ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||
ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.
————-
ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-
ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –
ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரண அம்புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்–ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –
—-
சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-
போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்
பிற்றை நாள் –
மாறன் மறைப் பொருளை கேக்க மணவாள மா முனியை ஏறும் அணை தனில் இருத்தி -ஸ்ரீ சைல அஷ்டகம் -1-
அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் ச ததா பர
பல பத்ரஸ் து கலவ் கஸ்ஸித் பவிஷ்யதி -என்று -பவிஷ்ய புராணம் -சேஷ அம்சமாகவும் சொல்லுவார்
ப்ரதம அநந்த ரூபஸ் ச த்விதீயோ லஷ்மணஸ் ததா
த்ருதீயோ பலராமஸ் ச கலவ் ராமானுஜோ முனி -பூர்வர் வாக்கியம்
———–
ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-
முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –
நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை
தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-
ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் -அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்
போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்
ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –
————
ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-
ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –
————
கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-
மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –
ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-
ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்
——————–
ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-
ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்
————–
வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-
ஆதி ஸத்-ஆஜ்ஜை-
——————
யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-
ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பத்யம் லஷ்மி நாத பத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை
—————-
ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா
—————–
வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா
ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்
தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறு உரைக்க நேசமுற அரங்கர் நியமித்தார் -ஸ்ரீ சைல வைபவம் -7-
ஸ்ரீ பன்நகாதீச முனே பத்யம் ரெங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர சதஸ்தா நேஷ்வ நுசந்தான மாசரேத்
இத்யாஞ்ஞா பத்ரிகா விஷ்வக்சேநேன பிரதிபாதிதா
ததாரப்ய மகாத் பிச்ச பட்யதே சந்நிதே புரா
———
ஸ்ரீ அப்புள்ளார் அருளிச் செய்த ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரம பதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே –1–
நற் குரோதன வருட மகர மாத நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற் சரக்கில் வீட்டிருந்து வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்ககத்தில் பெண் பிள்ளை போலே சென்று புவனி யுள்ள தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத் துரிய நிலை பெற்று உலகை உரைக்க கொண்டாரே -2–
செய நாமமான திருவாண்டு தன்னில் சீரங்க ராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திரு வீதி வாரா நிற்கத் தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமான் அனார் தன் முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லிச்
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-
வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர் வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும் கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர் சைல மந்திரத்தின் சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவீர் பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4–
சென்றவர்கள் இருவருமே சேர வந்து திருவரங்கன் தினசரியை கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில் தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சன்னதி இன்று அரங்கர் தாமே அந்தத் தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே—5-
நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியில் முப்பத்து ஒன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித் தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில் செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நம் கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6-
ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில் அழகான ஆனி தன்னில் மூல நாளில்
பானு வாரம் கொண்ட பகலில் செய்ய பவ்ரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7-
தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத் தமிழ் மறையை வர முனிவன் உரைக்கக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில் அத்தியயனத் திரு நாள் அரங்க நாதர்
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8-
அருளினதே முதலாக அரங்கருக்கும் அன்று முதல் அரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப் புன் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேதம் அது கேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே –9-
நாமார் பெரும் சீர் கொள் மண்டபத்து நம்பெருமாள் தாமாகவே வந்து தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும் வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ் விப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-
—————————————-
வாசி அறிந்த வதரியில் நாரணனார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தான் இவ்வையகம் சீருறவே-கோயில் கந்தாடை அண்ணன் -மணவாள மா முனி கண்ணி நுண் சிறுத் தாம்பு -13-
திருமந்தரம் வெளி இட்டு அருளின ஸ்ரீ பத்ரி நாராயணனே இத்தையும் வெளி இட்டு அருளினார்
ஹடான் தஸ்மின் ஷணே கச்சித் வர்ணே சம்ப்ராப்ய பத்ரிகாம்
வாதூல வரதாச்சார்யா தர்ம பத்ன்யா கரே ததௌ–பஹூ முகமாக இத் தநியனை பிரகாசிப்பித்தது அருளுவதே
———————————————————————————
அழகர் கோயில் அனுபவம்
ஸ்ரீ சைல ஸூந்தரே சச்ய கைங்கர்ய நிரதோயதி
அமன்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய சம்பவ மார்யத
ஜிஹ்வாக் ரேதவ வஷ்யாமி ஸ்த்தித்வா வத ஸூ பாவ நம்
பத்யம் த்வதார்யா விஷயம் முனே ரஸ்ய மமா ஆஜ்ஞ்ஞாய
தன்யோச்மீதி ச சேனே சதே சிகோஸ்வதத ஸ்வயம்
வஹன் சிரசி தேவஸ்ய பாதௌ பரம பாவனௌ
———————————————————–
திருவேங்கடமுடையான் அனுபவம்
உபதிஷ்டம் மயா ஸ்வப்னே திவ்யம் பத்யமிதம் ஸூ பம்
வரயோகி நமாஸ்ரித்ய பவத ஸ்யாத் பரம் பதம்
இத்யுக்த்வா தம் வ்ருஷாத்ரீச ஸ்ரீ பாதாத் ரேணு மேவச
தத்த்வாஸூ பரேஷா யாமாச கச்ச யோகிவரம் ஸூ சிம்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ
த்ரிஷூ பக்திஸ்சதா கார்யா சா ஹி பிரதம சாதனம் -மா முனிகள்
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ சைல வைபவம்
கூறுகேன் உலகீரே குங்குமத்தோள் அரங்கேசர்
மாறன் மறைப்பொருளைக் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மணை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரை யடி பூசனை யாற்றி –1-
ஏறும் மணை–உயர்ந்த ஆசனம்
இரு நிலத்தில் -பூமியில் தாம் இருந்து
பூசனை யாற்றி –ஆராதனை செய்து
——-
ஆறு இரண்டு புரம் சூழ அரங்கம் முதல் நூற்று எட்டும்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன் பெருக்கு என்ன யுன்னி யதை யுகந்து யுரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே –2-
ஆறு இரண்டு -உபய காவேரி
புரம் சூழ அரங்கம் –ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே
முதல் நூற்று எட்டும் -ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி -ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –
ஓர் இரண்டாம் சீர் நடுநாடு -ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறு இரண்டு கூறு திருநாடு ஒன்றாக்கொள்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க -ஸ்ரீ சைல என்று தொடங்கும் மந்த்ரம்
யுன்னி -சிந்தித்து
சேறு வளர் கமலை -பங்கயச் செல்வி
ஒருப்பட்டே –சம்மதித்து
———-
பட்டர் பிரான் முதலாய பதின்மர் கலை பழிச் சலிலும்
சிட்டர்களாய்த் தினம் தோறும் திருமண் இடு வேளையினும்
இட்ட முற யுணும் பொழுதத்து ஒண் கர நீர் ஏற்கையினும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-
சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில் துயக்கற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
வாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில் மால் கருட வாகனனாயத் தோன்ற வாழ்த்தும்
ஆழ்வாராதலால் முதலில் எடுத்து அருளுகிறார் –
பழிச்சல் -துதித்தல்
சிட்டர் -நல்லோர் -கல்வி நிரம்பிய சான்றோர்
திருமண் இடு வேளை -புண்ட்ரம் தரிக்கும் போது பன்னிரு திருநாமப் பாடல்கள் அனுசந்தேயம்
———
ஆரியர்கள் கொண்டாடி யாசரித்த தனியனைத் தான்
பேரியலும் தொண்டர் குழாம் பெரும் பேறாக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் செக தலத்தீர் கற்று உணர்மின்
தாரியலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4-
————-
மணவாள மா முனியை வழுத்து உறவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறவிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரே யுய்தல் இலர்
மணமுடைய மந்திர மா மதிக் கொள்ளீர் தனியனையே –5-
———
தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப் பவளத்தாலே -முனி வரனார்
மாறன் மறை முப்பத்து ஆறாயிரத்தின் மாண் பொருளைக்
கூற உபதேசித்தார் கொண்டு –6-
முனி வரனார் -சடகோப மா முனிவர்
மாண் பொருள் -சிறந்த கருத்து
முப்பத்து ஆறாயிரம் -ஈடு
———
தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோர் உரைக்க
நேச முற வரங்கர் நேமித்தார் -ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டு மெய்த்து –7-
வேதனார் -பிரமன்
எய்த்து -வருந்தி
———
எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் காண்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் -வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை யறுத்து வீடு அருளும் வேந்து–8-
இராவணி -இராவணன் மகன் இந்திரஜித்
கொன்றவன் -இலக்குவன்
செய்ய நெறி -சரணாகதி மார்க்கம்
சேடன் -அநந்தன்
வையம் -பூமி
வரயோகி -ஸ்ரீ மணவாள மா முனிகள்
வேந்து -முனி யரசன்
வீடு -பரம புருஷார்த்த மோக்ஷம்
————
வேந்தராய் மண்ணாண்டு விண்ணேறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கிற்று எல்லுலகீர் -ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இழிந்தமர்மே வான் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்கு –9-
ஏதி-ஆயுதம்
————
வணங்கினார் சீர் பெற்றார் வரன் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப்பிறவிப் பேதையர்கள் தமைக்கண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் தென்றவரே –10-
வீடணர் -விபீஷணர்
உணங்கினார் -காய்கின்றவர்
தாமதர் -மந்தர்
சினந்தார் -கோபமுடையார் –
————
தென் கலையாம் தமிழ் வேதச் சீர் சைல தனியன் எனும்
நன் கலையை யுள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்
மின் கலையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நாவர் ஆகுவாரே –11-
தென் கலை -அழகிய கலை
மின் -ஒளி வீசும்
மேனோக்கு புண்ட்ரம் -ஊர்த்வ புண்ட்ரம்
———–
ஆகுகல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய என்
சோகம் அற யுளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம் மலர்த்தாளும் சீர் சைலத் தனியனும் இன்று
ஓகை யுறப் பெற்றனனால் ஒலி கடல் தரணியீரே — 12-
ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய் –திருவாய் மொழி -5-8-10-
சேகறு -குற்றம் அற்ற
ஓகை -உவகை
————-
தாராணியோர் வாழ எண்ணித் தானே திரு வனந்தன்
பேரணியும் குருகை நகர் பிறங்க நனிப் பேர் அருளால்
சீரணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறைத் தேசிகன் எனவே — 13-
பிறங்க -விளங்க
செனித்தனன் -அவதரித்து அருளினன்
தேசிகன் -ஆச்சார்யன் –
————–
தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்றும் இல்லை
திமிரம் அற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சமுசாரத் தாழ் கடலைக் கடத்தி ஒரு
நிமிடத்தில் நித்யராய் நிறுத்தும் பேர் இன்பத்தே —14-
————-
பத்துத் திசைகளினும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கும் மூவணையாய்ச் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனியாகும்
அத்தன் எழில் வர யோகி யாயிவராய் அரவரசே –15-
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
முத்தி தரும் எதிராசர் பொன்னடியே நம் பெரிய ஜீயர்
அத்தன் -உயர்ந்தோன்
அரவரசு -ஆதி சேஷன் –
————-
அரவேறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சீர் சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனன் –16-
—————————-
பண வாள் அரவப் பளியில் பங்கயக் கண் துயில் அவனி
யுணவாளற்கு ஈடு அளித்தான் உத்தம நம்பிக்கு அருள் மெய்க்
குணவாளன் விளைக்கு மறை கூறாமல் தமிழ் விளக்கும்
மணவாள மா முனிவன் மலரடி சந்ததம் பணிவாம் –பொதுப்பாயிரம் -4–கூரேச விஜயத் துதி
——-
மணமுடைய மந்த்ரமா மதிக் கொள்ளீர் தனியனையே -பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்
த்வயம் -நம் ஆழ்வார் த்வயம் -எம்பெருமானார் த்வயம் -பெரிய ஜீயர் த்வயம்
சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சட ஜின்முனி முக்யகவி
யதிகுல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூ தாக விராட்
வரவர யோகி நோ வரத ராஜ கவிஸ் ச ததா -எறும்பி அப்பா
கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்
தேவில் சிறந்த திருமாற்கு தக்க தெய்வ கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
கண்ணனை பாட நம் ஆழ்வாரே
நம் ஆழ்வாரைப் பாட மதுர கவி ஆழ்வாரே
ராமானுஜரை பாட அமுதனார்
மா முனிகளை பாட எறும்பி அப்பாவே
ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –
ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –
யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சாகரத்தையும் திராவிட வேத சாகரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்
யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப் பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –
நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்
ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –
ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்
இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –
இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –
———–
பொன்னி தனில் குளிர் நகரம் தனில் புகுதப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள மா முனி என் ஐயன்
வாழ்ந்து இருக்கும் மடம் தன்னில் வந்து இருக்கப் பெற்றோம்
சென்னி தனில் அவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை ஆழ்வாரில் ஒன்றும் சிறந்து இருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கர் பேர் அருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே
பூதூரில் வந்து உதித்த புன்னியனோ பூம் கமழும்
தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –திரு நாராயண புரத்து ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –
————–
ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ திருவாலி என்னுமூர் -ஈதோ தான்
வெட்டும் கலியன் வேல் வெற்றி திருமால் எழுத்து
எட்டும் பறித்த இடம்
நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக என்னைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளும் இங்கே
வந்து யுரை என்று ஏவுவதே வாய்ந்து –
————–
வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி இன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –அருகில் இருந்த முதலிகள் விஞ்ஞாபித்து அருளியது –
————
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் மா முனி மேல் அன்புப்பெருக்கு
நெடியான் அருள் சூடும் படியான சடகோபன்
அடி சேர் அடியார்க்கு அடையா இடர் தானே
அருமறை முடியினரும் பொருள் தந்த
வர வர முனியின் திருவடி வாழியே
வர வர முனி அடி வணங்கும் வேதியர்
திருவடி யிணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே
————
மா முனிகள் திருநாடு அலங்கரித்தது
ருதிரோத்காரி வருஷம் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்ட்டி –யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீவேதாந்த தேசிகர் ஸர்வஞ்ஞராகையாலே -பின்னால் திருவவதரிக்கப் போகும் மா முனிகளின் அவதாரம் அறிந்து விண்ணப்பம் செய்து பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் செய்து அருளினார்
ருஷீ ணாம் புனராத்யாநாம் வாஸம் அர்த்த அநு தாவதி
பெரியார் வாய் வழி சொல்லையே அர்த்தம் பின் தொடர்ந்து செல்லுமே
இவர் அருளிச் செய்ததாலேயே பெரிய பெருமாள் மா முனிகளுக்குத் தாமே சிஷ்யராக அமைந்து
குரு பரம்பரை ஹாரம் நிறைவு படச் செய்து அருளினார்
மா முனிகளின் தீர்த்த திவசத்தை இன்றும் தாமே நடத்தி வைத்து அருளுகிறார் –
மா முனிகள் கலி 4472 சாதாரண வருஷம் -ஐப்பசி சுக்ல பஷ சதுர்த்தி -வியாழக்கிழமை
மூலம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
கி பி -1370-1443-
சிக்கில் கிடாரம் திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய அண்ணர் திருக்குமாரர்
இவரது திருநாமங்கள்
பெரிய ஜீயர்
சவும்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
காந்தோ பயந்தா
வர வர முனி
வர யோகி
இராமானுசன் பொன்னடி
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
யதீந்த்ர பிரவணர்
அழகிய மணவாள ஜீயர்
ஸ்வேத வர்ணர் ஆகையால் வெள்ளை ஜீயர்
வடமதுரை ஜீர்ண உதாரணம் செய்து அருளினார்
வானமா மலை ஜீயர் பிரியாது ஆட் செய்து இருப்பார்
கோயில் கந்தாடை அண்ணன் உடையவருக்கு முதலியாண்டான் போல் பாதுகா ஸ்தாநீயர்
எரும்பி அப்பா வடுக நம்பி போல் தேவு மற்று அறியாதே அத்யந்த அபிமதர்
பட்டர் பிரான் ஜீயர் எம்பாரைப் போல் பதச்சாயா பன்னராய் இருப்பர்
அப்பிள்ளார் மட நிர்வாஹகர்
பிரதிவாதி பயங்கர அண்ணா கூரத்தாழ்வானைப் போல் உஸாத் துணை
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.
இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே
ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் —
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் —
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply