபடியே
அவன் தன் வடிவு அழகை எல்லாரும் அனுபவிக்கலாம் படி-
சர்வ ஸ்வ தானம் பண்ணி
குடமாடின ஆயாசம் தீர திருக் குடந்தையிலே வந்து சாய்ந்தான் ஆய்த்து –

நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–
பசுமை மிக்கு இருந்த திருத் துழாயைக் கொண்டு —

இதுக்குப் பசுமை யாவது –
அநந்ய பிரயோஜனர் இடுமதாகை –
அதாவது பெரியாழ்வார் இடுகை –
வாயாலே மங்களா சாசனம் பண்ண
கையாலே இடுகை இறே

மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூம் துளவின் வாசம் -பெரிய திருமொழி -11-1-9-இறே
தொண்டர் –சீர்த்தொண்டர் –மிக்க சீர்த் தொண்டர்
தொண்டர் ஆகிறார் -கூழாட் பட்டவர்கள்
சீர்த் தொண்டர் ஆகிறார் -உபாசகர்
மிக்க சீர்த் தொண்டர் ஆகிறார் -பெரியாழ்வார் போல்வார்

பிரயோஜனாந்த பரர் இடுவது –தேஹி மே–ததாமி தே -என்கிற பாவ தோஷத்தாலே
பொறி எழுந்து வெந்து கிடக்கும்

நெறி மென் குழல் மேல் சூட்டீரே–
நெறித்து மிருதுவான குழல் -என்னுதல்
அன்றிக்கே –
பேணாக் குழல் என்னுதல் –

————————————————-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-

பதவுரை

கஞ்சை–கம்ஸனை
காய்ந்த–தொலைத்தவனாயும்
கரு வில்லி–பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும்–கடைக் கண்ணாகிற
சிறை கோலால்–சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ–நெஞ்சு முழுதும்
வேவுண்டு–வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து–நிலைமை குலைந்து
நைவேனை–வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன்–“பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன் -அப்பெருமான்
மார்வு அணிந்த–(தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை–வன மாலையை
வஞ்சியாதே–மோசம் பண்ணாமல்
தரும் ஆகில்–கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து–(அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில்–(என்னுடைய) மார்பிலே
புரட்டீர்–(நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
கஞ்சைக் காய்ந்த
வில் விழா என்று -ஒரு வியாஜத்தை இட்டு அழைத்து
தப்பு விளைந்தது என்று மாதுலனாய் கண்ண நீர் விழவிட்டு
இழவு கொண்டாடி இருப்பானாக கம்சன் கோல –
அவன் தன்னோடு போம்படி பண்ணினான்

கரு வில்லி –
ஆண் பிள்ளை அன்றியே பெண் பிறந்தாரை நலிகைக்கு வில் போலே இருக்கிற புருவத்தை உடையவன்
வில் விழாவுக்கு வில் கொண்டு வர வேண்டுமே

கடைக் கண்ணி என்னும் –
முழுக்கப் பார்ப்பது அந்ய பரரை இறே –
சோலையைப் பார்ப்பாரை போலே யாய்த்து அநந்ய பரரைப் பார்ப்பது –
பெருமிதமும் இனிமையும் தோன்ற கடைக் கண்ணால் –

தாத்ருஸ்ய கலு முக்த கண்டம பரான் பஸ்யந்தி ந ஸ்வீக்ருதான் –என்னக் கடவது இறே

கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால் –
புருவத்தை வில்லாகவும்
கண்ணை அம்பாகவும் சொல்லக் கடவதாய் இருக்கும் இறே

சிறைக் கோலால்-
சிறகை உடைய கோலால் –
கழி சிறை –அம்பு -துஷ்டன் -சிறகை உடைய கழி -சாடு –
வரும் போது தெரியாது
பட்டுக் கொடு நிற்கக் காணும் அத்தனை —
கண் கண்டு இறாய்க்க ஒண்ணாத படி இருக்கை
நோக்குகிறோம் -என்ற முழு கண் நோக்கிலே இறே கண்ணுக்கு எட்டாத படி போகலாவது
இவனோ கடைக் கண்ணால் அன்றோ சிறை கொண்டான் –

நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
நெஞ்சூடுருவ வேவுண்டு –
தோல் புரையே போமது அல்ல
நெஞ்சிலே பட்டு அவ்வருகே போய்த்து

நிலையும் தளர்ந்து
ஏவுண்டதின் ஏற்றம் எவ்வளவு போரும் என்னில்
நாலடி போய் விழுகை அன்றிக்கே நின்ற நிலையிலே விழும்படியாய்த்து-
அவனுடைய நோக்குவித்யை இருப்பது

சத்வித்யா நிஷ்டர் -தஹர வித்யா நிஷ்டர் என்னுமா போலே
அவனுடைய நோக்குவித்யா நிஷ்டர் இறே இவர்கள் –

நைவேனை-
சந்தி பந்தங்கள் -எலும்பு மூட்டுக்கள் குலைந்து சிதிலையாய் கிடக்கிற என்னை –

அஞ்சேல் என்னான் –
தன் முகமான அம்பு தைத்த உறைப்பு –தான் அறிந்தால் –
அஞ்சாதே கொள்-என்று வந்து அணைக்க வேண்டாவோ

தன் முகத்தில் உள்ள கண் -தன்னால் -சாடு

அவன் ஒருவன் –
தன் கையில் அம்பு பட்டவன் படுகிற நோவு கண்டு பொறுக்க மாட்டாதே –
சஞ்ஜாத பாஷ்ப —
கிஷ்கிந்தா -24-24- என்று கண்ண நீர் விழ விட்டானும் ஒருவன்
இது தானே போது போக்காக இருக்கிற இவனும் ஒருவன்

அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —
ஒரு மாலை பெற வேணும் என்று அல்ல இவளுக்கு நிர்பந்தம் –
அவனும் மால் தானே
அவன் மார்விலே ஆசைப்பட்டு இட்ட மாலை வேணும் என்றதாய்த்து

வஞ்சியாதே தருமாகில் –
நீங்கள் சென்று அறிவிக்கக் கொள்ள –
தன்னுடைய ஸ்மிதத்தாலும் வீஷணத்தாலும்-
நீங்கள் சென்ற கார்யத்தை மறப்பித்து வஞ்சியாதே தருமாகில்
உங்களையும் என்னைப் படுத்திற்று படுத்தாதே தருமாகில்

மார்வில் கொணர்ந்து புரட்டீரே —-
புண் பட்ட விடத்தே பரிஹரிக்க வேணும் இறே
நெஞ்சூடுருவ வேவுண்டு இறே கிடக்கிறது
அவன் தன்னுடனே பரிமாற நினைத்து ஆசைப் பட்டது எல்லாம்
மாலையில் இட்டுச் சொன்ன படி என் தான்

மாலையில் இட்டு –
பாசுரமாக சொல் மாலை இட்டு சம்ஸ்லேஷத்தை மறைத்து -என்றுமாம் –

——————————————————————————

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-

பதவுரை

ஆயர்பாடி–திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும்–கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு–ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க–ஹிம்ஸிக்க
உழக்குண்டு–(அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை–பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து–இவ் வுலகத்திலே
ஆற்றுவர்–தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே–ஆருண்டு (யாருமில்லை)

ஆரே யுலகத் தாற்றுவார் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருப்பார்க்குத் தான் –
ஸ்ரீ சீதா பிராட்டியால் தான் என்னை -ஆற்றப் போமோ –

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா–சுந்தர -19-4-என்றும்
ஏதத் வ்ரதம் மம-என்றும்
அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ் யே-யுத்த -5-93-என்றும் சொல்லுகிறபடிகளை
அறிந்து இருக்குமவள் ஆகையால் தரித்து இருந்தாள்

ஆசாலேசம் உடையாரை ஒரு நாளும் விடேன் -என்றும்
அவர்களை விட வேண்டிற்றாகில் நான் உளேன் ஆகேன் –என்றும் இறே அவர் சொல்லி வைப்பது

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்–ஆரண்ய -10-19-என்று இருக்குமவர் இறே
லஷ்மணஸ்ய ச தீமத
அவர் தம்முடைய சொல்லாலே -மாயா மிருகத்தின் பின்னே -அது மாயை என்று அறியாதே
பிடிக்க ஒருப்பட்ட போதும் -இது மாயா மிருகம் என்று சொல்லும் படி அவ்வளவிலும் தெளிந்து இருக்கும்

இளைய பெருமாள் படியை அறிந்து இருக்கையாலும்
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ-என்று
அவர் தலையாலே சுமக்கும் படி -கொண்டாடும்படி -வல்லபையாய்ப் போந்தவள் ஆகையாலே
ஷோப ஹேதுக்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் ஷூபிதை யாய்த்து இலள்-

சத்தா நாசம் பிறக்கும் அளவாய் இருக்கச் செய்தேயும் தரித்து இருந்தாள்
கங்கேவ ஜல தாகமே

நிரந்தரமாக வர்ஷதாரை விழா நிற்கச் செய்தேயும் கங்கை தெளிந்து இருக்குமா போலே –

ஆயர் பாடி கவர்ந்துண்ணும்-காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ராமாவதாரத்தில் குண ஜ்ஞானத்தால் தரித்து இருந்தால் போலே இருக்கப் போமோ –
கிருஷ்ணனுடைய தீம்பிலே புண் பட்டவர்களுக்கு
பஞ்ச லஷம் குடி உண்டு இறே திருவாய்ப்பாடி
அஞ்சு லஷம் குடியில் பெண்கள் பக்கல் பண்ணும் வ்யாமோஹத்தை எல்லாம் ஒரு மடை செய்து
ஒருத்தி பக்கலிலே பண்ணினால் பிழைக்கப் போமோ –

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை-
அவன் கண்ணற்று துகைத்துப் பரிமாற –
அத்தாலே சந்தி பந்தங்கள் குலைந்து –
இனி ஒரு அவயவி யாக்கிக் காண ஒண்ணாது -என்னும் படி மங்கிக் கிடக்கிற என்னை –

ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–
இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்
மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்
அதனால் பட்ட புண்களை ஆற்றவும்

ஆராவமுதம் அனையான் -கண்ணன் —
விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு

மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது
எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ –
அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –

புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–
இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி
உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்

அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே –
அது செய்ய ஒண்ணாத பின்பு
இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்
வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

———————————————————————————

எனக்கே கூறாய் இருக்குமது கிடையாதாகில் –
வெறும் தரையிலே போகிறவற்றையாகிலும் கொடு வந்து
ஆஸ்வசிக்கப் பாருங்கோள் -என்கிறாள்

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –13-5-

பதவுரை

அழிலும்–அழுதாலும்
தொழிலும்–தொழுதாலும்
உருக்காட்டான்–தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன்–(உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன்–ஒரு மஹாநுபாவன் (கண்ணன்
புகுந்து–இங்கே வந்து
என்னை தழுவி முழுசி–என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று–முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான்–போகாமலிருக்கான்
ஆல்!–இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய்–பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே–பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால்–வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற–ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய்–புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு–நீரைக் கொணர்ந்து
முகத்து–என்னுடைய முகத்திலே
குளிர தடவீர்–குளிர்த்தியாகத் தடவுங்கள்

அழிலும் தொழிலும் உருக்காட்டான் –
ஏதேனும் ஒன்றை பிரயோகிக்கிலும் உருக் காட்டு கிறிலன்-
ப்ரஹ்மாஸ்த்ர பிரயோகம் பண்ணிலும் உருக் காட்டு கிறிலன் –

அழிலும் –
கண்ணநீர் விழுந்த அளவிலும் தன்னைக் காட்டுகிறிலன்-

தொழிலும் –
அதுக்கு அவ்வருகே ஒரு நிலை நின்றாலும் தன்னைக் காட்டுகிறிலன் –

தொழிலும் உருக்காட்டான் –
தொழுதார்க்கு ஸ்வம்மோ தான் இவ் வஸ்து –
பக்தா நாம் -என்று இருக்கிற வடிவைக் காட்டுகிறிலன் –
அவனுடைய ஆத்மாபஹாரம் இருக்கிற படி
சோரேண ஆத்மா அபஹாரிணா – பார உத் -42-35- என்னக் கடவது இறே-

பக்தி பிரபத்திகள் இரண்டுக்கும் வாசி அறுத்தார்களும்
விக்ரஹமே உத்தேச்யம் என்னும் இடத்தை வெளியிட்டார்களும் ஆழ்வார்கள் இறே
இப் பக்தி தான் கர்த்தவ்யமாய் —
சாதனா புத்த்யா பண்ணுகை அன்றிக்கே தன்னடையே தவிர ஒண்ணாததாய் வரும் அது என்றும்
விக்ரஹத்துக்கு அவ்வருகு தேட்டம் அன்று என்று அறியும் படி பண்ணினார்கள் இவர்கள் இறே
ஆகையால் இறே காமினிகள் பாசுரத்தை ஆசைப்பட்டு அம் முகத்தாலே அனுபவிக்கிறது

அழிலும் தொழிலும்
பக்தி பிரபத்திகள் என்றபடி –

மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் என்று இருக்கும்
இவளுக்கு சொல்ல வேண்டா விறே –

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்-
பிள்ளைகாள் பிறர் படி அறியாது ஒழிகிறார்
வேணுமாகில் தன் படி -திருமேனியை -தன்மையை -அறியாமை இல்லையே –
நம்மைப் பிரிந்தார் தரிக்க மாட்டார்கள் -என்று கடுக வந்து அணைத்துக் கொண்டு நிற்க வேண்டாவோ இவனுக்கு –

அவன் ஒருவன் –
ராமாவதாரத்தில் வ்யாவ்ருத்தி மூன்றாம் பாட்டில் சொல்லிற்று
கிருஷ்ணாவதாரம் தன்னையும் வ்யாவ்ருத்திக்கிறது காணும் இப்போது
கண்ணன் என்னும் கரும் தெய்வம் -என்கையாலே
ஒரு உக்தி மாத்ரமாய் —
முதன்மையே
பரத்வமே யாய்த்து நிலை நின்று போருவது-

தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழுவி –
தனக்கு பிரிவால் உண்டான விடாய் எல்லாம் மாறும் படி சர்வாங்க சம்ஸ்லேஷத்தைப் பண்ணி

ஸூ காடம் பரிஷச்வஜே -ஸ்ரீ விஷ்ணு -5-18-2-என்கிறபடியே
அக்ரூரனைக் கண்டது இல்லை என்று சொல்லும் படி தழுவிக் கொண்டானே

முழுசி –
அத்தை விடா –
அந்த அணைப்புக்கு பின் ஓர் அவயவத்திலே நின்று சுழி சுழிக்குமாய்த்து –
மூக்காலே உச்சி மோந்து கேச பாசத்திலே அகப்பட்டு மீள முடியாமல் இருக்க ஆசைப்படுகிறாள்

புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று
இது விட்டு புறம்பு போகமாட்டாமையாலே சூழச் சூழ

வந்து
அங்கு வாரா நிற்கும்
போகானால்
இது தனக்கு போக்கு விட்டு அல்லது தரிக்க ஒண்ணாமை யாலே புறப்பட்டு போகா நிற்கும்

இது வாய்த்து சம்ஸ்லேஷ க்ரமம் இருக்கும் படி –
இப்படி செய்கிறிலன் -என்னுதல்
அன்றிக்கே –
உருவு வெளிப்பாட்டாலே நலிந்து விட்டுப் போகிறிலன் என்னுதல்-

தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
தழைகளும் தொங்கலும் ததும்பி -பெரியாழ்வார் -3-4-1-என்கிற பாட்டின்
படியே யாய்த்து வந்து தோற்றும் போது இருப்பது

தழை -பீலி
பசுக்கள் வரும் போது முற் குழையிலே வரப் பெராதே
கடைக் குழை இலே யாய்த்து வருவது –பின்னே -என்றபடி
பகலில் பசுக்களின் பின்னே போன விடாய் எல்லாம் தீரும் படி –
சோலை செய்து கொண்டாய்த்து வருவது

பெரும் குளம் கலங்கினால் போலே காணும்
அத்தனை போதும் பெண்கள் படும் அலமாப்பு காண்கைக்காக-

நெடுமால்
ஒரு தாய் தமப்பனுக்கு பிறக்கையாலே-அவர்கள் சொல்லிற்றுச் செய்யப் போனேன்-

பிரியேன் பிரியில் தரியேன் -என்று
இவர்கள் தானே சென்று அணைக்க வேண்டும் படி தனது வ்யாமோஹம் எல்லாம்
குழலின் த்வநியிலே தோற்றும் படி யாய்த்து குழலூதுவது –

குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –
இது தன்னையும் புதைத்து விட வேண்டும்படி போலே காணும் இவளுக்கு –

புதைத்து –
குறைவாக -விரலாலே மூடி-
அந் நீரைக் கொடு வந்து தடவி என் இளைப்பை நீக்கி கொடு நிற்கப் பாருங்கோள் –

—————————————————————————–

நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –13-6-

பதவுரை

நடை ஒன்று இல்லா உலகத்து–(ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும்–ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
குளப்புக்கூறு கொளப்பட்டு–மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன்–அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு,)
போட்கன்–சுணை கேடனான அக் கண்ண பிரான்
கொடி–இரக்க மற்றவனாய்
கடிய–ஸ்வார்த்த பரனான
திருமாலால்–ச்ரிய, பதியாலே (கண்ணனாலே)
நான்–அபலையான நான்
மிதித்த அடிப்பாட்டில்–திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான்–ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து-கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள்–வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்.

நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
லோகத்தில் மரியாதை எல்லாம் குலைந்து யாய்த்து கிடப்பது –
அதுக்கு மேலே ஓன்று பத்தாய்க் குலைந்தாய்த்து இவனைத் தோற்றி
அதுவெல்லாம் நிலை நின்றதாம் கிடீர் இவ்வளவிலே வந்து என் முகத்தில் விழிக்கப் பெறில்

நந்த கோபன் மகன் என்னும்
அவன் வயிற்றில் இவன் ஒருவன் எங்கனே வந்து தோற்றின படி
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் -என்று
அவர்கள் பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருப்பதும் இவரையே

நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின் -12-3–என்று
ஆற்றாமை கரை புரண்டால் பொகடச் சொல்வதும் அவர் வாசலிலே
ஸ்ரீ நந்தகோபரும் சிறியாத்தான் போலே பரம தார்மிகராய் இறே இருப்பது –

கொடிய –
அவ்வளவு அல்ல -ஸ்வ கார்ய பரன் –
கண்ணன் மீது வெறுப்பு அவன் பெற்றோர் மீதும் ஏறிப் பாய்கிறது

கடிய –
பிறர் நோவு அறியான்

திருமாலால்-
பெற்றவர்களும் அங்கனே யாய் –
அஞ்ச உரப்பாள் ஆணாட விட்டிட்டி இருக்கும்
-3-9-
வளர்ந்தவர்களும் இங்கனே யானால் –
பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே
-13-7- நாம் இவனை வெறுக்கிறது என்

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -பெரிய திருமொழி -8-10-1—
பெரிய பிராட்டியாரும் கொடுமையும் கடுமையும் மிக்கவனாக வளர்த்தாளே என்றபடி –
இழவேயாய் போருகிற பிரகரணம் ஆகையாலே –
பேற்றுக்கு பரிகரமாகச் சொல்லுமவற்றை எல்லாம் இழவுக்கு பரிகரமாகச் சொல்லுகிறாள்

அருளாத திருமாலார்க்கு -என்னக் கடவது இறே-
நம்மாழ்வாரும் பெரிய பிராட்டியாரை வெறுத்தாரே –

இதுக்கு –அருளாமைக்கு –
புருஷகாரமாக அனுசந்திக்கிறார் -என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி –

பிள்ளானை இதுக்கு கருத்து என் என்று நான் –நஞ்சீயர் -கேட்டேன் –
இப்படி நம்மை நலிகைக்கு குருகுல வாசம் பண்ணிற்று அவளோடு அன்றோ –என்று பணித்தார் –
இத்தை பட்டருக்கு விண்ணப்பம் செய்தேன்
பேற்றுக்கு அடி அவள் என்று இருந்தால் –
இழவுக்கும் அடி அவள் அவள் என்று வெறுத்து வார்த்தை சொல்ல தட்டுண்டோ என்றார் என்று

நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –

குளப்புக் கூறு கொளப்பட்டு-
கீழே காரேறு உழக்க உழக்குண்டு--13-4- என்றது இறே-
புறம்பு போக்கில்லாமையாலே துகைத்த இடம் தன்னிலே துகைக்கும் அத்தனை யாய்த்து –
இவளுக்கும் வேறு புகல் இல்லை –
அந்த காளைக்கும் துகைக்க வேறு ஆள் இல்லை என்றபடி –

புடையும் பெயரகில்லேன் –
இப்போது இவளுக்கு அவனைக் காண்கை அன்றாய்த்து தேட்டம் –
தான் இடம் வலம் கொள்ளலாய்த்து —

நான் –
நைவ தம்சான் ந மசகான் –
அவனும் புடை பெயரு கிறிலன் என்று சொன்னார் உண்டாகில் இவள் நோவு படாள் போலே-
ராமன் போலே அன்றே –கண்ணன் அப்படி நோவு படாத சுணை கேடன் அன்றோ
அது செய்யாத போட்கனாய்த்து இவன் –
நம்மை இப்படி நோவு படுத்தி வைத்து இன்னமும் சிலரை நோவு படுத்தப் போகா நிற்குமாய்த்து –

போட்கன் மிதித்த வடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –
அங்கு போகிற இடத்தில் அவர்களை வசீகரிக்கும் போது
இப்பொடி கொண்டு கார்யம் இல்லை இறே அவனுக்கு –

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –2-4-என்றபடி
அம்மான் பொடியே போதுமே

நான் சொல்லுகிறவற்றைச் செய்யுங்கோள் –
பொடி படத் தீரும் –
அவ்வடிப் பாட்டில் பொடியைக் கொணர்ந்து பூசப் பாருங்கோள் –
அவனது ஒரு வழியாய் இருக்கும் இறே –
பெண்கள் இருக்கும்
இடம் தேடி துன்புறுத்துவதே அவன் வழி
இவளுக்கும் அது தானே இறே வழி –
அவன் அடிச் சுவட்டில் பொடியைத் தேடித் போகும் வழி இவளது –

போகா யுயிர் என்னுடம்பையே —
சஸ்திர விஷாதிகள் தாரகம் ஆவதே இவ்வுடம்புக்கு
அன்யார்த்தமாக நோக்கி இருக்க வேண்டுவார்க்கும் தாம்தாம் முடிய விரகுண்டோ நினைத்த படியே
விஷஸ்ய தாதா-சுந்த -28-16–
இவ்வளவிலே விஷத்தைத் தந்து நோக்குவான் ஒரு உதாரனைக் கிடையாதே –
சச்த்ரஸ்ய வா -சஸ்த்ரம் தருவாரைப் பெற்றதாகில் தான் பொல்லாதோ –
அசோகா வனத்தில் சீதா பிராட்டி விஷமோ சஸ்த்ரமோ தருவார் இல்லை என்று குறிப்பட்டது போலே –
இவளும் படுகிறாள் இங்கே –
ஜிஜீவிஷேயம் யாவத் பிரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியச்ய -சுந்தர 36-30-
பெருமாள் என்னை மீட்கச் செய்யும் முயற்சியை கேள்விப்படும் வரையில் உயர் வாழ்வேன் என்றாளே

————————————————————————————-

ந ஜீவேயம் ஷணம் அபி -என்று
மேல் விழுந்து வந்து அணைந்திலன் ஆகிலும்
எனக்கு பரபுத்யதீனமாக வாகிலும் அவனை அணையப் பெறில் அமையும் –
ஆன பின்பு அத்தைச் செய்யுங்கோள் என்கிறாள்-

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –13-7-

பதவுரை

கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து–பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய
எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில்
(எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய்–அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே–ஒருவர்க்கும் பயனின்றியே,
(பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே–வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான்–வளர்த்து வாரா நின்றான்.
குற்றம் அற்ற–(அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை–(என்னுடைய) ஸ்தநங்களை
குமரன்–யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு–அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே,
அற்ற குற்றம் அவை தீர–(என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர்–அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து-
தன்
தன் ஆஜ்ஞ்ஞையாலே சர்வத்தையும் கீழ்ப்படுத்தி
விஜய த்வஜம் எடுத்து இறே இருப்பது –

அம்மரியாதை –
தன்
ஸ்வா தந்த்ர்யமும் என்னுடைய பாரதந்த்ர்யமும் –
குலைய வன்று கார்யம் பார்க்கிறது –
தன்னுடைய ஆஸ்ரிய பாரதந்த்ர்யமோ
பிரணயித்வமோ தோற்றும்படி கார்யம் செய்வது இல்லை -என்றபடி –

ஈஸ்வர ஆஜ்ஞை தான் நின்ற அளவும் வர நடக்கிறது இறே –
அன்புக்கு உரியவளாய் இருந்தாலும் தன்னையும் கட்டுப்படுத்துமே

அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஈங்கோர் பெண்பால் பொருளோ எனும் இகழ்வோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ –திருவிருத்தம் -33–என்று
பராங்குச நாயகியும் அருளிச் செய்தாள் அன்றோ

பீஷாஸ்மாத் வாத பவதே -என்றும் —
மேகோதயஸ் சாகர சந்நிவிருத்தி
-என்றும் சொல்லுகிறபடியே-
தன் ஆஜ்ஞை தான் ஒருவரால் அதிக்கிரமிக்க ஒண்ணாத படி இறே நடத்துவது –

மீ மீ தாடா வுலகத்து-
தன் மேன்மைக்கு மேலே போகக் கடவது அன்றிக்கே இருக்கிற லோகத்திலே
மீது -என்று மேல் –
கருளக் கொடியான் தன் மேன்மைக்கு மேலே ஓன்று இல்லாத லோகத்திலே –
முதல் மீது -மேன்மையை குறிக்கும் –
அடுத்த மீது -மேல் என்றபடி –

வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
பிரயோஜன நிரபேஷமாக பிறருக்கு அனர்த்தத்தை விளைப்பார் உண்டாகாதே

வெற்றே வெறிதே வீப்சையால் —
பர அனர்த்தமேயோ இதுக்கு –
மற்றும் ஏதேனும் பிரயோஜனம் உண்டோ

நந்த கோபன் மகன் என்னும் –
பெற்ற தகப்பனை வெறுத்தாள் கீழ்ப் பாட்டில்

இங்கு பெற்ற தாயாரை வெறுக்கிறாள்
அவனை வெறுக்கிறது என் –
அவனுக்கு ரஷ்ய வர்க்கம் பரப்புண்டே -பசுக்களை நோக்க வேணும் இறே அவனுக்கு

ரஷணத்தில்-அந்ய பரனே அவன் –
நம்மே பாதி யன்றே அவனும் -கூடி இருந்த போது இவனைத் திருந்தாமல் விட்டது போலே – –
அவனை நோக்குகையே பணியாய் இருக்கும் இவளைச் சொல்லீர்
இவள் அவனைக் கட்டுவது -அடிப்பதாக –
அவனும் அழுவது முலை உண்பதாக புக்கவாறே இவள் பெற்றவள் ஆகாதே என்று இருந்தோம்

இப்போதைச் செயலைப் பார்த்தவாறே
வளர்த்துக் கொள்ளி யாகாதே -செவிலித் தாய் –
என்று தெளிவாகத் தெரிகிறதே -என்று தோற்றி இரா நின்றதே

வேம்பே யாக
வேம்பும் கரும்புமாக வளர்க்கை அன்றிக்கே வெறும் வேம்பேயாக வளர்த்தாள்
அவன் வேம்பானது வளர்த்த பொல்லாங்கு என்று இருக்கிறாள் –
அவனை இன்னாதாகிறது என் –
இவள் அன்றோ இப்படி வளர்த்தாள் –

அவன் வாராது ஒழிகிறான்–
இழவு உன்னது –
நடுவே பெற்ற தாயை இன்னாதாகிறது என்-என்ன

குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு-
என் பக்கல் தான் குற்றம் உண்டோ –
அவன் வேம்பானால் –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது
-பெரிய திருமொழி -11-8–7- என்று இருக்கும் முலை-

அவரைப் பிராயம் தொடங்கி துவரைப் பிரானை ஆதரித்து எழுந்த என் தட முலை –-1-7–என்றும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- முலை அன்றோ

அநசூயை பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீக்கு பரதேவதை பர்த்தாவே கிடீர் –என்ன
அது கொடு கார்யம் என் -பெருமாள் குணவான்களாய்க் கெட்டேன்-
நமக்கு அவர் பக்கல் உண்டான நிருபாதிக ஸ்நேஹம் சோபாதிகமாய்த் தொடரா நின்றது இறே

குணங்களை வ்யதிரேகித்து-அந்த தர்மியை பிரதிபத்தி பண்ண ஒண்ணாமை யாலே –
ஸ்வரூப க்ருத பக்தியை அருளிச் செய்தால் இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வற்றோ இம்முலை
இதுவே குற்றம் அற்ற முலை -என்றது

குமரன் –
இம்முலைக்குத் தக்க பருவத்தை உடையவன் –

கோலப் பணைத் தோளோடு–
நெஞ்சாய்த்துப் பொய்யாய் இருப்பது –
தோளுக்கு குற்றம் இல்லை
அணைத்தே நிற்க வேண்டும்படியாய் இருக்கும்
பிரிந்து இருக்கும் போதும் -இவளோடு கை செய்து வைத்த படி –
கையாலே அணைத்து -அலங்கரித்து என்றுமாம் –
இப்போதும் கோலப் பணைத் தோள்-என்னும் படி இறே –

அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –
அத் தோளோடு அற்றதாயிற்று இம் முலைகள்-
இங்கே குடி இருப்பாய் –
அங்கே க்ருத சங்கேதமாய் யாய்த்து இருப்பது இவை –
என்னைக் கூடாதே அங்கே அற்ற குறை தீரும் படி –
அதைப் பிரிந்து இருப்பதுள்ள குறை தீர -என்னும் படி –

அணைய வமுக்கிக் கட்டீரே —
அணைய என்றால் அவன் தான் இறாய்க்கும் போலே காணும்-

அணைய
பின்பு அமுக்கி
நிர்பந்தம் பண்ணி என்ற படி

உஷையையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டால் போலே
அத் தோளையும் இம்முலைகளையும் கூட விலங்கிட்டு வைப்பாரைக் கிடையாதோ
ஆனவளவும் இறே மீட்கப் பார்ப்பது –
சத்தா ஹானி பிறக்கும் அளவில் பின்னிச் சேர்க்கை பித்ராதிகள் தங்களுக்கு பரமாய் இருக்கும் இறே
பிரிந்தால் உயிர் துரப்பாள் தசை என்று அறிந்த பின்பு சேர்த்து வைப்பது தாய் தந்தையர் பொறுப்பு அன்றோ —
அணைய அமுக்கிக் கட்ட குறை இல்லை-

—————————————————-

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

பதவுரை

உள்ளே உருகி நைவேனை–உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத–“இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி–என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை–(பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை–கண்ணபிரானை
கண்டக்கால்–(ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத–(ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான்
கொங்கை தன்னை–(என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு–வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து–அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை–என் துக்கத்தை
தீர்வேன்–போக்கிக் கொள்ளப் பெறுவேன்

உள்ளே உருகி நைவேனை –
அகவாயில் ஓட்டம் அறியாமே தான் இருக்கிறானோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவான் அன்றோ
ஆறுகளும் குளங்களும் நிரம்பினால் மிக்க நீராய்த்து வழிந்து போவது –
அப்படியே செயலாலும் சொல்லாலும் அறியலாய்-விசும்பலாய் –
அகவாய் சைதில்யம் பேச்சுக்கு நிலம் இல்லை

உளளோ இலளோ என்னாத-
பிரணியத்வம் குடி போனால்- நீர்மையும் குடி போக வேணுமோ –
(ப்ரீதி / அன்பு -தகப்பன் பிள்ளை / தாய் பிள்ளை / கணவன் -மனைவி / நாயகன் நாயகி அன்பு -வேறு வேறு நிலை அன்றோ /
நீர்மை -எளிமை -ஸ்வ பாவம் அன்றோ ஸுலப்யம் )

கொள்ளை கொள்ளிக் குறும்பனை –
என் பக்கல் தயை பண்ணத் தவிர்ந்தால்
என்னிடை யாட்டம் ஆராயாது ஒழிந்தால் ஆகாதோ-
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வேணுமோ –
(கொள்ளை கொள்ளி -குறும்பன் -இரண்டு விசேஷணங்கள் )

குறும்பனை
ஸ்ரீ நந்த கோபன் தம்முடைய விஷயத்திலே குறும்படித்து
மூலையடியே திரிகைக்கு ஒரு பிள்ளை பெற்று விட்டானாய்த்து –

கோவர்த்தநனைக்
பெண்களை வெறும் தரையாக்கும் –
பசுக்களை ஓன்று நூறாயிரம் ஆக்கும்

கண்டக்கால்-
அவன் பசுக்களின் பின்னே கை கழியப் போகையாலே-காண்கை தான் அரிது –
வருந்திக் காணப் பெற்றதாகில் –
(சிறு காலே ஒறுப்படுத்தி -பசு  மேய்க்க சென்று -எல்லியம் போதாக வருவான் )

கொள்ளும் பயன் ஓன்று இல்லாத -கொங்கை தன்னைக்-
அவன் பசுக்களின் பின்னே போகையாலே
இம் முலைகளைக் கொண்டு கொள்ளுவது ஒரு பிரயோஜனம் இல்லை யாய்த்து

கொங்கை தன்னைக் கிழங்கோடும்
விவேகமுடையராய் இருப்பார்-இதுக்கு ஓர் ஆஸ்ரயமாய் இருப்பதொரு – வேர் முதல் கொங்கைக்கு கிழங்கு –என்று
சொல்லப் படுவது இவளுடைய ஆத்ம வஸ்துவையே யாகும் –
அதுவே நித்யம் -அழியாத தொன்று என்று இருப்பார்கள் இறே
பிடித்து ஏறிய முடியாத அத்தை எறிவேன் என்று சொல்லும் படி அன்றோ இவளது ஆற்றாமை

ஸ்வாபதேசத்தில்
கொங்கை -பக்தி
-அதுவே பரமாத்மாவுக்கு போக்யமானது –
அச்சேத்யம் அதாஹ்யம் -என்று சொல்லுகிற-
(வெட்டவோ எரிக்கவோ உலர்த்தவோ நினைக்கவோ முடியாது என்பான் ஸ்ரீ கீதையில் )
அது தன்னோடு பறித்து எறியப் பார்க்கிறாள் –

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–
அவன் மார்விலே கிடக்கிலும் தன்னைப் படித்திற்றுப் படுத்தும் அவனையும் என்று இவற்றை உபேஷித்து-
பறித்து எறியும் போதும் விழும் தரை அவன் மார்வாக வேணும்

என் அழலைத் தீர்வேனே
அவன் தானே விரும்பி வந்து அணைக்கும் போது இறே போகத்துக்கு உடலாவது-
இப்போது ஓடுகிற கிலேசத்தைத் தவிர்க்கலாம் இறே –

———————————————————————————–

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு -என்கிறது என்
அது தனக்கு ஆஸ்ரயமாய் இருப்பதோர் ஆத்ம வஸ்து உண்டானால்
அதுக்கு அவ்வருகே போய் பெறலாவதோர் அனுபவம் உண்டே –
அந்தர்யாமியை அனுபவிக்கலாகாதோ
அத்தைப் பெறப் பார்த்தாலோ என்ன
பெற்ற இவ்வுடம்போடே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் அத்தை விட்டு
அவ்வருகே போய் சாதன அனுஷ்டானம் பண்ணவோ –

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-

பதவுரை

கொம்மை முலைகள்–(எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல்–குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே–(அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும்–(என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று–(நல்லது)
ஒரு நான்று–ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய்–இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும்–செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?–தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி–என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி–மெய்யே சொல்லி
விடை தான் தருமேல்–“நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று–அது உத்தமோத்தமம்.

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
சமைய வளர்ந்து -ஷம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்று அலைக்குமா போலே
எனக்கு அடைத்த விஷயத்தைக் காட்டு காட்டு என்று நெருக்குகிற இவற்றின் இடரானது தீரும்படி –

இவற்றினுடைய இடர் தீர்ந்ததாவது –
கோவிந்தனுக்கு ஆனாலாய்த்து

அல்லாத போது இவளுக்கு நெஞ்சடையாம்- -சாடு -அத்தனை

கோவிந்தற்கு –
பாதகமே -நெஞ்சடைப்பதே –

ஸ்ரீ வைகுண்ட நாதனுக்காக என்ன ஒண்ணாது
பசுக்களின் பின்னே திரியும் அவனுக்காகவே வேணும்

ஓர் குற்றேவல்
முலை எழுந்தவளுடைய குற்றேவல் இறே –
தம்தாமுக்கு அடைத்த கரணங்களைக் கொண்டு பண்ணும் கைங்கர்யம் இறே தானே குற்றேவல் –

இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே
இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே

இனி அவ்வருகே போய்
ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-
பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள்
பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –

செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும்
அணைக்கப் புக்கால் இறாயாத மார்வாய்த்து –
அம் மார்வோடே சேர்த்து அணைக்கை யாய்த்து பேறாவது
அது செய்திலனே யாகிலும்
ஏலும் -நடைபெறாது என்ற சங்கை தொனிக்கும்

ஒரு நான்று- மெய்ம்மை சொல்லி
என்றும் ஒக்கப் பொய்யே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் உண்டோ
ஒரு நாள் மெய் சொன்னால் ஆகாதோ –

ஏலாப் பொய்கள் உரைப்பானை –14-3-என்பாள் மேலே –
இப்போது பொய் சொல்லுகை யாவது –
அருகே இருக்கச் செய்தே பிரிய நினைக்கை
அகவாய் அங்கனே செல்லா நிற்க –
நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே சொல்லுகை –

முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–
நேர் கொடு நேர் முகம் பார்த்து –
எனக்கு உன் பக்கல் ஆதரம் போராது-உன்னை உபேஷித்தேன் -நீ போ -என்று
நம் போக்கை அனுமதி பண்ணுமாகில்-அது மிகவும் நன்று

சேர்த்தானேல் நன்று —-விடை தான் தருமேல் மிக நன்று
தன்  மார்வோடே அணையும் படி சம்ஸ்லேஷித்தான் ஆகில் நன்று -அழகிது
நீ வேண்டா போ என்று முகத்தைப் பார்த்து அனுமதி பண்ணி விடுமாகில் மிகவும் நன்று

கலக்க வேணும் என்று ஆசைப் பட்டால்
பின்னையும் இருந்து நோவு பட்டு சம்ஸ்லேஷத்தை ஆசைப் படுக்கைக்கு உடல் இறே
நீ வேண்டாம் என்றால் முடிந்து பிழைக்கலாமே

பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே இருப்பது ஓன்று இறே இது
கேவல துக்கமேயாய் முடிவுக்கு ஹேதுவாயிற்றே
வண்ணான் சொன்னான் என்று கர்ப்பிணியாய் பிரிந்த பிரிவு -மறுபடியும் சேர இடம் இல்லாத படி யாயிற்றே

—————————————————————————————

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே--13-10-

பதவுரை

வில்லை துலைத்த–வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள்–புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நக் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை–ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான
பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்,
அல்லல் விளைத்த பெருமானை-(திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை–திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று–ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை–மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள்–புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள் -ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார்–துவண்டு நோவு படமாட்டார்கள்.

அல்லல் விளைத்த பெருமானை –
பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று
திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு –
மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து
திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி
ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்
பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று
சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –

ஆயர்பாடிக்கு அணி விளக்கை
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ராம குணங்கள் வேம்பாய்
இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து
அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்

வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி
அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடைய வாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தை
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல் -என்று தோற்றும் படி இருக்கை –

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–1
இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்

சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading