ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-9–நண்ணாதார் முறுவலிப்ப–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோசன் முனி ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன்
லோகம் விலோக்ய விபரீத ருசிம் விஷண்ண
அத்ரத்ர வாஸம் அசஹன் ஹரிணா ஸூ வாஸம்
வைகுண்டம் பிரகடனம் நவமே ததர்ச

முனி சோசன் -சோகித்தார்
ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன் -தன்னோடு ஒத்த -சம்சாரிகள் நடுவில் தேட
லோகம் விலோக்ய -லோகத்தில் பார்க்க
விபரீத ருசிம் விஷண்ண -விபரீதமாகவே ருசி -விஷயாந்தர ருசி கண்டு -மிக்க சோகித்தார்
அத்ரத்ர வாஸம் அசஹன் -இந்த லீலா விபூதியில் இருப்பதை சகிக்க முடியாமல்
ஹரிணா ஸூ வாஸம் -தான் எப்பொழுதும் இருக்கும் நித்ய விபூதி -ஹரியாலே
வைகுண்டம் பிரகடனம் -ஸ்ரீ வைகுண்ட சாம்ராஜ்யம் பிரகடனப்படுத்த காட்ட –
நவமே ததர்ச-கண்டார்

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

காருண்யாத் அப்தி மாத்யாத் தத் உபரி சயித தது சமானஅங்க வர்ண
க்யாத் ஔதார்ய ஸ்வதானே ருசிர மணி ருசி வேஷத அதீவ
போக்யதா ஆத்மத்வேன அனுபாவ்ய துரதிகம பத பந்த மோஷ
ஸ்வ தந்திர ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி விபு தத் பதோத் கண்டித–

1–காருண்யாத் அப்தி மாத்யாத் –கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே—கிருபாவான்

2-தத் உபரி சயித —-அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே–லோக ரக்ஷணம்-

3–தது சமானஅங்க வர்ண –கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே

4–க்யாத் ஔதார்ய ஸ்வதானே —வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே–திருமேனியை ஆஸ்ரிதற்கு வழங்கி-

5-ருசிர மணி ருசி –மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே–திரு மேனி காந்தி –

6-வேஷத அதீவ போக்யதா –திருப் பரிவட்டம் – வெறி துளவ முடியானே வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே

7–ஆத்மத்வேன அனுபாவ்ய –ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்–அந்தராத்மா-

8–துரதிகம பத —கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?—ஸூ யத்னத்தால் அடைய முடியாதே

9-பந்த மோஷ ஸ்வ தந்திர —-கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்!–இரண்டிலும் ஸ்வா தந்த்ர்யம் உண்டே – ––

10-ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி —-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–
சிற்றின்பம் ப்ராவண்யம் ஒழித்து -மால் பால் மனம் சுழித்து இத்யாதி —

விபு தத் பதோத் கண்டித–விபு -அன்றோ அவன் –

தாப ஹார- தேச வாஸித்வம் -இந்த பதிகம் குணம்

——–

உலகு இயற்கை பட்டியல்

தாபை சம்பந்தி துக்கை ஸ்வ விபவ மரணைதி தாப க்ருத்
போக்ய சங்கைகி துர்கத்யா ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே
அனிதர விதுதே சேஷதைக ரசன் அண்ட காரா
நிரோதாத் பிரக்வீ பாவம்பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய

1-தாபை —எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?—எண்ணி முடியாத துக்கம்-

2-சம்பந்தி துக்கை –தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை–தேக அனுபந்தி —

3–ஸ்வ விபவ மரணைதி –உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! –விநாசங்கள் –

4-தாப க்ருத் போக்ய சங்கைகி –கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை

5-துர்கத்யா –இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!-

6-ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே —-அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!-
ஆணை -சாஸ்திரம் மீறி -வயிற்றை நிரப்ப ஹிம்சித்தல் இத்யாதி

7-அனிதர விதுதே –நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை

8–சேஷதைக ரசன் —-எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள்–சேஷத்வமே அறிந்த ஜீவனை இவற்றுடன் சேர்த்து-

9–அண்ட காரா நிரோதாத் —இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து -அண்டம் சிறை சாலையில் துன்பம்-

10-பிரக்வீ பாவம்—-இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ –வணக்கம் இல்லாமல் -செருக்கி –

பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய—-ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–

———

பாசுரம் 7-10-அர்த்தாந்தரம் அருளிச் செய்யக் கடவராய் –

ஸ்வா நாம் நிர்வாகத்வாத் -கண்ணாளா -கடல் கடைந்தாய் -தேவர்களை நிர்வகித்து
அகிபத சயநாத் -ஆதி சேஷன் சயனம்
அத்யந்த உதாரபாவாத் -வள்ளலே மணி வண்ணா
வளவத் தர்சநீய யோகத்வாத் -அழகைக் காட்டி
சந் மௌலி துளசி -ஒப்பனை அழகு -கீழே உள்ள அர்த்தம்
பிரிய கரண முகைகே –7 பாசுரம் -தாய் போலே பிரியமானவன் -அனைத்து லோகத்தாருக்கும் –
கீழே சர்வாந்தராத்மா அர்த்தம் -ஆயே -தாய் இங்கு
அண்ட ஸ்ருஷ்டத் -சக்தி –8 -சாமர்த்தியம் இங்கு -மகதாதி ஸ்ருஷ்ட்டி சமர்த்தன் / அண்டத்துக்கு உள்ளே வருத்தம் கீழே
சுப்ராபத்வம் –சுலபமாக அடைய புருஷகாரம் -ஆதி சப்தம் ஸ்ரீ மத்வம்-9-புருஷகார பூதை-இருப்பதால் -ஆஸ்ரிதற்கு சுலபன்-46-

————

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

———

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

——–

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

———

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

———

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

———

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

———–

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

———

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

———-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

———

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

———

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -39-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு
வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழே
ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே
விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே
பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே
என்று விஷண்ணராய்
இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல்
செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ் வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று——-39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார்
என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே
அதாவது
குறிஞ்சி நிலமான திருமலைகளிலும்
முல்லை நிலமான திருக் கோட்டியூர் திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான கோயில் பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான திரு வல்லிக் கேணி திருப் புல்லாணி திரு வல்லவாழ்
திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த ஸூலப்யமே ஹேதுவாக
அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே
பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து போகிற
இவ் வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் –
அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தம மூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்
திரு உள்ளமும்
கலங்கிப் போகும் ஆழ்வார்
அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே –
என்று கூப்பிட்ட பின்பு

எம்பெருமானாலே
கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை –
என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து
அருளிச் செய்த ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஈஸ்வரனும் கூட கைவிட்ட
சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள்
அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா –
தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading