அவதாரிகை –
பகவத் விஷயத்தில் சுவடு அறிந்தே -நாயகப் பெண் பிள்ளாய் —மறந்து கிடக்கிறாள் ஒருத்தியை -பேய்ப் பெண்ணே-இப்பாட்டில் பகவத் விஷயத்திலும்–பாகவத விஷயம் நன்று என்று அறிந்தும்–மறந்து இருப்பார் ஒருவரை எழுப்புகிறார்கள்-
அசல் வாய்ந்தாள் ஐந்து பட்டினி -கூடாதே கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-குழாம் இனிமை அடியார் குழாம் களை -உடன் கூடுவது என்று கொலோ -இங்கு இருந்தால் அங்கும் ஆசை வரும் -அடியரொடு இருந்தமை கிட்டும்
ஆட் கொண்ட வில்லி ஜீயர் -நஞ்சீயர் தண்டம் சமர்பிக்க -மங்களா சாசனம் -பகவத் விஷயத்தில் மெய்யே ருசி இல்லை-பாகவதர்களைக் கண்டு உகக்கும் அன்றோ தானே –பிரதிபந்தனம் செய்ய வில்லை —எம்பெருமானார் சிஷ்யர் –
அடுத்த ஷணம் உணர்ந்தார் -பரம பாகவர் இவர் -பிரதி பத்தி உண்டாக வில்லையே என்று உணர்ந்தார்–பார்யை பர்த்தா சம்பந்திகள்-இடம் ப்ரீதி வைக்கா விடில்–அவன் உகந்தாரை உகக்கை தானே ஒருவன் ஒருவரை உவக்கை-
தன் குருவின் -தாள் இணைகள் மேல் அன்பு இல்லாதார் தன்பு தன் பால் இருந்தாலும் இன்பமிகு விண்ணாடு -தான் அளிக்க வேண்டாதா நண்ணார் திரு நாடு மணவாள மா முனி -இந்த விஷயம் ஆச்சார்யர் பேரில்–திருவகீந்தர–அன்பு தன்பால் செய்தாலும் அம்புயையர் கோன் —தன் குரு -எம்பெருமான் -எம்பெருமான் குரு -மணவாள மா முனி–அம்புஜா -நாயகி தாயார்–தேவநாதன்–காஞ்சி சுவாமி –
மணவாள மா முனி இடம் அன்பு இல்லாமல் தேவராஜன் இடம் அன்பு காட்டினாலும் தேவபிரான் அருள மாட்டான்-அலர்ந்த கடவ ஆதித்யன் நீரை விட்டு பிரிந்தால் உலர்த்துவான் –
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-
வியாக்யானம் –
போது விடிந்தது -எழுந்து இராய் -என்ன —விடிந்தமைக்கு அடையாளம் -என் -என்ன —ஆனைச்சாத்தன் கீசுகீசு என்னா நின்றது –
கீசு -கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன்—அநஷர ரசமாய் இருக்கை
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் போது விடிந்ததாக வேணுமோ என்ன —எங்கும் பேசா நின்றது என்ன -அவற்றைக் கலக்குகைக்கு நீங்கள் உண்டே -என்ன–எங்களால் அன்று -தாமே உணர்ந்தன -என்ன-அதுக்கு அடையாளம் என் என்ன —கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-
கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் பேசின–கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் எங்கும் பேசின -கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் எங்கும் கலந்து பேசின–
மரக்கலம் ஏறுவான் மீண்டும் வரும் தனையும் ஜீவனம் ஏற்றிக் கொண்டு வருவது போலே–பிரியா விடை -அனுபவம் தேக்கி விளை நீர் அடித்தல்-கரிய குருவி – வலியன் கரிச்சான் குருவி -கண் அழகாக இருக்கும் -கஞ்சரீகிகா பஷி -ஆனைச்சாதம் மலையாள -சின்ன கலியன் ஸ்வாமி -25 பட்டம் -மலையாள யாத்ரையில் பார்த்து -இந்த பெயரைச் சொல்லி இந்த விஷயத்துக்கு நீ அன்றோ ஆசார்யன் கை கூப்பினார் —
கலந்து பேசினபடி அறிந்த படி என் -என்ன–பிரிந்து போனால் பகல் எல்லாம் தரிக்கும்படி கலந்து —பிரியப் புகா நின்றோம் என்னும் தளர்த்தி தோற்ற-
பேசுகிற மிடற்று ஓசை கேட்டிலையோ -கேளாமைக்கு அங்கே ஆரவாரம் உண்டாயாகாதே செல்லுகிறது என்று மர்மம் சொல்லுகிறார்கள் –கேட்டிலையோ -என்று -எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து -கீசு கீசு -என்ற பேச்சரவம் கேட்டிலையோ –
சர்வோத்திக்கமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்–நாம் பிரியப் புகா நின்றோமே -என்று பிரிந்தால் மறுபடியும் கூடும்தனையும் தரித்து இருக்கைக்காக–பரஸ்பரம் சம்ச்லேஷித்து–கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் —
-விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை கேட்டிலையோ –ஆனைச்சாத்தன் கீசு கீசு எல்லாம் உத்தேச்யம் முனிவர்கள் யோகிகள் ஹரி என்பதும்–பறவையும் பாகவதர் -என்பதால் –
கீசு கீசு -அனஷர ரசம் அஷரமாக இல்லாமல் குழந்தை மழலை ––குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதவர்
ஆனை ச்சாத்தன் -தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை —தமிழ் இலக்கிய சொல் விளக்கம் -30 வருஷம் தொகுத்து–ஆனை சாத்தான் பறவை திருப்பாவை ஏழாம் பாட்டு —மலையாள தேசம் சின்ன கலியன் சுவாமி -5 பட்டம் முன்பு –
ஆனை சாத்தம் சொன்னானாம் -காஞ்சி சுவாமிக்கு ஸ்ரீ முகம் சாதித்து —தாமதித்து எழும் பறவை-பஷி நாதம் கேட்டு முமுஷு ஆகிறோம் மோஷம் அடைகிறோம் பிள்ளை திரு நறையூர் அரையர்–ஆசார்ய உபதேசம் பஷி நாதம் –காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் -மேல் கட்டி விதானம் -நீ உருகி நீர் சொரிய கூடாதே சேர்த்தி பார்த்த ஹர்ஷத்தால் –காவேரி விராஜா சேயம்-/ கருட பஷி -சடகோபர் -தோழப்பர்- ரஷித்த விருத்தாந்தம் –பக்ஷிகள் சப்தம் உத்தேச்யம் –
-கீசு கீசு கிருஷ்ணா கிருஷ்ணா -தன்னைப் போல் பேரும் தாருமே பிதற்றி -தில்லைச் சித்ர கூடம்-பத்னிகள்-கிளி -வேதம் சந்தை சொல்வதை கேட்டு -பேசவும் தான் செவ்வாய்க் கிளி நான் மறை பாடு -இள– மங்கையர் பேசவும் தான் -மறையோர் சிந்தை புக -ஆனைச் சாத்தான் -உடல் சிறுத்து கண் பெரிதாக -ஆசார்யர்கள் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –அறு கால சிறு வண்டே –
பிள்ளை திரு நறையூர் அரையர் -மூத்தவர் -பட்டர் இடம் பவ்யம் -கிடாம்பி ஆச்சானும் அப்படியே -எம்பெருமானார் -நம்மைப் போலே நினைத்து
அருள் 10-6-1-பாசுரம் -ஞானம் நான் கொடுத்தேன் -ஆயுசை நீர் கொடும் பெரிய பெருமாள் இடம் பிரார்த்தித்து -நம்மைப் போலே நினைத்து இரும்-சர்வமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே ஆய்ப்பாடியிலே உள்ளது -பக்ஷிகள் கலந்து பேசும் அரவமும் -தயிர் அரவமும் கீசு கீசு -கிருஷ்ணா கிருஷ்ணா என்று அன்றோ இங்கே உள்ளது -அத்தை போலே என்றபடி-
-பரஸ்பர நீச பாவம் –ஸ்ரீ வைஷ்ணவர் -கீசு கீசு -கலந்து -பிரமாணங்கள் /பாஷைகள் /ஒருவருக்கு ஒருவர் கலந்து மணிப்பிரவாளம் ஸ்ரீ வைஷ்ணவ தனி சொத்து
–நீல மணி பவளம் –ஒருவர் சொன்னதையே -பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் -அர்த்தம் கலந்து பேசி –
கலந்துபேசின பேச்சரவம் –
முன்னோர் மொழிந்த முறைப்படியே ஸ்ரீ ஸ்வாமி உடைய எல்லா ஸ்ரீ ஸூ க்திகளும்–பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத் ர வ்ருத்திம்-பூர்வாச்சார்யாஸ் சஞ்சிசிஷிபு -தன்மாதானு சாரேண ஸூத்ராஷராணி வ்யாக்யாஸ்யந்தே –
வடமொழி தென்மொழி கலந்த மணிப்பிரவாளம் -திரு ஆறாயிரப்படி -எதிராசன் பேரருளால் பிள்ளான் அருளியது-அபசூத்ராதி கரணம் ஸ்ரீ பாஷ்யம் –
ஞானஸ்ருதி ரைக்குவர் கதை – ப்ரஹ்ம ஞானம் பெற —உனக்கு நான் சொல்ல முடியுமா -நான்காவது வரணம் -அடியேன் இடம் ஒன்றும் இல்லை -வந்ததும் சொல்வேன்–ஷத்ரிய ராஜா -சூத்திரன் சோகம் உடையவர் சூத்ரர்
பஷி நாதம் கொடுத்த நீதி —கடல் கரையில் பஷி புண் படுத்தி பெருமாளை -கதை –குரங்கு மனிசன் புலி கதை புறா கதை விபீஷணன் கட்டம்
விறகிடை வெந்தீ மூட்டி-வேதத்தின் விழுமியதன்றோ கம்பர் பாசுரம் –
கிளி சோழன் -கைங்கர்யம் காவேரி விரஜா சொல்லி –கிளி கைங்கர்யம்-கலந்துபேசின பேச்சரவம் –-பேய் முலை வெளியில் உள்ளவர் வார்த்தை -நஞ்சுண்டு உள்ளே உள்ளவள் வார்த்தை / கள்ளச் சகடம் -இங்கும் இப்படியே கலந்து -என்றுமாம்
பேய்ப் பெண்ணே –
அன்யதா ஞானம் பேய் பெண்ணே–உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பாகவத சம்ச்லேஷ பர்யந்தம் அறிந்து வைத்தும் மறந்து-
இவர்கள் ஆகில் இப்படி சொல்லுகையே பணி என்று பேசாதே கிடக்க -அறிந்து வைத்து காற்கடைக் கொள்வாயே -மதி கேடீ என்கிறார்கள் –
இவர்களுக்கு அறிவாகிறது -பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிகை–அத்தை அறிந்து வைத்தே பேசாதே கிடைக்கயாலே சொல்லுகிறார்கள் –
என் அறியாமை சொல்லாதே விடிந்தமைக்கு அடையாளம்–சொல்லுங்கோள் என்ன —தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ –
காசும் பிறப்பும் —அச்சு தாலியும்–முளைத் தாலியும்–கலகலப்ப —கடைகிற போதை வ்யாபாரத்தாலே–அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி -என்னுமா போலே த்வநிக்கை –கை பேர்த்து –
தயிரின் பெருமையாலும்–இவர்கள் சௌகுமார்யத்தாலும் மலை பேர்த்தாப் போலே கை பேர்க்கப் போகாதபடி –
கிருஷ்ணன் சந்நிதி இல்லாமையாலே கை சோர்ந்தது என்னவுமாம்–அன்றியே அவன் சந்நிஹிதனாய் நின்று–தயிரை மோராக்க ஒட்டேன் என்று-கையைப் பற்றி நாலுகையாலே-என்றுமாம் —மோரார் குடமுருட்டி -என்னக் கடவது இ றே-
காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்–த்வய சரம ஸ்லோகங்களும்–ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க–ஸ்வரூப–உபாய–புருஷார்த்த–ஞானம் தலையெடுத்து -ரகஸ்ய த்ரயம் /தத்வ த்ரயம் /தத்வ ஹித புருஷார்த்தம் விளக்கும் பேச்சுக்கள் –
காசு பிறப்பு -துளசி தாமரை மணி மாலை -திருமண் லஷணம் போலே -சமமும் தமமும்-
கை பேர்த்து -ஸ்ரமப்பட்டு கிரந்தப்படுத்தி -உபதேச முத்ராம் -சூஷ்மார்த்தம் சொல்ல கை பேர்த்து-ஞானக்கை கொடுத்து -குத்ருஷ்டி வாதத்தால் எம்பெருமான் விழ எம்பெருமானார் தூக்கி விட -நிபதத்த -விழுந்து கொண்டே இருப்பவன் -கை பேர்த்து –
திருவேங்கடமுடையான் -ஐஸ்வர்யம் மதம் -திமிர் -சேவை தராமல் –இரண்டு பேர் கை கொடுத்தால் ஏறுபவனுக்கும் தூக்குபவனுக்கும் எளிதாகுமே -முதலியாண்டான்
உம்முடைய கொள்ளுப் பேரனுக்காக காணும் மா முனிகள் சரம தசையில் ஆசார்ய ஹிருதயம் வியாக்யானம் –
நாராயணன் மூர்த்தி -ஆசார்யர் -சாஷாத் நாராயணோ தேவா -தானே பிரம குருவாகி வந்து –கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு -ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
வாச நறும் குழல் ஆய்ச்சியர்
ஆயாசத்தினாலே–மயிர்முடி நெகிழ்ந்து–பரிமளம் தானே புறப்பட்டு–ப்ரவஹிக்கிற படி-மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ –
மந்தரத்தாலே கடலைக் கலக்கினாப் போலே–இந்த கோஷமும் செவியில் பட்டது இல்லையோ —அவன் கண் அழகிலே தோற்று பாடுகிற த்வனியும்
கடைகிற தயிர் ஓசையும்–ஆபரண ஓசையும்–கிளர்ந்து ஊர்த்த்வ லோகங்களிலே சென்று கிட்டுவதான ஓசை–உன் செவியில் படாது ஒழிவதே –
இவ் ஊரில் -முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்-என்று–இரவும் பகலும் விடாதே தயிர் கடைகை ஸ்வ பாவம் அன்றோஎன்று பேசாதே கிடக்க
வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய–பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய–அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால்-சிஷிதரான சம்சாரி சேதனர் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்-
காம்யத்தில் பல சரத்தை -இல்லாவிடில் தவிரலாம்–நித்ய அனுசந்தானம் விட முடியாதே--காம்ய கர்மா -நித்ய கர்மா -வாசி உணர்த்துகிறார் -நாயனார் –
அனுஷ்டித்தால் பலம் இல்லை–அகர்னே பிரத்யு உண்டு பாபம் வருமே
அச்சுத்தாலி–ஆமைத்தாலி–காசும் பிறப்பும்-
கை பேர்த்து சரமம் -தயிர் சமர்த்தி -/தங்கள் சௌகுமார்யம் /கிருஷ்ணன் அசந்நிதி கை சோர்கை –சந்நிதியில் -கடைய விட மாட்டான்
மோராக்க விட்டான் கையை வலிக்கையால்–மோர் உருட்டி -திரு மங்கை ஆழ்வார் மட்டும் சொல்லி —கலப்படம் பக்தியில் கூடாதே -ஒரு காரணம்
அது அசாரம்–மோர் விலக்கு தேசிகன் ஆகார நியமம் காட்டி அருளி —வாச நறும் முடை நாற்றம் மறைக்கும் படி
கூந்தல் அவிழ —பரிமளம் வெள்ளம்–காவி கமழ–இருந்ததே குடியாக அனைவரும் கடைய–மந்தரத்தால் கடலை கடையும் பொழுது ஒலி
அரவிந்த லோசனன் பாடியே கடைய பரமபதம் கிட்டியதாம்–பாட்டுக்கு தயிர் கடைவது தாளம்–திக்குகள் நிறைத்து
கிருஷ்ண குணங்கள் பூமியிலே நடமாடாப் இருக்க மலையில் இருப்பதே வசை போலே–என்ன செய்தாலும் கண்ணன்
கோவிந்த தாமோதர மாதவ -விக்ரேது காமம் -விற்க போகும்பொழுது —தத்யாதிகம் -முராரி பாதாம் அன்பு வைத்து -மோகவசத்தால் –
கிருஷ்ணன் பக்கல் ப்ரீதி மிக்கு -நினைவு இவன் இடமே–கடையும் பொழுதும் கண்ணனை தான் பாடுவார் என்பதற்கு பிரமாணம்
கிருஷ்ணன் உடம் ஏகாந்த உள்ளேயும் தயிர் கடைதல் நடக்கிறதோ–ஒல்லை நானும் கடையவன் —கள்ள விழியை -விளித்து
தாமோதரா நான் மெய் அறிவன் நானே -குலசேகர் ஆழ்வார் -கெண்டை ஒண் கண் இத்யாதி–கண்ணன் -பிறந்த பின்பு இவை மிக்க
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் அன்றோ–முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்
நாயகப் பெண் பிள்ளாய் –
இப் பெண்களுக்கு எல்லாம் நிர்வாஹகை யானபடி இதுவோ -என்கிறார்கள் —சொல்லிற்றுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிக் கிடக்கிறது
உன்னுடைய ஐஸ்வர்ய செருக்காலே -என்னவுமாம்
பேய்ப்பெண்ணே என்பதோடு–நாயகப் பெண் பிள்ளாய் என்பதோடு வாசி இல்லை இ றே–அகவாயில் பாவம் ஒன்றாகையால்-
நாயக பெண் பிள்ளாய்
சொல்வதற்கு எதிர் பேச்சு–பேய் பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் நெருங்கி பழக்கம்–அனுக்ரகம் போலே நிக்ரகம் உத்தேச்யம்
நம்மை திருத்து பக்குவ படுத்து இரண்டும் வேண்டுமே–வசவும் உண்டே book post கூட அனுப்ப தெரியவில்லை என்பார் காஞ்சி சுவாமி-
காகிதம் சுற்றி வைக்க வேண்டாமா என்பார்–மிதுனமாக பரிமாறா நின்றால் தாழ சொல்வதும் உசத்தி சொல்வதும் உண்டே
பரஸ்பர நீச பாவம் -இருக்கு எப்படி என்பதே சங்கை —உனக்கு நான் நீசன் சொல்ல வேண்டும் —அழகியதாய் நிர்வாகர் ஆனாய்-நான் அடிமை அன்றோ திறக்கிறேன் என்றாளாம்-என்றவிடத்திலும் வாய் திறவாமையாலே–நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ-நீ எழுந்திருப்புதி என்று நாங்கள் பாட–அதுவே குறங்குகுத்த கிடந்தது உறங்கு கிறாயோ-
நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று–வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ–சர்வேஸ்வரன் –
மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது
கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள் புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
பாடவும் –
இப்படி வாத்சல்யதையும்–சௌசீல்யத்தையும்–ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்–பேசின விடத்திலும்—பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாக கிடைக்கையாலே-
கேட்டே கிடத்தியோ -என்கிறார்கள் –
இவள் துணுக என்று எழுந்து இருக்கைக்காக–நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்–ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து-அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக–அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் என்ன —அதுக்கும் பேசாதே கிடந்தாள் –
சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்–கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்-கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ–அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து–உறங்கக் கடவையோ-
பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு–கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு–கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்–அணைத்தாப் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் -அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து–மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -என்றுமாம் —
கீசு கீசு–கல கலப்ப–பேச்சரவம்–நாராயணன் கேசவன் மூர்த்தி கேட்டே–முதல்இரண்டும் கேட்க வில்லை-அடுத்து கேட்டால் அனாதரம்–சப்தம் சத்தம் —முதலில் ஒன்றும்–அப்புறம் சத்தம்–அப்புறம் சப்தம் –
தங்கள் தளர்ச்சி கீசு கீசு –ஆங்கு ஆராவாரம் அது கேட்டு -பயப்பட்ட
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு ஓசை கேட்டு உகக்கும் கண்ணன் இங்கே பழகி இருக்கிறோம் நாங்கள் –
பாட்டு கேட்கும் இடம் கூப்பீடு கேட்கும் இடம் -கேட்டிலையோ
ஜீவாத்மா கேட்க சொன்னது கீதை பரமாத்மா கேட்டது சஹஸ்ரநாமம் ஜீவாத்மா ஜீவாத்மாவை கேட்க சொன்னது
ஹோதம் பிரியம் மதுரா மதுராலாபம்–கேட்பார் செவி சுடு சிசுபாலன்
கேசவன் கீர்த்தி அல்லால் கேட்பாரோ கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
திருப் புல்லாணி -வண்டே கரியாக வந்தான் —-எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே —மெய்ம்மை பெரு வார்த்தை -கிருஷ்ண சரம ஸ்லோகம–சொல் -குமரனார் சொல் -ராம சரம ஸ்லோகம்–பேசி இருப்பன ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
திருமந்தரம் பேர் அரவம் ஸ்வரூபம்–சரம ஸ்லோகம் புருஷார்த்தம்–த்வயம் ஸ்லோகம் மூன்றுமாம்-அனந்யார்க்க சேஷத்வம் சரணத்வம் போக்யத்வம்–கேட்டோம் பாடுவோம் —சரவணம் -கீர்த்தனம் –
கலந்து-பேசின பேச்சரவம் கேட்டிலையோ-செஞ்சொல் கவிகாள் என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -இன்கவி பாடும் பரம கவிகாள் -என்றும் -பதியே பரவித் தொழும் தொண்டர் என்றும் -ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் என்றும் -ஒருவர் ஒருவரை ஸ்லாகித்துக் கொண்டு பேசுவதே பேசும் ஏக கண்டர்கள் கலந்து அருளிய அருளிச் செயல் என்றுமாம்-
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்
உன்னைக் காணப் பெறாதே–அந்தகாரமாய் கிடக்கிற எங்களுக்கு–இத்தை திறந்து புறப்பட்டு–உன்னுடைய நிரவதிக தேஜசாலே-வெளிச் செறிப்பிக்கைகாகவும்–உன்னுடைய அழகு காண்கைக்காகவும்–நீயே வந்து திற –
தேசமுடையாய் திற –
இவள் பின்னையும் பேசாதே கிடைக்கையாலே–ஜாலக ரந்த்ரத்தாலே பார்த்தார்கள் —இவளுக்கு கிருஷ்ண விஜய அனுசந்தான அனுபவ ப்ரீதியாலே
வடிவில் பிறந்த புகரைக் கண்டு–கிண்ணகத்தை அணை செய்யாதே வெட்டி விடாய்–என்கிறார்கள் ஆகவுமாம்-
இப்படி சொன்ன இடத்திலும் எழுந்திராமையாலே
ஜாலகரந்தரத்தாலே பார்த்து பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே
நாங்கள் அனுபவிக்கலாம்படி -எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய் -என்கிறார்கள்
கண்ணன் திரு நாமம் கேட்டதால் வந்த பிரகர்ஷம் தோற்ற–நாங்கள் வாழ்ந்து போக அந்தகாரம் போக்க தேஜஸ் காட்டி–அனுபவிப்பிக்க பாராய் –
குல சேகர ஆழ்வார் மந்த்ரிகள் குசு குசு பேசரெங்க யாத்ரை தினே தினே கிளம்புவார் ஸ்ரீ வைஷ்ணவர் ஆராதித்து கொண்டு இருக்க –
ரத்னா ஹாரம் -சக்கரவர்த்தி திரு மகன் ஆராதனா பெருமாள் –
பேய் பெண்ணே -பேயனாக சொல்லி- பேயரே எனக்கு யாவரும் பேயனாய் ஒழிந்தேன் —பெண்ணாகவும் பாடி உள்ளார்
காசு பிறப்பு -காசு மாலையை ஒளித்து–கை பேர்த்து குடப்பாம்பில் கை இட்டு–அவர்கள் கை பேர்த்து-
கெண்டை ஒண் –பூம் குழல் தாழ்ந்து உலாவ–நாயக பெண் பிள்ளாய் -நடு நாயகம்
எம்பெருமானை பாடிய 11 ஆழ்வார் -நடுவில் -உள்ளார் -முன்பு 5 பின்பு 5
கொல்லி காவலன் கூடல் நாயகன் —ஷத்ரிய குலம்
நாராயணன் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே
மாவினை வாய் பிளந்து உகந்த -முதலில் அருளி
நீ கேட்டே கிடத்தியோ இவரே கிளம்புவார் -இராமாயண கதை கேட்டு கர தூஷணாதிகள்
பதறி அடித்து போனவர்
தேசம் உடையாய்
பல தேசங்கள் கொல்லி சேர –கூடல் பாண்டியன்-கோழி சோழ மும்முடி சேரர் இவர்-தேஜஸ் -மிக்கு —ஆசார்ய ஹிருதயம் –
அடிமைப் பட்டு இருக்கும் யாராகப் பிறந்தாலும் ஆழி அம் கை பேராயன்–உள் நாட்டு தேசு அன்றே -பரமபதத்து தேசு இல்லை
மண்ணாட்டில் ஒன்றாக மெச்சுமே–அடியார் வீட்டில் புழுவாக இருப்பதே தேசு
அவனே -அஹம்வோ பாந்தவ–ஒளி வரும் ஜனி —மீனாய் பிறக்கும் விதி -தம்பகமாய் இருக்கும் தவம் —பொன் வட்டில் பிடித்து -ஏதேனும் ஆவேனே –
இது தானே தேஜஸ் ––தேசம் உடையாய் –
அஸ்மத் பரம குருப்யோ ஆசார்யருக்கு ஆசார்யர் -அர்த்த விசேஷங்கள் காட்டி அருளிய அனைவரையும் குறிக்கும்
நாயக பெண் பிள்ளாய் தேஜஸ் உடையவர்–வானமா மலை ஜீயர் காட்டி அருளி –
பேய் பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் -தேசமுடையாய் -மூன்று விளிச் சொற்கள் —குறுக்கும் மலையாள திசை சொல்
தட்ட பழம் சிதைந்து மது சொரியும் சீர்காழி பாசுரம் -திருமங்கை ஆழ்வார் -பழுத்த பழம் அர்த்தம்
உடையவர் -நாவல் மரத்தில் -தட்ட பழமாக போடு என்றானாம்–கனிய பழுத்த பழம் என்றானாம்
ஆனைச்சாத்தன் -ஆனைச்சாத்தம் -கலந்து பேசின- திரண்டு பேசின- இல்லை–மணிப்பிரவாளம் சமஸ்க்ர்தம் தமிழ் இரண்டையும் கலந்து பேசின பேச்சு அரவம்
ஆசார்ய ஹிருதயம் -தமிழ் ஆழ்வார்கள் ஒவ் ஒருவரை புகழ்ந்து —செஞ்சொல் -கவிகாள் -வஞ்சக் கள்வன் மா மாயன்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் –திரு அஷ்டபுஜ -தொட்ட படை எட்டும்–கண்டம் என்னும் கடி நகர் -ஆழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம் கை எழுத்து -இன் கவி -பரம கவிகளால் தன கவி தான் கவி பாடுவியாது —பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்கு கதி —கண்டியூர் –மண்டினார் உய்யல் அல்லல் மற்றை யார்க்கு உய்யல் ஆமே–அழைக்கும் -ஆடி பாடி அரங்க அரங்க ஒ ஒ அழைக்கும் தொண்டர் —செஞ்சொல் -செந்தமிழ் -இன் கவி -பரவி -அழைக்கும் -ஐந்தும் காட்டி
கலந்து –
மணிப்பிரவாளம்–அபிப்ராயம் கலந்து —உபய வேதாந்தம் கலந்து
உ வே தெரியாமல் -கதை -உபயோகம் அற்ற -வெற்று
காஞ்சி சுவாமி சங்கரர் -சீர் பாடல் -நாம கரணம் ஆன உடனே -உ வே சொல்லும் -உபய வேதாந்த பிரவர்தகர் –
ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ ய பதி நாராயணன் அவதாரம் -கிருஷ்ண ராமா -இல்லாமல் -கத்ய த்ரயம் மூலம் நமக்கு —பாஷ்யகாரர் இது கொண்டு ஒருங்க விடுவர் –
பய வேதாந்தம் -சமஸ்க்ருத வேதாந்தம் —அபய வேதாந்தம் -மண்டினார் உய்யல் அல்லால் —அரவம் த்வனி
பேச்சு கேட்டிலையோ சொல்ல வில்லை வார்த்தை சப்தம்–பேர் அரவம்- நேற்றும் சொல்லி —த்வனிக்கும் அர்த்தம் த்வனி பிரதானம் காவ்யம்
தயிர் கடையும் ஒலி -ஆபரண த்வனி -உத்காதாயதி அரவிந்த லோசனம் -பரமபதம் வரை சென்றதாம் இந்த கோஷம் -சுகர் –
காசு பிறப்பு -ஆண்டாள் மட்டும்–வெண்பா கடைசி சீர் காசு பிறப்பு நாள் மலர் –
இடைச்சிகள் பூஷணம் -துளசி திருமகள் -கௌஸ்துபம் வைஜயந்தி -பட்டர் சேவிக்க -கிடக்கட்டும்
கூர்ம வ்யாக்ரி -ஆமைத்தாலி புலி நகம் -அக்குவடை பூண்ட வாசுதேவன் தளர் நடை நடவானோ –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொருட்டையை மோந்து பார்த்தால் குறட்டை -தெரியுமே -பட்டர் –
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்–ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்–தாழச் சொன்ன போதும் உயரச் சொன்ன போதுமே இ றே இருப்பது
அகவாயில் பாவம் ஒன்றாகையாலே வாசி இல்லை இ றே
எம்பெருமான் விஜய அனுசந்தானத்தாலே வடிவில் தோன்றி உள்ள புகரைக் கண்டு தேசமுடையாய் -என்கிறார்கள்
கேட்டே கிடந்தாயோ–மைத்ரேயர் -பராசரர் புருஷார்த்தம் கேட்பதே —பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டா –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே —44 வருஷங்களாக சொல்லி அனுபவம் காஞ்சி-வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளே -புளிய மரத்தின் பொந்தில் இருந்து ஆழ்வார் கூப்பிட வந்து சேவை சாதிக்க –
நமக்கு பஷி நாதம் அல்லது உஜ்ஜீவினம் வழி இல்லை ஆட் கொண்ட வில்லி ஜீயர் -அருளி-வேதாத்மா -கஸ்யபர் விநாதா சிறுவன் –பகைவி கத்ரு-அமர்த்த கலசம் -அடிமை தனம் விளக்க அருணோதயம் -அருணன் கருடன் தம்பி -சூர்யன் தேரோட்டி –
மேலே பறக்கும் வரம் -கேட்டு வாங்கு கருடன் -நமக்கு கீழே வஹனம் -சமாப்யதைக ராஹித்யம் ஒப்பிலி யப்பான் –
சர்பாசனன்-
விஷ்ணு அமிர்தம் -அம்ர்தத்திலும் ஆற்ற இனியன் –அஞ்சிறைய –கூட்டி வரும் பொழுது -வெஞ்சிறைய -கூட்டி போகும் பொழுது
கருட தண்டகம் -தேசிகன் அருளிய முதல் ஸ்தோத்ரம் என்பர் —சாஸ்திர யோநித்வாத் -மூன்றாவது அதிகரணம் வேதம் கொண்டே அவனை அறிய முடியும்
புள்ளை கடாகின்ற வாற்றை காணீர் -பஷி நாதம் திரு குழம்பாலே ஏசல் வையாளி குதிரை வாகனம் –
கோணல் வையாளி உள் மணல் வெளி -கோதண்ட ராமர் சந்நிதி வாசலில் —மனம் பண பட்டு ஈர்க்க ஏற்பாடு –
காரணம் து தேய்தா -அடையாளம் வேதாத்மா -கருடசேவை -திரு நாங்கூர் ஆழ்வார் திரு நகரி -வையம் காஞ்சி கருட சேவை -கல் கருட சேவை –
அருள் ஆழி புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் -ஆழ்வார்–ஜடாயு கச்ச லோகம் -ஆயுஷ்மான் –
சம்பாதியும் ராம கைங்கர்யம்--புள் சிலம்பின கூஜந்தம் பஷி நாதம் -வால்மீகி–பஷி நாதம் தமஸா நதி நீராட்டம் க்ரய்ந்சம் மிதுனம் வேடன்
சோக வார்த்தை மாநிஷிதாமம் ஸ்ரீ ராமாயணம் தூண்டியதும் பஷி நாதம்–சுகர் கிளி கொடுத்த கிருஷ்ண கதாம்ருதம் -கிளி கொத்தின பலம் ஸ்ரீ மத் பாகவத் –
பஷி காட்டிக் கொடுத்து தான் -நம்பெருமாள் தர்ம வர்மன் -கேட்க விபீஷணன் விட்டு போக–கிளி சோழன் கிளி மண்டபம் –
காவேரி விரஜா சேயம் –வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வாச்தேவோ ரெங்கேச பிரத்யஷம் பரமம் பதம் —விமானம் பிரணவாகாரம் –இங்கே காட்டி –
நம் ஆழ்வார் -திருக்கனாம்பி- மலைச்சரிவில் -பெட்டி -இறக்கி —1318
1323 -1371 48 வருஷங்கள் இல்லையே -1325 பிள்ளை லோகாசார்யர் —மூன்று படை எடுப்பு –
தோழப்பர் திருவாய் மொழி பிள்ளை ஸ்ரீ சைலேசர் ஓலை அனுப்பி -திருவிதாங்கூர் அரசர்க்கு அனுப்ப–முத்திருப்பு ஊரில் –
அலங்கல் மாலை பிரசாதம் தோழப்பர் —ஷேமகாரி பறவை பெட்டி மேல் சடகோபர் -காட்டிக் கொடுக்க —ஆழ்வார் தோழப்பர் -இன்றும் -மரியாதை
பஷி நாதமே உஜ்ஜீவனம் —-உலகு அளந்தான் வரக் கூவாய் கிளியே–கோலக் கிளியை உன்னுடன் தோழமை கொள்ள –
கருடன் அம்சம் பெரியாழ்வார் மதுரகவி ஆழ்வார் —இவர் என்ன பெரிய ரைக்குவரோ -பஷி -பறவை அனுப்பி வந்தாயோ -சாஸ்திரம்
புறா பறவை சொல்லி சுக்ரீவன் இடம் பெருமாள்
நாராயண -அருவம் -பரத்வம் -அந்தர்யாமி சௌலப்யம் —மூர்த்தி நம்முடன் கலக்க வந்த விபவம் அர்ச்சை -சௌசீல்யம்
முதலாவார் மூவரே -நல் தமிழால் -லோகம் உஜ்ஜீவிக்க தீர்தகரராய் —சகல மநுஜ நயன விஷயமாகி —கேசவன் –
–கீசுகீசு என்று எங்கும் –
கலந்து பேசின பேச்சரவம் -பூர்வாசார்யர் திவ்ய ஸூ க்திகள் உடன் கலந்து ஸ்ரீ ஸூ க்திகள் அருளிச் செய்தார் ஸ்வாமி –
பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூ த்ர வ்ருத்திம் பூர்வா சார்யாஸ் சஞ்திஷூபு தன்மதாநு சாரேண-ஷூத்திரஅஷராணி வ்யாக்யாஸ் யந்தே –
வடமொழி தென்மொழி கலந்து அருளிய ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம் –
எதிராசர் பேர் அருளால் திரு ஆறாயிரப்படி பிள்ளான் அருளியது மணிப்பிரவாளம் –
தேசமாலை -சாற்றி அருளுகிறாள்
தேசமுடையாய் -பரமபத தேஜஸ் –
மண்ணாட்டிலராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உள்நாட்டு தேசு இ றே
ஞான பல வீர ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்--உண்ணாட்டு தேஜஸ் -பெரியதிருவந்தாதி
பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ -என்றும்–
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாவுதீர் -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்றும்
–உபய விபூதி நாதத்வம் -தேசம் மாலை -என்றுமாம்–தம்மையே ஒக்க அருள் செய்வான் –உடையவர் போல்வார் உடைய தேஜஸ் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply