திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கு என்தூதாய்
நோய்எனது நுவல்என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனிஉன்து
வாய்அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே.

 பொ-ரை : ‘சிறிய நாகணவாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும்பித்தரான தலைவர்க்கு என் தூதாகிச் சென்று, என் நோயினைச் சொல்வாய் என்று யான் கூறவும், கூறாமல் இருந்துவிட்டாய்; அதனால், காரியத்தைக் கெடுத்தது நீ அன்றோ? இப்பொழுது, யான் சாயலும் அழகிய மாமை நிறமும் நீங்கப் பெற்றேன்; இனிமேல் உனது வாயலகில் இனிய உணவினை ஊட்ட வல்லவர்களைத் தேடிக் கொள்வாய்,’ என்றவாறு.

வி-கு : பூவை வேறு, கிளி வேறு; ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கி’ என்றார் தேவரும். (சிந். 2510.) பூவை என்னும் ஐயீற்றுப் பெயர், விளி ஏற்றலின் ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. சாயல் – மென்மை. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். மாமை – அழகு; இதன் நிறம் – மாந்தளிர் (குறுந் 331.) அசோகந்தளிர் (கலித். 15.) ஆம்பலின் நார் உரித்த மெல்லியதண்டு (நற். 6.) இவற்றின் நிறத்தைப் போன்றது என்று கூறுவர். ‘உள் ஊரும் பசலைநோய் எனக்கே தந்துஎன், ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே’ என்றார் திருமங்கை மன்னனும். அடிசில் என்பது, உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கு எல்லாம் பொதுப்பெயர்.

ஈடு : எட்டாம் பாட்டு. முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது, இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப் பார்த்து, 1‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்; நானோ, முடியாநின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.

நீ அலையே – ‘என் நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது! என்னாலே என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன, அறிவித்தால் வாராதிருந்தானாகில் அன்றோ அவனுக்குக் குறையாம்? நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும், ‘ஞானத்தை எந்த ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை முதலில் வணங்கக் கடவன்,’ என்கிறபடியே, செய்த உபகாரத்தை நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று, இவளும் பூவையைப்பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள். இதனால், ‘பகவல்லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும். சிறு பூவாய்-உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது? நெடு மாலார்க்கு – அவர்க்குக் காதலை உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே? என் தூதாய்-எனக்கு அவர் பக்கல் காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே! நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன, சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் – சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள். பெரிய திருமலை நம்பி, தம்முடைய இறுதிக்காலத்திலே, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

முன்பு இவள் வார்த்தை – அருளி தரித்து இருந்தது போல் -பூவை பட்ஷி –
சாயலும் மணி மாமை நிறமும் போனது
முடியும் தசையை அறிவிக்க
உன்னால வந்தது அன்றோ
அறிவித்து வாராமல் இருந்தால் அவன் குறை
பகவல் லாபம் சேர்ப்பார் ஆலே தானே என்கிறாள்
ஆசார்யாராய் விரும்புகிறது பண்ணிய உபாகரம் பற்றி இரே
ஞானம் கொடுத்த அவனையே பூர்வமாக அபிவாதயே -மனு ஸ்மரதி வசனம்
சிறு பாவாய் -உன் பருவம் நிரம்பாமல்
நெடு மால் -அப்படி பட்டவன் அன்பை கொண்டு வர வில்லை -அவருக்கு வியாமோகம் மிக்கு இருக்க –
என் தூதாய் -எனக்கும் வியாமோகம் உண்டே அவர் பக்கல்
இரண்டும் இருந்தும் நீ கார்யம் செய்ய வில்லை
வயிற்றில் பிறந்த உங்களை அன்றோ -வளர்த்த
அபிமதம் சேர்க்க வேண்டும் படி என் நிலை
நோய் எனது -பரத ஆழ்வான் நோய் என்றால் அது சாதுர்ய்ச்மாய் இருக்காதே –
நான்கு நாள் இருந்து போவது போல் சாதாரணமான வியாதி இல்லை –
கண்ணால் காண முடியாதே
சடிலம்-ஜடா முடி தரித்து –
நல்ல மாலை வந்தால் பெருமாள் இது பரதனுக்கு கொண்டாடிய திருமுடி
நல்ல வஸ்த்ரம் கண்டால் இது பிள்ளைக்கு என்பார்
ப்ராஞ்சலிம் இரந்து கொடுக்க கடவன் –
இப்பொழுது தன அபிமததுக்கு தான் இறப்பாலனாக இருக்கிறான்
பதிதம் புவி பூமியில் விழுந்து கிடக்கிறான்
மடியில் பரதனை வைத்து கொள்ள வேண்டுமே படுக்கை உறுத்தும் என்று –
தார்ச ராம -வைத்த கண் வாங்காமல் -துர் தர்சம் இப்பொழுது
யுகான்தரம் பாஸ்கரம் துதி –
ஜகத் உபசம்காரம் உலகு அழியும் பொழுது சூர்யன் இருப்பது போல் -அப்படி பட்ட நோய் எனது –
இதை சொல்லாமல் இருந்து ஒழிந்தாய்தன் நோய் வலிமையை -பரதன் நோய் போல் காட்டி -நோய் எனது இவ்வளவு அர்த்தம்

நுவல் என்ன -சொல்ல சொல்லி நோலாதே இருந்து ஒழிந்தாய்
இருந்தும் – ஒழிந்தாய்   இரட்டிப்பு –
வழக்க சொல் மீமிசை போல் ரொம்ப மேல்
இரண்டு தர்மியும் நோக்கலாய் இருக்க ஆறி இருந்தாய்
சாயலோடு மணி மாமை சமுதாய சோபை நிறத்தின் அழகும் போனது
கதே ஜலே சேது பந்தம் போல் இனி அறிவித்து என்ன லாபம்
இனி உனக்கு ரஷகரை தேட பார்
அவன் வந்தாலும் உடம்பு தேறாது
ஐதீகம் பெரிய திருமலை நம்பி பரம பதிககும் பொழுது –
தமக்கு ஒரு வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -திருவாராதன பெருமாள்
திரு முன்பு திரை வாங்க சொல்லி சாயலோடு மணி மணிமாமை தளர்ந்தேன் நான்
இனி உனக்கு இன்னடிசில் -அந்த பெருமாள் தான் எம்பெருமானார் இடம் வந்து சேர்ந்தது
மூன்றாம் பத்தில் இந்த ஐதிகம் உண்டு
இனி நாடாய் -அந்த பெருமாள் தான் இவர் இடம் வந்து சேர்ந்தாரோ
வார்த்தைகள் எல்லாம் அருளி செயல் திவ்ய சுக்திகள் தான்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading