வண்டார் பூம் மா மலர் மங்கை மண நோக்க
முண்டானே! உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டநேற்க்கு என் செய்கின்றாய் ? சொல்லு நால் வேதம்
கண்டானே !கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-1
——————————————————————
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு எழும்
ஒரு தாரா நின் உள் ஓக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான் கண்ண புரத்து உறை அம்மானே 8-10-2
——————————————————————
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உட்ட்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-3
———————————————————————–
பெண்ணானாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை உகந்தேன் நான்
மண்ணாளா ! வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா ! கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-4
———————————————————————-
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-5
——————————————————————-
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்த நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ண புரத்து உறை அம்மானே 8-10-6
——————————————————————–
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே!
வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-7
————————————————————————
மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல் வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-8
———————————————————————-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்து உறை அம்மானே! 8-10-9
————————————————————————
கண்ட சீர் கண்ண புரத்து உறை அம்மானை
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய் பாடும் அடியவர்க்கு என்ஜான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே 8-10-10
————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply