திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின–10-9-

கீழ்த் திருவாய் மொழியில்
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்று
மடி பிடித்துக் கேட்டார்
அதுக்கு ஹேது நிரந்குச ஸ்வா தந்த்ர்யமே ஒழிய வேறு இல்லை என்று ஆழ்வார் தமக்கும் தெரியும்
எம்பெருமானும் அறிவான்
தான் பரம காருண்யனாய் இருந்து வைத்து பதில் சொல்லாமல் கவிழ் தலை இட்டு தரையை காலால் கீறி நின்றான்
ஆழ்வாரை பரமபதம் கொடு போக விரைந்த அவன் இதை ஆழ்வார் மறக்க ஒரு வழி பண்ணினான்
உபாத்யாயர்கள் மந்த்ரம் மறந்தாலும்
மாங்கல்யம் தந்து நானேன மமஜீவன ஹேதுனா பூமௌ தத்தேன பிண்டேன த்ருப்தா யாந்து பராம் கதிம்
சுப மந்த்ரம் ஆரம்பித்து அசுப மந்த்ரம் சொல்லி முடிக்கும்படி நேர்ந்தாலும்
மேள தாளங்களைக் கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே மறைத்து விடுமா போலே தானும்
மேக சமுத்ர பேரீ கீத காஹன சங்க ஆசீஸ் ஸ்துதி கோலா ஹலங்களைச் செய்தான்
அதாவது
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின -என்று
ராஜகுமாரர் போம்போது மங்கள வாத்திய கோஷம் பண்ணுவாரைப் போலே
பரமபதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாக நிற்கும்
மேக சமுத்ரங்கள் ஆகிற பேர்களின் கோலா ஹலத்தை யுண்டு பண்ணினான்
கீதங்கள் பாடினர் கின்னர் கெருடர்கள் -என்று கீதங்களை செவிப்படுதினான்
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -என்று காஹள சங்கங்களின் உடைய முழக்கத்தை மூட்டினான்
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -எம்ன்கிற ஆசீச ஆரவாரத்தைக் கிளப்பினான்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -என்கிற ஸ்தோத்ர கோலா ஹலங்களை பிறப்பித்தான்-

ஆக -இப்பைப் பட்ட கோலா ஹலங்களை விளைவித்த மாத்ரமே அன்றிக்கே
அர்ச்சிராதி கதியையும்
ஆதி வாஹிகர் சத்காரத்தையும்
பரமபத திவ்ய தேச பிராப்தியையும்
அங்குள்ளார் உடைய பஹூ மானத்தையும்
ஆனந்தமயமான ஆஸ்தானத்தில் இருப்பையும்
ஸ்வ சரண கமல பிராப்தியையும் பெற்றாராய்-
பேசும் படியும் பண்ணி அருளினான் – அது எல்லாம் பேசப் படுகிறது இத் திருவாய் மொழியில் –

ஆறாயிரப்படி அவதாரிகை –இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமாநோடே சம்ச்லிஷ்டரான ஆழ்வார்
தாம் திரு நாடு ஏற எழுந்து அருளுகிற படியையும்
தாம் எழுந்து அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடுகிற படியையும்
திரு உள்ளத்தாலே ப்ரத்யஷீ கரித்து-அன்யாபதேசத்தாலே -பேசுகிறார் –
மகள் தோழி தாய் பாசுரமாக அல்ல –
தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றார்களாக பேசின இது அன்யாபதேசம் -ஈடு
நாரணன் தாமரைக் கண்டு உகந்தே -என்று ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அர்ச்சிராதிகதியும் சத்காரங்களும் கிடைத்ததாக வைத்துச் சொல்லும் முகத்தாலே
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -என்பதால் அன்யாபதேசப் பாசுரம்
இங்குள்ள சகல ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வார் பெற்ற பேறு தமக்கும் கிட்டும் என்று விஸ்வசித்து இருக்கலாமே-

———————————————————————————————————————————————————————————————————

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திரு நாட்டுக்கு புறப்படுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட உகப்பிலே ஸ்தாவர ஜங்கமங்களுக்கு உண்டான வேறுபாட்டை அருளிச் செய்கிறார் –
தமக்கான பேறு இங்கனே அசலிட்டு சொல்கிறபடி
எங்கும் சூழ்ந்த ஆகாசப் பரப்பு அடங்கலும்
ஆபரணம் போன்று விளங்கும் முகங்களின் முழக்கம் மங்கள வாத்திய கோஷம் போலே செவிப்பட்டது
ஆழ்ந்த கடல்களில் அலையா நின்றுள்ள திரைகள் ஆகிற கைகளை எடுத்துக் கூத்தாடின
கீழ் சொன்ன மங்கள வாத்தியத்துக்கு சேர இந்த நர்த்தனமும் மங்களமாக கூடிற்று
சப்த த்வீபங்களும் புதுக்கணித்தன -அன்றிக்கே -உபஹாரங்களை ஏந்தி நின்றன
இவை எல்லாம் -என்னப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே
ஸ்ரீ வைகுண்டத்துக்கு வரப் புறப்படுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
இவை ஒருவர் கட்டளைக்கு கட்டுப் பட்டுச் செய்தது அன்று
ப்ரீதி உள் அடங்காமல் செய்தது என்பதை காட்டி அருளுகிறார் -உகந்து -என்று-

—————————————————————————————————————————————————————————————————————–

நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற்குடம் பூரித்து உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே –10-9-2–

மேல் உண்டான லோகங்கள் பண்ணின சத்காரங்கள் –
நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்கள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்கள் ஆயின
கீழே சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின – ஒரு கிஞ்சித் கார்யத்தளவில் பர்யாப்தி பெறாமல் பூர்ண கும்பம் ஆகும் கிஞ்சித் காரமும் செய்தன –
ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம்-ஈடு
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன -நீரணிந்த கடல்கள் ஒரு கால் ஆடினோம் என்று இராமல் ஹர்ஷத்தால் நிரந்தரமாக ஆர்த்துக் கொண்டு இருந்தன
நெடு வரைத் தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே-அந்த அந்த லோகத்தில் உள்ளார் பெரிய மலை போல்
இருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டு தாங்களும் தொழுதார்கள்
உலகு -உலகர் -உயர்ந்தோர் –

————————————————————————————————————————————————————————————————————————-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி யன்று யளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்து எதிரே –10-9-3-

ஆதிவாஹிக லோகங்கள் சில வுண்டு -வழி நடத்துமவர்கள்
அவர்கள் எதிரே வந்து -தூபம் காட்டி -பூ மாரி பொழிந்து
கை படைத்த பயன் பெற்றோம் என்று தொழுது நின்றார்கள்
எம்பெருமான் உலகு அளந்த செயலுக்கு தோற்று அடிமைப் பட்டவர்கள் அன்றோ இவர்கள் என்று ஸ்தோத்ரம் செய்தனர்
அங்கு உள்ள முனிவர்களும் இரண்டு அருகும் நின்று கொண்டு
இங்கே எழுந்து அருள வேணும் இங்கே எழுந்து அருள வேணும்
என்று தங்கள் மௌன விரதம் தவிர்ந்து நல் வரவு கூறி உபசரித்தார்கள்
பரமபதம் போவதற்கு இதுவே வழி என்று எதிரே வந்து சொன்னார்கள் —

————————————————————————————————————————————————————————————————————————

எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –10-9-4-

மேல் உலகங்களில் தேவர்கள் இவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு தோப்புக்களை சமைத்தும்
வாத்திய கோஷங்களைப் பண்ணியும் கொண்டாடும் படியைக் கூறுகிறார்
இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ என்ற நசையால் பார்த்த இடங்கள் தோறும் தோப்புக்களை சமைத்தனர்
போகிறவர்கள் அங்கே தங்கிப் போகாமால் இருந்தாலும் தங்கள் ஸ்வரூப சித்திக்காக கிஞ்சித் கரிக்க வேணுமே –
ராஜாக்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று போகைக்காக மானாவி சமைப்பார்களைப் போலே -ஈடு
மகா நவமி உத்சவக் காட்சியை மானாவி என்று இலக்கணையால் சொல்லுகிற படி
கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்-ஆதித்யர்கள் நிலை விளக்குப் போலே இங்கனே எழுந்து அருளுக
என்று கைகளை நிரையே காட்டினார்கள்
அர்ச்சிராதிகளான ஆதிவாஹிக கணங்களை சொன்னதாகவுமாம்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த -அதிரா நின்றுள்ள தொனியை உடைய முரச வாத்தியங்கள்
கடல் போலே முழங்கின
இத்தனை சத்காரங்களும் -மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-எம்பெருமான் உடைய
திவ்ய அலங்காரங்களில் ஈடு பட்டவர்களும்
பிராட்டி முன்னாக பணிந்தவர்க்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
இங்கே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்பதே ஹேதுவாக பங்கு பெறாதே திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை
அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்கள் கொடுக்கிறபடி -ஈடு
மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு செல்ல
நீ ஆந்தராளிகன் உனக்குப் பங்கு இல்லை -என்ன
நன்மையில் குறை யுன்டாய்ச் சொல்லுகிறி கோளோ-அன்றே – என்ன
நன்மையில் குறை இல்லை -இது இ றே ஹேது என்ன
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கைவிடப் பெற்றோம் இ றே என்று
புடைவையை முடிந்து ஏறட்டு கூத்தாடினான் -ஈடு
இதனால் பிராக்ருதர்கள் ஸ்ரீ வைஷ்ணவன் என்று திரச்கரிப்பதும் நன்றே என்று காட்டின படி
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -த்வாம் து திக் குலபாம்சநம் -என்று ராவணன் சொல்லி கர்ஹித்தத்தையே சிறப்பாக கொண்டான் இ றே-

——————————————————————————————————————————————————————————————————

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –10-9-5-

வாசலில் வானவர் என்றது -அர்ச்சிராதி மார்க்கத்தில்
தலை நின்ற வருணன் -இந்த்ரன் -பிரஜாபதிகள் –
அவர்கள் மாதவன் தமர் என்று கொண்டாட -இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த
அந்தப்புர பரிகர பூதர்கள் -என்று சொல்லிக் கொண்டாடினார்கள்
போதுமின் எமதிடம் புகுதுக-இங்கே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்க
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் -பாட்டுக்களை கின்னரும் கெருடர்களும் பாட
கின்ன தேசம் கெருட தேசம் -அங்கு உண்டே
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வைதிகர்கள் -சமாதாரானம் பண்ணுமவர்கள் -தங்கள் உடைய சமாதாரன பலன்களை இவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்தார்கள்
முக்திக்கு செல்பவர்கள் எதையும் விரும்பி செல்லா விடிலும்
தங்கள் தங்கள் அதிகாரங்களை கொடுப்பாரும்
பாடுவாரும்
யாக பலன்களை சமர்ப்பிப்பாரும்
இருப்பது அவர்கள் தம் தம் சத்தை பெறுகைக்காக-

———————————————————————————————————————————————————————————————————————————————

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –10-9-6-

திவ்ய அப்சரஸ்கள் மகிழ்ந்து வாழ்த்தின படி
வேள்வியுள் மடுத்தலும் -யாக பலன்களை சமர்ப்பித்த அளவிலே
விரை கமழ் நறும் புகை -நறு மணம் மிக்க தூபங்கள் சிலர் இட
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் -வேறு சிலர் காளங்களையும் சங்குகளையும் ஒலிக்க
காளம் -திருச் சின்னம் -காஹளம் -காஹளீ-என்றும் சொல்வர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-
எம்பெருமான் உடைய கையும் திரு ஆழியுமான சேர்த்தி அழகிலே ஈடுபட்டவர்கள் அன்றோ நீங்கள்
வாருங்கோள்
இவ்விடத்தை ஆளுங்கோள் -திவ்ய அப்சரஸ்கள் மகிழ்ந்து வாழ்த்தின படி
வாள் ஒண் கண் மடந்தையர்-தேசாந்தரத்தில் நின்றும் போந்த பிரஜையை தாய்மார் குளிரப் பார்க்குமா போலே
ஒளியை உடைய அழகிய கண்களால் நோக்கின படி -ஈடு
மகிழ்ந்து -என்பதால் ஒருவர் உடைய நிர்பந்தத்தினால் செய்தவர்கள் அன்று
ப்ரீதி தூண்டச் செய்கிறார்கள்
இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனனாய்ப் போந்தவன் சரீர வியோக சமானாந்தரத்தில்
தங்களுக்கு அவ்வருகில்லாதவர் கொண்டாடும்ன் படி இ றே பெரும் பேறு -ஈடு

———————————————————————————————————————————————————————————————————

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த வெங்கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி குடி யார்க்கே –10-9-7-

மருத் கணங்களும் வசுக் கணங்களும் தங்கள் எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்து வந்து தோத்திரம் செய்யும் படி சொல்கிறது
கீழ் வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே -என்றார்
அதையே ஆதார அதிசயத்தால் மீண்டும் மடந்தையர் வாழ்த்தலும் -என்கிறார்
திவ்ய அப்சரஸ் கள் வாழ்த்தின அளவிலே
மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -எல்லைக்கு அப்பால் சென்று புகழ்ந்தார்கள்
இங்கே ஈடு -ஒரு நிமேஷ மாத்ரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள்
தங்கள் எல்லைக்குள் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையால் தொடர்ந்து புகழ்ந்தார்கள்
அவர்கள் தாங்கள் சடக்கென போகும் இதுக்கு இடி என் என்னில்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும் –
உடன் கூடுவது என்று கொலோ -என்றும் இருக்கையாலும்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் -என்று
வழியில் ஆதரிப்பவர்கள் எல்லாரும் என் சொல்லி ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறார் மேல்
தொடு கடல் கிடந்த வெங்கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எங்கோவலன் குடி குடி யார்க்கே –
இவர்கள் குடி குடியாக ஆட்பட்டவர்கள்
திரு நாட்டிலும் கூட மறக்க முடியாதபடி திருக்குடந்தை அனுபவம் செல்லா நிற்கும் –
ஆராவமுதே -என்கிற திருவாய் மொழியே மூல காரணம் –
த்ரிகாலஞ்ஞரான ஆழ்வார் அறிவாரே -இதனால்
இத்தை இட்டும் திருக்குடந்தை புகழ்ச்சி பிராப்தம்
திருமங்கை ஆழ்வாரும் -தொடங்கும் பொழுதும் –
-தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது –என்றும்
சொற் பொருளாவீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும் அருளிச் செய்து
சரம பிரபந்தத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று அருளிச் செய்து தலைக் கட்டினார்
தனியாகவும் திரு வெழு கூற்று இருக்கை பிரபந்தம் அருளிச் செய்தார்-

—————————————————————————————————————————————————————————————————————–

குடி குடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே –10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் -பரமபததுக்கு புறம்பாக நித்ய சூரிகளும் இவர்களை எதிர் கொள்ளும் படி சொல்கிறது –
இவர் கோவிந்தன் தனக்கு குடி குடியார் என்று –
அமரர்கள் அதிபதி –நித்ய விபூதி நாத்வம் – குறையாக நினைத்து -மண்ணுலகில் இடைக்குலத்திலே வந்து பிறந்து
ஆநிரை மேய்த்து மகிழ்ந்து -திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி –
கன்று மேய்த்து இனிது உகந்த காளை –
குன்று எடுத்து ஆநிரை காத்து கோவிந்த பட்டாபிஷேகம் கண்டு அருளிய சௌலப்யம் குணத்தில் தோற்ற அடியவர்கள்
கீழ் அர்ச்சாவதார பிராவண்யம் சொல்லி சத்காரம்
இதில் விபவாதார பிராவண்யம் சொல்லி சத்காரம்
முடியுடை வானவர்-எம்பெருமானுக்கு திரு அபிஷேகம் உண்டு -இவர்களுக்கும் உண்டோ என்னில்
அவன் ரஷகத்வத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமை செய்கைக்கு முடி சூடி இருப்பார்கள் -நம்பிள்ளை –
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட
திரு மதிள்கள் சூழ்ந்த திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-இப்போது தான் மாதவன் வடிவுடையவன் ஆனான்
யுவவே வசூதேவோ பூத் -என்று கம்ச வதத்துக்கு பின்பு பிள்ளையைக் கண்ட ஸ்ரீ வசூதேவரையும் தேவகியாரையும் போலவும்
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி -புனர் யுவவே -என்று சொல்லப் பட்டால் போலேயும்
தங்கள் வரவால் வுண்டான ஹர்ஷத்தாலே புதுக்கணித்தது வடிவு –நம்பிள்ளை
இங்கனே புதுக்கணித்தது பெருமாளுக்கு மாத்ரம்அன்று -பிராட்டிக்கும் கூட -என்று காட்ட மாதவன் -என்கிறார் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –10-9-9-

நித்ய சூரிகள் இவர்கள் என்ன பாக்ய சாலிகள் என்று வியந்து பேசுகிறபடி
வைகுந்தம் புகுதலும்–பரம பதத்தை சென்று கிட்டின அளவிலே
வாசலில் வானவர் -திருவாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் – ஸ்ரீ வைகுந்த நாதனுக்கு அடியவர்களாக வரும் இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் -என்று சொல்லி மேலும்
எமதிடம் புகுதென்று-எம் ஸ்தானம் -பதவியை வஹித்து நிர்வஹிக்க வேணும் -என்று சொல்லி கையிலே பிரம்பையும் கொடுப்பார்களாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -ஸ்ரீ பரத ஆழ்வானும் இளைய பெருமாளையும் போலே குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் -ஈடு
வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ –
என்ற பகவத் சாஸ்திரத்திலும் பக்தை -பாகவதை இரண்டு வர்க்கங்கள் உண்டே
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் -ஆண்டாள்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-மண்ணவர் வைகுந்தம் புகுவது விதியே -என்றபடி
தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்திரீ நியதிர் விதி -அமர கோசம்
விதி -பாக்யம் -என்றபடி
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே -அங்கு சென்று நாங்கள் அனுபவிக்க பாரித்து இருக்க
அத்தை விட்டு இங்கே வருவதே என்று வியந்தார்களாம்
இது எங்கள் உடைய பரம பாக்யம் அன்றோ -என்று கொண்டாடினார்கள் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –10-9-10-

பதியினில் -தங்கள் உடைய திவ்ய ஸ்தானங்களிலே -தங்கள் இருப்பிடம்
தம் தம் திரு மாளிகைகளிலே சென்று புக்கு
நிதியும் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையையும்
இவன் ஒரு சம்சாரி சேதனன் -நாம் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் என்ற வாசி வையாதே
இவனை சிம்ஹாசனத்திலே உயர வைத்து அவர்களுக்குப் பாங்காக
தாங்கள் இருந்து திருவடி விளக்குவார்கள் –ஈடு
மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நமது பரம பாக்யம் அன்றோ
விஷயங்கள் நடையாடும் இருள் தரும் மா ஞாலத்தில்
அநந்ய பிரயோஜனராய்
பகவத் குணங்களையே அனுபவிக்கும் விண்ணுளாரிலும் சீரியராய்
இங்கே வந்து புகுரப் பெற்றது நமது பாக்யம் என்று ஒரு கால் சொன்னால் போதுமோ
நல்வேதியர் -நல் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்ட நித்ய சூரிகள்
யத்ரர்ஷய பிரதமஜா யே புராணா -என்றும்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும்
தத் விப்ராசோ விபந்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே -என்றும் -வேதங்களால் பிரதி பாதிக்கப் பட்டவர்கள் அன்றோ –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் -அவ்வளவிலே பகவத் பரிசாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ண பிரசாதத்தையும்
நிறை குடங்களையும் -பூர்ண கும்பங்களையும்
விளக்கங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்திக் கொண்டு வந்தனர் –
மதி முக மடந்தையர் -தேசாந்தரம் போன பிரஜை வந்தால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
ஹர்ஷத்தால் பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் யாயிரத்து இவை வல்லார் முனிவரே –10-9-11-

நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி
அதிலே ஈடுபட்டு
அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருப்பார்களோடு ஒப்பார் -பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வந்தவர் எதிர் கொள்ள -கீழ் சொன்னவற்றை சங்க்ரஹமாக அநு பாஷிக்கிறார்
பிராட்டியாரோடே கூட எம்பெருமான் தான் வந்து எதிர் கொள்ள -நம்பிள்ளை
அயர்வறும் அமரர்களும் அவர்கள் அதிபதியுமாக எல்லாரும் வந்து எதிர் கொள்ளத் தட்டில்லையே
இப்படி எதிர் கொண்டவர்கள் அனைவரும் புடை சூழ ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே
ப்ரஹ்மானந்த சாலிகளான அடியார்களின் அழகு ஒலக்கத்தின் நடுவே இருந்த படியை யாயிற்று இப்பதிகத்தில் அருளிச் செய்தது ஆயிற்று –
அந்தமில் பேரின்பத்து-இதுக்கு ஈடு -சம்சாரத்தில் சுகம் என்று பிரமிக்கும் இத்தனை -துக்கமே வுள்ளது –
பாண்டு ஒருவன் மேலே அம்பை விட சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு ஷணம் ஆயிற்று சுகம் உள்ளது
அத்தனையும் புஜிக்க ஒட்டிற்று இலையே -என்றான் இ றே –
அடியரொடு இருந்தமை -ஆழ்வார் திரு நாட்டிலே எம்பெருமானோடு அனுபவிக்க ஆசைப் பட்டார் அல்லர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அடியாரொடு இருக்கவே ஆசைப் பட்டார்
ஆசைப் பட்ட படியே பெற்ற பேற்றை தெரிவித்தார் யாயிற்று இங்கு –
கொந்தலர் பொழில் குருகூர் -ஆழ்வார் தமக்கு பேறு அணித்தாயிற்று என்று களிக்கவே
அவர் ஊரில் உள்ள சோலையும் புதுக்கணித்தாயிற்று –

————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்த தனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியருடனே யிருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading