ஸ்ரீ கருட தண்டகம்–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

————————————-

28 ஸ்தோத்திரங்கள் அருளிச் செய்து உள்ளார் ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் –வாஹனம் /த்வஜம் –
கருட பஞ்சாசத் -50 ஸ்லோகங்கள் -திருவஹிந்த்ரபுரம்
இது ஸ்ரீ காஞ்சி புரத்திலே அருளிச் செய்தார் -1268 -திருவவதாரம் -சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் -எக்காலத்தில் எங்கு எது நடக்கும் அறிந்தவர் –
-7-பாம்புகளும் -சங்க பாலனை அனுப்பி -7-கட்டங்களையும் தாண்டி வர –
கருட பகவானை பிரார்த்தித்து -அத்தை காலில் கவ்விக் கொண்டு போக -இவரை கெஞ்சி அந்த பாம்பைப் பெற்றான் என்பர் –
ப்ரத்யக்ஷமாக பெற்றார் -பலத்தை -ஆராவமுதன் -அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான் -அவனும் –
காயத்ரி -பாதம் கால் பகுதி- 6 எழுத்து தொடங்கி –12- எழுத்துக்கள் கொண்ட -ஜகதி வரை –ஏழு சந்தஸ் -சூரியன் -புரவி ஏழும் ஒரு காலுடைய தேர் –
கீதா ஸ்லோகம் -8 எழுத்து / உஷ்ணிக் -7 எழுத்து பாதம் /26 எழுத்துக்கள் ஒரு பாதம் வரை போகலாம் –இவற்றுக்கு சந்தஸ் பேர்கள் கொடுத்து உள்ளார்
26 மேலே உள்ளவை தண்டகம் -999 வரை -3 3 மூன்றாக கூட்டி போவார்கள்
27 /30 /33- 3 எழுத்துக்கள் கணம்–கருட தண்டகம் -108 அக்ஷரங்கள் –
ஒரு பாதத்துக்கு -36 கணங்கள் / முதல் இரண்டு கணம் நகணமாக இருக்க வேண்டும்
ஒரே ஸ்லோகம் தான் –
நகணம் –லகு /குரு அக்ஷரம் குறில் நெடில் -மூன்று லகு அக்ஷரம் நகணம் /
முதல் ஆறு எழுத்துக்கள் லகு -வாக இருக்கும் மேலே -ரகணம் — குரு லகு குரு /
அமர கோசம் 9 பெயர்கள் சொல்லும்
1-கருத்மான் –சிறகுகளை யுடையவன் -/ 2-கருட –கருத்துக்களால் -சிறகுகளால் பரப்பவன் -சிறகுகளைக் கொண்டு சர்ப்பங்களை அழிப்பவன்
3-தார்ஷ்யன்-காஸ்யப பிரஜாபதி -விநாதா /கத்ரு பிள்ளைகள் சர்ப்பம் -அருணன் கூடப் பிறந்தவர்
4-வைநதேயதா -வினை குமரன் /5- ககேஸ்வரா -பறவை கம் -ஸூ கம் ஆகாசம் -புள்ளரையன் கோ/வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வரும் கண்ணன் –
6- நாகாந்தகா -நாகங்களை முடிப்பவர் /7 விஷ்ணு ரத –ரதாங்க பாணி –சக்கரம் ரத்தத்தில் அங்கம் /
8-ஸூ பர்ண -அழகிய சிறகுகள் -சோபமான பக்ஷம் -/9-பன்னாகாசன் -பண்ணகங்கள் நாககங்கள் அசனம் உணவாக
விஷ்வக்சேனர் -சேஷ அசனம் –பெருமாள் அமுது செய்த –மிச்சம் உண்பவர் –
திரு ஆடி ஸ்வாதி திருமஞ்சனம் –பக்ஷிராஜர் சந்நிதி -மிக பிரசித்தம் -ஆழ்வார் திருநகரியில் /
கருட சேவை -அருளாளி புட் கடவீர்-வையம் கொண்டாடும் வைகாசி கருட சேவை பெருமாள் கோயிலில்
ஆழ்வார் திரு நகரியில் -9-கருட சேவை /திரு வாலி திரு நகரி மங்களாசானம் –11–கருட சேவை -திரு நாச்சியார் கோயில் கல் -கருட சேவை —
5-கருட சேவை ஸ்ரீ வில்லிபுத்தூர் –பிரசித்தம் -/- கருடக் கொடி த்வஜ ஆரோகணம்-அவரோகணம் உத்சவங்களில் –

————————————————————————-

நம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |

ஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||

நம-நமஸ்காரம் -தொடங்கி -பர உத்கர்ஷம் /ஜிதந்தே -நமது உத்கர்ஷம் -அடியோம்
1- பந்நக நத்தாய-பாம்பால் சூழப் பட்டு -மந்த்ர பர்வம் போலே –
பாதங்களால் செல்வது இல்லை -பாத நகச்ச -ஊர்ந்து போவதால் -கட் ச்செவி- சஷூர் -கண்ணும் காதும் ஒரே இந்திரியம்
2- வைகுண்ட வஶ வர்த்திநே-அவன் வசத்தில் இருந்து வர்த்திப்பவர் –மந்த்ர பர்வதத்துக்கு இத்தாலும் சாம்யம் உண்டே
3-ஸ்ருதி சிந்து ஸூ தோத்பாத –வேதாந்த கடல் –பாற் கடலை கடைந்து அமிர்தம் போலே -உத்பாத -தோன்ற காரணம் -அம்ருத கலசம் -கொண்ட கருடன்
மந்தராய -மந்த்ர பர்வதத்துக்கு -போலே உள்ள கருடன் -வேத மயன் -அன்றோ –
கண்ணாடி புறத்தில் உன்னைக் கண்டால் அன்றோ பிரிந்தார் வருத்தமும் நீ அறிவாய் –
4-கருத்மதே -மலைகளுக்கும் சிறகு இருந்ததே -வஜ்ராயுதம் -மைனாக பர்வதம் வாய் பகவான் காத்தார் -இத்தாலும் சாம்யம் மந்திரத்துக்கு –
நம:-கருத்மானை வணங்குகிறேன் -சிறகு அடித்துக் கொண்டே -கைங்கர்ய நிஷ்டை பொரு சிறைப் புள் உவந்து ஏறும் –
மம –இரண்டு எழுத்து சொல்லி மிருத்யு வாயில் நம -மூன்று எழுத்து சொல்லி அமிருதம் -பெறலாமே –
நம -பல்லாண்டு -போற்றி -பர்யாயம்
தாச சஹா வாஹனம் ஆசனம் த்வஜ -யஸ்யே விதானம் -வியஜனம் விசிறி- திரையீ வேதமே வடிவாக
மந்த்ர பர்வதம் கூர்மம் வசம் இருந்தது போலே -பெரிய திருவடி வைகுண்ட நாதன் வசம் -என்றபடி

அழகிய சிறகுகளை கொண்ட கருட பகவானுக்கு நமஸ்காரம்.
தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன,
அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன.
தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில்  பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள்.
வேதங்களாகிய பாற்கடலை கடைந்து ப்ரஹ்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல
தங்களை வணங்கி இந்தப் ப்ரஹ்ம வித்யையை அடையலாம்.
கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்.

————————————————————–

முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட  அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளதுஇறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது

கருடமகில வேத நீடா திரூடம் த்விஷாத் பீடா நோத் கண்டித ஆகுண்ட
வைகுண்ட பீடீக்ருதஸ் கந்த மீடே ஸ்வ நீடா கதி ப்ரீத ருத்ரா ஸூ கீர்த்தி
ஸ்தா நாபோக காடோப கூட ஸ்புரத் கண்ட கவ்ராத வேத வ்யாத வேப மான
த்வி ஜிஹ்வாதி பா கல்ப விஷ்பார்ய மாணஸ் படா வாடிகா ரத்ன ரோசிஸ் சடா  நீ ராஜிதம் காந்தி கல்லோலி நீ ராஜிதம் –1-

கருடமகில வேத நீடா திரூடம்–ஈடே –ஸ்துதிக்கிறேன் –கருடன் -கருடனை –
அகில வேத -நீடா -வாசஸ் ஸ்தானம் -வேத மயன் -வேதாத்மா -அதிரூடம்-சரீரமாக கொண்டு

முதல் ஆறு எழுத்துக்கள் -இரண்டு கணங்கள் -நகணம் -கருட மகில- எல்லாம் லகு எழுத்துக்கள்
வே தா நீ -குரு லகு குரு -ரகணம் –
த்விஷாத் பீடா நோத் கண்டித–த்விஷாத் பீடன உத் கண்டித -விரோதிகளை அழிப்பதில் ஆர்வம் கொண்டு-அசுரர் நீர் எழ பாய் பறவை ஓன்று ஏறி
அப்படி உத்ஸாகம் கொண்ட ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
ஆகுண்ட வைகுண்ட பீடீக்ருதஸ் கந்தம் –தடை அற்ற வீர்யம் கொண்ட விஷ்ணுவுக்கு ஆசனமான திருத் தோள்கள்
ஈடே -ஸ்துதிக்கிறேன்
ஸ்வ நீடா ப்ரீத –தனது இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டம் மீளவும் வரும் பொழுது
ருத்ரா ஸூ கீர்த்தி -ருத்ரை ஸூ கீர்த்தி இரண்டு மனைவிகள்
அவனும் ஸ்ரீ தேவி பூமா தேவி நீளா தேவி பராங்குச பரகால நாயகிகளை அணைத்துக் கொள்வான் —
ஸ்தா நாபோக காடோபகூட –முலைகளால் அணைத்த போகத்தினால்
ஸ்புரத் கண்டக-முள் எழும்பினால் போலே மயிர்க் கூச்சு
வ்ராத வேத வ்யாத வேப மான—கூட்டத்தினால் துன்பம் -பட்டு -பாம்புகள் பயந்து நடுங்கி தலை தூக்க -சம்சாரம் போகுமே –
த்வி ஜிஹ்வாதி பா கல்ப –இரண்டு நாக்கு கொண்ட உயர்ந்த பாம்புகள் -கல்ப -அணிகள்

யஜ்ஜ ஸூ த்ரம்–பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்-த்விஜா அதிபா
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விஷ்பார்ய மாண ஸ்படா வாடிகா-விஸ்தரிக்கப் பட்ட ஸ்படா படங்களின் வரிசைகள்
ரத்ன ரோசிஸ் சடா ராஜி-ரத்னம் -ஒளி-கற்றைகள் -இத்தாலே
நீ ராஜிதம் -நீராஞ்சனம் –த்ருஷ்ட்டி தோஷம் -திருவந்திக் காப்பு –
காந்தி கல்லோலி நீ ராஜிதம்— ஸூய திருமேனி இயற்க்கை ஒளி வெள்ளத்தால் நீராஞ்சனம் –

கருட பகவானே  தாங்களே வேத ஸ்வரூபி,
வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன.
ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது த ங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார்.
அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும்  போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர்.
பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின்,  தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர்.
அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன.
அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன.
ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன
அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன.
அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.

கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும்,
அவரை வேதங்கள் போற்றுவதையும்
அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும்,
அவருக்கு ருத்ரை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர்,
மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன
என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.

கோலார்ந்த—காலார்ந்த கதிக் -வென்றிக் கடும் பறவை -சூழ்ந்து ரக்ஷிக்க –உறகல்-உறகல்
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்று ஊடே ஏறி வருகின்றான் -அசுரர் நீர் எழ பாய் பறவை ஓன்று ஏறி –
கருத்தை அறிந்து நடப்பதில் தலைவனாய் இருப்பதில் அத்விதீயம் —
ப்ரதி பக்ஷம் -அழிக்க ஒரே வியாபாரம் – பெரிய திருவடி தோளிலே பேராது இருந்ததே –பாய் பறவை ஓன்று ஏறி வீற்று இருந்தாய் -மட்டுமே -போதுமே –
உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் -ஆழ்வார் -மாறி மாறி பிறக்காமல் இருக்க இது ஒன்றுமே வேண்டும்-
வேதாத்மா –மேலே இருக்கக் கண்டு வேதார்த்தம் அறிந்து கொள்வோமே -கற்ற நூல் –மூலம் அறிந்தது போலே கருட வாஹனம் சேவித்து அறிவோம் –
த்ரி வ்ருத்தே சிரஸ் –த்ரி வ்ருத்த சாமம் –சிரஸ் -காயத்ரி சஷூஸ் சாமம் திருமேனி -தத் புருஷா– ஸூ பர்ண பஷாயே தீமஹீ -தன்னோ கருட-
பாடும் குயில்காள்-நல் வேங்கட வாணன் –நமக்கு ஒரு வாழ்வு செய்தால் பாடுமின்
ஆடும் கருடக் கொடி யுடையான் – ஆண்டாள் பிரிந்து ஆற்றாமையால் வருந்தி கருடரும் துடிக்க –
பறவை ஏறும் பரம் புருடா -நீ என்னைக் கைக் கொண்ட பின் –சம்சாரம் போகுமே –பெறும் கடலும் வற்றி பெறும் பதம் ஆகின்றதால் –

—————————————————————————————-

ஜய கருட ஸூ பர்ண தர்வீகரா ஹார தேவாதி பாஹார ஹாரின் திவவ்
கஸ்பதி ஷிப்த தம்போளி தாரா கிணா கல்ப கல்பாந்த வாதூல கல்போ
தயா நல்ப வீராயி தோத் யச்சமத்கார தைத்யாரி ஜைத்ரத்வஜா ரோஹ நிர்த்தாரி தோத் கர்ஷ
சங்கர்ஷணாத்மன் கருத்மன் மருத் பஞ்சகாதீச
ஸத்யாதி மூர்த்தே நகஸ்சித் சமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம –2-

ஜய கருட ஸூ பர்ண -சம்போதானம் -கூப்பிட்டு நேராக அருளிச் செய்கிறார் —
தர்வீகரா ஹார –சர்ப்பங்களை ஆகாரங்களை -நித்யம் ஒரு பாம்பு உண்ண வந்த கதை -ஸூ முகன் —
தேவாதி பாஹார ஹாரின் –தேவ அதிபதி அமிர்தம் அபகரித்தவரே
திவவ் கஸ்பதி ஷிப்த தம்போளி தாரா –தம்போளி–வஜ்ராயதம் நுனி பட்ட அலங்கரிக்கப் பட்ட –
கிணா கல்ப–தோள்களில்-கொண்ட –ஷிப்த -வீசப்பட்ட –தம்போளி வஜ்ராயுதம் தாரா -நுனி –
கைங்கர்யத்துக்கு அடையாளம் -தோள்களில் -வீரத்துக்கு -இது
கல்பாந்த வாதூல கல்போதய அநல்ப–ஊழிக் காற்றை போலே உத்பத்தி யுடைய குறைவற்ற –அநல்ப
வீராயி தோத் யச்சமத்கார -வீராதி களாலே நிரம்பி
தைத்யாரி ஜைத்ர த்வஜா ரோஹ -வெற்றிக்கு கொடியில் ஆரோஹித்து
நிர்த்தாரி தோத் கர்ஷ சங்கர்ஷணாத்மன் –சங்கர்ஷ ரூபமாக
கருத்மன் மருத் பஞ்சகாதீச -பிராணாதி பஞ்சகம் -அஞ்சு அதிபதி -இவற்றுக்கு
ஸத்யாதி மூர்த்தே-ஸத்யாதி மூர்த்தி ரூபமாக / த்யம் ஸூ பர்ண தாரஷ்ய கருட வியாகேஸ்வர –ஐந்து காற்றுக்களுக்கும் –
நகஸ்சித் சமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம —-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்ப அன்றோ
மறு படியும் வணக்கம் –கைங்கர்யம் பண்ணுவதில் -ஒப்பு இல்லையே –

கருடாழ்வாரே! அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே!
மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன.
தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்!
அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான்.
அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய  வீரத்தழும்புகள் தற்போது
தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன.
தங்களது வீரச்செயல்கள்  பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன.
தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள்.
அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது.
தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள்.
தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி
ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர்.
அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே!
தங்களுக்கு நமஸ்காரம்
மீண்டும் ஒரு  முறை நமஸ்காரம்.

தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும்,
போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும்,
பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும்,
ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும்
இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.

பையுடை நாகப் பகைக் கொடியான் -வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ -நித்ய மண்டலத்தில் விரோதம் இல்லையே –
உலகத்தில் விரோதம் உண்டால் -இருவரும் அழிப்பார்-பின்பு ஸூகமாக இருக்க இருவரும் என்றபடி –
அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும் – நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பி –என்னும் – வயலாலி -மைந்தா என்னும்
வயல் நன்றாக இருக்க -என் பெண் நலிகிறாளே– அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும் —ஆடுகிறாள் பாடுகிறாள்
படுக்கை பற்றி பேசி –கருடன் திருக் கல்யாணம் பண்ணுவிக்க வர -ஆடுகிற சிறகுகளைக் கண்டு
அநுகாரம்–ஸ்தோத்ரமும் பண்ணுகிறாள் -பாவனையில் -அவனை போலவே -கண்ணனை பண்ணாமல் –
கோபிகள் -கண்ணன் காளியன் போலே அநுகாரம் பண்ணினார்கள் -ரக்ஷிக்க வரும் அத்தை நினைத்தே ஆறி இருக்கிறாள் –
அணி அரங்கன் ஆடுதுமோ -கருடன் போலே பறந்து போகலாமா என்கிறாள் -என் சிறகுகளின் அடங்கா பெண்ணைப் பெற்றேன் –
ஸ்ரீ ரெங்கத்தில் மதிள்களே- பெரிய திருவடி -முன்னோக்கி வளைந்து இருக்குமே வாசல்கள் –
காந்தஸ்ய–பணிபதி-சய்யா – ஆஸனம் – ஆசனம் வாஹனம் வேதாதாத்மா விஹஹேஸ்வரா
கருடன் பேரில் ஆரோஹித்து -நித்ய கைங்கர்ய நிஷ்டர்கள் ஆதி சேஷன் கருத்மான் –

—————————————————————————————————-

நம இத அஜஹத் சபர்யாய பர்யாய நிர்யாத பஷா நிலாஸ் பால நோத் வேல பாதோதி
வீஸீ சபேடா ஹதா காதா பாதாள பாங்கார சங்க் ருத்த
நாகேந்த்ர பீடாஸ் ருணீ பாவ பாஸ்வன்னக ஸ்ரேணயே சண்ட துண்டாய ந்ருத்யத் புஜங்க ப்ருவே வர்ஜிணே
தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா -விதேயா விதேயா பவத் தாஸ்ய மாபதயேதா தயே தாஸ்ச மே –3-

நம-இத அஜஹத் சபர்யாய-விட்டு விடாத இடை விடாமல் -ஆராதனம் கொண்டு -குறைவற்று
பர்யாய நிர்யாத-பக்க வாட்டில் பரவும்
பஷா நிலாஸ் பால நோத்-பக்ஷம் -சிறகுகள் -அநில
உத்வேல பாதோதி–கடல் மேலே அலை -கொந்தளிக்க -இவர் பறந்து காற்று வீசுவதால் -பாதாளம் வரை போக
வீஸீ சபேடா-அலைகள் என்னும் கரங்கள்
ஆஹதா அகாதா -அடிக்கப்பட்ட ஆழ்ந்த கடலிலே
பாதாள பாங்கார -பாம் -சப்தம் ஒலித்து-நினைத்து பார்க்க முடியாத ஒலிகள்
சங்க்ருத்த- நாகேந்த்ர -நிறைந்த கோபங்கள் –திக் கஜங்கள் -நாகவரங்கள் -கொண்டு –
பீடாஸ் ருணீ பாவ பாஸ்வ –அங்குசம் போலே விளங்கும்
வன்னக ஸ்ரேணயே சண்ட துண்டாய-திரு நகங்களின் வரிசை -பயங்கர மூக்கும் கொண்டு
ந்ருத்யத் புஜங்க ப்ருவே–ஆட்டமாடும் புருவம் -கொண்டு
வர்ஜிணே தம்ஷ்ட்ரயா துப்யம் -கோரைப் பற்கள் -வஜ்ராயுதம் போலே
அத்யாத்மவித்யா -ஆத்மா பரமாத்மா வித்யைகள் -32 வித்யைகள் நன்றாக இருக்கும் படி-
விதேயா விதேயா-வசப்படும் படி அனுக்ரஹித்து -அடங்கி இருக்கும் படி
பவத் தாஸ்யம் -தேவரீர் அடிமை தனம்
மாபதயேதா தயே தாஸ்ச மே-அடியேனுக்கு பூண்டு -தயை புரிந்து அருள வேணும் –

கருட பகவானே! ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர்,
தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும்காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன.
அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது.
அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது.
பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றது.
அஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன.
தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன.
தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது.
தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது.
தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன.
தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு  நமஸ்காரம்,
தாங்கள் அடியேனுக்கு ப்ரஹ்ம  வித்யையை அருள்வீர்களாக.
கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.

ஆச்சார்யனாக இருந்து ப்ரஹ்ம  வித்தையை வழங்கும் பான்மையையும்,
ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை ஸ்துதிப்பதையும்
இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்

ஞானம் அனுஷ்டானம் இரண்டும் பிரார்த்திக்கிறார் –சாஸ்திர யோநித்வாத் -ஒன்றே பிரமாணம் –
பாதகேந்த்ர -சாஸ்திரம் -வேதமயன் -என்பதால் முக்கியம் -தாச சஹா வாஹனம் –
ஆசனம் –த்வஜ —விதானம் விசிறி சிறகுகளை கொண்டே 7 கைங்கர்யங்கள் –
த்வத் அங்க்ரி சம்மர்த்த கினாங்க-அடையாளம் உண்டே -நமக்கு சங்கு சக்கர லாஞ்சனம் போலே இவற்றால் சோபிதம்
பொன் மலை மீமிசை கார் முகில் போல் –கறு முகில் தாமரைக் காடு பூத்து -அவயவங்கள் -அங்கங்களும் பங்கயமே –
நீடு இரு சுடர் இரு புரத்து ஏந்தி -சங்கு சக்கரம் -எனது –செம் பொன் குன்றின் மேலே வருவது போலே -அஜகத் பர்யாய –
வைர முடி -வைநதேயன் -கொடுத்த முடி கிரீட மகுட சூடாவதாம்ச -மூன்று -ராஜ முடி கிருஷ்ணராய முடி /கருடாதேறி
விமானம் -ஆ மருவி அப்பன் -கருடன் கூடவே சேவை –
நாக பாசம் -கழற்ற -அஹம் சஹா –தாஸ சஹா –காகுஸ்த -பிராணன் -வெளியில் உள்ள பிராணன் என்று சொல்லிக் கொண்டாரே பெரிய திருவடி –

—————————————————————————–

மநு ரநு கத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தார கஸ்தா வகஸ் சித்ர பாநு ப்ரியா சேகர
ஸ்த்ராய தாம் நஸ்திரி வர்க்கா பவர்க்க ப்ரஸூதி பர வ்யோம தாமான்
வலத் வேஷி தர்ப்ப ஜ்வலத் வால சில்ய பிரதிஞ்ஞாவதீர்ண ஸ் திராம் தத்துவ
புத்திம் பராம் பக்தி தே நும் ஜகன் மூல கந்தே முகுந்தே மஹா நந்ததோ
க்த்த்ரீம் ததீ தா முதாகா மஹீ நாம் அ ஹீ நாமஹீ நாந்தக –-4-

மநு ரநு கத -மந்த்ரத்தை பின் தொடர்ந்த
பக்ஷி வக்த்ர ஸ்–பா என்னும் எழுத்து ஷி என்னும் எழுத்துக்கள் -பிரணவத்தை –வக்த்ர -வாய் –
ஸ்புரத்தார கஸ்தா-நன்றாக விளங்கும் பிரணவம்
வகஸ் சித்ர பாநு ப்ரியா சேகர -ஸ் வாகா -அக்கினிக்கு பிரிய -ஸ் வாகா பின் தொடர -தலை யாக
ஸ் வாகா— அக்னி மூலம் தேவர்களுக்கு சேர்ப்பாள் யஜ்ஞங்களிலே
ஸ்த்ராய தாம் நஸ்திரி வர்க்கா பவர்க்க ப்ரஸூதி –தர்ம அர்த்த காமம் -அபவர்க்கம் மோஷம்
பர வ்யோம தாமான் –ஸ்ரீ வைகுண்டத்தில்
வலத் வேஷி -இந்திரனுடைய
தர்ப்ப ஜ்வலத் வால சில்ய -செருக்கை அடக்க வாலசிலய ரிஷிகள் –குள்ளமான ரிஷிகள்
இந்திரன் பரிகாசம் பண்ண -தர்ப்ப -செருக்கு -ஜ்வலத் -கோபத்தால் ஜ்வலிக்கும்
பிரதிஞ்ஞாவதீர்ண-ப்ரதிஞ்ஞானி அடியாக பிறந்து
ஸ் திராம் தத்துவ -புத்திம் பராம் பக்தி தே நும் –தத்வ புத்தி ஞானமும் பக்தியையும் கொடுத்து அருளி –காம தேனு-
ஜகன் மூல கந்தே-முதல் முதல் வித்து
முகுந்தே மஹா நந்ததோ–முகுந்த -மோக்ஷம் அருளும் -மு கு தா -முக்தி பூமியை ததாதி -/செய்குந்தா -இத்யாதி -முகுந்தா -வியாக்யானம் –
முக்தி புக்தி -இந்த லோக இன்பம் இரண்டையும் அருளுபவர்
க்த்த்ரீம் ததீ தா முதாகா மஹீ நாம் -முத்தா காம ஹீனாம் -வேறு விஷய ஆசை இல்லாத பராம் பக்தி
அ ஹீ நாமஹீ நாந்தக –கி களான பாம்புகள் -அ ஹீனம் -குறைவற்ற பக்தி என்றுமாம் –
தோக்தா-பெரிய ஆனந்தம் பால் போலே கரக்கும் பசு மாட்டை அடைய செய்ய வேணும் -பக்தி ஆனந்தம் சுரக்கும் காம தேனு

கருடாழ்வாரே! வைகுந்தத்தில் உறைபவரே!
தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது.
அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது.
ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து.
அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது.
அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.

ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு  வாலகில்ய முனிவர்களை அவமதித்தான்.
அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர்.
தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள்.
தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள்.
உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக.
தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத் காரணர்.
அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன்
அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.

கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும்,
நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும்,
வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும்,
ப்ரஹ்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருட பகவான் விளங்குவதையும்
நிகமாந்த தேசிகர் இந்த  ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.

மந்த்ரம் –வ்யக்தமாக சொல்லாமல் -பிரணவம் -பக்ஷி -ஸ்வாக -மறைத்து -குஹ்யம் —
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் -திரு மந்த்ரார்த்தம் வெளியிட்டு அருள வில்லையே –
பேசி வரம்பு அறுத்தார் -ஆசை யுடையார்க்கு-அருளலாம் –
அஷட்கர்ணம் -ஆறாம் காது கேட்க்க கூடாது -என்பர் -அர்த்தம் மறைத்து போவார்கள் திரு மந்த்ரமும் சரம ஸ்லோகமும்
அர்த்தமும் சப்தமும் மறைத்து போவார்கள் த்வயத்தை –க்ஷேமகரம் -த்வய மந்த்ரம்
நம பதில் ஸ் வாகா -கருடன் பற்றி இல்லாமல் பக்ஷி –

அருளாத நீர் –அருளி –அவராவி துவரா முன் -அருளாளி புட் கடவீர் —என் விடு தூதாய் சென்றக்கால்
ஆலிங்கனம் பெற்றார் திருவடி –அனுக்ரஹம் உரு எடுத்த கருத்மான் –ஆழ்வார் அவதாரத்தால் பக்ஷி ஜாதி வீறு பெற்றதே –
புள்ளைக் கடாவுகின்ற -ஓசை ஆழ்வார் திரு உள்ளத்தில் கேட்கலாமே தென் திருப்பேரெயில் -/ ஓடும் புள்ளேறி —சூடும் தண் துழாய்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர் -கள்வா –என்று ப்ரஹ்மாதிகள் / ஆடு புட் கொடி ஆதி மூர்த்தி அன்றோ

——————————————————————————————

ஷட்த் ரிம் ஸத் கண சரணோ நர பரி பாடீ நவீன கும்ப கண
விஷ்ணு ரத தண்ட கோ அயம் விகடயது விபக்ஷ வாஹி நீ வ்யூஹம்

ஷட்த் ரிம் ஸத் கண சரணோ–பாதம் -36 கணங்கள் 108
நர பரி பாடீ நவீன கும்ப கண — -நகணம்–2 / ரகணம் -34/புதியதான மொழித் தொடர் கூட்டம்
விஷ்ணு ரத தண்ட கோ அயம் விகடயது -கருட -விஷ்ணு ரத -தண்டகம் –
விபக்ஷ வாஹி நீ வ்யூஹம்-எதிரிகள் வரிசை அழிக்கட்டும்

இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம்.
இதில் நான்கு பாதங்கள் உள்ளன.
ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது.
நாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம்  காற்றில் அழிந்து போகும்.

இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.

———————————————————————————-

விசித்ர ஸித்தித ஸோ அயம் வேங்கடேச விபஸ்ஸிதா
கருடத்வஜ தோஷாய கீதா கருட தண்டக

விசித்ர ஸித்தித ஸோ அயம்-பல வகைப்பட்ட சித்தியை அளிக்கும்
வேங்கடேச விபஸ்ஸிதா-வேங்கடேச கவி வித்வான்
கருடத்வஜ தோஷாய–கருட கொடி யுடைய திருமால் திரு உள்ளம் மகில
கீதா கருட தண்டக -சொல்லப் பட்டது –

கருடக் கொடியை யுடைய எம்பெருமானை  மகிழ்விக்க
அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள்
அவர் அருளால்  சகல மனோபீஷ்டங்களையும்  அடைவர்.

———————————————————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading