ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -53-வார் ஆயின முலையாள் இவள் –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இவள் -இது -நோய் -தெய்வ நன் நோய்-கலங்கின பக்தி யுடையவள் -இரண்டும் அத்விதீயம்
நோய் நாடி நோய் முதல் நாடி -வானோர் தலைமகன் தானே இதுக்குக் காரணம்
உபாயம் -திருத்துழாய் -தாரோ தழையோ கொம்போ வேரோ மண்ணோ
உபாயம் பயன்படுத்தும் -பிரகாரம் –கொண்டு வீசுமினோ –-வைகுந்தா மணி வண்ணனே -2-6-
கீழ்ப் பாசுரம் 2-5–இப்படி அமைவது அத்புதம் உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே
தாமரைக்கண்ணனை –துழாய் கண்ணி -அடிக்கடி திருத்துழாய் பிரசங்கம் அதிலும் உண்டே

செவிலித்தாய் கட்டு விச்சி நோய்க்குக் காரணம் சொல்லும் பாசுரம்-கீழ் தீர்ப்பாரை வெறி விலக்குதல் பார்த்தோம் ஒரு பாசுரத்தில் முன்பே-அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரம் போல்-பூம் கொத்து -தொடங்கி ஐந்தும் -இங்கு

அவதாரிகை – இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது –காலமும் அதுவேயாய் –
வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே-அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் –
இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –-வழி அல்லா வழியே  பரிஹரிக்க இழிய – இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –(பிரபன்ன குல தோஷ பரிஹாரிணி )
நீங்கள் செய்கிறது பரிஹாரம் அன்று – இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே  இங்கனம் பரிஹரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்-இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே-நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் ) தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை–தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின செவிலி முதலானார்க்கு கட்டுவிச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்-இம் மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-அவதாரிகை-இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய் மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார் -இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி இந்நோய் முதலையும்
இந் நோய் ஸ்வரூபத்தையும் இத்துக்கு இது தான் தணிவு என்னுமத்தையும் அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள் அவளை நிராகரித்து இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-53 –கட்டுவிச்சி கூறுதல்-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16–சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்-அல்லாவியுள் கலந்த -என்று தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் – தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண னில் அர்த்தத்தை வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ் விளையாட்டுக்கள் கொண்டு பரிகரிக்கும் பருவம் அல்ல –கால ஷேபம் பண்ணாதே-கடுக  சிஹித்சித்து  கொண்டு நிற்கும்படி அன்றோ இவள் பருவம் இருக்கிறது –வாராலே ஆர்த்த முலை –வாராலே தாங்கப்பட்ட முலையை உடையவள்–வாராலே தரித்தல் –நாயகன் தன் மார்பாலே தரித்தல் செய்யுமித்தனை போக்கி இவள் தன்னாலே தரிக்கும் அளவில்லை –

என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின்
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்

என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப்
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
–92–பெரிய திருமடல்–கன்னவிலும் காட்டகத்து -கல்லே என்று சொல்லப்படுகிற காட்டுள்ளே-ஓர் வல்லிக் கொடி மலரின்– ஒரு பூம் கொடியில் பரிமள பிரசுரமான மலரில் –நன்றறு வாசம்--அநுப புக்தமான (இது வரை அனுபவிக்கப் படாதே )-செவ்விப் பரிமளத்தை-மாற்றார் யானும் எய்தாமே –-போக்தாக்கள் புசிக்க பெறாதே–மன்னும் வறு நிலத்து  வாளான்குகுத்தது போல்--தான் முளைத்த வெறும் தரையிலே ஒரு பிரயோஜனம் இல்லாதபடி –வ்யர்த்தமே மீள எடுக்க-ஒண்ணாதபடி மங்குமா போலே–என்னுடைய பெண்மையும் என்னலனும்   என் முலையும்--அக் கொடியும் பூம் கொத்தும்  பரிமளமும் இருக்கிற படி–மன்னு மலர் மங்கை மைந்தன் –-பிரணய தாரையிலே பெரிய பிராட்டியாரோடே ஸ்ரோத்ரி யானவனே வேணும் இவளுக்கு தேசிகனாம் போது-கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-–பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது—திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்–பொன்னகலம் தோயாவேல் –-அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று-தன்னுடைய கிலேசம் தீரா வாகில்–என்னிவைதான் வாளா--இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம்   வேண்டாவோ–எனக்கே பொறையாகி--இருவர் கூட தரிக்கிற இத்தை – நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்–சுமை ஆயிடுக – இவை தான் முதுகிலே  ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே –இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் ( நடுவே சஞ்சரிப்பவர்-தூதர்-கடகர் )இல்லையோ  -என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –
(கொடி -ஜீவன்–மலர் -ஞானம்–நறு மணம் -பக்தி –திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி – ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)

இவ் வார்த்தையைக் கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-
கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று நம் ஜீயர் அருளி செய்வர் –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை – பட்டர் அருளிச் செய்த சில வார்த்தைகளைக் கேட்டு – இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட –

(பிள்ளை திரு நறையூர் அரையர் -வயசில் மூத்தவர் இளையவரான பட்டரைக் கொண்டாட )பிள்ளாய் (பூஜ்ய யுக்தி இது )பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் –-ஒரு திர்யக்கை வளர்த்து –
திரு நாமங்களைக் கற்பித்து – பின்னை அது சொல்லக் கேட்டு – அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தார் –(ராமானுஜ சம்பந்தி என்று அன்றோ கொண்டாடினீர் என்றபடி
இதே போல் பெரிய நம்பி ராமானுஜர் விஷயத்திலும் உண்டே )நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் – உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –

உடையார் சுப்ரமணிய பட்டர் எம்பெருமான் எழுந்து அருளி இருக்கிற காலத்தில் – இங்கே வந்து திருப் புன்னை கீழே பெருமாளை சேவித்து இருக்க – எம்பெருமானாரை சிலர் வந்து அனுவர்த்திக்கிற படியைக் கண்டு – ஜீயரே நான் கேட்க வேண்டி இருக்கிறதொரு-வார்த்தை உண்டு -என்ன-அது ஏது -என்ன -சர்வேஸ்வரன் திரு முன்பே நம்மை சிலர் தண்டன் இடா நின்றார்கள் – அவர்களும் விவஷியதரா யிரா நின்றார்கள்- நாமும் அது வேண்டா என்கிறி லோம்-இதுக்கடி என் -என்ன –இது தான் கேட்க வேண்டுவதொரு வார்த்தை யாகிலும் நீர் கேட்குமது என் -என்று அருளி செய்தார் –எனக்கு வாசி என் -என்ன-நீர் ராஜ சேவை பண்ணித் திரிந்தவர் அன்றோ – ராஜாவின் பக்கலிலே ஒருவன் கார்யம் கொள்ள வந்தால் -அவனுடைய பாதுகைகளை எடுத்து தலையிலே வைத்து கொள்ளா நின்றால்- அவை தன்னை தலையில் வைக்க வேண்டா-என்னுமோ – அவன் தான் அவற்றை கொண்டாடுகிறானோ- அவற்றை கொண்டாடுகிறான் ஆகில் அவை தான் கார்யம் செய்ய வேணும் -இறே–ஆன பின்பு –-இத்தால் – ப்ரீதினானவன் ராஜாவே அன்றோ -என்று அருளி செய்தார்-

வாராயின முலையாள் இவள் –வார் தான் இம் முலையோடு சம்பதித்து ஸ்வரூபம் பெரும்படியான
முலையை உடையவள் -என்னவுமாம் – நாயகன் தானும் இம்முலையோடே அணைந்து இறே தன் ஸ்வரூபம் பெறுகிறது –அகலகில்லேன் இறையும் -என்றும்-ந ச சீதா த்வயாஹின-என்றும் இறே அங்குள்ளார் படி-நோவுக்கு ஹேது பூதன் ஆனவனுக்கும்-நோவுக்கும் உண்டான அவிபாகத்தாலே
வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய் -என்கிறது –(ஹார மத்யமணி நியாயம்-சீராயின நல் நோய்-சீராயின வானோர் தலைமகனாம்)-சீராயின –கனவிய நோய் —ஒருவரால் பரிஹரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்–தெய்வ நோய் –அப்ராக்ருதமான  நோய்–நல் நோய் –கைக் கூலி கொடுத்துக் கொள்ள வேணும் நோய் –அன்றிக்கே-வானோர் தலைமகனாம்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் –சீராயின –கல்யாண குணங்களையும் உடைய–தெய்வ-பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்-

தெய்வத் தண் அம் துழாய் -இத்யாதி–இந் நோய்க்கும்-இவளுக்கு பரிஹரிக்கிற உங்களுக்கும்
அனுரூபமாக பரிஹரிக்க பாரும் கோள்-தேவதாந்திர கடாஷ கொள்வதோ -என்று அது குடிப் பழி இறே-அவன் திருமேனியில் ஸ்பர்சத்தாலே அவன் தன்னோபாதியும் ஸ்லாக்கியமாய்
இருந்துள்ள -திருத் துழாயில்–தாராகிலும் ––அதில் தழை ஆகவுமாம்–அதில் கொம்பாகவுமாம்
கீழ் வேராகவுமாம்—அத்தோடு சம்பந்தித்த மண் ஆகிலுமாம்-ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து பரிஹரிக்கப் பாரும் கோள் –இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே-பகவத் விஷயத்தில் தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிஹாரமாம் இறே –-ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போரப் போர உறைத்து இருக்கும் இறே–தம்மடியார் அடியார் -இத்யாதி-(பிடித்தாரைப் பிடுத்து –அடியார் அடியார் அடியோங்கள் – தொட்டாரைத் தொட்டு -ஆனந்தம் மிக்கு இருக்குமே )

இதுவும் -21 -பாட்டு போலே -வெறி விலக்கு துறை-கட்டு விச்சி கூறல் -தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்கு பரிஹாரம் ஏதோ என்று வினவின் செவிலி முதலானோர்க்கு கட்டு விச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரம் –கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ –-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டிய திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ –-விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை தென் குடந்தை எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – நாகத்தணைக் குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் நாவாயும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ–என்று கூவிக் கொண்டு —தெய்வ நன்நோய்-நோன்பு நோற்று பெற பெண்டியது -பேரின்பம் -பகவத் விஷயத்தில் ஈடுபாடு காரணம் –-அவனை அனுபவிக்க கரணமான பக்தியே -முலை -வாராயின முலையாள்-பக்குவமாய் முதிர்ந்த பக்தி உடையவள் என்றவாறு –

வாராயின முலையாள் இவள்–இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று பருவத்தைச் சொல்லுகையாலே இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி–ஆனால் யாராலே வந்த நோய் என்னில்–வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும்
நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்— நோய் திவ்யமானவோ பாதி பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்–அவனோட்டை ஸ்பர்சத்தாலே அப்ராக்ருதமாய் செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான பூ வாகிலுமாம்–தழை யாயினும் அதனுடைய விகாஸத்தை யுடைத்தான இலைத் தழை யாகிலுமாம்–தண் கொம்பதாயினும்–அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான அதின் கிளை யாகிலுமாம்–கீழ் வேராயினும்-இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான மூலம் ஆகிலுமாம்–நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத் துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்–கொண்டு வீசுமினே–நீங்கள் ஸ்வீ கரித்து-அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று-ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –இத்தால்–வாராயின முலையாள் இவள் -என்கையாலே-இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது-சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது-(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே— ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள் பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது–ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:
–பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,-ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும், அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,-விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.–தெய்வ நல் நோயிது-என்கையாலே-இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும் போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது–தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே— இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே என்னும் இடம் தோற்றுகிறது–அதாவது–தெய்வத் தண் அம் துழாய்-என்று ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி–தாராயினும் -என்று ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது-(பூம் கொத்து -தலையால் தாங்க நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )தழை யாயினும் -என்று-அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –(மதுரகவி ஆழ்வார் போல்வார் ) தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது( கிளைஞ்சர்-உறவினர்)–கீழ் வேராயினும் -என்று-இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படி யானவரைக் காட்டுகிறது (நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் ) நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது-கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று-யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே-(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல-கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ இவள் பருவம் இருக்கிற படி–வாராயின முலையாள் இவள்-வாராலே யான முலை-வாராலே தாங்கப்பட்ட முலையை-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம் –-வாராயின முலையாள் இவள்-இம் முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்-அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்- இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு-இவளும் பொற்கொடி இறே-
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று-முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி–இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்-வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது-என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன் -அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்கிறாள்-தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ் விகல்பம்–துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற தேவ தேவ சாந்நித்யத்தாலே பரிமளத்தாலும் கோமளதையாலும் அழகியதும் குளிர்ந்ததுமான பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே கண் விழிப்பள் என்றபடி

ஸ்வாபதேசம்
இத்தால்-இதர ஸ்பர்ச லேசமும் சத்தையினுடைய விநாசத்துக்கு ஹேதுவாய் – பகவத் விஷயத்தில் சம்பந்தம் உள்ள ஏதேனும் ஒன்றாகிலும் சத்தா ஹேதுவாம் படியான பாவம் இவருக்குப் பிறந்த படி சொல்கிறது

தாத்பர்யம்–நாயகன் வாராமையால் விரஹம் விஞ்சி மோஹித்து இருக்க-சிலர் வந்து தேவதாந்தர உபாசனை செய்யச் சொல்ல இவளையம் இவளது நோயையும் அறிந்த தோழி-இந்த தேவதாந்த்ர பஜனம் இவள் முடிவுக்கே ஹேதுவாகும்-ஒரு நோய்க்கு பரிஹாரம் செய்யும் பொழுது-நோயையும் அவளையும் அறிந்து இருக்க வேண்டுமே-இப்போது இவள் பருவம் -முலை விஞ்சி வளர்ந்து –
சர்வேஸ்வரன் வந்து அணைந்தால் தான் சத்தை இருக்கும் படி இருக்குமே-அவன் வராமல் இருப்பதால் வந்த நோய் இது-இதன் ஸ்வபாவம் அறிந்து பகவத் சம்பந்தம் உள்ள பூவாயினும்-தழை யாயினும் – –அல்லது அது முளைத்த மண்ணை யாயினும் இவள் முகத்தில் படும்படி வீசினால் அதுவே பரிஹாரம் ஆகும் என்கிறாள் –

2-6-வைகுந்தா-பிரவேசம் –

ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே
 –2-6-1-

அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து
தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்;
இவர், ‘அல் ஆவி உள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும்
தம்முடைய -நைச்யத்தை அனுசந்தித்தவாறே -தாழ்மையினைச் சொன்னவாறே,
‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை -ஐயத்தை-நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா –
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார் 

‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;
‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;
‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று;
இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.

இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்;
மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்;
அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.

செய் குந்தா வரும் தீமை –செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்கும் தீமை.-இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை

சிக்கெனப் பிடித்தேன் கொள் – என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.-அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ-
ஸூ லபன் அன்று என்று விடவோ-
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

————

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
 –2-6-2-

இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார்-இவரோடே வந்து கலந்து, அக் கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது.

ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை:
‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய,
‘அது கேட்க வேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற,
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க,
‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க,
அப்பனும் யோகத்திலே எழுந்தருளி யிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,
‘இங்கே சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள,
‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு,
‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச் செய்கைக்கு ஏது என்?’ என்ன,
‘நானும் தானுமாக அனுபவியா நின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும்
அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்;
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’-என்று அருளிச் செய்தார்.

————–

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே
 –2-6-3-

நித்திய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்;-இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.-அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’-பொன் மலையை-இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படியைத் தெரிவித்தபடி.-வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார்-நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாட் பூ அலருமாறு போன்று-ஜிஹ்வ அக்ரத்திலே – நாக்கின் நுனியிலே -விகசியா நின்றுள்ள சந்தஸானது என் பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இது தன்னை –ஸ்வபாவமாக- உடையையாய் இருக்கிற பரம உதாரனே!-மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

———–

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
 –2-6-4-

உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்-இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கையைத் தீர்க்கிறார் –

உய்ந்து போந்து இருந்தே 
உய்ந்து -சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்-நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்து -நிர்பரனாய் க்ருதக்ருத்யனாய்-இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்-

——————–

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
 –2-6-5-

1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ – தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ?
8-எனக்குத் தெவிட்டி விடுகிறேனோ? -அடிமையின் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் உன்னை விடுவது–உன்னைச் சிந்தை செய்து செய்தே –நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம்-பிரசங்கம் உண்டோ?’

———————-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே
 –2-6-6-

என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் –என்னுடைய-பிராக்தனமான – பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி.
பாவங்களைப் போக்கினவன் அவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே
அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.

அவன் விடுவது, மனம் அறிந்தே தீ வினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

என் முன்னைக் கோள் அரியே-நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்;
ஆஸ்ரிதர்களில் -அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி.-கோளரி ‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.-‘ஜ்வலந்தம்’ என்கிற தேஜஸ் – ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.-முடியாதது என் எனக்கே –ப்ரதிஜ்ஜா சம காலத்திலே நீ தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ-இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது-என்கிறார் –

————

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
 –2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து – பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது-படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –-எனக்கு இனி முடியாதது உண்டோ-அடியேனுள் புகுந்தான் –-சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்-உட்கலந்தான் –-ஒரு நீராகக் கலந்தான்-தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –விடியா வென்னரகத்து –-ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே-என்றும் கிட்டக் கடவதான தண்மை தவிர்ந்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

————-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
 –2-6-8-

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல-நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –

அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –

உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் – ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –-தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்கிறது

————-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே 
–2-6-9-

இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரஸ்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ-

———–

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே
 –2-6-10-

சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற-அதி சங்கையும் தீர்த்து-தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்-பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி-

————

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே 
–2-6-11-

அவர் கேசவன் தமரே –அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்-குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்-அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading