பெரிய திரு மொழி -திரு கண்ண புர பதிகம்-8-9- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தாம் நெடும் காலம் இழந்த இழவு தீர அருகில் சேவை கண்டதை சொல்லி /
அடியேன் வேறு ஒருவர்க்கு அல்லேன் என்கிறார் இதில்/
அனந்யார்க்க சேஷத்வம் /பற்றிலன் ஈசனும் ..முற்றில் அடங்கே –

————————————–

கைம்மான மத யானை இடர் தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைய்ந்து உய்ந்து போனேனே – 8-9-1–

அடைவதே உஜ்ஜீவனம்/கைமா -பெரிய விலங்கு-முதலை வாய் பட்ட களிறு –
அணி கொள் மரகதம்-பிரான்-உபகாரகன் /எம்மான்-ஸ்வாமி/கஜேந்திர மோட்ஷம்-வாரணம் காரணம் நாரணம்/
ஆனையின் துயர் தீர்த்தவன்-கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே /
ஐந்து முதலைகள்/நெடு காலம் /என் மனத்துள் அம்மானை-

—————————————————-

தருமான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை அணி உருவில்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைய்ந்து உய்ந்து பிழைத்தேனே 8-9-2–

கற்பக மரம் போல/நால்வர் வருவார்கள் -ஞானி -என் ஆத்மா கீதை –எனக்கே தன்னை தந்த கற்பகம் —
ஆசை வைபாவனின் செல்வம் பறித்தால்-கொள் என்று .இழுத்து போகும்/பத்ம நாப மர பிரபு-அமர பிரபு பிரிப்பார்கள்
மரம்-தமிழ் /வரும் அவமானம் தவிர்ப்பான் /

—————————————–

விடை ஏழ அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? — 8-9-3-

———————————————————————-

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்கார கனியை அடைந்து உய்ந்து போனேனே 8-9-4-

————————————————————–

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் ! போய் அறியாய் இதுவே அமையாதோ ?
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்தது உகந்த
மைந்தா ! உன்னை என்றும் மறவாமை பெற்றேனே-8-9-5

————————————————————–

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேர்க்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட கொள்ள வல்லானை
நெஞ்சே ! நீ நினையாது இறை பொழுதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே 8-9-6

————————————————————–

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய்  வளர்த்து என் உயர் ஆகி நின்றானை
முற்றா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே 8-9-7

——————————————————————-

கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானை
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே 8-9-8

————————————————————————-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலை சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண்  மதியை விரிகின்ற வென்சுடரை
கண்ணார கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ 8-9-9

———————————————————————————

செரு நீர் வேல் வலவன் கலி கன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் !
வரு நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே 8-9-10

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading