ஸ்ரீ துளசி தாஸ் அருளிச் செய்த-ஸ்ரீ ராமசரிதமானஸ்

ஆந்திரம் -ரெங்கநாத ராமாயணம் -புத்த கோண ரெட்டி -900 வருஷங்கள் முன்பு
அஸ்ஸாம் மாதவ கண்டலி ராமாயணம் -800 வருஷங்கள் முன்பு கவிராஜா மாதவ கண்டலி
ஒரிசா ஜக் மோஹன் ராமாயணம் -பல ராமதாஸ் -600 வருஷங்கள் முன்பு
பெங்கால் -ஸ்ரீ ராம் பாகாலி -கிரதிபஸ் ஓஜா -600 வருஷங்கள் முன்பு
கர்நாடக -தோரவே ராமாயணம் –நரஹரி -எழுதியது 500-வருஷங்கள் முன்பு
ராம் சரித்திர மாநஸ் -துளசிதாஸ் -500 வருஷங்களுக்கு முன்பு
மஹாராஷ்ட்ரா -பாவார்த்த ராமாயணம் -ஏக் நாத் –500 வருஷங்கள் முன்பு

மலையாளத்தில் எழுத்தச்சனும்,

வடமொழி இராமாயண நூல்கள்
யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)[10]
அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

தாய்லாந்தில் ராமாயணத்தை ராமாகியன் என கூறுகின்றனர். ராமாகியன் தாய்லாந்தின் தேசிய காவியங்களில் ஒன்றாகும். மேலும் இது ராமாயணத்தின் மற்றொரு பதிப்பு மற்றும் கொண்டாட்டமாகும். இந்த பதிப்பில் ராவணனின் பாத்திரம் தோசகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த கதை 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது

மியான்மரில் ராமாயணத்தை யம ஜடாவ் அல்லது யமயானம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது வெறும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பாக இல்லாமல், பழம்பெரும் காவியத்தின் தனித்துவமான தழுவலாக உள்ளது.

இந்தியாவின் ராம்லீலாவைப் போலவே, யமா ஜடாவும் ஒரு நாடகத் தழுவலாகும். இது பொதுவாக மத விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாட்டுப்புறவியல் மற்றும் பௌத்தத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதன் அசல் இந்திய பதிப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

ராமாயணத்தை போல உள்ள கதை கம்போடியாவில் ரீம்கர் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய காவியத்தின் மற்றொரு பிராந்திய பதிப்பாகும். இது பௌத்த மதத்தின் சுவாரஸ்யமான பதிப்பாக அமைகிறது.

அதே சமயம் இந்திய ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையும் ராமர், சீதை மற்றும் ராவணனை மையமாகக் கொண்டது. முக்கிய வேறுபாடு என்னவென்றால், கதாபாத்திரங்கள் மனிதர்களாகக் கருதப்படுகின்றன. இந்திய இதிகாசங்களைப் போல கடவுள்களின் அவதாரங்களாகக் குறிப்பிடப்படவில்லை

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோயிலுக்குப் பரிசாக வழங்கவுள்ளார். இதுவே உலகில் உள்ள இராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “வால்மீகி எழுதிய இராமாயணப் புத்தகம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.

தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகியுள்ளது.

இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டைப் பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தை அச்சிடுவதற்கான மை, ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் எடை 45 கிலோ கிரமாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.

நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடிக்கும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோயில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்கவுள்ளோம்” என மனோஜ் சாத்தி கூறினார்.

——————-

ஸ்ரீ ராமச்சரித் மனஸ்

இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த கோஸ்வாமி துளசிதாஸ் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. “இராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது ஹிந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப்படுகிறது. இந்த நூல் “வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு ” , “இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்” , “பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்”, “இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல் “என்று பெருமையாகக் கூறப்படுகிறது

இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

இராமசரிதமானஸ் நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள பிரார்த்தனைப் பகுதி–

இராமசரிதமானஸ் நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

பால காண்டம் அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் சிவனைப் பிரார்த்திக்கும் பாடலுடன் தொடங்குகிறது. எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்திருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய பிறையில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் என்னைக் காக்கட்டும்

ஆரண்ய காண்டத்தின் முதல் பாடல் மீண்டும் சிவபெருமானைக் குறித்த பாடலாக அமைந்துள்ளது. இறைவன் சங்கரனை நான் வணங்குகிறேன். அவர் பிரம்மாவின் சந்ததியைச் சேர்ந்தவர், கருணையுடையவர், அன்பானவர், ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் மேல் அபிரிதமான பக்தி வைத்திருப்பவர், அறிவு எனும் கடலுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற முழுச் சந்திரனைப் போன்றவர், சாந்தம் எனும் தாமரையைத் திறக்கும் திறவுகோலான சூரியனைப் போன்றவர், அஞ்ஞானம் எனும் மேகத்தைக் கலைக்கின்ற காற்றைப் போன்றவர், பாவம் மற்றும் காமம், குரோதம், மோஹம் போன்றவற்றை அழித்து, பழியை நீக்குபவர்.

கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாகத் தொடங்குகிறது. மல்லிகை மற்றும் நீலத் தாமரைப் போன்ற மலர்ச்சி உடையவர்;அளவில்லா வீரம் கொண்டவர் ;அறிவுக் களஞ்சியமாக விளங்குபவர்; கருணையுடையவர்;வில் வித்தையில்;வேதங்களால் போற்றப்படுபவர்;பசு மற்றும் பிராமணர்கள் மீது பற்று கொண்டவர்;அரச குலத்தில் ரகுவரனாக மானிடனாகப் பிறவிஎடுத்தவர்;அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் சீதாபிராட்டியும் நமக்கு பக்தியை வழங்கட்டும்.

சுந்தர காண்டம் இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கபடுபவர்;பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்

இலங்கா காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்;மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் 

உத்தர காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்;பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் 

காண்டத்தின் முடிவு

துளசிதாசர் எல்லா காண்டத்தையும் ஒரே போலவே முடிக்கிறார்.

எல்லா காண்டங்களும் முறையாக ஆசிரியர் கோஸ்வாமி துளசிதசாரால் இயற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாக முடிகிறது:”இதி ஸ்ரீராமசரிதமானஸ் சகல கலி கலுசவே த்வம்சேந சதுர்தஹ் சோபனஹ சமாப்தாஹ்

மொழிபெயர்ப்பு : “இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று.” இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுப் பெறுகிறது.

கதை
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் மூன்று உரையாடலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
அவை சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் ,
முனிவர்கள் பாரத்வாஜருக்கும் யாக்யவல்க்கியருக்கும் இடையே நடந்த உரையாடல்,
கக்புஷுன்டிக்கும் கருடனுக்கும் இடையே நடந்த உரையாடல்.
மேலும், சில கவிஞர்கள் இதனூடே துளசிதாசருக்கும் பகவான் இராமருக்கும் இடையே நடந்த உரையாடலும் இடம் பெற்று இருப்பதாகக் கூறுகிறார்கள் .-

பால காண்டம்
குழந்தை அத்யாயம்
துளசிதாசர் இந்த அத்தியாயத்தை தனது குரு மற்றும் முனிவர்கள் : தனக்கு முன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் வாழப்போகிறவர்களை வணங்கி தொடங்குகிறார்.
இதில் வால்மீகியை இராமாயணத்தை இராம பக்தர்களுக்காக எழுதியதற்காகக் குறிப்பிட்டு வணங்குகிறார்.
அதன் பின்னர், ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் பெருமையையும் எடுத்துக் கூறுகிறார்.
முதலாவதாக, ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மாநகரத்தின் பெருமையைக் கூறுகிறார்.
பின்னர், இராமரின் தந்தை தசரதன் மற்றும் தசரதனின் மனைவி கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்.
பின்னர், அவர், சீதையின் தந்தை ஜனகரின் பெருமைகளைக் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, இராமரின் சகோதரர்களான பரதன், இலக்குவன், சத்ருக்னன் மற்றும் இராமனுக்கு உதவிய வானர வீரன் அனுமன்,சுக்ரீவன்,கரடிகளின் தலைவன் ஜாம்பவானைப் பற்றி பாடுகிறார்.
பின்னர் இராமரையும் சீதையையும் அறிமுகப்படுத்துகிறார்.

இராமசரிதமானஸின் கதை பின்னரே தொடங்குகிறது. அது முனிவர்கள் யாக்யவல்க்கியர் மற்றும் பரத்வாஜர் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது.
பரத்வாஜர் யாக்யவல்க்கியரிடம் இராமரின் கதையைக் கூறுமாறு கேட்கிறார்.
யாக்யவல்க்கியர் சிவன் இந்த கதையைப் பார்வதிக்குக் கூறியதிலிருந்து தொடங்குகிறார்.
(சதியின் தற்கொலை, அவள் தந்தை தக்ஷனின் தியாகம், பார்வதியாக சதியின் மறுபிறவி, பார்வதி சிவன் திருமணக் கதை).
சிவன் இராமன் பூமியில் அவதாரம் செய்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார். இதில் ஒவ்வொரு கதையும் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.
இதில், இராமர் ஒவ்வொரு முறையும் பூமியில் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
பின்னர், இராவணன் மற்றும் அவரின் தம்பிகளின் பிறப்பைப் பற்றி விவரிக்கிறார்.
இதன் பின்னர் இந்த கதை சிவன், யாக்யவல்க்கியர், கக்புஷுந்தி மற்றும் துளசிதசரின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.

கதை பிரம்மலோகத்திற்ககு நகர்கிறது. பிரம்மா மற்றும் பிற தேவர்கள் இராவணனின் கொடுமை தாளாமல்
அவனை அழிப்பதற்கு வழிகள் ஆலோசித்துக் கொண்டி
ருக்கின்றனர். வழி காண இயலாமல், சிவனைக் குறித்து இராவணனை அழிக்கக் கூடிய கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு தவம் செய்கிறார்கள்.
சிவன் அவர்களிடம் அந்த கடவுள் எல்லாருடய இதயத்திலும் இருப்பதாக கூறுகிறார்.
பின்னர், அனைத்து தேவர்களும் பிரம்மத்தை நோக்கி தவம் இயற்றுகிறார்கள். அப்போது, பிரம்மன் மனமிரங்கி அவர்கள் முன் வானில் தோன்றி,
இராவணனை அழிக்கக் கூடிய பரம்பொருள் சூரிய குலத்தில் தோன்றுவான் எனக் கூறி மறைகிறார்.

கதை அயோத்திக்கு நகர்கிறது. ஒரு நாள், தசரதன், அயோத்தியின் மன்னன் தனக்கு வயதாகி விட்டதாலும்,
தன்னுடய அரியணைக்கு வாரிசு இல்லை என்பதாலும் கவலை கொள்கிறார்.
இதைத் தனது குடும்ப குருவான வசிஷ்டரிடம் கூறி, இதற்கு ஒரு வழி கூறுமாறு கேட்கிறார்.
அதற்கு வசிஷ்டர், தசரதனுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார்.
பின்னர், ரிஷ்ய சிருங்கரை அழைத்து குழந்தை பாக்கியம் அருளும் புத்ராகம் யாகத்தைச் செய்யுமாறு கூறுகிறார்.
துளஸிதாஸர் இராமர் சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.

கதையில் இப்போது இராமரும் அவரது சகோதரர்களும் இளம்பாலகனாகக் காட்டப்படுகிறார்கள்.
அப்போது விஷ்வமித்ரர் தசரதனின் அரண்மனைக்கு வருகிறார்.
அவரை தசரதன் அன்புடன் வரவேற்கிறார். முனிவர் விஷ்வமித்ரர் காட்டில் பல்வேறு யாகங்களைச் செய்து வசிக்கிறார்.
அப்பொழுது, மாரீசன் மற்றும் சுபாகு என்று இருவர் அந்த யாகங்களைக் கெடுப்பதாகவும், இராமன் அதர்மத்தை
அழிப்பதற்காகவே பூமியில் அவதரித்தார் என்பது தனக்கு தெரியும் என்றும்,
தசரதனின் மகன்களை அந்த அரக்கர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகக் கூறுகிறார்.
தயங்கிய தசரதன், பின்னர் ஒருவாறு அனுப்புகிறார். இராமர் மாரீசனையும் இலக்குவன் சுபாகுவையும் வதம் செய்கிறார்கள்.

இராமர் சீதையை மணம் செய்ய வில் முறிப்பதை விஸ்வாமித்ரர் பார்க்கிறார்.
கதையில் பின்னர் ஆசிரியர் அகல்யையின் சாபவிமோசனத்தைப் பற்றி விவரிக்கிறார்.
அது முடிந்த பின்னர், இராமர், இலக்குவன் மற்றும் விஷ்வமித்ரார் விதேக நாட்டின் அழகான தலைநகரமான மிதிலையை அடைகிறார்கள்.
அங்கு, மிதிலை மன்னன் ஜனகர் அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அவருக்கு இராமரின் பிறவி காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
பின்னர், சகோதரர்கள் இருவரும் அந்த அழகான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள்.
அங்கு, ஜனகரின் தோட்டத்தில் இராமரும் சீதையும் முதல் முறை சந்திக்கிறார்கள்.

இதனிடயே, ஜனகர், சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். இராமரை முதன்முதலாக பார்த்த உடனேயே அவர் மேல்
காதல் வயப்பட்ட சீதை கௌரி மாதாவிடம் இராமரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
ஜனகரும் சுயம்வரத்திற்கு, இராமரையும் இலக்குவனையும் அழைத்தார். அங்கு, சீதையை மணக்க விரும்புபவர்
சிவனின் தனுசை முறிக்க வேண்டும் என்று நிபந்தனை அமைத்தார். பலர் முயன்றும் முடியாது போக, ஜனகர் இந்த பூமியில்
வீரம் மிக்க ஆண்மகனே இல்லையா என வியந்து கூறினார். இதனால் சினந்த இலக்குவன், சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள்
இருக்கும் கூட்டத்தில் இவ்வாறு பேசலாகாது எனக் பதில் கூறினான். அவனை சாந்தப்படுத்திய இராமர், அந்த தனுசை முறித்தார்.
அதனால் வந்த சப்தத்தில் தவம் கலைந்த பரசுராமர், சிவனின் தனுசை முறித்தது யார் என்ற கோபத்துடன் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அங்கு இலக்குவனும் பரசுராமரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாந்தப்படுத்திய இராமர், நடந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார்.
இராமரின் பிறவி நோக்கத்தை அறிந்த பரசுராமர் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து தவம் செய்யச் சென்றார்.
சுயம்வரத்தின் முறைப்படி சீதை வெற்றி மாலையை இராமர் கழுத்தில் சூடி இராமரை மணந்தாள்.

எனினும், தந்து அன்பு மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த ஜனகர் எண்ணினார்.
எனவே, தசாதரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இராமர் சீதை திருமணம் குறித்து அயோத்திக்கு தூது விடுத்தார்.
அளவிடற்கரிய சீர் வரிசையுடன், இராமரின் கும்பத்தினர், நண்பர்கள், நல விரும்பிகள், மானிட ரூபத்தில்
பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள் உட்பட அனைவரும் மிதிலையை நோக்கிச் சென்றனர்.

இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவிற்கு திருமணம் நடந்த பின்னர், இராமரும் சீதையும் கொண்டாட்டங்களுடன் குதூகலத்துடன் அயோத்திக்குத் திரும்பினர்.

அயோத்தி காண்டம்
அயோத்தி அத்யாயம்
அயோத்தி நகரம் இராமரும் சீதையும் மிதிலையிலிருந்து திரும்பி வந்ததால் பூமியிலுள்ள சொர்க்கம் போன்று இருப்பதாகக் கூறுகிறார் துளஸிதாஸர்.
வயது முதிர்ந்த தசரதன் இராமரை மன்னராக பட்டாபிஷேகம் செய்ய எண்ணினார். இது தேவர்களை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது.
ஏனெனில், இராமர் அயோத்தியில் தங்கி விட்டால் இராவண வதம் நடக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆதலால், அவர்கள் சரஸ்வதி தேவியை வணங்கினர்.

மன்னர் தசரதனுக்கு மூன்று மனைவிகள். அதில் கோசலை தான் பிரதான இராணி. கைகேயி பரதனின் தாய்; சுமித்ரா சத்ருக்னன் மற்றும் இலக்குவனின் தாய்.
சரஸ்வதி தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கைகேயியின் சேவகியான மந்தரையின் மனம் மாற்றினாள்.
மந்தரை கைகேயியிடம், இராமர் மன்னராவத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பரதன் மன்னர் ஆவதே மிகச் சிறந்தது என்றும் கூறினாள்.
அப்பொழுது பரதன் கைகேயியின் நாட்டில் தனது மாமனைச் சந்திக்கச் சென்றிருந்தான். மந்தரையின் போதனையால் கைகேயியும் மனம் மாறினாள்.
மந்தரை தசரதன் கைகேயிக்கு தர வேண்டிய இரு வரங்களை நினைவு கூறினாள். கைகேயி அரசவையில் தசரதனுக்காகக் காத்திருந்தாள்.
எல்லோரும் மகிழ்ச்சியாக பட்டாபிஷேக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, கைகேயி அரசவையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட தசரதன் வியந்தான்.
கைகேயி கடுமையான குரலில், தசரதன் தனக்கு அளிக்க வேண்டிய இரு வரங்களை நினைவு படுத்தினாள்.
அவற்றை இப்போது கேட்பதாகவும் பரதன் நாடாள வேண்டும்; இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று கூறினாள்.
தசரதன் மன்றாடியும் கைகேயி கேட்காது போக, சுமந்த்ரனை அழைத்து இராமரை வரச் செய்தார்.

இராணி கைகேயி இராமரிடம் அந்த வரத்தைப் பற்றி கூறினாள். இராமர் திருமாலின் அவதாரம் எனினும், அவதாரத்தின் நோக்கத்தை
இவ்வாறே நிறைவேற்ற இயலும் என்று தன்னுடைய சித்தியின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்.
மக்கள் கைகேயிக்கு எதிராக தங்களுடைய வெறுப்பைப் பதிவு செய்தார்கள். இராமர் எவ்வளவோ மறுத்தும் இலக்குவனும் சீதையும் உடன் வருவோம்
என்று கூறியதால் அவர்களையும் அழைத்துச் சென்றார். மூவரும், தசரதனை வணங்கிச் சென்றனர்.

இராமர், இலக்குவன், சீதை பிரயாக் நகரில் பரத்வாஜ முனிவரைச் சந்தித்தனர்..
அயோத்தி மக்களும் இவர்களுடன் வருவோம் என்று கூற, மூவரும், சுமந்த்ராவும் மக்களைச் சமாளித்து, நடு இரவில் காட்டிற்குச் சென்றனர்.
அங்கு, ஸ்ரீங்கவெரபுராவைத் தாண்டிச் சென்ற போது நிஷத நாட்டு மன்னன் குகனைக் கண்டனர்.
பின்னர், கங்கை, யமுனை​​ ஆறு|யமுனை], சரஸ்வதி சந்திக்கும் ப்ரயாக் நகரை அடைந்தனர்.
அங்கு இராமர் பரத்வாஜரைச் சந்தித்தார். அங்குள்ள யமுனா நதிக்கரை மக்கள் தன்மீது வைத்துள்ள அன்பால் மிகவும் பூரிப்படைந்தார்.
பின்னர், இராமாயணத்தின் ஆசிரியரான வால்மீகி மகரிஷியை அவரது ஆஷ்ரமத்தில் சந்தித்தார்.
வால்மீகி இராமரின் சுயரூபம் அறிந்து இராமரைப் பாடல்களால் துதித்து வணங்கினார். இந்த இடத்தில், சித்ரகூட நகரத்தின் அழகை மிக அழகாக துளசிதாஸர் வர்ணிக்கிறார்.

பின்னர், இராமர் சுமந்த்ராவை அயோத்திக்கு அனுப்பினார். சுமந்த்ரவிற்குத் திரும்பிச் செல்ல விருப்பமும் இல்லை,
திரும்பிச் சென்றால் மக்கள் ஏசுவர் என்று வருந்தினான். திரும்பி வந்த அவனைப் பார்த்த தசரதன், இராமரைக் குறித்து விசாரித்தார்.
இராமரைப் பிரிந்த துயர் தாளாமல், இராமரின் பெயரைக் கூறியவாறே தசரதன் இறந்தார்.

முனிவர் வசிஷ்டருக்கு இராமர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்ததால், பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்து வரச் செய்தார்.
நடந்தது அனைத்தையும் அறிந்த பரதன், தான் அயோத்தியில் இல்லாது போனதே எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறி, தாயின் மேல் கோபம் கொண்டான். சத்ரருக்னன்
ஆத்திரத்தால், மந்தரையைத் தாக்கினான். பின்னர்,கோசலையின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்தி,மன்னிப்பு கோரினார்.
கோசலை அவர்கள் இருவரையும் நாட்டை ஆளுமாறு கூறினாள். பரதன் தன்னால் ஒரு போதும் இராமரின் இடத்தில் நாடாள முடியாதென்றான்.
தசரதனின் இறுதிச் சடங்குகள் முடிந்து, பரதனும், சத்ருகனனும் நாட்டிற்கு இராமரை அழைத்து வரச் சென்றார்கள்.
அவர்களுடன், அரச குடும்பமும், நாட்டு மக்கள் பலரும் சென்றனர்.

பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
மக்கள் படையைக் கண்ட நிஷத நாட்டு மக்கள் இராமரைத் தாக்க வந்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டனர்.
குகன் பரதனிடம் படையோடு காட்டிற்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். பரதன் இராமரிடம் கொண்ட அன்பைக் கண்டு குகன் நெகிழ்ந்து போனான்.
பின்னர், மக்கள் சித்ரகூடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு இலக்குவனும் பரதனின் படையைக் கண்டு சந்தேகித்து பரதன் மேல் கோபம் கொண்டான்.
அங்கு வந்த இராமர், பரதனைப் புகழ்ந்து பேச, இலக்குவன் தன் எண்ணத்தை எண்ணி நாணினான்.
சகோதரர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். தந்தையின் பிரிவை எண்ணி அனைவரும் வருந்தினர்.

பரதன் எவ்வளவோ முயன்றும், இராமர் தன் தந்தை மற்றும் சித்தியின் சொல்லின் பேரில், காட்டிலேயே இருப்பதாகக் கூறினார்.
எனவே பரதன், தன்னால் நாடாள முடியாது என்று கூறி, இராமரின் பாதுகைகளை வைத்து நாடாளுவேன் என்று அவைகளை பெற்றுச் சென்றான்.
மிகுந்த மனவருத்ததுடன் அயோத்தி திரும்பிய பரதன், இனி இராமர் வரும் வரை நந்திக்ராமத்தில் இருக்கப் போவதாகக் கூறினான்.

——————–

ஆரண்ய காண்டம்
கானக அத்யாயம்
சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் ஜடாயு சண்டையிடும் காட்சி.
இராமர், சீதை, இலக்குவன் காட்டில் நடந்து அத்ரி என்ற ஒரு முனிவரின் குடிலை அடைகிறார்கள்.
அத்ரி அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அத்ரியின் மனைவி அனுஸ்யா சீதாதேவியை வரவேற்றாள்.
அனுஸ்யா மனைவியின் கடமைகளை சீதையிடம் விவரிக்கிறார்.

இராமர், சீதை, இலக்குவன் காட்டினுள் மேலும் நடந்து விராதனைச் சந்திக்கிறார்கள். விராதன் சீதையைச் சிறை பிடிக்க முயற்சித்தான்.
இராமர் அவனைக் கொன்று ஒரு பள்ளத்தில் புதைக்கிறார். பின்னர், அவர்கள் சரபங்க முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்கள்.
அந்த முனிவர் கூறியபடி, சுதீக்ஷ்ண முனிவரின் ஆஷ்ரமத்தில் தங்குவதற்காக செல்கிறார்கள்.
அங்கே தவம் கலைந்து எழுந்த முனிவர், இராமரின் வருகைக்காகவே அவர் காத்திருந்ததாகவும்,
அதற்காக வேற்று கிரகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வந்தும் செல்லாது இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பின்னர், மூவரும் அகஸ்த்ய முனிவரைச் சந்தித்து வணங்குகிறார்கள். அவர் தெய்வீகமான ஆயுதங்களை இராமருக்கு அளித்து தண்டகா வனம் செல்லும் போது தேவைப்பட்டால் உபயோகிக்குமாறு கூறினார்.
அங்கே இராமர், ஜடாயுவைச் சந்தித்தார். ஜடாயு அந்த மூவருடன் அகஸ்த்யரின் சொல்லுக்கேற்ப மிக அழகான பஞ்சவடி என்ற கிராமத்தை அடைந்தனர்.
இலக்குவனுக்கு நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர, கைகேயியைத் தகாத வார்த்தைகளால் பேசினான்.
அவ்வாறு பேசலாகத்து என இராமர் சமாதானம் கூறினார்.

அப்போது, அரக்கன் இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் கண்டனர்.
இராமரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மேல் காதல்வயப்பட்டாள் அவள். இராமரிடம் இனிமையாக பேசியபோது, இராமர் தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றார்.
இலக்குவனும் அவளை நிராகரிக்க, சீதையைத் தாக்கத் தொடங்கினாள் அவள். வெகுண்ட இலக்குவன் அவள் காது மடல்களையும் மூக்கையும் அறுத்தான்.
அவமானப்பட அவள், தன்னுடைய சகோதரர்கள் கர, துசானா, திரிசிரா இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள்.
அவளின் கோலத்தைக் கண்ட அவர்கள், இராமரைக் கொல்ல முயற்சித்தனர். இராமர் அவர்கள் மூவரையும் வென்றார்.

வருந்திய சூர்ப்பனகை இலங்கையிலுள்ள இராவணனைச் சந்தித்தாள். இராவணன் தன்னுடைய பால்ய ஸ்நேகிதனான மாரீசனை அழைத்தார்.
மாரீசன் தங்க மானாக மாறினால், சீதையைக் கடத்தி விடலாமென்று சதி செய்தான். மாரீசன் இராமரின் பலத்தை அறிந்தவனாதலால், (பால காண்டம்)
பயம் கொண்டு இருப்பினும், செய்யாது போனால், இராவணன் கொன்று விடுவான் என்பதால், ஒப்புக்கொண்டான்.
இராவணனும் மாரீசனும் இராமர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

மாரீசன் மாய மானாக மாறி சீதையின் கவனத்தை ஈர்த்தான். இராவணனின் எண்ணத்தை அறிந்திருந்த இராமர், சீதையின் நிழலை அவ்விடத்தில் இருக்கச் செய்து, சீதையை ஒளிந்திருக்குமாறு கூறினார்.
சீதை மீண்டும் மீண்டும் அந்த மாய மான் தனக்கு வேண்டுமென்று நச்சரித்தாள். இராமர் அந்த மானைத் தேடி ஆஷ்ரமத்திலிருந்து வெகு தூரம் சென்றார்.
இராமரின் குரலில், மாரீசன் இலக்குவனிடம் உதவி வேண்டுமென்று குரல் கொடுத்தான். சீதை அந்த குரலைக் கேட்டு, கதறி அழுதாள்;
இலக்குவனை இராமருக்கு உதவுமாறு ஆணையிட்டாள். அந்த சமயம், இராவணன் ஒரு யாசிக்கும் இசைவாணராக சீதையிடம் வந்தார்.
யாசகம் அளிக்க வந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றான். அதைக் கண்ட ஜடாயு இராவணனோடு போரிட்டான்.
இராவணன் மிகுந்த பலசாலி ஆதலால்,இராவணன் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான். இராமரும் இலக்குவனும் திரும்பி வந்து சீதை இல்லாததைக் கண்டு வருந்தினர்.
சீதையைத் தேடிச் செல்லும்போது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் வாயிலாக உண்மை அறிந்த அவர்கள், ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தனர்.
பின்னர், செல்லும் வழியில் சபரியின் ஆஷ்ரமத்தைக் கண்டனர். சபரி தன்னுடய கண்ணீரால், இராமரின் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், சுவைத்துப் பார்த்து இனிக்கும் பழங்களை மட்டுமே இராமருக்குக் கொடுத்தாள். இராமர் அவளுக்கும் மோட்சம் அளித்தார்.
சகோதரர்கள் இருவரும் பாம்பாசரோவர் ஏரியை நோக்கி நடந்து சென்றனர்.

கிஷ்கிந்தா காண்டம்
கிஷ்கிந்தா அத்யாயம்
தாரா, சுக்ரீவன், அனுமனை கிஷ்கிந்தா நகரில் சந்திக்கும் இலக்குவன் ரிஷ்யமுக மலையின் உச்சியிலிருந்து, சுக்ரீவன் இராமரும், இலக்குவனும், மலையின் அடிவாரத்தில் இருப்பதைக் கண்டார்.
அனுமனிடம், தன்னுடைய சகோதரன் பாலி அனுப்பிய ஆட்களாக இருப்பரோ என வினவினார். அனுமன் பிராமணனாக வடிவம் எடுத்து அவர்களை அணுகினார்.
இராமரின் சுயரூபத்தை அறிந்த அனுமன் அவரின் புண்ணிய பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். இதை சுக்ரீவனிடம் எடுத்துக் கூறிய அனுமன், அவர்களோடு சேர்ந்து சீதையைத் தேடும் பணியில் இறங்கினார்.
அப்பொழுது, சுக்ரீவன் தன்னுடைய தமையன் பாலியால் தான் ஏமாற்றப்பட்டத்தைக் கூறினார். இராமர் பாலியை வாதம் செய்து,
கிஷ்கிந்தா நாட்டின் மன்னராக சுக்ரீவனையும், இளவரசாரக பாலியின் மகன் அங்கதனையும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அதோடு சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக அளித்த உறுதியை சுக்ரீவன் மறந்தான். இராமர் கடுங்கோபம் கொண்டு, இலக்குவனை சுக்ரீவனை அழைத்து வருமாறு சொன்னார்.
இலக்குவன் அரசவையில் நுழைந்து அந்த நகரைச் சாம்பலாக்குவதாக சபதமிட்டார். பயந்த சுக்ரீவன், இராமரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்.
சுக்ரீவன் உடனே, கரடிப் படையையும் குரங்கு படையையும் எல்லா திசைகளிலும் தேடுமாறு ஏற்பாடு செய்தார். அனுமனால் மட்டுமே சீதையைக் கண்டுபிடிக்க இயலுமென்று இராமர் எண்ணினார்.
எனவே, இராமர் அனுமனிடம், சீதையின் பிரிவு தன்னை மிகவும் வாட்டுவதாகக் கூறி கணையாழியைக் கொடுத்தார்.
அங்கதன், நளன், கேசரி, ஜாம்பவான் மற்றும் அனுமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றனர். கரையை அடைந்த அவர்கள், ஜாம்பவானும் அங்கதனும் கரையின் அருகே ஒரு குகையைக் கண்டனர்.
அந்த குகையில் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி வசிப்பதைக் கண்டனர். சம்பாதி வானரப் படையிடம் சீதை அசோக வனத்தில் இலங்கையில் இருப்பதாகக் கூறினார்.
அந்த தீவு 400 மைல் தொலைவில் இருப்பதாகவும், அந்த தூரத்தைக் குதித்துத் தாண்டக் கூடிய ஒருவரால் மட்டுமே அங்கே சென்றடைய முடியுமென்று கூறினார்.
அனுமனால் மட்டுமே அதைச் செய்ய முடியுமென்று ஜாம்பவான் முடிவு செய்தார்.

————-

சுந்தர காண்டம்
மகிழ்ச்சியான காண்டம்
இராமரும் வானர வீரர்களும்.
ஜாம்பவானின் கருத்தை ஏற்று அனுமன், அருகிலிருந்த மலையின் உச்சியின் மீதேறி, வானில் பறக்கலானர்.
இடையில் பாம்புகளின் தாயான சுரசையின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சமுத்ர அரக்கி அனுமனை பறவை என்றெண்ணி பிடிக்க நினைத்தது.
அவளை வென்று அனுமன், இலங்கையின் கரையில் இறங்கினார். அங்கு மிக அழகான தோட்டங்களையும், குளங்களையும், எரிகளையும் கண்டார்.
அனுமன் இராமரை எண்ணி சிறிய உருவம் எடுத்து இலங்கையில் நுழைந்தார். அங்கு அரக்கி லங்கினியை கைககளால் தாக்கி பூமியில் விழச் செய்தார்.
அனுமன் அரண்மனைகளிலும் தோட்டங்களிலும் தேடினார். பின்னர் ஸ்ரீ ஹரியின் நாமம் கேட்கும் இடத்தை நோக்கி நடந்தார்.
அது இராவணனின் தம்பி விபீஷணனுடையது. அங்கு சென்று, இராமரின் புராணத்தை அனுமன் கூறினார். பின்னர் அசோக வனத்தில் சீதையைக் கண்டார்.
சீதை அமர்ந்திருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்.

இராவணன் சீதையை நோக்கி வருவதையும் தன்னை ஒரு முறை பார்க்குமாறு கெஞ்சுவதையும் கண்டார். இராவணன் சீதையின் தலையை அறுப்பதாக் கூறியும் சீதை அஞ்சவில்லை.
இராவணனின் மனைவி மண்டோதரி அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். அனுமன், இராவணன் மீதிருந்த சினத்தை மிகுந்த பிரயாசைக்குப் பின் அடக்கிக் கொண்டார்.
பின்னர், அனுமன், இராமரின் துதிகளை மெல்லிய குரலில் பாடினார்.பின்னர் தான் யார் என்று சீதையிடம் கூறி, கணையாழியை அளித்தார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் சீதை அனுமனை ஆசீர்வதித்து பல வரங்கள் அளித்தாள்.

அனுமன் சீதையிடம் தான் மிகுந்த பசியுடன் இருப்பதாகக் கூறி, அந்த தோட்டத்திலிருந்து பழங்கள் புசிக்க அனுமதி கேட்டார்.
பாதி பழங்கள் உண்டு, பலவற்றை அழித்தார். இராவணனுடைய மகன் அக்ஷயாவை வதம் செய்தார்.
வேண்டுமென்றே இந்த்ரஜீத்திடம் பிடிபட்டுக்கொண்டவர், இராவணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே இராவணன் அனுமனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
விபீஷணன் அனுமன் ஒரு தூதன், தூதனைக் கொல்லக் கூடாதென்று நினைவுகூர, இராவணன் அனுமனை அவமானப்படுத்த அனுமனின் வாலிற்குத் தீ வைத்தான்.
அனுமன் ராம நாமாவைக் கூறக் கூற, அனுமனின் வால் நீண்டுக்கொண்டே சென்றது. அதனைக் கொண்டு இலங்கைக்கு தீ வைத்தார்.
பின்னர், கடலில் தீயை அணைத்து, சீதை நலமாக இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டார். சீதையிடம் மறுமுறை இராமருடன் சந்திப்பதாக உறுதி அழைத்தார்.
பின்னர், இராமர், அங்கதன், ஜாம்பவாநனிடம் நடந்ததைக் கூறி இலங்கை நோக்கி படையுடன் கிளம்பினார்.

இதனிடையே, இலங்கையில்,மண்டோதரியும் விபீஷணனும் சீதையைத் திருப்பி அனுப்புமாறு இராவணனை வேண்டினார்.
இராவணன் விபீஷணனை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பினார். விபீஷணன் இராமருடன் சேர்ந்து கொண்டார்.
விபீஷணன் இராமரின் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்று, இராமரிடம் அடைக்கலம் கோரினார். கடலை எவ்வாறு கடக்கலாமென்று அனைவரும் ஆலோசித்தனர்.
அப்போது கடல் தேவதைகள், இராமரிடம் வானர சகோதரகள் நிலா மற்றும் நளா கடலைத் தாண்ட வரம் பெற்றிருப்பதாகக் கூறினார்.

இலங்கா காண்டம்
இலங்கா அத்யாயம்
ஸ்ரீலங்கவை இணைக்கும் ராமர் சேது கட்டப்பட்டது
ஜாம்பவான் அந்த சகோதரர்கள் நிலா மற்றும் நளாவைப் பாலம் காட்டுமாறு ஆணையிட்டடார்.
அவர்கள் அந்த மலை முழுவதையும் கொண்டும் பாலம் அமைத்தார்கள். இராமர் சிவனுக்காக இராமேஸ்வரத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டுமென்று எண்ணினார்.
பால வேலை முடிவடைந்தவுடன், இராமரின் படைகள் பாலத்தைக் கடந்து, இலங்கை அடைந்து, சுவேலா என்ற மலையின் அருகில் ஓய்வெடுத்தனர்.
இதை அறிந்த இராவணன் மேலும் கோபம் கொண்டான். மண்டோதரி இராவணனின் உயிருக்கு ஆசைப்பட்டு, சீதையைத் தீர்ப்பி அனுப்பி விடுமாறு கோரினாள்.
இராவணன் இராமரின் பலத்தை உதாசீனப்படுத்தி, மண்டோதரியைச் சாந்தமாக்கினான். பின்னர், அவன் மகன் பிரகஸ்தானும், தாயைப் போன்றே கூற, அது பலனில்லாது போனது.

இதனிடயே, இராமர் ஜாம்பவானிடம் என்ன செய்வது என்று கேட்டார். ஜாம்பவான் அங்கதனைத் தூது அனுப்பலாமென்று கூறினார்.
இராவணனின் அரசவையில் அங்கதன் சென்று, இராவணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே தருணம் என்றும்,இல்லை எனில் போர் தொடங்கும் என்றான்.

முதல் நாள் போர் மிகவும் கொடுமையாக நடந்தது. இராவணன் தன்னுடைய படையில் பாதியை இழந்தான்.
இராவணனின் மகன் இந்த்ரஜித், இலக்குவனை சிறந்த ஆயுதத்தால் தாக்க, இலக்குவன் படுகாயமடைந்தான்.
அனுமன் சுஷேனா என்ற மருத்துவரை அழைத்து வந்தார். அவர் இலக்குவனைக் குணப்படுத்த இமாலய மலையில் கிடைக்கும் சஞ்சீவினி மூலிகையை எடுத்து வர வேண்டுமென்றார்.
அனுமன் அதனை எடுத்து வருவதாக இராமருக்கு உறுதி அளித்தார். அவரைத் தடுத்து நிறுத்த இராவணன் காலநேமி என்ற அரக்கியை அனுப்பினார்.
அவளை எளிதில் வென்ற அனுமன், மலையை கண்டு, மருந்து அதில் கண்டுபிடிக்க இயலாது போக, மலையைச் சுமந்து இலங்கை அடைந்தார்.

அனுமன் சஞ்சீவனி மூலிகையைத் தேடுகிறார்.
அனுமன் மிகுந்த வேகத்தோடு இலங்கை வந்து கொண்டிருக்கும் போது, நந்திக்ராமம் அருகில் பராதனால் தவறுதலாகத் தாக்கபட்டார்.
பின்னர், நினைவு திரும்பி, பரதன் இராமரின் தம்பி என்று அறிந்து கொண்டார். இலங்கையில் , சஞ்சீவனி மருந்தினால் சூஷேனா இலக்குவனைக் குணப்படுத்தினார்.
இராமர் மிகுந்த அன்புடன் அனுமனை ஆரத் தழுவினார். இலக்குவனின் உடல்நிலை சரி ஆனதை அறிந்த இராவணன் சினம் கொண்டு கும்பகர்ணனை எழுப்பினார்.
இராமர் ஒரே அம்பால் அவனை வீழ்த்த, இராவணன் பயந்து போனான். பல்வேறு சக்திகளை வேண்டி இந்த்ரஜித் தவம் மேற்கொண்டான். அனுமனும் அங்கதனும் அதனை முறியடித்தனர்.
இலக்குவன் இந்த்ரஜித்தை வதம் செய்தான். இராமர் எத்தனையோ அம்புகள் எய்தும் இராவணன் மரிந்து போகாது போக,
அவனை எவ்வாறு கொள்ள வேண்டும் என்று விபீஷணனிடம் வினவினான். பின்னர், அவ்வாறே இராவணனைக் கொன்றான்

இராவணனுடைய இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், விபீஷணனிற்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
அனுமன் இந்த் செய்தியை அசோக வனத்திலிருக்கும் சீதையிடம் சென்று கூறினார். முடிவில், இராமரும் சீதையும் ஒன்று கூடினர்.
அனைவரும் அயோத்திக்குத் திரும்ப எண்ணினர். இராமர், சீதை, இலக்குவன் மற்றும் சில மூத்த வானரர்கள் இராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றனர்.[53]

உத்தர காண்டம்
இராமரின் குடும்பம்
இன்று, இராமர் அயோத்திக்குத் திரும்பி வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. தம்பி பரதன் மிகுந்த கவலயோடு இருக்கிறான்.
அவன் 14 ஆண்டுகள் நந்திக்ராமத்தில் கண்ணீர் விட்டபடியே வாழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.அனுமன் பரதனைச் சந்தித்து அவர்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பரதன் இந்த நற்செய்தியை அயோத்திக்குச் சென்று அனைவரிடமும் கூறினான். புஷ்பக விமானம் வந்து இறங்கியவுடன், மக்கள் அனைவரும் “ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு ஜெயம்” என்று கூவினர்.
இராமரும், சீதையும் இலக்குவனும் வசிஷ்டரின் பாதம் தொட்டு ஆசி பெற்றுக்கொண்டனர். இறுதியில் , இராமர் பரதனை ஆரத் தழுவிக் கொண்டார்.
பின்னர், பட்டாபிஷேகத்தில் இராமர் மன்னராக முடி சூடிக் கொண்டார். அப்போது, சிவன் வந்து அந்த விழாவைக் கௌரவித்தார்.
பின்னர், எந்நாளும் இராமரின் பக்தனாக தான் இருக்க வேண்டுமென்று வாரம் பெற்றுக்கொண்டார். முடிவாக,
இராமருக்கு இரட்டைக் குழந்தைகள் இலவன், குசன் இருக்கிறார்கள் என்றும், மற்ற சகோதரர்களுக்கும் இரு புதல்வர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாரத முனிவரும் சனக முனிவரும் அயோத்திக்கு வந்து அந்த அழகான நகரத்தைக் கண்டனர். பின்னர், கக்புஷுன்டியின் சுயசரிதையில், கலியுகம் எவ்வாறு இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இதனுடன் பார்வதியும் சிவனும், கக்புஷுன்டியும் கருடனும் உரையாடலை முடித்துக் கொண்டனர். யாக்யவல்க்கியரும் பரத்வாஜரும் உரையாடலை முடித்துக் கொண்டதாகக் கூறப்படவில்லை.
இதனுடன், துளஸிதாஸர் இந்த நூலை முடித்துக் கொள்கிறார்.

சமஸ்க்ருதத்திலுள்ள ருத்ராஷ்டகம் இந்த காண்டத்தின் ஒரு பகுதி.

இராமசந்த்ரரின் அவதாரம்
பால காண்டத்தில், சிவன் இராமரின் கதையை பார்வதி தேவியிடம் கூறுவதாக எழுதப்பட்டிருந்தது.
அப்பொழுது இராமர் பூமியில் அவதரித்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.

படைப்புத் தொழிலின் சமன்பாடு
எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் உலகில் பெருக்கத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் ஒரு அவதாரத்தில், பூமியைக் காப்பாற்றுவான் என்று பார்வதியிடம் சிவன் கூறுகிறார்.
அந்த அரக்கர்களை அழித்து, பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவான் இறைவன் என்கிறார். இதுவே இராமாவதாரத்தின் முதன்மையான நோக்கம்.

ஜயன் விஜயன்
சகோதரர்கள் ஜயன் விஜயன் இருவரும் பகவான் விஷ்ணுவின் வாயிற்காப்போர்கள்.
சனக முனிவர் மற்றும் அவரின் சகோதரர்களின் சாபத்தால் இருவரும் அரக்க குலத்தில் பிறக்க நேரிடுகிறது.
அவர்கள் ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் ஆவர். இறைவன் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் அழித்தார்.
ஹரி தானே இவர்களை அழித்த போதும், சாபத்தின்படி இவர்கள் மூன்று பிறவி எடுக்க வேண்டுமென்பதால், இவர்கள் மோட்சம் அடையவில்லை.
எனவே அவர்கள் இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் மறுபிறவி எடுத்தனர். ஹரி, இவர்களை அழிக்க இராமராக மனிதப் பிறவி எடுத்தார்.

நாரத முனியின் சாபம்
நாரத முனி பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டே இமாலய மலையில் நடந்து சென்றார். அங்கு அவர் ஆழ்ந்த தியானத்திற்குச் சென்றார்.
அவரின் தவத்தைக் கண்ட இந்திரன் எங்கே தனது இந்திரலோகப் பதவிக்கு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.
இந்திரன் காமதேவனை அழைத்து, நாரதரின் தவத்தைக் கலைக்குமாறு கூறினார். அவர் நறுமணமுள்ள மலர்கள், தென்றல், தேவலோகத்துப் பெண்கள் கொண்டும் கலைக்க முயற்சித்தார்.
ஆனால், அவை எதுவும் நாரதரைக் கலைக்கவில்லை. தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, நாரதரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார் காமதேவன்.
இதை சிவனிடம் பெருமையாக நாரதர் கூறினார். சிவன் இக்கதையை ஹரியிடம் சொல்லக் கூடாதென்றார்.

விஷ்ணுவைச் சந்தித்த நாரதர், கர்வத்தோடு சிவனின் வார்தையையும் மீறி இக்கதையைக் கூறினார்.
விஷ்ணு மேலும் நாரதரைப் புகழ, அளவில்லா கர்வத்தோடு நாரதர் கிளம்பினார். ஹரி லக்ஷ்மி தேவியிடம் தான் ஒரு திட்டம் வகுத்திருப்பதாகக் கூறி மாயையைத் தொடங்கினார்.
விஷ்ணு ஒரு மிக அழகான நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் மன்னர் ஷீலாநிதி, அவரின் அழகான மகள் விஷ்வமோகினி.
நாரதர் ஆர்வத்துடன் அந்த நகரைச் சென்றடைந்தார். அங்கே அந்த மன்னனின் மகள் மீது காதல் கொண்டார்.
மன்னர் ஒரு தகுதியானவற்கே தன் மகளைத் தருவதாகக் கூறினார். நாரதர் இளவரசி தன்னைத் தேர்ந்தெடுக்க திட்டம் தீட்டினார்.

நாரதர் ஹரியிடம் அளவில்லா அழகை வரமாகக் கேட்டார். ஹரி நாரதருக்கு எது நன்மையோ அதையே செய்வதாகக் கூறினார்.
உண்மையில், இராமர், நாரதரை ஒரு குரங்கைப் போல மாற்றினார். அரசவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டும் ஏதும் கூறவில்லை.
கோபம் கொண்ட இளவரசி நாரதரை வெறுத்தாள். கண்ணாடியில் தன் முகம் கண்ட நாரதர், வைகுண்டத்திற்குச் சென்று ஹரியைத் தகாத வார்தைகளால் பேசினார் :
“ஒரு குரங்கைப் போல நீ என்னை மாற்றியதால் குரங்குகள் உன்னுடைய தோழர்கள் ஆவார்கள். என்னை நீ வருத்தியதால், உன் மனைவியைப் பிரிந்து வருந்துவாய்” என்றார்.
ஹரியும் அதனை ஏற்றுக் கொண்டு, மாயையைக் கலைத்தார்.

நாரதர் விஷ்வமோகினி உட்பட அனைத்தும் மாயை என்று அறிந்து கொண்டு சாபத்தை அழிக்குமாறு கூறினார்.
ஹரி அது தனது விருப்பம் என்று கூறி, எல்லா பாவங்களில் இருந்து விடுபட, ஹரி நாமாவைச் சொல்வதே சிறந்தது என்றார்.
நாரதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று நாமஸ்மரணை செய்யத் தொடங்கினார்

ஸ்வயம்புவா மனுவும் ஷதரூபாவும்
ஸ்வயம்புவா மனுவின் மனைவி ஷதரூபா. மனு பல ஆண்டுகள் உலகை ஆண்டு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றினான்.
ஹரியின் பக்தனான அவன், ராஜ்யத்தை மகனிடம் கொடுத்து விட்டு, மனைவியுடன் காட்டில் சென்று தவம் செய்ய எண்ணினான்.
இருவரும் சரயு நதிக்கரையில் அமர்ந்து பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை ஜபித்தனர்.
சிலர் அந்த மந்திரம் ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்ற மும்மூர்த்திகளை அழைக்கும் மந்திரம் என்கிறார்கள்
இராமபத்ராசார்யா அந்த மந்திரம் இராமருக்கும் சீதைக்குமான மந்திரம் என்கிறார்.

இருவரும் முதலில் உணவையும், நீரையும் தியாகம் செய்தனர். பின்னர், காற்றைத் தியாகம் செய்ய எண்ணினர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களை அழைத்தும், முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அப்பொழுது, சொர்க்கத்திலிருந்து என்ன வரம் வேண்டுமென்று ஒரு குரல் கேட்டது.
இராமரும் சீதையும் அழகான உருவத்தில் அவர்கள் முன் தோன்ற, பெருமகிழ்ச்சி அடைந்த இருவரும் தங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டதாகக் கூறினர்.
இறுதியாக, தனக்கு ஒரு நெடு நாள் ஆசை இருப்பதாகவும், இறைவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதே அது என்றும் கூறினான் மனு.

இறைவன் அதை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஷதரூபாவும் அதுவே தன்னுடைய ஆவல் என்றாள்.
இறைவன் அவர்கள் இருவரையும் இந்திரனின் தலைநகரத்தில் வசிக்கச் செய்தார்.

பின்னர், இருவரும் சிறிது காலத்திற்குப் பின், அயோத்தி மன்னன் தசரதானாகவும் கோசலையாகவும் பிறப்பார்கள் என்றார் இறைவன்.
அவர்கள் இருவருக்கும் மகனாக தானே அவதரிப்பதாகவும் கூறினார்.

மன்னன் பிரதாப்பானுவின் கதை
இராமர் பிறப்பதற்கு முன், யாக்யவல்க்கியர் பரத்வஜாரிடம் பிரதாப்பானுவின் கதையைக் கூறினார். கைக்கெய் என்ற நகரத்தின் மன்னன் சத்யகேது.
அவருக்கு, பிரதாப்பானுவ, அரிமர்த்தனா என்று இரு புதல்வர்கள். அவரின் பிரதான மந்திரி தர்மருசி. சத்யகேது தனது ராஜ்யப் பொறுப்பை பிரதாப்பானுவிடம் ஒப்புவிக்க, பிரதாப்பானு உலகையே வெல்கிறார்.

ஒரு முறை அவர் கானகத்திற்குச் செல்லும் போது ஒரு கொடிய கரடியைக் கண்டார். அந்த கரடி காலகேது;அது அவரை விட்டு வெகு தூரம் செல்கிறது.
பிரதப்பானு அதனைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் செல்கிறார். அப்போது தாகம் எடுக்க, அருகிலிருக்கும் ஒரு போலி முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்.
முன் நடந்த ஒரு சம்பவத்தால் கோபம் கொண்டிருந்த முனிவர், அவரை அவமானப்படுத்த எண்ணினார்.
முனிவரை அடையாளம் காணாத மன்னர், முனிவர் வரம் கேட்டவுடன், மறைந்து போகவும், இளமையோடு இருக்கவும் வரம் கேட்டார்.
ஆனால், அவை நிறைவேற, பல பிராமணர்களை உணவளித்து மகிழ்விக்க வேண்டுமென்றார் முனிவர்.

முனிவர் மன்னரை ஓய்வெடுக்கச் சொல்லி, உணவு தயாரிக்கச் செல்வதாகக் கூறினார்.
மன்னர் மூன்று நாள் காத்திருந்தும் முனிவர் வராது போக, காலகேது ஒரு பூசாரியாக வந்து, மன்னரை அவையில் சந்தித்து, முனிவர் அவனை உணவு சமைக்க அனுப்பியிருப்பதாகக் கூறினார்.
மன்னர் எல்லா பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் உண்ணும் முன், அந்த உணவு சுத்தம் இல்லாதது, அனைவரும் ஓடி விடுங்கள் என்று வானிலிருந்து ஒலி கேட்க, அனைவரும், மன்னரைச் சபித்தனர்.
அப்போது அந்த குரல், மன்னரின் மீது பிழை இல்லை என்று கூறி, சாபத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதால், அடுத்த பிறவியில், சாபத்தின் பலனை அவர்கள் அனுபவிக்கக் கடவது என்றது.

சினம் கொண்ட மன்னர் காலக்கேதுவைத் தேடினார். அங்கு அவனைக் காணாது வருந்திய போது, பிராமணர்கள், அடுத்த பிறவியில் இறைவனே அவனை அழிப்பார் என்றார்.
சாபத்தின் படியே, அண்டை நாட்டு படையெடுப்பில் பிரதாப்பானு, அரிமர்த்தம், தர்மருசி ஆகியோர் மாண்டனர்.

பிரதாப்பானு இராவணனாகவும், அரிமர்த்தம் கும்பகர்ணனாகவும், தர்மருசி விபீஷணனாகவும் மறுபிறவி எடுத்தனர்.
மூவரும், கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்றனர்-இராவணன் மனிதப் பிறவி மற்றும் குரங்குப் பிறவிகளால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்றும்,
கும்பகர்ணன் ஆறு மாதம் இடை விடாத உறக்கம் வேண்டுமென்றும், விபீஷணன் ஹரியின் மேல் அளவற்ற பற்று வேண்டும் என்றும் வரங்களைப் பெற்றனர்.

எதிர்பாராத முடிவு
பல்வேறு கவிஞர்கள் இந்நூல் எதிர்பாராத இடத்தில் முடிவு பெற்றதாகக் கூறுகின்றனர்.
வால்மீகியின் உத்தர காண்டத்தில் இராமரின் ஆட்சியில் சீதை கானகம் செல்வது, அயோத்தி மக்கள் புரஞ்சொல்வது போன்றவைக் கூறப்பட்டுள்ளது.
சீதை அன்னை பூமா தேவியிடம் தன்னை அழைத்துக் கொள்ளுமாறு கூறி, இராமரை விட்டுச் செல்வதாக எழுதியுள்ளார்.
ஆனால், இந்த நூலில் எவையும் குறிப்பிடப்படவில்லை. காத கார் மொராரி பாபு, துளஸிதாஸர் நூலை சீதையின் கவலையோடு முடிக்க விரும்பாததே காரணம் என்கிறார். துளஸிதாஸர்,
சீதையை தன்னுடைய தாயாகவும் உலகின் தாயாகவும் வர்ணிக்கிறார். சீதை ஏற்கனவே தேவையான அளவிற்குத் துன்புற்றத்தால், மகிழ்ச்சியுடன் நூலை நிறைவு செய்கிறார்.
சிலர், இந்த நூலின் பாலகாண்டத்தை மட்டுமே கூறுகிறார்கள். ஏனெனில், அதில் இராமர், சீதையின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்துள்ளது.

மானஸில் இராமரின் தெய்வீகம்
இராமரின் தெய்வீகப் பிறப்பு
சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாள், சூரியன் மத்யமமாக இருக்கும்; அதிகம் வெயிலோ குளிரோ இல்லாத காலம்,
இதமான காற்று வீசும் காலம். காட்டில் பூ பூக்கும் காலம், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் காலம். பிரம்மா இராமர் பிறக்க இதுவே சரியான நேரம் என்று குறிக்கிறார்.
தேவர்கள் அனைவரும் மிக உன்னதமான இராமரின் பிறப்பைக் காண வானில் கூடுகிறார்கள். தேவர்கள் இறைவனின் துதியைப் பாட அவை வானில் எதிரொலிக்கிறது.

இங்கே இராம் ஜனம் ஸ்துதி என்ற புகழ்பெற்ற பாடல் எழுதப்பட்டுள்ளது..கோசலை நான்கு கரங்களுடன் கரிய நிரத்துடன் பிறந்த குழந்தை கண்டு குதூகலிக்கிறாள்.
பல்வேறு ஆபரணங்கள் அணிவித்து, அழகின் கடல் என்று கொஞ்சுகிறாள். கோசலை கைகளைக் குவித்துப் பாடுகிறாள்
“எல்லை அற்றவனே, உன்னை நான் எவ்வாறு துதிப்பேன். வேதங்களும் புராணங்களும் நல்லொழுக்கத்தின் ஆலயம் நீ என்று வர்ணிக்கின்றது.
லக்ஷ்மி தேவிக்கு கடவுள் நீ; அனைத்து மக்களாலும் நேசிக்கப் படுபவன் நீ;என் நன்மைக்காக்கத் தோன்றியுள்ளாய்;
உன் உடம்பின் ஒவ்வொரு துளையும் பல பிரபஞ்சங்களை அடக்கியுள்ளது;நீ என்னுடைய வயிற்றில் தங்கினாய் என்று எண்ணுகையில் நான் தடுமாறுகிறேன்”.
இராமர் சிரித்தபடியே கோசலையின் முந்தைய பிறவியைப் பற்றி கூறி தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
கோசலை இராமரை ஒரு சாதாரண குழந்தையாக மாறக் கேட்டுக் கொண்டாள். பரம்பொருளான இராமர், ஒரு சிறு குழந்தையாக மாறி, அழத் தொடங்கினார்.

துளஸிதாஸர், இந்த பாடலைப் பாடும் எவரும் மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவர் என்கிறார்.
இந்த பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல், இராமரின் பிறந்த நாள் அன்று பாடப் படுகிறது.

அகல்யையின் சாப விமோசனம்
அகல்யை கௌதம ரிஷியின் மனைவி. அவளின் அழகைக் கண்டு அவள் மேல் ஆசைப்பட்டான் இந்திரன்.
நிலாவினை சேவலாக மாற்றி, சூரியன் உதிக்கும் முன்னரே கூவச் செய்தான். விடிந்ததாக நம்பிய ரிஷியும் நீராட கங்கையைச் சென்றடைந்தார்.
அப்போது ரிஷியின் ரூபத்தில் இந்திரன் அங்கு வந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த ரிஷி, நடந்ததை அறிந்து சினம் கொண்டு, இந்திரன், சந்திரனுக்கு சாபம் அழித்தார்.
இந்திரன் தேவலோகம் இழந்து, ஆயிரம் தாமரைகளால் பூஜித்து சாபத்தை முடித்தான். ரிஷி அகலிகையைக் கல்லால் மாறிவிடும்படி சபித்தார்.
ஒரு பாவமும் செய்யவில்லை என்று அவள் கூறிய பின், இராமர் அவளுக்கு சபாவிமோசனம் அளிப்பார் என்றார்.

இராமர், மிதிலைக்கு சீதையைக் காண செல்லும் பொது, கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்தை அடைந்தனர்.
விஷ்வமித்ரார், அகலிகையின் கதையைச் சொல்ல, இராமர், கல்லைத் தனது கால்களால் தொட்டு, அகலிகைக்கு விமோசனம் அளித்தார்.
அவள் இராமரின் கால்களில் விழுந்து, இராமரைத் தரிசித்தது தனது புண்ணியம் என்று கூறி கண்ணீரால் அவர் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், அவளது கணவனின் வீட்டிற்குத் திரும்பினாள்.

சதியின் தற்கொலையும் பார்வதியின் அவதாரமும்
பாலகாண்டத்தில், சிவன் இராமகதையைப் பார்வதியிடம் கூறுவது கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில், யாக்யவல்க்கியர் பரத்வாஜரிடம் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சதியின் சந்தேகம்
திரேதா யுகத்தில், சிவன் சதியுடன் அகஸ்த்ய ரிஷியைச் சந்திக்கச் சென்றார்.
சிவனின் வரவால் மகிழ்ந்த அகஸ்த்ய ரிஷி, இராமரின் கதையைக் கூறினார். சிவன் மிகுந்த மகிழ்வுடன் அதைக் கேட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார்.
அதே சமயம், இராமர் பூமியில் அவதரித்து சீதை, இலக்குவனுடன் தண்டக வனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இறுதியில், சிவன், சீதையைத் தேடிக் கொண்டிருக்கும் இராமரைக் கண்டார். “உலகின் மீட்பரான இராமரை நான் வணங்குகிறேன்;அவரே சத்தியமானவர்;பேரின்பம் அளிப்பவர்;
உன்னதமானவர்”. சதி இராமரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; சிவன் எதற்காக ஒரு மானிடரைப் போற்றுகிறார் என்று வியந்தாள்.
அனைத்தையும் அறிந்த சிவன், சதி மனதில் இருக்கும் சந்தேகத்தையும் அறிந்து, அந்த மானிடர் அகஸ்த்ய ரிஷி புகழ்ந்த இராமர் என்றும்,
சந்தேகம் இன்னும் இருந்தால், சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். சதி சீதையாக இராமர், இலக்குவன் முன் தோன்றுகிறாள்.
சிவன் எங்கே என்று இருவரும் அவளிடம் வினவ, அவர்களின் பெருமையை எண்ணி, தன்னை நொந்து கொள்கிறாள்.
இதை எவ்வாறு சிவனிடம் கூறுவது என்று வருந்துகிறாள்.

சிவன் சதியிடம் எவ்வாறு அவள் சோதித்தாள் என்று வினவுகிறார். சதி தான் சோதிக்கவில்லை என்றும் இராமரைப் புகழ்ந்தாள் என்றும்
அனைத்தும் அறிந்த சிவனிடம் கூறுகிறாள். சினம் கொண்ட சிவன், இனி சதிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி,
வாழை மரத்தின் அடியில் தவ்ம் மேற்கொள்கிறார். தன் தவறை எண்ணி வருந்திய சதி, சிவனின் கால்களில் வீழ்ந்து அழ,
விஷ்ணுவின் லீலைகளை சிவன் கூறத் தொடங்கினார்.

தக்ஷனின் தியாகம்
சிவன் விஷ்ணுவின் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கையில், வானில் கொண்டாட்டங்கள் தெரிகிறது.
அது என்னவென்று சதி கேட்க, அது அவளுடைய தந்தை தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் என்று சிவன் கூறுகிறார்.
கடவுள் மீது தக்ஷன் வெறுப்பு கொண்டதால் பிரம்மா, விஷ்ணு, சிவனை அவன் அழைக்கவில்லை என்கிறார்.
தான் சென்று வர அனுமதி கேட்டாள் சதி. அழைப்பு இல்லாததால் செல்ல வேண்டாம் என்றார் சிவன். சொல் கேளாமல், சதி சென்றாள்.
துளஸிதாஸர் ஒரு பெண்ணுக்கும் அவள் தந்தைக்குமான தொடர்பு மிக உறுதியானது என்கிறார்.

சதியை அவளது அன்னை தவிர யாரும் வரவேற்கவில்லை. தக்ஷன் கண்டுகொள்ளவும் இல்லை. சதி சிவனுக்கு மரியாதை செய்யாததைக் கண்டு வெகுண்டாள்.
சிவனே இந்த உலகின் தந்தை; அனைவரையும் படைத்தவர் அவரை அவமதிக்கலாகாது என்று கூறி நெருப்பில் வீழ்ந்து மாண்டாள்.
இதை அறிந்த சிவன் வீரபத்ரனை அங்கே அனுப்பினார். அவர் யாகத்தையும் தக்ஷனையும் அழித்தார்.
சதி சாகும் தருவாயில் விஷ்ணுவிடம் தான் மீண்டும் சிவனுக்கு மனைவியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
இமாசலுக்கும் மேனாவிற்கும் மகளாக பார்வதியாக பிறந்தாள்.

பார்வதி மற்றும் நாரதரின் தீர்க்கதரிசனம்
பார்வதி பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர், நாரத முனி அவளின் பெற்றோர் இமாச்சல் மற்றும் மேனாவைச் சந்தித்தார்.
இமாச்சல் தன்னுடைய புதல்வியின் வருங்காலம் என்னவென்று கேட்டார். நாரதர், பார்வதி பல கலைகள் கற்று, மிகுந்த அன்பு கொண்ட ஒருவனை மணப்பாள் என்றார்.
அவனுடன் பல காலம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் என்றார். ஆனால், அவளை மனம் முடிப்பவன், சடாமுடி தரித்த உடைகள் அணியாத ஒரு முனிவராக இருப்பார் என்றார். இதைக் கேட்டு பெற்றோர்கள் வருந்தினாலும், பார்வதி விஷ்ணுவின் வாக்கு மெய்யாவதால் மகிழ்ந்தாள்.
நாரதர் அப்படிபட்ட ஒருவர் சிவன் தான் என்று கூறி, பார்வதியைத் திருமாலைத் தியானிக்குமாறு கூறினார்.
பார்வதி சிவனை அடைய கடுந்தவம் இயற்றினாள். உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்த அவளைக் கண்ட பிரம்மா
இது வரை உலகில் இவ்வாறு யாரும் தவம் செய்தது இல்லை என்று மெச்சி தவத்தை நிறுத்தி, தந்தையுடன் செல்லுமாறு கூறினார்.

சதி மரித்த பின், சிவன் ஹரியின் நமதைக் கூறிக் கொண்டே தவம் செய்தார். அப்போது இராமர்,சிவனிடம் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சிவன் மறுக்க முடியாமல் தவத்தைத் தொடர்ந்தார். அப்போது, தாரகன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்தி வந்தான்.
சிவனின் புதல்வனால் மட்டுமே அவனை அழிக்க முடியுமென்று அறிந்த பிரம்மா சிவனைப் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். அவன் பூவினால் ஆன ஐந்து அம்புகளை சிவனின் மார்புகளின் மீது வீசினான்.
தவம் கலைந்து வெகுண்டு எழுந்த சிவன், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். இதைக் கேட்ட மன்மதனின் மனைவி ரதி, மயங்கி விழுந்தாள்.
அதைக் கண்டு மனமிறங்கிய சிவன், உடலில்லாமல் அவன் அனைவரையும் ஆளுவான் என்று வரம் அளித்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது, அவன் பிரத்யும்னா என்று மீண்டும் பிறப்பான் என்றார்.
பின்னர், பிரம்மாவும் மற்ற கடவுளும் தன்னுடைய கண்களால் சிவனின் திருமணத்தைப் பார்க்கும் வரம் கேட்டனர்.
விஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் பார்வதியை மணக்க ஒப்புக்கொண்டார். பிரம்மா சிவனின் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

சிவன் பார்வதி திருமணம்
சிவனுக்கென்று குடும்பம் இல்லை; எனவே அவருடைய சேவகர்கள் திருமணத்தை ஏற்பாடு செய்தனர்.
பாம்பினாலான கிரீடமும், தோடும், காப்பும், கொண்டு தலையையும் கழுத்தையும் அலங்கரித்துக் கொண்டார்.
தான் உடல் முழுவதும் சாம்பலைப்பூசிக் கொண்டு, சிங்கத்தின் தோலால் போர்த்திக் கொண்டார். இவ்வாறாக அவர் திருமண மண்டபம் நோக்கி நடந்து செல்ல, பிரம்மா, விஷ்ணு, கந்தர்வர்கள், தேவர்கள் தொடர்ந்து வந்தனர்.
திருமணம் முடிந்து, அவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் பிறந்து தாரகனை வதம் செய்தார்.

ஒவ்வொரு காண்டத்தில் இருந்து சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்

1.1

चौपाई
பஂதஉ குரு பத பதும பராகா. ஸுருசி ஸுபாஸ ஸரஸ அநுராகா..
அமிய மூரிமய சூரந சாரூ. ஸமந ஸகல பவ ருஜ பரிவாரூ..
ஸுகரிதி ஸஂபு தந பிமல பிபூதீ. மஂஜுல மஂகல மோத ப்ரஸூதீ..
ஜந மந மஂஜு முகுர மல ஹரநீ. கிஏதிலக குந கந பஸ கரநீ..
ஷ்ரீகுர பத நக மநி கந ஜோதீ. ஸுமிரத திப்ய த்ரரிஷ்டி ஹியஹோதீ..
தலந மோஹ தம ஸோ ஸப்ரகாஸூ. பட஀ே பாக உர ஆவஇ ஜாஸூ..
உகரஹிஂ பிமல பிலோசந ஹீ கே. மிடஹிஂ தோஷ துக பவ ரஜநீ கே..
ஸூ஀ஹிஂ ராம சரித மநி மாநிக. குபுத ப்ரகட ஜஹஜோ ஜேஹி காநிக..

दोहा/सोरठा
ஜதா ஸுஅஂஜந அஂஜி தரிக ஸாதக ஸித்த ஸுஜாந.
கௌதுக தேகத ஸைல பந பூதல பூரி நிதாந..1..

1.2

चौपाई
குரு பத ரஜ மரிது மஂஜுல அஂஜந. நயந அமிஅ தரிக தோஷ பிபஂஜந..
தேஹிஂ கரி பிமல பிபேக பிலோசந. பரநஉராம சரித பவ மோசந..
பஂதஉப்ரதம மஹீஸுர சரநா. மோஹ ஜநித ஸஂஸய ஸப ஹரநா..
ஸுஜந ஸமாஜ ஸகல குந காநீ. கரஉப்ரநாம ஸப்ரேம ஸுபாநீ..
ஸாது சரித ஸுப சரித கபாஸூ. நிரஸ பிஸத குநமய பல ஜாஸூ..
ஜோ ஸஹி துக பரசித்ர துராவா. பஂதநீய ஜேஹிஂ ஜக ஜஸ பாவா..
முத மஂகலமய ஸஂத ஸமாஜூ. ஜோ ஜக ஜஂகம தீரதராஜூ..
ராம பக்தி ஜஹஸுரஸரி தாரா. ஸரஸஇ ப்ரஹ்ம பிசார ப்ரசாரா..
பிதி நிஷேதமய கலி மல ஹரநீ. கரம கதா ரபிநஂதநி பரநீ..
ஹரி ஹர கதா பிராஜதி பேநீ. ஸுநத ஸகல முத மஂகல தேநீ..
படு பிஸ்வாஸ அசல நிஜ தரமா. தீரதராஜ ஸமாஜ ஸுகரமா..
ஸபஹிஂ ஸுலப ஸப திந ஸப தேஸா. ஸேவத ஸாதர ஸமந கலேஸா..
அகத அலௌகிக தீரதராஊ. தேஇ ஸத்ய பல ப்ரகட ப்ரபாஊ..

दोहा/सोरठा
ஸுநி ஸமு஀ஹிஂ ஜந முதித மந மஜ்ஜஹிஂ அதி அநுராக.
லஹஹிஂ சாரி பல அசத தநு ஸாது ஸமாஜ ப்ரயாக..2..

1.3

चौपाई
மஜ்ஜந பல பேகிஅ ததகாலா. காக ஹோஹிஂ பிக பகஉ மராலா..
ஸுநி ஆசரஜ கரை ஜநி கோஈ. ஸதஸஂகதி மஹிமா நஹிஂ கோஈ..
பாலமீக நாரத கடஜோநீ. நிஜ நிஜ முகநி கஹீ நிஜ ஹோநீ..
ஜலசர தலசர நபசர நாநா. ஜே ஜட஀ சேதந ஜீவ ஜஹாநா..
மதி கீரதி கதி பூதி பலாஈ. ஜப ஜேஹிஂ ஜதந ஜஹாஜேஹிஂ பாஈ..
ஸோ ஜாநப ஸதஸஂக ப்ரபாஊ. லோகஹுபேத ந ஆந உபாஊ..
பிநு ஸதஸஂக பிபேக ந ஹோஈ. ராம கரிபா பிநு ஸுலப ந ஸோஈ..
ஸதஸஂகத முத மஂகல மூலா. ஸோஇ பல ஸிதி ஸப ஸாதந பூலா..
ஸட ஸுதரஹிஂ ஸதஸஂகதி பாஈ. பாரஸ பரஸ குதாத ஸுஹாஈ..
பிதி பஸ ஸுஜந குஸஂகத பரஹீஂ. பநி மநி ஸம நிஜ குந அநுஸரஹீஂ..
பிதி ஹரி ஹர கபி கோபித பாநீ. கஹத ஸாது மஹிமா ஸகுசாநீ..
ஸோ மோ ஸந கஹி ஜாத ந கைஸேஂ. ஸாக பநிக மநி குந கந ஜைஸேஂ..

दोहा/सोरठा
பஂதஉஸஂத ஸமாந சித ஹித அநஹித நஹிஂ கோஇ.
அஂஜலி கத ஸுப ஸுமந ஜிமி ஸம ஸுகஂத கர தோஇ..3க..
ஸஂத ஸரல சித ஜகத ஹித ஜாநி ஸுபாஉ ஸநேஹு.
பாலபிநய ஸுநி கரி கரிபா ராம சரந ரதி தேஹு..3க..

1.4

चौपाई
பர அகாஜு லகி தநு பரிஹரஹீஂ. ஜிமி ஹிம உபல கரிஷீ தலி கரஹீஂ..
பஂதஉகல ஜஸ ஸேஷ ஸரோஷா. ஸஹஸ பதந பரநஇ பர தோஷா..
புநி ப்ரநவஉபரிதுராஜ ஸமாநா. பர அக ஸுநஇ ஸஹஸ தஸ காநா..
பஹுரி ஸக்ர ஸம பிநவஉதேஹீ. ஸஂதத ஸுராநீக ஹித ஜேஹீ..
பசந பஜ்ர ஜேஹி ஸதா பிஆரா. ஸஹஸ நயந பர தோஷ நிஹாரா..
பஹுரி பஂதி கல கந ஸதிபாஏ ஜே பிநு காஜ தாஹிநேஹு பாஏ.
பர ஹித ஹாநி லாப ஜிந்ஹ கேரேஂ. உஜரேஂ ஹரஷ பிஷாத பஸேரேஂ..
ஹரி ஹர ஜஸ ராகேஸ ராஹு ஸே. பர அகாஜ பட ஸஹஸபாஹு ஸே..
ஜே பர தோஷ லகஹிஂ ஸஹஸாகீ. பர ஹித கரித ஜிந்ஹ கே மந மாகீ..
தேஜ கரிஸாநு ரோஷ மஹிஷேஸா. அக அவகுந தந தநீ தநேஸா..
உதய கேத ஸம ஹித ஸபஹீ கே. குஂபகரந ஸம ஸோவத நீகே..

दोहा/सोरठा
உதாஸீந அரி மீத ஹித ஸுநத ஜரஹிஂ கல ரீதி.
ஜாநி பாநி ஜுக ஜோரி ஜந பிநதீ கரஇ ஸப்ரீதி..4..

1.5

चौपाई
மைஂ அபநீ திஸி கீந்ஹ நிஹோரா. திந்ஹ நிஜ ஓர ந லாஉப போரா..
பாயஸ பலிஅஹிஂ அதி அநுராகா. ஹோஹிஂ நிராமிஷ கபஹுகி காகா..
பஂதஉஸஂத அஸஜ்ஜந சரநா. துகப்ரத உபய பீச கசு பரநா..
பிசுரத ஏக ப்ராந ஹரி லேஹீஂ. மிலத ஏக துக தாருந தேஹீஂ..
உபஜஹிஂ ஏக ஸஂக ஜக மாஹீஂ. ஜலஜ ஜோஂக ஜிமி குந பிலகாஹீஂ..
ஸுதா ஸுரா ஸம ஸாதூ அஸாதூ. ஜநக ஏக ஜக ஜலதி அகாதூ..
பல அநபல நிஜ நிஜ கரதூதீ. லஹத ஸுஜஸ அபலோக பிபூதீ..
ஸுதா ஸுதாகர ஸுரஸரி ஸாதூ. கரல அநல கலிமல ஸரி ப்யாதூ..
குந அவகுந ஜாநத ஸப கோஈ. ஜோ ஜேஹி பாவ நீக தேஹி ஸோஈ..

दोहा/सोरठा
பலோ பலாஇஹி பை லஹஇ லஹஇ நிசாஇஹி நீசு.
ஸுதா ஸராஹிஅ அமரதாகரல ஸராஹிஅ மீசு..5..

1.6

चौपाई
கல அக அகுந ஸாதூ குந காஹா. உபய அபார உததி அவகாஹா..
தேஹி தேஂ கசு குந தோஷ பகாநே. ஸஂக்ரஹ த்யாக ந பிநு பஹிசாநே..
பலேஉ போச ஸப பிதி உபஜாஏ. கநி குந தோஷ பேத பிலகாஏ..
கஹஹிஂ பேத இதிஹாஸ புராநா. பிதி ப்ரபஂசு குந அவகுந ஸாநா..
துக ஸுக பாப புந்ய திந ராதீ. ஸாது அஸாது ஸுஜாதி குஜாதீ..
தாநவ தேவ ஊ அரு நீசூ. அமிஅ ஸுஜீவநு மாஹுரு மீசூ..
மாயா ப்ரஹ்ம ஜீவ ஜகதீஸா. லச்சி அலச்சி ரஂக அவநீஸா..
காஸீ மக ஸுரஸரி க்ரமநாஸா. மரு மாரவ மஹிதேவ கவாஸா..
ஸரக நரக அநுராக பிராகா. நிகமாகம குந தோஷ பிபாகா..

दोहा/सोरठा
ஜட஀ சேதந குந தோஷமய பிஸ்வ கீந்ஹ கரதார.
ஸஂத ஹஂஸ குந கஹஹிஂ பய பரிஹரி பாரி பிகார..6..

1.7

चौपाई
அஸ பிபேக ஜப தேஇ பிதாதா. தப தஜி தோஷ குநஹிஂ மநு ராதா..
கால ஸுபாஉ கரம பரிஆஈ. பலேஉ ப்ரகரிதி பஸ சுகஇ பலாஈ..
ஸோ ஸுதாரி ஹரிஜந ஜிமி லேஹீஂ. தலி துக தோஷ பிமல ஜஸு தேஹீஂ..
கலஉ கரஹிஂ பல பாஇ ஸுஸஂகூ. மிடஇ ந மலிந ஸுபாஉ அபஂகூ..
லகி ஸுபேஷ ஜக பஂசக ஜேஊ. பேஷ ப்ரதாப பூஜிஅஹிஂ தேஊ..
உதரஹிஂ அஂத ந ஹோஇ நிபாஹூ. காலநேமி ஜிமி ராவந ராஹூ..
கிஏஹுகுபேஷ ஸாது ஸநமாநூ. ஜிமி ஜக ஜாமவஂத ஹநுமாநூ..
ஹாநி குஸஂக ஸுஸஂகதி லாஹூ. லோகஹுபேத பிதித ஸப காஹூ..
ககந சட஀இ ரஜ பவந ப்ரஸஂகா. கீசஹிஂ மிலஇ நீச ஜல ஸஂகா..
ஸாது அஸாது ஸதந ஸுக ஸாரீஂ. ஸுமிரஹிஂ ராம தேஹிஂ கநி காரீ..
தூம குஸஂகதி காரிக ஹோஈ. லிகிஅ புராந மஂஜு மஸி ஸோஈ..
ஸோஇ ஜல அநல அநில ஸஂகாதா. ஹோஇ ஜலத ஜக ஜீவந தாதா..

दोहा/सोरठा
க்ரஹ பேஷஜ ஜல பவந பட பாஇ குஜோக ஸுஜோக.
ஹோஹி குபஸ்து ஸுபஸ்து ஜக லகஹிஂ ஸுலச்சந லோக..7க..
ஸம ப்ரகாஸ தம பாக துஹுநாம பேத பிதி கீந்ஹ.
ஸஸி ஸோஷக போஷக ஸமு஀ி ஜக ஜஸ அபஜஸ தீந்ஹ..7க..
ஜட஀ சேதந ஜக ஜீவ ஜத ஸகல ராமமய ஜாநி.
பஂதஉஸப கே பத கமல ஸதா ஜோரி ஜுக பாநி..7க..
தேவ தநுஜ நர நாக கக ப்ரேத பிதர கஂதர்ப.
பஂதஉகிஂநர ரஜநிசர கரிபா கரஹு அப ஸர்ப..7க..

1.8

चौपाई
ஆகர சாரி லாக சௌராஸீ. ஜாதி ஜீவ ஜல தல நப பாஸீ..
ஸீய ராமமய ஸப ஜக ஜாநீ. கரஉப்ரநாம ஜோரி ஜுக பாநீ..
ஜாநி கரிபாகர கிஂகர மோஹூ. ஸப மிலி கரஹு சாட஀ி சல சோஹூ..
நிஜ புதி பல பரோஸ மோஹி நாஹீஂ. தாதேஂ பிநய கரஉஸப பாஹீ..
கரந சஹஉரகுபதி குந காஹா. லகு மதி மோரி சரித அவகாஹா..
ஸூ஀ ந ஏகஉ அஂக உபாஊ. மந மதி ரஂக மநோரத ராஊ..
மதி அதி நீச ஊி ருசி ஆசீ. சஹிஅ அமிஅ ஜக ஜுரஇ ந சாசீ..
சமிஹஹிஂ ஸஜ்ஜந மோரி டிடாஈ. ஸுநிஹஹிஂ பாலபசந மந லாஈ..
ஜௌ பாலக கஹ தோதரி பாதா. ஸுநஹிஂ முதித மந பிது அரு மாதா..
ஹிஹஹி கூர குடில குபிசாரீ. ஜே பர தூஷந பூஷநதாரீ..
நிஜ கவித கேஹி லாக ந நீகா. ஸரஸ ஹோஉ அதவா அதி பீகா..
ஜே பர பநிதி ஸுநத ஹரஷாஹீ. தே பர புருஷ பஹுத ஜக நாஹீஂ..
ஜக பஹு நர ஸர ஸரி ஸம பாஈ. ஜே நிஜ பாட஀ி பட஀ஹிஂ ஜல பாஈ..
ஸஜ்ஜந ஸகரித ஸிஂது ஸம கோஈ. தேகி பூர பிது பாட஀இ ஜோஈ..

दोहा/सोरठा
பாக சோட அபிலாஷு பட஀ கரஉஏக பிஸ்வாஸ.
பைஹஹிஂ ஸுக ஸுநி ஸுஜந ஸப கல கரஹஹிஂ உபஹாஸ..8..

1.9

चौपाई
கல பரிஹாஸ ஹோஇ ஹித மோரா. காக கஹஹிஂ கலகஂட கடோரா..
ஹஂஸஹி பக தாதுர சாதகஹீ. ஹஹிஂ மலிந கல பிமல பதகஹீ..
கபித ரஸிக ந ராம பத நேஹூ. திந்ஹ கஹஸுகத ஹாஸ ரஸ ஏஹூ..
பாஷா பநிதி போரி மதி மோரீ. ஹிபே ஜோக ஹேஂ நஹிஂ கோரீ..
ப்ரபு பத ப்ரீதி ந ஸாமு஀ி நீகீ. திந்ஹஹி கதா ஸுநி லாகஹி பீகீ..
ஹரி ஹர பத ரதி மதி ந குதரகீ. திந்ஹ கஹுமதுர கதா ரகுவர கீ..
ராம பகதி பூஷித ஜியஜாநீ. ஸுநிஹஹிஂ ஸுஜந ஸராஹி ஸுபாநீ..
கபி ந ஹோஉநஹிஂ பசந ப்ரபீநூ. ஸகல கலா ஸப பித்யா ஹீநூ..
ஆகர அரத அலஂகரிதி நாநா. சஂத ப்ரபஂத அநேக பிதாநா..
பாவ பேத ரஸ பேத அபாரா. கபித தோஷ குந பிபித ப்ரகாரா..
கபித பிபேக ஏக நஹிஂ மோரேஂ. ஸத்ய கஹஉலிகி காகத கோரே..

दोहा/सोरठा
பநிதி மோரி ஸப குந ரஹித பிஸ்வ பிதித குந ஏக.
ஸோ பிசாரி ஸுநிஹஹிஂ ஸுமதி ஜிந்ஹ கேஂ பிமல பிவேக..9..

1.10

चौपाई
ஏஹி மஹரகுபதி நாம உதாரா. அதி பாவந புராந ஷ்ருதி ஸாரா..
மஂகல பவந அமஂகல ஹாரீ. உமா ஸஹித ஜேஹி ஜபத புராரீ..
பநிதி பிசித்ர ஸுகபி கரித ஜோஊ. ராம நாம பிநு ஸோஹ ந ஸோஊ..
பிதுபதநீ ஸப பாி ஸாரீ. ஸோந ந பஸந பிநா பர நாரீ..
ஸப குந ரஹித குகபி கரித பாநீ. ராம நாம ஜஸ அஂகித ஜாநீ..
ஸாதர கஹஹிஂ ஸுநஹிஂ புத தாஹீ. மதுகர ஸரிஸ ஸஂத குநக்ராஹீ..
ஜதபி கபித ரஸ ஏகஉ நாஹீ. ராம ப்ரதாப ப்ரகட ஏஹி மாஹீஂ..
ஸோஇ பரோஸ மோரேஂ மந ஆவா. கேஹிஂ ந ஸுஸஂக படப்பநு பாவா..
தூமஉ தஜஇ ஸஹஜ கருஆஈ. அகரு ப்ரஸஂக ஸுகஂத பஸாஈ..
பநிதி பதேஸ பஸ்து பலி பரநீ. ராம கதா ஜக மஂகல கரநீ..

छंद
மஂகல கரநி கலி மல ஹரநி துலஸீ கதா ரகுநாத கீ..
கதி கூர கபிதா ஸரித கீ ஜ்யோஂ ஸரித பாவந பாத கீ..
ப்ரபு ஸுஜஸ ஸஂகதி பநிதி பலி ஹோஇஹி ஸுஜந மந பாவநீ..
பவ அஂக பூதி மஸாந கீ ஸுமிரத ஸுஹாவநி பாவநீ..

दोहा/सोरठा
ப்ரிய லாகிஹி அதி ஸபஹி மம பநிதி ராம ஜஸ ஸஂக.
தாரு பிசாரு கி கரஇ கோஉ பஂதிஅ மலய ப்ரஸஂக..10க..
ஸ்யாம ஸுரபி பய பிஸத அதி குநத கரஹிஂ ஸப பாந.
கிரா க்ராம்ய ஸிய ராம ஜஸ காவஹிஂ ஸுநஹிஂ ஸுஜாந..10க..

——–

2.1

चौपाई
ஜப தேஂ ராமு ப்யாஹி கர ஆஏ. நித நவ மஂகல மோத பதாஏ..
புவந சாரிதஸ பூதர பாரீ. ஸுகரித மேக பரஷஹி ஸுக பாரீ..
ரிதி ஸிதி ஸஂபதி நதீஂ ஸுஹாஈ. உமகி அவத அஂபுதி கஹுஆஈ..
மநிகந புர நர நாரி ஸுஜாதீ. ஸுசி அமோல ஸுஂதர ஸப பாீ..
கஹி ந ஜாஇ கசு நகர பிபூதீ. ஜநு ஏதநிஅ பிரஂசி கரதூதீ..
ஸப பிதி ஸப புர லோக ஸுகாரீ. ராமசஂத முக சஂது நிஹாரீ..
முதித மாது ஸப ஸகீஂ ஸஹேலீ. பலித பிலோகி மநோரத பேலீ..
ராம ரூபு குநஸீலு ஸுபாஊ. ப்ரமுதித ஹோஇ தேகி ஸுநி ராஊ..

दोहा/सोरठा
ஸப கேஂ உர அபிலாஷு அஸ கஹஹிஂ மநாஇ மஹேஸு.
ஆப அசத ஜுபராஜ பத ராமஹி தேஉ நரேஸு..1..

——-

3.1

चौपाई
புர நர பரத ப்ரீதி மைஂ காஈ. மதி அநுரூப அநூப ஸுஹாஈ..
அப ப்ரபு சரித ஸுநஹு அதி பாவந. கரத ஜே பந ஸுர நர முநி பாவந..
ஏக பார சுநி குஸும ஸுஹாஏ. நிஜ கர பூஷந ராம பநாஏ..
ஸீதஹி பஹிராஏ ப்ரபு ஸாதர. பைடே படிக ஸிலா பர ஸுஂதர..
ஸுரபதி ஸுத தரி பாயஸ பேஷா. ஸட சாஹத ரகுபதி பல தேகா..
ஜிமி பிபீலிகா ஸாகர தாஹா. மஹா மஂதமதி பாவந சாஹா..
ஸீதா சரந சௌஂச ஹதி பாகா. மூட஀ மஂதமதி காரந காகா..
சலா ருதிர ரகுநாயக ஜாநா. ஸீஂக தநுஷ ஸாயக ஸஂதாநா..

दोहा/सोरठा
அதி கரிபால ரகுநாயக ஸதா தீந பர நேஹ.
தா ஸந ஆஇ கீந்ஹ சலு மூரக அவகுந கேஹ..1..

———-

4.1

चौपाई
ஆகேஂ சலே பஹுரி ரகுராயா. ரிஷ்யமூக பரவத நிஅராயா..
தஹரஹ ஸசிவ ஸஹித ஸுக்ரீவா. ஆவத தேகி அதுல பல ஸீஂவா..
அதி ஸபீத கஹ ஸுநு ஹநுமாநா. புருஷ ஜுகல பல ரூப நிதாநா..
தரி படு ரூப தேகு தைஂ ஜாஈ. கஹேஸு ஜாநி ஜியஸயந பு஀ாஈ..
படஏ பாலி ஹோஹிஂ மந மைலா. பாகௌஂ துரத தஜௌஂ யஹ ஸைலா..
பிப்ர ரூப தரி கபி தஹகயஊ. மாத நாஇ பூசத அஸ பயஊ..
கோ தும்ஹ ஸ்யாமல கௌர ஸரீரா. சத்ரீ ரூப பிரஹு பந பீரா..
கடிந பூமி கோமல பத காமீ. கவந ஹேது பிசரஹு பந ஸ்வாமீ..
மரிதுல மநோஹர ஸுஂதர காதா. ஸஹத துஸஹ பந ஆதப பாதா..
கீ தும்ஹ தீநி தேவ மஹகோஊ. நர நாராயந கீ தும்ஹ தோஊ..

दोहा/सोरठा
ஜக காரந தாரந பவ பஂஜந தரநீ பார.
கீ தும்ஹ அகில புவந பதி லீந்ஹ மநுஜ அவதார..1..

———-

5.1

चौपाई
ஜாமவஂத கே பசந ஸுஹாஏ. ஸுநி ஹநுமஂத ஹரிதய அதி பாஏ..
தப லகி மோஹி பரிகேஹு தும்ஹ பாஈ. ஸஹி துக கஂத மூல பல காஈ..
ஜப லகி ஆவௌஂ ஸீதஹி தேகீ. ஹோஇஹி காஜு மோஹி ஹரஷ பிஸேஷீ..
யஹ கஹி நாஇ ஸபந்ஹி கஹுமாதா. சலேஉ ஹரஷி ஹியதரி ரகுநாதா..
ஸிஂது தீர ஏக பூதர ஸுஂதர. கௌதுக கூதி சட஀ேஉ தா ஊபர..
பார பார ரகுபீர ஸாரீ. தரகேஉ பவநதநய பல பாரீ..
ஜேஹிஂ கிரி சரந தேஇ ஹநுமஂதா. சலேஉ ஸோ கா பாதால துரஂதா..
ஜிமி அமோக ரகுபதி கர பாநா. ஏஹீ பாி சலேஉ ஹநுமாநா..
ஜலநிதி ரகுபதி தூத பிசாரீ. தைஂ மைநாக ஹோஹி ஷ்ரமஹாரீ..

दोहा/सोरठा
ஹநூமாந தேஹி பரஸா கர புநி கீந்ஹ ப்ரநாம.
ராம காஜு கீந்ஹேஂ பிநு மோஹி கஹாபிஷ்ராம..1..

———-

6.1

चौपाई
யஹ லகு ஜலதி தரத கதி பாரா. அஸ ஸுநி புநி கஹ பவநகுமாரா..
ப்ரபு ப்ரதாப பட஀வாநல பாரீ. ஸோஷேஉ ப்ரதம பயோநிதி பாரீ..
தப ரிபு நாரீ ருதந ஜல தாரா. பரேஉ பஹோரி பயஉ தேஹிஂ காரா..
ஸுநி அதி உகுதி பவநஸுத கேரீ. ஹரஷே கபி ரகுபதி தந ஹேரீ..
ஜாமவஂத போலே தோஉ பாஈ. நல நீலஹி ஸப கதா ஸுநாஈ..
ராம ப்ரதாப ஸுமிரி மந மாஹீஂ. கரஹு ஸேது ப்ரயாஸ கசு நாஹீஂ..
போலி லிஏ கபி நிகர பஹோரீ. ஸகல ஸுநஹு பிநதீ கசு மோரீ..
ராம சரந பஂகஜ உர தரஹூ. கௌதுக ஏக பாலு கபி கரஹூ..
தாவஹு மர்கட பிகட பரூதா. ஆநஹு பிடப கிரிந்ஹ கே ஜூதா..
ஸுநி கபி பாலு சலே கரி ஹூஹா. ஜய ரகுபீர ப்ரதாப ஸமூஹா..

दोहा/सोरठा
அதி உதஂக கிரி பாதப லீலஹிஂ லேஹிஂ உடாஇ.
ஆநி தேஹிஂ நல நீலஹி ரசஹிஂ தே ஸேது பநாஇ..1..

———–

7.1

चौपाई
ரஹேஉ ஏக திந அவதி அதாரா. ஸமு஀த மந துக பயஉ அபாரா..
காரந கவந நாத நஹிஂ ஆயஉ. ஜாநி குடில கிதௌஂ மோஹி பிஸராயஉ..
அஹஹ தந்ய லசிமந பட஀பாகீ. ராம பதாரபிஂது அநுராகீ..
கபடீ குடில மோஹி ப்ரபு சீந்ஹா. தாதே நாத ஸஂக நஹிஂ லீந்ஹா..
ஜௌஂ கரநீ ஸமு஀ை ப்ரபு மோரீ. நஹிஂ நிஸ்தார கலப ஸத கோரீ..
ஜந அவகுந ப்ரபு மாந ந காஊ. தீந பஂது அதி மரிதுல ஸுபாஊ..
மோரி ஜியபரோஸ தரிட஀ ஸோஈ. மிலிஹஹிஂ ராம ஸகுந ஸுப ஹோஈ..
பீதேஂ அவதி ரஹஹி ஜௌஂ ப்ராநா. அதம கவந ஜக மோஹி ஸமாநா..

दोहा/सोरठा
ராம பிரஹ ஸாகர மஹபரத மகந மந ஹோத.
பிப்ர ரூப தரி பவந ஸுத ஆஇ கயஉ ஜநு போத..1க..
பைடி தேகி குஸாஸந ஜடா முகுட கரிஸ காத.
ராம ராம ரகுபதி ஜபத ஸ்த்ரவத நயந ஜலஜாத..1க..

சத் –ஆத்மா –ப்ரஹ்மம் போன்ற பொதுச்சொற்கள் போல் அன்றி புருஷோத்தமன் -பத பிரயோகம் வியக்தமாக நாராயணனையே காட்டும்
கீழ் -13 -ஆத்மா உடல் வேறுபாடுகளைத் தெளிவாக அருளிச் செய்து
அடுத்த -14-அத்யாயத்தில் ஆத்ம விசோதனம் பண்ணி அருளி – முக்குணங்களையும் தாண்டுவது பற்றியும் அருளிச் செய்து
இதில் – அசேதன சேதன விலக்ஷணமாய் -பிரேரிதனாய் -நியாமகனாய்-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணனான -இருக்கும் புருஷோத்தமனாப் பற்றி விரித்த்து அருளிச் செய்கிறான்

அபுருஷன் -புருஷன் -புருஷ தரன் -புருஷ தமன் -புருஷ உத்தமன் –
அசேதனம் -சேதனன்(அசின் மிஸ்ராத்) -முக்தன் (விஸூத்த)-நித்யன் -அமரர்கள் அதிபதி
ஐந்து விரல்கள் -கட்டை விரல் இயங்கினால் தான் மற்றவை இயங்கும் –

மூன்று ஹேதுக்கள் -எங்கும் அனைத்தையும் வியாபித்து இருப்பதாலும் -பரணாத் -தாங்குவதாலும் -ஸ்வாம்யாத்–யானே நீ என்னுடைமையும் நீயே –

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –

ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் -வியாபித்துத் தரித்து நியமிக்கும்

—————

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –

புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸம்ஸார விருக்ஷம் 1-2 –
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 –
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 –
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 –
ஜீவ தத்துவ விளக்கம் 7-9 –
ஞானக் கண் 10-11 –
பரமாத்மனது சொரூபம் 12-15 –
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

—————————–

அவதாரிகை
க்ஷேத்ர அத்யாய -13 அத்யாயத்துக்கு பெயர் சூட்டுகிறான் இங்கு
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞன் பூத பிரகிருதி புருஷன் ஸ்வரூபம் விதோய -நன்கு சோதித்து
விஸூத்தஸ்ய அபரிச்சின்ன ஞான ஏகாரஸ்ய புருஷஸ்ய பிரக்ருத குண சங்கம் பிரவாஹ நிமித்த
தேவாதி ஆகார பரிணாமய ப்ரக்ருதி சம்பந்தம்
அநாதி இது யுக்தம்
அநந்தரஸ்ய அத்யாயம் -14
கார்ய காரண உபய அவஸ்தை களிலும் குண சங்க மூல-
பகவத் ஏக க்ருத கர்மாதீனமாக இது யுக்தம்
குண பந்த விளக்கம் அருளிச் செய்து குண சங்க நிவ்ருத்தி பூர்வக ஆத்ம யாதாத்ம்ய அவாப்தி -கைவல்ய மோக்ஷம் அடைய
பகவத் பக்தி மூலம் இத் யுக்தம் மத் ஆராதனம் மூலமே என்று அருளிச் செய்து
இதானே
பகவத புருஷோத்தமன் வக்தும் ஆரம்ப
பஜனம் சொல்லி -பஜநீத்வ அவனைச் சொல்ல வந்து -இத்தைச் சொல்லும் முகத்தாலேயே தன்னிடம் ஈர்த்துக் கொள்ளப் பார்க்கிறான் –
ஷரம் அக்ஷரம் -இங்கு அழியக்கூடிய சரீரத்துடன் கூடிய பத்தாத்மா -இல்லாத முக்தாத்மா -விபூதி பூதாத் -புருஷர்கள் இருவரையும் சொல்லி
இவர்களைக் காட்டிலும் நிகில ஹேயபிரத்ய நீக -கல்யாண குண ஏக தானதயா
அத்யந்த உத்கர்ஷேண -அங்குஷ்ட மாத்ர புருஷ -அசித் பத்த முக்த நித்ய விலக்ஷணன் –
வி ஸஜாதீயத்ய -பகவத புருஷோத்தமஸ் யஞ்ச தன்மை சொல்ல வந்து
தத்ர தாவது -இப்பொழுது
அசங்க ரூப பற்றின்மை வடிவாக சத்ர சின்ன கோடரியால் வெட்டி வீழ்த்தப்படும் பந்தாம் அக்ஷரஸ்ய விபூதிம் வக்தும் -சொல்லத் தொடங்கி
சேத்ய ரூப பந்த ஆகாரேண விததம் அசித் பரிணாமம் விசேஷ அஸ்வத் வ்ருஷம் கல்பித்து எங்கும் பரந்து விரிந்து -அரச மரமாக சம்சாரம் உருவகம் –

உபநிஷத் சொல்லிய திருஷ்டாந்தமே இது

———————-

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வ மூல மத ஸாகம் அஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ் தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் -கண்ணன்-கூறுகிறான்
(யம்) அஶ்வத்த₂ம் – யாதொரு ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
ஊர்த்₄வமூலம் – மேலே வேர் உடையதாகவும்
அத₄:ஶாக₂ம் – கீழே பரவியுள்ள கிளைகளை யுடையதாகவும்
அவ்யயம் – (ப்ரவாஹ ரூபமாயிருக்கையால்) அழியாததாகவும்
யஸ்ய ச₂ந்தா₃ம்ஸி பர்ணாநி-வேத வாக்கியங்களை இலைகளாக யுடையதாகவும்
ப்ராஹு: – (வேத₃ங்கள்) கூறுகின்றனவோ
தம் – அந்த அரச மரத்தை
ய: வேத₃: – எவன் அறிகிறானோ
ஸ வேத₃வித் – அவனே வேதத்தை அறிந்தவனாவான்.

ஸ்ரீ பகவான் கூறுகிறான் -யாதொரு சம்சாரமாகிற அரச மரத்தை- மேலே வேர் உடையதாகவும் –
கீழே பரவியுள்ள கிளைகளை உடையதாகவும் -ப்ரவாஹ ரூபமாக அழியாததாகவும் -வேத வாக்கியங்கள் இலைகளாகவும்-
வேதங்கள் கூறுகின்றனவோ -அந்த அரச மரத்தை எவன் அறிகிறானோ
அவனே வேதத்தை அறிந்தவனாவான்

அஸ்வத்தம் நாளை இருக்காது -அவ்வளவு அநித்தியம் -இருந்தாலும் பிரவாஹமாக நித்யம் இந்த ஸ்லோகம் நைமித்திக ஸ்ருஷ்டியைப் பற்றியது-நான்முகன் வேர் என்பதால் அவன் செய்யும் நைமித்திக ஸ்ருஷ்ட்டி –பிரகிருதி நித்யம் ஆகவே வெட்டுவதாகச் சொல்ல முடியாது -அதன் கார்யமான சம்சாரத்தை சொன்னவாறு -பூர்வ பாகம் சம்சாரத்தை வளர்க்கும் அன்றோ -ஆதலால் வேதங்களை இலைகளாகச் சொல்லிற்று

காம்ய கர்மங்கள் சம்சாரத்தை வளர்ப்பதால் இந்த மரம் வெட்டத்தக்கதே தென்று காற்றால் மறைப்பதால் இலைகளே வேத வாக்கியங்கள்

ஓங்காரம் மரம் –ஏகாயான சாகை -மரம் சொல்ல வேண்டும் என்று ஆக்ஷேபங்கள் -அறிந்தவன் ஓங்கார பிரபாவோ வேதா -வேதம் அறிந்தவன் ஆகிறான் ஆனால் வெட்டி சம்சாரம் கடப்பது என்றது ஒவ்வாதே

வேதாந்தம் தானே சம்சாரம் கடக்க உபாயம் சொல்லும்-எதை வெட்டணும் மரம் காட்டும் -எப்படி வெட்டணும் வேதாந்தம் சொல்லும் –

பெரியதாய் -அழிவதாய் -வெட்டப்படுவதாய் -இருப்பதால் ஸம்ஸாரத்தை அஸ்வத்த மரமாக வேதமே சொல்லுமே-இருந்தாலும் அவ்யயம் -ப்ரவாஹ ரூபமாக நித்யம்

அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -கடோ உபநிஷத் —
ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்ய லோகம்
கீழே தேவாதி கிளைகள்

அஸ்வத்தம் -ஸ்வ ந ஸ்தாத்ததி –நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் –

வேத வாக்கியங்கள் –சந்தாம்ஸி காம்ய கர்மங்களையும் சொல்லும் -பற்று அற்ற தன்மையுடன் பகவத் ஆராதன ரூபமாகச் செய்தால் இத்தைத் தாண்டலாம் என்றும் சொல்லும்

சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி–மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன் -அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே –
மறை புரிய வைக்காமல் மயக்கும் – பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் – உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம்
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு
சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

——————

கீழே நைமித்திக ஸ்ருஷ்ட்டி -பிரமனே மூலம் படைக்கப்பட்டு -இதில் நித்தியமாக பிறந்தும் இறந்தும் உள்ளவை பற்றி-நித்ய ஸ்ருஷ்ட்டி பற்றி  -இந்த ஸ்லோகத்தால்
தஸ்ய (அந்த அரச மரத்தினுடைய வேறே சில கிளைகள் ) மநுஷ்யாதி ஷாகஸ்ய வரிக்ஷஸ்ய தத்தத் கர்ம கரிதா அபராஃ ச அதஃ ஷாகாஃ புநரபி மநுஷ்ய பஷ்வாதி ரூபேண ப்ரஸரிதாஃ பவந்தி? (கீழ் கிளைகள் மனுஷ்யாதி )ஊர்த்வஂ ச கந்தர்வ யஷ தேவாதி ரூபேண ப்ரஸரிதா பவந்தி(மேல் கிளைகள் தேவாதி ரூபம் ). தாஃ ச குண ப்ரவரித்தாஃ குணைஃ ஸத்த்வாதிபிஃ ப்ரவரித்தாஃ? (முக்குணங்களால் வளர்க்கப்பட்ட )விஷய ப்ரவாலாஃ ஷப்தாதி விஷய பல்லவாஃ.(தளிர்கள் )கதம் இதி அத்ர ஆஹ —

அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஸாகா–குண ப்ரவ்ருத்தா விஷய ப்ரவாலா–
அதஸ்ச மூலாந் யநு ஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்ய லோகே–৷৷15.2৷৷

தஸ்ய – அந்த அரச மரத்தினுடைய
ஶாகா₂: – (மேலும் சில) கிளைகள்–(தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்,)
கு₃ண ப்ரவ்ருத்₃தா₄— ஸத்வம் முதலான கு₃ணங்களால் வளர்கின்றவையாய்
விஷய ப்ரவாளா : – ஶப்₃த₃ம் முதலான விஷயங்களைத் தளிர்களாக யுடையவையாய்
அத₄ஶ்ச ஊர்த்₄வம் ச ப்ரஸ்ருதா: – கீழும் மேலும் பரவியுள்ளன (ஸம்ஸாரமாகிற அந்த அரச மரத்துக்கு)
அத₄: மநுஷ்ய  லோகே ச- கீழுள்ள மனிதிர்களின் உலகிலும்
கர்மாநுப₃ந்தீ₄நி – கர்மக் கட்டுக்களாகிற
மூலாநி – வேர்கள்(அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்,)
அநுஸந்ததாநி – (எல்லா உலகங்களிலும்) பரவியுள்ளன .

சப்தம் முதலான விஷயங்களைத் தளிர்களாக உடையவையாய் -கீழும் மேலும் பரவி யுள்ளன –
அந்த மரத்துக்கு கீழுள்ள மனிதர்களின் உலகிலும் கர்மக் கட்டுக்கள் ஆகிற வேர்கள் பரவி யுள்ளன –
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் –
முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்

நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் –
தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி -பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

————–

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர் ந ச ஸம் ப்ரதிஷ்டா–
அஸ்வத்தமேநம் ஸு விரூட மூல-மஸங்க ஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா–৷৷15.3৷৷

அஸ்ய ரூபம் –இந்த அரச மரத்துக்கு உருவம்
இஹ –இந்த மனுஷ்ய லோகத்தில் ஸம்ஸாரிகளாலே
ந ததோபலப்யதே–ததா ந உப லப்யதே -முன் சொல்லப்பட்ட படி அறியப் படுவது இல்லை
நாந்தோ ச -அந்த ச ந -அந்த மரத்தின் அழிவும் குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப் படுவது இல்லை
ந சாதிர் ச -ஆதி ச ந -இந்த மரத்தின் காரணமும் குணங்களில் பற்றே என்றும் அறியப் படுவது இல்லை
ஸம் ப்ரதிஷ்டா ச ந -இந்த அரசமரம் நிலை நிற்கும் ஆதாரமும் -அநாத்மனி ஆத்ம அபிமானம் போன்ற-அஞ்ஞானமே என்றும் அறியப் படுவது இல்லை
ஏநம் ஸுவிரூடமூலம் -முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான-ஸு வி ரூட மூலம்–ஸு-கெட்டியாக -வி-பலவிதமாக விவிதமாக –வாஸனை ருசி போன்றவை -பதிவுகள் கெட்டியாக ஊன்றி இருக்குமே -மாறி மாறி பல பிறவிகளில் பெற்ற பதிவுகள் -போக்குவது கஷ்டம் என்று அறிவிக்கவே இங்கு இத்தை அருளிச் செய்கிறான் 
அஸ்வத்தம் -ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
த்ருடேந-நல்ல அறிவைக் காரணமாக் கொண்டு இருக்கையாலே உறுதியாய் இருப்பதான
அஸங்க ஸஸ்த்ரேண -குண மய போகங்களில் பற்றின்மையாகிய ஆயுதத்தால்-அஸ்திரம் அம்பு போல்வன -சஸ்திரம் வாள் போல்வன –
சித்த்வா–வெட்டி

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல,
இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை,
ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக் களனும் புலப்படுவதில்லை,
ஸு விரூட மூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற் பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை,
த்ருடேந அஸங்க ஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மை யென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்து விட்டு.-

விவேக ஞானத்தால் வந்த பற்றின்மை திடமாக இருக்க வேண்டும் -நோய் அடியாக வைக்கும் பற்றின்மையானால் நோய் போனால் மீளுமே

தத பதம் தத் பரிமார்கிதவ்ய–யஸ்மிந் கதா ந நிவர்தந்தி பூய–
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவ்ருத்தி ப்ரஸ்ருதா புராணீ--৷৷15.4৷৷

தத: – அந்தப் பற்றின்மைக் காரணமாக
யஸ்மிந் க₃தா : –மறுபடியும் சம்சாரத்துக்குத் திரும்பி
பூ₄ய : ந நிவர்தந்தி தத் பத₃ம்- மறுபடியும் ஸம்ஸாரத்துக்குத் திரும்பி வருதல் இல்லாத அந்தப் ப்ராப்யம்
பரமார்கி₃தவ்யம் – தேடத் தக்கது
ஆத்₃ய ம் – அனைத்துக்கும் ஆதி₃யாய்
யதஸ் : புராணீ ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா – எவனிடமிருந்து அநாதி₃காலமாக கு₃ண மய விஷயங்களில் ஈடுபாடு (ஜீவர்களுக்குத்) தொடர்கின்றதோ
தம் புருஷம் ஏவ – அத் தகையவனான பரம புருஷனையே
ப்ரபத்₃யேத் – அஜ்ஞாநம் முதலோனவை நீங்குவதற்காக) ஶரணமடையக் கடவன்

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ,
தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான,
ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ,
தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

புராணீ-இதற்கு -பிரபத்யேத் -சரணம் அடையக் கடவன் என்றும் -அவனையே சரணம் அடைய வேண்டும் என்பதற்குப் பிரமாணம் முன்னோர் செயல்பாடே பிரமாணம் காட்டுகிறான் என்றும் கொள்ள வேண்டும்
இவனைப் பற்றியே மோக்ஷம் அடைய முமுஷுக்களால் செய்யப்பட்டவை –

இந்த அரச மரத்திற்கு முன் கூறப்பட்ட உருவம் இந்த மனுஷ்ய உலகத்தில் முன் கூறியபடி அறியப் படுவது இல்லை –
அதன் அழிவும் முன் கூறியபடி குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப்படுவது இல்லை
இந்த மரத்தின் காரணமும் அறியப்படுவது இல்லை -இது நிலை நிற்கும் ஆதாரமும் அறியப்படுவது இல்லை-முன் ஸ்லோகம் சொன்னபடி அறிகிறார்கள் அல்ல -குடும்ப மரம் -பிறந்தது அறிகிறோம் வெட்ட வேண்டும் என்றும் வெட்ட வழி இது என்றும் அறியாமல் -சம்சார உத்பத்தி வளர்க்கவே அறிந்து உள்ளார்கள் –
முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான சம்சாரமாகிற அரச மரத்தை
உறுதியாக இருப்பதான பற்றின்மையான ஆயுதத்தால் வெட்டி அந்தப் பற்றின்மை காரணமாக
மறுபடியும் சம்சாரத்துக்கு திரும்பி வருதல் இல்லாத அந்த ப்ராப்யம் தேடத் தக்கது
அனைத்துக்கும் ஆதியாய் -எவனிடம் இருந்து அநாதிகாலமாக குண மய விஷயங்களில் ஈடுபாடு
ஜீவர்களுக்குத் தொடர்கிறதோ அத்தகைய பரம புருஷனையே சரணம் அடையக் கடவன் –

தேஹாத்ம அபிமானம் மண் உரம் கொண்டு நிலையாக வளர்ந்து உள்ளதே -இத்தையும் அறிய வில்லை -அஞ்ஞானமே பிரதிஷ்டை -குண சங்கம் ஆதி பற்றின்மை வழி அறிய வேண்டுமே

இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை
தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால் -தண்ணீர் அற்று பட்டு போகுமே –
ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் – விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

பற்றின்மையையே கொண்டு ப்ராப்யம் தேடத்தக்கது-கதம் அநாதி கால ப்ரவரித்தோ குண மய போக ஸங்கஃ தந்மூலஂ ச விபரீத ஜ்ஞாநஂ நிவர்ததே இதி அத்ர ஆஹ –,அஜ்ஞாநாதி நிவரித்தயே –விபரீத ஞானம் அடியாக வந்த குண மய போக சங்கத்தை இரண்டையும் போக்க வேணுமே

அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று –
அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ
அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

குணப் பற்றுதல் எவன் இடம் இருந்து உருவாக்கி வெகு காலமான வந்ததோ அவனைப் பற்று
எவனைப் பற்றி அஞ்ஞானாதி செயல்கள் வருமோ அவனைப் பற்று என்றுமாம்

மோக்ஷம் அடைய செய்ய வேண்டிய முயற்சியை அடுத்த ஸ்லோகத்தால் விளக்குகிறான்

————-

நிர்மாந மோஹா ஜித ஸங்க தோஷா–அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா–
த்வந்த்வைர் விமுக்தா ஸுக துக்க ஸம்ஜ்ஞைர் கச்சந்த்ய மூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷

நிர்மாந மோஹா – தேஹ ஆத்ம அபிமானமாகிற மயக்கம் நீங்கப் பெற்றவர்களாய்
ஜித ஸங்க₃தோ₃ஷோ: – கு₃ண மயப் பொருள்களில் பற்றாகிற தோஷத்தை வென்றவர்களாய்
அத்₄யாத்ம நித்யா – ஆத்ம ஜ்ஞாநத்தில் எப்போதும் ஈடுபட்டவர்களாய்
வி நிவ்ருத்த காமா : – மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாய்
ஸுக₂ து₃:க₂ஸஞ்ஜ்ஞைர்: த்₃வந்த்₃வை – இன்ப துன்பங்களாகிய இரட்டை களிலிருந்து
விமுக்தோ: – விடுபட்டவர்களாய்
அமூடோ₄: – (தேஹ ₃ஆத்மாக்களைப் பற்றிய ) அனைத்து
மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
அவ்யயம் – ஜ்ஞாநத்தில் ஏற்றத் தாழ்வற்ற
தத் பத₃ம் – ஸ்வரூப ஆவிர்பா₄வம் பெற்ற ப்ரோப்ய
வஸ்துவான ஆத்மாவை
க₃ச்ச₂ந்தி – அடைகிறார்கள்

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்,
ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்,
அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்,
விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர்,
ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்,
அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

உடலே ஆத்மா என்ற மயக்கம் அற்றவர்களாயும் விஷயப்பற்று என்ற தோஷத்தை வென்றவர்களாயும் –
ஆத்ம ஞானத்திலேயே நிலை பெற்று இருப்பவர்களாயும் -ஆத்மா தவிர மற்றைய விஷயங்களில்
ஆசை அற்று இருப்பவர்களாயும்
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாயும் -அனைத்து மயக்கங்களும்
நீங்கப் பெற்றவர்களாயும் -ஞானத்தில் ஏற்றது தாழ்வு அற்ற ஆத்மாவை அடைகிறார்கள் –

முமுஷுக்கள் முயற்சி செய்ய வேண்டிய படிக்கட்டுகள்
1-அபிமானம் -மயக்கம் நீக்கி -மானம் என்கிற மோஹம் –
2-இதனால் ஜெயிக்கப்பட்ட குணமய தோஷங்கள் உடையவர்களாகி
3-இதனால் ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற ஈடு படி உடையவர்களாய்
4-இதனால் முழுவதாக ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் அற்றவர்களாய் -காம்பற தலை சிரைத்து -பற்று வேறே காமம் வேறே
5-இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய்
6-தேஹ ஆத்ம பிரமம் போல் அனைத்து மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய் -முழுவதும் ஆத்ம ஞானம் பெற்றதால் முக்குண மயக்கங்களில் இருந்து நீங்கப்பெற்றவர்களாய்
அந்த ஞான ஆவிர்பாவம் -ஞான சங்கோசமே இல்லாமல் -உயர்ந்த முக்த ஸ்வரூபம் அடைகிறார்கள்

பற்றினால் கிட்டும் பலன்கள் — -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி –
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்ம சிந்தனையில் ஈடுபடுவான் -ஆத்மாவில் நிலை பெற்று அத்தை தவிர இதர காமங்களை விட்டு
வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் -ஆத்ம ப்ராப்தியையே இங்கு சொல்கிறான் -பிரசித்தம் இல்லையே இத்தை தேடுகிறான்

———-

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக–
யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம--৷৷15.6৷৷

யத்₃ க₃த்வா – எதை அடைந்தபின்பு
ந நிவர்தந்தே – (அதை அடைந்தவர்கள் ஸம்ஸாரத்துகுத்) திரும்புவது இல்லையோ
தத் – அந்த ஜீவாத்ம ஜ்யோதியை
ஸூர்ய: ந பா₄ஸயதே — ஸூர்யன் ப்ரகாஶிக்கச் செய்வதில்லை
ஶஶாங்க : ந (பா₄ஸயதே ) – சந்திரனும் பிரகாசிக்க ச் செய்வதில்லை
பாவக : ந (பா₄ஸயதே ) – அக்₃நியும் பிரகாசிக்கச் செய்வதில்லை
தத் – அந்த
பரமம் தா₄ம – மேலான ஜ்யோதி
மம – என்னுடைமை யாகும். .

எதை அடைந்த பிறகு சம்சாரத்திற்குத் திரும்புவது இல்லையோ -அந்த ஜீவாத்மா ஜோதியை
ஸூர்யனும் சந்திரனும் பிரகாசிக்கச் செய்வது இல்லை -அக்னியும் பிரகாசிக்கச் செய்வது இல்லை –
அந்த மேலான ஜோதி என்னுடைமை யாகும் –

பரிசுத்தமான ஆத்மா -ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு –
ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான்
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் –
திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

என்னுடைய சரீர ரூபமான செல்வம் அப்ருதக் சித்த பரதந்தர்யமான ஆத்மா என்றவாறு

(ஜீவாத்மா என்னுடைய அம்சம் –அம்சாதிகாரணம் -நா நா வியாபாதேசாத் -வேறு பட்டதே என்றதை விட வேறு பட்டது -அம்சமே -பகுதியே –
நூல்கள் வேஷ்ட்டி -அம்சம் -விட்டுப் பிரியாத விசேஷணங்கள் -சேர்ந்த விஸிஷ்ட வஸ்து –
சித் -விஸிஷ்ட ப்ரஹ்மத்துக்கு அம்சம் –
பூர்வ பக்ஷிகள் பலர் சேர்ந்து அம்சமாக மாட்டார் –
பேத சுருதிகள் இல்லை சொல்லவே அபேத சுருதிகள் அத்வைதி -இருக்கு சொல்லி நிஷேதிக்க –
த்வைதி -அவனும் இவனும் வேறே வேறே சர்வாத்மானா பேதம் –
நாம் விஸிஷ்ட அத்வைதி -கூடி இருந்த ஒன்றே -அம்சமே -சரீர ரூபமான அம்சம் என்றால் இரண்டுக்கும் சேரும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு குற்றங்கள் சேராது –
அம்சம் -அவயவமே இல்லாத -ஜீவாத்மா அவயவங்கள் கொண்ட சரீரம் போல் -ப்ரஹ்மமும் -அவயவங்கள் தேவை இல்லையே
வேறே வேறே அறிந்து சரீரம் தொலைத்து மோக்ஷம் அடையவே -)

—————–

மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஸநாதந: – அநாதி₃ காலமாய் இருப்பவனாய்
மம அம்ஶ: ஏவ(ஸந்) – என் அம்ஶமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன்
ஜீவபூ₄த: – ( கர்மங்களால் சூழப்பட்ட) ப₃த்₃த₄ ஜீவனாயிருந்து கொண்டு
ஜீவலோகே – ப₃த்₃த₄ ஜீவர்கள் வாழும்லீலா
விபூ₄தியிலிருப்பவனாய்
ப்ரக்ருதிஸ்தா₂நி – ப்ரக்ருதியின் பரிணாமமான ஶரீரத்திலிருக்கும்
மந:ஷஷ்டா₂நி இந்த்₃ரியாணி- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஜ்ஞாந இந்த்₃ரியங்களையும் (இவற்தை நியமிக்கும் ஆறாவது இந்திரியமான மநஸ்ஸையும்)
கர்ஷதி – ( கர்மாநுகு₃ணமாகச்) செயல் புரியச் செய்கிறான்

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை –
என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

——————

ஸரீரம் யத வாப்நோதி யச்சாப் யுத் க்ராமதீஸ்வர–
க்ருஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர் கந்தா நிவாஸயாத்–৷৷15.8৷৷

ஈஶ்வர: – – இந்த்₃ரியங்களை நியமிப்பவனான ப₃த்₃த₄ஜீவன்
யத் ஶரீரம் அவாப்நோதி- (முன் ஶரீரத்தை விட்டபின்)யாதொரு ஶரீரத்தை அடைகிறானோ (அந்த ஶரீரத்திற்கு)
யச்ச அபி உத்க்ராமதி – எந்த ஶரீரத்திலிருந்து கிளம்புகிறானோ (அந்த ஶரீரத்திலிருந்து)
வாயு: – காற்றானது
ஆஶயாத் – (மலர் முதலான மணமுடைய) பொருள் களிலிருந்து
க₃ந்தா₄ந் – மணம்மிக் சிறு துகள்களை
இவ – (எடுத்துச்செல்வது) போல்
ஏதாநி – இந்த இந்த்₃ரியங்களை
க்₃ருஹீத்வா – (கிளம்பும் ஶரீரத்திலிருந்து) எடுத்துக் கொண்டு
ஸம்யாதி – (அடையும் ஶரீரத்துக்குச்) செல்கிறான்

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல,
ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும்,
யத் உத்க்ராமதி – எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ,
ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு,
யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

இந்திரியங்களை நியமிப்பவன் -பத்த ஜீவன் முன் உடலை விட்ட பிறகு யாதொரு உடலை அடைகிறானோ –
அந்த உடலிற்கு -எந்த உடலில் இருந்து புறப்படுகிறானோ அந்த உடலில் இருந்து காற்றானது
மலர் முதலிய மணமுடைய பொருள்களில் இருந்து மணம் மிக்க சிறு துகள்களை எடுத்துச் செல்வது போலே
இந்த இந்திரியங்களை எடுத்துச் செல்கிறான் –

அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே –
காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

————–

காநி புநஃ தாநி இந்த்ரியாணி இத்யாஹ

ஸ்ரோத்ரம் சக்ஷுஸ் ஸ்பர்ஸ்நம் ச ரஸநம் க்ராணமேவ ச–
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுப ஸேவதே--৷৷15.9৷৷

அயம் – இந்த ஜீவன்
ஶ்தோத்ரம் – செவி
சக்ஷுஸ் : – கண்
ஸ்பர்ஶநம் ச –மெய்
ரஸநம் – நா
க்₄ராணம் ஏவ ச – மூக்கு என்னும் இந்த ஐந்து
இந்த்₃ரியங்களையும்
மநஸ் : ச – (இவற்தை நியமிக்கும்) மனத்தையும்
அதி₄ஷ்டா₂ய – தத்தமக்குரிய ஶப்₃த₃ம் முதைான
விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
விஷயாந் – அந்தந்த விஷயங்களை
உப ஸேவதே – அநுப₄விக்கிறேன்

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷ: ச-கேட்டல், காண்டல்,
ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்,
அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு,
விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

இந்த ஜீவன் -காது கண் மெய் நாக்கு மனஸ் என்ற ஆறு இந்த்ரியங்களையும் -இவற்றை நியமிக்கும்
மனத்தையும் தம் தமக்கு உரிய சப்தம் முதலிய விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
அந்த அந்த விஷயங்களை அனுபவிக்கிறான்
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு –
அறியாமல் அனுபவிக்கிறான்

———————–

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாந சக்ஷுஸ–৷৷15.10৷৷

உத்க்ராமந்தம் = வெளியே வெளியே செல்லும் போது
ஸ்திதம் =நிலை பெற்றவன்
வ = அல்லது
அபி = அது அன்றியும்
புஞ்ஜாநம் = அனுபவிப்பவன்
வ = அல்லது
குணாந்விதம் = குணங்களை கொண்டவன் , குணங்களை ஆள்பவன்
விமூடா = மூடர்கள்
ந = இல்லை
அநுபஸ்யந்தி = காண்பது
பஸ்யந்தி = காண்கிறார்கள்
ஜ்ஞாந = ஞான
சக்ஷுஷ= திருஷ்டி உள்ளவர்கள் |

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும்,
ஸ்திதம் வா-நிற்கையிலும்,
புஞ்ஜாநம் வா – உண்ணுகையிலும்,
குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்,
விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை,
ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

முன் கூறியபடி குண மயமான சரீரத்தோடு சேர்ந்து இருப்பவனாய் -ஒரு சரீரத்தில் இருந்து புறப்படுபவனாய் –
அல்லது வேறு ஒரு சரீரத்தில் இருப்பவனாய் -அல்லது குண மய விஷயங்களை அனுபவிப்பவனாய்
இருக்கும் ஜீவனை -தேகமே ஆத்மா என்று மயங்கியவர்கள் தேஹத்தைக் காட்டிலும்
வேறுபட்டவனாகக் காண்பது இல்லை –
அறிவுக் கண்களை யுடையவர்களே தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாகக் காண்கிறார்கள்

ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக –
ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

——————–

யதந்தோ யோகி நஸ்சைநம் பஸ்யந்த் யாத்மந்ய வஸ்திதம்–
யதந்தோப்ய க்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்ய சேதஸ–৷৷15.11৷৷

யதந்தோ = முயற்சிப்பவர்கள்
யோகிந = யோகிகள்
ச = மேலும்
எனம் = அவர்கள்
பஸ்யந்த்தி = காண்கிறார்கள்
ஆத்மானி = தங்களுக்குள்
அவஸ்திதம் = இருக்கும் , நிலை பெற்று இருக்கும்
யதந்தோ = முயற்சி செய்பவர்கள்
அக்ருதாத்மாநோ = தயாராக இல்லாதவர்கள் ,
ந = இல்லை
எனம் = அவனை
பஸ்யந்த் = காண்பது
அசேதஸ: = நினைவு இல்லாதவர்கள், ஸ்மரணை இல்லாதவர்கள்,

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள்,
ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்,
ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்,
அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

என்னைச் சரணம் அடைவதை முன்னிட்டுக் கொண்டு கர்மயோகம் முதலான முயற்சிகளைச் செய்யும்
யோகிகள் தம் உடலில் இருக்கும் இந்த ஜீவாத்மாவை யோகம் ஆகிய கண்களால் பார்க்கிறார்கள் –
என்னைச் சரணம் அடையாமல் முயற்சி செய்த போதிலும் மனத்தில் பரிசுத்தி விளையாதவர்களாய் –
அது காரணமாகவே ஆத்மாவைக் காணவல்ல நெஞ்சு இல்லாதவர்கள்
ஆத்மாவை உள்ளபடி காண்பது இல்லை –

என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் –
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் —
கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

——————

மூன்று ஸ்லோகங்களால் பிராகிருத பதார்த்தங்களாகும் என்னதே -அனைத்தையும் புகுந்து நியமித்து வியாபித்து தாங்கி -எனது சொத்துக்கள் தான் ஆகையாலே நானே புருஷோத்தமன் என்று சொல்வதற்கு பீடிகை
ஏவஂ ரவி சந்த்ர அக்நீநாம் இந்த்ரிய ஸந் நிகர்ஷ விரோதி ஸஂதமஸ நிரஸந முகேந இந்த்ரிய அநு க்ராஹக தயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாந ஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத் விபூதிஃ இதி உக்தம் -‘தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவ லோகே ஜீவ பூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.–இதாநீம் அசித் பரிணாம விஷேஷ பூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத் விபூதிஃ இத்யாஹ —

யதாதித்ய கதம்- தேஜோ ஜகத் பாஸயதேகிலம்–
யச் சந்த்ரமஸி யச் சாக்நௌ தத் தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷

யதா = எது
ஆதித்யகதம் = சூரியனில் இருந்து
தேஜோ = ஒளிர்கிறதோ
ஜகத் = உலகம் அனைத்தும்
பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ
அகிலம் = உலகம் அனைத்தையும்
யத் = எது
சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்
யத் = எது
ச = மேலும்
அக்நௌ = அக்கினியில்
தத் = அது
தேஜோ = தேஜோ மயமாக
வித்தி = அறிந்து கொள்
மாம் அகம் = என்னுடையது என்று

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி,
அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ,
ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும்,
யத் அக்நௌ ச – தீயிலுள்ளதும்,
தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

ஆதித்யன் இடம் இருக்கும் யாதொரு தேஜஸ்ஸூ சந்திரனிடம் உள்ள எந்த தேஜஸ்ஸூம் –
அக்னியில் உள்ள எந்த தேஜஸ்ஸூம் உலகு அனைத்தையும் ஒளி விடச் செய்கிறதோ –
அந்த தேஜஸ்ஸை என்னுடையதாக அறிவாயாக

இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் –
இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

ஒரு பொருளின் தன்மை மற்ற பொருளில் இருந்தால் இரண்டுமே ஓன்று அத்வைதி -ஸ்ருஷ்டிக்கப்படும் ஆதித்யனும் ஸ்ருஷ்டித்த ப்ரஹ்மமும் ஒன்றாகாதே

என்னை ஆராதித்து -திருப்தி அடைந்த நான் ஒளி கொடுத்துள்ளேன் -எனது திரு மேனியில் ஒரு பகுதி என்றவாறு-ப்ரதாதா பிரதாத்ரு பாவம்

வேத நான்காய் -ப்ரதிபாத்ய ப்ரதிபாத்யம் பாவம் என்றும் ப்ரதாதா பிரதாத்ரு பாவம் என்றும்

—————

ச பூத தாரிண்யா தாரகத்வ ஷக்திஃ மதீயா இத்யாஹ —

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம் யஹ மோஜஸா–
புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷

கம் = பூமியில்
அவிஸ்ய = நுழைந்து
ச = மேலும்
பூதாநி = உயிர்களைத்
தாரயாமி = தாங்குகிறேன்
அஹம் = நான்
ஒஜஸா = சக்தியால்
புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்
ச = மேலும்
ஔஷதீ: = மருந்தாக
ஸர்வா: = அனைத்து
ஸோமோ = சாறாக, அமிர்தமாக
பூத்வா = ஆனபின்
ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து,
ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்,
ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி,
ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

நான் பூமியினுள் புகுந்து என்னுடைய தடங்கல் அற்ற சக்தியினால் எல்லாப் பொருள்களையும் தரிக்கிறேன்
அமுத ரஸ வடிவமான சந்த்ரனாக ஆகி எல்லாப் பயிர்களையும் போஷிக்கிறேன்
பூமியை அடைந்து -தரித்து -திறல்- அம்ருத ரசம் சந்திரனாக இருந்து போஷிக்கிறேன்
அனைத்து சக்திகளும் என்னது –

ஆகாசத்தையும் த்ருடமாக தரிக்கிறேன்-ஸங்கல்ப சக்தியாலேயே தடங்கல் அற்ற தரிக்கும் தன்மை யுண்டே –வேதம் ஸ்வத ப்ரமாணிகத்வம் உண்டு போல் ப்ரஹ்மம் தனது மஹிமையாலே தானே தனக்கு தாரகம் -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்

———————-

அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித–
ப்ராணாபாந ஸமாயுக்த பசாம் யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷

அஹம் =நான்
வைஸ்வாநரோ = அனைத்து உயிர்களிலும்
பூத்வா = சேர்ந்து
ப்ராணிநாம் = உயிர் வாழ்வனவற்றில்
தேஹம் = உடல்
அஸ்ரித: = அடைந்த பின்
ப்ராணா = பிராண
அபாந = அபான
ஸமாயுக்த: = சமமாக சேர்த்தபின்
பசாம் = சமைக்கிறேன்
அன்னம் = உணவை
சதுர் விதம் = நான்கு விதமாக

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்,
ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி,
வைஸ்வாநர: பூவா – வைசுவாநரன் என்கிற அக்னியாகி,
சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

நான் வைச்வானரன் என்ற அக்னியாக ஆகி எல்லா ஜீவர்களின் உடலில் இருப்பவனாய் –
கடித்தும் உறிஞ்சியும் நக்கியும் குடித்தும் உண்ணப்படும் நான்கு வகைப்பட்ட உணவுகளை
பிராணன் அபானன் என்ற காற்றுக்களுடன் சேர்ந்து ஜீரணிக்கச் செய்கிறேன்
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு –
நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு –
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ப்ரஹ்ம ஸூத்ரம் 2-4 பஞ்ச வ்ருத்த மனஸ் ஐந்து -சித்தம் -இத்யாதி ஐந்து நிலைகள் உண்டே
பிரகர்ஷேண பாஹுர் ஆயுத பிராண -வெளி விடும் காற்று
அதோ நய அபான -கீழ் விடும் காற்று -ஸர்வத்ர ஆநயததி சமானம் நடுப்பகுதி நாபி மண்டலம்
ஊர்த்தம் கமநம் உதாந கண்டத்தில் -விநயதி விசேஷண பிரஜ்ஜை இருப்பதைக்காட்ட – வ்யான

—————

அத்ர பரம புருஷ விபூதி பூதௌ ஸோம வைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத் ஸாமாநாதி கரண்யேந நிர்திஷ்டௌ.– தயோஃ ச ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச பரம புருஷ ஸாமாநாதி கரண்ய நிர்தேஷே ஹேதும் ஆஹ –காரணத்தை இதில் விளக்குகிறார் –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே —
கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே -வேறு வேறு பிரயோஜனத்துக்காக
வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா
ஸ்ம்ருதியும் – ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் –
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறியப் படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது
வேதம் எத்தை சொல்லப் போனாலும் -இவனது சரீரமே
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

ஏவ -சர்வை வேத ஏவ -வேதத்தாலேயே சொல்லப்படுகிறேன் -ப்ரத்யக்ஷம் அனுமானம் காட்டாது
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைர் ஏவ சொல்லியே தீரும் மூன்றாவது
வேதைர் ஏவ அஹம் ஏவ –தேவாதாந்த்ரங்களைச் சொல்வதும் என்னையே -ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் அதி கச்சதி-பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -திட ப்ராமண சித்தன் -ஊற்றம் யுடையாய் –

ப்ரஹ்மம் வேதம் அறிந்தவனே -அயோக விவச்சேதம் -ராமன் வில்லாளியே -ப்ரஹ்மம் ஜகாத் காரணமே
ராமனே வில்லாளி -அந்நிய யோக விவச்சேதம் -ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ப்ரஹ்மமே இவனே வேதம் அறிந்தவன் -முன் ஓதிய பட்டன் –

உள்ளத்தே உறையும் மால்-அடியேன் உள்ளான் -அவையுள் தனி முதல் –

ப்ரத்யபிஜ்ஜை வேறே -ப்ரத்யக்ஷம் சேர வேண்டும் -அதே வஸ்து இங்கு இருக்க அனுபவிப்பது -இங்கு அனுபவ மாத்திரம் -ஸ்ம்ருதி வேறே இத்தை விளக்குகிறார்

அபோஹம் -ஊஹம் -பிரமாணம் செயல்பாட்டுக்கு சக்தி -ஸாமக்ரியால் பிறக்கும் -பிரமாணம் ஸ்தாபிக்க உதவும் மூன்றும்
கண்ணால் தூணை க்ரஹிக்கும் சக்தி உடையது என்னும் ஞானம் ஊஹம் -தூண் 12 ஆதி உயரம் வர்ணம் இத்துடன் சேர்ந்தா இல்லையா –
வெளிச்சம் இருந்தால் தான் க்ரஹிக்கும் -ஸாமக்ரியை
முதலில் தூண் மட்டுமா தன்மைகளையும் சேர்த்தா -தன்மைகளை விட்டுப் பிரியாத தூணை கிரஹிப்பதால் சேர்த்தே க்ரஹிக்கும் -மூன்றும்
இந்த ஊகம் ஞானமும் நானே என்றுமாம்

சர்வ தேவதா அந்தர்யாமி -சர்வ ஆராதானமும் எனக்கு -பலம் தருமவனும் நானே -வேதாந்தம் -வேத பலன் என்றே இங்கு-செய்ய கமலக்கண்ணன் -செய்கைப் பயன் உண்பேனும் யானே அனைத்தும் தானே

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 

கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*

மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

—————–

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்
ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

ஷர புருஷன் எல்லா பத்த ஜீவனுமாவான் -அக்ஷர புருஷன் அசித் சம்பந்தம் அற்ற முக்தாத்மா எனப்படுகிறான் –
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா -அஷரன் -முக்தாத்மா –
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

கூடஸ்தர் -பத யோகத்தால் அர்த்தம்-யவ்கிக அர்த்தம் மூலம் முக்தாத்மாவைச் சொல்லி – -ரூடி அர்த்தம் ப்ரஸித்த அர்த்தம் இல்லை -விகாரம் இல்லா கொல்லம்பட்டரை இரும்பு-இங்கு பல பிரிவுகளுக்கு பொதுவாக இருப்பவன் -முக்தாத்மா-அசித் சம்சர்க்கம் இல்லாமை ஏக வசனம் ஒருமையில் கூடஸ்தர்

—————–

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

உத்தமமான புருஷன் -புருஷோத்தமன் -புருஷன் ஆகிய உத்தமன் -தத் புருஷ ஸமாஸம் -புருஷர்களுக்குள் உத்தமன் -என்றே கொள்ள வேண்டும்

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் -என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நிய மானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

எவன் ஒருவன் அசித் பக்த ஜீவன் முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும் வியாபித்து –
அவற்றைத் தாங்குகிறானோ -அவன் அழிவற்றவனாய் -அனைத்தையும் நியமிப்பவனாய் –
பரமாத்மா என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுபவனாய் –
இக்காரணங்களால் மிக மிக மேலான புருஷனாய் இருப்பவன் -முற்கூறிய
ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் –
சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் –
மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும்

ஆவிஷ்ய-உள்ளும் புறமும் வியாபித்து – பிபர்த்தி -தாங்கும்
அவ்யயம் -அழிவற்ற -ஈஸ்வரன் -நியமிப்பவன் -நான்கும் சொல்லி
தத்வ த்ரயமும் அழிவற்றவையே தான் -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாதவன் -என்றவாறு –

முக்தாத்மா-முன்னால் இருந்த அசித் சம்பந்தம் -இருந்ததே இவை வ்யயம் –நித்யர் போல் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் அவ்யயம்

பதி சேஷி ஸ்வாமி வியாபகம் நியாந்தா -ஸ்வாமித்வம் முக்யம் -த்வயம் பூர்வ உத்தர வாக்கியசத்தில் இது உண்டே -கைங்கர்யம் ஏற்றுக்கொள்ள –
இவை எல்லாம் தனது பொருட்டாகவே செய்கிறான் -அமலன் நிமலன் விமலன் நின்மலன்-படர்க்கையாகவே சொல்லிக் கொள்கிறான்-ஸர்வஸ்வ ஸ அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -போல் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டானே -நாராயணனே-சங்கரரும் பாஷ்யத்தில்

————-

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ

புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு-யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும்

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும்-

—————–

யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷

யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

பாரத:-பாரதா!
ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை,
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி – இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ,
ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்,
மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

பரத குலத்தில் பிறந்தவனே -எவன் ஒருவன் இம்மாதிரியாக-ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்
பல காரணங்களால் சிறப்புற்றவனாக -என்னை கலக்கமில்லாமல் அறிகிறானோ –
அவன் என்னை அடைவதற்கு உரிய வழி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் —
என்னை -என்னை அடையும் வழியான-பக்தி பிரகாரங்கள் அனைத்தாலும் பக்தி செய்தவன் ஆகிறான்
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று –
அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் —
அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது –
இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
புருஷோத்தம வித்யை அறிந்தவன் -தெரிவதால்- அடைகிறேன் என்றபடி

ஸர்வ பாவம் என்றது சர்வ கிரியைகளாலும் – ஸர்வம் வாஸூ தேவம் இருப்பவர் வேறே -இங்கு உபாசன பிரகாரம் -அஹங்கார மிஸ்ரம்

———-

இதி ஏதத் புருஷோத்தமத்வ வேதநஂ பூஜயதி.-இந்த ஞானத்தை புகழ்கிறான்

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –

குற்றம் அற்றவனே -பரத குலத்தில் உதித்தவனே -இவ்வண்ணமாக இப்புருஷோத்தம வித்யையாகிற
பரம ரஹஸ்யமான சாஸ்திரம் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது –
இத்தை அறிந்தவன் என்னை அடைவதற்கு வேண்டிய அறிவு அனைத்தையும் பெற்றவன் ஆகிறான் –
அதற்குச் செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்தவன் ஆகிறான்-செய்த வேள்வியர் ஆவாய் –
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை –
இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து –செய்த வேள்வியர் –
பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —
ரஹஸ்யமாக வைத்துக் கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

முதலில் -அஸ்வத மரம்
அடுத்து -கீழ் மேல் கிளைகள்
மரக்கிளை வெட்ட பற்றின்மை-கோடரி – -முக்குணம் கடக்க வேண்டும் –
அஞ்ஞானம் நிவ்ருத்திக்கு சரணம் அடைந்து
அப்படி சரணம் அடைந்தவர் பெருமை
முக்தாத்மாவின் பெருமை
ஏழாவது -அனைத்து தேஜஸ் எல்லாம் என்னதே
எட்டாவது -சரீரம் போகும் பொழுது புலன்கள் பூத ஸூஷ்மங்களைக் கொண்டே செல்கிறான்
விஷம் கலந்த தேன்போல் இந்திரிய சுகம்
ஆத்ம அபஹாரி பெரிய கள்வன் -வேறுபட்ட ஆத்மா அறியாமல்
முயல்வார் -சரண் அடைந்தே பலம்
12-15- ஆதித்ய தேஜஸ் -பூமி தரிப்பதும் சந்திரன் அம்ருதமும் நானே -நானே அக்னி -புகுந்து நியமிக்கிறேன்
16-20-புருஷோத்த வித்யை விளக்கி மஹாத்ம்யம் சொல்லி நிகமிக்கிறான்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading