ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -57-58-59-60-61-62-63-64-65—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்தோத்ரம் -57-அவதாரிகை

கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில்
அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத்
தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-

ந தேஹம் –
அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி
அந்தரங்கமான சரீரத்தையும் –
தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் –

ந ப்ராணான் –
தேகாதிகளுக்கு தாரகமான பிராணன் களையும்
சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –

ந ஸ ஸூகம் –
தேஹாதிகளையும்
பிராணன் களையும்
ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –
அந்த ஸூகமும் வேண்டா –
ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –

அ சேஷாபி லஷிதம் ஸூகம் –
எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் –
ஸூகம் என் என்னில்
தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே
ஸூகம் என்று பிரியச் சொன்ன போது
அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று
மேல் கூடக் கடவது –
நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது

ந சாத்மானம் –
கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய
ஆத்மாவை –

தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் –
ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை
அந்தர்ப் பூதம் ஆனவன்று
எல்லாம் உபாதேயம் -என்கை

நாத –
சேஷத்வத்துக்கு புறம்பானவை
அசஹ்யம் என்கைக்கு அடியான
அவர்ஜனீய  -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது

ஷணம் அபி சஹே –
ஷண காலமும் சஹிக்க கில்லேன்
காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள்
அசஹ்யமானாப் போலே
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-
ந தேவ லோகா க்ரமணம் –
இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்

யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்
அடிமைக்குப் புறம்பானவை
அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்
அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்
உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –

தத் ஸத்யம் –
இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று
மெய்யாகக் கூடுமோ -என்ன
இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்

மது மதன-
திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்
சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே
போக்கி அருள வேணும் -என்னவுமாம்

விஜ்ஞாப நமிதம்
இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்
ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும்
விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

—————————————————————————————-

ஸ்லோகம் -58-அவதாரிகை –

நிக்ரஹ ஹேதுவான பகவத் அபசாராத்ய அஸூபங்கள்
சஞ்சரிக்கிற சம்சாரத்திலே -கைங்கர்ய விரோதிகள் அசஹ்யமாம்படி –
அதிலே அருசி பிறந்து –
அத்தைப் போக்கி தந்து அருள வேண்டும் என்று
யோகிகளுக்கு துர்லபமான இதை அபேஷிப்பார் உண்டாவதே -என்ன
அவதி யில்லாத அஸூபங்களையும் போக்க வல்ல
தேவர் உடைய அபரிச்சின்ன குணங்களை
நினைத்து இருந்து அபேஷிக்கிறேன் -என்கிறார்-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-

துரந்தஸ்யா –
முடிவு இன்றிக்கே இருக்கும் அஸூபம்.
பிராயச் சித்தத்தால் ஆதல் –
அனுபவத்தால் ஆதல்
உத்தர கோடி காண ஒண்ணாது இருக்கை-
துர் விபாகமாய் இருக்குமது -என்னவுமாம் –
உத்தரத்தில் எதிர்காலத்தில் -நரக கர்ப்ப வாசங்கள் பலிக்கை –

அநாதே –
முன் செய்த முழு வினை -திருவாய் -1-4-2-என்னக் கடவது -இறே –

அபரிஹரணீ யஸ்ய –
சர்வ சக்தியான தேவருக்கும்
பிற்காலிக்கும் படி இருக்கை –

மஹதோ –
சங்க்யாவதி ரஹீதமாய் இருக்கை –
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
அவதி காண ஒண்ணாது இருக்கையும்
இப்படிப் பட்ட அஸூபத்திற்குத் தொகை இன்றிக்கே இருக்கையும் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவ வேபய நாஸ்யம் –
அணு பரிமாணனான சேதனன் இவற்றை எல்லாம் செய்தான் என்று
விஸ்மயப் படும்படி இருக்கை –
சீலமில்லாச் சிறியன் -திருவாய் -4-7-1-

நி ஹீ நா சாரோ அஹம் –
அஹம் புத்தி போத்யமான தரமி ஸ்வரூபம்
அதர்மாசார நிரூபகமாய் இருக்கை –
ஆசாரம் ஆகிறது -விலஷண தர்மத்திலே இழிகைக்கு
யோக்யதாபாதகம்-தகுதியைக் கொடுப்பது -சந்த்யா வந்த நாதிகள்-
பாப அனுஷ்டானத்துக்கு யோக்யன் -என்கை

ந்ருபஸூ –
சதுஷ் பாத்துக்களில் காட்டில்
த்வி பாதமே விசேஷம் -என்கை –
ஜ்ஞாநேன ஹீன பஸூபிஸ் சமான –
சாஸ்திர வஸ்ய ஜன்மம் ஆகையாலே -பசு -என்ன ஒண்ணாது –
ஆஹார நித்ர அபயமைது நாதி களிலே -நியதி இல்லாமையாலே
மனுஷ்யன் என்ன ஒண்ணாது
இரண்டு ஜென்மத்தையும் தப்பினேன் -என்கை –

அஸூபஸ்யாஸ் பதமபி !-
அஸூபம் ஆகிறது -ஸூப விரோதி
ஸூபம் ஆகிறது புருஷார்த்தம்
தத் விரோதிக்கு எல்லாம் ஆஸ்ரயம் –
அக்ருத்ய கரணம் முதலாக அசஹ்ய அபசாரம் முடிவானவற்றுக்கு ஆகரமாய் இருக்கை –
தேவர் குணாநாம் ஆகரம் ஆனால் போலே –
நான் அஸூபாநாம் ஆகரம் -என்கை –

அபி –
இப்படிப் பட்டவனாய் இருக்கச் செய்தேயும்
ஷணம் அபி சஹே யாது ஸததா விநாசம் -என்று
அபேஷிக்கைக்கும் ஒரு வழி யுண்டு –
அது ஏன் என்னில் –

தயா ஸிந்தோ ! –
கீழ்ச் சொன்ன அஸூப சாகரம் எல்லாம்
தேவர் உடைய தயார்ணவத்திலே
ஒரு குளப்படியாய் யன்றோ தேவர் உடைய க்ருபா சத்தை –
வதார் ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்-
யதி வா ராவண ஸ்வயம் –
கச்சா நுஜா நாமி –
பந்தோ ! –
ஆஸ்ரிதர் உடைய இழவு பேறு தன்னதாம் படியான
நிருபாதிக சம்பந்தம் சொல்லுகிறது –
அஹம் வோ பாந்தவோ ஜாத-
க்ருத்க்ருத்யஸ் ததா ராம –
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே –
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸ்ஞ்சாத்ய மாதவ –
மம ப்ராணா ஹி பாண்டவ

நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !-
வாத்ஸல்யம் -ஆகிறது
அன்று ஈன்ற கன்றின் பக்கல் தோஷம் தாய்க்கு போக்யமாய் இருக்குமா போலே
ஆஸ்ரித தோஷம் போக்யமாய் இருக்கை –
க்ருபா சமுத்ரத்துக்கு கரை உண்டாகிலும்
வாத்ஸ்ல்ய சாகரத்துக்கு கரை இல்லை -என்கை

சரணாகத வத்ஸல –
ரிபூணாம்பி வத்ஸல-
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-
த்வயி கிஞ்சித் சமா பன்நே கிம் கார்யம் சீதயா மம –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்

தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் –
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா –
கீழ்ச் சொன்ன குணங்களை உடைய தேவர் உடைய திருக் கல்யாண குண சமூஹத்தை
எப்போதும் சிந்தை செய்து
குணா நாமா கரோ
யதா ரத்நாநி ஜலதே
சதுர்முகாயு –

இதீச்சாமி கதபீ-
அஸூபாஸ்பதமான என்னை நினைத்து அஞ்சாதே
தேவர் குண கணத்தை நினைத்து
ந தேஹம் ந பிராணான்-என்கிறபடியே
இச்சியா நின்றேன் –

(ந்ருபசு -மனுஷ்யனாக பிறந்தும் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான வரம்பை மீறி
ஆஹார நித்ராதிகளிலே நியதி இன்றி மனம் போன படியே திரியும் பசுபிராயர்)

———————————————————————————-

ஸ்தோத்ரம் -59-அவதாரிகை –

இச்சாம் -என்கிற இச்சை தான் சத்தியமோ -என்ன
மந்த புத்தியான நான் விஷய அனுரூபமான இச்சை உண்டு
என்று திரு முன்பே விண்ணப்பம் செய்யப் போகாது –
இச்சா ஸூ சகமான வசனத்தை
அவலம்பித்து மெய்யாம்படி என்னுடைய
மனஸ்சை ஸிஷித்து அருள வேண்டும் –
என்கிறார் –

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-

அநிச்சன்நப் யேவம் –
யேவம் அநிச்சன்நபி-
உக்தமான பிரகாரத்துக்கு அனுரூபமாக இச்சை இன்றிக்கே
இருந்த தாகிலும்
நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்

யதி புநரி தீச்சந்நிவ –
புனர் இதீச்சந்நிவ-
மெய்யான இச்சை உடையார் சொல்லுமா போலே –

சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
க்ருத்ரிம ஸ்துதி வசனம் மெய் என்று பிரமிக்கும் படி
பண்ணினேன் –
வசன பிரகாரத்தைப் பார்த்தால் சர்வஜ்ஞாரான தேவரும்
மெய் என்று பிரமிக்கும் படி சொன்னேன் –
பொய்யே கைம்மை சொல்லி -திருவாய் -5-1-1- என்னுமா போலே –
ஹேது என் என்ன –

ரஜஸ் தமஸ் சந்தஸ் –
அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞான ஹேதுவான
ரஜஸ் தமஸ் ஸூக்களாலே மறைக்கப் பட்டவனாய்க் கொண்டு -என்றபடி –
அநாதி காலம் அந்த தேஹம் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை
மறைத்துப் போந்தது ரஜஸ் தமோ த்வாரத்தாலே இறே –

ததா அபி-
இப்படி த்யாஜ்யமாக வேண்டும் செயலைச்
செய்தேன் ஆகிலும் –
யாதாதத் யேன வர்ணிதம் -என்கிறபடியே
சர்வஜ்ஞ சகாசத்திலே மெய் சொல்லிப் பிழைக்க வேண்டி இருக்க
அங்கே பொய் பற்றினால் த்யாஜ்யன் இறே

இத்தம் ரூபம் வசநம வலம்ப்யா –
ந தேஹம் ந பிராணான்
தயா சிந்தோ பந்தோ –
என்கிற வசன மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு
மாதவன் என்றதே கொண்டு -திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்
உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –

அபி க்ருபயா –
வதார்ஹம் -என்கிறபடியே
தோஷத்தில் அவிஜ்ஞாதா வாயிற்று
கிருபா பாரதந்த்ர்யத்தாலே-

த்வமேவை வம்பூதம் மே சிஷ்ய மந –
ஏவம் பூதம் மே மனஸ் த்வமேவ ஸிஷய –
சத்மா ஸ்துதிக்கு உபகரணமான மனஸ் சை
அடிமை கொள்ளக் கடவ தேவரே அதுக்கு
உபகரணாம் படி சிஷித்து அருள வேண்டும்
தீ மனம் கெடுத்தாய் -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே
பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து
அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்
மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே
மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு –
அந்த யோக ஸ்தானத்திலே
பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –

தரணி தர –
ரசாதல கதையான பூமியை
ஆபத்தே ஹேதுவாக உத்தரித்தவர் அல்லீரோ தேவர் –
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே –5-7-6-என்றும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான்-பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சம்பந்தமும் சக்தியும் உண்டு
இவன் இடத்தில் இனி இச்சையே வேண்டுவது –
அதை உண்டாக்கி ரஷித்து அருள வேண்டும் என்கிறார் –

(கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு
கார்யம் செய்ய வல்லவன் அன்றோ – )

———————————————————————————–

ஸ்லோகம் -60-அவதாரிகை –

இச்சையும் இன்றிக்கே
உக்தி மாதரத்தைக் கொண்டு
இச்சையையும் உண்டாக்கி
ரஷித்து அருள வேண்டும் -என்கிறது என் என்ன
அவர்ஜநீய சம்பந்தத்தைச் சொல்லுகிறார் –

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-

பிதா த்வம்-
உத்பாதகராய்
ஹிதகாமராய்
இருக்கிறவர் தேவர்

மாதா த்வம் –
கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ க்லேசத்தை அனுபவித்து
அஸூசி பிரசவங்களையும் மதியாதே
இவன் ப்ரிய ஹிதமே அபேஷித்து இருக்கும்
தாயைப் போலே பரிவுடையீர் தேவர்
பிதா அஹம் அசய ஜகத –
பூதா நாம் யோ அவ்யய பிதா -(ஸ்ரீ சஹஸ்ர நாமம் -அவ்யய பிதா-அழிவற்ற தந்தை )
தஞ்சமாகிய தந்தை தாய் -திருவாய் -3-6-9-

தயித தநயஸ் த்வம் –
அபிமதனாய் நிரய நிஸ்தாரகனான புத்ரனைப் போலே
நின்று சஹகரிப்பீர் தேவர்
நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -திருவாய் -5-1-8-

ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –
அபிமதருமாய் சர்வ காலத்திலும்
ஸோபனத்தையே பண்ணும் திரு உள்ளத்தை யுடையராய்
இருப்பீர் தேவரீர் –
அனர்த்தத்தைப் பண்ணி விட்டாலும்
விட ஒண்ணாத அபிமதத்வம்
அநபிமதன் ஆனாலும் விட ஒண்ணாத ஸூஹ்ருத்த்வம் –

அவதாரணம் -சர்வத்திலும் அந்வயிக்க கடவது –

த்வம் மித்ரம் –
அர்ஜுனன் ஸூபத்ரை யுடைய ஸ்வயம்வரத்தை
தேவருக்கு அறிவித்து லபித்தால் போலே
அசேஷ ரஹஸ்யங்களையும் அறிவிக்கலாம் படி
விஸ்வஸ நீயராய் இருப்பீர் தேவரே –

குருரஸி –
மன்மனா பவ மதபக்த -என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும்
நின்ற நிலைகளிலே ஹித உபதேசம் பண்ணும் ஆசார்யரும் தேவரே –

கதிஸ் சாஸி –
புருஷார்த்த உபாய பூதரும் தேவர் -என்னுதல் –
கந்தவ்யத்வாதி கதி -என்று பரம ப்ராப்யர் தேவர் -என்னுதல்

ஜகதாம் –
இந்த சம்பந்தம் தேவாதி சகல பிராணிகளுக்கும் சாதாரணம்
உபய விபூதிக்கும் சாதாரணம் -என்னவுமாம் –

த்வதீ யஸ் –
அந்த சாமான்யம் ஒழிய தமக்கு உண்டான விசேஷ பிரதிபத்தியை
அருளிச் செய்கிறார் –
யஸ் யாஸ்மி -என்கிறபடியே
தேவருக்கு சேஷ பூதன் –

த்வத் ப்ருத்யஸ் –
தேவருக்கு அதிசயத்தை விளைத்து
ஸ்வரூபம் பெரும் சம்பந்தத்தை உடையன் -என்கை
அதனால் தேவருக்கு பரணீயன் -என்னுதல்

தவ பரிஜநஸ் –
ஆத்ம தாஸ்யம் -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்கிற நிருபாதிக தாஸ பூதன் -என்னுதல் –
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத் மாந பரமாத்மந –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
சர்வ கைங்கர்யத்துக்கும் அர்ஹன் –

த்வத் கதிர் –
தேவரே ப்ராப்ய பூதர் -என்று இருக்கிறேன்

அஹம் பிரபன்னஸ் –
ப்ராப்யம் பெறுகைக்கு தேவரையே உபாயமாக
அத்யவஸிக்கிறேன்-

ஏவம் ஸதி-
தேவர் சர்வ வித பந்துவுமாய்
நான் அநந்ய கதியுமான
பின்பு –

யஹமபி –
அஹ்ருத யோக்தன் ஆனாலும்

தவை வாஸ்மி ஹி பர –
தவைவ ப்ரோ அஸ்மி –
தேவருக்கே பரனாகிறேன்
ஜ்ஞான சக்த் யாதியாலும்
ப்ராப்தி யாலும்
என் கார்யம் தேவருக்கே பரம் -என்கை –

பரம் ஆகையாவது –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகார நிர்வாஹ்யனாகை –

(சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –
ஸூஹ்ருத்-எப்பொழுதும் ஹித விரும்பி
மித்ரன் -சமண வயஷகன் -சகல ரஹஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள உரியவன் )

———————————————————————————-

ஸ்தோத்ரம் -61- அவதாரிகை –

நீர் மஹா வம்ஸ ப்ரஸூதர் அல்லீரோ –
நிராலம்பரைப் போலே இங்கன் சொல்லுகிறது -என் -என்ன
இவ் வம்ஸ்த்தில் பிறந்தேனே யாகிலும்
பாப ப்ரசுரனாகையாலே
சம்சாரத்தில் அழுந்தா நின்றேன்
எடுத்து அருள வேண்டும் – என்கிறார் –

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி –
வம்ஸ்த்துக்கு மஹத்தை யாவது –
மஹாத்மாக்கள் வந்து ஜனிக்கை —
ஏதத்தி துர்லப தரம் லோகே ஜந்ம யதீத் ருஸ்ம் -ஸ்ரீ கீதை -6-42-என்னும்
வம்சத்திலே பிறந்து வைத்து அனர்த்தப் படா நின்றேன் -என்கை –

ஜகதி க்யாத யஸஸாம் –
சதுஸ் ஸாகர பர்யந்தமான பூமி எல்லாம் பிரசித்தமான
புகழை உடையவர்கள் –
திகழும் தன திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து -திருவாய் -8-7-5–
என்கிறபடியே பகவத் விஷயீ காரத்தால் வந்த புகழ் –

ஸூசீ நாம் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் போக்யதா கந்த ரஹிதராய் இருக்கை –
ஆந்த்ர பாஹ்யமான உபய ஸூசியைச் சொல்லவுமாம்-
இவ்வம்சத்திலே பிறந்து அஸூபாஸ் பதம் என்னக் கடவீரோ –

யுக்தாநாம்-
க்ருதக்ருத்யா ப்ரதீ ஷந்தே-என்கிறபடியே
நித்ய யோகத்தில் ஆகாங்ஷமாணராய் இருக்குமவர்கள் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
இப்படிப் பட்ட வம்சத்திலே பிறந்து
இச்சை போராது -என்னக் கடவீரோ -என்ன –

குணா புருஷ தத்தத் வஸ்தி திவிதாம் –
சித் அசித் ஈஸ்வரர்களுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களை அறியுமவர்கள் –
குணம் என்று குண ஆஸ்ரயமான பிரக்ருதியைச் சொல்லுகிறது
ஸ்திதி யாவது ஸ்வரூப ஸ்வபாவாதிகள் –

நிஸ்ரக்கா தேவ தவச் சரண கமலை காந்த மநஸாம்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே
வாய் வைக்குமா போலே
தவச் சரணார விந்தங்களிலே ஏகாந்தமான
மனஸ் சை ஜந்ம ப்ரப்ருதியாக உடையவர்கள் –
கீழ்ச் சொன்ன ஸூஸி யோகாதிகள் நைசர்க்கிகம் -என்கை –

பாபாத்மா –
பாபம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –
ஞானாநந்தம் ஒழிய பாபமே நிரூபகமாய் -இருக்கை –

ஸ்ரணத! –
இவ்வளவிலும் உன் பக்கல் அவகாசம் உண்டாம் படி
ஆள் பார்த்து உழி தரும் -நான் -திரு -60-தேவரீரே –

தமஸி -அதோ அத -நிமஜ்ஜாமி
பிரக்ருதியிலே தேவர் எடுக்க நினைத்தாலும் கைக்கு எட்டாதபடி ஆழ நின்றேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –

இத்தால் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான்
பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இ றே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே
இருக்கிற படி இ றே -என்னுடைய பாப ப்ராசுர்யம்
என்கிறார் –

(யுக்தானாம் -1-ஆத்ம சாஷாத்கார யோகத்தில் ஊன்றியவர்கள்
2-உன்னுடன் நித்ய சம்பந்தத்தை விரும்பி இருப்பவர்கள்
3-ஒருக்காலும் உன்னை விட்டு புரியாதவர்கள் -என்ற மூன்றும் உண்டே
சரணத–தத்வ ஞானம் அறிந்தவர்களுக்கு தகுந்த உபாயத்தை கொடுத்து அருளுபவன் -)

——————————————————-

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –

இவ்வம்சத்தில் ஜென்மத்தையும்
அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன
பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

அமர்யாத –
வேத மரியாதைக்கு பஹிர்ப்பூதன்

ஷூத்ரஸ் –
ஷூத்ரத்வம் அவது
நீச விஷயங்களில் அதி சபலன் –
உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து
அதுக்கு மேலே விநாச ஹேதுவான
நீச சேவையிலே அதி சபலன்-

சலமதிர்-
நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது
வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று
ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால்
அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –

அஸூயா ப்ரஸ்வபூ –
பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –
தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே
பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –

க்ருதக்ந –
உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை-
கோக் நே சைவ ஸூ ரா பேச சோரே பக்நவ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று
மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும்
பஹிஷ்க்ருதன் -என்கை-

துர்மாநீ –
இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும்
சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –

ஸ்மர ப்ரவஸோ –
தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக
நினைத்து இருக்கிற அளவன்றிக்கே
விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும்
பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும்
அனர்த்தப் பட்டேன் -என்கை –

வஞ்சன பர –
காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் –
அவ்விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று
சொல்லுகிறபடியே-

ந்ரு ஸ்ம்ஸ –
தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே –
தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல்
க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –

பாபிஷ்ட-
இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய்
அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை
பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –
ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்
மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே
த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற
துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –
இதில் அழுந்திக் கிடக்கிற நான்
கரை ஏற எனபது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

தவ சரணயோ -கதம் -பரிசரேயம் –
துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான்
நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே
எங்கனே பரிசர்யை பண்ணுவன்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –
நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

—————————————————————————

ஸ்தோத்ரம் -63-அவதாரிகை –

புத்தி பூர்வேண பண்ணின
பராதி கூல்யங்களைப் போக்கப் போமோ -என்ன
காகாபராதத்தையும்
ஸிஸூபாலாப ராதத்தையும்
பொறுத்து அருளின தேவருக்குப்
பொறுக்க முடியாதது உண்டோ –
என்கிறார் –

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ரகுவர –
சரணாகத ரஷணம் பண்ணிப் போந்த
ரகு ப்ரப்ருதிகள் காதகர் என்னும்படி
சரணாகத ரஷணததிலே அதிகரராய் இருக்கை –
ரகு ராஷச சம்வாதத்தில் சரணாகத ரஷணம் பண்ணிப் போந்தவர்கள் அன்றிக்கே –
ஸூக்ரீவம் சரணம் கத -என்றும்
த்வயி கிஞ்சித் சமாபன்நே -என்றும் இறே இவர் படி –

தாத்ருஸ –
அப்படிப் பட்டவன் என்னுமது ஒழிய
அனுபாஷிக்கை தான் அசஹ்யமாம் படி இறே பண்ணின அபராதம் –

வாயஸ்ஸ்ய –
அபராதம் பண்ணுகைக்காக
ப்ராப்தமான தேவத்வத்தை விட்டு
நிஹீனமான திர்யக் த்வத்தைப் பரிக்ரஹித்தான் -என்கை –

ப்ரணத இதி –
ஸ பித்ரா ஸ பரித்யக்த -என்கிறபடியே
இவனைப் பரிக்ரஹிக்கில் நமக்கு அனர்த்தம் என்று
சர்வரும் உபேஷிக்க -புகலற்று
ஸ தம் நபதிதம் பூ மௌ-என்கிறபடியே
விழுந்தவனை சரணாகதன் என்று பிரதிபத்தி பண்ணி
ருஷி -சரணாகதம் -என்றதும் ராம அபிப்ராயத்தாலே-

த்வம் தயாளூரபூ –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காம் அளவிலே தேவர்
க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே
தயாளு வானீர் –
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த
பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது –
பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

யச்ச –
ச சப்தத்தாலே-காகாபராதத்தை பொறுத்த அளவேயோ-என்று
உதாஹரணாந்தரத்தை சமுச்சயிக்கிறார்-

சைத்யஸ்ய –
யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –

பிரதிப வமபராத்து-
காகத்தைப் போலே ஒரு கால் அபராதத்தைப் பண்ணின
அளவன்ற்றியே-
ஜன்மம் தோறும் பிரதி கூல்யத்திலே வாசனை பண்ணினவனுக்கு –

சாயுஜ்யதோ அபூ –
பஹூ நாம் ஜந்ம நாமந்தே -என்றும்
அநேக ஜந்ம சமசித்த -என்றும்
ஜன்மம் தோறும் ஆஸ்ரயித்தார் பெரும் பேற்றை இறே கொடுத்தது –
சாயுஜ்யம் ஆவது -சமான குண யோகம் –
சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே தீவர பக்தாஸ் தபஸ் விந –
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா

முக்த –
ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை -திருவாய் -7-6-10-என்கிறபடியே
அபராத அநபிஜ்ஞன் இறே கிருஷ்ணன்
அதுக்கு மேலே ஒரு பேற்றை முடிக்கிற தசையிலே
ஸூக ரூபமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின ஏற்றம் –

தஸ்ய தே ஷமாயா அபத்த மாக கிமஸ்தி-
கால பேதத்தாலே தேவர் வேற ஒருவன் ஆகிறீர் அல்லீர்
தேவர் க்ருபைக்கு அவிஷயமான பாபம் உண்டோ
கிம் ஷேப அப்தம் -அஸ்தானம் -அவிஷயம் இத்யர்த்த –
வத
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

(ப்ரதிபவம் -காகாசுரன் ஒரு ஜன்மாவில் பண்ணின அபசாரம் -சிசுபாலனோ மூன்று ஜன்மாக்களில் அபராதம் –
இருந்தாலும் க்ஷமித்து சாயுஜ்யம் அளித்தாயே-
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-)

————————————————————-

ஸ்தோத்ரம் -64-அவதாரிகை –

ஸ்வ தந்த்ரரான நாம் சிலர் திறத்தில்
ஒன்றைச் செய்தோம் -என்னா
இதுவே மரியாதையாகக் கடவதோ -என்ன
கடல் கரையிலே ஆஸ்ரித சாமான்யத்திலே
தேவர் பண்ணின பிரதிஜ்ஞை
என்னை ஒருவனை ஒழியவோ
என்கிறார் –

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநநு பிரபன்னஸ் –
ஸ்க்ருதேவ -என்றத்தை ஸ்மரிக்கிறார்

ஸ்க்ருதேவ –
என்றது -சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

நாத –
ஒரு கால் பண்ணின பிரபத்தி அமைகிறது வகுத்த நாதன் ஆகையாலே –
ஆபி முக்யம் மாத்ரமே அமைந்து இருக்கிறது –
இழவு பேறு தன்னதான குடல் துடக்கு –
அசரண்ய விஷயத்தில் ஆர்த்த பிரபத்திக்கும் பலம் பாஷிதம் –
வகுத்த விஷயத்தில் த்ருப்த பிரபத்திக்கும் பல வ்யாப்தி யுண்டு –

தவாஸ்மீதி ச யாசமாந -அஹம் தவாஸ்மி
பிரத்யக் வஸ்து வானது
கிஞ்சித் கரித்துத் தன சத்தையை லபிக்க வேணும் என்று யாசிக்கை –
உத்தார்த்த பிரக்ரியையால் -த்வயம் உத்தரார்தம் -கைங்கர்யத்தை பிரார்திக்கை –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
என்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பிரபத்தி பண்ணினேன் –
ஐ காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
இரண்டு பதத்தாலும்
பக்தி பிரபத்திகள் இரண்டிலும் அதிகரித்த அதிகாரிகள்
இருவரையும் சொல்லுகிறது -என்பாரும் உண்டு

தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம் –
ஏதத் வ்ரதம் மம -என்று கடல் கரையில் பண்ணின
பிரதிஜ்ஞையை ஸ்மரியா நின்று கொண்டு
தேவருக்கு அனுக்ராஹ்யன் –

மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே –
சர்வ சாதாரண பூதரான தேவர் உடைய
அசாதாராண இந்த சங்கல்பம்
என்னை ஒழிந்து இருக்குமோ –
கிம் ஷேப –
இன்னானை ஒழிய -என்று விசேஷித்த தாகில் அன்றோ
எனக்கு இழக்க வேண்டுவது
தேவர் சத்ய சங்கல்பராகையால்
என்னை ரஷித்து அருள வேணும் -என்கை –

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன
அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண
தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –
மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத்தந்தை – )

—————————————————————————–

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading