முதல் பதிகம் அவதாரிகை –
ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே
க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இறே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே –
அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –
இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை
இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற
பர்யங்கத்திலே மிதித்து ஏறினால் நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே –
அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது–
————————–
இரண்டாம் பதிகம் –அவதாரிகை
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்கு சம்பவிப்பன சில ஸ்வ பாவங்கள் உண்டு –
ஆநு கூல்ய சங்கல்ப -ப்ராதி கூலச்ய வர்ஜனம் –
ஆநு கூல்யமாவது -பாகவத விஷயத்திலும் பகவத் விஷயத்திலும் பண்ணுமவை-
பகவத் விஷயம் பூர்ணம் ஆகையாலே இவனுக்கு ஆநு கூல்யம் பண்ணுகைக்கு துறை இல்லை இறே –
இப்படி துறை இல்லை என்று இவன் கை வாங்காமைக்காக இறே இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திரு மேனியாகவும்
இவன் திரு மஞ்சனம் பண்ணின போது அமுது செய்து அல்லாத போது பட்டினியுமாம் படி இறே அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது –
இப்படி யாய்த்து இல்லையாகில் பரி பூர்ண விஷயத்தில் இவனுக்கு கிஞ்சித் கரிக்கைக்கு துறை இல்லை இறே
ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் -என்றும் –
மம பிராணா ஹி பாண்டவா –என்றும்
பத்தராவி -என்றும்
ததீய விஷயத்தில் பண்ணும் ஆநு கூலயமும் பகவத் விஷயத்திலே பண்ணிற்றாம் இறே
ஆகையால் இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்தது என்கிறார் –
பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் இத் திரு மொழியில் –
முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே –
பகவத் பிரத்யாசத்தி யுடையார் என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர் ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு அவர்க்கு
நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே ஜ்ஞான வைராக்ய ராசயே-
———————
மூன்றாம் பதிகம் அவதாரிகை –
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று –
பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்-
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் –
பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது –
அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநு பாவ்யம் சொன்ன சாஸ்திரம் தானே இறே
இத்தை த்யாஜ்யம் என்றதும்
ஜ்ஞான கார்யமாய் இறே ததீயர் உத்தேச்யம் ஆகிறதும்
தமோ குண பிரசுரரோடு சஹ வாசம் பொருந்திற்றாகில் அஜ்ஞான கார்யம் இறே –
மத்தஸ் சர்வமஹம் -என்று சாமான்ய புத்தி பண்ணின ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
பூர்வ அவஸ்தையில் மத்பிது என்று அவனை ரஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்தில் விஞ்சின வாறே
அவனை விட்டுக் காட்டிக் கொடுத்தான் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்து தன் ஹிதத்துக்கு மீளாத வவஸ்தை வானவாறே
நெருப்புப் பட்ட விடத்திலே விலக்க ஒண்ணாத போது தன்னைக் கொண்டு தான் தப்புவாரைப் போலே –
ப்ராதிகூல்யம் அசலிட்டு-தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு தான் தப்பினான் இறே
ப்ராதி கூல்யமாகிறது –
தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-
விஷய பிரவணராய் இருக்கையும் –
தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே –
இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில்
—–
நாலாம் பதிகம் அவதாரிகை –
பகவத் ஜ்ஞானமும் பிறந்து –
இதர விஷய த்யாகமும் பிறந்து –
குணாதிக விஷயத்தை அனுபவிக்க வேணும் என்னும் ருசியும் பிறந்து
அந்த குணம் பூரணமாக அனுபவிக்கலாம் இடத்தே அனுபவிக்க வேணும் என்னும் ஆசையும் பிறந்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்னுமா போலே
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்னும் அதுவும் பிறந்து
இப்படி பகவத் விஷயத்திலும் பாகவத் விஷயத்திலும் ஆநு கூல்யமும் –
இதர விஷய த்யாக பூர்வகமாக கண் அழிவறப் பிறக்கச் செய்தே
விரோதியும் போய்-அநந்தரம் பகவல் லாபமாகவும் காணாமையாலே
யதிவாராவணஸ் ஸ்வயம் – என்றும் –
ஆள் பார்த்துழி தருவாய் -என்றும் மேல் விழக் கடவவன் பக்கல் குறையில்லை-
இதுக்கு வேறு ஒரு ஹ்ருதயம் உண்டாக வேணும் என்று பார்த்து –
சரீர சமனந்தரம் பகவல்லாபமாகில் பரிக்ரஹித்த சரீரம் ஷத்ரிய சரீரமாய்
போகங்களில் குறை வற்று இருந்த பின்பு
சரீர அவசா நத்தளவும் போகங்களை புஜித்து பின்னை க்ரமத்தாலே பகவத் பிராப்தி பண்ணுகிறோம்
என்று நினைத்து இருக்கிறேன் என்று நினைத்து ஆறி இருந்தேனாக வேணும் என்னுமத்தை
திரு உள்ளத்திலே கொண்டு
தமக்கு க்ரம பிராப்தி பொறாமை தோன்ற –
ஒன்றியாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -என்றும்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும்
கீழே அனுபவித்த பெரிய பெருமாள் தாமே சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் –
கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிற்கிறார்
ஆகையாலே திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து
விரோதியில் அருசியும்
கைங்கர்யத்தில் ருசியும்
பிறந்த த்வரையையும் அவிஷ்கரிக்கிறார் –
இங்குத்தை போகங்களில் காட்டில் நிலை நின்ற போகங்களுமாய்
இது போலே சாவதி யன்றியே நிரவதியுமாய் இருக்கும் இறே ஸ்வர்க்கத்தில் போகம்
அவை பெற்றால் செய்வது என்னீர் என்ன –
அவையும் கீழில் கழித்த பூமியில் போகமும் இரண்டும் கூடக் கிடக்கிலும் வேண்டா என்கிறார் –
பார தந்த்ர்யத்துக்கு உறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என்கிறார் –
மனுஷ்ய சரீரம் ராஜாவாகைக்கும் பொதுவாகையாலே-அது வேண்டா –திரு வேங்கடமுடையானுக்கு உறுப்பாம் படி
திருமலையிலே நிற்பதொரு ஸ்தாவரமாக வமையும் நான் என்கிறார்
செண்பகமானால் பரிமளத்துக்காக உள்ளே கொண்டு புகுவார்கள் என்று ஒரு பிரயோஜனத்தை கணிசித்ததாம் இறே –
அப்படியும் ஒன்றும் இல்லாத தம்பகமாகவும் அமையும் என்கிறார் –
ஸ்தாவரமானால் ஒரு நாள் உண்டாய் ஒரு நாள் இன்றியே போம் இறே -அங்கன் இன்றியே
என்றும் ஒக்க உண்டாய் இருந்த திருமலையிலே ஏக தேசமாக வேணும் நான் -என்கிறார்-
திருமலையில் அதிகாரமானால் ஏற வல்லார் அனுபவித்து -மாட்டாதார் இழக்குமதாய் இருக்கும் இறே
அப்படி இன்றியே எல்லார்க்கும் அனுபவ யோக்யமாய் இருக்கும் இருக்கும் கானாறாக வேணும் நான் என்கிறார்
கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர் -கிட்டின வாறே அனுபவிக்கிறீர் என்ன -அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார்
———————————————-
ஐந்தாம் பதிகம் அவதாரிகை –
திரு மந்தரத்தால் சொல்லிற்று யாய்த்து அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இந்த அனந்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கு விரோதி தான்
நான் என்னது -என்று இருக்கும் அஹங்கார மமகாரம் இறே –
அநாத்மன்யாத்ம புத்தியும் அச்வேஸ்வத்ய புத்தியும் இறே-
சம்சாரம் ஆகிற வர்ஷத்துக்கு பீஜம் என்று பிரமாணங்கள் சொல்லுகிறது -அது சேதனர்க்குப் பொதுவானது இறே
அப்படி இன்றிக்கே ராஜாக்கள் ஆகையாலே அஹங்கார மமகார வச்யராய் இறே இருப்பது
நிலா தென்றல் சந்தனம் என்று சொல்லுகிற இவை பதார்த்தம் ஆகாத போது ஸ்வரூப சித்தி இல்லையாம் இறே
அப்படியே இறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மாமாகாரத்தாலே ஸ்வரூப சித்தி அழியும் இறே
இப்படி பரார்த்தம் என்னும் படிக்கு பிரமாணம் உண்டோ என்னில்
இவனை -யசயாச்மி -என்றும்
ஓதி -பதிம் விச்வச்ய -என்றும்
அவனை ஒதுகையாலே இவன் ஒன்றுக்கும் கடவன் அல்லன் –
உடையவனானவன் எல்லா வற்றுக்கும் கடவன் என்றது இறே-
அப்படி பிரமாணங்களால் சொன்ன சேஷத்வ பிரதிபத்தியாவது –
ததீய சேஷத்வ பர்யந்தமான அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இப்படி தமக்குப் பிறந்து இருக்கச் செய்தே அது பல பிரதமாகக் கண்டிலர்
தான் தன கருமம் செய்கிறான் என்றாதல் –
நாம் க்ரமத்தால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாதல் –
நம்முடைய த்வரைக்கு அடியான ருசியும் அறியுமவன் ஆகையால்
ருசி பாகமானால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாம் அத்தனை –
நம்மைப் போல் அன்றியே செய்தது அறிந்து இருக்கும் சர்வஜ்ஞனாகையும் –
நினைத்தது தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனாய் இருந்து வைத்து ஆறி இருக்கும் போது
சில ஹேதுக்கள் உண்டாக வேணும் இறே என்று பார்த்து
எனக்கு நானும் இல்லை -பிறரும் இல்லை -பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது
சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்-என்னும் இடத்தை அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு
தம்முடைய அநந்ய கதித்வத்தை-திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-
ஒருவனாலே ஹிதம் என்றும் -பலத்திலே அந்வயம் ஒருத்தனுக்கே -என்றும் -அத்யவசித்தால் ஹிதங்களையே பிரவர்த்தியா நின்றான்
என்று தோற்றினாலும்-அவனே ரஷகன் என்று கிடக்க இறே கடவது –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரை -பிள்ளைகள் புகை சூழ்ந்த படி -சஹிக்கப் போகிறது இல்லை -என்ன -சற்றுப் போதன்றோ
வ்யசனப் படுவது -ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளிலே ஸூகமாய் இருக்க வன்றோ புகுகிறது -என்றார் இறே
தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதா சித்தி பிறந்ததோ வென்று மீளும்படி இருக்கிற தசையிலே ஹேத்வந்த்ரமது
அவ்வருகில் பேற்றில் குறையில்லை என்னும் அத்யவசாயம் இருந்த படி இறே
இதிலே மஹா விஸ்வாசம் ஆகிறது -தோற்றுகிற ஆபாத பிரதிபத்தியைக் கண்டு மீளாதே இருக்குமது இறே
————————————————
ஆறாம் பதிகம் -பிரவேசம் / அவதாரிகை –
உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
இத்தலையால் வேறு செய்வது இல்லாமையாலே கிலாய்க்கத் தொடங்கினார் –
பகவத் விஷயத்தில் பாவ பந்தத்தில் ஊற்றம் இருந்தபடி –
பிராட்டிமார் தசையை பிராப்தராய் கூடுவது பிரிவது ஊடுவதாம் படி யானார் –
நம்மாழ்வாருக்கு -மின்னிடை மடவாரும் –
திரு மங்கை ஆழ்வாருக்கு -காதில் கடிப்பும் போலே இருக்கிறதாய்த்து
பெருமாளுக்கு இத் திருமொழி –
நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றம் எல்லாம் தோற்ற வன்மை உடைத்தாய் இருக்கும் -மின்னிடை மடவார் –
திரு மங்கை ஆழ்வார் -தம் மார்த்த்வம் எல்லாம் தோற்றி -மென்மையை உடைத்தாய் இருக்கும் -காதில் கடிப்பு –
இவர் தம்முடைய ராஜ குலம் எல்லாம் தோற்றி இருக்கும் இத்திருமொழி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டி யாகையாலே –
ஒரு செவ்வாய் கிழமை முற்படப் பெற்றிலோம் -பல்லிலே பட்டுத் தெறித்தது -என்று
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு கிருஷ்ணன் பக்கல் உள்ள விடாய் எல்லாம் தமக்கு ஒருவருக்கு உண்டாகையாலே
திருவாய்ப்பாடியிலே பெண்கள் பேச்சாலே பேசுகிறார் –
ஒரு பிராட்டி முநையில் மணலில் போய் நில்லு –
நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி விட –
அவள் அங்கே போய் விடியும் அளவும் நின்று –
அவன் வரக் காணாமையாலே -அவனைக் கண்ட போதே ஊடிச் சொல்லுகிற வார்த்தையாய் இருக்கிறது –
அடுத்து வேறு ஒரு பிராட்டி வார்த்தை/மூன்றாம் பாட்டு -வேறு ஒரு பிராட்டி வார்த்தை
உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
நாலாம் பாட்டில்-அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார்
ஒன்பதாம் பாட்டில் -தோல்வி தோற்றச் சொல்லுகிறார்கள் –
—————————————
ஏழாம் பதிகம் பிரவேசம் –
பிராட்டி திருவடியைக் கண்டவாறே –
பிரணய ரோஷம் தலையெடுத்து –பிதுர் வசன பரிபாலனம் பண்ணப் போந்தார் என்று இறே
பெருமாள் உங்கள் கோஷ்டியில் பிரசித்தராய் இருப்பது –
இப்பது அங்கன் அன்று காண்-தம்மை விச்வசித்துக் கை கொடுத்த என்னை கை விடுகைக்காக காண் –
ரஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிறதையும் விட்டார் இறே என்று கிலாய்த்தால் போலே
கிலாய்த்தார் இவரும் கீழில் திரு மொழியில் –
சர்வாத்மாக்களுக்கும் பிராட்டிமாரோபாதி பிராப்தி உண்டு என்னும் படி
பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர் ஆகையால் இவர் கிலாய்த்தார் –
இப்படி கிலாய்த்தத்தைக்கு பிராப்தி உண்டாய் இருக்கிற விஷயத்தை அநாதி காலம் இழந்தோம் என்கிற இழவு வந்து தலை எடுத்து
முன்பு கிருஷ்ணனைப் பெற்று வைத்து பால்ய அவஸ்தையிலே அவன் செயல்களை அனுபவிக்கப் பெறாதே இழந்திருந்து –
கம்ச வத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம் போக்கி
தங்கள் முகத்தில் விழித்த கிருஷ்ணனைக் கண்ட போது கீழ் அனுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட
தேவகியார் பாசுரத்தாலே அநாதி காலம் தாம் இழந்த இழவுகளைச் சொல்லுகிறார் -இத் திரு மொழியிலே –
எட்டாம் பாட்டில் -நான் இழந்த இழவு எல்லாம் யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –
—————————————-
எட்டாம் பதிகம் பிரவேசம் –
ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச் சம காலத்திலே தாம் இழக்கையாலே –
அவள் அனுபவத்தை திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –
—————————————–
ஒன்பதாம் பதிகம் பிரவேசம் –
ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே –
அனுபவிக்கப் பெறாதே இழந்த ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே
அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —
———————————————
பத்தாம் பதிகம் பிரவேசம் –
அநாதி காலம் இழந்த இழவை-
ஸ்ரீ தேவகி தேவகியார் பெற்று வைத்து ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை
யனுபவிக்கப் பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் -ஆல நீள் கரும்பில் –
மன்னு புகழில்-ஸ்ரீ கௌசலையையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் –
பால்ய அவஸ்தையிலே எல்லாம் அனுபவித்து ப்ராப்த யௌவனம் ஆனவாறே அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தி உண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப் பேசினார் -வன் தாளில் –
இத் திருமொழி யிலே-
கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர -சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே
தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே சமகாலத்தில் போலே அனுபவிக்கிறார் –
முதல் பாட்டில் -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –
இரண்டாம் பாட்டில்–ராஷச வதத்துக்கு எல்லாம் அடியாகவும் -ரிஷியுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்கும்
-தாடகா தாடகேயரை நிரசித்த படி சொல்லுகிறது —
மூன்றாம் பாட்டில் -ஸ்ரீ பிராட்டியோட்டை கலவிக்கு விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது
—————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply