திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்!

மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு

மதியிலேன் வல்வினையே மாளாதோ என்றுஒருத்தி

மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.

பொ-ரை : நல்வினையினால் பெண் அன்னங்களைச் சேர்ந்திருக்கிற மெல்லிய நடையினையுடைய அன்னங்காள், அறிவினால் குறுகிய வடிவையுடைய பிரமசாரியாகி உலகத்தினை யாசித்த வஞ்சனையுடையவருக்கு, ‘ஒரு பெண்ணானவள் அறிவில்லாத தன்னுடைய கொடிய வினைகள்தாம் அழியாதனவோ என்று கூறி, அறிவு எல்லாம் அடியோடு கலங்கி மயங்காநின்றாள்’ என்று கூறுங்கள்.வி-கு : மாணி-பிரமசாரி; திருமணம் முடிக்கப் பெறாதவன். ‘மாணியாம் படிவம் அன்று மற்றிவன் படிவம் மைந்த’ என்றார் கம்பநாடரும். ‘என்று கலங்கி மயங்கும்’ என முடிக்க. மயங்கும்-செய்யுமென் முற்று. என்னீர்-ஒரு சொல்: முன்னிலை ஏவல். ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பத்தி வாதங்கள் நமக்குத் தெரியா; ‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ என்கிறபடியே, அனுபவித்தே அறவேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு, ‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள். விதியினால் பெடை மணக்கும்-‘நீங்கள் நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்; இவன் அடைவு கெடக் கலங்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள். இனி, விதி-புண்ணியம்; அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்; காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள். இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று. ‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின், பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் தேடிக்கொண்டு வருகையில், இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பேயன்றோ தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு? ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே? ‘ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில்,1நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம். ‘பேடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள். மென்னடைய அன்னங்காள்இவ்வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம். இனி, இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள்,பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது. மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு ‘இராவணனைப்போலே தலை அறுத்துவிட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை ஏறிட்டுக்கொண்டிருந்தான் மாவலி. இந்திரன் அரசையிழந்து நின்றான்; இரண்டிற்கும் மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று, 3‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் 4கால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள். ‘உண்டு’ என்று இட்டபோதொடு

‘இல்லை’ என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அறமுகமலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள். உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் 1‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர்திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், 2‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும்,3‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,4‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், 5‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

    மதியிலேன்-‘பிரிகிற சமயத்திலே, ‘போகாதேகொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ? அது செய்திலேன்; ஆதலால், அறிவுகேடியானேன்,’ என்கிறாள். வல்வினையே மாளாதோ- இவள் 6ஒரு தீர்க்கசிந்தயந்தியாவள். ‘மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினையுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது உட்கோள். அதாவது, சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினையுடையளாய் மாமியார் முதலானாருடைய முன்னிலையிலேயே இருவினைகளையும் நீக்கி மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல் தகும். ‘ஆயின், அவள் இருவினைகளையும்

 நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின், 1‘கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்; அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்; ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது. ஒருத்தி-‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ? அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை 2ஏவுடனே கிடந்து உழையாநின்றது’ என்று ஊரில் வார்த்தையானால் எய்தவன் கை உணராதோ? ‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே? அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது மேலும் மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமேயாவள். ‘ஏன்? அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின், சம்சாரிகள் புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்; நித்தியசூரிகளுக்குப் பிரிவு இல்லை;3மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு உறுப்புகளாய் இருப்பவர்கள்.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு 4‘என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; 5அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?அப்படிக் கலங்குமோ!’ என்பார்; மதி எல்லாம் உள் கலங்கி-தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்; ‘அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல், மயங்குமால் – முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்; ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள். ‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்; அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள், இனி, ‘துன்பக்குரல் கேட்பின். பொறுக்கமாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம். அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி. இனி, உங்களுக்குச் சொரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள் எனலும் ஒன்று அனுபவித்தே தீர வேண்டும் கர்ம பலன்

சாஸ்திரம் சொல்லி உள்ளதே  கல்ப கோடி காலம் ஆனாலும்
சிந்தயந்திக்கு போனதே
நானும் உன்னை பிரிந்து அனுபவித்து விட்டேனே
இன்னும் போக வில்லையே
விதியினால் பெடை மணக்கும் –
சாஸ்திர விதி படி விவாகம் செய்ததனால் பிரிவு இல்லை
அடைவு கெட பிரிந்து போனதால் -பிரிந்தோமே
சுக்ரீவனை மகா ராஜார் ஆக்கினவர்  பெருமாள் என்பதால் அந்த பெயர் இட்டே சுக்ரீவன் அழைக்க படுவான்

பிறர் இழவே நெஞ்சில் முற்பட படும் நீர்மை உடையாருக்கு
இழவு -இழப்பு -குறை
பேடை மணக்கும் –
கருத்து அறிந்து அத்தை உகப்பிக்கும்
பெடையோடு அன்னம் -பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி
நாணி ஒளிக்கும் நறையூரே
வேகமாக போக வேண்டும்
மென்னடைய
தாரை இப்படி நடந்து வர
பிரசாங்கிகமாக இதை சொல்ல காலஷேபம் என்பதால்
இலக்குமணன் ஏற் எடுத்து பார்க்க மாட்டான் என்று

த்யா கோஷம் -நாண் ஒலி கேட்டதும் -காபெயமான வியாபாரங்கள் -கபி குரங்கு செய்யும்
மது பானம்போக பிரத்யகன் -இச் சீற்றத்துக்கு முன் இதூ நிற்காமல்
நடையிலே தோற்ற -புறப்பட்டது போல் அன்னங்களும்-அது போல் நடக்க
மணக்கும் -சம்ச்லேஷம் கல்வியால்
தாரை இட்டு ஆற்றவிட

தாரை விட்டு நெருப்பை அணைப்பது போல்
ஒரு கல்வியும் பிரிவும் வேண்டாத படி -தடுமாறி அடி மேல் அடி விட்டு வந்தாள்
இடுப்பில் தங்க ஆபரணம் சாத்திக் கொண்டு -காஞ்சி குணா ஹேமா சூத்திரம்
அரை நூல் வடம் இழுப்புண்டு வருவது போல் கலந்து
சிஹ்னங்கள் காணலாம் படி வந்தாள் இளைய பெருமாள் முன்
தாய்க்கு ஒழிப்பது  உண்டோ –
உருகு பதம் –எவ்வலும் வளைக்கலாமா
அது தான் ச்வாபிகம் அவளுக்கு என்னும் படி பவ்யதையாய் இருந்தாள்
தன கார்யம் கொள்ளுகைக்கு -அது போல் இவையும் எம்பெருமான் இடம் துவக்கிகார்யம் கொள்ளும்
மதியினால் குரல் மானாய்
புத்தி சாத்ர்யத்தால் -கள்வன்-பட்டம் கொடுக்கிறாள்
 மாணி -பிரமச்சாரி

குறள் குள்ளமான –
புத்தி சாதுர்யத்தால்
அவன் சால தூர ர்தர்சி கோள்-வரும் காலம் அறிபவன் -தேசத்தால் தூர தர்சனம் தூர தர்சனம்
ஓவதார்யம் குணம் ஏற் இட்டு இருந்தான்
ராவணன் போல் பொல்லாதவன் இல்லையே

. ராவணனை போலே -தலை கொள்ள முடியாமல் –

ஒவ்தார்யம் குணம் மிக்கு -ஏறிட்டு கொண்டு இருந்தான் –
இந்த்ரனுக்கும் ராஜ்ஜியம் கொடுக்க -மதியினால் –
கொடுத்து வளந்த கை கொண்டு -கோ தானம் -செய்த பெருமாள் –
இரந்தான்-நீர் ஏற்று -இந்தரனுக்கு கொடுத்த விரகர்
குறள்-கோடியை காணி ஆக்கி -பெரிய வடிவை கண்ணாலே அனுபவிக்க  குறுகி –
திரட்டு பால்-படிப்பால் சுவை திரண்டு கிடைக்குமா  போலே
மாண்-உண்டு என்று இட்ட போது போலே இல்லை என்று கதவை அடைத்தாலும் –
ஒன்றை நினைத்து ஒன்றை செய்தாது போல்
24 படி கள்வர்க்கு –
ஆளவந்தார் பிள்ளான்
முகம் மலர்ந்து போகும் படி

தானே சங்கல்பித்த உலகை கொள்வன் நான் என்று இரந்த
வஞ்சகன் -பிள்ளான் நிர்வாகம்-ஆள வந்தார் இடம் கேட்டது
ஒன்றை நினைத்து ஒன்றை செய்தவன்-எம்பெருமானார்
அக்குண செஷ்டிதங்களால் என்னை ஈடு படுத்த -என்னை வஞ்சித்தான்-பராங்குச நாயகி
மநோஹாரி சேஷ்டிதம்-தூர தர்சி -அன்றே செய்தான் இவளை இன்று மயக்க
என் நெஞ்சை அகப்படுத்த செய்த கார்யம் -எம்பெருமானார் நிர்வாகம்
மநோஹாரி செஷ்டிதம்
தழுவவன்-பெரும் நிலம் கடந்த நல் அடி போது தழுவ முன்பே ஆசைப்பட்டாள்

கடியன் கொடியன்-உலகம் கொண்ட நெடியமால் அவன் என்றே நெஞ்சம் கிடக்கும்
முன்னம் குறள் குருவாய்–மாலாகி பொன் பயந்தேன் திரு மங்கை ஆழ்வாரும்
ஈடு பட்டு கிடக்க அன்றே செய்தான் கள்வன்
சிந்தயந்தி -குழல் ஓசை –
தத் சித்த அசேஷ பாதகங்கள் விலக -முக்திம் கதா அந்யா கோப கன்யா –
பர பிரம ச்வரூபினம் -மதியிலேன்-பிரிகிற போது போகாதே கொள் சொல்ல வில்லையே அறிவுகேடி ஆனேன்

மதியிலேன்
வல்வினையே மாளாதோ
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி ஆயிற்று
எல்லை சதுரியால் -சாத்ர்யத்தில் சீமா பூமி -அவள் –
தத் சித்த விமலா -ஷணத்தில் அசேஷ பாதகங்கள் விலக முக்திம் கதா
நினைத்து கொண்டு இருப்பவளே -சிந்த யந்தி –
வினையால் அணையும் பெயர் -அவனை நினைத்து கொண்டு இருந்தவளான அவள்
இயல் பெயரை குறிக்காமல் ஆசார்யர் -கோப கன்னி –
அரை ஷனத்தில் அனுபவித்து
ஆழ்வார் வல் வினையே மாளாதோ —
ஒருத்தி -என்றால் அவன் அறியுமோ –
இன்ன காட்டிலே மான் பேடை -எய்தவன் கை உணராதோ -அம்பு விட்டவன் அறிவானா

நீ அன்றோ எய்தாய் சொல்ல வேண்டாமே
ஒருத்தி மதி எல்லாம் உல் கலங்கி
சம்சார விபூதியில் உள்ளாள் இவள் ஒருத்தி இறே
புறம்பே அந்ய பரர சம்சாரிகள் –
நித்ய முக்தர் -விச்லேஷம் இல்லை
மற்றைய ஆழ்வார்கள் இவருக்கு அவயவம்
அத்வதீயம்
மயங்கும் -ஆல் -ஆச்சர்யம்
மதி கலங்கி – தம் அறிவு போனதே
மதி எல்லாம் கலங்கி -நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பார் அதுவும் -துடிக்க கூடாது -சீதா பிராட்டி வார்த்தை
பெருமாள் சொல்லையும் வில்லையும்  நம்பி -தத்  தது சத்ருசம் -ஆறி இருக்க வேணும் -இல்லை என்பதால் அதுவும் கலங்கி
வைலஷண்யம் படுத்தும் பாடு -மேல் எழ சிறிது கலந்கிற்றாலும் -என்று அவன் சொல்ல
மதி எல்லாம் உள் கலங்கி -அடியோடு கலங்கி -கீழோடு கலங்கி -அடி மண்டியோடே கலங்கி
மீண்டும் கொடுக்கிறேன் -பின்பு -போன பொழுது -கொடுக்கிறேன்
மயங்குமால் -மயங்கி விட்டாள் -அறிவு கொடுக்க ஆஸ்ரயனியம் இருக்க வேண்டுமே
முடியும் தசை ஆயிற்று என்னீரே
உடையவன் ஸ்வாமி

அவன் வைலஷ்ண்யதுக்கு நமஸ்காரம்  அடியோடு கலங்கிற்று –

தன அறிவு -தாம் கொடுத்த அறிவு –
அவன் தந்த ஞான பரப்பு எல்லாம் கலங்க உடலானது -அடி மண்டியோடே கலங்க
மயங்குமால் என்னீரே –

முடியும் தசை ஆனது
போகும் பொழுது மீண்டும் மயர்வற மதி நலம் அருளுவேன் என்றால்
அவள் முடிந்து விடுவாள்
உங்கள் தலையில் பழியை துடைக்க பாரும்
அறிவித்த பின்பு வாராது ஒழிந்தால் அவனது அன்றோ அவத்யம்
ஆர்த்த த்வனி பொறுக்க  மாட்டான்
என்னீரே -உங்களுக்கு ஸ்வரூபம் கடக கிருத்தியம்
அவனுக்கு குணம்
எனக்கு சத்தை இருப்பு கிடக்க பெரும்
ஒரு வார்த்தையில்
உக்தி ஒன்றே இவை எல்லாம் செய்யுமே
என்னீரே ஒரே வார்த்தையில்

ஸ்வரூபம் உங்களுக்கு நிறைவேற ஆசார்யர் கடக க்ருத்யம் கிடைக்கும்
அவனுக்கு  குணம் நிறம் பெரும்
நான் சத்தை இருப்பு கிடைக்கும்
ஒரே உக்தியால் இவை அனைத்தும் கிடைக்கும்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading