ஸ்ரீ பெரிய திருமொழி-முதல் இருபது பதிகங்கள் – -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் -1-1-10-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு -நம்முடைய பாபங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு-
நாராயணா என்னும் நாமம்-அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் பிரயோஜனம்- –
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -என்று நமக்கு இனிய திரு நாமமே பாபத்துக்கு நஞ்சு –
அல்லாதன எல்லாம் சம்சாரத்திலே வேர் பற்றுக்கைக்கு உடலாய் இருக்கும் –
இதினுடைய அர்த்த அனுசந்தானமே சம்சாரத்தை வேர் அறுப்பது என்னும் இவ் வர்த்தத்தை எல்லாரும் புத்தி பண்ணி -இருக்கலாகாதோ

———————————————————-

பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10-

நல்லடியவர்க்கு -இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேச்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்
அரு வினை-அவர்களை பாபங்கள் கிட்டாது –
சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக  புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்
இப்பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன் அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-

——————————————————-

வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில்
நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

நீள் விசும்பில்
நீள் விசும்பு -என்கிறது- உபரிதந லோகங்களின் உடைய சமுதாயத்தை
அதில் –
அண்டம் அல்லால் -பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே
நீள் விசும்பு என்கிறது பரம பதமாய் அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –

———————————————–

வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

வானவர்—இத்யாதி —
பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி- பின்பு- ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய சூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-

அறிவுடையார் அபுருஷார்தம் என்று காற்கடைக் கொண்ட ஐஸ்வர்யத்தை
வேண்டேன் மனை வாழ்க்கை –என்றும்
போந்தேன் -என்றும் விரக்தராய் போன இவர்
இப்போது ஐஸ்வர்யத்தை பலமாக சொல்லுவான் என் -என்று ஜீயர் பட்டரைக் -கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –
ஈஸ்வரனோ ஆகவுமாம்
நித்ய சூரிகளோ ஆகவுமாம்
ராஜா ஆகவுமாம்
பிறந்து பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது என்று அருளிச் -செய்தாராம்

———————————-

சாளக்கிராமத் தடிகளை–காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆளபேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-

அமரர் நன்னாட்டரசு ஆள -நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –
அன்றி யிவையே பிதற்றுமினே — அங்கன் இன்றிக்கே இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-

——————————————

நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஓத நீர் வையகம் ஆண்டு -நித்ய சூரிகளோடு ஒரு கோவையாம் அது தானே சித்தம் இறே
அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப் பின்னை நித்ய சூரிகள் பதத்தை பெறுவர்-

—————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

தீதிலரே -நரசிம்ஹம் விரோதியைப் போக்குகையாலே அவர்களுக்கு பொல்லாங்கு வாராது இறே-

—————————————–

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய்
பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –
இது கூடுவது ஒன்றோ என்னில் -இதில் சங்கை வேண்டா-

————————————————-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10-

பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை -பெருமாள் கூட்டி வர அருளிய போதே அதுக்கு விஷயமானார் கூட வந்த நால்வரும் பின்னை அவத்யர் ஆனார்கள்
அப்படியே இவருடைய பரிகரமாய் இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –

———————————————————

வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே—-1-10-10-

இவற்றை அப்யசிக்க வல்லார்கள் நித்ய சூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –

———————————————————-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

இடமாகும் வானுலகே -பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

—————————————————

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் -அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ –
என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் –

————————————————
திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

நித்ய அனுபவம் பண்ணலாம் படியான நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் –

—————————————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் — தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடுமால் வினை
வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி
யிலங்கொலி சேர் கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் -அன்றிக்கே
பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து
ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

————————————–

கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
–திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை  கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் -அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் –

————————————————-

கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

முடியை உடையராய்- நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய்
நித்ய சூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்

——————————————-

இடவெந்தை யெந்தை பிரானை மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்- தாம் மோஹிப்பது- உணர்வதாக திருத்தாயார் கூப்பிடுவதாக
வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள்

—————————————–

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————-

பரமேச்சுர விண்ணகர் மேல்– திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்
இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்
சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும படியான தேசம் இ றே-

———————————–

திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று– கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

ஐஸ்வர்யாத்துக்காகவும்- ஆத்ம பிராப்திக்காகவும்- பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக- எங்கும் புக்கு வியாபித்து அந்யைர த்ருஷ்டனாய்
நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading