ஸ்ரீ பெரிய திருமொழி –7-1-தொடங்கி-8-10–வரை இருபது பதிக -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

நறையூர் நம்பிக்கு – தமிழ்  மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10-

என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையி கோளாய் பாடுவது ஆடுவதாகவே
பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –

————————————

நறையூர் நின்ற நம்பியை– சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நன்னீர்மையால் மகிழ்ந்து   நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும்- இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்
இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே போக பூமிகளிலே மேலாய் இருக்கிற பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே
நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்- பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –

——————————————————-

நன்னறையூர் நின்ற நம்பி –அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

கரும்பு தின்னக் கூலி இறே- பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க- அதுக்கு மேலே
பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் –

————————————————-

தண் சேறை அம்மான் தன்னை வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

ஹேய ப்ரத்ய நீகமாய்- தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள் –

——————————————-
அழுந்தூர் நின்றானை- மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

சொல்களால் சம்ருத்தமாய் உள்ளதமிழ் தொடையை வாயாலே சொல்ல -பாவத்தை உண்டாக்குவதானாலும்
தவிர ஒண்ணாததைச் சொல்ல- பாவங்கள் தன்னடையே போம் –

—————————————-

தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே—7-6-10-

அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –

—————————————————————-

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானை– தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–7-7-10-

சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து
நிரவதிக ப்ரீதி  யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

———————————————

அணி அழுந்தூர் நின்ற கோவை இன்பப் பாடல் ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-

முதல் பாட்டு -ஷீரார்ணவம்/2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும்/கஜேந்திர ரஷணம் ராம கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –
திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

—————————————

சிறுபுலியூர்ச் சல சயனத்து கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10-

பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே- நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்-

————————————-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

ஐஸ்வர்ய சூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –
திரு உள்ளமாகில் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது- என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே- ஒரு சாந்தீபனோடே- தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு
திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –

————————————————-

கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

உபரிதன லோகங்களுக்கு அடைய கற்பகத்தை சிறப்பாகச்சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே-
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –

—————————————————-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே  –8-2-10-

கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள்  -இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே- தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ  நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே- தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூர்ணராய் இருக்கப் பெறுவர்கள் –

———————————————————————–

திருக் கண்ண புரத் துறையும் வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே —8-3-10-

நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –
உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் –

———————————————

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10-

சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து
எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

—————————————————–

தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஒலி வல்லார் ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-

பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு
பின்னை ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத  பேற்றைப் பெறுவர் –

————————————————-

கண்ண புரத் தெம்மடிகளைத் –மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே –8-6-10-

பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –
இவ்வளவிலே போகாதே பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி
நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –

———————————————-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல்  வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே  —-8-7-10-

அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண்  குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது –

——————————————

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த் தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல -பாவமானது போம் –

—————————————————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-

கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச  -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்  –

——————————————-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு- கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது –
அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்- சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி
இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –

———————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading