திரு நெடும் தாண்டகம்–28-தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள
சென்று உலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
வரை வுருவின் மா களிற்றை தோழி! என் தன்
பொன்னிலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே—28-

பிரணய ரோஷம் —
முடிந்து பிழைக்கப் போகிறேன் –
மாற்றி ஆனந்தமாக சேர்ப்பித்துக் கொள்ளப் போகிறான் அடுத்த இரண்டு பாசுரங்களில் ..
வைகல் பூம் கழிவாயில் தூது விட்டார் ஆழ்வார்
திரு வண்  வண்டூர் ரக்ஷணம் -விசுவாசம் -கொண்டு விட
அடுத்து  பிரணய ரோஷம் காட்டியது போல
என் உடைய பந்தும் கழலும் தந்து போ என்றது போல —
மேகம் தூது விட்டாள்-ஆண்டாள் –
சகுனம் வேற வருவது காட்ட –தவிக்க விட்டவனை ஊட வேண்டும் —
சேர வருவான் சம்ச்லேஷம் -பிரிவான் அடுத்து ஆனந்தம் குறைக்க —
கீழே சேர்ந்து பிரிந்தது தெரியுமே —
சேராமல் முகம் காட்டாமல் இருந்தால் –
சேஷத்வ பார தந்த்ர்யம் போகும் ஸ்வரூப நாசம் –
நாமே இல்லை துக்கமும் போகுமே -இருந்து துக்கப் பட வேண்டாமே —
முடிந்து பிழைப்போம் –இந்த நிலை –தூது விட்டோம் கட்டாயம் வருவான் என்பதே அடிப் படைக் கருத்து

தூது விடுகைக்கு அடுத்த தசை இது –பிரணய ரோஷம் –
கலங்கி இருந்தார் இது வரை- இடி விழுந்து தெளிந்தார்–சுப நிமித்தம் தெரிகை —
என் சினம் தீர்வன் நானே அரையர் அபிநயம் காட்ட-எம்பார் சொல்லி கர ஸ்பர்சம் இன்றி -முகம்  திருப்பி காட்டச் சொல்லி –
இதுவே சினம் தீர்க்க வழி –இதற்க்கு ஹேது என் என்னில் –
முடிந்து பிழைக்கக் கடவோம் –
ஸ்வரூப நாசம் முடிவது — -இதைக் கண்ட தோழி -பிரணய ரோஷம் எதிர் பார்த்து இருக்க —
தெளிந்து இருப்பதைக் கண்டு பயப்பட –
நெஞ்சில் ஓடுவது என் வினவ

அவன் வந்தால் பண்டு போல் முகம் காட்டாமல் –
கெடுவாய் மலை உடன் பொருதும் மல்லர் உண்டோ–
உபய விபூதி நாயகன் சர்வ  சக்தி  யுக்தன் -அபலை -தொளிக்கும் ரோஷம் உண்டு தலை மகளை காக்க சொல்கிறாள் —
பரனுக்கு காலன் நான்
ஈஸ்வர விபூதியை அழிக்க வல்ல திறமை உடையவள்  நான்-இதற்க்கு பதிலாக  —
பிரபு உடன் ஊடலாமா
பிரணயித்வம் தெரியாதவன் என்றேன் என்கிறாள் தோழி – –
இவர் பிரபுத்வம்- நாடு ஆளும் திறமையும்- படப் போகும் பாடு பார் என்றாள்–
தோழி  யோசித்து -ஆஸ்ரிதர்க்கு  கட்டாயம் அனுக்ரஹிப்பாரே –
கதைகள் பல பெண்ணுக்கு– சீதை காத்து இருந்தாளே -இது எல்லாம் பகட்டு —
கைக் கூலி கொடுத்து வால்மீகி வியாசரை எழுதி வைக்கச் சொன்னவன் —
நான் முடிகை தவிரேன் என்கிறாள் —
கடகர் ஆச்சார்யர் -பெருமாள் முகம் காட்டா விடில் அவன் மேலே கோபம் கொள்ளுவார் –
துஷ்க்ருதாம் க்ருதவான் ராம -திரு வடி நினைத்தாரே சீதை பிராட்டி பார்த்ததும் —
பெருமாளும் இவர் இடம் கணை ஆழி கொடுத்ததே இவர் எண்ணம் அறிந்து தானே —
இன்னும் உயிர் உடன் இருக்கிறாரே என்ற எண்ணம் -வால்மீகி -வைராக்ய சிகாமணி கோபம் கொண்டு இப்படி  எழுதும் பொழுது –
ப்ரணியத்வம் அறியாமல் யானை ஏற்றம் வில் வித்தை அறிந்து என்ன பலன்–
குறி அழியாமல் இருக்கிறாரே பெருமாள் —

ஸ்ரீ ராம திருவிக்கிரம கிருஷ்ண  மூன்று விருத்தாந்தம்  சொல்ல –
எல்லாம் பகட்டு – வேஷம் முடிந்தே தீருவேன் என்கிறாள் தலைவி —
தென் இலங்கை- யானை  வியாபாரம் பேசுகிறாள் —
மா களிற்றை -போன்றவனை -தருவித்துக் கொண்டு– அவனைக் கட்டி வைத்து –
என்னில் அங்கம் எல்லாம் –அவன் இடம் முன்பு  போன அங்கம் எல்லாம் -திரும்பி வந்து –
இன்பம் எய்த =உயிரை விட –துக்கம் போவதே இன்பம் எய்த –
தென் இலங்கை-
தர்சநீயமான -திருவடி மதித்த ஐஸ்வர்யம்–
பர காலன் முன்பு வீரன் ஆகையாலே அதை வீரம் படிந்த விருத்தாந்தம் –
பாடிய வாளன் படி துறை -திரு மங்கை ஆழ்வார் -சம்பந்திகள் அனைவருக்கும் மோஷம் வாள் வீசி எறிய
அது குத்திட்ட பாடிய வாளன் படி துறை —
தவராசன் படி துறை –ஸ்வாமி ராமானுஜர்-கேசவ பெருமாள் சந்நிதி சுற்றி காவேரி கரை அருகில் வாழ்ந்தார்கள் முன்னோர் —
அரண் பார்த்து தானும் தகப்பன்  வாயுவும் கருடனும் மட்டுமே இரவில் புக முடியும் என்றாரே —
திருவடி நெஞ்சு உளுக்கும் படி அரண் இருந்த படி–

சிதறி-
சுருக்கி -மண் வீடு கட்டி விளையாடி கலைத்தால் போல –
கிள்ளிக் களைந்தானை–அனாயாசமாக -இடறி இல்லை -நிறைய இருந்ததால் சிதறி–
தண்ணீரில் வீடு அடித்து போவது போல அனைவரும் அழிவார்கள்
விபீஷணன் தவிர மற்ற அனைவரும் வெள்ளம் மணல் கட்டடம் அழிவது போல –அவுணன் -வெம்  அசுரர் குலம் களைந்த வேந்தே –
ராக்ஷசர் -சென்ற -வந்த வரவால் பிராணன் போனதாம்-
யானை நடந்து போகும் பொழுது துவம்சம் பண்ணி போவது போல
கர தூஷணன்  நிரசித்து -மூல பலம் -தன்னை வாலிலே கட்டி திரிந்த வாலி  முடித்து –
கார்த்த வீர்ய அர்ஜுனன் பூச்சி போலே கட்டி வைத்தானே ராவணனை -அங்கதன் ராவணன் இடமே இதை எல்லாம் சொன்னானே —–
அனைத்தையும் முடித்து –
கடலை அரண் செய்து –
ஒரு பிராட்டிக்கு -உண்ணாது உறங்காது –ஒலி கடலை-தோழி சொல்ல —
செய்த கார்யம் -அபலையாய் இருப்பார் அகப் படுத்த செய்த கதை தான் இது —

அடுத்து திரி விக்ரமன்–
அபேஷா நிரபேஷமாக தலை தீண்டியவன் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -பிரார்திக்காமலே தீண்டி –
தாய் குழந்தையை அணைத்துக் கொள்வது போலே–உன்னையும் விட மாட்டான் –
கண்ட பேருக்காகா உதவினவன் —
மதம் பிடித்த யானை போல -திரிந்து -விமுகர் தலையிலும் அந்ய சேஷத்வ பரர் அனைவருக்கும்
வஞ்ச முக் குறும்பு உள்ளவருக்கும் –விசேஷஞ்சன் காண் —
விமுகர் தலைவில் வைப்பான் ஒழிய- எம்பெருமான் ஒழிய வேறு எங்கும் போகாத எனக்கு முகம் காட்ட மாட்டான் —

அடுத்து கண்ணன் பெண்களுக்கு அன்று தேர் கடாவிய பெருமான் —
மாயப் போர் தேர் பாகன்–சித்திர தேர் வலவா–
தனம் -கோவர்த்தனம் தரித்த தனம்-
தூது போகல்  சொல்ல வில்லையே -தேராலே அழித்தான் –
சங்கல்ப சக்தி யாலே முடிக்கிறவன் –
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்
கொல்லா மாகொல் —
கொலை செய்து –அதி ரதன்– பிணமும் கண் காணாத படி தேரை நடாத்தி தூசி யாலே —
ஆடிய மா நெடு தேர்–நர்த்தனம் போலே இருந்ததாம் —
தேர் காலில் துகை உண்டு போம் படி ஆனதாம் –
திரௌபதிக்கு பண்ணிய -இவன் உனக்கு பண்ணுவானே –
ஒருத்தி குழலை முடிக்க -நட்டாரை மயப்பிக்க –
நம்பி -கெட்டுப் போக -தன்னை ஒழிய செல்லாதார் குழலை விரிக்கச் செய்பவன் –
யானை திண்மை செருக்கு மலை போலே —
ஆஸ்ரித விரோதி நிரசனம் திண்மை —
ஆஸ்ரிதம் கார்யம் பண்ணி முடித்த செருக்கு –தோழி-கூப்பிடுகிறாள்
என் கையால் அவன் பட போகும் பாடு பாராய் —

சுக்ரீவன் ராமன் – ஏகம் சுகம் துக்கம் –சொன்னது போல -என் துக்கம் பங்கு போடத் தடுக்காதே –அடுத்து கெஞ்சுகிறாள் —
படட்டும் விளக்காமல் /
என் உடைய திரு பொன் இலங்கு முலை அவன் மோவாய் எழுந்தால் போலேயோ என் முலை
பக்தி என் ஸ்த்ரீத்வம் அவன்- புருஷோத்தமன்– குறி அழியாமல் –
அவன் உண்டு அறியாமல் உறக்கம் பேணாமல் –சதைக ரூபா ரூபாயா அவனை ஸ்தம்பத்தில் சேர்த்து கட்ட போகிறேன்
பக்தி யால் கட்டுவது-
பக்தியால் ஏற்படும் ஆற்றாமை வெளி படுத்துவது —
போகாமல் பூட்டிக் கொண்டு – பர கால நாயகி முகம் காட்டாமல்  இருக்க –
அவன் போக முற்படுவான் -பட்ட பாடு எல்லாம் தெரியப் படுத்துவேன் –
முலை குவட்டில் பூட்டிக் கொண்டு-
வரை போன்ற களிறு –
மலையை மலையில் சேர்க்க -வல்லேனாய் சக்தி வேண்டும் –
அழகில் ஆழம் கால் பட்டால் முடியாதே –
நெஞ்சம் நிறைந்தன–இது ஓன்று தான் குறை —
மனசு சகாயம்  பண்ண வேண்டும் /
நெஞ்சு மேல் விழுந்து ஒழியாமல் இருக்க வேண்டும் –
தோழி நீ தடுக்காமல் இருக்க வேண்டும் –ஆச்சார்யர் போல் நீ —

புலவி எய்தி -அவனை பிரிந்து படும் துன்பம் அவன் சந்நிதியில் படுவேன் —
அவன் துடிப்பான்
அதவா
நான் படும் பாட்டை  அவன் பண்ணும் படி பண்ணுவேன் —
என்னில் அங்கம் எல்லாம் -வந்து –
இன்னொரு விச்லேஷத்துக்கு இலக்கு ஆகாத படி முடிந்து பிழைப்பேன் –
பிழைக்கும் பிள்ளை பிறந்த அன்றே போய் இருக்கும் இருந்தால் தானே துக்கம்–
இது ஒரு முலை இருந்த படி என் –
இது ஒரு அதரம் இருந்த படி என் —
அவன் கொண்டாடிய அங்கங்கள் எல்லாம் முடிந்தால் தானே அவன் வருந்துவான் –
ச குடும்பமாய் ஆற்றில் முடிவது போல –
அவயவங்கள் உடன் கூடி முடிய கடவேன் –
வந்து –
கன்றும் தாயும் ஒன்றாய் இருக்க வேண்டும் –
பரதன் கைகேயி போலே கருத்து வேறு பாடு படுத்தி பிரித்தான் –
ஞானம் அங்கம் எல்லாம் கொடுத்து பிரிந்து போயின
அவை அங்கு நின்று மீண்டு ஆஸ்ரித பூதனான என் இடம் வந்து சேர்ந்து முடிய வேண்டும் –
முடிகை தான் பரம பதம் —
எப் பொழுதும் நினைந்து உருகி —
வந்து நின்றதும் மேல் விழுவாய்-தோழி சொல்ல –
அத் தசையிலும் முடிவேன் –என்கிறாள் —
ஆசைப் பட்டு சேராமல் போனாலும் விதித்து
சேஷி சேஷன் -சொன்னாலும் முடியக் கடவேன் –
நினைந்து உருகி –நின்றால் எனக்கு ஆபத்து –
ஸந்நிஹிதன் ஆகி என்னை விட்டு இல்லை
சாகாச பேச்சு பேசுவான் – வந்து நின்றதும் நினைந்த மாத்ரம் முடிவேன் –
மனோ ரதித்த மாத்ரத்திலே முடிவேன்-
சௌவ்குமார்யம் –ஆழ்வார் -பிரணய ரோஷம் மதிள் கட்ட –
அவனும் புகுர முடியாமல் கிரமத்தால் செல்லாமை காட்டி
பிரணய ரோஷம் அழித்தான் -ஆழ்வாரை  சேர்த்து கொண்டான் —
நானே –பக்தி முதிர்ந்த நிலை பிரணய ரோஷம் முதிர்ந்த நிலை –
மதிர் மம /நான் கண்ட நல்லதுவே போல
அண்ணிக்கும் அமுதூரும்  என் நாவுக்கே போல நானே என் நிலை –
நம் ஆழ்வாரை போல இல்லை -சங்கல்பித்த உடனே அழிய கூடியவள் நான் என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading