அவதாரிகை –
கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே
மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி
சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே
அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவரீர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று
அவர் தம்மையே கேட்கிறார்-
இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்ன பொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே அதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன்னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து என்னை யடிமை கொண்ட பெருமானே –33-
இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் -இன்னமும் எவ்வளவு காலம் ஹேயமான இந்த தேஹத்தோடே
யான் இருப்பேன்–இதில் பொருத்தம் அற்று இருக்கிற அடியேன் இருப்பேன்
இன்னபொழுது உடம்பு விடும் -இன்ன காலத்திலே தேஹம் விடும்
இன்னபடி -இன்ன பிரகாரத்திலே
யது தான்-அந்த தேஹ வியோஹம் தான்
இன்ன விடத்தே இன்ன ஸ்தலத்திலே
அதுவும் -அந்த தேஹ விமோசநமாம்
என்னும் இவை எல்லாம்-என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்
எதிராசா -எம்பெருமானாரே
நீ யறிதி -ஸர்வஞ்ஞரான தேவரீர் அறிந்து அருள்வீர்
யான் இவை யொன்று அறியேன்- அஞ்ஞனான அடியேன் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-
ஆன பின்பு பேதைமை தீர்த்து-அஞ்ஞனானத்தைப் போக்கி
என்னை -அடியேனை
யடிமை கொண்ட பெருமானே என்னை-ஆட் கொண்ட ஸ்வாமீ
என்னை–இத் தேஹத்தோடே பொருத்தம் அற்று இருக்கிற அடியேனை
இனி உன்னருளால்-இனி தேவரீர் கிருபையாலே
இவ் உடம்பை விடுவித்து-இச் சரீரத்தை விடுவித்து
ஏராரும் -திவ்ய அலங்கார பரி பூர்ணமான
வைகுந்தத்து ஏற்ற -பரம பதத்தில் ஏற்ற
நினைவுண்டேல்–திரு உள்ளம் உண்டாகில்
பின்னை விரையாமல் -அநந்தரம் த்வரியாமல்
மறந்து இருக்கிறது என் -ந்ருத்யோகராய் விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதுக்கு ஹேது ஏது
பேசாய்-அத்தை அருளிச் செய்து அருளீர்
பேதைமை தீர்த்து-த்வத் சம்பந்த ஜ்ஞான சூன்யத்தை யாகிற மௌக்ர்யத்தைப் போக்கி
சேஷ பூதனான அடியேனை-வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் -என்கிறபடியே
சேஷத்வ அனுகுணமான தாஸ்யத்தை கொண்டு அருளின ஸ்வாமி யானவரே
(மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-)
இன்னம் எத்தனை காலாவதி இந்த ஹேயமான தேஹத்தோடே-இதில் பொருத்தம் அற்று இருக்கிற நான் இருப்பேன்
இன்ன காலத்தில் தேஹம் முக்தமாம்-இன்ன பிரகாரத்தில் இந்த தேக விமோசனம் இந்த ஸ்தலத்திலே
என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்-எதிகளுக்கு நாதரானவரே சர்வஜ்ஞ்ஞரான தேவர் அறிந்து அருள்வீர்
அஜ்ஞ்ஞனான நான் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-
ஆன பின்பு இத் தேகத்தோடு பொருத்தம் அற்று இருக்கிற என்னை
இனி தேவர் கிருபையாலே-இச் சரீரத்தை விடுவித்து
திவ்ய அலங்கார பரிபூரணமான பரம பதத்தில் ஏற்றத் திரு உள்ளம் உண்டாகில்
அநந்தரம்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -என்கிறபடியே
த்வரியாமல்-நிருத்யோகராய்-விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதற்கு ஹேது ஏது
அத்தை அருளிச் செய்து அருளீர் –
தேவர்க்கு கிருபை யுண்டாய் இருக்க-விளம்ப ஹேதுவான சாதனம் இத்தலையில் இல்லையே இருக்க
கால விளம்பம் கார்யம் என் என்று கருத்து –
அமர்ந்து இருக்கிறது என் பேசாய் -என்றும் பாட பேதம்
நினைவுண்டேல் என்று
சித்தவத் கரிக்கறதாகவுமாம்-
—————————————————————
நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயாவான்களையும் நிர் க்ருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்ததே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –
முன்னை வினை பின்னை வினை யாரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-
முன்னை வினை -பூர்வாகம்
பின்னை வினை -உத்தராகம்
யாரத்தம்– பிராரத்தம்
என்னும் -என்று சொல்லப்படுகிற
மூன்று வகையான வினைத் தொகை -மூன்று பிரகாரங்களான பாப ஸமூஹங்களை
யனைத்தும் –அகிலத்தையும்
யானே-ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ விஸிஷ்டனான நானே
என்னை –வாத்சல்யாதி குண விஸிஷ்டனான என்னை
யடைந்தோர் தமக்குக் –அநந்ய சரண்யராய்- சரண வரணம் பண்ணின ப்ரபன்னரானவர்கள் தங்களுக்கு
கழிப்பன் என்னும் –அப்படிப்பட்ட அகில பாபத்தையும் ஸ வாஸனமாகப் போக்குவன் என்று அருளிச் செய்த
அரங்கர்–திருவரங்கரான பெரிய பெருமாள்
எதிராசா -யதிகளுக்கு நாதரானவரே
நீ இட்ட வழக்கன்றோ -தேவரீருக்கு விதேயர் அன்றோ
சொல்லாய்-அருளிச் செய்ய வேண்டும்
இவ் வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவரீர் தாமே அருளிச் செய்யலாகாதோ
உன்னை யல்லது –இப்படி ஈஸ்வர வஸீகாரத்தை யுடைய தேவரீரை ஒழிய
அறியாத -வேறே ஒரு ரக்ஷகனையும் அறியாத
யான் -அடியேன்
இந்த வுடம்போடு-இச் சரீரத்தோடு
உழன்று -பொருந்தி அதுவே யாத்ரையாக
வினைப் பயன் -தத் கார்யமான பாப பலங்களை
புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ-அனுபவிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ
என்னுடைய விரு வினையை -அடியேனுடைய ப்ரபல பாபத்தை
இறைப் பொழுதின் மாற்றி-க்ஷண காலத்தில் ஸ வாஸனமாகப் போக்கி
ஏராரும் –அழகு நிறைந்துள்ள
வைகுந்தத்து ஏற்றி விடாய் –வைகுந்த மா நகரத்தில் ஏற்றி விட்டு அருளீர்
நீயே –தேவரீரே –என்கிறார்
பூர்வாகம் உத்தராகஞ்ச சமாரப்த மகம் ததா -என்கிறபடியே
பூர்வாகம் உத்தராகம் ஆரப்தம் -என்று சொல்லப் படுகிற வர்க்கத் த்ரயமான பாப சமூஹங்கள்
ஆன எல்லாவற்றையும்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று
சஹாயாந்தர நிரபேஷனாய்க் கொண்டு –
சர்வஜ்ஞத்வ சர்வ சக்த்வ விசிஷ்டனான நானே
வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னை-அநந்ய சரணராய் சரண வரணம் பண்ணின பிரபன்னர் ஆனவர்கள்
தங்களுக்கு அப்படிப் பட்ட அகில பாபங்களையும் சவாசனமாக போக்குவன் என்று அருளிச் செய்த
செம்மை யுடைய திருவரங்கரான ஸ்ரீபெரிய பெருமாள் –
எதிகளுக்கு நாதர் ஆனவரே -வச்யஸ் சதா பவதி தே !(17)-என்கிறபடியே த்வத் அதீனர் அன்றோ –
இவ் வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவர் தாம் அருளிச் செய்யல் ஆகாதோ
இப்படி ஈஸ்வர வசீகாரத்தை உடைய தேவரை ஒழிய
வேறு ஒரு ரஷகாந்தரம் அறியாதே-அநந்ய கதியாய் இருக்கிற நான்
இந்த தேஹத்தோடே பொருந்தி அதுவே யாத்ரையாக இருந்து
தத் கார்யமான பாப பலங்களை புஜிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ
பாபங்களுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு-
இப்படியான பின்பு என்னாலே அனுபாவ்யமாய் இருக்கிற பிரபல கர்மங்களை
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் (1-6)-என்கிறபடியே
ஷண காலத்திலே சவாசனமாகப் போக்கி நான் தரைக்கிடை கிடவாமல் ஏர் கொள் ஸ்ரீ வைகுந்த மா நகரத்திலே
த்வத் ஏக பரமாய் அற்ற பின்பு ஏற்றிவிட்டு அருளீர் –
ஏர் -அழகு
ஆர்தல் -மிகுதி-
——————————————-
அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவரீர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய (வியா) பாரவஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –
அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேர வுள வென்னைத்
திருத்தி யுய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-
அருளாலே –கிருபையாலே
அடியேனை யபிமாநித்து அருளி-அடியேனை அங்குற்றைக்கு அநந்யார்ஹனாம் படி அபிமானித்து அருளி
அநவரதம் -நிரந்தரம்
அடிமை கொள்ள -நித்ய கைங்கர்யம் கொண்டு அருள
நினைத்து நீ இருக்க-தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்க
மருளாலே –அத்தை அறிய ஒட்டாத அஞ்ஞானத்தாலே
புலன் போக –இந்த்ரியங்களுடைய விஷய போகங்களை
வாஞ்சை செயும் என் தன்-அபேக்ஷிக்கின்ற அடியேனுடைய
வல் வினையை மாற்றி -பிரபலமான கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்–தேவரீர் விஷயத்தில் மனஸ்ஸு வைக்கும்படி பண்ணி அருள வேணும்
தெருளாரும் கூரத் தாழ்வானும் –ஞான பரிபூர்ணரான ஸ்ரீ கூரேசரும்
அவர் செல்வத் திரு மகனார் தாமும் -அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீ யை யுடையரான பெரிய பட்டரும்
அருளிச் செய்த தீமைத் திரளானது -தம் தம் நைச்யங்களை அருளிச் செய்த பாப ஸமூஹங்களான
இத்தனையும் சேர வுள வென்னைத்-எல்லா வற்றையும் சேர யுண்டான அடியேனை
திருத்தி -செயல் நன்றாகத் திருத்தி
யுய்யக் கொள்ளும் -உஜ்ஜீவிக்கப் பண்ணி அருளும்
வகை தேரும் எதிராசா-பிரகாரத்தை எம்பெருமானாரே சிந்தித்து அருளும்
கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம் அத்யாப் யசங்குசிதமேவ -என்கிறபடியே
ஜ்ஞான பரி பூர்ணரான ஸ்ரீ கூரத் ஆழ்வானும்
அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீயை உடையராய் அது அடியாக ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாளி தத்வம் -(1-17)
என்னும்படி ஸ்ரீ மத் குமாரரான ஸ்ரீ பெரிய பட்டர் தாமும்
ஸ்வ ஸ்வ நைச்யங்களை – புத்வாச நோச (79)-என்றும் -அதிகிராமன் நாஜ்ஞ்ஞம்-(91)என்றும்
இத்யாதியாலே அருளிச் செய்த பாப சமூஹங்கள் ஆனவை ஓன்று ஒழியாமல் எல்லாம் சேர யுண்டான என்னை7
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்னும்படி
திருத்தி உஜ்ஜீவிக்கப் பண்ணி கொண்டு அருளும் பிரகாரம் சிந்தித்து அருளுமவரே –
தேவருடைய கேவல கிருபையாலே
அடியேனை அங்குற்றைக்கு அனன்யார்ஹனாய் ஆகும்படி அபிமானித்து அருளி
நிரந்தரம் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள தேவர் திரு உள்ளம் பற்றி இருக்க
அத்தை அறிய ஒட்டாத அஜ்ஞ்ஞானத்தாலே-சப்தாதி போக ருசிர் அந்வஹமே ததேஹா(6) -என்கிறபடியே
இந்த்ரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வ நிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியான தேவரீர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்
யதான்வயமாக யோஜிக்கவுமாம் –
கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின் –17-
புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி -79-
கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்
அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-
சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் –
தேவர் ஆஜ்ஜா ரூபமான
ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து
சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய்
சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும்
கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் காதாசித்கமாகவும் இன்றிக்கே
ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான ஸ்ரீ தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்
இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் ஸ்ரீ பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –
அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ || (6)
———————————————————–
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல் வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடை யாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்
வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-
எதிராசா –எம்பெருமானாரே
தீதாகும்–இவ்வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்காய் இருக்கிற
ஐம்புலனில் -பஞ்சேந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூ கங்களிலே
ஆசை –அபேக்ஷையானது
அடியேன் மனம் தன்னை யன்புடனே -அடியேனுடைய மனஸ்ஸை பலாத்காரத்தோடே
தான் வந்து -தானே மேல் விழுந்து வந்து
அடரும்-மேலிடா நின்றது
விஷயங்களில் மூட்டுவதாகத் தான் மேலிடா நின்றது
இந்த ருசிக்கு ஹேது
வாசனையில் -அநாதி பாப வாசனையில் பற்றி இருக்கிற
ஊற்றோமோ –தார்ட்யமோ
மாளாத –ப்ராயச்சித்த விநாஸ்யமாதல் அநுபவ விநாஸ்யமாதல் யன்றிக்கே இருப்பதான
வல்வினையோ-அடியேனுடைய ப்ரபல கர்மமோ
ஏது என்று அறியேன் -எதுவென்று அறிகிறிலேன்
இதுக்குக் காரணம் இன்னது என்று அறிந்து அத்தை தேவரீரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து
இவ் வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்கு தானாய் இருக்கிற ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி
இந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூகங்களில் அபேஷை–ஹரந்தி பிரசபம் மன -என்கிறபடியே
தேவரீர் திருவடிகளைப் பற்றி இருக்கிற அடியேனுடைய மனசை மேல் விழுந்து வந்து பலாத்காரத்தோடே
விஷயங்களில் மூட்டுவதாக தான் மேலிடா நின்றது –
இந்த ருசிக்கு ஹேது
துர்வாசநாத் ரடிமதஸ் ஸூ க மிந்த்ரியோத்தமம் ஹாதும் நமே மதிறலாம் வரதாதிராஜா(78) -என்கிறபடி
அநாதி பாப வாசனையிலே பற்றி இருக்கிற தார்ட்ய்யமோ –
சம்பாசலம் பஹுல துக்கம் அநர்த்த ஹேது அல்பீய இத்யபி விம்ருஷ்டிஷு த்ருஷ்ட தோஷம்
துர் வாசநா த்ரடிமதஸ் ஸூகம் இந்த்ரியோத்தம் ஹாதும் ந மே மதிரலம் வரதாதி ராஜ –78-
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –சரீரம் அஸ்திரமானாலும்
இந்திரிய ஸூகம் க்ஷணிகமே யானாலும் -துக்க அம்சமே பிரசுரமாய் இருக்கும் -அநர்த்த ஹேதுவாயும் இருக்கும்
தோஷங்கள் ஸூ வியக்தமாய் இருந்தாலும் துர் வாசனா விபவம் இந்த ஸூக ஆபாசங்களிலே
மேலும் மேலும் அபி நிவேசத்தை பெருக்குமே ஒழிய விரக்திக்கு ஹேதுவாகிறது இல்லையே என்கிறார்
அன்றிக்கே
மதியிலேன் வல் வினையே மாளாதோ (4-3)-என்னும்படி
அதுக்கும் அடியாக அனுபவ விநாச்யம் ஆதல் பிராயச் சித்த விநாச்யம் ஆதல்
அன்றிக்கே
இருப்பதான என்னுடைய பிரபல கர்மமோ-இது ஏது என்று அறிகிறிலேன்-
இதுக்கு நிதானம் ஏது என்று அறிந்து-அத்தை தேவரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து –
அடருகை -மேலிடுகை-
அருளாலே-(35)
வாசனை-(36)
என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –
—————————————————————–
நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி
இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷிதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக
இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி -அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து-
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-
இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-
இன்றளவும் இல்லாத வதிகாரம் -இப்போது அளவும் இல்லாத அதிகாரம்
மேலும் எனக்கு-இனி மேல் அடியேனுக்கு
என்று உளதாம் -எப்போது உண்டாகும்
இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகப் போகிறது
சொல்லாய் -இத்தை தேவரீரே அருளிச் செய்ய வேணும்
எதிராசா -எம்பெருமானாரே
குன்றா-ஒன்றாலும் நசியாமல் இருப்பதான
வினைத் தொடரை -பாப அநு பந்தத்தை
வெட்டி விட்டு -சேதித்துப் பொகட்டு
மேலை வைகுந்தத்து-ஸர்வ உத்தரமான பரம பதத்தில்
எனைக் கடுக வேற்றாதது என் -அடியேனை ஸீக்ரமாக ஆரோபியாததற்கு என்ன காரணம்
இன்று திரு நாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய் (25)-என்னும்படியான இன்றளவும் இல்லாத அதிகாரம்
இனி மேல் என்று உண்டாவதாம் – இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகிறது
இத்தை தேவர் அருளிச் செய்ய வேணும்
இப்படி ருசி விரோதியாய்-ஒன்றாலும் நசியாமை இருப்பதான
தொன் மா வல் வினைத் தொடர் (3-2-2)-என்னும்படியான
பாப அனுபந்தத்தை சேதித்துப் பொகட்டு-
மேலை வைகுந்தத்து இருத்தும் (8-6-11)-என்கிறபடி
சர்வோத்தரமான தேசத்திலே-அதிலே அபேஷை உடைய அடியேனை
அஜ்ஞ்ஞாநாவஹமான சம்சாரத்திலே நின்றும்-சீக்ரமாக ஆரோபியாததற்கு ஹேது ஏது –
என்னாலே எல்லாம் அசக்யமாய்-தேவராலே எல்லாம் சக்யமாய் இருந்த பின்பு
தாழ்கைக்கு ஒரு ஹேதவாந்தரம் இல்லை என்று கருத்து-
(வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–)
(சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-)
——————————————————-
இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக (லௌகிக) சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத் தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –
அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன தாள் ஒழிந்த வற்றையே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-
எதிராசா–எம்பெருமானாரே
நெஞ்சம்-சூத்ர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனஸ்ஸானது
உன–ப்ராப்த சேஷியான தேவரீருடைய
தாள்-நிரதிசய போக்யமான திருவடிகளுக்கு
ஒழிந்த வற்றையே–பாஹ்யமாய அப்ராப்த விஷயங்களானவற்றையே
யுகக்க-அநு மோதிக்க
இன்றும்-இப்போதும்
அனுதாபம் -இப்படி அப்ராப்தமான விஷயங்களை விரும்புவதே என்கிற பச்சாதாபமும்
அற்று இருக்கையால்-இல்லாமல் இருப்பதினாலே
அஞ்சில் –விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில்
அறியாதார் -அறியாதவர்கள்
ஐம்பதிலும் தாம் அறியார்-ஐம்பது வயஸ்ஸிலும் அவர்கள் அறியார்கள்
என் சொல் -என்று சொல்லுகிற இந்த லௌகிக வார்த்தை
எனக்கோ -அடியேன் பொருட்டோ
எதிகளுக்கு நாதர் ஆனவரே
தீ மனம் -என்னும்படி சூத்திர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனசானது
யாதானும் பற்றி நீங்கும் -என்கிறபடியே
(யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே 95)
பிராப்த சேஷியான தேவருடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஒழிந்த
அப்ராப்த விஷயங்களையே பற்றி அனுமோதிக்க
இப்படி அப்ராப்த மான விஷயத்தை விரும்புவதே என்று அனுதபிவிக்க வேண்டும்படியான
தசையை பிராப்தமாய் இருக்கிற இன்றும்-அனுதாப சூன்யமாய் இருக்கையாலே
தஸ்மாத் பால்யே விவேகாத்மா( 1-17-75/76)-என்கிறபடியே
(தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-)
(ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-)
விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில் அஜ்ஞ்ஞரானவர்கள்
தத் பரிணாம தசையான ஐம்பது வயசிலும் விவேக சூன்யதையாலே
அஜ்ஞ்ஞர் ஆவார்கள் என்று சொல்லுகிற இந்த லௌகிக சப்தம் எனக்கே அம்சமாயிற்றோ-
ஆகையால்
ஸ்வ ஹிதத்தில் அஜ்ஞ்ஞனான எனக்கு சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஒரு போக்கடி கண்டு அருள வேணும் என்று கருத்து –
நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ
எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்
இப்படி யோஜிக்கக் கடவது –
————————————
நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வஸ்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார்
என்றுமத்தை ஸ நிதர்சனமாக -அருளிச் செய்கிறார் —
வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-
வேம்பு கறியாக -வேப்பிலையும் கறி யமுதாக
விரும்பினார் தாம் -அபேக்ஷித்த தாங்கள்
கைத்தது என்று-கைப்பாக இருக்கிறது என்று
பொகடாதே புசிக்கும் -உபேக்ஷியாதே புஜிக்கிற
தன்மை போல் -ஸ்வ பாவம் போலே
தீம்பன் இவன் என்று -இவன் துஷ்டன் என்று
நினைத்து என்னை –விசாரித்து அடியேனை
எதிராசர்-எம்பெருமானார்
அன்று -அக்காலத்தில் -அங்கீகார ஸமயத்தில்
அறிந்து –தோஷ யுக்தன் என்று அறிந்து
அங்கீ கரிக்கையால்—அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அங்கீ கரித்து அருளுகையாலே
இகழாரே -உபேக்ஷித்து அருளார்
வேம்பும் கறியாகும் என்று–என்கிறபடியே
சரசமாம் அவற்றை உபேஷித்து அத்யந்தம் கைப்பை யுடைத்தாய்
விரசமாய் இருப்பதான வேப்பிலை தொடக்கமாய் உள்ள தத் சம்பந்த பதார்த்தங்களை
சோற்றுக்கு உபதம்சமாக ஆதரித்து புஜிக்குமவர்கள்
அது விரசமாய் கைத்தது என்று அத்தை விரும்பிப் புஜிக்கும் தாங்கள் உபேஷியாதே புஜிக்கும் ஸ்வ பாவம் போலே
அங்கீ கார சமயத்திலே தோஷ யுக்தன் என்று அறிந்து அத்தைப் போக்யமாகக் கொண்டு
அங்கீ கரித்து அருளுகையாலே
ஸ்ரீ எம்பெருமானார்
இப்போது அவன் இவன் தோஷ யுக்தன் என்று உபேஷித்து அருளார் –
நத்யஜேயம் -என்னும்படி
இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று--நான்முகன் திருவந்தாதி-94-
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந ।
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேதத கர்ஹிதம் ।।6.18.3।।
————————————————————
உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-
அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-
யடியேன்–தாஸ பூதனான நான்
பொழுதை–தேவரீருடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலக்ஷணமான காலம் எல்லாம்
அவத்தே கழித்து -வியர்த்தமாகப் போக்கி
இப் பவத்தே -விரோதியாய் இருக்கிற இந்த ஸம்ஸாரத்திலே
இருக்குமது –பொருந்தி இருக்கிறது
பண்போ -தேவரீருடைய க்ருபா ஸ்வ பாவத்துக்குச் சேருமோ
திவத்தே யான்-பரம பதத்தை அடியேன்
சேரும் வகை -அடையும் பிரகாரத்தை
யருளாய் -கிருபை செய்து அருளீர்
சீரார் எதிராசா-ஸமஸ்த திருக்கல்யாண குணங்களாலே பூர்ணரான எம்பெருமானாரே
போரும் -ஸம்ஸாரத்தில் சிறை இருப்பு போரும்
இனி இவ் வுடம்பைப் போக்கு–இனி இந்த ஸரீரத்தைப் போக்கி அருள வேணும்
தேவர் உடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலஷணமான காலம் எல்லாம்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேன்
அப்படிப் பட்ட அந்த பொழுதைப் பழுதே போக்கி-விரோதியாய் இருக்கிற சம்சாரத்திலே பொருந்தி இருக்கிறது
தேவர் கிருபா ஸ்வ பாவத்துக்குப் போருமோ
ஆகையால்-கைங்கர்ய வர்த்தகமாய் பரம் தாமம் என்னும் திவம் -என்னும்படியான
தேசத்திலே அபேஷை யுடைய நான்
நெடு மரக்கலங்கரை சேர்ந்தால் போல் சேரும் பிரகாரம் இரங்கி அருள வேணும்
சமஸ்த கல்யாண குண பரி பூரணராய் எதிகளுக்கு நாதர் ஆனவரே
சம்சாரத்தில் சிறை யிருப்பு போரும் –
இனி பகவத் ஸ்வரூப திரோதாந கரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –
பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப் பவத்தோடே இருக்குமது பண்போ -என்று
கீழோடு கூட்டவுமாம் –
(தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.)
——————————————–
ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –
எனைப் போல் பிழை செய்வார் இவ் வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-
எனைப் போல் –அடியேனைப் போலே
பிழை செய்வார் -அபராதத்தைச் செய்யுமவர்கள்
இவ் வுலகில் வுண்டோ-இந்த லோகம் எல்லாம் தேடிப் பார்த்தாலும் கிடைப்பரோ
உனைப் போல் -தேவரீரைப் போலே
பொறுக்க வல்லார் -ஸஹிக்க வல்லார்
யுண்டோ -உபய விபூதியிலும் உண்டோ
அனைத்துலகும்-ஸமஸ்த லோகங்களும்
வாழப் பிறந்த -உஜ்ஜீவித்து வாழும் படியாக திரு வவதரித்து அருளின
எதிராச மா முனிவா-எதிராசர் என்கிற திரு நாமத்தை யுடைய பூஜ்யரான யோகி ஜன அக்ர கண்யரே
ஏழைக்கு -சபலனாய் இருக்கிற அடியேனுக்கு
இரங்காய் இனி-இனி தயை பண்ணி அருள வேணும் –
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-
அபராதம் பண்ணுமவர்களில் வைத்துக் கொண்டு
மாத்ருச அபராத க்ருத்துக்களாய் இருக்குமவர்கள் இந்த லோகம் எல்லாம் தேடித் பார்த்தாலும் கிட்டுமோ
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே
அபராத சஹரில் வைத்துக் கொண்டு தேவரீரைப் போலே சஹிக்க வல்லார்-உபய விபூதியிலுமுண்டோ –
சகல ஜீவ லோகமும் உஜ்ஜீவித்து வாழும்படியாக திரு வவதரித்து அருளி
அவர்கள் ரஷணத்தில் மனனம் பண்ணி அருளுகிற ஸ்ரீ எம்பெருமானாரே இப்படிக் கை கழிந்த பின்பு
பற்றினத்தை விடாதே சபலனாய் இருக்கிற எனக்கு தயை பண்ணி அருள வேணும் –
ததஹம் த்வத்ருதேன நாதவான் இத்யாதி –
(நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-)
ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||ஶ்லோகம் 51 –
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.
———————————————–
இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பய க்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –
ஐம் புலன்கள் மேலிட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-
ஐம்புலன்கள் மேலிட்டு -பஞ்சேந்திரியங்கள் ஆக்ரமித்து
அடரும் பொழுது -ஸ்வ கிங்கரனாம் படி ஸ்வ ஸ்வ விஷயங்களைக் காட்டு காட்டு என்று தொடர்ந்து பாதிக்கும் தசையில்
அடியேன்-தேவரீருக்கே சேஷபூதனான அடியேன்
உன் பதங்கள் தம்மை -தேவரீருடைய திருவடித் தாமரைகளை நினைந்து -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தேவ ஸம்வத்சரத்திலே ஆயிரம் ஸம்வத்ஸத்ரம் முதலை நீருக்கு இழுக்க தான் கரைக்கு இழுக்க அலைச்சல் பட்டு அதுக்குத் தன் நிலமாகையாலும் அபிமத ஸித்தியாலும் பலம் வர்த்திக்கை யாகையாலும் தனக்குத் தன் நிலம் அல்லாமையாலும் அபிமத அலாபத்தாலும் பலம் க்ஷயிக்கை யாலும் துதிக்கை முழுத்தும் படியான தசை விளைகையாலே இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்து இத் தசையில் விரோதி நிரசன சீலனான ஸர்வேஸ்வரனே நமக்கு ரக்ஷகன் என்று அநுஸந்தித்து நாராயணா ஓ என்று ஓலமிட்டால் போல் ஸகல ஆபந நிவாரணமான தேவரீருடைய திருவடிகளை ஸ்மரித்து
ஓலமிட்டால்-ராமானுஜா ஓ என்று கூப்பிட்டால்
பின்பவை தாம்-அநந்தரம் அப்படி பாதிக்குமவை யான அவ்விந்திரியங்கள் தான்
என்னை யடராமல் -அடியேனை மேலிடாமல்
இரங்காய் -கிருபை செய்து அருளீர்
எதிராசா-யதிகளுக்கு நாதரானவரே
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ-தேவரீரை ஒழிய அடியேனுக்கு ரக்ஷகர் இனி வேறு உண்டோ
ரக்ஷகாந்தரம் இல்லை யாகையாலே தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று கருத்து
நாராயணா ஒ மணி வண்ணா என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஓலமிட்டால் போலே
உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே
பஞ்ச இந்த்ரியங்களும் ஆக்கிரமித்து ஸ்வ கிங்கரனாம்படி ஸ்வ ஸ்வ விஷயங்களை காட்டு காட்டு என்று
தொடர்ந்து பாதிக்கும் தசையிலே
தேவர்க்கு சேஷ பூதனான அடியேன் ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வான் மடுவின் கரையிலே
க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்று
முழு வலி முதலை நீருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நலியும் போது
சிந்தயத்தரிம் என்று சிந்தித்து-நாராயணா ஒ -என்று ஓலமிட்டால் போலே
சகல ஆபன் நிவாரணமான தேவர் திருவடிகளை ஸ்மரித்து -ராமானுஜா ஒ என்று கூப்பிட்டால்
அநந்தரம்
அப்படி பாதகங்கள் ஆனவை அடியேனை மேவிவிடாமல் தயை பண்ணி அருள வேண்டும்
எதிகளுக்கு நாதரானவரே தேவரை ஒழிய எனக்கு ரஷகர் ஆவார் யார்
இனி வேறுண்டோ
வேறு ரஷகாந்தகர் இல்லை யாகையாலே தேவரே ரஷித்து அருள வேணும் என்று கருத்து –
உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து
வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –
———————————————
இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார் –
(அபேக்ஷிதங்களாகிய இருக்கிற இரண்டிலும்-ஆகிஞ்சயமும் அநந்ய கதித்வமும் வேண்டும்
அப்ரதி க்ஷேதமும் விலக்காமையும் புருஷகாரமும் வேண்டும்)
இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-
இந்த உலகில் -கொடு உலகமான இந்த த்யாஜ்ய பூமியில்
பொருந்தாமை -அடிக் கொதிப்பது அருசி
ஏதும் இல்லை-அத் யல்பமும் இல்லை
அந்த உலகில் –அந்த ப்ராப்யமான பரம பதத்தில்
போக ஆசை இல்லை -செல்ல ப்ராவண்யமும் இல்லை
இந்த நமக்கு–இப்படி அபேக்ஷிதங்களாகிய இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
எந்தை எதிராசர்-தந்தையாகிய எம்பெருமானார்
ஒப்பில் திரு நாடு -உபமானம் இல்லாத வைபவத்தை யுடைய பரமபதத்தை
எப்படியே தான் -எந்த ப்ரகாரமாகத் தான்
உகந்து-ஸந்தோஷித்து
தருவர் –உபகரித்து அருளுவர்
கொடு வுலகம் காட்டேல் (4-9-7)-என்னும்படியான
இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படி அபேஷிதங்களாய் இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
ஜனகரான ஸ்ரீ எம்பெருமானார் அசத்ருச வைபவத்தை யுதைத்தான
தெளி விசும்பு திரு நாடு -என்கிற திரு நாட்டை உகப்புடன் எப்படித் தான் உபகரித்து அருளுவர் –
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே
————————————————————–
இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவாய் இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்று அவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –
(அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் என்ற உண்மை அறியாமல் உள்ளாரே என்று திரு உள்ளம்)
மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ் விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத் திறம்—44-
மா காந்த நாரணர் –லஷ்மீ காந்தனான ஸர்வேஸ்வரன்
வைகும் வகை –நாராயணத்வ ப்ரயுக்த ஸம்பந்தம் அடியாக ஸமஸ்த சேதன அசேதனங்களிலும் உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிற ப்ரகாரத்தை
அறிந்தோருக்கு–அறிந்த ஞாதாக்களுக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –தனிமை இல்லை -அந்தகாரம் இல்லை
ஸ்ருதி -நாராயண பரம் ஜ்யோதி -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்
அவனே என் உள்ளிருள் தானற வீற்று இருந்தான் (8-7)-என்றும் சொல்லுகிறபடியே
எங்கும் உள்ளனாய் எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே நிஷித்த ப்ரவ்ருத்திகளுக்குத் தேட்ட மான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கை
ஆகையாலே அவர்களுக்கு ஒருமைத்து இருக்கிற ஏகாந்தமும் இல்லை
தர்சன யோக்யமும் இன்றிக்கே ஆவரண ஆகரமாய் வியாபித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை என்று கருத்து
மோகாந்தர்–மோஹாந்த தமஸா விருத்தா – என்னும்படி மோஹந்தராய் முன்னடி தோற்றாதே இருக்கு மவர்கள்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று -இவ் விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம் –இவ் விடம் தேஜஸ் ப்ரசாரம் இல்லாத இருள் என்று
பயமற்று இருந்து-நிர் பயராய் இருந்து
செய்வர் கடாம் பாவத் திறம்-பாப ஸமூஹங்களை அஞ்ஞாரன தாங்கள் செய்யா நிற்பர்கள்
இதில்
செல்வ நாரணன் -என்கிறபடியே
ஸ்ரீயகாந்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நாராயணத்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக
சமஸ்த சேதன அசேதனங்களிலும் அந்தர் பஹிர் வியாபித்து இருக்கிற பிரகாரத்தை அறிந்த
ஜ்ஞாதாக்களுக்கு
நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே
எங்கும் உளனாய்-எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே
நிஷித்த பிரவ்ருதிகளுக்கு தேட்டமான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கையாலே
அவர்களுக்கு ஒருமை பட்டு வருத்தம் உற்று இருக்கிற ஏகாந்தமும் இல்லை –
தர்சன யோக்யமும் அன்றிக்கே-ஆவரணாகரமாய் ஆவரித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்ய கச்சத் ரஹஸ் சதா
யஸ் ஸ்வ தார ரதௌ சாபி கோவிந்தம் தா முபாஸ்மஹே –
(செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-)
(அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)
(பகல் கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* – கனவில்-
மிகக் கண்டேன்* மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்*
ஊன் திகழும் நேமி* ஒளி திகழும் சேவடியான்,*
வான் திகழும் சோதி வடிவு.)
இவர்கள் படி அன்றிக்கே
மோஹாந்த தமஸா வ்ருதா -என்னும்படி மோஹாந்தராய்
முன்னாடி தோற்றாதே இருக்குமவர்கள்
அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீச மந்த புரஸ் ஸ்தித மிவாஹா மவீ ஷமாண -என்கிறபடியே
நிரவதிக தேஜோ மயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் எங்கும் வியாபித்து இருக்கும் பிரகாரத்தை
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காண மாட்டாதே
இவ் விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம்
இவ் விடம் தேஜ பிரகாரம் இல்லாத இருள்-என்று நிர் பயராய் இருந்து –
தச்யர்ந்திகேதவம் வ்ரஜினம் கரோஷி -என்கிறபடியே
பாப சமூஹங்களை அஜ்ஞ்ஞரான தாங்கள் செய்யா நிற்பார்கள் –
இவர்கள் படி இது வாவதே -என்று கருத்து –
வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப் பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply