திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-வேய் மரு தோளிணை மெலியுமாலோ–10-3-

கீழ்த் திருவாய் மொழியில் ஆழ்வார் தாமும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாய் அடிமை செய்யப் பாரித்தார் –
அப்போதே அடிமை செய்யப் பெறாமையாலே கலங்கினார் –
சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ என்ற அதி சங்கை பிறந்தது
பிரகிருதி சம்பந்தத்தின் கொடுமையாலும்
எம்பெருமான் உடைய ஸ்வா தந்த்ர்யம் பற்றவும் இங்கனே அதிசங்கை உண்டாக குறை இல்லையே
இந்த அதி சங்கையை நேர் கொடு நேர் விண்ணப்பம் செய்யாமல் இடைபென்கள் அதி சங்கை பண்ணி கதறின முகத்தாலே வெளியிடுகிறார்
படுக்கையிலே கூட இருக்கச் செய்தே -பசு மேய்க்கப் போகும் விடுவு காலம் வந்து
குயில் மயில் பாடல் ஆடல்கள் விடிவுக்கு அடையாளம் காட்ட
அவன் பசு மேய்க்கப் போனான் என்னும் அதி சங்கை பண்ணும் முகத்தாலே வெளியிடுகிறார்
தன்னை இன்னம் பூமியிலே வைக்கும் என சந்கித்து -என்பர் மணவாள மா முனிகள்
அன்யாபதேசத்தை விட்டு ஸ்வா பதேசத்தையே கொண்டு அருளின படி
அதுக்கு மேல் -மால் தெளிவிக்க தெளிந்து -என்கிறார்
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே -என்றதின் சுவடு அறிந்து பூர்வர்கள் நிர்வஹித்து அருளின படியை தழுவி
இத் திருவாய் மொழியை காலைப் பூசல் -என்பர் நம் ஆச்சார்யர்கள் -மல்லிகை கமழ் தென்றல் மாலை பூசல் –

———————————————————————————————————————————————————————————————————

வேய் மரு தோளிணை மெலியுமாலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா –10-3-1-

தொடங்கும் பொழுதே -வீடு நெருப்பு பற்றி ஏரியா நின்றதே -என்னுமா போலே -வேய் மரு தோளிணை மெலியுமாலோ-என்கிறார் –
என்மெலிவும்-என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ-
உலகத்தாருடைய மெலிவும் தனிமையும் போலதன்றே
தலைவன் கூடி இருக்கச் செய்தேயும் மெலிந்து தனிமைப் பட்டேனே
இப்படிப் பட்ட மெலிவையும் தனிமையும் கணிசியாமல் -காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
பஞ்சமா ராகத்தைப் பண்ணி -காமம் தரு -காமரு -பரஸ்பரம் காம ரசத்தை அனுபவிக்கிறபடி
காண்பாருக்கு ஆசையை விளைவிக்கிற -என்றுமாம்
கண மயில் -கூட்டமான மயில்
முகத்தை மாற வைத்து -அவை -பரோஷம் போலே சொல்லுகிறாள்
கண்ணபிரான் வீணாக வருந்தாதே நான் கூடவே உள்ளேனே -என்ன
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
அடுத்த ஷணம் பிரிய இருக்கிற நீ இப்போது கூடி இருப்பது சம்ச்லேஷமாக கருத முடியுமோ
ச்வர்க்கேபி பாத பீதச்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி ந்ர்வ்ருதி-
பசு மேய்க்கப் போவது தவிரப் போகிறாயோ
அந்தணர் ஸ்நான சந்த்யா வந்தனங்கள் தவிர்ந்தாலும் நீ தவிராயே
போனால் விரைந்து வருமவனோ
ஒரு பகல் தானே நமக்கு பிரிவு என்று இருப்பாய் நீ
அது எங்களுக்கு ஆயிரம் ஊழி -த்ருடி யுகாயதே த்வாமபச்யதாம் –
இப்படி ஒரு பிரேமா ஸ்வ பாவமா என்று குளிர நோக்கி அருளினான்
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-கண்ணாலே நோக்கி கொலை செய்வதில் காட்டிலும் பிரிந்து போகலாமே
சொல்லச் செய்தேயும் நோக்கை மாற வைத்திலன்
தகவில்லை தகவிலையே நீ கண்ணா -என்கிறாள்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானாய் இருந்தாயே
வெற்றே வெறிதே பெற்ற தாய் வேம்பெயாக வளர்த்தாளே
தருமம் அறியாக் குறும்பனாய் இருந்தாயே
இப்படியும் படு கொலை யடிப்பாயோ -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————————-

தகவில்லை தகவிலையே நீ கண்ணா தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா
சுக வெள்ளம் விசும்பு இருந்தது அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி யாங்கே
அக வுயிர் அகமகம் தோறும உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை யந்தோ
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –10-3-2-

வருத்தம் தீரும்படி ஆரத் தழுவிக் கொண்டான்
இது தான் விஸ்லேஷ ப்ராகபாவ காலத்தில் சம்ச்லேஷம் ஆகையாலே துக்ககரமாகவே இருக்க
கனா கண்டு விழித்தால் போலே நோவு பட்டமையை தெரிவிக்கிறாள்
தகவில்லை தகவிலையே நீ கண்ணா-மீண்டும் முறையிடுகிறாள்
கண்ணா நீ பெண்களுக்கு கை வழி மண்ணாய் இருப்பன் என்பார்களே
பெண்களைக் கண்டால் விஷமாய் விட்டதே உனக்கு
கருணா காகுஸ்தன் ராமனுக்கும் நிர்க்ருண கிருஷ்ணன் பிரசித்தியை நீ கொண்டாயே
இத்தைக் கேட்டவன் நான் பிரிந்தேன் அல்லேன் பிரிய நினைக்கவும் இல்லையே என்று சொல்லி மீண்டும் ஆரத் தழுவினான்
அணைத்தது பிரிகைக்காக என்று அறிந்து
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா சுக வெள்ளம் விசும்பு இருந்தது அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி
கண்ணா நீ அணைத்தது -இன்ப வெள்ளம் ஆகாசமும் கடந்து என்னுடைய அறிவு கெடும்படி பெருகினாலும்
கனாக் கண்டது போலே கழிந்து
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே யாயிற்று
யாங்கே -அப்படிப்பட்ட நிலைமையிலே
அக வுயிர் அகமகம் தோறும உள் புக்கு ஆவியின் பரம்அல்ல வேட்கை யந்தோ –
வேட்கை வியாபித்து ஆவியைக் கொள்ளை கொள்ளும் அளவன்றிக்கே
அணு பரிணாமமான ஆத்மாவின் அளவல்ல அபி நிவேசம்
எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு -பூதத் ஆழ்வார்
இனி என்ன செய்ய வேண்டும் என்று அவன் கேட்க
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –
இனி வீவ -இதற்கு முன்பு உள்ள காலங்களில் நீ பிரிந்து போனாய் ஆகிலும் இனி தவிர வேணும் -வீவ -ஒழிய
பிரிவையாமா -சிறந்த பாடல் -பிரிகை உண்டாகும்படி என்றவாறு
பிரிவையாமால் -பாடமாகில் -பிரிவை ஆம் ஆல்-பிரிவு என்னும் சொல்லே பிரிவை யாகக் கிடக்கிறது –

——————————————————————————————————————————————————————————————————————-

வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால்
யாவரும் துணை யில்லை யானிருந்து உன்னஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ யகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவதிவ்வாய்க் குலத்தாய்ச்சியோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே –10-3-3-

வர்ணாஸ்ரம தர்மங்கள் தவிரலாமோ –
பிறருக்கு ஹிம்சையாய் ஆகிற கார்யம் தர்மமோ -ஸ்த்ரீவதமாய் முடியுமே
ஒரு பெண் கொடியை வதம் செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே -பாசுரம் கேட்டதில்லையோ
ராமனாய் தாடகைவதம் கிருஷ்ணனாய் பூதனை வதம் செய்த நீ ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சுவாயோ
வீவன்-முடிந்து விடுவேன்
வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால் -நெடு மூச்சு எறிந்து உலர்ந்து போன ஹிருதயம்
விரஹ அக்னி கொழுந்தி எரியா நின்றமை காண மாட்டாயோ
ஒரு குடம் தண்ணீரை சொரிய மாட்டாயோ
யாவரும் துணை யில்லை-துணையாவார் யாரும் இல்லை என்றபடி
துணை என்ற பேர் பெற்ற நீயோ போகப் புக்காய்
தோழி மார்கள் எனக்கு முன்பே வாடி சருகாய் இருக்க
குயில் மயில் சேர்ந்து கொல்லப் பார்க்க –யார் தான் துணை
யானிருந்து -பிரிந்த உடனே முடியாமல் யான் இருந்து
எல்லாம் பட்டும் நூறு பிராயமாக வன்றோ நான் இருக்கிறேன்
உன்னஞ்சன மேனியை யாட்டம் காணேன் -ஸ்ரமஹரமான வடிவைக் கொண்டு என் முன்னே சஞ்சரிக்கக் காணேன் -இருபத்தி நாலாயிரம்
ஆட்டம் காணேன் -என் முன்னே நடையாடக் காணேன் -என்றபடி
அன்றிக்கே
ஆ நிரை மேய்க்க நீ போதி அருமருந்து ஆவது அரியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட –
உன் அஞ்சன திரு மேனி கல்லும் முல்லுமான காட்டிலே நடையாட
நான் காணேன் -சஹித்து இருக்க மாட்டேன் -என்றுமாம்
ஒரு பகல் தானே அல்லும் பகலுமா போகப் போகிறேன் என்ன
போவது அன்று ஒரு பகல் நீ யகன்றால் -நீ அகன்றால் ஒரு பகல் போவது அன்று –
உன்னோடு கூடி இருந்தால் ஊழி காலமும் ஷணம் பொழுதாக தோற்ற
பிரிந்தால் ஷணம் பொழுதும் ஊழி யாக தோற்றுகிறதே
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா -இத்தை நினைத்து பெறுகிற கண்ணீரை என்னால் தகையப் போகிறது இல்லை
உன்னை தகித்தாலும் தகைகலாம் -இவற்றை தகைக்க முடியவில்லையே
மீன் போன்று கண்கள் துள்ளி கண்ணநீர் பெருகி –
அதற்க்கு செய்ய வேண்டுவது என் என்றான் -சொல்கிறாள் மேல்
சாவதிவ்வாய்க் குலத்தாய்ச்சியோமாய் பிறந்த இத்தொழுத்தையோம் தனிமை தானே -இத்தனிமை சாவ வேண்டும்
சாவித்ரியைப் போலே சொல்கிறாள் -ஈடு
நீ போனால் போ இருந்தால் இரு இந்த தனிமையை சாவடி என்கிறாள்
நீ போகாமல் இருந்தே தேற வேணும் என்பதற்கு பர்யாயமான வார்த்தை
அன்றிக்கே
எங்களுக்கு தனிமை என்றும் மரணம் என்றும் இரண்டு சொல் இல்லை -தனிமை தான் மரணம் -இப்பொருளில் சாவது -விநாசம்
அன்றிக்கே
தனிமை சாவது பொறுக்க முடியவில்லை -இந்த ஒருதலைக் காமம் தொலையட்டும் –

——————————————————————————————————————————————————————————————————————

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
பழுத்த நல்லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகம் தோறும உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் –10-3-4-

பிரியேன் பிரியில் தரியேன் நீங்கள் பிரிந்து தரித்தாலும் என்னால் முடியாது -போன்ற வார்த்தைகளை
பிரணயித்வத்தின் மேல் நிலையில் நின்று கண்ணபிரான் சோதி வாய் திறந்து அருள
நாயனே இந்த கள்வப் பணி மொழிகள் தாம் எம்மை நீராய் அலைந்து கரைய உருக்குகின்றன –
தொழுத்தையோம்-அடிச்சியோம் -பர்யாயம்-உனக்கே அற்றுத் தீர்ந்தோம்
பிரிந்து போகும் பொழுது உன்னையும் அறியாமல் எங்களையும் அறியாமல் பார்க்கிறாய் இல்லை
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி –
நாராயணன் போன்ற திரு நாமங்களை துறந்து
கோவிந்தா கோபாலா ஆசைப்பட்டு வந்தாய்
அதற்கு ஏற்ப எங்களை துறந்து பசு மேய்க்க விரும்பி
வெங்கா னிடை காலடி நோவச் செல்லா நின்றாய்
உடனே அவன் என் ஆற்றாமை பர்வதம் உங்கள் ஆற்றாமை பரம அணு
மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரன் ஆனேனே
ஆதனால் போகிறேன்
போனாலும் உடல் அங்கு உயிர் இங்கு
இப்புடைகளில் நீச பாஷணங்களைப் பேச
இந்த பேச்சு தான் ஈர்கின்றன
பழுத்த நல்லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகம் தோறும உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
சம்ச்ரவே மதுரம் வாக்யம் -பழுத்த அமிர்தத்தின் ரச பிரவாகமே இங்கனே சொற்களாக வடிவு எடுத்ததோ
கள்வப் பணி மொழிகளாக இருக்க நினைக்க நினைக்க ஆவி வேவா நிற்கின்றது-

—————————————————————————————————————————————————————————————————————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின்றாலோ
மணிமிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித்துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –10-3-5-

கள்வப் பணி மொழி மேலும் வருகையாலே -மீண்டும் -பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்-
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா -போக இருக்கிற கண்ணா -என்றபடி -மேய்க்கிய -மேய்ப்பதற்காக
மாலைப் பொழுதும் இப்பொழுதே வந்ததாகவும்
அக்காலத்தில் தோன்றி நலியக் கூடிய பதார்த்தங்கள் இப்பொழுதே வந்து நலிவதாகவும் மேலே –
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் -விகாச உந்முகமான
-பரிமளம் கொண்ட வாடை கொடிய மிருத்யு போலே
ராவணன் சந்நியாச வேஷத்தை கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது குளிர் காற்றாய் வந்து நலியா நின்றது -ஈடு
பெருமத மாலையும் வந்தின்றாலோ-பெரிய செருக்கோடு மத்த கஜம் போலே மாலையும் வந்தது
ஆற்றாமை மிகுதியால் எப்பொழுதே வர உள்ள மாலை வந்ததாக சொல்லி
விரஹபீதியால் நெஞ்சு அழிந்தாருக்கு ஒன்றும் தோன்றாதே
மல்லிகை கமல் தென்றலில் பட்ட பாடு பின்ன்னாட்டுகிறது –
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன –
மணிமிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித்துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்
குரு மா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்பில் சாத்திய முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேண்டும்
சம்ச்லேஷ ரசம் உன்மச்தகம் ஆனவாறே வாயமுதம் தர வேணும்
தாமரைக் கையை என் தலை மேல் வைத்து -நான் பசு மேய்க்கப் போவது இல்லை அஞ்சேல் -என்று சொல்ல வேணும்
இவ்வளவே நான் வேண்டுவது
ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்
மன் மூர்த்த்நி ஹந்த கரபல்லவ தல்லஜம் தே குர்வன் கதா க்ருத மநோ ரத யிஷ்யசே மாம் -என்று
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -மொழி பெயர்ப்பாக அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————————————————————————————————

அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை யரும்பலர்அது நிற்க வெம் பெண்மை யாற்றோம்
வடித் தடம் கண்ணினை நீரும் நில்லா மனமும் நில்லா வெமக்கது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேமெமது யிரழல் மெழுகிலுக்கே –10-3-6-

கண்ணா உனக்கு வேண்டியவர் பலர் அங்கு உண்டே -உன் போக்கு எங்களுக்கு சஹ்யம் அன்று
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -வைத்து அருள பிரார்த்திக்கிறாள் -பன்னீராயிரம்
அணி மிகு தாமரைக் கை -அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்று கொண்டு
உன்னுடைய அழகிய திருக் கைகளை அடியோங்களுடைய தலையிலே வைத்தருளி
திருக் கண்களால் குளிரப் பார்த்து அருளாய் என்று பின்னையும் இங்கனே சொல்லும் அளவில் -ஆறாயிரப்படி
கடல் போலே இருக்கிற அழகிய கண்களால் எங்களை குளிர நோக்கி என் தலை மேலே கையை வைத்தருள வேணும் -ஒன்பதினாயிரப்படி
வுன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக் கரிவை யரும்பலர்-நீ போன இடத்திலே உன் திருவடிகளை பிடிப்பாராய்
உனக்கு அபிமதைகள் ஆவார் பலர் உண்டு
நடுவு -நீ போகிற கார்யம் ஒழிய நடுவு
உங்கள் கையால் ஸ்பர்சிக்க வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது
நான் போவது எனபது உண்டோ
போனால் உங்களை ஒழிய யார் எனக்கு -என்று அவன் சொல்ல
நீ போகும் இடம் எங்கும் பலர் உண்டே என்கிறாள்
அரிவையர் –
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண்
பருவ வாசகம் -பெண்மைக்கும் வாசகம் -தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் -ஈடு
அது நிற்க வெம் பெண்மை யாற்றோம் -அதை பற்றி எங்களுக்கு என்ன -நாங்கள் ஆற்றோம்
வடித் தடம் கண்ணினை நீரும் நில்லா மனமும் நில்லா வெமக்கது தன்னாலே
எங்களைப் பார்க்க மாட்டாயா
ஜீவிப்பார் உடைய லஷணம் உண்டோ எங்களுக்கு
நீ பரம போக்கியம் என்று கொண்டாடும் எங்கள் கண்களில் நீர் மாறுகிறது இல்லை
தைர்யத்துடன் இருக்க மனமும் வசப்பட வில்லை
ஆகவே –
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேமெமது யிரழல் மெழுகிலுக்கே
நீ போகிற போக்கு பரிதாபம்
பிராணன் நெருப்பில் இட்ட மெழுகு போலே சிதிலம் ஆகிறது
மெழுகில் மெழுகு போலே மெழுகை காட்டிலும் என்றுமாம்

———————————————————————————————————————————————————————————————————————————-

வேமெமது யிரழல் மெழுகிலுக்கே வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண்ணினை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்தவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே –10-3-7-

உன்னை பிரியும் துயரம் மட்டும் இல்லை
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் நிறைந்த இடங்களில் அன்றோ நீ திரியப் போவது
விரஹ அக்னியால் உயிர் வேவ
ஆஸ்ரயம் முடிகையாலே வலைகளும் மேகலையும் கழன்று விழ
கண்கள் அருவி சோர்ந்து
முலைகள் பசலை பூத்து
தோள்கள் வாடும்படி நீ பசு மேய்க்கப் போக ஒண்ணாது
எங்கள் மெல்லிய கைகளால் பிடிக்க கூசும்படியான உன் ஸூகுமாரமான திருவடிகளால் நீ நடந்து போவதோ
போனால் வழியே போய் வழியே வருவாய் அல்லையே
பசுக்களை மேய்ப்பதில் உண்டான வயாமோஹத்தாலே அவை போம் இடம் எல்லாம் போய்த் திரிவாய்
அங்கு எழும் பூண்டு எல்லாம் அசுரப் பூண்டாய் இருக்குமே என்ன அனர்த்தம் விளையுமோ
மேய்க்கின்று -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -போன்ற பிரயோகம்
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று -பெரிய திரு மொழி பிரயோகம் –

——————————————————————————————————————————————————————————————————————

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னாருயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை யிள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே –10-3-8-

அசுர பயமே விஞ்சிச் செல்கிறது
உன் பக்கல் வைத்த அன்பும் -அன்பின் எல்லை நிலமான அபி நிவேசமும் -இப்போது கலக்கிற கலவியும்
கசிகை -நெஞ்சில் உள்ள ஈடுபாடு
ஆகவே அணைத்த கைக்குள்ளே கிடக்க வேண்டும்
அதற்கு மறு மொழி -நான் பசு மேய்க்கப் போக வேண்டுமே
அது தவிர தக்கார் பல தேவிமார் சால வுடையீர் என்றும்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர் -என்றும்
ஆழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக்கு அரிவையரும் பலர் -என்றும் நீங்களே சொன்னீர்களே
பசு மேய்க்கை வ்யாஜ்யமாக கொண்டு உன் அபிமதைகள் உடன் கலந்து பரிமாறுவதும் உத்தேச்யம் அன்றோ
அது தவிரப் போமோ என்று
இவள் மேலும் உத்தரம் சொல்லக் கேட்க ஆசை கொண்டு அருளிச் செய்ய
எங்களுக்கு அந்த நிர்பந்தம் உண்டோ -நீ கை கழிய போகாதது அத்தனை அன்றோ வேண்டுவது –
நீ விரும்பி இருப்பவர்கள் உடன் என் கண் வட்டத்திலே பரிமாறப் பார் என்ன
ஆனால் அவர்களை அழைத்துத் தருவார் யார் -என்ன
வசி செயுன் தாமரைக் கண்ணும் -உனக்கு தூது செய் கண்கள் உண்டாய் இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ
இனி பொருந்தோம் என்று இருப்பார் நெஞ்சுகளிலே மறத்தை மாற்றி அவர்களை வசப்படுத்தித் தர வல்ல கண்களும்
வாயும் –
அந்நோக்கில் கருத்தை ஆவிஷ்கரிக்கும் வாயும்
கைகளும்-
அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே வ்ரீளையால் கவிழ்ந்தவர்களையும் எடுத்துக் கொள்ளும் கைகளும்
பீதக வுடையும் காட்டி -ஸ்பர்சத்துக்கு தோற்றவர்களை கீழ் போகாத படி தன் செல்லாமையாலே மேலே ஏறட்டுக் கொள்ளும் திருத் பீதாம்பரமும்
காட்டினால் இந்த வலைகளில் அகப்படாதார் உண்டோ –
உனக்கு புறம்பே அழைத்துத் தருவார் வேண்டி இருந்ததோ
பிடாத்தை விழ விட்டு -மேற்போர்வையைத் தள்ளி -வடிவைக் காட்ட அமையாதோ -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
ஓசி செய் நுண்ணிடை யிள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-
அதை நான் துக்கமாகப் பாவிப்பது இல்லை
நீ என் கண் வட்டத்தில் இருப்பது தான் எனக்கு அபிமதம்
இங்கேயே இருந்து யார் உடன் பழகினாலும் அதில் நான் விசாரம் அற்று இருப்பேன் –

——————————————————————————————————————————————————————————————————————————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்றுழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடும் ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ -10-3-9-

உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனால் அடையும் உகப்பில் காட்டிலும்
நீ உன் உகப்புக்கு இலக்கானவரோடு கூடி
நெஞ்சு இடர் தீர
அதனால் நாங்கள் அடையும் உகப்பே எங்கட்கு உயர்ந்தது –
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து -எங்களைக் காட்டிலும் நீ மிகவும் விரும்பும் படியான பாக்யவதிகளோடு மிகவும் ரமித்து -அதனால் –
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும் -நாம் இன்னாள் உடன் கலக்கப் பெற்றிலோம் -என்று
உன் திரு உள்ளத்தில் இடர் உண்டாகாதபடி ஒரு மகிழ்ச்சி விளையுமாகில்
நாங்கள் வியக்க வின்புறுதும் -அதுவே எங்களுக்கு பேறாக நாங்கள் மிகவும் இன்பம் அடைவோம்
இங்கனம் பெண் பிறந்தார்க்கு உண்டாக மாட்டாதே என்னில் –
எம் பெண்மை யாற்றோம் -உன் உகப்புக்கு புறம்பாக வரும் ஸ்த்ரீத்வம் நாங்கள் வேண்டாம்
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாத பெண்கள் படி எங்களது அல்ல
நாங்கள் நீ உகந்தாரை உகப்பவர்கள் அன்றி உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் –
ஆச்சார்யா ஹிருதயம் -மூன்றில் சுருக்கிய ஐந்தையும் -சூர்ணிகை -எம்மா ஒழிவில் நெடுவே என்கிற -ஸ்ரீ ஸூ க்தி
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
ஒழிவில் காலம் எல்லாம்
நெடுமாற்கு அடிமை
வேய் மரு தோளிணை
நான்கு பதிகங்களும் புருஷார்த்த ஸ்வரூபம் விசதீகரிப்பனவாக அறுதி இடப் பட்டிரா நின்றது –
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம்-என்பதே உயிர் நிலையான அருளிச் செயல் இந்த பதிகத்துக்கு
இந்த மகா அர்த்தத்தை வெளியிட வேண்டியே இப்பதிகம் உபக்ரமிக்கப் பட்டது –
உனக்கு அபிமதைகளாய் -விலஷணை களாய் உள்ளவர்களோடு திரிந்து உன்னுடைய திரு உள்ளம் இடர் கெடுமளவில்
நீ எங்கள் உடன் சம்ச்லேஷித்ததில் காட்டிலும் நாங்கள் மிகவும் இனியராவுதோம் –
வேறு சிலரோடு சம்ச்லேஷித்தது பொறுக்க மாட்டாத பெண்மை வேண்டாம் -ஆறாயிரப்படி –
அப்படிப் பட்ட இயல்பு எங்கள் இடம் இல்லை என்றபடி –
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்-பசு மேய்க்கும் வ்யாஜ்யத்தால் நீ பெற நினைக்கும் பேறு எங்கள் கண் முகப்பே பெறலாமே
காமுகன் அல்லன் ஜாதி தர்மம் அன்றோ என்ன
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்றுழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடும் ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
நீ காமுகனோ அல்லையோ அது கிடக்கட்டும்
கம்சன் ஏவிய பல அசுரர்கள் வேண்டிய உருவம் கொண்டு கிடப்பார்கள்
நீ அவர்கள் உடன் பினாங்கு வாயே
அவ்யவஸ் தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜயௌ-எனபது அறியாயோ
ஏதேனும் அவத்யங்கள் விளையைக் கூடும் –

—————————————————————————————————————————————————————————————————————-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கி ராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –10-3-10-

அஸ்தானே பய சங்கை வேண்டாமே -என்று சொல்ல
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-அவத்தங்கள் விளையும்-உன் அழகுக்கு கண் எச்சில் பட்டுத் தீருமே
அசுரர்கள் வன்கையர் -இயற்கையிலே பொல்லாதவர்கள் -வன்மையை உடையவர்
அதுக்கு மேலே –
கஞ்சன் ஏவ –
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டாகையாலே
அந்த கம்ச பிரேரணையினால் மிகவும் கடியார்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்-உனக்கு என் வருகிறதோ என்று மக ரிஷிகளும் கலங்குவர்
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம் பீம கர்மாணாம் ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி -என்றால்போலே
கண்ணபிரானுக்கு என் வருகிறதோ என்று குடல் மறுக
அன்றிக்கே
ஏஹீ பஸ்ய சரீராணி -தங்களுக்கு வரும்கேடுகளை நினைத்து குடல் மறுக
உனக்கு என் வருகிறதோ என்று ரிஷிகளும் கூட கலங்குவார்கள் -ஆறாயிரப்படி
தனிமையும் பெரிதுனக்கி ராமனையும் உவர்த்தலை-உவத்தலை உவர்த்தலை -பாட பேதங்கள் –
உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
நம்பி மூத்த பிரானும் துணைவனாய் இருந்தால் ஒருவாறு ஆறி இருப்போம்
அவன் கூட இருந்தால் தீம்பு செய்யப் போகாது என்று நீயோ தனியாக திரிவாய்
மை நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனித் தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவன் செய்தறியான் –
அண்ணற்கு அண்ணானோர் மகனைப் பெற்ற-என்னும்படி இரா நின்றாய்
இதை எல்லாம் நினைக்க நினைக்க ஹிருதயம் வேவா நின்றது
நான் போனால் தானே நீங்கள் பயப்பட வேண்டும் -என்று சொல்லி முறுவல் செய்ய
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கின்றாயே
பரமபதத்தில் இருப்பைக் காட்டிலும் பசு மேய்க்கை உனக்கு விருப்பம்
அங்கும் ஹாவு ஹாவு -போலே ஹை ஹை டியோ டியோ சொல்பவன் அன்றோ
நீ போகாது இருக்க மாட்டாயே –

—————————————————————————————————————————————————————————————————————————–

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையராய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே –10-3-11

மற்ற பதிகங்கள் உடன் ஒக்க பதிகமே என்று தாமே விஸ்மிதர் ஆகிறார்
அத்திருவடி திருவடி-அந்த ஸ்வாமிகளின் திருவடி மேல்
தையல்-ஒரு ஆய்ச்சி -சபை போலே எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது என்று பார்த்து
அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியார் உடைய தரம் உடையாள் ஒருத்தி
பசு மேய்க்கப் போகாமே மீட்கைக்காக சொன்னவை யாய்த்து -நம்பிள்ளை ஈடு
பல ஆய்ச்சிகளுக்கும் பிரதி நிதியாக ஒருத்தி சொன்னவை
சில பாசுரங்களில்
ஆழும் என்னுயிர்
என் சொற்கள்
எனது ஆவி வேமால் -என்று ஒருமையாகவும்
சில பாசுரங்களில்
அடிச்சியோம்
தொழுத்தையோம்
என்று பன்மையாக உள்ளன
ஒருத்தியே சொன்னதாகையாலே ஒருமை பொருந்தும்
பலருக்குமாகச் சொன்னதாகையாலே பன்மை பொருந்தும்
யாமுறாமை அடியேன் செய்யும் விண்ணப்பமே -போலே
இவையும் பத்து அவற்றின் சார்வே-பதிகங்களில் இதுவும் ஒரு பதிகமே -விஸ்மயம் ஒரு நிர்வாஹம்
அன்றிக்கே கீழ்ப் பதிகங்களுக்கு சொன்ன பலனே இதுக்கும் பலன் -என்றபடி
திருவடிகள் பிரஸ்தாபம் உள்ளதால் அவற்றின் சார்வே -திருவடிகளை சேர்விக்கும் என்று ஒரு நிர்வாஹம்
அவற்றின் -என்பதினால் -மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலையை பராமர்ச்சித்ததாகி
அவர்கள் சொல் கேட்டு போக்குதவிர்ந்து கூடி இருந்தால் போலே
இது கற்றார்க்கும் அவனோடு கூடி இருக்கையே பலனாக பெறுவார் என்பதே முடிவான நிர்வாஹம்-

———————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

—————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading