திரு நெடும் தாண்டகம்–26-தேமருவு பொழில் இடத்து மலர்ந்த போதைத்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தேமருவு பொழில் இடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறுகால சிறு வண்டே! தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான்
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –26

தேவாதி ராஜன் கோ சகன் ஆ மருவி அப்பன் திரு மங்கை ஆழ்வார் மட்டுமே மங்களா சாசனம் செய்த 47 திவ்ய தேசங்களில் ஓன்று /
தூது ருக்மிணி பிராட்டி பிராமணரை–
பெருமாள் திரு வடியை–
கண்ணன் தானே பாண்டவ தூதன் —
ஆண்டாள் மேக விடு தூது –நான்கு பதிகம் ஆழ்வார் தூது —நான்கே பாசுரம் பர கால நாயகி தூது –
ஒ மண் அளந்த நாடாளா -நேராக பேசினார் -உம் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீரோ -என்பார்

ஐந்து பாசுரங்களில் தோழி கேட்க பதில் சொல்லி வந்தாள் பர கால நாயகி —
இதில் மீண்டும் பழைய நினைவு வர ஆற்றாமை மிகுந்து தூது விடுகிறாள் –
பிரிந்து போனவன் திரு அரங்கம் போய் சேர முடியாமல் வழியிலே தேர் அழுந்தூரில் இருப்பான் என்று அங்கு தூது விடுகிறார் –
அன்றிக்கே திரு அரங்கம் –போக மண்டபம் சென்று பெரிய  பிராட்டி  இவனை பர காலை நாயகி உடன் போக -திரும்பி அனுப்ப
வந்து கொண்டு இருக்கிறவனை பிடிக்க –
மாம் அஹமின் அர்த்தம் இரண்டும் காட்டும் திவ்ய தேசம் —
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் பிரமன் மாடு கன்றுகளை மறைக்க -தேடி வந்தான் கண்ணன்-
கோகுலம் போல இருக்க -இங்கே தங்கி சேவை
பிரமன் பிரார்த்தனை — தேவாதி ராஜன் ஆ நிரை -இடையவன் -கோ சகன் –
அமரர் கோன் ஆயர் வேந்தன் –
தேர் அழுந்த உபரி சரவஸ்-பிரக லாதன் கருடன் காவேரி தாயார் உடன் சேவை —
பிரகலாத வரதன்-பிரியங்கர உருவம் ஆ மருவி அப்பன்-நரசிம்கனே விபவம் அவதாரமே கண்ணனாக சேவை —
கருடன் விமானம் திரு முடி- வைன முடி செல்லப் பிள்ளைக்கு –
இங்கு கருட விமானம் தரிசன புஷ்கரணி –
திரு வுக்கும் திரு ஆகிய செல்வா 45 பாசுரங்கள் –
முதலில் தேவாதி ராஜன் என்று திரும்பி போக புஷ் கரணி வரை வந்தவர் கால் தளர –
ஆ மருவி அப்பன் சேவை  தர -பசு கன்று உடன் சேவை –
கம்பர் பிறந்த இடம் –மன்னார் குடியில் கன்றுகள் உடன் சேவை போல —

நின் நயந்தாள் பிரியம் வைத்ததே குற்றம் என்று போய் சொல் —
இரண்டும் சேர்ந்த- பொறிகள் உடைய அறு கால சிறு வண்டே –
அமரர் கோமான் -இன்று ஆ மருவி நிரை மேய்த்தான் -கண்ணனே அர்ச்சையாக தேர் அழுந்தூரில் நிற்கிறார் –
இன்றே சென்று -மருவி-அஞ்சாதே –
அகம்பனன் ராவணன் இடம் பேசினது போல –
ஒரு மாது அத்வதீயம்- திரு மணம் கொல்லையில் கலந்த பெண் –
வார்த்தை பேசிப் பார்த்தால் போதும் வார்த்தை முடிக்கும் முன் கிளம்பி விடுவான் —
கிருஷி  பலம் விரக அக்னியில் துடிக்க அதில் முகம் மலர்ந்து கடக்க நிற்க /
தாயார் -மேல் எழுத்து இட்டாளே-ஹிதம் சொல்லி பலிக்க வில்லை –
முன்பு ஸ்லாகித்து கொண்டாடி கடந்து நின்றாள் –தோழி-
தான் ஆசுவாச படுத்த விரகு பூர்வ விருத்தம் கேட்டாள்-
அதனால் விருத்த கீர்த்தனம்-தரித்து இரண்டு பாட்டால் 21/22 பாசுரத்தில் சொன்னாள்–
பிரியும் பொழுது பவ்யன் என்பதால் போகாதே சொல்ல கூடாதோ –
23 பாசுரத்தில் கேட்க்க அதுவும் சொன்னேன் பர பிரதன் என்பதால் –
கொண்டு போனவனை நியமிக்கக் கூடாதோ — ஓர் இருவரோ நித்ய சூரி  மண்டலம் எல்லாம் சொல்லி -24–
அதை நிகமித்தாள்-அடுத்து 25 பாசுரம் என் சத்தை காக்க ஊரின் பெயரை சொல்லி போனான்

புஷ்பம் உடன் பிரியாமல் இருக்கின்றன —
ஆத்ம சாம்யம் தான் பிரிந்து இருப்பதால் அனைவரையும் –
வெள்ளி சொம்பு கிணற்றில் காலியாக இருக்கு இடுக்கி தான்  அதனால் திருடன் கொண்டு போக மாட்டான் என்று சொன்னது போல — –
வெம் மலர் பள்ளி வெம் பள்ளியாக இருக்குமே-
பட்டு உடுக்கும் பாவை பேணாள்–
அக்னி படுக்கையில் படுகிறீர்களே என்கிறாள் —
அக்னி ஸ்தம்பனம் வித்தை மிதுனமாய் இருப்பதே –
படுக்கை பொருந்தாமல் தரையில் கிடக்கும் என்னை சேர்த்து வைத்தால் தானே உங்களுக்கு இது பொருந்தும் —
குத்து விளக்கு எரிகிறதே– கோட்டுக் கால் இருகிறதே– நப்பின்னை பிராட்டியை தனக்கு உதவச் சொல்லும் ஆண்டாள் போல —
ஸ்ரம ஹரமாய் போக  ஸ்தானமாகவும்– மது போக்யமாகவும் பூ படுக்கையாகவும்
தம்பதிகள் சேர இருக்கவும் பெற்றதே ஆச்சர்யம் —
இனிது அமர்ந்து– சுக ரூபமாய் சம்ச்லேஷித்து —
எனக்கு துக்கம் கலந்த கலவி–
இரண்டு விபூதி போல நித்ய விபூதி உங்களுக்கு லீலா  விபூதி எனக்கு —
உங்கள் சுகம் என் துக்கம் போக்கி தானே இன்பமாக இருக்கும் —

பொறி ஆர்ந்த -புள்ளி மிக்கு —
சம்ச்லேஷத்தால் வடிவில் வந்த புகர் —
ஆச்சார்யர் திரு மேனியும் உத்தேசம் என்று –
யுவா குமார -யுவதிச்த குமராணி –
உபவாச க்ரிசையாய் இளைத்து -அன்று அவை எனக்கு பட்டினி நாளே –
பூஷணம் இன்றி இழந்து -அவன் தானே பூஷணம் இவளுக்கு —

அறு கால சிறு வண்டே –
வேகமாக போக முன்னோர்  நிர்வாகம் —
வண்டுக்கு காலால் போக வேண்டாம் என்பதால் பட்டர் சிறகால் போகும் –
தொழுகைக்கு -தொழுதேன் உன்னை-தலையில் வைக்க ஆறு கால் தலை முழுவதும் தரிக்க —
சிறு வண்டே –
திருவடி சிறியவராக சுருக்கிக் கொள்ள வேண்டி இருந்ததே-
ஆண்டாள் விஞ்சி நிற்கும் தன்மை ஜன்ம ஸ்த்ரீத்வம் உண்டே ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே —
ஆச்சார்யர் பத்னி குமாரர் திரு வடிகள் ஆறு -வண்டு-
குரங்கு ஜன்மம் இல்லை–மாலை தலை புஷ்பம் கழுத்து எங்கும் இருந்து வார்த்தை சொல்லலாமே —

ஆர்த்த தொனி பட்டவாறே -துடித்து -கஜேந்த்திரன் குரல் கேட்டதும் அவன் துடித்து வந்தது போல –
அக்நி கணங்கள் பட்டது  போல எட்டிப் பார்த்தன —
உடனே காலம் தாழ்த்தாமல் தொழுதேன் உன்னை — என்றார்-
கடகர்களை நமஸ்கரிக்க வேண்டும் —
அவனைத் தொழ வில்லை சரம பர்வ நிலை-
அவன் பொகட்டு போனாலும் சேர விட இருக்கிற உம்மையே தொழ வேண்டும் —
அவனும் உண்டாய் நானும் உண்டாய் இருக்க சேர விடும் உன்னையே தொழ வேண்டும்-
இவர் உடைய அத்ர பரத்ர சாபி இருந்தவாறு-
ஆளவந்தார் பிராப்ய பிராபகம் இருந்தவாறே —

யார் இடம் -கேட்டதும் முதலில் அமரர் கோமான்-
அயர்வறும் அமரர்கள் அதிபதி- தேவாதி ராஜன் என்று சொல்ல
நாங்கள் கிட்ட முடியுமா-
ஆ மருவி நிரை மேய்த்த –
பொருந்தி ரஷித்தவன் –
நித்ய சூரிகள் தன்னை ஒழிய தரிக்க முடியாத படி அவனுக்கு பசுக்கள் இன்றி தரிக்க முடியாத படி–
வாசி உண்டு-தான் தரிக்க தான் –
அது பின்னை ஒரு காலத்தில்  அன்றோ என்ன –
அணி அழுந்தூர்–
நித்ய ஸந்நிஹிதன்-பசு போன்ற நம்மை ஞான ஹீனராய் இருக்கிற சம்சாரிகள் –
ரஷிக்க இருக்கிற –
நின்றான் –
நம் போல  ஜந்துகளை ரஷிக்கv தானே ஸ்வாமி ராமானுஜர் –ஜனன மாதுரஸ்ய ரக்ஷணி-
பிறந்தகம் விட்டு ஸ்ரீ ரெங்கம் நித்ய வாசம் நம்மை போன்ற  ஜந்துகளை ரஷிக்கத் தானே பட்டர் —
அவனுக்கு பிரிய இஷ்டம் இல்லை– முடிய போக மாட்டாமல் திரு அழுந்தூரில் பிற் காலித்து நிற்பான் –
போக மண்டபம் நான் இன்றி இருக்க மாட்டான்–
சேர்ந்து இருந்தால் தானே அனுபவம்-
வந்து கொண்டு இருப்பான் அங்கெ சொல்லுங்கோள்-
நின்றான் -ஸ்தாவர பிரஷ்டயாய் நின்றான் என்னுதல்

வருகிறவன் –தூது வருகிறார்களா காத்து நின்றான் –
தேவாதி ராஜன் தானே –தான் மேல் விழ மாட்டாமையால் —
இன்றே சென்று –ஷிப்ரம் நிவேதயதே போல —
நாளைக்கு நான் இல்லை என்கிறாள்–
நான் இல்லை என்பதால் அவனும் இல்லை –
நான் உன்னை அன்றி இல்லை  நீ என்னை அன்றி இல்லை —
இரு தலையும் பிழைக்க இன்றே போய்ச் சொல்ல வேண்டும் —
இரண்டு தலையும் அழிந்தால் ஜகமே இருக்காதே —

நீ மருவி -ஆ மருவி நிரை மேய்த்தான்
திர்யக் ஜாதிகளை உள்ளே விடுவான் —
நீ மருவு என்னை போல-தேவாதி ராஜன் -பார்க்காமல் தேவர் என்று அஞ்சி -அதச்மின் தத் புத்தி பண்ணாமல்-
சீல குணம் ஒன்றையே கண்டு  –
அஞ்சாமல் நின்று –
தரித்து நின்று –நீ பர கால நாயகி-என் விடு தூதாய் சென்றக்கால்
ஆண் விடு தூது வாலில் நெருப்பு–
பெண்  விடு தூது ஆலிங்கனம் –
மகிஷி விட்ட தூது பெருமிதம் தோன்ற பேசு —
பெருமிதம் தோன்ற பேசினாலே அவன் பர கால நாயகி  இடம் இருந்து வந்து இருக்கிறாய் என்று உணர்வான் —
ஒரு மாது பேர் சொல்ல வேண்டாம்-
அந்தரங்கம் -ஏகாந்தம் –
ஒருத்தி -ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடிக்க வேடன் -எய்தவன் -உணர்வான் –
ஓர் மாது அத்வீதியை –
பராங்குச நாயகி இல்லை –
பர கால நாயகி-
சம்சாரிகள் முக்தர் முமுஷு போல் அன்றியே –
பின்னை கொல் நிலா மா மகள் மலர் மகள் கொல்   பிறந்திட்டாள்-
விதியினால் பெடை –ஒருத்தி மதி எல்லாம் —
ஒருத்தி உருகும் –
நின் நயந்தாள்-சென்றே போதே அறியும் வார்த்தை சொல்ல வேண்டியது இல்லை –
ஓர் மாது  போதும்-
இதுவும் போராது என்றால் படு கொலை பட்டாள் கொல்
ஒரு கா புருஷனையோ ஆசை பட்டது
புருஷோத்தமனை ஆசை பட்டேன் —
நாயகி பிரிந்தால் துடிப்பானே-
நின் -தேர் அழுந்தூர் பெருமான் –
பர வியூக விபவம் இல்லை –
இறையே -சிறிது அளவே –
முடிய சொல்ல விட மாட்டான் –
ஓடத் தொடங்குவான் என்னை நோக்கி
அவன் தான் உன்னை கொண்டாடுவான் காண்-
ஓர் மாது சொன்னதுமே விஷயம் புரிந்து– போதும் போதும் சொல்வான்–
சொல்ல முடியாது–  சொல்லிப் பாரு —
என்னால் பார்க்க முடியாத திரு மேனியை நீ பார்–
கடன் பட்டோம்- ராமன்  திருவடியை ஆலிங்கனம் பண்ணி கொண்டது போல  —
இரண்டு உயிர் காத்தீர்- ஓர் உயிர் தான் கொடுக்கிறேன் என்றானே பெருமாளும் –காணே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading