96–வளரும் பிணி
வளரும் பிணி கொண்ட வல் வினையால் மிக்க நல் வினையில்
கிளரும் துணிவு கிடைத்து அறியாது முடித்தலை யூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்க்கு
உளர் எம் இறைவன் ராமானுசன் தன்னை உற்றவரே
/பக்தி பண்ண சக்தி இல்லை/ பிர பத்தி பண்ண விசுவாசம் இல்லை //பேரு தப்பாது என்ற துணிவு வேண்டும்/ எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போல மகா விசுவாசம் வேணும்/ ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..என்கிறார் இதில்../உலகம் உண்ட பெரு வாயா-ஆழ்வார் இதில்-நீ கொடுத்த உபாயம் எல்லாம் தவிர்த்தேன்-கர்ம ஞான பக்தி பிர பத்தி- நான்கும் இல்லை/ ஆச்சர்ய அபிமானம் சொல்கிறார்..உபாயாந்தரம் ஆகுமா இது– இது வேற சிறந்தது என்கிறீரே/திருவடி ஸ்தானமே ஆச்சார்யர் /இதற்க்கு மகா விசுவாசம் வேண்டுமே-அந்திம சமர்த்தி வேணும்-இல்லை என்றால் நான் பண்ணி கொள்கிறேன்-மற்ற ஆரு அங்கங்கள் வேணும் -போஜனத்துக்கு பசி போல ஆகிஞ்சன்யமும் அனானியா கதித்வமும் வேணும். ஆச்சார்யர்அபிமானம். பர கத ச்வீகாரம்-தானே வைகுந்தம் தரும்./உற்றவர்- ஆழ்வான்-7 பாசுரம் புகழ் பாடி அல்லால் என்றார் படியை கடத்துவேன் என்றார் /மிக்க நல் வினை-சரண கதி நிஷ்ட்டை-கிளரும் துணிவு-பொங்கி வரும் மகா விசுவாசம்/முடை தலை-துர் கந்தம் ஊன் -சரீரம் /
தரித்தும் விழுந்தும் -எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்–எம்பார் ஆழ்ந்து அனுபவித்த பாசுரம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும்- மாற்றி எழுந்து மயங்கினாலே- கேட்டேன்- தனியாக திருவேற்க்கு– எம் இறைவர் உளர் -இராமனுசன் தன்னை உற்றவர்-கூரத் ஆழ்வான் /இறைவர் ராமானுசன் என்றும் கொள்ளலாம் /உளர்-காரியம் உமக்கு பண்ணுவாரா சத்தை அவருக்கு இருந்தால் எனக்கும் உண்டு/நிழல் போல தானே –கைகள் சக்கரத்து-வட பாலை திரு வண் வண்டுர் ..ஏறு சேவகனாருக்கு என்னையும் உழல் என்மீர்களே-பஷி தூது விட –உயிர் உடன் -திரு மாலை ஆண்டான் அர்த்தம் சொல்ல– இன்றியாமை அவன் இருந்தால் நானும் இருக்கிறேன் ரஷிக்க வேண்டிய வஸ்துகளில் நானும் ஓன்று -ஸ்வாமி நிர்வாகம்/ அடிபட்டு துடிக்கும் மான் போல பராங்குச நாயகி/அறிவிப்பே அமையும்.. செய் என்று சொல்ல வேண்டாம் /வேதாந்த பிரக்ரியையாலே அருளி செய்தது பக்தி பிரபத்தி ரூபா உபாயத்வம் இறே/அதிலே சுகரோ உபாயமான பிரபக்தியிலேயோ உமக்கு நிஷ்ட்டை என்ன அதுவும் அன்று ,தாம் அபிமான நிஷ்டர் என்னும் அத்தை அருளி செய்கிறார்வளரும் பிணி- துக்கம் -பாபம் பண்ண பண்ண -தண்டனை பிரத்யட்ஷமாக பார்க்க வில்லை /சுருதி சமர்த்தி அவன் ஆன்னை என்று உணராமல்–பயம் அனுதாபம் வெட்கம் இல்லை /அதனால் வளரும் பிணி –பிரபல கர்மம்- அனுபவித்து தீர்க்க முடியாமல் பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாமல் /கிடைத்து அறியாது- கேட்டு அறிந்தோம்- ஆரு வித அங்கங்களும் ஒப்பிபிபோம் -பரம தர்மமான சரணா கதியில் மகா விசுவாசம் எனபது ஓன்று நேராக கிடையாததாய்–கிளரும் துணிவு-நேரே ஆச்சார்யர் சம்சாரம் போக்க திரு மந்த்ரம் உபதேசித்த ஆச்சார்யர் தானே/நித்ய படி வாழ்வில் ஒன்றும் மாறாமல் பிர பத்தி மட்டும் பண்ணி விட்டு இருந்தால்-பகவத் சம்பந்தம் ஒன்றும் இன்றி நித்ய படி இருந்து
முடை அடர்த சிரம் ஏந்தி -முடை தலை-துர் கந்தம் ஆஸ்ரய பூதராய்/ஊன்-ஐந்து சேர் ஆக்கை/தளரா உடலம் -திரு வாய் மொழி ௫-௮-௮/என்கிற படியே -தளர் நடை நடக்கும் பொழுதே விழுந்தும் -முன்பு உடல் -இப்பொழுது -மனசு தரித்தும் விழுந்தும் -தளரும் அளவும்-கட்டு குலையும் அளவும்-வான் சேற்று அள்ளல் பொய் நிலம் -திரு விருத்தம் 100- என்றும்-பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-7 என்றும்-கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -பெரி ஆழ்வார் 4-6-6-என்றும் அள்ளலும் வழுக்கலும் சம்சார விபூதியில் -தார்மிகர் உபகரித்த த்யாஜ்யம் உபாதேயம் ஆகிய ஊற்றம் கால் கொண்டு தரித்தும்,துர் வாசனா மூலமான அனவானத்தாலே-கொடுவன் குழி-திரு வாய் மொழி ௭-௧-௯–ஆனா சப்தாதிகளில் விழுந்தும்-சம்சார குழி இல்லை- சப்தாதிகளில் விழுந்து ஒரு துணை இன்றி திரியா நிற்கும் எனக்கு–உடல் தளரும் ஆசை தளரவில்லை திரிந்து கொண்டு இருக்கிறோம்-கேசம் கொட்டி பல் விழுந்தும் கண் பார்வை போனாலும் ஆசை மிகுந்து -திரிகிறோம்-எனக்கு துணையாய் ஒரு குழியில் விழாத படி தாங்களே பிடித்து நடத்தி உஜ்ஜீபிவிக்கைக்கு நமக்கு சேஷியான-எம்பெருமானாரை -தேவு மற்று அறியேன்-என்று பற்றி இருப்பார் உளர் ..அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் என்று கருத்து /
முன்பு தார்மிகன் கொம்பை நம் இடம் கொடுக்க-பகுத்தறிவு-தான் இந்த கொம்பு –இங்கு ஆழ்வான் -தாமே பிடித்து நடத்துவதால் விழ மாட்டோம்/ சத் புத்திரனாக வந்தவனை கண்டதும் கூரத் ஆழ்வானை பார்த்தாயா என்று கேட்டார் தந்தை//சத் -இருக்கிறான் என்று தெரிந்தவன் பிரமம் அடைகிறான்/எம் இறைவர் இராமனுசன் தன்னை உற்றவர் -என்று பாடம் ஆன போது ,எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய் நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று கருத்து/பிணி-துக்கம் //நல் வினை-சுக்ருதம் /மிக்க நல்வினையின் கிளரும் துணிவு-பாடம் -சரணாகதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் //
தரித்தும் விழுந்தும்- தரிக்கிறது என்றாலே முன்பு துக்கம் தோற்றும்–விழுவது //ஊறவர் கவ்வை எரு விட்டு அன்னைமீர் சொல் நீர் மடுத்து-அன்னைமீர் எப் பொழுதும் உண்டு அதனால் தண்ணீர் –எரு அவ் அப்பொழுது /அது போல தரித்தல் எப் பொழுதோ விழுவது என்றும்/பர கத ச்வீகாரமாக கொண்ட ஆழ்வானை எம் இறைவர் என்கிறார் /
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி/ பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சர்ய அபிமானமே
97—-தன்னை உற்று ஆட் செய்யும்
தன்னை உற்று ஆட் செய்யும் தன்மை யினோர் மன்னு தாமரை தாள்
தன்னை உற்று ஆட் செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை ராமானுசன் குணம் சாற்றிடுமே
தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் -அது கண்டு பொருத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான்–ராவணன் வார்த்தை -இது வரை-ராமன் அகங்கரித்தான் என்று ராவணன் நினைவால்-குன்றம் அன்ன இருபது தோள் துணித்தான் -/றது போல பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும்–ஆழ்வான் திருவடிகளில் சேர ஸ்வாமி கிருபை தான் –தன் அடியார் குணம் சாற்றிட //அறியா காலத்து அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்துஅடியேனை வைத்த்தாயால் /வருத்தம் தொனி இல்லை- ஆனந்த பிரகரணம் தானே இது-சுக துக்கங்கள் மாறி மாறி நடக்கையும் ஆழ்வாருக்கும் களியனுக்கும்- எனது ஆவி யார் யான் யார்- ஆனந்தமாய் பாடுகிறார் /மாற்றி அர்த்தம் கொள்ள ஸ்வாமி நிர்வாகம் /தன்னை உற்றார் குணம் சாற்றிட வைத்தார்/இந்த ருசி ஸ்வாமி யால் தான் வந்தது //அனந்த் தாழ்வானையும் அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் சேர்த்தார் ஸ்வாமி /அண்ணன் ஸ்வாமி-பொன் அடி கால் ஜீயர்- திருவடிகளில் சேர்க்க -அப்பாச்சியார்-அண்ணாவோ-மா முனிகள் -முதலி ஆண்டான் சம்பந்தம் பெற ஆசை கொண்டு /குணம் சாற்றிடும் தன்மை ச்வாபம்
அமுதனாரை ஆழ்வான் திருவடி சேர சொல்லி/ ஆழ்வானை கொண்டாடிய வியாக்யானம்//குணம் சாற்றிடும் தன்மை படைத்தவர்-பெயர் எச்சம்-
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும்தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்று ஆட் செய்யும் தன்மை யினோர் மன்னு தாமரை தாள் தன்னை உற்று ஆட் செய்ய ராமானுசன் தன் தகவால் இன்று என்னை உற்றான் –என்று அந்வயம்
ஆள் செய்கை -முக்கியம்- உடல் வருந்தி கைங்கர்யம் பண்ண வேண்டும் ..மன்னு-பரஸ் பரம் பொருந்தி -தாமரை- போக்யமாய் இருக்கிற தாள்கள் -ஆழ்வான் தாள்களை விட வேறு விஷயாந்தரங்களில் போகாமல் -உற்று-அங்கீ கரித்து -தகவு-கிருபையால் -அருளினார் / மாதா பிதா ..சர்வம் எதேவ–ஆளவந்தார் -தேவு மற்று அறியேன்-மதுர கவி ஆழ்வார் போல அமுதனார்- அவர் தம் அளவு அன்றிக்கே -ஆழ்வான் திருவடிகளில் சேர்ந்தது -வடுக நம்பி நிலை தாண்டி-நிழலும் அடி தாரும் போல இருப்பவரே உத்தேசர்–திக்குற்ற கீர்த்தி -ஸ்வாமி கண்ணால் கண்டும்/தம் அடியவர் களுக்கு அடியவராய் சேர்க்க ஆள் பிடிக்க -/பட்டர்- அரங்கன் திரு கண்கள் நாடு பிடிக்க கூடினது போல-2பரத்வம் /20 வியூகம்/200 விபவம்/ 2000 அந்தர்யாமி/ 200000 அர்ச்சை/ 2000000 ஸ்வாமி/20000000 ஆழ்வான் போல்வாருக்கு /
திக்குற்ற கீர்த்தி-வூமை /யாதவ பிரகாசர்/ யக்ஜா மூர்த்தி வாதத்துக்கு -பேர் அருளாளனே உதவி/ ஆரு வார்த்தை பெற்ற விருத்தாந்தம் திக் விஜயம் -அரு சமய செடி அருததையும்/திவ்ய தேச கைங்கர்யங்கள்வரதனே வழி துணையாக வந்து ஸ்வாமி காஞ்சி கூட்டி கொண்டு போனானே /
தொண்டனூர் ஆயிரம் திரு முகத்தால் அருளி/வெங்கடாசல யாதவாசலம் நிர்வாகித்து -கீர்த்தியால் அனைவரும் சேர /சொரூபம் ரூபம் குணம் விபூதி அறிந்தவரை /ஸ்வாமி திருவடி அடைவதே சொரூபம் என்று நினைந்து கொண்டு இருப்பவர்கள்/ தன்மை- அடியாரை பற்றுவத்தை ஸ்வாபம் என்று அறிந்து-ஆழ்வான் குணங்களை ஸ்வாமியே சாற்றிடும் -வினை முற்றாக கொண்டு/ராமன் சொல்வதை கேட்காமல் லஷ்மணன் இருத்தல் போல இன்றி- பரதன் போல ஸ்வாமி சொன்னதை ஏற்று கொண்டு- குருவி தலையில் பனங்காய் என்று இராய்க்காமல்-./தன்னை உற்றார் குணம் சாற்றிடும் தன்மை-ஸ்வாமி உடைய இந்த ஸ்வாபம் -அறிந்த அமுதனார்–சம்பந்தி சம்பந்திகள் கூட இதை அறிந்து ஸ்வாமி கிருபை பெருகும்/தாச தாச குணம் ஏக ரசமாய் இருக்க மா முனிகளும் அருளினார்//சிஷ்யனை ஆச்சார்யர் புகழலாமா -வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மட கிளியை வணங்கினால் போல கற்பிததனால் பயன் பெற்றேன் என்கிறார் ஸ்வாமி/–ஆனந்தம் போக்கு வீடாக -மது வனத்தை வானரங்கள் துவம்சம் பண்ணினது போல-அமுதனார்- கிடைத்ததும் ஆழ்வான் குணம் சாற்றினார் // அடியார்க்கு அடியார் கிடைத்தார் என்று /எம்மை நின்று ஆளும்பரமரே /சிறு மா மனிசரே என்னை ஆண்டார் இங்கே திரிந்தாரே /நம்மை அளிக்கும் பிராக்களே /அடியார்-அடியார் தம் அடியார் அடியார் தங்கள் அடியார் அடியார் -அடியோங்களே / கடல் சயனம்-அவர் எம்மை ஆழ்வாரே-/என் தலை மேலாரே /சாற்றுதல்-பிரகாச படுத்துதல் -எண் திசை அறிய இயம்புதல் /
உலக இன்பம் குற்றம் பார்த்து பகவானை பற்றுவர்/ பந்த மோட்ஷ ஹேது என்று ஆச்சார்யர் பக்கல் போக/ கைங்கர்யம் அவருக்கு பண்ணினால் தான் ஆச்சர்யருக்கு உகக்கும் என்று அவர் அடியவர் போக- மேட்டு-நிலம் ஏற்றுவது துர் லபம்/சூஷ்ம அர்த்தத்தை அறிந்தவர் ஸ்வாமி ஒருவரே
சபரி-தர்மம் அறிந்தவள்-வால்மீகி/அடியார்க்கு அடியார் என்று சத்ருக்னன் இருந்த நிலை ஸ்வாமி இன்று வெளி இடுகிறார்-ராம சௌந்தர்யத்தில் அமுக்குண்டு இருந்ததால் அன்று இந்த குணம் காட்ட முடியவில்லை//கிருபையாலே உற்றாரை குணம் சாற்றுகிறார் கிருபையால் என்னை அடியவர்க்கு ஆள் படுத்தினார் கங்கா பிரவாகம் போல கிருபை/தேசிகன்-முத்துகளை உருவாக்கும் முக்தர்களை /ஜனம் பாபம் போக்கும்/யமுனை சரஸ்வதி தீர்த்தம் சேரும்- ஆளவந்தார் நாத முனிகள் சொல்வதும் இங்கு சேரும்/தீர்த்தர் இங்கு/வற்றாது இரண்டும் /மேடு கொந்தளித்து வாரி அடிக்கும்- நாம் மேடு பணியாமல் -வணங்கா முடி- கொந்தளித்து என்னையும் அழுத்தும்/கம்பீராம்புச -மன்னு தாமரை தாள்கள்- பொலிந்து போக்யமாய் -கட்டாய படுத்தி அனுபவிக்க வேண்டிய திரு வடிகள் இல்லை/வழு இலா அடிமை செய்ய வேண்டும் என்ற மனோ ரதம் வளர்த்து கொண்டு மத் -பக்த பகதேசு- அவன் வூற்றம் போலஅமுதனார்- கவி பாடவும் ஆள் செய்யவும் -உற்று -கவி பாட ஆள் செய்ய -7 பாசுரம் அருளி- கூரத் ஆழ்வானுக்கு ஆனந்தம் என்று மீதி பாசுரங்களால் ஸ்வாமி கீர்த்தி அருளி –ஆள் செய்வது கூரத் ஆழ்வான் இடம் / அவர் இங்கு அனுப்ப இவர் அங்கு அனுப்ப/மன்னுதல்-பொருந்துதல்… விடியா வென் நகரம் அற்று பொய் நல் வீடு பெற்ற .அக்ரூரர் போல இன்று தான் கிட்டியது இன்று தொட்டு எழுமை எம்பெருமான் குன்ற மாட திரு குருகூர் நம்பி ஏற்ற அருளினான் போல/
98—-இடுமே இனிய சுவர்க்கத்தில்
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு
சுடுமே யவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் ராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே
இடுமே-இட மாட்டார்/இன்னும் -திருவடிகளை பட்ட பின்பு தபிப்பிபரோ ? அவற்றை-சவர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் -ஜென்மத்துக்கு உருப்பாகையாலே அவற்றை அனுசரித்து கொண்டு இருப்பதாய்–தொடர் தரு-தொல்லை சுழல் பிறப்பில்-அநாதியாய், வளைய வளைய வாரா நின்று உள்ள ஜன்மத்திலே நிருத்துவரோ ?/மேல் உள்ள காலம் நம்மை நம் உடைய ருஷ்ய அனுகுணமாக விடுவரோ ? ஆன பின்பு பிராப்தி நிமித்தமாக நெஞ்சே சிதிலமாகாதே கொள்/மேவுதல்- பொருந்துதல் நடுதல்-ஸ்தாபித்தல் //சர்வ நியந்தா சர்வேஸ்வரன்-அவன் அவன் கர்மா தீனமாக சொர்க்கம் நரகம் கர்ப்பம் கொடுக்க சங்கல்பம் கொண்டவன் தானே-நடத்தையும் அப்படி தானே இது வரை/பிரகிருதி சம்பந்தம் இன்னும் உண்டே/துர் வாசனை வரும் கர்ம தூண்டுமே -எம்பெருமானாரை சரணம் என்றால் விட்டு கொடுக்க மாட்டார் -பிராப்தி நிமித்தமாக கிலேசிக்க வேண்டாம் என்கிறார்/சரணம் சோழ பிரயத்தனம் பண்ணி மேலே சரணம் சொன்ன பின்பு எல்லாம் பண்ணுவார்/ஸ்வாபம் ஸ்வாமிக்கு இது /
மனமே-இப்படி அதி சங்கை பண்ண வேண்டாம்-நமக்கு அருள /நேராக சொன்னால் கேட்டு கொள்ள மாட்டோம் என்று /ஆச்சர்ய அவதாரம் பெருமாள்-சாச்தரமும் கையுமாக /கருணையால்/ராமானுஜ திவாகரன்-ஞானம் மலர -அஞ்ஞானம் விலகி/முன்னை வினை-சஞ்சிதகர்ம பின்னை -ஆகாமி கர்ம -வினை ஆரப்தம் கர்ம – மூன்றையும் முடிக்க தீஷை-கொண்டு இருக்கிறார் ஸ்வாமி /செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே /தமர்கள் வல் வினையை கூட்ட நாசம் செய்கிறான்/கர்ம-ஜன்ம-கர்ம சுழல்-அவன் சத்ய சங்கல்பம் /ஸ்வாமி கர்ம தொலைத்து மோட்ஷம் கொடுக்க தீஷை கொண்டு இருக்கிறார்-கங்கணம் கட்டி கொண்டு/உபதேசத்தாலே திருத்தி -கொடு உலகம் காட்டேல்-ஆழ்வார் பிரார்த்திக்க ஸ்வாமி யை பிறப்பித்தார் -உதாரணம் பண்ணவே அவதரித்தார்..இது ஒன்றே அவதார பலன்/ராமனுஜம் சரணே கதி/ரென்கேச பக்த ஜன-ஆழ்வார்-மானச ராஜ ஹம்சம்-ஸ்வாமி-/ராமானுஜாய முனையே நம உக்தி மாதரம் காமாதி துமதி
தமசில் உழன்ற இருக்கும் ஒருவன்-ராமனுஜன் சரணம் என்று சொல்லி தமசை காட்டிலும் உயர்ந்த பரம பதம் அடைகிறான் /சரணாகதி சப்தம் மட்டும் பார்த்து-கை விட மாட்டார் /அரங்கம் ஆளி-ஐதீகம்/பிரகிருதி வசம் பட்டவன்-சுவர்க்கம் -இந்திர லோகம்-ஜோதிஷ்ட ஹோமம் பண்ணி-போகம் அனுபவிக்க -புண்யம் குறைந்து -செலவழிக்க வந்தோம் என்று புரிந்து கொண்டு-மீண்டும் வந்து பிறந்து- பயம் தீராமல்-அழிய கூடிய -காரணத்தால் வந்த இடம்- இடுமே –
நரக கல்பம் போல சொர்க்கம் முமுஷுக்கு/ இதுவே -பிரதி கூல- தமம்–ஸ்ரீ வைகுண்டம் நினைவே வராமல் இருப்பதால் //பிரதி கூலம்-சம்சாரம்-ஸ்ரீ வைகுண்டம் நினைவு இருக்கும்// பிரதி கூலதரம்- நரகம் //பல நீ காட்டி படுப்பாயோ-இந்திரியங்களை அலைக்க பண்ண /போர வைத்தாய் புறமே// நெறி காட்டி நீக்குவாயோ / அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் //கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ///ஈஸ்வரன் கர்மத்தை பார்ப்பார் ஸ்வாமி கிருபையை பார்ப்பார்/// ஸ்வாமி சேஷ பூதர் பாரதந்த்ரர்-நமக்கு அவற்றையும் கொடுப்பார்/ ஈஸ்வரன் ச்வதந்த்ரன் நமக்கும் ச்வதந்தர்யம் கொடுத்து நம்மை நம் வசம் வைக்க பண்ணுகிறான் //ஸ்வாமி நம்மை அவர் வசம் கொள்வார் /இன்னும்-உபாயம் உபேயம் என்று அநந்ய அர்கர் ஆன பின்பு -திட விசுவாசம் கொண்ட பின்பு //கேட்க்க கூட பயம் நரகம்-ஸ்வாமி அங்கு செலுத்துவர் என்று சொல்லுவது 32 நரகம் படுத்தும் பாடை வித க்ரூரம்/ வென் நரகம் சேரா வகை ராமன் படுத்தினது போல// கடும் சொலார் கடியார் -நிரயம்-நரகம்-துரித பவனம்பிரேரிதே-ஜன்மம் -சக்கரம் -புண்ய பாபம் காற்று -சுவர்க்கம் நரகம் ஈடு- தொடர் தரு தொல்லை-அநாதியாய்-ஜன்ம பரம்பரையிலும் நட்டு வைக்க மாட்டார்/ நம்மை நம் வசத்தில் விட மாட்டார்/சரணம் சொன்ன உடன் -கண்ட வழியில் போக விட மாட்டார் -ஹிதம் என்று ஸ்வாமி கண்ட வழியில்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -போல ஸ்வாமி அடியோங்களை-அப்ராப்தம் ஓன்று தட்டாமல் பண்ணி அருளுவார்//மற்ற எல்லாம் புல் தானே ஸ்வாமி பதாம் புஜம் பற்றிய பின்பு/காம க்ரோதோ லோப மத ஆட பட மாட்டோம்/ மேவுதல்- அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -இது தான் மேவுதல்-மோட்ஷம் என்று இல்லை/மேவுதலுக்கு நைதல் என்றால் மேவுதல் நிமித்தமாக நைய வேண்டாம் //அனுபவித்து தீர்க்க முடியாத கர்மா -சாஸ்திரம் பார்த்து ஈஸ்வரன்/ சரம பார்வை நிஷ்ட்டையில்-உள்ள நம்மை-சம்சார வெக்கையில் காட்ட மாட்டார் ஸ்வாமி-உபாசனம் படி -பக்தி-யோகம்-பிரகிருதி சம்பந்தத்தால் இடையூறு-பிர பன்னனுக்கு எதோ உபாசனம் பலன் இல்லை- இருந்தாலும்-உபாசனமே திருவடிகள் தான் இங்கு -பிராப்யம் கிடைக்கும் வரையில் காத்து இருக்க வேண்டாம்-அறிவிப்பே அமையும்-ஒரே கர்த்தவ்யம் /
அசித்தை கூட-மனசை- திருத்துவார் ஸ்வாமி -அதனால் மனசுக்கு சொல்லுகிறார் /மதுசூதனன் அடியாரை விட சொல்லி –நமனும் தம் தமரை கூடி- சாதுவராய் போதுமின் என்றார் -ஸ்ரீ வைஷ்ணவர்களே எனக்கு பரர பாபம் தட்டாது/நமன் தமரால் ஆராய பட்டு அறியார் கண்டீர்/-அரவணை மேல் பேர் ஆயற்கு ஆட் பட்டார் பேர் -பெயரை வைத்து கொண்டாலே போதும்-எத்தினால் இடர் கெட கிடத்தி //இறந்த குற்றம் எண்ண வல்லானே //மாசுச- என் நெஞ்சமே-மதுர கவி/ மனமே நையல் மேவுதற்கு- மூவர் அனுபவம்..
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply