ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–5-10–பிறந்த வாறும் வளர்ந்த வாறும்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்த்யே சௌரே அர்ச்சாஞ்ச மௌன நியதாம்
அபஹாய ஆலாப யோக்ய விபவே புனர் ஆகத சௌ
சித்தச்ச தஸ்ய தத் குண கண ஸ்மரணே நிஜச்ச்ய
சைதில்ய விக்னம் சமனம் தம் மயானத்த அயாசதே-

அந்த்யே -கடைசி பதிகத்தில்
சௌரே அர்ச்சாஞ்ச மௌன நியதாம் –அர்ச்சைக்கு உள்ள நியமம் -கீழே மூன்றிலும் சரணாகதி -அர்ச்சையில்-
சத்ய சங்கல்பனின் சங்கல்பம் குலைக்ககே கூடாதே -இதனாலே தானே விபவத்துக்குப் போனார் –
அபஹாய -அறிந்து -விட்டு
ஆலாப யோக்ய விபவே -விபவம் தானே யோக்யம்
புனர் ஆகத சௌ-கீழே படி விபவத்திலே இழிகிறார்-பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் என்று போனவர் திரும்பி
சித்தச்ச தஸ்ய தத் குண கண ஸ்மரணே நிஜச்ச்ய-குணக் கூட்டங்களை நினைத்து
சைதில்ய விக்னம் சமனம் தம் மயானத்த அயாசதே-சிதிலம் போக்க பிரார்த்தனை –
அதே விபவ பெருமாள் இடம் சரணாகதி
கீழே கிருபை குணம் பார்த்தோம்
சக்தி பத பரதத்வம் -பதிகத்துக்கு குணம் -ஸூ அனுபவ யோக்யதைக்கு சக்தி பதத்தை அருளுவார் –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ப்ராதுர் பாவாதி வ்ருத்தை ரிஷப கண கமணாத் பூதனாதி நிரசனம்
மோஹார்த்தம் பவ்த்யா க்ருதியை கிரி வர பஜன ஸூவீக்ருதே
ஸ்தான பேதைகை தேஜஸ் த்வாந்தாதி பாவாத்
ஜல நிதி சயநாத் பிஷணாத் த்ரிபாதம் பீயூஷம் ஸ்பர்சநீயாத்

1-ப்ராதுர் பாவாதி வ்ருத்தை–பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்-சரித்திரங்கள் -ஆஸ்ரித ரக்ஷணார்த்தம்-

2-ரிஷப கண கமணாத்-வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்-

3-பூதனாதி நிரசனம்–ஆதி -சகடாசுர பங்கம் -நவநீத சோரம்–
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே

4–மோஹார்த்தம் பவ்த்யா க்ருதியை–கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்–கிருத்ரிம வியாபாரம்

5-கிரி வர பஜன ஸூவீக்ருதே–உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-
கிரி ராஜ் -தானே ஸ்வீகரித்து -அஹம் கோவர்த்தனோஸ்மி –
அஹம் ஹி ஸர்வ யாஜ்ஜானாம் போக்தா பிரபு-

6-ஸ்தான பேதைகை—-நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்–பேதங்கள் பலவும் பார்த்தோம்

7-தேஜஸ் த்வாந்தாதி பாவாத்—-ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன—ஆஸ்ரிதர் மெய்யனாய் அநாச்ரிதற்கு பொய்யனாய் இருக்கையால்

8–ஜல நிதி சயநாத் —-திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–ஏகார்ணவம் சயனம்–

9-பிஷணாத் த்ரிபாதம்–அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-

10-பீயூஷம் ஸ்பர்சநீயாத்–கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்-

எம்பெருமான் ஆஸ்ரித ஹிருதயம் சிதிலை யாக்கி நிற்கிறான்–

———-

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

1-இத்தம் காருண்யா நிக்னம் –காருண்யா கடல் -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -காருண்யம்-

2-துரித ஹர ஜனம் –பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் -நலியும் நரகமும் நைந்த –

3-பிரேம தீவ்ரம் துகானாம்–மாசறு சோதி பிரேமத்தால் தூண்டப்பட்டு-

4-லோகாநாம் ரஷிதாரம் –காகுத்தன் வாரானால் இத்யாதி–

5-ஸ்மருதி விஷயம் –உருவ வெளிப்பாடு -ஐந்தாம் பதிகம்-

6-அஹம் பாவனா கோசாரம் ச–யானே என்னும் -சரீராத்மா பாவம்

7-தீனானாம் சச்சரண்யாம் –நோற்ற நோன்பிலேன் –ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழி ந்தாய்-

8-ஸ்வ ரஸ க்ருத –ஆராவமுது –

9-நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே–சென்று கிட்ட ஆசைப்பட்டு போக முடியாமல் கதறினார்

10-பிராப்தம் சக்தி ப்ரதம் –பிறந்த வாறும் வளர்ந்த வாறும்–இத்யாதி

ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும்–காருணிகத்வம்-ஐந்தாம் பத்தில் -பேர் அருள் கண்ணா -மா முனிகள்
பரத்வம் காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் -முதல் நான்கும் பரத்ப பரம்
பரம சுலபம் ஐந்தாம் பத்து -கருணா சாகரம் அன்றோ இவன் —

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

1-தயா நிக்நம் –தயா ஊற்று அவன்

2-பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்

3-பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

1-இத்தம் காருண்யா நிக்னம் –காருண்யா கடல் -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -காருண்யம்-

2-துரித ஹர ஜனம் –பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் -நலியும் நரகமும் நைந்த –

3-பிரேம தீவ்ரம் துகானாம்–மாசறு சோதி பிரேமத்தால் தூண்டப்பட்டு-

4-லோகாநாம் ரஷிதாரம் –காகுத்தன் வாரானால் இத்யாதி–

5-ஸ்மருதி விஷயம் –உருவ வெளிப்பாடு -ஐந்தாம் பதிகம்-

6-அஹம் பாவனா கோசாரம் ச–யானே என்னும் -சரீராத்மா பாவம்

7-தீனானாம் சச்சரண்யாம் –நோற்ற நோன்பிலேன் –ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழி ந்தாய்-

8-ஸ்வ ரஸ க்ருத –ஆராவமுது –

9-நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே–சென்று கிட்ட ஆசைப்பட்டு போக முடியாமல் கதறினார்

10-பிராப்தம் சக்தி ப்ரதம் –பிறந்த வாறும் வளர்ந்த வாறும்–இத்யாதி

ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும்–காருணிகத்வம்-ஐந்தாம் பத்தில் -பேர் அருள் கண்ணா -மா முனிகள்
பரத்வம் காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் -முதல் நான்கும் பரத்ப பரம்
பரம சுலபம் ஐந்தாம் பத்து -கருணா சாகரம் அன்றோ இவன் —

————————————

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

———

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

————

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

————–

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

————-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

———

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6-

——————-

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

————

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8-

——————

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

—————-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

——–

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -50-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
அவதார சேஷ்டிதங்களை தரித்து நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும்
என்று பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே
ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து
அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும்
நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் –
ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து
அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில்
அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க
நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று
சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை
பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

இந்த பத்து திருவாய் மொழிகளுக்கும் பேர் அருள் தானே குணம் –

—————————————————————

வியாக்யானம்–

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்
மற்றும் —
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புரம்புக்க வாறும் -என்றும்
சீரால் பிறந்து சிறப்பால் வளராதே அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அடியை மூன்றை இரந்த வாறும் –
அம்ருத மதன அர்த்தமாக ஆவிர்பவித்து கூடி நீரைக் கடைந்த வாறும் –என்று இப்படி
பூ பார நிர்ஹரண அர்த்தமாகவும்-திரிபுர தஹன அர்த்தமாகவும்-த்ரைலோக்ய அபஹரண அர்த்தமாகவும்
அம்ருத மதன அர்த்தமாகவும் திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணாவானனான ஸ்ரீ கிருஷ்ணனே
கீழே -நல்லருள் நம்பெருமான் -என்றார் இறே அப்படியே-நிரவதிக தயாவானவன் –

உன் சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து –
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
அதாவது –
பிறந்தவாறு -என்று தொடங்கி -நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்றன -என்றும்
என்னை யுன் செய்கை நைவிக்கும் -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-என்றும்
வெள்ள நீர் சடையானும் -என்று தொடங்கி -என்னுயிரை உருக்கி உண்ணுமே -என்றும்
உண்ண வானவர் கோனுக்கு -என்று தொடங்கி –என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கு நின்றே -என்றும்
திஷ்டந்தம் – ஆஸிநம் – பிரதிசிஸ்யே -என்னும்படி நின்றவாறு -இத்யாதி
எங்கனம் மறந்து வாழ்கேன் என் செய்வேன் உலகத்தீரே -இத விஷயத்தில் நம்மைத் தானே கேட்க வேணும் –

நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் -என்றும்
ஒண் சுடரோடு -என்று தொடங்கி -எண் கொள் சிந்தையுள் நைக்கின்றேன் -என்றும்
திருவுருவு கிடந்த வாறும் -என்று தொடங்கி — என் நெஞ்சம் நின்று நெக்கருவி சோறும் கண்ணீர் -என்றும்
அடியை மூன்றை இரந்த வாறும் -என்று தொடங்கி –
என் நெஞ்சம் நின்றனக்கே கரைந்து உகும் -என்றும்
கூடி நீரைக் கடைந்த வாறும் -என்று தொடங்கி -ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்றன-என்றும்
சொல்லப் படுகிற இவை நிவ்ருத்தமாய்

உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைப் பெய்வனே -என்றும்
பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் -என்றும்
என் செய்கேன் அடியேனே -என்றும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-என்று
தரித்து நின்று உன்னை அனுபவிக்கப் பெறுவேன் -என்றவை என்கை –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய –

வாய்ந்த பதத்தே –
பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –

மனமே வைகு –
மனசே தங்கிப் போரு-

அவருக்கு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே
உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading