கீழ்த் திருவாய் மொழியில் ஆழ்வார் உடைய ஆனந்தம் அபரிமிதமாய் இருந்தது
அபிமத விஷயத்தில் அழுக்கை உகக்கும் காமுகன் போலே
ஞானிகளின் ஞான பரிமளம் விளங்கும் தேஹத்தை விட மாட்டானே எம்பெருமான்
மணத்தின் வாசி அறிந்து குரு வேரைச் சூடும் போகிகள் மன் பற்று கழற்றாதே சூடுமா போலே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புளகீக்ருத காத்ருவான் -கொண்ட திருமேனி உடன் திரு நாட்டுக்கு கொண்டு போக விரைந்தான்
இது வரை நம் உடம்பின் நசையாலே இங்கு வைத்து இருந்தான் போலும் என்று பார்த்து
தேக தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
தோஷங்களையே போக்யமாகக் கொண்டு -வத்சலனாய் மேல் விழத் தொடங்கினான்
விடுவிக்க உபாயம் தெய்வாதீனமாக ஆழ்வாருக்கு ஈட்டியது
ஸ்வா தந்த்ரனாய் இருக்கச் செய்தேயும் தம் பக்கம் பார தந்த்ர்யம் கொண்டாடி வித்தித்த படி செய்வதாக இருந்தானே
விதித்த படி செய்வதாக நியமனத்தை எதிர்பார்த்தவன் நிஷேதத்துக்கும் கட்டுப்பட வேண்டுமே
இவ்விஷயத்தில் சொல்லுக்கு முரணாக நடப்பது தகுதியோ என்று கேட்க
மறு மாற்றம் இல்லாமையாலே
ஆழ்வீர் நல்ல விரகு செய்து என் ஆவலைத் தவிர்த்தீர் என்று கொண்டாட
சர்வ நியந்தா
சர்வாதிகன்
சர்வேஸ்வரன்
தான் ஆவலோடு செய்ய நினைத்த செயலையும் தம் சொல்லுக்கு கட்டுப் பட்டு தவிர்ந்து அருளினானே
இது என்ன சீலம்
இது என்ன பாரதந்த்ர்யம்
என்று ஈடுபட்டு
நெடும் போதும் உணர்த்தி அற்று இருந்து
பின்பு தெளிந்து
இந்த மகா குணத்தில் அழிந்து போகாமல் இருக்க தம்மோடு ஒத்த அனுபவ ரசிகர்களுக்கு உபதேசித்து அருளுகிறார்
செஞ்சொல் கவிகாள் -என்று
சீல குணத்தில் கை வையாது இரும் -ஆழம் காலை உணர்த்த பிராப்தம் என்று
இப்படி ஆழ்வார் திரு மேனியில்வ்யாமோஹம் காட்டி அருளிய பெருமான் திரு மால் இரும் சோலை அழகர்
த்யாஜ்ய ஹேய வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தழைக்கும் ஆச்சார்யஹிருதயம் -185-
————————————————————————————————————————————————————————————————————————————————-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திரு மாலிரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிருமவை யுண்டு தானேயாகி நிறைந்தானே –10-8-1-
கவிகள் -சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்னுமா போலே கவி பாடுமவர்கள்
சொற் கவிகள் -சொற்கள் மிடைந்து என்னைக் கொள் என்னைக் கொள்-என்ன அர்த்த புஷ்டியுடன் கவி பாடுமவர்கள்
செஞ்சொற் கவிகள் -பிரயோஜனத்தை கணிசியாமல் பகவத் விஷயத்தில் ஈடுபடுமவர்கள்
இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும்
செந்தமிழ் பாடுவார் -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -என்றும்
ஆடிப் பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -என்றும்
கொண்டாடப் படும் முதல் ஆழ்வார்கள் போல்வார்
உயிர் காத்து ஆட்செய்ம்மின்-கவி பாட நீங்கள் இருந்தாக வேணுமே
உயிர் காத்து கவி பாடுமின் என்னாதே ஆட்செய்மின் -என்றது -கவி பாடுகை வாசிகமான ஆட்செய்கையே
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் யுண்ட மாயன் –
நீர்மையிலே உள் குழையாதே-வலிய நெஞ்சாய் இருமின் –
சிற்றாள் கொண்டான் ஸ்வாமி பணிப்பராம் -ஆழம் காலிலே இழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கால் நாட்டுமா போலே ஆழ்வாரும் கொண்டைக் கால் நாட்டுகிறார் -என்று
உயிர் காத்து ஆட்செய்ம்மின்-இன்னார் உயிர் என்று சொல்லாமல் –
எம்பெருமான் உயிரைக் காத்து ஆட்செய்மின் -என்பாராம் எம்பெருமானார்
அவன் மேல் விழத் தாங்கள் இறாய்த்தால் அவனை இழக்க நேரிடுமே
அவன் விரும்பிய போகத்தை நான் தான் குலைத்தேன் ஆகிலும் நீங்களாவது குலைக்காத படி அவன் வழியே ஒழுகி அனுபவியும் என்றவாறு
திரு மாலிரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து-தான் சேஷியாகவும் நான் சேஷ பூதனையும் இருக்கும் முறையை
நிலை நாட்ட வருபவன் போலே வந்து -கள்ளச் செயல் வல்லமையினால் அத்தலை இத்தலையாம் படி பண்ணி
என்னைத் தலை மேலே தூக்கிக் கொண்டு உலாகுகிறான்
வஞ்சக் கள்வன் என்று அறிந்து வைத்து இருந்தும் வலையில் விழச் செய்த மாயன்
பெய்யும் மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ
மாயக் கவியாய் வந்து -உலகில் நடையாடாத கவிகளை உம்மைக் கொண்டு பாடுவித்துக் கொள்கிறோம்-இசைவீரா என்றான்
விரல் நுழைந்த இடத்தில்தலை நுழைக்க வல்ல மாயன்
என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே
என்னுள்ளே வந்து புகுந்து கலந்து
இன்னபடி செய்து அருளினான் என்று அயர்வறும் அமரகளுக்கும் அறிய நிலம் இல்லாத படி
என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி
தானேயாம்படி மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் -ஆறாயிரப்படி
பூர்வர்கள் ஆழ்ந்த பொருளை அறிவிக்கும் அழகில் நீராய் உருகுவோம் -திவ்ய பங்க்திகளை அனுபவித்தே கால ஷேபம் செய்வோம்
———————————————————————————————————————————————————————————————————————————————————————————-
தானே யாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் யுண்டே –10-7-2-
ஆழ்வார் எம்பெருமான் ஹன்னோடு கலந்த பின் அவனுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக் கண்டு இனியர் ஆகிறார் –
என்னை முற்றும் உயிர் யுண்டேதானே யாகி நிறைந்து -என்னை சர்வ பிரகாரத்தாலும் பரி பூர்ணனாய் புஜித்து தானே பரி பூணன் ஆனான் –
இருதலை ஓன்று சேரப் பரிமாறப் புகுந்து
ஒரு தலையை ஒன்றும் இல்லையாய் யாக்கி
ஒரு தலையை பூர்ணனாய் ஆக்கிக் கொள்வது நியாயமோ
எல்லா வுலகும் உயிரும் தானே யாய் -அவன் தானே சர்வேஸ்வரன் ஆனாலும் என்னை முற்றவும் யுண்ட பின்பே எம்பெருமான் ஆனான்
ஆழ்வார் வாக்கில் புறப்பட்ட பின்பே தனது சர்வேஸ்வரத்வம் குதர்க்கிகள் துர்வாதிகள் இடமிருந்து காக்கப் பட்டது
திண்ணன் வீடு ஒன்றும் தேவும் மூலம் பரத்வம் ஸ்தாபித்து அருளினார்
தானே யான் என்பானாகித்-யானே என்பான் தானாகி -நாமம் மாத்ரமான நான் அவன் என்னலாம் படி
பரதந்த்ரரான தம்மை அவன் ஸ்வ தந்த்ரர் ஆக்கி -இவர் இடத்தில் தான் பாரதந்த்ர்யம் வஹிக்கல் ஆனான் –
தம்மை தடவிப் பார்த்த இடத்தில் காண்கிறிலர்-அவன் தலையாலே சுமக்கக் காண்கிற இத்தனை –
அவனும் தன் தலையிலே பாரதந்த்ர்யத்தை ஏறிட்டுக் கொண்டு இவர் தலையிலே பாரதந்த்ர்யத்தை வைக்கையாலே இவரையே காண்கிற இத்தனை -ஈடு
தன்னைத் தானே துதித்து -எம்பெருமான் ஸ்துதிக்கு விஷய பூதன் மாத்ரம் அல்லன்
ஸ்திதிக்கு கர்த்தாவும் அவனே யாயிற்று
குருகூர்ச் சடகோபன் சொல் -என்று நான் சொன்னதாகச் சொல்லி வைத்ததும் அவனே யாயிற்று –
அவன் யாவன் என்னில் –
தன்னுடைய அனுபவம் எனக்கு பரம போக்யம் ஆவதற்கு எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான்-
இப்படி ரசித்து பருக வேண்டிய அமுதம் என்னை முற்றும் உண்டதே –
———————————————————————————————————————————————————————————————————————————–
என்னை முற்றும் உயிர் யுண்டு என் மாயா வாக்கையிதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே –10-7-3-
எம்பெருமானுக்கு தன் மேல் உள்ள அபி நிவேசம் எல்லை அற்று இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மீண்டும் என்னை முற்றும் உயிர் யுண்டு -என்கிறார்
ஆழ்வாரை அனுபவிக்கி எம்பெருமானுக்கு பெறாப் பேறு பெற்றதாய் இருக்கையாலே –
யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்க பெருகையால் வந்த ஏற்றம் -ஈடு
லஷ்மி சம்பந்தம் போன்ற ஏற்றம் ஆழ்வார் உடைய சம்பந்தத்தால் பெற்றான் என்கை
என் மாய வாக்கை -ஆத்மவஸ்துவை அனுபவித்து அவ்வளவோடு பர்யாப்தி பெறுவானாய் இருந்தானோ –
அழுக்கு உடம்பு பொல்லா வாக்கை -ஹேயம் என்று இவர் அருவருத்து நில்லா இருக்கச் செய்தேயும்
அவன் இதில் பரம போக்யதா புத்தி பண்ணி மேல் விழா நின்றான்
என்னை முற்றும் தானேயாய் -இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான ஹேயவஸ்துவிலும் புக்கு வ்யாபிக்கையாலே தானே என்னத் தட்டில்லை
நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும்
என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காண முடியாதபடி அவனே என்னதாயிற்று
இப்படி இருந்த அந்த மாய அம்மான் விரும்பி வர்த்திக்கும் இடமான திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த –
அதாவது அவனை உகந்து
அவ்வழியாலே திவ்ய தேசத்தை உகந்து
அவ்வழியாலே திவ்ய தேசம் இருக்கும் திக்கை உகந்து
இப்படி சம்பந்த சம்பந்திகள் வரையிலும் உகப்பு செல்லும்படி அவகாஹித்தேன் –
இன்னம் போவேனோ கொலோ -இத்திசைக்கு அப்பால் வேறு போக்கிடம் உடையேனோ –
என் கொல் அம்மான் திருவருளே -இப்படி கலந்து பரிமாறின பின்பும் இன்னமும் பாரியா நின்றான்
அந்தோ ஈது என்ன திருவருள் –
——————————————————————————————————————————————————————————————————————————————————
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிர் ரும் தானேயாய்
நன்கென்னுடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே –10-7-4-
என்னோடு சம்ச்லேஷம் பெறுகைக்கு ஈடான தேசம் ஏதோ வென்று தேடிக் கொண்டு திருமலையிலே வந்து புகுந்த பின்
தான் கருதின படியே அங்கே சம்ச்லேஷித்து ப்ரீதனாய்
இந்த சம்ருத்தி எல்லாம் விளைவித்தது திருமலை இ றே என்று கொண்டு
திருமலையையும் என் உயிரும் உடலும் போலே தனக்கு போக்யமாகக் கொண்டு கை விடுகிறிலன்
என் உயிரையும் உடலையையும் திருமலையையும் அனுபவித்து ப்ரீதன் ஆனான்
பிரதி கூலர் இந்த சம்ருத்தி கண்டு பொறுக்க மாட்டாதே தரைப்படும்படி ப்ரீதனான் என்கிறார் –ஆறாயிரப்படி
என் கொல் அம்மான் திருவருள்கள் -அந்யதாஞானம் விபரீத ஞானம் பிரமித்தாலும் -என்ன கிருபை என்றே பெரியோரைச் சொல்வது போலே திருவருள்கள் என்கிறார்
அவாப்த சமஸ்த காமனாய் இருந்து வைத்து இப்படி பெறாப் பேறு பெற்றவனாக அலமாந்து –
மருள் கொண்டு உள்ளானே -என்பதற்கு பதில் -திருவருள்கள் என்கிறார்
சர்வேஸ்வரனுக்கு நிரதிஷ்டா ப்ரமம் யுண்டாமாகாதே -ஈடு
நிர்விஷய ப்ரமம் -கயறு கண்டு பாம்பு என்பார் விஷயம் இருந்து கொண்ட ப்ரமம்
சர்வேஸ்வரனுக்கு அதுவும் உண்டாம் போலும் என்கிறார்
நன்கென்னுடலம் கை விடான் -என்பதை நோக்கி அருளிச் செய்கிறார்
செருக்கனான அரசன் நீச ஸ்திரீ கால்கடையில் துவளுமா போலே ஹெயமான உடம்பில் வ்யாமோஹம் பண்ணுகிறானே -இது என்ன ப்ரமம் –
ஞாலத்தூடே நடந்து உழக்கி -உலகளந்த வ்யாஜ்யத்தாலே ஆழ்வாரை அனுபவிக்க ஏகாந்த ஸ்தலம் ஏதோ என்று
ஆராய்ந்து தெற்குத் திருமலையில் வாய்ப்பாக கண்டபடியாலே அங்கே நின்று அருளினான் ஆயிற்று
நங்கள் குன்றம் கை விடான் -நன்கென்னுடலம் கை விடான்-அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் சாத்தியம் –
நண்ணா அசுரர் நலியவே-இப்படி இருக்கிற இருப்பிலே விரோதி வர்க்கம் தன்னடையே தொலைந்தது –
எம்பெருமானுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் இல்லை
திருக் கல்யாண குணங்கள் இல்லை -என்று பிதற்றும்
ஆசூர வர்க்கம் திருமால் இரும் சோலை மலையில் நின்ற நிலையிலே தொலைந்தது
அப்படியே ஆழ்வார் திரு மேனியில் பண்ணும் வ்யாமோஹம் தெரிந்த வாறே ஆழ்வார் இடத்தில் குறைகளை என்னும் ஆசூர வர்க்கம் தொலைந்தது –
————————————————————————————————————————————————————————————————————————————————————-
நண்ணா வசுரர் நலிவெய்த நல்ல வமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் என்னும் நன் முனிவரின்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலை யானே –10-7-5-
ஆனந்தத்துக்கு போக்குவீடாக தென்னா தென்னா என்று ஆளத்தி வைத்து பாடிக் களியா நின்றான் –
எம்பெருமான் உடைய அவதாரம் போலே யாயிற்று திருவாய் மொழியினுடைய அவதாரமும் –
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதியம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும்
பரித்ராணாய சாது நாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
இதே காரணங்களுக்காக திருவாய் மொழியும் திருவவதரித்தது-
விஷ்ணு பக்தி பரோ தேவ -விபரீதஸ் ததா ஸூர –
பகவத் பக்தர்கள் -நல்ல அமரர்கள்
விபரீதர்கள் -பகவத் த்ரோஹிகள் -நண்ணா வசுரர்கள்
அவ்யபதேசனுக்கு அனந்தரத்திலவன் தமப்பன் செய்தததைக் கேட்டு இவன் என் செய்தான் ஆனான் என்று கர்ஹித்தான் –
ஒரு மதிளை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ –
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியன இரண்டு பிரபந்தங்கள் உண்டாயாய் இருக்க -என்றான் ஆயிற்று
இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தம் ஆயிற்று -ஈடு
எண்ணாதனகள் என்னும் நன் முனிவரின்பம் தலை சிறப்ப -எண்ண முடியாதவற்றை எண்ணு கின்ற மகா முனிவர்கள்
இது போன்ற பிரபந்தம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதிகளை பரிபூர்தியாக பேசவல்லதாக வேணும் என்று வேண்டிக் கொண்டவர்கள் –
திருவாய் மொழி திருவவதரித்த பின்பு -மறுபடியும் மகா சபையைக் கூட்டி எம்பெருமானுக்கு இன்னம் குண விபூதி விக்ரஹங்கள் வேண்டும் என்றார்களாம்
இது தான் எண்ணா தன்கள் எண்ணுகை –
இன்பம் தலை சிறப்ப -இதுக்கு ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-திருவாய் மொழி அவதரித்த பின்பு -அவனுக்கு குண விபூதிகள் போராது என்று– இருந்த இழவு தீர்ந்து –அத்தால் நிரதிசய ஆனந்திகளாக –
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
-அதன் போக்யதையைக் கண்டு
அந்த சோலையில் உள்ள வண்டுகளைப் போலே தானும் ஒரு வண்டாய்
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலை யானே –
————————————————————————————————————————————————————————————————————————————————————————–
திருமால் இரும் சோலை யானேயாகிச் செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும்
திருமால் என்னை யாளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மானே –10-7-6-
திருமால்-திருமால் இரும் சோலை யானேயாகி- என்னை யாளுமால்
என்னை அடிமை கொள்வதற்காக –இங்கே உறைகின்றவன் என்றும்
-என் பக்கல் வ்யாமொஹமே வடிவாக உடையவன் என்றும்
அன்றியும்
செழு மூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும் திருமால்
மூன்று வுலகையும் தன் சிறிய வயிற்றினில் வைத்து ரஷித்து அருளியவன்
இப்படிப்பட்டவன்
என்னை யாளுமால் -ஜகத்துக்கு பிரளய ஆபத்தில் தன்னை ஒழியச் செல்லாதாப் போலே
என்னை ஒழியச் செல்லாதவனாய் தான் உள்ளானே
என் மேல் பிச்சேறி இருப்பவன்
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மானே-
ப்ரஹ்மாதிகளும் காண ஆசை கொண்டு பக்தி யுக்தர்களாய் திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ண
அவர்களுக்கு முகம் தொற்றாமே கடக்க நின்று அருள் செய்யும் சர்வேஸ்வரன்
என்னை யாளுமால்-எனக்குக் கண்ணுக்கு இலக்காம்படி திருமலையிலே வந்து நின்று என்னை அடிமை கொள்ளுகையில் பித்தன் ஆனான் –
இப்படி மூன்று வாக்யார்த்தமாக
திருமால் இரும் சோலை யானேயாகி-என்னை யாளுமால்
செழு மூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை யளிக்கும் திருமால் –என்னை யாளுமால்
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி யடிபரவ அருளை ஈந்த வம்மான் -என்னை யாளுமால்
—————————————————————————————————————————————————————————————————————————————————————
அருளை யீந்த வம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமால் இரும் சோலை மலையே –10-7-7-
இப்போது தம்முடைய சம்ருத்திக்கு அடி திருமலை ஆகையாலே இத்திருமலையே நமக்கு பிராப்யம் என்று கொண்டாடுகிறார் –
இதுவே -மருள்கள் கடியும் மணிமலை-பிராப்ய விரோதிகள் -அவித்யை முதலிய சகல அஞானங்களையும் அனைவர்க்கும் போக்கி அருளும்
பின்னையும்
தேவரும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை -தானே விரும்பி வந்து மேல் விழுந்து படுகாடு கிடக்கும் தேசம் –
அந்த தேவர்கள் யார் என்னில் –
அருளை யீந்த வம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும்
ஈஸ்வர அபிமானிகளான இவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும்
அஞ்ஞான இருளை வேரறப் போக்கி இருக்கும் முனிவர்களும்
ஏத்தும் அம்மான் திருமலை -ஒரு மிடறு செய்து ஏத்தா நின்ற சர்வேஸ்வரன் வர்த்திக்கும் திருமலை –
—————————————————————————————————————————————————————————————————————————————————-
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே –10-7-8-
திருமால் இரும் சோலை திருப் பாற் கடல் திரு நாடு திரு வேங்கடமலை ஆகிய திவ்ய தேசங்களில்
எல்லா வற்றாலும் தனக்குப் பிறக்கும் பிரீதியை
என்னுடைய அவயவங்களிலே சம்ச்லேஷத்தாலே பெற்றவனாய்
ஒரு ஷணமும் விட்டுப் பிரிந்து தரிக்க மாட்டாமல் நிற்கின்றான் -என்ன வ்யாமோஹம்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே-திரு முடிக்கு இவ்விரண்டும் ஏக ரீதியாகவும் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனதுடலே -திரு மேனியை ஏக ரீதியாகவும்
ஆக இரண்டு திருமலைகளிலும்-பர -வ்யூஹ நிலைகளிலும் பண்ணும் விருப்பம் எல்லாம் தன் திரு மேனியிலே பண்ணா நின்றான்
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-இத்தால் வேறு ஒன்றும் கலசாமல் தம்முடைய ஆத்மவஸ்துவிலும் மநோ வாக் காயங்களிலும் ஏக ரீதியாக விருப்பம் செய்கிறான்
உம்மையைத் தவிர்ந்து ஏவகாரம் கொண்டு அருளிச் செய்ததால் நம்பிள்ளை -சௌபரியைப் போலே அநேக வடிவு கொண்டு நில்லா நின்றான் ஆய்த்து –
ஒரு மா நொடியும் பிரியான் -ஒரு ஷனத்தில் ஏக தேசமும் பிரிகின்றிலன்
அஸ்மித அந்ய பாவனாய் இருந்து கால் வாங்கிப் போகாமல் அனுபவிக்கிறான்
என்னூழி முதல்வன் ஒருவனே -கார்ய அவஸ்தையிலும் காரண அவஸ்தையிலும் சேதன அசேதனங்கள் உடைய சத்தை தனது அதீனமாம் படி இருக்கிறவன் –
——————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் வுலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என்னம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே –10-7-9-
பெரும்பாகம் திரு உள்ளம் நோக்கியும் சிறு பாகம் எம்பெருமானை நோக்கியும் அருளிச் செய்கிறார்
ஆறாயிரப்படி -நமக்கு இந்த சம்ருத்தி எல்லாம் திருமலையால் வந்த சம்ருத்தி கிடாய்
நெஞ்சே இனி திருமலையைக் கை விடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச்சொல்லி
இவ்வாத்மாவின் உடைய நிகர்ஷம் பாராதே இத்தோடு கலந்து அருளினாயே யாகிலும்
என்னுடைய ஹேயமான இந்த பிராக்ருதியில் அபி நிவேசத்தை விட்டு அருள வேணும் என்று எம்பெருமானை பிரார்த்திக்கிறார்
பன்னீராயிரப்படி மட்டும் முழுவதும் திரு உள்ளம் குறித்து அருளிச் செய்வதாக வியாக்யானம் -மனமே -விளி போலே எம்பெருமானே விளி இல்லாததால்
நெஞ்சே நமக்கு த்யாஜ்யமான தேக பிராணாதிகள் மங்கும் படியாக செறிந்து ஆச்ரயிக்கப் பாராய்
நம் கார்யம் செய்து முடிக்கும் தனையும் திரு மால் இரும் சோலை மலையைக் கை விடாதே கொள்
இத்தாலே நீ வாழ்வாய் -என்று ஏக வாக்யமாக –
இது சுவை உடைத்ததன்று
வாழி மனமே கை விடேல் -என்று ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டதும் எம்பெருமானும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வாரைத் தந்தது அவர் திரு மேனி ஆகையாலே
நீயும் அவர் திரு மேனியை ஒரு காலும் விடாதே கைக் கொள் என்று கூறினானாக
அது கேட்ட ஆழ்வார் இது உக்தம் அன்று இத்தை தவிர வேணும் என்று அவனையே கால் கட்டுகிறார்
உடலும் உயிரும் மங்க ஒட்டு -சரீரமும் பிராணனும் மங்கும் படி இசைய வேணும்
வெறுப்புக்கு இலக்காக வேண்டுமே -உகப்புக்கு இலக்காகாக ஒண்ணாது
இவை அத திருமலை போலே உபாதேயமாக இருப்பவை அல்ல
மிகவும் ஹேயமானது என்று சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும் உணர்த்தினான் ஆயிற்று
இங்கு ஈட்டி ஸ்ரீ ஸூ க்திகள் -மங்க ஒட்டு என்கையாலே
இதுக்கு முன்புத்தை ஆழ்வார் உடைய இருப்பு பிராரப்த சேஷத்தால் அல்ல –
பகவத் அபிப்ப்ராயத்தாலே என்னும் இடம் தோற்றுகிறது-
ஈஸ்வரன் பற்றி விடேன் என்று இருக்கையாலே இருந்தார் என்கிறது –
————————————————————————————————————————————————————————————————————————————————————————
மங்க ஒட்டு உன் மா மாயை திருமால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீயாகி என்னை யளித்தானே
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே –10-7-10-
உடலும் உயிரும் மங்க ஓட்டே -என்று பிரார்த்தித்தார் கீழே
அவன் மேலே விழுந்து ஆதரிக்க
ஹேயத்வம் எடுத்துக் காட்டினால் நப்பாசை தவிரக் கூடும் என்று அருளுகிறார்
உடலும் உயிரும் மங்க ஓட்டே -என்று பிரார்த்திக்க -சாந்து பூசுவார் பரணியை யுடைத்தோ பூசுவது
சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயம் அன்றோ -என்று சொல்ல
விரிவான உக்திகளால் ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறார் –
மங்க ஒட்டு உன் மா மாயை-
தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா-குருவி பிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதாரம் தவிர்ப்பாய்
திருமால் இரும் சோலை மேய நங்கள் கோனே-
பரமபதம் விட்டு இங்கே நின்று அருளியது -அடியார்கள் சொன்னபடியே நடந்து ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை நிலை நிறுத்திக் கொள்ளத்தானே
யானே நீயாகி என்னை யளித்தானே -என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பரிவு உண்டோ அவ்வளவு பரிவு உனக்கும் இல்லையோ
யானே நீ என்னலாம் படி இருந்து வைத்து இப்போது எனக்கு அநபிமானத்தை செய்யத் தகுமோ
இப்படிச் சொல்லியும் எம்பெருமான் இணங்காது இருப்பது கண்டு
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே-
கீழே கண்கள் சிவந்து பெரியவை -8-8-ஜீவாத்மாவின் சீர்மையை எம்பெருமான் ஆழ்வாருக்கு உணர்த்தினார்
இப்போது ஆழ்வார் எம்பெருமானுக்கு அசேதனத்தின் தண்மையை உணர்த்துகிறார்
சிஷ்யா சார்ய க்ரமம் மாறினதாயிற்று
24 தத்துவங்களின் கூட்டாக நீ கட்டி வைத்திருக்கும் மாயையிலே நீ இப்போது வைத்து இருக்கும் ஆதாரத்தை தொலைக்கப் பாராய்
ஐம் புலன்களுக்கு பொங்கு அடைமொழி -பரம போக்யம் என்று பிரமிக்க வைக்கும் தன்மை வாய்ந்த -என்றபடி –
———————————————————————————————————————————————————————————————————————————————–
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தானாங்கார மாய்ப்புக்கு தானே தானே யானானை
தேனாங்காரப்பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்லாயிரத்துள்
மானாங்கார த்துக்கு இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே –10-7-11-
இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே-என்று விளித்து சொல்லுவான் என் என்னில்
கிளர் ஒளி இளமைப் பதிகத்தில் -2-10-மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றார்
அஞ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம்
சம்சயமும் அஞ்ஞானத்தில் ஒரு வகுப்பு
மதி நலம் மயர்வற அருளப் பெற்ற ஆழ்வாருக்கும்– முடிச் சோதி யாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ —
என்கிற சங்கை உண்டாயிற்றே
இவ்வளவே அன்றிக்கே
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும் ஹேயமான சரீரத்தில் ஆதரம் பண்ணும்படி நேர்ந்தது மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை வாசத்தின் பலனே
அப்படி அவன் பண்ணின ஆதரத்தை தவிர்ந்து கொண்டதும் திரு மால் இரும் சோலை மலை வாசத்தினால் தான் –
அடியார்களுக்கு விதேயன் ஆகைக்காகவே அர்ச்சாவாதார பரிக்ரஹம் ஆகையாலே
இதை ஆழ்வார் உணர்த்தவே கட்டளையை மீறல் ஆகாது என்று தவிர்ந்தான்
இதுவும் திருமால் இரும் சோலை மலை வாசத்தின் பலனே என்று காட்டுவதும் மற்றொரு கருத்து
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க-இதுவே இப்பதிகத்தின் பலன்
மஹான் அஹங்காரம் மனம் மூன்றைச் சொன்னது பிரக்ருதிக்கும் உப லஷணம்-சரீர சம்பந்தம் நசிக்கும் படியாக
வன் கையரான ஐவர் மங்கும் படியாக -கீழ் ஐந்தாக சொன்ன அனைத்துக்கும் உப லஷணம்
பிரகிருதி ப்ராக்ருதமான தம்முடைய திரு மேனியிலே நசை கெட்டு-என்றபடி
தான் ஆங்காரமாய்ப் புக்கு -என்னை அனுபவிக்க பெரிய செருக்கோடு புகுந்து
தானே தானே யானானை -நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி
மானாங்கார த்துக்கு இவை பத்தும்-
மஹான் அஹங்காரம் முதலிய கூட்டுரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காக சொன்ன இப்பதிகம்
பெரிய செருக்கோடு சொன்ன பதிகம் -என்றுமாம்
ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக் கட்டுகை என்னும் அத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறை இல்லையே-
——————————————————————————————————————————————————————————————————————————————–
திருவாய்மொழி நூற்றந்தாதி –
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனில் விஞ்சுதலைக்
கண்டு அவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு –97-
———————————————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply