உத்தமர் கோவில்..

02. உத்தமர் கோவில்

 

பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதனை மனதின் உள்வாங்கி தரிசனம் செய்த பின் புருஷோத்தமன் உறங்கும் உத்தமர் கோவிலுக்குப் பயணத்தைத் தொடங்குவீர்.

திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.  ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட –  ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.

ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹாலக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.  இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.

தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம்தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?  கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.  கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.

இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.

விமானம்  உத்யோக விமானம்.

தீர்த்தம்  கதம்ப தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்   கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ

மங்களாசாஸனம்  திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்

ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த தலம்.

பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும் இந்த கோவிலினை நன்கு தரிசனம் செய்வீர்.  நலம் பெறுவீர்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading