ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக ஸித்தாந்த ஸாரம்–

நிகமாந்த குரூத்தம ஸக்திததீ நிகமாஞ்சல யுக்ம மஹார்த்த மயீ
நிகமாந்த யுகாம்புதி மக்ந் ஹ்ருதாம் ஹ்ருதயே நிததே ரஸிகா:! பி/பத
–உபய வேதாந்தக் கடலில் ஆழ்ந்த பொருள்களை எடுத்துரைக்குமவையான ஸ்ரீமந் நிகமாந்த மஹா குருவின் ஸ்ரீஸூக்திகளை உபய வேதாந்த ஸாகர பாரங்கதர்களின் உள்ளத்தில் பதிய வைக்கிறேன். ரஸிகர்கள் அநுபவிக்க வேணுமென்கை

வேதக் கடல் கடைந்த வேதாந்த வாசிரியன்
போதக் கடலாய்ப் புனிதமாய்க் கோதற்ற
தேன் மொழிகள் தந்தருளித் தீய பொருள் திரளைத்
தானொழித்தான் தாளே சரண்.

தேசார்ந்த தேசிகனார் தேர்ந்தருளிச் செய்த பல
வாசா மகோசரமாம் வாய் மொழியால்-மாசார்ந்த
தீயபொரு ளனைத்தும் தீயினில் தூசாகிப்
போயின் வென்பதுரைப் போம்.

“நாதோபஜ்ஞம் ப்ரவருத்தம் பஹு பிருபசிதம் யாமுநேய ப்ரபந்தை.
த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை ரிதமகில தம: கர்சநம் தர்சநம் ந:”
என்கிற தேசிக ஸூக்திப் படியே,நம்மாழ்வார் திருவருளால் ஸகலார்த்த விசேஷங்களையும் நிதி பெற்றாற்
போலே பெற்று வாழ்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள் அநுஸந்தித்துக் கொண்டிருந்த ஸத்
ஸம்ப்ரதாயார்த்தங்களை மணக்கால்நம்பி வழியாக லபிக்கப் பெற்ற ஆளவந்தார்
அவ்வர்த்த விசேஷங்களைத் தம்முடைய திவ்யகடாக்ஷ மூலமாகவும் பெரிய நம்பி
திருமலைநம்பி திருக்கோட்டியூர்நம்பி திருமாலையாண்டான் முதலான ஸ்வசிஷ்ய
வர்க்க மூலமாகவும் எம்பெருமானார் பக்கலிலே தேக்கி யருள, அவை எம்பார் ஆழ்வான் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் வழியாகவும், திருக் குருகைப் பிரான் பிள்ளான் கிடாம்பி யாச்சான் எங்களாழ்வான் நடாதூரம்மாள்-முதலான ஆசார்யர்களின் வழியாகவும் பரவஹித்து அஸ்மதாதி ஸம்ஸாரி சேதந் ஸமுஜ்ஜீவந் ஸாதனங்களாய் விளங்கி வாரா நின்றன.

மேலே நிர்தேசித்த ஆசார்யவர்யர்கள் பேசிற்றே பேசும் ஏக கண்டர்களாகையாலே இவர்களின் திவ்ய ஸூக்திகளிலே அர்த்த பேதம் காண்கைக்கு அவகாசமில்லை. ஸ்வல்ப யோஜனா பேதம் கண்டால் காணலாமத்தனை. இது ஸம்ப்ரதாய பரிசுத்தியில்- “ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே யுள்ளது. தேச காலா வஸ்தா விசேஷங்களாலே வரும் அநுஷ்டான வைஷம்யம் சாஸ்த்ராநுமதம்” என்கிற ஸ்ரீ ஸூக்தியினாலும் விசதம். இவ் வுண்மையை யுணராதார் சிலர், வேதாந்த வாசிரியர் தனிப்பட்டிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாரென்றும், நம்பிள்ளை, பிள்ளை லோகாசாரியர் முதலானார் கொண்டிருந்த கொள்கைகளை அசாஸ்த்ரீயங்களென்று கண்டித்து விட்டாரென்றும் சொல்லிப் போருவது ஆதாரமற்ற தென்பதையும், நவீநர்கள் ஆதரித்து வருகிற அர்த்தங்களுக்கும் ஆசரித்துப் போருகிற அனுஷ்டானங்களுக்கும் வேதாந்த தேசிக க்ரந்தங்களில் ஆதார மில்லை யென்பதையும் ஸாரமாகவும் ஸம்பேமாகவும் உபபாதிப்போமிதில்.

பகவத் க்ருபை நிர்ஹேதுகமென்று கொண்டால் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வருமென்றும் வைஷம்ய நைர்க்கண்யாபத்தியைப் பரிஹரிக்கின்ற “வைஷம்ய நைர்க்ருண்யேந ஸாபேக்ஷத்வாத்” என்கிற ப்ரஹ்ம ஸூத்ரம் விரோதிக்குமென்றும் சில வாதங்கள் கிளம்புவதுண்டு. உலகத்திலுள்ள ஸகல ப்ராணிகளிடத்திலும் எம்பெருமான் நிர்ஹேதுகமாகவே அருள் செய்வதாகக் கூறினால் தான் மேற் சொன்ன வாதங்களுக்கு ப்ரஸக்தியுண்டு.அப்படி யாரும் கொள்வதில்லை. அதிகாரி விசேஷங்களிடத்தில் நிர்ஹேதுகமாக அருள் செய்கிறா னென்றே ஸகலாசார்யர்களு மருளிச்செய்வது. இக் கொள்கையில் தேசிகன் வேறுபாடு கொண்டவரல்லர். நிர்ஹேதுக க்ருபையைப் பற்றிப் பல விடங்களிற் பேசுகிறார். சில விடங்கள் காட்டினால் போதுமன்றோ.

பரம பத ஸோபாநத்தில்—“அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்ய புத்தி மூல க்டுத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி என்றருளிச் செய்தார். இதில் “வ்யாஜமாகக் கொண்டு” என்றதையும் ஸஹியாமல் அவ்யாஜ க்ருபையையும் அருளிச் செய்து போந்தார். அது எங்கே யென்னில்; திருவாய்மொழியில் முதற்பத்தில் பொருமா நீள் படை யென்கிற பத்தாவது பதிகத்திற்கு ஆறாயிரப்படியிலில்லாத விஷயம் அவ்வாறாயிரப்படிக்குப் பிற்பட்ட வியாக்கியானங்களிலுள்ளது. அதாவது, இப் பதிகத்தினால் ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தை யநுபவிக்கிறாரென்று பட்டர் நிர்வஹித்தருளினதாகக் காட்டப்பட்டது. அந்த நிர்வாஹத்தையே தேசிகன் ஆதரித்து த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் ஆதாவித்தம் பரத்வம் ‘ என்கிற ஸ்லோகத்தில் “அவ்யாஜோதாரபாவாத்” என்றருளிச் செய்தார். நிர்ஹேதுக க்ருபா விசிஷ்டனாகையாலே என்றபடி. இவ்விடத்தில் இரண்டு விசேஷங்கள்-(1) எம்பெருமானை நிர்ஹேதுக க்ருபாவானாகச் சொன்னது ஒன்று; (2) இவ் விஷயம்-ஆறாயிரப்படியில் இல்லாமல் அதற்குப் பின் தோன்றிய வியாக்கியானங்களில் மட்டும் விளங்கா நிற்கவும் இதையே ஆதரித்துப் பரிக்ரஹித்தது மற்றொன்று. இங்கு முன்னமெடுத்துக் காட்டிய பரமபத ஸோபாந ஸ்ரீ ஸூக்தியானது, ஸ்ரீவசந பூஷணம் நான்காவது ப்ரகரணம் ஆரம்பத்திலுள்ளதான ”த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க…… என்னுரைச்சொன்னாய் என் பேரைச்சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமாபோலே சிலவற்றை ஏறிட்டு…..ஐந்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் ” என்கிற ஆச்சரியமான சூர்ணையை தேசிகன் அநவரதம் சிந்தனை செய்து போந்தவரென்பதைப் பேதையரு மறியும்படி அமைந்துள்ளது.

பொரு மா நீள் படை –ஆறாயிரப்படி –1-10–பிரவேசம் –
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –

இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சி யுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப் போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;-என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;-மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரவாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று – உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று, கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம்
-11-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்-ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

தயா சதகத்தில் நிஷாதாநகும் நேதா கபி குலபதி: காபி சபரீ குசேல: குப்ஜா ஸா வர யுவதயோ மால்ய க்ருதிதி, அமீஷாம் நி நத்வம் வருஷகிரிபதேருந்நதிம பிப்ரபூதை: ஸ்ரோதோபி : ப்ரஸப மநுகம்பே! ஸமய * என்கிற ஸ்லோக ரத்நத்தின் பொருளை உபந்யஸிக்கப் புக்கால் குஹப் பெருமாள் ஸுக்ரீவ மஹாராஜர் சபரி குசேலர் கூனி ஆய்ச்சியர் மாலாகாரர் என்னுமிவர்கள் இராமபிரானுடையவும் கண்ணபிரானுடையவும் நிர்ஹேதுக கருணைக்கு இலக்கானவர்கள் என்றல்லது வேறொன்று சொல்லிப் பிழைக்க வொண்ணாதாயிற்று.ஸ்தோத்ர க்ரந்தங்களில் பணிப்பது ரசம்ஸைக பரமாதலால் அது தன்னை சாஸ்த்ரார்த்தமாகக் கொள்ள வொண்ணா தென்று கூறவருவர்கள். முநி வாஹந போகமென்று பெயரிட்டு ரஹஸ்ய கரந்தமாகப் பணித்த அமலனாதி பிரான் வியாக்கியானத்தின் உபக்ரம ஸ்ரீ ஸூக்தி இது காணீர்;–“காரண விசேஷம் இன்னதென்று அறுதி யிட அரிதாயிருப்பதொரு பகவத் கடாக்ஷத்தாலே அத்ந லப்தமான……என்று. இவ்விஷயத்தில் இவ்வளவே போதும்.

“ஈஸ்வரனுக்குத் தான் சேதன லாபம் புருஷார்த்தம்” என்பது ஸித்தாந்த ஸாரம். தேசிகனுடைய திருவுள்ளமும்-சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் பேறு என்பதேயாம். இதனை அவர் கீதா பாஷ்ய
தாத்பர்ய சந்திரிகையில் வெகு அழகாகக் காட்டி யுள்ளார். கீதையில் ஒன்பதாம
த்யாயத்தின் முடிவிலுள்ள *மந் மநா பவ” என்கிற ஸ்லோகத்தின் பாஷ்யத்திற்கு
விவரண மெழுதுகையில்- “(“ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே “) என்றருளி யிருக்கிறர்.-“அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்” என்பது முக்தனுடைய முதல் வார்த்தை. ‘பகவானுக்கு நான் அன்னமாகிறேன்’ என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக இதில் சொல்லுகிறது. இதனால், ஈஸ்வரனானவன் சேதனனைப் பெற்று அனுபவிக்க வேணுமென்று பெரும் பசி கொண்டிருந்தா னென்றும், அப் பசி முக்தாத்மாவால் முதலில் தீருகிறதென்றும் ஸ்பஷ்டமாகிறது. இல்லை யாகில், அஹமந்தம்” என்று ஓத வேண்டிய தில்லை யன்றோ?-ஆளவந்தார் * கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: * என்றார். இதில் ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற க்ரியா பதம் ஆச்சரியமாக அமைந்தது.உனக்குத் தொண்டு செய்து நான் எப்போது ஆநந்திக்கப் போகிறேனென்னாமல் நான் எப்போது உன்னை ஆநந்திப்பிக்கப் போகிறேன்‘ என்றர். ணிஜந்தப்ரயோகம் நோக்குக. இங்கு வியாக்கியானத்தில்- “தன்னுடைய அநுவருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷமேயிறே சேதநனுக்கு ப்ராப்யம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்ததை ஸ்தோத்ர பாஷ்யத்தில் தேசிகன் மொழிபெயர்த்தார் “[ப்ரஹர்ஷயிஷ்யாமி] த்வத்தாஸ பூதஸ்ய மே த்வத் ப்ரஹர்ஷ ஏவ ரதாநம் ப்ரயோஜ நமிதி பாவ ‘‘ என்று. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது ‘ந ச பரம புருஷ : ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா கதாசிதாவர் தயிஷ்யதி” என்கிற ஸ்ரீபாஷ்ய ஸூக்தி. இதில் ”பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றது உயிரான ஸூக்தியன்றோ? இதையே தேசிகன் பலவிடங்களில் பல முகமாக விவரித்தருளி னாராயிற்று.

சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவது ஸ்வகத ஸ்வீகாரமென்றும், எம் பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகார மென்றும் வழங்கப் படுகின்றது. முறையே மர்க்கட கிசோர ந்யாய மென்றும் மார்ஜார கிசோர ந்யாய மென்றும் வழங்குவர்.கீதையில் எட்டாவது அத்யாயத்தில் பதினான்காவது ஸ்லோகம் –அநந்ய சேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச:
தஸ்யாஹம் ஸு லப: பார்த்த! நித்ய யுக்தஸ்ய யோகிந:)
என்பது.-” ஞாநீ து ஆத்மைவ மே மதம்” என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டாடும் ஞானியானவன் தன்னை உபாஸிக்க வேண்டியபடியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் (கண்ணபிரான்) என்று அவதாரிகை யிட்டு ஸ்லோகத்தை வியாக்கியானித் தருளியுள்ளார் பாஷ்யகாரர்-

இதில் [தஸ்யாஹம் ஸுலப:– ‘அவனுக்கு நான் ஸுலபன்’ என்கிற பகுதிக்கு பாஷ்யம் செய்தருளி யிருக்கின்ற வகையாவது,
(தஸ்ய நித்ய யுக்தஸ்ய – நித்ய யோகம் காங்க்ஷமாணஸ்ய யோகி ந:, அஹம் ஸுல : -அஹமேவ ப்ராப்ய:; ந மத் பாவ ஐஸ்வர்யாதிக: ஸுப்ராபச்ச,தத் வியோக மஸஹமாந: அஹமேவ தம் வ்ருணே. மத் ப்ராப்த் யநுகுணோபாஸந விபாகம் தத் விரோதி நிரஸநம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம்ச அணமேவ ததாமீத்யர்த்த: * யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: இதி ஹி ஸ்ரூயதே. வ யதி ச தேஷாம் ஸ்தத யுக்தாநாம்…-இதி.-என்னோடு எப்போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்ப முடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனு மாகிறேன்நான். (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் [அவனைப் பிரிந்து தரித்திருக்க மாட்டாதவனாய்] நானே அவனை வரிக்கிறேன். என்னை யடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும், அதற்குற்ற இடையூறுகள் நீங்குதலையும், என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்.* நாயமாத்மா ஸ்ருதியில் இவ் வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலே மேலே பத்தாவது அத்யாயத்தில் 10, 11 ஸ்லோகங்களாலும் சொல்லப்படுகின்றது – என்பதாம்.

தத் வியோகம் அஸஹமாந : அஹமேவ தம் வருணே *] ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்ற விதுதான் பரகத ஸ்வீகார மென்பது.இந்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றகக் கழிக்கிறது.-இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை என்கிற
ஸத் ஸம்பிரதாய ஸாரார்த்தம் தெளிவிக்கப்பட்டது. இந்தஇடத்தில் நாயமாத்மா ஸ்ருதியையும் எடுத்துக் காட்டி யருளின பாஷ்யகாரர், பரகத ஸ்வீகாரத்திற்கு அதுவே பிரமாணமென்று நிரூபிக்கிற முகத்தாலே பிறருடைய அசட்டு வாதங்களை அகற்றினாராயிற்று.-

இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்துள்ள திவ்ய ஸுக்திகள் தேனே பாலே கன்னலே யமுதே யத்தனை; [உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ சங்காவ்யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ யமேவேதி] என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத் தக்கது.-் பிறர் எழுதியுள்ள அபார்த்தங்களுக்கு இடமில்லாதபடி செய்தருளி யிருக்கிறர் ஸ்வாமி தாத்பர்ய சந்த்ரிகையில்.
சேதநன் தலையிலே ஒன்றையும் வைத்திடாமல் அஹமேவ தம் வருணே…… அஹமேவ ததாமீத்யர்த்த:’‘ என்று ஒவ்வொன்றையும் எம்பெருமான் தலையிலே யாக்கிய பாஷ்யகாரர் அருளிச்செய்திருப்பதை அக்காலத்தில் சிலர் அதிவாதமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் போலும்.அது தேசிகன் திருச்செவியில் விழுந்தபடியால் அதை ஸஹித்திருக்க மாட்டாமல் “உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ
சங்கா யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ -யமேவேதி
‘ என்று ப்ராமாணிகமான அவதாரிகையை இட்டருளினார். பரகத ஸ்வீகாரமென்பது உபநிஷத் ஸித்தமான அர்த்தமாகையாலே அதிவாதமென்று நெஞ்சாலும் நினைக்கத்தகாது என்று வெட்டொன்று துண்டிரண்டாக அருளிச் செய்தாராயிற்று தேசிகன்.-“த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே” என்றும் புகலொன்றில்லா வடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே என்றும் நாம் பற்றுகிறோமாகக் காட்டிக் கொண்டு திருவடிகளிலே விழுந்தாலும், இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை; அவன் நெடு நாளாகப் பண்ணிப் போந்த க்ருஷி பலித்ததத்தனை’-என்கிற அநுஸந்தானம் ஊடுருவச் செல்ல வேணு மென்பதேயாம்.

தனக்கு உபாயத்வமுண்டென்று சொல்லுமவர்களை முக்கியமாகக் கண்டிப்பவர் நிகமாந்த மஹா குருவேயாவர். மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோக வியாக்கியானத்தில்(ரக்ஷையில்) தேசிகனருளிச் செய்வது காணீர் :--“ஸ்வயம் ஸ்வாதுத்வாத் க்ஷணிகஸ்ய காலாந்தர பாவி பல ஸாதநத்வா னுபபத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வ வ்யாபாரே மோஷோபாயதா புத்தி ரபிஸ்யாதிதி பாவ:. அத: தைஸ்தைராராத்தோ பகவாநேவ ஹி ஸர்வத் ரோபாய? என்று.-*உபபத்தேச்ச(3-2-34) *பலமத உபபத்தே. (3-2-37.) என்கிற ப்ரஹ்ம ஸத்ரங்களின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விபுலமாக அருளிச் செய்திருக்கும் ஸ்ரீஸூக்திகளின் ஸாரமாகவே மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷா ஸூக்தி அமைந்தது.-

ந்யாஸ தசகத்தில் “ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந் நிர்பரம், ஸ்வ தத்தஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்.” என்னும் ஸ்லோகத்தில் ஒன்பதின்கால் ஸ்வ சப்த ப்ரயோகம் செய்தருளி யுள்ளார் தேசிகன். இதனால் சேதனனுடைய முயற்சி நாற்றம் வேரறுக்கப் படுகின்றமை யறிந்தால் உபாயமென்றும் ஸாத்யோபாய மென்றும் வாய் திறக்க வழியில்லை. ஸாத்யோபாயமென்றால் யாரால் பாதிக்கப்படுமுபாயம்? என்று கேள்வி வரும். சேதநனால் ஸாதிக்கப்படுவதாகச் சொல்லியாக வேணும். இச்சொல்லை ஒன்பது வாள்கள் கொண்டு கண்டிக்கின்றதன்றோ கீழே காட்டிய தேசிக ஸ்லோகம் !-

ஸ்வாமிந் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப் பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நிஸ்யஸி மாம் ஸ்வயம். (3)

[ஸ்வாமிந் — ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே !
ஸ்வ சேஷம் — தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷ பூதனாயும்;
ஸ்வ வசம் — தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை;
ஸ்வதத்த ஸ்வதியா — தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால்,
தேவரீரால் அளிக்கப் பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீர ப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணி வைத்து-த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்;
ஸ்வார்த்தம் — தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே;
நிர்ப்பரம் — அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி;
ஸ்வ பரத்வேந — செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே;
ஸ்வஸ்மிந் — தேவரீரிடத்தில்; ஸ்வயம் — தேவரீரே; ந்யஸ்யஸி — வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாக வுடைய பெருமாள், தனக்கு அடிமை யானவனும், தன்வசமா யிருப்பவனும்,
தன்னிடம் பரத்தை வைத்து விட்டபடி யாலே எல்லா வித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப் பற்றிய ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில் தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

நியாய ஸித்தாஞ்ஜநத்தில் ஸ்பஷ்டமாக வருளிச் செய்கிறார். (அதில் ஜீவ பரிச்சேதத்தில்)”இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா, ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தேகிம் புநஸ் ஸஹ காரிணாம்’ என்கிற ஸ்லோகம் ஸித்தாஞ்ஜனமேயாகும். இந்த ஸ்லோகத்தினால் ப்ரபத்தியின் அநுபாயத்வம் தர்மிக்ராக ப்ரமாண ஸித்தம் என்று சிலா லிகித மாக்கினபடி சாஸ்த்ரஜ்ஞர்களில் தலைவரான தேசிகன் சாஸ்த்ரகதி விருத்தமாக ப்ரபத்தி உபாயமென்று நெஞ்சாலும் நினைக்க மாட்டாரன்றோ?*ஹேதுர் வைதே விமர்சே என்கிற ஸ்லோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்ல வேண்டி யிருந்தாலும் இங்கு அப்படிக் கொள்ள வேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக் கடவதா யிருக்கிற கணக்கில இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம் ) அறியத்தக்க ரூபமாதலால்- என்று இந்த ஸ்லோகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ரஹஸ்யங்களிலும் இஃது உள்ளது.இசைவித் தென்னை யுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே என்பது போன்ற பல பாசுரங்களைக் கண்டால் இது நம்முடைய முயற்சியால் ஸாத்யமன்றிக்கே ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாகவே விளையுமதாக உண்மை தெரிவதால் ஸாத்யோபாய மென்கிற வ்யபதேசமும் இதற்கு ஏலாது.-இவ் விஷயமான “ஸ்வீகாரந் தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீஸூக்திக்குச் சார்பாக தேசிகன் நிதானம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:* என்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஒன்பதாவதான உபாய விபாகாதிகாரத்தின் முகப்பில் ஸாதித்துள்ள ஸ்லோகம் வடிக் கட்டின சாஸ்த்ரார்த்தமாக வன்றோ விளங்குகின்றது-)

உபாய: ஸ்வ ப்ராப்தே: உபநிஷததீ தஸ் ஸ பகவாந்
ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதன நிதித்யாஸநகதீ.
ததாரோஹ: பும்ஸாம் கூக்ருத பரிபாகே ந மஹதா
நிதாநாம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:.
-என்பதாம் அந்த ஸ்லோகம். இதன் பொருளை நாம் விவரிக்க வேண்டுமோ?
அக்ஷர லப்யமான பொருளை யாரும் மாறுபடுத்த முடியாது. அவனைப் பெறுதற்கு அவனே உபாயமென்னுமிடம் உபநிஷத் ஸித்தம். பக்தி ப்ரபத்திகளானவை அவன் திருவுள்ள முகக்கைக்காக வாமத்தனை. அந்த பக்தி ப்ரபத்திகள் அமைவது மஹத்தான ஸுக்ருத பரிபாகத்தினால் தான். அந்த க்ருதந்தானும் எலியெலும்பனான சேதநனடியாக விளைவதன்று; நிகில நிர்மாண நிபுணனான பரமபுருஷன் தானே அதற்கும் மூல காரணமாவன்-என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இதில் *நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண: * என்கிற நான்காம் பாதமானது லோகாசார்ய ஸித்தாந்த ஸர்வஸ்வமென்று கொள்ளக் கடவது.
சேதனன் தலையிலே சிறு நாற்றத்தையும் ஸஹியாதே அறவே துடைத் தொழிக்கும் வார்த்தை யன்றோ விது!-நிதாநமென்கிற சொல்லுக்கு என்ன பொருளென்பதை அமர கோசங் கொண்டு அறிவது.நிதாநம் து ஆதி காரணம் ‘ என்றான் அமர ஸிம்ஹன்.-சேதநன் தலையிலுள்ளதாக எந்த ஹேத்வாபாஸத்தைக் காட்டினாலும் அதுவும் பரம புருஷனடியாக வந்ததே யொழிய இத் தலையாலே வந்தது லவ லேசமுமில்லை யென்று தேசிகன் கல் வெட்டாக்கி வைத்திருக்க, இதற்கு நேர் விருத்தமாகச் சொல்லிக் கொண்டு போராடுவது என்னோ? “ஸ்ருஷ்ட் யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம் ” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீ ஸூக்தியே“நிதாநம் தத்ராபீத்யாதி ஸ்ரீ ஸூக்தியாக மொழி பெயர்ந்தது என்பதில் ஸந்தேஹமுண்டோ?

தேசிகனுடைய திவ்ய ஸக்திகளில் ” குண தலிபிக்ரமாது பநிபாதிநபா ந: * என்பது ஆச்சரியமான வொரு ஸூக்தி.-நாம் எம்பெருமானிடத்திலே சென்று சேருவதானது நம் இச்சையினாலே யன்று; குணாக்ஷர ந்யாயத்தாலே யாமத்தனை. அந்த நியாயமாவதென் னென்னில்; புழுவானது நேராகச் செல்ல மாட்டாது; சுருங்கியும் மடங்கியும் குடிலமாகச் செல்லுவதே அதன் இயல்வு.அங்ஙனம் செல்லுவதை நாம் உற்று நோக்கில் ஏதேனுமொரு பாஷையிலே சில எழுத்துக்கள் எழுதினாற் போல் தேறும். எழுத்து எழுத வேணு மென்கிற நினைவு அதற்கு இருக்க ப்ரஸக்தியில்லை.ஆயினும் யாத்ருச்சிகமாக எழுத்துத் தேறுகின்ற தென்பதைக் காணா நின்றோம். இது தான் குணாக்ஷர ந்யாயமென்பது. குணக்ஷத லிபிக்ரமாத்” என்று ஸ்வாமி ஸாதித்ததும் இதுவே யாம். நம்பிள்ளை பெரியாவாச்சான் பிள்ளைகள் “புழு குறித்தது எழுத்தாமாப் போலே” என்றருளிச் செய்திருப்பதையே ஸ்வாமி தேசிகன் இங்ஙனம் மொழி பெயர்த்தாரென்னத் தட்டில்லை. இந்த நியாயத்தைக் கொண்டு ஸ்வாமி என்ன ஸாதிக்கிறாரென்னில் லிபிக்ரமாத் உபநிபாதி : ந பாதி ” என்கிறார். புழு குறித்தது எழுத்தாகிற க்ரமத்திலே உபநிபாதிந -தன்னிடம் வந்து சேருமவர்களான, ந-நம்மை, பாதி – எம்பெருமான் காப்பாற்றி யருள்கிறான் என்று ஸாதித்துள்ளார். புத்தி பூர்வகமாக வன்றிக்கே கடலலை வழியாகக் கரையிலே தள்ளுண்டு வந்து சேரும் துரும்பு போலே யாத்ருச்சிகமாகத் தன் பக்கலிலே வந்து சேருமவர்களை எம்பெருமான் தன்னுடைய இயற்கை யின்னருளாலே குளிரக் கடாக்ஷித்து அருள் செய்கின்றா னென்கிற பரமார்த்தம் இதனால் தெரிவிக்கப் பட்டதாயிற்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் விபுலமாக ஸாதித்தவற்றை ஸாரமாக வெடுத்துரைப்பதென்னுங் காரணத்தினால் இதற்கு ஸார ஸார மென்றே திருநாமமிட்டனர். அதில் சரம ஸ்லோகாதிகாரத்தில்”இப்படி விதேயமான ப்ரபதநத்தைச் சிலர் அதிகாரி விசேஷணம் ஸம்பந்த ஜ்ஞாந மாத்ரம் ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரம் அநிவாரண மாத்ரம் அநுமதி மாத்ரம் அசித் வ்யாருத்தி மாத்ரம் சைதந்தை க்ருத்யம் சித்த ஸமாதாநம் என்றாற் போலே சொல்லுமதுவும் இவ் விதிக்கும் இத்தை விஸ்தரிக்கிற சாஸ்த்ரங்களுக்கும் இவற்றுக்குச் சேர்ந்த உபபத்திகளுக்கும் பாஷ்ய கத்யாதிகளுக்கும் நிபுண ஸம் ப்ரதாயங்களுக்கும் அநுகுணமாக வேண்டுமாகையாலே * நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேனென்று நிற்கிற நம்மை ஈஸ்வரன் ரக்ஷிக்கிற விடத்தில்,*வந்தடைந்தேனென்று நாம் பண்ணுகிற அல்பமான வசீகரண யத்நம்* அதுவுமவன தின்னருளே * இசைவித்தென்னை இத்யாதிகளிற் படியேஅவன் தானே காட்டி ப்ரவர்த்திப்பித்ததொரு வ்யாஜமாத்ர மன்றோவென்று ஸித்தோபாய ப்ராதாந்யாநு ஸந்தானத்தில் அவர்களுக்கு தாத்பர்யம்.” என்றருளிச் செய்திருப்பது காணீர். உண்மையான சாஸ்த்ரார்த்தம் எதுவோ அதைத் தான் இங்கு வெளியிட்டருளினார். ” அவர்களுக்கு தாத்பர்யம் ” என்றவிதனையே பல விடங்களில் தம்முடைய தாத்பர்யமாக வெளியிட்டிருப்பதைக் கீழே காட்டியுள்ளோம். யாதவா யுதயமென்னும் மஹா காவ்யம் ஸ்வாமி தேசிகன் பணித்தது; இதில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது. அதில் 1,2.ஸ்லோகங்களினால் ஸாக்ஷாத் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப் பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லப்பட்டது. உடனே மூன்றவது ஸ்லோகம் [ சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் சருங்கார லீலோபம விச்வக்ருத்யம், அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மநந்ய போக்யம்”.] என்பதாகவுள்ளது. இதற்கு மேலுள்ள ஸ்லோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மாத்திரமே நோக்கியவை. முதலிரண்டு ச்லோகங்களும் அப்படிப் பட்டவை. இடையில் மூன்றாவதான ஸ்லோகமொன்று மாத்திரம் மிதுநம் என்கிற நிர்தேசத்தை யுட் கொண்டு தோன்றியுள்ளது. இந்த ஸ்லோகத்தில், ஸ்ருங்கார வீலோபம விஸ்வ க்ருத்யம் என்பதற்கு வியாக்கியான மென்ன வென்றால், ”ஸ்ருங்கார லீலாவத் அநாயாஸ ஸாத்ய -விநோத ரூப-ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி க்ருத்யம்” என்பதேயாம். இப்படிப்பட்ட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ள மில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்த வொரு ஸ்லோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ஸ்லோகங்களை யருளிச் செய்து போருகிறவர் இவ்வொரு ஸ்லோகத்தில் மிதுநம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட்ட அன்வய மில்லை யென்று தேசிகன் நிச்சயித் திருப்பது திடமாக விளங்கும். ஸ்ரீஸ்து தியிலும், யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹி ந்யமீஷாம் ஜந்மஸ்தேம ரலயரசநா ஐங்கமாஜங்கமாநாம்; தத் கல்யாணம் கிமபி யமிநாம்
ஏக லக்ஷ்யாம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீபாத லாக்ஷாரஸாங்கம்.
என்கிற இவ்வொரு ஸ்லோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திரு வுள்ளத்தை உள்ளபடி யுணர. பிராட்டியை ஸ்துதிக்க இழிந்தவர் பிராட்டியினிடத் துள்ளதை யன்றோ பேச வேண்டும். “ஐங்கமா ஜங்கமா நாம் ஜந்ஸ்தேம ப்ரலயரசநாம் இந்திரே த்வம் கரோஷி*என்று ஸ்லோகமியற்ற அருமை யில்லையே. இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும் உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாக வைத்து எங்ஙனே கவி பண்ணுவர்? கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் * ஆபவர்க்கிகபதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி: யஸ்யாவீக்ஷ்ய முகம் ததிங்கிதபர தீநோ விதத்தே இத்யாதியாக அருளிச் செய்ததைப் பின்பற்றியே தான் தேசிகனு மருளிச் செய்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலும் பரிபூர்ண ப்ரஹ்மா நுபவாதிகாரத்தில் “ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ- மோக்ஷ ப்ரதத்வ-ஸர்வாதாரத்வ- ஸர்வ நியந்த்ருத்வ – ஸர்வ சேஷித்வா-ஸர்வ சரீரத்வ-ஸர்வ சப்த வாச்யத்வ – ஸர்வ வேத வேத்யத்வ – ஸர்வ லோக சரண்யத்வ -ஸர்வ பல ப்ரதத்வ-லக்ஷ்மீ ஸஹாயத்வாதிகள் ப்ரதி நியதங்கள்’ என்றருளிச் செய்யப்பட்டது. இந்த மஹா வாக்யத்தில் ஜகத் காரணத்வத்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீ ஸஹாயத்வத்தைச் சொல்லி யிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீ ஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத் காரணத்வமும் அவளுக்கு அஸம்பாவிதமென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்து மென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படி யருளிச் யெய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் “விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே என்றவிடத்து ஸ்ருத ப்ரகாசிகையில் “ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வேஹி ராஜ்ச் சத்ர சாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்நம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின் பற்றியதே முனிவா ந போகத்தில் ஆதி என்றவிடத்தும் இப்படியே தானுள்ளது. ந்யாயஸித்தாஞ்ஜந ஜீவ பரிச்சேதத்திலுமிப்படியே தான். தேசிகன் சில்லரை ரஹஸ்யங்களென்றும் சில ரஹஸ்யங்கள் ஸாதித்திருக்கிறார். அவற்றை ஸேவித்தால் நல்ல தெளிவு உண்டாகும்.ரஹஸ்ய ரத்நாவளி யென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில் “ஸ்ரீமானான நாராயணனொருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம் ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேஸ்வரனுக்கு சேஷமாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்”என்றருளிச் செய்து இதை ரஹஸ்ய ரத்நாவளீ ஹ்ருதய மென்கிற அடுத்த ரஹஸ்யத்தில் தாமே விவரித்தருளினார். உண்மையில் விவரணாபேக்ஷையே யில்லாத வாக்யமன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாக வருளிச் செய்த விடங்கள் ஒன்றிரண்டல்ல, பலபல விடங்களுண்டு. சதுஸ் ஸ்லோகியில் மூன்றாவது ஸ்லோகத்தின் பாஷ்யத்தில் “மோக்ஷ ப்ரதே பகவதி முமுக்ஷணாம் கடக தயா ஏஷா திஷ்ட்டதீதி ஸர்வ ஸம்மதம் ” என்றருளிச் செய்ததொன்று போதுமே.”எம்பெருமான் தான் மோக்ஷ மளிப்பவன்; அதனைப் பெறுவிப்பவளாக மாத்திரம் பிராட்டி இராநின்றாள்” என்பது இந்த ஸம்ஸ்க்ருத ஸ்ரீ ஸூக்தியின் பொருள்-அதற்கு மேலுள்ள ஸ்ரீஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லை யென்பதையே நிலைநாட்டுவன- த்வயத்தில் பூர்வ கண்டத்தில் பிராட்டிக்கு உபலக்ஷணத்வமா? விசேஷணத்மா ? என்று ஒரு விவாதத்தைக் கிளப்பிக் கொண்டு உபலக்ஷணத்வமென்று சிலர் சொல்லுவதாக வைத்து. அதைக் கண்டித்து விசேஷணத்வமே யுக்தமென்று ஸ்தாபிக்கப்படுகிறது ரஹஸ்ய த்ரய ஸாரத்தில். இது நம்முடைய பூர்வாசார்யர்களின் திருவுள்ளத்தைக் கண்டிப்பதென்று நவீனர்கள் மருண்டிருப்ப துண்டு. இது மிகத் தவறு. இங்குப் பிராட்டிக்கு விசேஷணத்வ மில்லை யென்று ஒரு ஆசார்யரும் உரைத்ததில்லை . முமுக்ஷப்படியில் த்வய ப்ரகரணத்தில் “இப்போதிவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக ” என்ற சூர்ணையின் வியாக்கியானத்திலே மணவாளமாமுனிகள் – (புருஷகாரமாக) என்கையாலே உபாய வஸ்து விசேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு முபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்” என்றருளிச் செய்திருக்குமிடத்து விசேஷணத்வத்தைக் கண்டோக்தியாகவே யருளிச் செய்திருப்பது காண்க. இங்கு உபலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்வம் கொண்டாலும் வாசி சிறிதுமில்லை யென்பதை சாஸ்த்ர மர்மஜ்ஞர்கள் உணர்வர்கள். பிராட்டிக்குப் புருஷகாரத்வமுண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வமுமுண்டு என்று வாய்திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது தானே கொடுக்க சக்தியுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகார க்ருத்யத்திலே நின்று துவள வேண்டிய ப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேல ப்ரஸங்கமெல்லாம் உதறித் தள்ளப்பட்டன.பிராட்டிக்குப் புருஷகார க்ருத்யம் தவிர, தனியே மோக்ஷ ப்ரதாத்ருத்வ முண்டென்பதை தேசிகன் நெஞ்சாலும் நினைத்தவரல்லர். அப்படியே அவளுக்குத் தனியே ஜகத் காரணத்வமுண்டென்றும் நினைத்தவரல்லர். சதுஸ்ஸ்லோகீ பாஷ்யத்தில் * “ஸ லக்ஷ்மீகஸ்ய ஸாம்ராஜ்யம் ஸர்வதா ஸு ப்ரதிஷ்டிதம்” என்றருளிச் செய்திருப்பதை உணர்வாராருமிலர். இதற்கு என்ன பொருள் தெரியுமோ? எவ்விதமான பெருமை சொல்ல வேணுமானாலும் தனிப்படச் சொல்லாதீர்கள், பிராட்டியோடு கூடிய பெருமானுக்குச் சொல்லுங்கள். “இவளோடே கூடியே வஸ்துவினுடைய உண்மை” என்று பிள்ளை லோகசார்யர் முமுக்ஷப்படியிலருளிச் செய்தபடியே ஸலக்ஷ்மீகனான ஸர்வேஸ்வரனுக்கே ஸாமராஜ்யம் ஸுஸங்கதமாம். என்று கட்ட குட்யாம் ப்ரபாதமான கணக்கிலே சொல்லித் தலைக்கட்டியான பின்பு பிராட்டியைத் தனியே பிடித்துக் கொண்டு மன்றாட இடமேது? நியாயஸித்தாஞ்ஜநத்தில் ஜீவ பரிச்சேதத்தின் தொடக்கத்தில் ‘அத ஜீவ அல்ப பரிமாணத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம்; சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம், இத்யாதி தல் லக்ஷணம்.’ என்றருளிச் செய்தார் தேசிகன். ஜீவாத்மாவுக்குச் சொன்ன இந்த லக்ஷணமானது பிராட்டியிடத்திலும் ஸமந்வயமடைகின்ற தென்பதில் ஐயமில்லை.”ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்த்தே ப்ராமயமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ கருபா காப்யுபஜாயதே.” என்கிற ஆர்ஷ ஸ்லோகம் ஸுப்ரஸித்தம். துக்கப்படுகிற ஸம்ஸாரி சேதநனிடத்திலே எம்பெருமானுக்கு க்ருபை யுண்டாகிறதென்று இதில் சொல்லிற்று. இதை யடி யொற்றி “‘அசிதவிசேஷிதாந்ரளய மநி ஸம்ஸரத:” என்கிற ஸ்லோகமருளிச்செய்த பட்டர் * தயமாநமநா: * என்றுமட்டுமருளிச் செய்தார். இவ்விரண்டையும் விவரித்தருளா நின்ற தேசிகன் தயா சதகத்தில் “அசிதவிசிஷ்டாந் ரலயே ஜந்தூநவலோக்ய ஜாத நிர்வேதா” என்றருளிச் செய்தார். அந்த ஸ்துதியில் தயாளுவான எம்பெருமானை நோக்கிச் சொல்ல வேண்டிய வார்த்தைகளையே தயையை நோக்கிச் சொல்லுகிறாரென்பது நிர்விவாதமாகையாலே ஸம்ஸாரிகளை நோக்கி எம்பெருமான் ஜாத நிர்வேதனாகிறானென்று ஸ்பஷ்டமாகச் சொன்னாராயிற்று. துக்காபிநயம் காட்டினபடியே யொழிய வேறில்லை யென்னில் அவதார சேஷ்டிதங்களெல்லாம் அபிநய மாத்ரமே யென்று சொல்லி இதிஹாஸ புராணங்களைக் கட்டி உள்ளே வைத்திட வேண்டுமத்தனை. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அநுஸந்தித் திருக்கின்ற திருக் குணங்களை உபபாதிக்குமாசாரியர்கள் ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்ரீராமாயணாதி ஸ்லோகங்களைக் கொண்டே உபபாதிக்கக் காண்கிறோம். இதை ஸ்தோத்ர பாஷ்யாதிகளிலும் காணலாம். அவ் விதிஹாஸ புராணங்களில் எம்பெருமான் காட்டி யருளின சரிதைகளைக் கொண்டு “ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹுர்த்தம் விம நாப வ.” இத்யாதி ஸ்லோகங்கள் அவதரித்தன. அந்த ஸ்லோகங்களை * உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாம் கண்ண நீர் சோர நின்று உபந்யஸிக்கிறார்கள் குண வித்தர்கள்– ஸாரத்தில் * செஞ்சொற் கவிகாள் பதிகத்தின் ஸாரத்தைக் கூறுமிடத்து “ஸ்வ ஜநதநுக்ருதாத் யாதரம் ப்ராஹ சாந்தே”என்றார்.எம்பெருமான் தம்முடைய திருமேனியில் வ்யாமோஹம் செய்தபடியை ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறாரே யொழிய மற்றையோர்களுடைய உடம்பில் வ்யாமோஹம் செய்திருப்பதாகப் பேசியிருக்க வில்லை. அதற்குச் சேர ஸ்வ தநு விநிஹிதாத்யாதரம் என்று ஸ்லோகமிட வேண்டியிருக்க* ஸ்வ ஜந தனு க்ருதாத்யாதரம் * என்று ஸ்லோகமிட்டிருக்கிறார். இங்கு ஸ்வாமியின் தாத்பர்யமென்னவென்றால், ஆழ்வார் தம்முடைய அழுக்குடம்பிலுள்ள வழுக்களை விரும்பி அவன் வ்யாமோஹித்திருப்பதாகச் சொன்னவிது தம் விஷயத்தோடு நிற்பதன்று; தன்னடியார்களெல்லாருடைய வுடலிலும் இப்படி விருப்பம் செய்து போருமவன் என்றதாகக் காட்டின படியென்று திருவுள்ளம் பற்றியே தேசிகன் ‘ஸ்வஐந’ என்று பணித்தார். “ஒளதந்வதே மஹதிஸத்மநி பாஸமாநே ஸ்லாக்க்யே ச திவ்யஸதநே தமஸ: பரஸ்தாத், அந்த: களேபரமிதம் ஸுஷிரம் ஸுஷ்மம் ஜாதம் கரீச கதமாதரணாஸ்பதம் தே” என்கிற ஸ்லோகத்தினால் தம் பக்கலிலும் அப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழ்ந்த படியைப் பேசினார். இதில் ஆதரணாஸ்பதம் என்கிற வாசகம் விசேஷித்து நோக்கத்தக்கது. ‘என்னுடைய ஹேயமான களேபரத்தில் நீ எப்படி வஸிக்கிறய்?’ என்று கேளாதே பலாப்பழத்தை ஈ மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் தண்டாமரையின் தேனை வண்டுகள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் பரமாதரம் காட்டிக் கொண்டு கிடைக்கிறாயே!இது என்னே! என்று வியந்து கேட்கிறபடி கண்டீரே. க்ருஹஸ்தாச்ரம தருமமாக விஹித விஷய போகம் ப்ராப்தமே யானாலும் அது விசிஷ்டாதிகாரிக்கு குப்ஸநீயமேயென்று. ஆகவே இவ்விஷயத்திலும் ஸத் ஸம்ப்ரதாய ஸித்தாந்தம் நிரவத்யமென்றுணர்க. இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையை நன்கு ஸேவிப்பது.

ததா₂விதா₄நந்த₃மஹாபயாேத₄:
தரங்க₃வ்ரு’த்த்யா ப₄ஜதோ அவதாராந்
அஸேஷ ரூபேஷ்வநுரூபரூபா
தே ₃வீ ஜக₃ந் நேதுரநுப்ரஜஜ்ஜே — 12.1 —

ஸா தஸ்ய நித்யோதி ₃ததி ₃வ்யதா₄ம்ந:
பத்யு: ப்ரியா பா₄நுமத: ப்ரபே₄வ
அத்₄யாஸி துர் த்₃வாரவதீ மதூ₃ராத்
வ்யக்திம் ஶுபா₄ம் ப்ராப வித₃ர்ப₄தே₃ஸே —ஸ்ரீ யாதவாப்யுதயம்
12.2 —

ஶிக₂ண்ட₃கம் நிஷ்ப்ரதிமம் ஶ்ருதீநாம்
ஶ்ரு’ங்கா₃ர லீலோபம விஶ்வ க்ரு’த்யம்
அதீ₄யேத தந்மிது₂நம் ஸ்வபா₄வாத்
அந்யோந்ய ஜீவாது மநந்யே போ₄க்₃யம் –12.3 —

ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லஷணமாக சொன்ன –
ஜகத் காரணத்வ -மோஷ ப்ரதத்வ –சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ –
சர்வ சப்த வாச்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ-சர்வ முமுசூபாச்யத்வ-சர்வ பலப்ரதத்வ – சர்வ வ்யாப்த ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வ-லஷ்மி சஹாயத்–வாதிகள் பிரதி நியதங்கள்-
அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-
முநி வாஹன போகம்–

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே–ரகஸ்ய ரத்னாவளி 

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்-—ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ-3—*ஸக்ருத்₃விபா₄தா ஸர்வார்தி ஸமுத்₃ர பரிஸோஷிணீ , *ப₄வப₄ங்கா₃ பஹாரிணீ ,
*பர நிர்வாணதா₃யிநீ,((ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில ) *ஜ்யோதிஷ் மத்யம்ருதாவஹேத்யாதீ₃நி । வைஷ்ணவே
ச * ஆத்ம வித்₃யா ச தே ₃வி த்வம் விமுக்தி ப₂லதா₃யிநீதி( –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்) । அத்ர விமுக்தி ப₂லதா₃யித்வஸ்ய ஆத்ம வித்₃யா விஸேஷணத்வே (அ)பி
தாத்₃ருஸ வித்₃யா யாஸ்தத₃தீ₄நத் வோக்த்யா ப்ரக்ருத ஸித்₃தி₄꞉ ।மாேக்ஷ க்ஷேது பூ₄தாத்ம கு₃ண ஸித்₃தி₄ஶ்ச தத₃தீ₄நேதி தத்ர தத்ர உக்தம் । ஏவம்
ஸ்தி₂தே க₃த்₃யாரம்போ₄க்தந்யாயேந மோக்ஷ உபாய-தத₃தி₄காரயோ ꞉ தாவத்
ஏதந் மூலத்வம் து₃ரபஹ்நவம் । மாேக்ஷ ப்ரதே ₃ ப₄க₃வதி முமுஷணாம்
க₄டகதயா ஏஷா திஷ்ட₂தீதி ச ஸர்வ ஸம்மதம் । பரிபூர்ணாநுப₄வ ப்ரதா₃ந
ஸங்கல்பஸ்து ப₄க₃வத: ஸ்வஸ்யைவ வா ஸ பத்நீகஸ்ய வேதி
யதா₂ப்ரமாணம் ப₄வது । ஸர்வதா₂ வைஷ்ணவாத்₄ வஸ்ரேய꞉ப்ரத₃த்வமஸ்யா
இக்ஷோச்யமாநம் ந விருத்₃த₄மிதி ॥ 3-(அவனே இவள் புருஷகாரம் மூலம் என்றோ இருவரும் சேர்ந்தே பரிபூர்ண அனுபவ ப்ரீதிக்கு ஸங்கல்பம் செய்கிறார்கள் என்றோ கொள்ளலாம்)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading