ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -75 -உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –சன்மம் பல பல -3 -10 –

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
ஸ்ரீ வைகுண்டமோ -வையகமோ -உங்கள் ஊர்-பதி வினாவுதல் -மதி உடன் படுக்கை -தலைமகன் தனது எடுத்துக் காட்ட -கேள்வி எழுப்பி -வியாஜமாக -ஆழ்வாருக்கு நிகர் இங்கும் அங்கும் இல்லை
கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர் வார்த்தை – கண்ணாலே இங்கேயே இருப்பதை பார்த்து -உபய வியாவ்ருத்தராக ஆழ்வார் இருப்பதைச் சொல்வது -இப்பாசுரம் – சன்மம் பல பல -3 -10 –இதன் விவரணம்-திருமாலின் சீர் பரவி –யானோர் குறை இலனே –பரிவிலனே -ஒன்றும் துயர் இலனே
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று யாதும் அல்லல் இலனே-குறைவில் தடம் கடல் தன் கோலச் செங்கண் –உறைபவன் போல் -யோகு செய்யும் அவனைப் பற்றி குறைவிலனே-அங்கு
இங்கும் திருப்பாற்கடல் சேஷசாயி -சேவிக்க வந்த நித்ய ஸூரிகள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ வைகுண்டம் – உலாவும் அழகிய மீன் -பாயும் அம்பு போல் ஒளிபடைத்த கூர்மையான ஆழ்வார் கண் –
ஞான வைலக்ஷண்யத்துக்கு விசேஷணங்கள்-முகத்தீர் -ஆழ்வார் தமரையும் தம்மைப் போலே ஆளாக்கி அருளியதைக் காட்டுமே )

அவதாரிகை – கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் –
(தென்றல் ஆகிற பாகவதர் -தலைமகன் )-அன்றிக்கே-இயற்கையிலே (கண்டவுடனேயே )ஐயமாதல்  –ஒரு நாள் சம்ஸ்லேஷித்து –விஸ்லேஷித்து –பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன்-நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும் அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் –அன்றிக்கே –
யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ஸ்லேஷித்து பரிச்சேதிக்க மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்-மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார் இவர் திவ்யராய் இருக்கிறாரோ இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை -ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால் முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய் ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே
– -75 –தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் 

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக –
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
—30-இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்–இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஆழ்வாரை லௌகிகராய் உள்ளவர்களே நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்-வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே – பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா-நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்–சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

உலாகின்ற கெண்டை –உலாகின்ற கெண்டை போல் ஆயிற்று மௌக்த்யம் (அழகு )இருக்கிறபடி-ஒளி யம்பு –இவன் பார்த்த போது (அவள் ) பாராதே – பாராத போதாகப் (அவள் )பார்க்கையாலே – வரவு தெரியாதபடி-காணாக் கோலாக வந்து தைக்கிற படி – ஒளிக்கிற அம்பு –ஒளி யம்பு –கண் கொண்டு தப்ப ஒண்ணாது இருக்கிறபடி –(சாடு-கண் என்று பார்வையாய்-நாயகி பார்வையில் இருந்து தப்ப ஒண்ணாதபடி இருக்குமே–கண்ணாலே கண்டு தப்ப ஒண்ணாது-தோற்று ஜிதம் என்று சொல்லப் பண்ணுமே )எம்மாவியை ஊடுருவ – இது தான் புறம்பு ஒருவர் மேல் தையாதே –நம் மேல் தைப்பதுமாய் இருந்தது –-அது தன்னிலும்-தோல் புரையே போமது அன்றிக்கே -பிராணனிலே தைப்பதுமாய் இருந்தது – அது தன்னிலும் – தோற்றம்பு அன்றிக்கே -மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது –(தோல் புரைய –வேதாந்த தாத்பர்யம் -சரீரம் பார்க்காமல்-மனமுடையீர் என்ற இதுக்கு ஸ்ரத்தையே அமையும்-பழுதிலா ஒழுகலாற்று பல சதுப்பேதி மாரில் -எம்மடியார்கள் ஆகில் -கொடுமின் கொள்மின்
கண்ணன் கழல்கள் நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே-ஆவி
-ஆத்மாவையே பார்க்கும் அன்று மேலோட்டமாக தொடாமல் –மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது -)

குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் –எப்போதும் ஒக்க வளைந்த படியாய் இருப்பதாய் –
ஒரு வியாபாரம் பண்ண வேண்டாதே –கண்ட காட்சியிலே இலக்கானார் அழியும் படியாய் –
அல்லா வில்களோபாதி  – கையிலே இருக்கை அன்றிக்கே –முகத்திலே இருக்குமதான வில்-வர்த்தியா நின்றுள்ள முகத்தை உடையீர் –(வாள் -வர்த்திக்கிற-உடைத்தான -வில் போன்ற புருவம் உள்ள திருமுகம் )அன்றிக்கே –வாள் என்று ஒளியாய் –வெஞ்சிலையையும்- ஒளியையும் உடைத்தான முகத்தை உடையீர் என்னுதல் –முகம் பழகின வில்லு -காணும் –இவளை நலிகிறது –(சாடு
பழகின வில் என்றும் முகத்திலே உண்டான வில் என்றும் )குனி சங்கு இத்யாதி – வலம்புரி தொடக்கமான சங்குகளை இடறி –புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான்புலாகின்ற
புலம்புகின்ற –சப்தியா நின்றுள்ள -திரைக் கிளர்த்தியை உடைய   -கடலாகிற அழகிய-படுக்கையை உடைய சர்வேஸ்வரனுடைய –புலாகின்ற –அச் சங்குகளின் உடைய ஒளியாலே எப்போதும் ஒக்க
ப்ரபாத சமயமே யாய் இருக்கிற-கடல் என்னவுமாம் –(புல புல விடிந்தது -பொழுது புலர்ந்தது என்ற அர்த்தத்தில் பகர் அல்ல பகல் செய் ஒளி விளக்கு போல் )

அம்மான் -இத்யாதி –நித்ய விபூதியிலே போது போக்கி-ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே –
தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே –இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற –இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-
அன்றிக்கே –மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் –காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ –உங்களுடைய வாஸ ஸ்தானம் —வானவர் நாடு -என்கிறபடியே –அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி –பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –(அவனது வைகுண்டமோ அடியார்களான நமது வையமோ என்று நாம் நினைப்போம்-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-அங்கு ஆழ்வார் ஏக ராஜா-இங்கு ஆழ்வார் தேவநாதன் இருவரும் ராஜாக்கள்
ஈர் அரசு கிடையாதே அங்கு அவர்கள் நீதி வானவர்கள் அன்றோ ) பிள்ளை திரு நறையூர் அரையர் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
(ஒன்றுமே சொல்லா விட்டாலவனே ஆளாகிறான்-பாலின் நீர்மை -கிருத யுகம் சத்வகுணம் வெளுப்பு -பிரார்த்திக்க அப்படி சேவை –த்ரேதா சிகப்பு –மான் தளிர் பச்சை இரண்டும் கலந்து – கலியுகம் -கறுத்து -இயற்கையான வர்ணம் போல் இங்கும் அவனே ஆள்கிறான் இங்கு )

நாயகியும் தோழியும் ஒருங்கு இருந்த சமயம் நோக்கி நாயகன் அங்குச் சென்று தன் கருத்தை குறிப்பதற்கு வியாஜமாக ஊர் வினவுகிறான் – இவர்கள் வடிவு அழகு மிக வேறுபட்டு சிறந்து இருத்தலால் –நும் நிலையிடம் வைகுந்தமோ –இவ்வுலகத்தில் இல்லாதால் – வையமோ-உமது இடம் அந்த நித்ய விபூதியோ -ஞான விசேஷங்கள் கண்டால் முக்தரோ என்னலாம் படி – பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையாலே இவர் இவ்வுலகத்தவரோ என்றும் -சம்சார சம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோ என்றும் சங்கை –மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க.–காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப்
பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. -கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது.-பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘-நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.-இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
(உலாகின்ற + வாண்முகத்தீர்!) பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும் முகமலர்ச்சியுடையவரே! என விளித்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும் அங்கு நின்று இங்கு வந்தவரொருவரென்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி விகற்பித்து வினாவுதற்குக் காரணம்.
அன்றியும் பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையால் இவர் இவ்வுலகத்தவரோவென்றும்,
ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோவென்றும் சங்கை நிகழ்ந்ததென்க.

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்-கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்-குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய ஸ்வாமி யானவனுடைய-வேலை -என்று கரை யாகவுமாம் (அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ-சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள் நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ-வையமோ
அவனுடைய லீலா விபூதியோ-வையம் என்று-விபூதிக்கு உப லக்ஷணம்–நும் நிலை இடமே-உங்களுடைய வாஸஸ்தானமானது-வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது-இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி ) சீதள ஸ்வபாவமாய் பிரகாசத்தையும் கூர்மையையும் உடைத்தாய் இருக்கும் ஞானம் என்றபடி–எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே-இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில் ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது-(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் – ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே-நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது ஈதே -திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம் என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே-சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று லீலா விபூதி யோகம் சொன்னபடி-(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும் இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல ஒள்ளிய அம்பாயும் ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே-கிஞ்ச-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார் வேலையில் -கரையிலே குனிந்து இருக்கும் சங்குகளை புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால் அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்-நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம் உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ இவ்வையம் தானேயோ சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

ஸ்வாபதேசம்-இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு – உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி இருக்கிற படியை சொல்லுகிறது –அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமேயாய் இருப்பார்கள் – இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களேயாய்-
லாபாலாபங்களாய்-இருப்பார்கள் –இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது – நிரந்தரமான பகவத் அனுபவமும் இன்றிக்கே – அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது –இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று –
இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் ஐயம் கூடாது இறே –லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ ஸூக்தி –மௌக்த்யம் -அழகு -தன் ஐயம் தீர்க்க அவள் இடமே கேட்கிறானாம் சர்வேஸ்வரன் –

தாத்பர்யம்-இதில் ஆழ்வார் ஆகிற நாயகி உடன் பாகவதர் கிளைவித் தலைமகன் ஸம்ஸ்லேஷித்து
கண் அழகில் -அவருடைய ஞான வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு-ஓ பெண்ணே -நான் அன்ய த்ருஷ்டியாய் இருக்க -பார்க்காத போது என்னைப் பார்த்து -நான் பார்த்த போது -அப் பார்வையை என்னிடம் இருந்து விலக்கி உன்னுடைய அழகிய முகத்தில் உள்ள புருவம் தனுர் ஆகாரமாக வளைந்து
கண்கள் மீன் போல் -காது வரை நீண்டு பானம் போல் அதி க்ரூரமாய் -அத்யந்த ஆகர்ஷகமாய் இருக்க
உனது வைலக்ஷண்யம் கண்டு எனக்கு வந்த சங்கை இதுவே – இங்கேயே இருப்பதால் நித்யர் போல் இல்லை -அன்ன பானாதி தத் பரராய்-ஸம்ஸாரிகள் போல் இல்லாமல் இருப்பதால் -இது வையமாகவும் இருக்க முடியாது-இப்போது வாசம் செய்யும் பிரதேசம் எது-ஷீராப்தி நாதனை அனுபவிக்க வந்த நித்ய அனுபவ நித்ய ஸூரிகள் நிரந்தர வாஸம் செய்யும் நித்ய வைகுந்தமோ-விஷயாந்தர பரர் வாழும் வையகமோ -ஆழ்வாருக்கு உபய விபூதியிலும் நிகர் யாருமே இல்லையே -என்றவாறு

3-10-சன்மம்-பல பல -பிரவேசம் –

மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய,‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன் முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்;
‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ?
பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே, தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்;
தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு- ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவு -தானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின் பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும்
ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை
எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும்,
‘மாளப்படைபொருத’ என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும்.
‘எங்கும் அழகு அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும்,
‘மட்டவிழ் தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘துக்கம் இல் ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் -இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத் வாதிகளையும் பகவத் ஸ்தோத்ரத்தினுடைய வை லக்ஷண்யத்தையும் உபதேசித்து
இப்படி விலக்ஷணமான பகவத் விஷயத்தை நாம் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கப் பெற்றதே என்று அதி ப்ரீதராய்
1-அனுபாவ்யனான சர்வேஸ்வரனுடைய அவதார பலமான விரோதி நிரசனத்தையும்
2-அவதாரத்துக்கு மூலமான ஷீரார்ணவ ஸாயித்வத்தையும்
3-அனவதிக அதிசயையான சர்வவித போக்யதையும்
4-போக பிரதி சம்பந்தி ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அர்த்திகளுக்கு அர்த்திதார்த்த காரித்வத்தையும்
6-அவதார திசையிலும் அதிமானுஷ சேஷ்டிதத்தையும்
7-அவதார நிர்வாஹ்யமான லீலா விபூதி யோகத்தையும்
8-இந்த நிலையிலும் பரதவ ஸூ சகமான ஸ்ரீ லஷ்மீ பதித்தவத்தையும்
9-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும்
10-சர்வாந்தராத்மத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரனை சர்வ பிரகார அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு
ஒரு வைகல்யம் -விச்சேதம் -மன பீடை -மிறுக்கு–கிலேசம் -அப்ரீதி -அலமாப்பு -துக்கம் -அவசாதம் -விநாசம் -என்று சொல்லப் பட்ட
ஸமஸ்த துரிதங்களும் இல்லை என்று அதி ப்ரீதராய் -இப்பத்துக்கு தாத்பர்யமான
ஸ்வரூபத்தினுடைய தத் ஏக அனுபவத்தையும் உபபாதித்து முடிக்கிறார் –

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.
–3-10-1-

இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்;
‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடைய நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.

ஓர் அவதாரத்தைச் சொன்னால், ‘எத்திறம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ? அதனால், ‘பல’ என்கிறார்.
‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார்.கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி.-எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் -என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’-அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான்–ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் -விண்ணுளாரிலும் சீரியர் –அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய ஸூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.–‘வன்மையுடைய அரக்கர்-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் 

ஓர் குறைவு இலன் –ஒரு குறையும் உடையேன் அல்லேன்.
1-முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல்,
2-அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல்,
3-சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல்.
4- ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் -கரை காண ஒண்ணாமல் -இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின்,‘ஓர் குறைவிலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே,-பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப் பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

———–

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே
.–3-10-2-

குறைவு இல் தடம் கடல்-ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, ‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று,-அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக் கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை

காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்-இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான்-திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார்.-

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.-

———–

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே
.–3-10-3-

பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’-விலஷணர்கள் -வீத ராகம் இல்லாத முமுஷுக்கள் அனுபவிக்கும் அமுதம் அன்றோ-இவருடைய அறுசுவை இருக்கிறபடி-பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே-வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.-

———

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
.–3-10-4-

இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம்.– ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?-ஆயனை –அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; -இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே.-பொன் சக்கரத்து
அரியினை
-அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை.-பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.-நான் ஏகதேசமும் மிறுக்கை யுடையேன் அல்லேன் இடர் -இடைஞ்சலாய் மிறுக்கு-என்றபடி –

———–

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
.–3-10-5-

காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்.-பால உடலோடும் –
அன்றிக்கே,
‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல்.
‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள்
ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.

கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று-கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய
தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று.

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும்,
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற
எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் –

————-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.
–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி –தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய்
பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது.
நின்ற வண்ணம் நிற்கவே –-அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க-நித்திய ஸூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னைஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்து.-தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’அம்மான்-அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது

புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான்.
ஓர் துன்பம் இலன் –‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம் படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?-

———–

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே
.–3-10-7-

கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.

ஏதும் அல்லல் இலனே –-‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ -லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை -என்கிறார். -புருஷோத்தம ஞானம் வந்தால் கர்மங்கள் தீண்டாதே -அந்த பிறவியிலே பிரபன்னன் போலே பேறு கிட்டுமே-அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ –அவன் காலைக் கட்டி நாம் கால் கட்டு விடுவித்திக் கொள்ளலாமே –

————

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எங்கும் அமர் அழகன் –-மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியை யுடையவன்.
எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன்.
அன்றிக்கே,
‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால்
‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதி கேசம் பழிப்பு அன்று,
சூழ் ஒளியன் –
மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.அல்லி மலர் மகள் போக மயக்குகள் –-இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது.-உளமார அனுபவிப்பார் -மார்பிலே இருந்தே அனுபவிப்பார் –ஆகியும் நிற்கும் – தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும்.
ஸ்ரீ யை அணைத்து ஆனந்தம் -ஸ்ரீ யபதி என்பதை அனுசந்தித்து ஆனந்தம் –
அம்மான் –ஆனந்த மயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?எல்லை இல் ஞானத்தன்-யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -அவளுக்காகவே புருஷ பிரசவம் —-இவளுக்கும் ஆனைக்கு குதிரை வைப்பார் போலே அவனது ஞானம் –

கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,

—————–

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே
.–3-10-9-

ஒடுங்க விழுங்குகையாவது,-‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை
வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.-நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.-

—————

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.
–3-10-10-

கிளர் ஒளி மாயனைக் கண்ணனை– நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை பற்றின எனக்கு-யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள்
அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்
’ என்று கூட்டுக.

வியாப்யமே மூன்றாம் பத்தின் -சாரம் -எங்கும் வியாபித்து -த்ரிவித காரணன் – சங்கல்ப ஞானத்தாலே -ஞானம் மிக்கு -வியாபகத தோஷம் இல்லாமல் -விபுவாக -அந்தர் பஹிஸ்ஸ சர்வம் –நியந்த்ருத்வம் தொடங்கி -அடுத்த பத்தின் சாரமும் கோடி காட்டி -பொசிந்து காட்டுவதை காணலாமே –

————

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.
–3-10-11-

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி,-மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ.-வீடும் பெறுத்தி – பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக் கொடுக்கும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading