(ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள் பிரவேசம் –
கீழ்த் திருமொழியில் மண நீர் மஞ்சனமாட்டும் அளவும்
கனாக் கண்டதாகச் சொல்லப் பட்டு இருந்தாலும்
அதுக்கு அடுத்தபடியாக சம்ச்லேஷமும்
ஸ்வப்ன அனுபவகமாகத் தானே நடந்து ஏறியதாகக் கொள்ள வேணும்
அவ்வனுபவத்திலே கண்ணபிரான் உடைய திருவவதரத்தின் அமுதத்தைப் பருகப் பெற்ற ஆண்டாள்
கண் விழித்துக் கொண்டவாறே
அந்தோ இத்தகைய அனுபவம் கனவாகக் கழிந்ததே
மெய்யே அனுபவிக்கப் பெற்றதாக நினைத்துக் களித்து இருந்தேனே
தெய்வம் இப்படியா நம்மை வஞ்சித்தது
என வருந்தினாள் –
கண் உறக்கம் கொள்ளாமல்
போது போக்க உபாயமும் தோன்றாமல்
சிறிது நாழிகை அலை பாய்ந்தாள்
அவளவில் கண்ணபிரான் உடைய திருவாய் அமுதத்தை
நம்மைப் போல் அன்றியே
நித்ய அனுபவம் பண்ணப் பெற்றவர்கள் யாரேனும் உண்டா
அன்றி அவன் நம்மை வஞ்சித்தது போலே எல்லாரையும் வஞ்சிப்பவன் தானா –
என்று சிந்திக்கத் தொடங்கினாள்-
அப்போது இடது திருக் கையிலே நித்ய வாசம் செய்கிற
திருச் சங்கு ஆழ்வான்
அத திரு வாய் அமுதத்தை இடைவிடாது அனுபவிக்கும் பாக்யத்தை யுடையவன் என்று உணர்ந்தாள்-
ஹா ஹா அவனுடைய பாக்கியம் என்ன பாக்கியம் என்று கொண்டாடி
ஒரு பக்கத்தில் பிரீதி பிரகர்ஷமும்
மற்றொரு பக்கலிலே அஸூ யாதிசயமுமாய்
அப் பாஞ்ச ஜன்யத்தையே நெஞ்சிலே இடைவிடாதே அனுசந்தித்தாள்
அந்த பாவன பிரகர்ஷமானது-(உரு வெளித்தோற்றமானது-)
அத் திரு சங்கு ஆழ்வானை கண் முன்னே தோற்றுவிக்க
ஆண்டாள் அவனை முன்னிலையாக விளித்து
ஒ பாஞ்ச ஜன்யமே கண்ணபிரானது திருப்பவளத்தின்
இன்னமுதத்தை நீ இடைவிடாது அனுபவியா நின்றாயே
அத்திருவாயின் பரிமளமும்
அவ்வமுதத்தின் ரசமும்
எப்படி இரா நின்றது -சிறிது சொல்லாய் –
காதினில் ஆவது கேட்டு மகிழ்கிறேன் -என வினவுவதும்
அச் சங்கு ஆழ்வான் உடைய பாக்ய விசேஷத்தை கொண்டாடி சொல்லுவதுமாக
செல்லுகிறது இத் திருமொழி –
பெருமாளைக் காட்டிலும் ஆண்டாள் உடைய பாக்கியம் வீறு பெற்றது என்ன வேணும்
ஏன் எனில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து நொந்து இருந்த காலத்தில்
அப் பிராட்டியைக் கண்டு வந்த ஒரு குரங்கை பார்த்து
கதம் உரூ கதம் பாஹூ-என்று அவள் உடைய துடை அழகு எப்படி இருக்கிறது
தோள் அழகு எப்படி இருக்கிறது
சொல்லிக் காண் -என்று வினவப் பெற்றார் –
இவ் வாண்டாள் அப்படி தோற்றிற்று ஒரு குரங்கைப் பார்த்து
வினவ வேண்டாதே
எம்பெருமானது திருக் கையை ஒரு நொடிப் பொழுதும் விட்டு நீங்காத
நித்ய அனுபவம் பண்ணும் பாக்கியம் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
கேட்கப் பெற்றது சிறந்த பாக்கியம் இறே
உசாத் துணைக்கும் உரியார் கிடைப்பது அரிது அன்றோ –)
அவதாரிகை –
ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி –
புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-சுந்தர -35-4-என்னாதே
தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இறே-
ஒரு ஸ்வப்ன அனுபவத்தை சொன்ன அளவன்றிக்கே
சம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்த்துப் போலே-
இல்லையாகில் –வாகம்ருதம் இருக்கும் படி என் -என்று கேட்கக் கூடாது இறே –
ஸ்வப்ன அனுபவம் ஆகையாலே
மின்மினி பறந்தால் போலே இருக்கும் அத்தனை அல்லது நெஞ்சில் பட்டிராது –
சம்ஸ்லேஷத்தில் உபக்ரமத்திலே தான் இழந்தாள்-
தனக்கு அமைத்த அம்சத்தை ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கேட்கிறாள் –
அவனைக் கேட்பான் என் என்னில்
1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே
அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்
2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்
3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ஸ்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்
4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்-கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய் -10-6-8–
இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை
5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இறே –உப சம்ஹர -என்றது
6-உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இறே
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி
அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-
இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி
உப சம்ஹர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாது மா அவதாரம் தி
கம்சோசயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-11-என்றால் அப்போதே கை கரந்து நிற்பானுமாய் –
உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவாய் இருக்கும் இறே(தாரை மண்டோதரி போல்வாருக்கும் காட்சி கொடுத்து அருளினானே)
7- இவர்கள் தான் ஸ்யாமமான திருமேனியை அனுபவித்தால்
அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-ஆகையாலே
சேர அனுசந்திக்க வேண்டி இருக்கும் இறே
இவன் தான் அதிக வளனுமாய் இருக்கும் இறே –தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -11-1–என்றும்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்றும் -வலம் புரி போல் நின்று அதிர்ந்து –திருப்பாவை-4-
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -திருப்பாவை -26-என்றும்-
இவள் தான் பாவித்து இருப்பதும் இத்தை இறே
8- இனி இவன் வார்த்தை கேட்டால் அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இறே –
———————————————————————————————————
அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இறே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே –
என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-
பதவுரை
ஆழி வெண் சங்கே–கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன் தன்–(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய்–திரு அதரத்தினுடைய
சுவையும்–ரஸத்தையும்
நாற்றமும்–பரிமளத்தையும்
விரும்புற்று–ஆசையோடே
கேட்கின்றேன்–(உன்னைக்) கேட்கிறேன்.
திருப் பவளச் செவ்வாய் தான்–(அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திரு வதரமானது
கருப்பூரம்–பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?–பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ–தாமரைப் பூப் போலே
நாறுமோ?–பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ–மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல்–இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்-இரண்டுமேயாய் இராது இறே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே –
எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே-
ஒன்றை இரண்டை- கேட்கிறாள் அத்தனை -யாய்த்து
எல்லாம் –
நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில்
நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –
சர்வ கந்த -என்கிற இது போலே –
சர்வ ரச -என்கிற இது
விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-
தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று
விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –
வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –
வாய்ச் சுவையாய் திகைக்க வைக்கையாலே
இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்
வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –
கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து
அவ் வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –
(மெய்யாலே தீண்டலாம்
வாயாலே சுவைக்கலாம்
கண்ணாலே சேவிக்கலாம்
மூக்காலே மோந்து பார்க்கலாம்
காதுக்கு கேட்கலாம் -திருவாய் -சர்வ இந்த்ரியங்களுக்கும்-ஐந்து புலன்களுக்கும் விஷயமாகும்)
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே –
எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –
பர்த்தாரம் பரிஷஸ்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே
குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து
வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும்
அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அந ஸூ யவே--ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூயதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா விறே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இறே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இறே தாச தாசிகள் இருப்பது
(ஸ்ரீ பகவான் உவாச — இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-
ஸ்ரீ பகவான் உவாச — யஞ்ஞாத்வ -எதை அறிந்து மோக்ஷயஸே அஸூபாத் –என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயோ இதம் குஹ்ய தமம் ஞானம்–இந்த அதி ரஹஸ்யமான உபாஸன ரூபமான அறிவை விஞ்ஞான ஸஹிதம் –அவ்வுபாஸனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட அநஸூயவே தே –என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு பிரவக்ஷ்யாமி –நன்கு கூறுகிறேன்
ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –
இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந– ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷
தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும், அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும், அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.
பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது)
ஆழி –
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் –
கடல் போன்ற விசாலமான மனப் பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே
பிறப்பைச் சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே
என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்
வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே
உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்
வெண் சங்கே
கை விடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இறே
இவனுடைய ஆற்றாமை
நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே
அதனால் பதில் சொல்ல வேணும் –
———————————————————————
உகவாதாரை அழியச் செய்யுமா போலே
உகப்பாரை வாழ்விக்க வேணும் -காண்-
நீ பிறந்து வளர்ந்தால் போலே இருக்க வேணும் காண் உன் கார்யங்களும்
பிறப்பும் வளர்ப்பும் பிறருக்காவே அன்றோ –
கார்யங்களும் பரார்த்தமாக வேண்டுமே –
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-
பதவுரை
நல் சங்கே–அழகிய சங்கே!
கடலில்–ஸமுத்திரத்திலே
பிறந்து–பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து–பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து,
கருதாது–(இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான்–எம்பெருமானுடைய
கை தலம் திடரில்–கைத்தமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி–குடி புகுந்து
தீய அசுரர்–கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட–துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய்–ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய். (உன்பெருமையே பெருமை)
கடலிலே பிறந்தது –
பிரளயத்தில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தாரகம் ஆனது போலே உபகரிக்க வேணும்
அவன் தோஷம் காணாமல் வளர்ந்தால் போலே எங்கள் குற்றம் காணாமல் உபகரிக்க வேணும்
பகவானைக் கருதாத பாஞ்ச சன்னியன் உடலிலே வளர்ந்தாயே
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து –
கடலிலே பிறந்து அகவாயில் உள்ளது த்வேஷமேயாய்
அஸூரனுடைய உடலுக்கு உள்ளே வளர்ந்ததை நினையாதே
போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் –
பின்னைப் போய்-
கால சேஷமான ஜகத்துக்கு நிர்வாஹகனாய் இருக்கிற
சர்வேஸ்வரனுடைய கைத்தலத்திலே குடியேறி
ஊழியான் –
கால நிர்வாஹகன்-
தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –
அவன் படி அடங்க உண்டாய் இருந்ததீ உனக்கும் –
அவன் யது குலத்திலே பிறந்து
சத்ருவான கம்சனுக்கு உள்ளாய் இறை இறுத்து இருக்கிற திருவாய்ப்பாடியிலே வளர்ந்து
காலயவன ஜராசந்தாதிகளுக்காக போய்
ஸ்ரீ த்வாரகையை படை வீடாகச் செய்து அங்கே குடியேறி
பின்னை துரியோத நாதிகளை மண் உண்ணும் படி வந்து இப்படி செய்தான் இறே அவனும்
நீயும் –சகோஷாதாரத்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-
யஸ்ய நாதேன தைத்யா நாம் பலஹாநி ரஜாயாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-29–
நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –
நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே
கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்
திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்
கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –
——————————————————————————————————–
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-
பதவுரை
கோலம் பெரு சங்கே–அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன்–சரத் கால சந்திரன்
உவா இடையில்–பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல–பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும்–நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில்–வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ண பிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி–குடி புகுந்து
வீற்றிருந்தாய்–உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
உதய கிரியின் மேலே சரத் காலத்திலேயே எல்லா கலைகளும் நிரம்பின
பூர்ண சந்தரன் வந்து தோன்றினால் போலே
தட வரைத் தோள் -பெரியாழ்வார் -5-4-4-இறே-
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும் வடமதுரையார் மன்னன் –
வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —
இடை உவாவில்-
உவா -பௌர்ணமியில் –
இடை- நடு-சதுர்தசிக்கும் பிரதமைக்கும் நடு என்றபடி-
உன் ஐஸ்வர்யம் இருந்த படி என் –
வடமதுரையார் மன்னன் -மேன்மை –
வஸூ தேவன் -நீர்மை –
கையில் -வடிவு அழகு —
பசும் கூட்டு
ஸ்ரீ மதுரையில் உள்ளாருக்கு நிர்வாஹகனாய் -ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாய் இருக்கிறவனுடைய திருக்கையிலே
ஒரு காலமும் பிரியாத படியாக குடியேறி
உன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி எல்லாம் தோற்றும் படியாய் இருந்தாய்
கோலப் பெரும் சங்கே
உன் அழகுக்கு மேலே அவனுக்கும் உன்னாலே அழகாம் படி இருந்ததீ உன்னேற்றம்
எல்லா பாட்டுக்களுக்கும் கிரியை- சொல்லாழி வெண் சங்கே –என்னவுமாம்
பாட்டுத் தோறும் கொண்டாட்டம் ஆதல் -என்னவுமாம் –
——————————————————————————————————–
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7-4-
பதவுரை
வலம்புரியே!–வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில்–கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல்–சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி–இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில்–அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும்–ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும்–(செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு-ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான்–உனக்கு இணையாக மாட்டான்
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
செருக்கராய் இருக்குமவர்கள் கையிலே குளிரிக் குடம் -பனி நீர்க் குப்பி –
பிடித்துக் கொண்டு இருக்குமா போலே
தாமோதரன் கையில் –
அவனைக் கண்டால் வயிற்றில் தழும்பாலே-
ஒரு தாயாருக்கு பவ்யனாய் வளர்ந்தான் -என்று தெரியுமா போலே
உன்னைக் கண்டால் இவனும் பவ்யன் என்று தோற்றும்படி இருக்க வேண்டாவோ –
அந்தரம் ஓன்று இன்றி ஏறி
அவன் விரும்பி இருப்பார் பலரும் உண்டு இறே -அவர்களைப் போலே –
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய்மொழி -10-6-8-ஒரு விச்சேதம் இன்றிக்கே
ஒருத்தருக்கு ஓர் ஆபத்து வந்தவாறே கை விட்டுப் போவாரைப் போல் அன்றிக்கே
அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் –
உம்மைப் பிரிந்து ஆற்ற மாட்டார் பலருண்டு -என்று
திருச் செவியில் சொல்லுகிறாப் போலே இருக்கிறது
அவன் செவியிலே ரஹஸ்யத்தை சொல்லுவான் போலே இருக்கை
கொள்ளுகை -கொடுக்கை
வலம் புரியே –
அல்லாதவை எல்லாம் இடத்திலே புரிந்து -நீ வலத்திலே புரிந்தால் போலே
கார்யத்திலும் வேறு பட்டு இருக்க வேணும் காணும்
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–
தான் நினைத்த போது வர்ஷிப்பித்து –
அல்லாத போது தவிர்ந்து போருகையாலே
ஐஸ்வர்யம் உள்ளது இந்தரனுக்கு என்றாய்த்து இவர்கள் இருப்பது -இடைச்சிகள் ஆகையாலே
இந்தரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவு –பெரியாழ்வார் -2-3-4-என்னக் கடவது இறே
அன்றிக்கே –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே-பெரியாழ்வார் -4-3-11-
இந்திர ப்ராணாதி சப்தங்களும் பகவத் வாசகங்கள் என்னும் வாசனையாலே -சொல்லிற்றாதல் –
இந்திர பிரணாதிகரணம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-1-11-
அவனுடைய ஸ்வா தந்த்ர்ய லஷ்மி
உன்னுடைய பார தந்த்ர்ய லஷ்மிக்கு போறாதே இருந்ததீ
ஒருவன் அனுகூலித்த வாறே அழியும் அது -ஸ்வா தந்த்ர்யம் – இறே
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று நிலை நின்றதாய்த்து இது
சர்வாத்மநா பர்யநுநீயமாநோ யதா ந சௌமித்ரி ருபைதி யோகம் -யுத்த -131-93-என்று
ஒருபடியாலும் முடி சூடேன் என்றவரை இறே லஷ்மி சம்பன்னர் என்றது
பூர்வஜஸ் யா நுயாத்ரார்த்தே த்ரும சீரைரலங்குருத-சுந்தர -33-28-
பெருமாள் முடி தவிர்ந்தார் –
இளைய பெருமாள் வகுத்த முடி சூடினார் –
——————————————————————————————————–
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-–7-5-
பதவுரை
பாஞ்சசன்னியமே!–சங்கே!
ஒரு கடலில்–ஒரே கடலில்
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
வாழ்வாரை–வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண்,
(நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற–ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன்–கண்ணபிரானுடைய
வாய் அமுதம்–திருவாயினமுதத்தை
பல் நாளும்–பல காலமாக
உண்கின்றாய்–பருகா நின்றாய்.
(ஆகையால் நீயே பாக்யசாலி)
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை-
இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
உன்னோடு சஜாதீய பதார்த்தங்களை இட்டு எண்ணுவார் இன்றிக்கே இருக்க நீ ஒருவன் வாழ்ந்த படி என் –
ஒரு தேசத்திலே உன்னோடு சேர வர்த்திக்கிறவர்களை
அவர்கள் ஸ்வரூபம் ஆதல் -பிரகாரம் ஆதல்-என்று எண்ணக் கடவார் இல்லை காண் –
மன்னாகி நின்ற –
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர் பார -ஆஸ்வ -43-13- -என்கிறபடியே
நிர்வாஹகனாய் நின்ற
மதுசூதன் –
இது தான் ஒரு நாமம் மாத்ரமாய் இராதே
ஆஸ்ரிதருக்கு களை யறுத்துக் கொடுக்குமவனாய்த்து
வாய் அமுதம்-
அவனுடைய வாக் அம்ருதத்தை
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-—
நாங்கள் அனுபவிக்கும் அத்தை -எங்கள் அனுபவத்தை-
காதாசித்கமாக்கி நித்ய அனுபவம் பண்ணா நின்றாய்
பாஞ்ச சன்னியமே
பிறப்பு என்று ஓன்று இல்லை யாகாதே –
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து உன்னைக் கால் கட்டா நின்றேன்
நீயோ அசுரன் வயிற்றிலே பிறந்து நித்ய அனுபவம் பண்ணா நின்றாய் –
——————————————————————————————————–
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —7-6-
பதவுரை
வலம் புரியே!–வலம்புரிச் சங்கே!,
போய்–வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம்–கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே–நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற–(நாரத சாபத்தாலே மரமாய் நின்ற)
புணர் மருதம்–இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான்–முறித்துத் தள்ளின கண்ண பிரானுடைய
கைத்தலத்து ஏறி–திருக் கைத்தலத்தின் மீதேறி
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே
ஆயிரம் காதம் ஐந்நூற்று காதம் போய்
சரகூறலிலே முழுகித் திரியாதே
அஸூராவேசத்தாலே பேராதே நிர்விவரமாய் நின்ற மருதுகள் இரண்டின் நடுவே அவகாசம் கண்டு போய்
பின்னை அவை முறிந்து உரலோடு இழுப்புண்டு வர
அதன் த்வநியைக் கேட்டு புரிந்து பார்த்துக் கொண்டு இருந்த
மௌக்யத்தை உடையனாய் இருக்கிறவன் கையிலே
ஏறிக் குடி கொண்டு-
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே-உபசம்ஹர -என்று சிலர் இரக்க-
நாம் மறைந்து நாலு நாள் நிற்கையால் இறே இப் பிரமாதம் புகுந்தது என்று
இனி ஒருநாளும் பிரிய ஒண்ணாது என்று திருக் கையை விடாதே வர்த்திக்கிறான் ஆய்த்து
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —–
அறத் தூரமாய் -அதி பாவனமாய் நின்ற –
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –உத்தர -82-9-என்றும்
சேய்த் தீர்த்தமாய் நின்ற என்றது
செங்கண் மாலுக்கும் வாய்த் தீர்த்தத்துக்கும் விசேஷணம்-பெரிய தீர்த்தம் -தூர தீர்த்தம்
புண்யா நாம் அபி புண்யோ அசௌ-வனபர்வ தீர்த்த யாத்ரை–88-26- -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி -திருவாய் -2-8-6–என்றும் சொல்லுகிறபடியே நின்ற
செங்கண் மால் தன்னுடைய
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் –
கடலில் அமுதம் படும் துறையில் இழியுமா போலே
முகப்பிலே -வாய்க் கரையிலே நின்று தீர்த்தமாடுகிறாய் இறே
முன்னதாக முகத்திலே –சாடு
வலம் புரியே –
அனுபவத்தில் ஏற்றம் போலே
சந்நிவேசமும் இப்படி இருக்க வேணுமோ —
—————————————————————————
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–7-7-
பதவுரை
நாள்–அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல்–செந்தாமரைப் பூவில் (படிந்து)
தேன்–தேனை
நுகரும்–பருகுகின்ற
அன்னம் போல்–அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய–சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ண பிரானது
அம் கைத்தலம் ஏறி–அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும்–கண் வளர்கின்ற
சங்கு அரையா!–சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம்–உன்னுடைய செல்வமானது
சால–மிகவும்
அழகியது–சிறந்தது காண்
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
செந்தாமரையில் அப்போது அலர்ந்த செவ்வி மலர் மேலே
அன்னம் படிந்து மது பானம் பண்ணுமா போலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தை ப்ருகு -10-6-என்று கொண்டு
அன்னம் சப்தம் ஹம்சம் -என்றுமாம்
வாத்சல்ய பிரகாசகமான திருக் கண்களையும்-
தாபம் அடைய ஆறும்படி குளிர்ந்த வடிவையும் யுடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–
அழகிய திருக்கையிலே ஏறி –
உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும்
பரப்பு மாறத் தாமரை பூத்தால் போலே திவ்ய அவயவங்களும்
அக்கமலத்து இலை போலும் திருமேனி –திருவாய் -9-7-3-என்கிறபடியே
அதில் பச்சை இலை போலே திருமேனியும்
அங்கே மது பான அர்த்தமாக இழிந்த அன்னம் போலே திருமேனிக்கு பரபாகமான
வெண்மையை உடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமாய் இருந்தபடி
சங்கரையா –
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –
க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத் –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்
வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –
அரையன் –
அரசன்-
பகவத் பிரத்யாசத்தியத்தாலே சஜாதீயர் அடங்கலும் உன் காலிலே வந்து துவளும் படி
அன்றோ உன் ஐஸ்வர்யம் –
சஜாதீயர் -திருப் பவளத்தை அனுபவிக்கும் பெண்கள்
உன் செல்வம் சால அழகியதே –
இந்த்ரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே -7-4-என்ற அளவன்றிக்கே
இருந்ததீ உன் ஐஸ்வர்யம் –
———
ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் விமல சங்க ரதாங்கயோஸ் து ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ பத்ம பிரியோர்க்க இவ தத் சமிதோ த்விதீய –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -55-
ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் –அழகருடைய இரண்டு திருக்கைகளிலும் ஏறி இருக்கிற — ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறி என்றும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெறும் சங்கே -என்றும் – இருப்பதை அடி ஒற்றி ஆரூட பத பிரயோகம் விமல சங்க ரதாங்கயோஸ் து –வெள்ளை விளி சங்கும் திருவாழி ஆழ்வானும் ஆகிற இருவருக்குள் ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ –ஒருவரான ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் தாமரை மலரில் துயிலும் ராஜ ஹம்சம் போலே விளங்கா நின்றார் செங்கமல நாண் மலர் மேல் தேனுகரும் அன்னம் போல் செங்கண் கருமேனி வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி அன்னவசம் செய்யும் சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –அடி ஒற்றி அருளிச் செய்தபடி த்விதீயஸ்து –தத் சமிதோ –பத்ம பிரியோர்க்க இவ –மற்று ஒருவரான திருவாழி ஆழ்வானோ என்னில் – தாமரை மலரில் வந்து வீற்று இருக்கும் சூர்யன் போலே விளங்கா நின்றார் – சூர்யன் தாமரை மலரில் வீற்று இருக்க ப்ரஸக்தி ஏது என்னில் – பத்ம பிரிய-இது ஹேது கர்ப்ப விசேஷணம் -கமல பாந்தவன் ஆகையால் கமலத்தில் வந்து கிடக்கலாம் இறே ஆக அழகருடைய இரண்டு திருக்கைகளும் இரண்டு தாமரை ஆகையால் – ஒரு தாமரையில் அன்னம் வந்து படிந்து சங்காக விளங்க – மற்று ஒன்றில் சூர்யன் வந்து படிந்து ஸூதர்சனமாக விளங்குகிறார் என்கிறார்
——————————————————————————————————–
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-8-
பதவுரை
பாஞ்சசன்னியமே–சங்கே!,
உண்பது சொல்லில்–நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம்–உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்,
கண் படை கொள்ளில்–நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே–கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே,
(இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார்–பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல்–உன் விஷயமாக
பெரு பூசல்–பெரிய கோஷம் போடுகிறார்கள்,
(எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய்–(இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய்.
(இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை.)
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்-கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
நீ உண்ணும் படி சொல்லவா
உறங்கும் படி சொல்லவா
வாயது கையதான ஐஸ்வர்யம் அன்றோ உன்னது
சேஷபூதர் ஆனார் எல்லாருக்கும் பொதுவானதன்றிக்கே-
அடி சூடும் அரசு அல்லவே – வாக் அமிர்தத்தை யாய்த்து புஜிக்கிறது
வாயாலே ஊட்ட உண்டு –
ஸ்ரமஹரமான வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு கையிலே யாய்த்துச் சாய்வது
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் -பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
அவ் வாக் அமிர்தமும் வடிவுமே ஜீவனமாய் இருக்கிற பெண் பிறந்தார் அடங்கலும்
கை எடுத்து கூப்பிடா நின்றார்கள் கிடாய்
திருவாய்ப் பாடியில் உள்ளாறும்
ஸ்ரீ மதுரையில் உள்ளாறும் திரண்டு கூப்பிடா நின்றார்கள் கிடாய் –
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
பகவத் விஷயத்திலே இழிந்து நீர்மை உடையராய் இருப்பார் செய்வது அல்ல நீ செய்கிறது
பகவத் பிரத்யாசத்தி உடையாரில் –
நமக்கு -என்று தனி அனுபவிப்பார் இல்லை காண்
பாஞ்சசன்னியமே
இது பிறப்புக்குச் சேரும் அத்தனை
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும் இறே தமப்பனார் படியும்
தம் படியும்–
கூடு அனுபவித்து குளிர்ந்த பேர்கள் அன்றோ நாம் –
இந்த பெருமை உனக்கு இல்லையே -என்கிறாள் –
993-சங்க ப்ருத்-
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-9-3-
பரம ஐஶ்வர்ய சிந்ஹ தி₃வ்யாயுத₄த்வாத்
சங்க ₂ப்₄ருத்;
ஸ்வாத₄ர வித்₃ரும ஸுத₄ யா பாஞ்ச ஜந்யம் புஷ்ணா தீதி ॥
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச –சகோஷோதார்த் தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வயாதாரயத்-ஸ்ரீ கீதை
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -6-9-1-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரம் -பெரியாழ்வார்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -நாச் திரு மொழி -7-8-
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -நாச் திரு -7-7-
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சஜன்யத்துக்கும் பல்லாண்டு -ரக்ஷணம்
ஏந்தும் -அழகு
திரு வண் வண்டூர் உறையும் பெருமானுக்கு -செரு ஒண் சக்கரம் சங்கு ஏந்தும் தடக்கையன் -அடையாளம்
தமஸ பரமோ தாதா ஸங்க ஸக்ர கதா தர-வியக்தம் -ராமனிடம் சங்கு சக்கரம் காட்டக் கண்டாள் –முதலில் சங்கு
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் இத்யாதி -திருப்பாணாழ்வாரும் காட்டவே கண்டார்-முதலில் சங்கு
தமக்கே சிறந்த அடையாளமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சக்கரத் தாழ்வானை தம் திருப் பவளத்தின்
அமுதத்தினால் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
—————————————————————————————————-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-
பதவுரை
பெரு செல்வம் சங்கே–பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப–கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி) எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை–பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக
உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு–நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால்–தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ–(மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
எத்தனை பேரை வாய்க்காவல் இட்டால் தான் உனக்கு வயிறு வளர்க்கலாவது
பதினாறாமாயிரம் பேர் இது அனுபவிப்பதாக அவசரம் பார்த்து இருக்க –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்-
நீ ஒருவனுமே மேல் விழுந்து புஜித்தால்
சர்வ சாதாரணமான அமிர்தத்தை நீ ஒருவனுமே புஜித்தால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–
இவன் நம் கோஷ்டிக்கு புறம்பு என்றால்
நீ மண்ணை மணலை மோக்கும் அத்தனை இறே –
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்–திருப் பல்லாண்டு -3-
என்றால் நீ செய்வது என்
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் -பெரியாழ்வார் -3-6-11-என்னுமவர்கள் இறே
செல்வப் பெரும் சங்கே –
உன் ஐஸ்வர்ய செருக்கு இறே விளைவது அறியாதே ஒழிகிறது-
அவன் ஐஸ்வர்யத்துக்கும் அடியான
எங்கள் ஐஸ்வர்யத்துக்கும்
மேலாய் இருந்ததீ உன் நிலை
—————————————————————————————————-
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் (ஒண்)புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-
பதவுரை
பாஞ்சசன்னியத்தை–சங்கை
பற்பநாபனோடும்–எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய–கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் (ஒண்)புதுவை–அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ்–நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை–பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும்–இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து–அநுஸந்தித்து
எந்த வல்லார் அவரும்–(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர்–(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்-
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்
அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சீறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சீறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை
மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-
—————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply